சென்னையில்தேசியசித்தமருத்துவநிறுவனம்: மத்திய அரசு நிறுவனமான இது, இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள சென்னையின் தாம்பரம் பகுதியில் அமைந்துள்ளது. இது சித்த மருத்துவத்திற்கான அரசு மருத்துவ மனை மற்றும்ஆராய்ச்சி நிறுவனம். இங்கு சித்த மருத்துவத்துடன் தொடர்புடைய ஆய்வுகளை மேற்கொள்ளவும், சித்த மருத்துவத் துறையில் உயர்கல்வி கற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய மருத்துவத்தை ஊக்குவிக்கும் அரசின் ஏழு கல்வி நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகத் திகழ்கிறது. சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனத்தின் தலைமையகமும் இங்கு அமைந்துள்ளது. திராவிடத்துவ சித்தாந்திகள், எதை-எதையோ பேசுவார்கள், ஆனால், இத்தகைய பாரம்பரிய மருத்துவ முறைகளைக் கண்டுகொள்ளமாட்டார்கள்.
ஒருநாளைக்கு 2,000 முதல் 2,500 நோயாளிகளுக்குச்சிகிச்சைஅளிக்கப்படுகிறது: இந்திய மருத்துவத்தை ஊக்குவிக்கும் அரசின் ஏழு கல்வி நிறுவனங்களில் ஒன்றான இந்த மருத்துவமனை 14.78 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. நிசப்தம் நிலவும் மருத்துவமனை வளாகத்தில், 300 வகையான மூலிகைச் செடிகளையும் மரங்களையும் பார்க்கலாம். வெளிநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் துறை, கற்பித்தல் மற்றும் நிர்வாகத்துக்கென தனி தனி கட்டடங்களுடன் செயல்படுகிறது இந்த மருத்துவமனை. இங்கே சராசரியாக ஒரு நாளைக்கு 2,000 முதல் 2,500 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. வருடத்தில் 365 நாள்களும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை வெளி நோயாளிகளுக்கும், 24 மணி நேரமும் உள் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பலநோய்களுக்குசிகிச்சைஅளிக்கப்படுகிறது: வெளி நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகளுக்கு அந்தந்த நோய்களுக்கு ஏற்ப வர்மம், தொக்கணம், அட்டைவிடுதல், பற்று, ஒத்தடம், புகை, சுட்டிகை மற்றும் யோகம் ஆகிய சித்த மருத்துவமுறைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. சர்க்கரைநோய், இதயநோய், ஆஸ்துமா, மூலம், காயங்கள், சிராய்ப்பு, தீக்காயங்கள் போன்றவற்றுக்குச் சிறப்பாகச் சிகிச்சை அளிக்கிறார்கள். முதியோர் நலம், மகளிர் மருத்துவம், யோகம் – காயகல்பம், உடல் பருமன், ஒப்பனையியல், மகப்பேறின்மை, ஆட்டிசம் மற்றும் புற்றுநோய் போன்றவற்றுக்கும் சிகிச்சை அளிக்கிறார்கள்.
