வேதமத அல்லது வேதகாலத்தில் இருந்த சித்தர்கள்
வேதமதசித்தர்கள்: வேதமதத்தில் அல்லது வேதகாலத்தில்[1] “சித்தர்கள்” என்பவர்கள் எல்லாவற்றையும் அடைந்தவர், வெற்றிகொண்டவர், முழுமைப்பெற்றவர் என்ற நிலையிலிருந்து எல்லாவற்றையும் செய்ய வல்லவர், சாதிக்கக்கூடியவர், அதற்கான சக்திகளைக் கொண்டவர் என்றுள்ளது. “सिद्ध” = சித்த என்ற வார்த்தைக்கு அவ்விதமாகப் பொருள்கொள்ளப்படுகிறது. அந்நிலையை அடைந்தவர்களை “சித்தி”யடைந்தனர் என்றும் வழங்கப்பட்டது. தெய்வீக, என்றும் நிலையுள்ள, போற்றக்கூடிய, மேன்மையான என்ற அடைமொழிகளிலும் விளக்கம் உள்ளது. இதனை அடைமொழியாகக் கொண்டு ஆயிரக்கணக்கான வார்த்தைகள் உருவாகியுள்ளது, இதன் மிகவுயர்வான தன்மையைக் காட்டுகிறது. மிகவுயர்வானது, மிகச்சிறந்தது, மிகத்தூய்மையானது, என்ற முறையில் அச்சொற்றொடர்கள் விளக்கம் அளிக்கின்றன[2]. ஆனால் இவர்கள் எல்லோரும் மருத்துவர்கள் அல்லர். ஆயிர்வேதமுறை பின்பற்றவந்தபோது, உடல்-மனம் முதலியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதனால், மனம்-உடல்-உயிர்; மூச்சு-ஆயுள்-ஆரோக்யம்; முதலியவற்றை இணைக்கும் யோகா சிறப்பானது. இது எதிர்மறைசிந்தனை-மனச்சிதைவு-மனநோய்; உடலின்பம்-அநாரோக்யம்-நோய் முதலியவற்றை எதிர்க்கும் மருந்தாகப் பயன்பட்டது.
சித்த–சித்தி–சித்தம் முதலிய வார்த்தைகளுக்கு பொருள்: சித் என்ற வார்த்தை, சித்த, சித்தி, சித்தம் என்ற சொற்கூறுகளுக்கு ஆதாரமாகி, “சித்த” என்ற அடைமொழி பல வார்த்தைகளை உண்டாக்கியுள்ளது.
சித்தகல்ப, சித்தகாம, சித்தக்ஷேத்ர, சித்தக்காண்ட, சித்தகங்க, சித்தகிருஹம் சித்தத்துவ, சித்தாந்த, சித்தார்த, சித்தம், சித்ததேவ, சித்த-தர்ஷணம், சித்த-நாகார்ஜுன, சித்தநாத, சித்தபக்ஷ, சித்தப்பாத, சித்தபுத்ர, சித்தபுரி, சித்தபுருஷ, சித்தபுஷ்ப, சித்தபுத்த, சித்தமாதா, சித்தமந்திர, சித்தமனஸ, சித்தய்ந்திர, சித்தயாமல, சித்த்யோக, சித்தரத்ன, சித்தரஸ, சித்தராஜா, சித்தகாமுதி, சித்தோதய…………..என நீண்டுக் கொண்டேயிருக்கிறது.
சித்ததாது, சித்தரச / சித்தரஸ என்ற சொற்றொடர் பாதகரசத்தைக் குறிக்கிறது.
சித்தரச – ரசவாதி / ரஸவாதி
சித்தபக்ஷ / சித்தபட்சம் என்பது குறிப்பிட்ட தத்துவவாதத்தைக் குறிக்கிறது.
சித்த, சித்தயோகின் – சிவன்
சித்தசங்கல்பம் – நினைத்தை முடிப்பவர்
சித்தசேன – கார்த்திகேயன், முருகன்
சித்தஸ்தாலி – கமண்டலம், குடுவை, பாத்திரம்
சித்தநதி, சிந்து – தெய்வீக நதியைக்குறிக்கிறது
சித்தஜலம் – அரிசி கஞ்சி
இதுபோன்ற பல வார்த்தைகளை சமஸ்கிருத அகராதிகளில் காணலாம்[3]. முதல் நூற்றாண்டுகளினின்று இடைக்காலத்தில் வரை அதன் அர்த்தம் மாற ஆரம்பித்தது. அதாவது, பாதரசத்தை உபயோகப்படுத்தியதால், மருத்துவமுறையில் ஏதோ ஒரு மாற்றம் அல்லது குழப்பம் ஏற்பட்டது என்று தெரிகிறது. இது பிற்காலத்தில் யோகம்-பிரானாயாமம் முறையிலிருந்து, காயகல்பம் முறைக்கு மாறியதைக் கட்டுகிறது.
சித்தர் என்ற வார்த்தை புத்தனை, சிவனைக்குறிப்பது பிற்கால வழக்கம்: பொதுவாக “சித்த” என்றால் சிவன் என்றும், பிற்கால சமஸ்கிருத இலக்கியங்களில் புத்தரையும் குறிப்பதாக உள்ளது. ஆனால், எங்குமே அவர்கள் மருத்துவர்கள் அல்லது மருத்துவமுறைகளைப் பின்பற்றியவர்கள் என்றில்லை. நாரதர்கூட திரிலோக சஞ்சாரி = மூன்று உலகங்களிலும் சென்றுவரும் தமைப் பெற்றவர் என்றிருந்தாலும், அவரை என்று சித்தர் என்று சொல்லப்படவில்லை. ஆக கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் கூட இப்பெயரின் சிறப்பை, மதிப்பை, பெருமையை அறிந்துணர்ந்து உபயோகப்படுத்தினர் என்ப்ச்து தெரிகிறது. அவ்வாறு ஜைனர்கள்-பௌத்தர்கள் வேதங்களைப் படித்தபோது, அவர்கள் “பாஷாண்டிகள்” எனப்பட்டனர்.
சித்தர் சித்தியை – அஷ்டமாசித்திகளை பெற்றவர்கள்: சித்திகள் எட்டு, அவற்றை அடைந்தவர் சித்தர். மஹாபாரதம், மனுஸ்மிருதி, பஞ்சதஎதிரம் முதலிய நூல்களில் இதற்கு விளக்கம் காணப்படுகிறது.
- अणिमा – அணிமா – சிறிய உருவம் பெறும் தன்மை
- महिमा – மஹிமா – பெரிய உருவம் பெறும் தன்மை.
- गरिमा – கரிமா – அதிக பலம் / எடைக் கொள்ளும் தன்மை
- लघिमा – லகிமா – குறைவான எடைக் கொள்லும் தன்மை
- प्राप्ति – பிராப்தி – நினைத்ததை நினைத்த மாதிரி பெறும் தன்மை.
- प्राकाम्य – பிராக்யாம – அதிக சக்திகளை – வல்லமைகளை, திறமைகளைப் பெறும் தன்மை.
- ईशित्व – ஈசித்துவ – கடவுட்தன்மையை அடைவது அல்லது மற்றவர் வணங்கும் நிலையை அடைவது
- वशित्व – வசித்துவ – மற்றவரை தமதிச்சைக்கேற்றபடி நடக்கவைக்கும் தன்மை
இவற்றைத்தவிர, ஸ்ரீ கிருஷ்ணர் கீழ்கண்ட பத்து குணாதிசயங்களைக் கொண்டவர் சித்தர் என்று “பகவத் புராணத்தில்” குறிப்பிடுகிறார்.