குழந்தைகள்நோய்பிரிவு: குழந்தைகளை பாதிக்கும் நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கும் பகுதியில், சரும நோய்கள், கரப்பான், சொறி சிரங்கு, பூச்சிக்கடியால் ஏற்படும் அலர்ஜி ஆகியவற்றுக்கு இங்கே சிகிச்சை அளிக்கிறார்கள். குழந்தைகளுக்கு ஏற்படும் பசியின்மை, மலச்சிக்கலுக்குச் சுக்கு, மிளகு போன்ற அஞ்சறைப் பெட்டி மருந்துகளை முறைப்படுத்தி, நோயின் நிலைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது. வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் ஓமத்தண்ணீர், மாதுளம்பழ சிரப் (syrup), தயிர்சுண்டி சூரணம் ஆகியவை குழந்தைகளின் உடல்நிலையை ஒரு நாளிலேயே சரிசெய்துவிடலாம் என்பது போன்ற எளிய முறைகளைச் சொல்லித் தருகின்றனர். மேலும், சில குழந்தைகளுக்குப் பிறக்கும்போதே இயற்கையாக ஏற்படும் மூளை வாதம், குழந்தையின் ஒரு பக்க உறுப்புகளின் செயல்பாடு குறைவாக இருப்பதால் உண்டாகும் பால வாதத்துக்கும் இங்கே சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆட்டிசம், ஹைப்பர்ஆக்டிவ் டிஸ்ஆர்டர், ஏ.டி.ஹெச்.டி (Attention Deficit Hyperactivity Disorder), கற்றல் கோளாறுகள் ஆகிய பிரச்னைகளுக்கும் இங்கே சிகிச்சை கொடுக்கிறார்கள். உடம்பில் முக்கியமான புள்ளிகளை அழுத்தி, மூளை அல்லது செயலிழந்த நரம்புகளை மீண்டும் செயல்படவைக்கும் வர்ம சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. அதோடு பிசியோதெரபியும் தரப்படுகிறது. சிதம்பரத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து கடந்த இரண்டரை மாதமாக சிகிச்சை பெற்றுவருகிறார். அவரிடம் குழந்தைக்கு என்ன பிரச்னை என்று விசாரித்தோம்… “முன்னாடில்லாம் பேச மாட்டான்; நடக்க மாட்டான். கை, கால் நேரா நிக்காது. இப்போ நல்லா நிக்குறான். சில வார்த்தைகளைப் பேசுறான். எவ்வளவு கூப்பிட்டாலும் ரெஸ்பான்ஸே பண்ணாம இருந்தவன், இப்போ ரியாக்ஷன் கொடுக்குறான்’’ என்றார்.
பெண்கள்தொடர்பானஎல்லாநோய்களுகள், சிகிச்சைமுதலியன: பெண்கள் தொடர்பான எல்லா நோய்களுக்கும் தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை, சூதகத்தடை (Absence of Menstruation), மாதவிடாயின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு (Menorrhagia) ஆகியவற்றுக்கும், `கர்ப்பப்பைக் கட்டி’ (Fibroid) எனப்படும் நார்த்திசுக் கட்டிப் பிரச்னைக்கும் சிகிச்சை… மாதவிடாய்க் காலங்களில் உண்டாகும் மனக்குழப்பங்களுக்கு நோயாளிக்குத் தேவையான கவுன்சலிங் (counselling) கொடுக்கிறார்கள். மகப்பேறின்மைக்காக ஆண்,பெண் இரு பாலருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை இதற்கெனச் சிறப்பு ஓ.பி (புறநோயாளிகள் பிரிவு) இயங்குகிறது. மார்பகங்களில் உண்டாகும் நீர்க்கட்டி, உடல் பருமன் ஆகியவற்றையும் கவனிக்கிறார்கள். பிரசவம் தவிர, கர்ப்பிணிகளுக்குத் தேவையான அனைத்துச் சிகிச்சைகளும், உதவிகளும் இங்கே வழங்கப்படுகின்றன.
பலவிதமானாநோய்கள், குறைபாடுகள்முதலியவற்றிற்குசிகிச்சை: கழுத்துவலி, இடுப்புவலி, பக்கவாதம், தூக்கமின்மை, மனநிலை மாறுபாடுகள், தலைவலி ஆகியவற்றுக்கு வர்ம சிகிச்சை கொடுக்கிறார்கள். அங்கே வந்திருந்த 72 வயது ஜெயலட்சுமியிடம் பேசினோம்…”எனக்குப்பக்கவாதத்தாலகை, கால்செயல்படாமப்போச்சு. ஆறுமாசமாசிகிச்சைஎடுக்குறேன். இப்போகொஞ்சம்பரவாயில்லை. தைலம், லேகியம், மாத்திரைனுநிறையமருந்துகள்தர்றாங்க,’’ என்றார். எலும்பு பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எண்ணெய் தடவுதல் முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குழந்தைகள், வயதானவர்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும் முறிவு, அடிபடுவதால் ஏற்படும் முறிவு உள்ளிட்ட பல குறைபாடுகளுக்கும் தீர்வு கிடைக்கிறது.