எண் |
சமஸ்கிருதம் |
தமிழ்உச்சரிப்பு |
விளக்கம் |
1 | अनूर्मिमत्वम् | அனூமிர்மத்துவம் | பஞ்சேந்திரியங்களின் விருப்பு-வெறுப்பு-தேவைகளைக் கடந்தத் தன்மை |
2 | दूरश्रवण | தூர்ஷ்ரவண் | தூரத்திலிருந்து கேட்கக்கூடிய சக்தி |
3 | दूरदर्शनम् | தூர்தர்ஷணம் | தூரத்திலிருந்து பார்க்கக்கூடிய சக்தி |
4 | मनोजवः | மனோஜவம் | மனோசக்தி |
5 | कामरूपम् | காமரூபம் | விரும்பும் உருவத்தைப் பெறுவது |
6 | परकायाप्रवेशनम् | பிரகாயபிரவேசனம் | அடுத்த தேகத்தில் நுழைவது |
7 | स्वछन्द मृत्युः | ஸ்வச்சந்த மிருத்யு | உண்மையான நினைக்கும் நேரத்தில் இறப்பைப் பெறுவது, முக்தியடைவது |
8 | देवानां सह क्रीडा अनुदर्शनम् | தேவனாம் சஹ கிரிடா அனுதர்ஷனம் | எல்லா இடங்களிலும் நடப்பதைப் பார்க்கக்கூடிய சக்தி |
9 | यथासंकल्पसंसिद्धिः | யதாஸம்கல்பஸம்சித்தி | அனைத்தையும் அடைந்து முடியும் சக்தி |
10 | आज्ञा अप्रतिहता गतिः | ஆக்ந்யா அபர்திஹதா கதி | ஆணையை மற்றவர்கள் செய்யும் விதம் |
பிறகு அவர்களை “सिद्ध पुरुष”, சித்தபுருஷர்கள் – மனிதர்களாக இருந்தும் சித்தர்களைப் போன்ற நிலையை அடைந்தனர் என்றா ரீதியில் – அழைத்தனர்[4].
வேதகால ரிஷிக்கள், முனிவர்கள் மருத்துவ சித்தர்கள் ஆகார்: வேதத்தைக் கற்று, கற்பித்து, வாழ்ந்தவர்கள் ரிஷிக்கள்-முனிக்கள். ஆனால் அவர்கள் “மருத்துவ சித்தர்கள்” இல்லை. வேதாங்கங்களை போதிப்பர், ஆனால், அதனை பின்பற்றுவோர் வேறுக்குழுமத்தைச் சேர்ந்தவர்கள். சுஷ்ருதர், சரகர், வாகபட்ட முதலியோர் தலைசிறந்த அறுவைசிகிச்சை வல்லுனர்கள், பதஞ்சலி யோக விஞ்ஞானி. அவர்கள் “சித்தர்கள்” என்று குறிப்பிடப்படவில்லை. ஆயுர்வேத மருத்துவ நூல்களை எழுதியவர்களும் “சித்தர்கள்” என்று அழைக்கப்படவில்லை. ஏன் ஆயுர்வேதத்தை அளித்தவர், ஆயுர்வேதத்தின் தந்தை என்று சொல்லப்படக்கூடிய தகுதியுள்ளவரும் அவ்வாறு கருதப்படவில்லை. ஆனால், நூற்களை எழுதியவர்கள், அத்தொழிலை செய்யவில்லை அல்லது அவர்களுக்குத் தெரியாது என்றாகாது. ஏனெனில் அக்காலத்தில், மருத்துவம் இலவசமாக வழங்கப்பட்டது. அதனால் அவரவர் வேலைகளை, கடமைகளை செய்து வந்தனர். அதாவது ஒவ்வொருவரும் அவரவர் துறையில் சிறந்தவர்கள் (specialists), வல்லுனர்கள் (Experts), விஞ்ஞானிகள் (Scientists) என்றிருப்பர்.