அட்டைவைத்துசிகிச்சை–லீச்தெராபி: ‘அட்டைவிடுதல்’ (leech therapy) பகுதி, பிரமிப்பை ஏற்படுத்துகிறது. `அட்டைவிடுதல்’ என்பது, உடலிலுள்ள அசுத்தமான ரத்தத்தை நீக்குவதற்கு அல்லது சுத்தப்படுத்துவதற்கு பாதிப்புக்குள்ளான இடத்தில் அட்டையைவிடும் முறை. அட்டையைக் குறிப்பிட்ட அந்த இடத்தில் கடிக்கவிட்டால், தேவையில்லாத ரத்தம் உறிஞ்சப்படும். காயம்பட்ட இடத்திலிருந்து அதிகபட்சமாக 120 மி.லி வரை ரத்தத்தை உறிஞ்சிவிடுமாம் அட்டை. ஒரு நோயாளிக்கு நான்கு அட்டைகளை கடிக்கவிடுகிறார்கள். `இந்த அட்டை கடிப்பதால் வலி இருக்காது; இதன் மூலம் கரப்பான், புழுவெட்டு, மூட்டு வீங்குதல், அடிபட்ட வீக்கம் போன்ற பாதிப்புகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது’ என்கிறார்கள்.
நவீனவசதிகளும்இங்கேஇருக்கின்றன: பெளத்திரம் பிரச்னைக்கு, `கார நூல்’ எனப்படும் மருந்து நூலைக் கொண்டு சிகிச்சை அளிக்கிறார்கள். இந்த மருத்துவமனையில் எளிய ஆசனப் பயிற்சிகள், மூச்சுப்பயிற்சிகளும் கற்றுத்தரப்படுகின்றன. நோய்களுக்கு ஏற்ப யோகா கற்றுத் தரப்படுகிறது. ரத்த அழுத்தம், மன அழுத்தம், தூக்கமின்மை ஆகியவற்றுக்கு யோக மருத்துவச் சிகிச்சையும் தருகிறார்கள். சித்த மருத்துவ அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டாலும் இ.சி.ஜி, எக்ஸ்ரே, யு.எஸ்.ஜி (உயரிய ரத்த சோதனை), பயோ கெமிக்கல் டெஸ்ட் (Bio-chemical Test), நுண்ணுயிரியியல் சோதனை (Microbiological Test), நோய்க் குறியியல் சோதனை (Pathological Test), சித்தா நோய் கண்டறியும் சோதனை (Siddha diagnostic Test) மற்றும் மருந்தகம் (Pharmacology) ஆகிய நவீன வசதிகளும் இங்கே இருக்கின்றன[1]. மொத்தத்தில் எளியோர் முதற்கொண்டு எல்லோரும் பயனடையும் வகையில் சிறப்பாகச் செயல்படுகிறது இந்தச் சித்த மருத்துவமனை[2].