எண் |
முறை |
அர்த்தம் / பொருள் |
விளக்கம் |
1 | शिक्षा
சிஷா |
மந்திரங்களை எப்படி உச்சரிப்பது, மனப்பாடம், நினைவுகொள்வது என்றமுறை | ஒரு படிப்பு படிக்கும்போது, அத்துறையில் உள்ள வார்த்தைகளுக்கு முறையான உச்சரிப்பு, பொருள் தெரிந்துகொண்டு படிப்பது. |
2 | कल्प
கல்ப |
மந்திரங்களை எங்கு, எப்பொழுது, ஏன் உபயோகிக்கவேண்டும் என்று விளக்குவது. இதில் மூன்றுசூத்திரங்கள் / பிரிவுகள் உள்ளன. | श्रौत सूत्र= சௌர்த்தगृह्य सूत्र = கிருஹधर्मसूत्र = தர்ம |
3 | व्याकरण
வியாக்ரண |
இதில் மந்திரச் சொற்களை எவ்வாறு எந்தமுறையில், மற்றச் சொற்களோடு உபயோகிக்கவேண்டும், அவற்றின் விளைவு | இலக்கணம் என்றில்லாமல், நடைமுறையில் கற்றுக் கொள்ளவேண்டிய விவரங்கள். |
4 | निरुक्त
நிருக்த |
ஒரே மந்திரத்திற்கு, சொல்லுக்கு பற்பல அர்த்தங்கள் இருப்பது, அவற்றின் விளக்கம் | உதாரணத்திற்கு நுண்ணுய பொருட்துகள் – அணு, செல், என்று பலவாக உயிருள்ளவை-உயிரற்றவைகளில் உள்ளன. |
5 | ज्योतिष
ஜோதிஷ |
சோதிடம் என்றால் வானவியல், இது, பூகோளம், கிரகங்கள், காலவியல், கணக்கியல் முதலியவற்றைக் கொண்டது. | சோதிடம் என்றால் இக்காலத்தையது பொலல்ல. வேதாங்க சோதிடம் என்பது உலகத்திலேயே உள்ள மிகப்பழமையான வானியல் சாத்திரப் புத்தகமாகும். |
6 | छन्द
சந்த |
மந்திர வார்த்தைகள், சொற்றொடர்கள், வரிகள் முதலியவற்றை அவற்றின் சப்தத்திற்கேற்றபடி, அமைத்து உருக்கொடுத்தல். | பிங்கள சந்த சூத்ர இன்று உலகளவில் பிரசித்தியகியிருக்கிறது. ஏனெனில் அது 0 மற்றும் 1 கணக்கீட்டிற்கு முறையைக் கொடுத்துள்ளது. |
இதிஹாச–புராணங்களில்சித்தர்கள்: இதிஹாச புராணங்களில் சித்தர்கள் – தேவரிஷிகள், சாரணர், கின்னரர், கந்தர்வர் போன்றவர்களுடன் சேர்ந்து வாழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றது[5]. ராமாயணம் சித்தாஷ்ரம் (सिद्धाश्रम) ஒன்றிருந்தத்தைக் குறிப்பிடுகிறது (ஆதிகாண்டம்.29வது சர்க்கம், சுலோகங்கள்.3-6). அந்த மிகச்சிறந்த ஆஷ்ரமம் (ஆதி.5.24) வாமனருக்கு முன்பாகவே இருந்தது. விஷ்ணு இங்கு தவம் செய்து சித்தி பெற்று, வாமன அவதாரம் எடுத்ததால், அப்பெயர் பெற்றது[6]. விஷ்வாமித்திரர், ராமரை இங்கு அழைத்து வந்தார். மஹாபாரத்திலும் அதேப்போன்ற குரிப்புள்ளது[7]. மேரு மலையைச் சுற்றியுள்ள மலைகளின் உச்சிகளில் அவர்கள் வாழ்ந்திருந்தனர்.
மஹாபாரதம்.ஆதிபர்வம்.அத்தி.65.சுலோ.46 – ஒரு தேவகந்தர்வன். கஸ்யபர் மற்றும் பிராதா என்பருக்கும் பிறந்தவன்.
மஹாபாரதம்.ஆதிபர்வம்.அத்தி.70.சுலோ.15 – சித்தர்கள், தேவர்களின் குழுமம். அவர்கள் இமயமலை அடிவாரத்தில் கண்வ முனிவர் ஆசிரமத்திற்கு அருகில் வாந்தனர்.
மஹாபாரதம்.சபாபர்வம்.அத்தி.8.சுலோ.29 – சித்தர்கள் யமனுடைய அரண்மனையில் தங்கி, அவனுக்கு சேவை செய்து வந்தார்கள்.
சித்தகிரஹா – சித்தர்களால் சபிக்கப்பட்ட ஒரு துர்தேவதை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சித்தபிரமைப் பிடித்து பைத்தியமாவார்கள்.
சித்தார்த்த[8] – 1. குரோதவாச என்ற அசுரனின் மறுபிறவி;
2. தசரதருடைய அமைச்சர்களில் ஒருவன்;
3. சுப்ரமணியருடைய வீரர்களில் ஒருவன்;
4. பிறகு புத்தருடைய பெயராகவும் உள்ளது.
விஷ்ணுபுராணத்திலும் (The Vishnu Purana: Book II: Chapter V) அவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது[9]. சித்தர் முதலியோர் அனந்தன் என்ற பெரிய நாகத்தைப் போற்றுவதாக உள்ளது. வாயுபுராணம், ஜம்புதீவபத்தின் வடபகுதியில் ஜாருதி மலைப்பகுதியில் பலர் வாழ்ந்திருந்தனர். குறிப்பாக அம்மலைமீது சித்தர்களும், தேவரிஷிகளும் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்காக அம்மலையின் நடுப்பகுதி ஆபரணங்களினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு ஆனந்த ஜலம் என்ற மிகத்தூய்மையான நீர் கொண்ட ஏரி ஒன்று இருந்தது. அதில்தான் சித்தர்களும், தேவரிஷிகளும் நீராடுவார்கள் (அத்தி.41:66-73). அதேபோல மேருமலையின் வடக்குப் பக்கத்தில் “ரமணக வர்ஷ” என்ற மலையுள்ளது. அங்கும் சித்தர்கள், சாரணர்கள் வாழ்ந்து வந்தனர். உத்தரகுருவின் தெற்கில் உள்ள மலையிலும் சித்தர்கள், சாரணர்கள் வாழ்ந்து வந்தனர் பிறகு மற்றொரு சுலோகத்தில் சித்தர்கள் தேவர், ராக்ஷஸர், பன்னகர், யக்ஷர், கந்தர்வர், கின்னரர்களுடன் சேர்ந்து வாழ்வதாக கூறுகிறது (அத்தி.39.1). மேலும் இவர்கள் இப்படி தனியாக, தொலைவில் இருப்பது, பொதுமக்களுக்கு உதவுவதாகவோ, அவர்களுக்காக மருத்துவம் செய்வதாகவோ இல்லை.பிறகு வானியல் நூல்களில் உலகில் நான்கு திசைகளில் பூமத்திய ரேகையிலுள்ள நான்கு நகரங்களில்[10] ஒன்று “சித்தபுர” என்றும் அங்கிருப்பவர் “சித்தர்” என்று வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் மருத்துவ அல்லது ஆன்மீக சித்தர்கள் அல்லர்.
இந்திய மருத்து வமுறையின் பண்பாடு: இந்திய மருத்துவம் அல்லது எந்ததுறையிலும், ஒரு பாரம்பரியம் பின்பற்றப்பட்டு வந்தது. அதாவது, தாம் யாரிடமிருந்து படிப்பை, வித்தையை, ஞானத்தை பெற்றோம் என்பதனை அவர்கள் தவறாமல் தங்களது நூற்களில் குறிப்பிட்டு வந்தார்கள்[11]. ஆனால், மற்ற நாகரிகங்களில் மூலங்களைக் குறிப்பிடும் அத்தகைய பண்பாடு இல்லை. அவர்களே எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு அல்லது கண்டுபிடித்து எழுதியதைப் போலக் காட்டிக் கொள்வார்கள். அதனால், அந்த புத்தகங்களே அவர்கள் பெயர்களில் தான் இருக்கும். ஒரே நூலாக இருந்தாலும், பத்து பேர் எழுதினால், அந்த பத்து பேர் பெயரிலும் உலா வரும் வேதங்கள் பற்பல ஆண்-பெண்[12] ரிஷிக்களால் போதிக்கப்பட்டவை, ஆனால், அவை அவரவர் பெயர்களில் வழங்கப்படுவதில்லை. இந்தியமுறைகளில் பாஷ்யங்களுக்குத்தான் (உரைகள்) உரையாசிரியர்களின் பெயரிடப்படும். சாயனருடை உரை, ஆதிசங்கரருடைய பாஷ்யம் என்றிருக்கும். மருத்துவ நூல்கள் எல்லாம் “சம்ஹிதை” என்ற பிரிவில் வரும்[13].