டிசம்பர் 2022ல் கோவாவில் 9வதுஉலகஆயுர்வேதகாங்கிரஸ்: இன்று கோவாவின் பனாஜியில் மத்திய சுற்றுலா மற்றும் கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் நீர்வழிப்பாதைகள் துறை இணை அமைச்சர் ஸ்ரீ பத் நாயக், முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த், ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்யா ராஜேஷ் கொடேச்சா ஆகியோர் முன்னிலையில் தொடங்கியது. 9வது உலக ஆயுர்வேத காங்கிரஸ், உலக அளவில் ஆயுஷ் மருத்துவ முறைகளின் செயல்திறன் மற்றும் வலிமையை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டில் ஆயுஷ் (ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி) துறையின் சந்தை அளவு 2014 இல் 3 பில்லியன் அமெரிக்க டாலர் என்பதிலிருந்து இப்போது 18 பில்லியன் அமெரிக்க டாலராக வளர்ந்துள்ளது. 2014-2020 ஆம் ஆண்டில், ஆயுஷ் தொழில்துறை ஆண்டுக்கு ஆண்டு 17 சதவீதம் வளர்ச்சியடைந்தது, அதே நேரத்தில் ஆயுர்வேத சந்தை 2021-2026 லிருந்து ஒட்டுமொத்த வருடாந்தர வளர்ச்சி 15 சதவிகிதம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அனைத்து சித்த மருத்துவ நிறுவனங்களும் சேர்ந்து செயல்பட வேண்டும்: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முயற்சியால் ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஓமியோபதி (ஆயுஷ் – AYUSH) துறைகளில் புதிய பல கண்டுபிடிப்புகள் மேற்கொள்வதற்காக தேசிய சித்த மருத்துவம் மற்றும் சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அண்மையில் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சித்த மருத்துவம் குறித்து ஆயுஷ் சாரா மருத்துவர்களுக்கான ஒருங் கிணைந்த பயிற்சி முகாம் கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழக வளாகத்தில் நடந்தது. ஒருவாரம் நடைபெறும் பயிற்சி முகாம், அது குறித்த கையேடும் வெளியிடப் பட்டது.
பௌத்த-திபெத்திய சித்தர் பட்டியலிலிருந்து திராவிட சித்தர்களின் பட்டியல் பெறப்பட்டதா?
பௌத்த பல்கலைக்கழகங்கள் தாக்கப்பட்டதால் பௌத்த சித்தர்கள் மற்ற நாடுகளுக்குச் சென்றது: பௌத்தமத்தத்தில் வஜ்ரயான தந்த்ர போதனைகளைப் பரப்புவதில் தீவிரமாக இருந்தவர்கள் சித்தர்கள் என்றழைக்கப்பட்டனர். இந்தியாவில் அவர்கள் ஏழாவது நூற்றாண்டிலிருந்து 11ம் நூற்றாண்டு வரை சிறந்திருந்தனர்[1]. முகமதியப் படையெடுப்புகளினால் தக்ஷசிலா (Dhakshasila), நாலாந்தா (Nalanda), விக்ரமசிலா (Vikramasila), ஓடந்தபூர் (Odantapur) போன்ற மிக்கப்பெரிய பல்கலைக்கழகங்கள் / மஹாவிஸ்வவித்யாலயங்கள் முதலியவை தாக்கி அழிக்கப்பட்டதால், பேராசிசியர்கள், மாணவர்கள், மருத்துவர்கள், ஞானிகள் முதலியோர் தப்பியோட வேண்டியதாயிற்று. அவர்கள் நாலாப்பக்கங்களிலும் சிதறியோடினர். இதனால் தந்தரமுறைகள் அந்தந்த நாடுகளில் பரவியது[2]. வைரோச்சன என்பவர் பௌத்த தந்திரிகமுறையைத் தோற்றுவித்தவர். குலாச்சார, வாமாசார, சஹஜயான, வஜ்ரயானப் பிரிவுகள் அந்நாடுகளில் பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டன. ஒவ்வொரு ஆண்தேவதைக்கும், ராகினி, லாகினி, சாகினி, ஹாகினி, குபுஜீகா போன்ற பெண்தேவதையும் சேர்க்கப்பட்டது[3].
நாடுகளில் பரவியது
வைரோச்சனின் பெயர் / மாற்றம்
விளக்கம்
மஹாயான பௌத்தம்
தியானி புத்தா
சிவன் புத்தனைப்போல சித்தரித்துள்ளார்கள். அதனால், ஒரு புத்தருக்குப் பதிலாக ஐந்து புத்தர்கள், ஐந்துதிசைகளில் (சிவனின் ஐந்து முகங்கள் போல) உள்ளனர். பிறகு சக்தியையும் சேர்த்துள்ளனர். ஒன்று மூன்றாகி, ஐந்தாகி, எழாகி, ஒன்பதாகி விட்டன. எட்டு, 84 என்றாகியதைப் போல சித்திகள் சக்திகளுடன் இணைத்து, முறைகளும் புகுத்தப்பட்டன.