© வேதபிரகாஷ்
06-09-2012
[1] வேதமதம் என்று தனியாக ஒன்றும் இல்லை. உண்மையில் பாரத்தில் இருந்தது அல்லது பாரத நாட்டவர் உலகம் முழுவதும் பரந்திருந்தபோது, பின்பற்றிய மதம் ஒன்றுதான். அது பிற்காலங்களில், வர்த்தமான – தேசகால மாற்றங்களினால், வித்தியாசங்களைப் பெற்றது.
[2] Monier Williams, A Sanskrit-English Dictionary, Motilal Banarasidas, New Delhi, 1996, pp.1215-1216.
[3] V. P. Apte, Sanskrit-English Dictionary, Motilal Banarasdas, New Delhi, 1963.
[4] பிற்காலத்தில் வர்த்தமான மஹாவீரர் “सिद्धार्थ” மற்றும் “சித்தார்த்த” என்றவர் “புத்தர்” ஆனத்தை நோக்கவும். அதாவது, இச்சொல் மிகவும் உயர்வாக மதிப்பக்கப்பட்டது.
[5] M. R. Singh, Geographical Data in the Early Puranas – A Critical study, Punthi Pustak, Calcutta, 1972.
[6] Bimala Churn Law, Historical Geography of Ancient India, Orient Reprint, New Delhi, 1984, p.126.
[7] Kinnaras were mentioned along with other exotic tribes like the Nagas, Uragas, Pannagas, Suparnas, Vidyadharas, Siddhas, Charanas, Valikhilyas, Pisachas, Gandharvas, Apsaras, Kimpurushas, Yakshas, Rakhsasas, Vanaras etc. at various places. (1-18,66), (2-10), (3-82,84,104,108,139,200,223,273) (4-70), (5-12), (7-108,160), (8-11), (9-46), (12- 168,227,231,302,327,334,(13-58,83,87,140), (14-43,44,88,92).
Siddhas were mentioned along with the Kinnaras, Charanas, Gandharvas, , Apsaras and Vanaras. They were seen by the Puru king Dushmantha (Dushyanta) in a forest where his would-be wifSakuntala lived. In that forest on the banks of a river called Malini (Ganges?) he saw the habitations of Kinnaras. He also saw Yotis (Yati in theHimalayas) and the Valikhilyas.
[8] Vettam Mani, Puranic Encyclopedia – A Comprehensive work with special reference to the Epic and Puranic literature, Motilal Banarasidass, New Delhi, 1998, p.716
[9] Gandharbas, Apsarasas, Siddhas, Kinnaras, Uragas, and Chárańas are unequal to hymn his praises, and therefore he is called the infinite (Ananta), the imperishable.
[10]லங்க, ரோமக, யவகோடி, சித்தபுர என்ற நான்கு நகரங்கள் இருந்ததாக சூரியசித்தாந்தம் முதலிய வானியல் நூல்கள் எடுத்துக் காட்டுகின்றன.,
[11] வேதம், வேதாங்கம், சித்தாந்தம், இதிஹாசம், புராணம் என்ற எந்த படிப்புமுறையாகிலும் தமது முன்னோடிகளை, ஆசிரியர்களைக் குறிப்பிட்டு, வணக்கம் செல்லுத்துவிட்டு தான் புத்தகத்தை எழுத ஆரம்பிப்பர். தொல்காப்பியம் இந்த பண்பாட்டைப் பின்பற்றியுள்ளடது.
[12] வேதங்களை பெண்களே இயற்றியிருக்கும் போது, பெண்கள் வேதங்களைப் படிக்கக் கூடாது என்று பிறகு ஜைனர்கள்-பௌத்தர்கள் தடைவிதித்தை, இன்று வேறுமாதிரியான விளக்கங்கள் அளித்து வருவதை நோக்கவும்.