நேபாளம்
ஆதிபுத்தா
சீனா
வஜ்ரசத்வா,நாகார்ஜுனா, வஜ்ரபோதி, அமோகவவஜ்ர
ஜப்பான்
வஜ்ரசத்வா, நாகார்ஜுனா, வஜ்ரபோதி, அமோகவவஜ்ர
ஜாவா முதலிய தென்கிழக்காசிய நாடுகள்
எண்பத்து நான்கு பௌத்த சித்தர்கள்: 84 சித்தர்கள் இருந்தார்கள் என்று 1506 ஆண்டு தேதியிட்ட மைதிலி மொழியில் எழுதப்பட்டுள்ள ஒரு ஆவணம் – “வர்ணரத்னாகர” என்ற நூல் – பட்டியலிட்டுக் காட்டுகிறது. ஆனால் 76 பெயர்கள் மட்டும்தான் காணப்படுகிறது[4].
மீனநாத
கோரக்கநாத
சௌரங்கிநாத
சாமரிநாத
தந்திபா
ஹாலிபா
கேதாரிபா
தோங்கபா
தாரிபா
விருபா
கபாலி
கமாரி
காண்ஹ
கனஹல
மேகல
உன்மன
காந்தலி
தோவி
ஜாலந்தரா
தோங்கி
மவஹா
நாகார்ஜுனா
தௌளி
பிஷாலா
அசிதி
சம்பக
தேந்தச
பூம்பாரி
பாகலி
துஜி
சர்பதி
பாடே
சாந்தனா
காமரி
கரவத்
தர்மபாபதங்க
பத்ரா
பாதலிபத்
பலிஹிஹ
பானு
மீன
நிர்தய
சவர
சாந்தி
பாரதிஹரி
பிஷண
படி
கங்கப
கமார
மேனுரா
குமார
ஜீவன
அகோசாதவ
கிரிவர
சியாரி
நாகவலி
பிபவத்
சாரங்க
விவிகதஜா
மகரதஜ
அசித
பிசித
நேசக
சாதல
நாசன
பிலோ
பாஹல
பாசல
கமலகங்காரி
சிபில
கோவிந்த
பீம
பைரவ
பத்ர
பமரி
புருக
திபெத்திய பாரம்பரியப்படி எண்பத்து நான்கு பௌத்த சித்தர்கள்: திபெத்திய பாரம்பரியத்தில் 84-சித்தர்களின் பெயர்கள் (சதுரசிதிஸ்சித்தர்), “சதுரசிதி-சித்த-பிரவுருத்தி” என்ற நூலில் காணப்படுகிறது, விளக்கம் இவ்வாறுள்ளன. அபயதத்தர் (சுமார். 1100 CE) என்பவர் இந்த விவரங்களைக் கொடுத்துள்ளார்[5]. இந்த ஓலைசுவடிப் புத்தகத்தில் அழகான சித்தர்களின் வண்ணப்படங்களும் உள்ளன[6]. இங்கு “ப” என்பதனை “பாத” என்று வாசிக்க வேண்டும். அஜிந்தபாதன், அஜோகிபாதன், சம்பகபாதன், சௌரங்கிபாதன் என்று பெயர்கள் வரும், அவற்றிலிருந்து அப்பெயர்களின் பொருளை அறிந்து கொள்ளலாம்.
எண்
பெயர்
பொருள்
விளக்கம்
1
அசிந்த / அசிந்தப
பேராசைக் கொண்ட துறவி
விறகுவெட்டி, விறகு வியாபாரம்
2
அஜோகி /அயோஜிப
ஒதுக்கப்பட்ட பிரயோகமில்லாதவன்
பிணமாக நடித்தவன்
3
அனங்கப/அனங்க/அனங்கவஜ்ர
அழகான முட்டாள்
சுந்தரானந்தர் / குதம்பைச் சித்தர்?
4
ஆர்யதேவ/ஒருகண்ணையுடைவர்
நாகார்ஜுனரின் சீடர்
மஹாசித்தர்களில் ஒருவர்
5
பபஹ
சுற்றித் திரியும் காதலன்
6
பத்ரப
ஜம்பப் பேர்வழி
தனியான பிராமணன்
7
பண்டேப
பொறாமைப்படும் கடவுள்
8
பிக்ஷனப
இரண்டு பற்கள் கொண்ட சித்தன்
9
புஸுகு/புஸுகுபாத
சோம்பேரி சந்நியாசி
ஜடம்-ஒருவேலையும் செய்யாதவன்
10
சமரிப
தெய்வீக சக்கிலியன்
11
சம்பக/சம்பகபாத
மலர்களுக்கு அரசன்
12
சர்பரிப/சர்பதி
மக்களைக் கல்லாக்கியவன்
கல்லாக்குபவன்; கல்லுளி சித்தர்?
13
சத்ரப
ராசியுள்ள பிச்சைக்காரன்
அதிருஷ்டம் உள்ளவன்
14
சௌரங்கிப
அங்கஹீனன்
கை-கால்கள் இல்லாதவன்
15
சேலுகப
மறுபடியும் வீர்யம் பெற்றக் கொக்கு
கொங்கணவன்
16
தரிகப
கோவில் விபச்சாரியின் அடிமை அரசன்
17
தேன்கிப
பிராமண அடிமை
18
தௌலிப
முற்கள் கொண்ட கயிறு திரிப்பவன்
19
தர்மப
என்றைக்கும் மாணவன்
20
திலீப
சந்தோஷமான வியாபாரி
சுகவான்; தேரையர்?
21
தோபின
அறிவுள்ள வண்ணான்
22
தோகரிப
பாத்திரங்களை சுமப்பவன்
23
தோம்பி ஹெருக
புலி சவாரி செய்பவன்
புலிப்பாணி?
24
துக்காண்டி
பெருக்குபவன், சுத்தம் செய்பவன்
25
கண்டப
பிரமச்சரியத்தைக் கடைபிடிக்கும் துறவி
மணியடிக்கும் துறவி
26
கர்பரி/கர்பரிப
துக்கமளிக்கும் பண்டிதன்
27
கோதுரிப/கோரூர
பறவைப் பிடிப்பவன்
28
கோரக்ஷ / கோரக்கநாத
நிரந்தரமாக மாடு மேய்ப்பவன்
பசுக்களைக் காப்பவன் – இவர் கோரக்கரக்கவும் அல்லது திருமூலராகவும் கொள்ளலாம்.
29
இந்திரபூதி
திலோபனின் குரு
எந்திரியங்களை வென்றவன்
30
ஜலதார
தகிணி என்பவரின் சேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவன்
நீரைப்போன்று வேகமாமக செல்லக்கூடியவன்/ ஓடுபவன்
31
ஜெயந்தர
காக்கையின் ஆசிரியர்
காகபுசசுண்டர்?
32
ஜோகிப
சித்தப் பிரயாணி
அலைந்து-திரிந்து கொண்டிருப்பவன்
33
கலப
அழகான பைத்தியம்
சுந்தரானந்தர்?/ குதம்பைச் சித்தர்?
34
கம்பரிப
கொல்லன்
இரும்பு முதலிய உலோகவேலை செய்பவன்
35
கம்பள
கருப்புக் கம்பள யோகி
கருப்புக் கம்பளம் போர்த்தியவன்; சட்டைமுனி?
36
கணக்கல
முண்டமாமன இரு சகோதரிகளின் இளைய சகோதரன்
ஏழுதலையுள்ள சகோதரிகளின் இளைய சகோதரன்
37
கண்ஹ / கணப
கருப்புத் தோலன்
கருப்பு சித்தர்
38
கங்கண
சித்தராஜ
சித்தர்களுக்கு அரசன்
39
கங்கரிப
காதல் பித்தம் கொண்ட விதவை
40
கந்தாலிப
குப்பைப் பொறுக்குபவன்
கந்தை தையல்காரன்
41
கபலப
கபாலம் கொண்டவன்
காபாலிகன்
42
கட்கப
திருட்டுராஜா
பயமில்லாதத்ன் திருடன்
43
கிலகிலப
தள்ளிவைக்கப்பட்ட லொடலொட வாயன்
வீண்பேச்சாளிடமரானந்தர் / பிண்ணாகீசர்?
44
கிரபலப
வென்று துக்கப்படுபவன்
45
கோகிலப
நிம்மதியான ஓவியன்
கலைஞானி
46
கோடலிப
விவசாயியான குரு
47
குசிப
கழுத்துவீங்கிய யோகி
48
குக்கிரிப
நாய் விரும்பி
தத்தாரேயர்?
49
கும்பாரிப
பானையன் / பானை செய்வோன்
அகத்தியர்?
50
லக்ஷ்மீன்கர
பைத்தியமான இளவரசன்
51
லிலப
ராஜீய சுகவாசி
என்றும் இன்பம் துய்ப்பவன்
52
லுசிகப
தப்பித்துக் கொள்பவன்
பொறுப்பற்றவன்
53
லுயிப
மீன்-குப்பையைத் தின்பவன்
மச்சேந்திரர் / மச்சமுனி?
54
மஜிப
மிகப்பெரியவன்
55
மணிபத்ர
மாதிரி மனைவி
இவள்தான் மனைவி என்று போற்றப்படுபவள்
56
மெதினி
களைத்த விவசாயி
57
மேகல
முண்டமான இரு சகோதரிகளில் மூத்தவள்
ஏழு சகோதரிகளில் மூத்தவள்
58
மெகோப
முழிக்கும் குரு
கண்ணிமைக்காத சித்தன்
59
மீனப
மீன் பிடிப்பவன்
மச்சேந்திரர் / மச்சமுனி?
60
நாகபோதி
சிவப்புக் கொம்புத் திருடன்
ஆரியதேவ / ஒற்றைக்கொம்பன்
61
நாகார்ஜுன
யோகி
62
கலினப
சுதந்திர இளவரசன்
யார் மீதும் ஆதாரமாக இல்லாதவன்
63
நரோப
64
நிர்குணப
அறிவான முட்டாள்
65
பச்சரிப
மாமிசம் சமைப்பவன்
புலத்தியர்?
66
பங்கஜப
தாமரையில் பிறந்த பிராமணன்
பிரம்மா, கமலமுனி?
67
புதலிப
மருந்து பாத்திரம் சுமப்பவன்
தன்வந்திரி?
68
ராஹுல
இளமைப் பெற்ற பழைய முட்டாள்
69
சரஹ
அம்பு செய்பவன்
70
சகர
கடலில் செல்பவன்?
டமரானந்தர்?
71
சமுதர
முத்தெடுப்பவன்
72
சாந்திப
மிக்கப்படித்தவன்/அறிவுஜீவி
அமைதியான பிரச்சாரி
73
சர்வபக்ஷ
வெற்று வயிரன்
நன்றாக சாப்பிடுபவன்
74
சவரிப
வேட்டைக்காரன்
75
சாலிப
நரி யோகி
76
தந்தேப
சூதாடி
77
தந்திப
முதுமைப் பெற்ற நெசவாளி
78
தகநப
தேர்ந்தெடுத்தப் பொய்யன்
79
திலோப
80
உடிலிப
பறக்கும் சித்தர்
பறவை-மனிதன்டமரானந்தர்?
81
உபான
செருப்புத் தைப்பவன்
82
வினப
சங்கீதம் விரும்பி
பாட்டுப்பாடுபவன்
83
விருப
84
வியலப
அரசாங்க ரசவாதி
யூகிமுனி?
இந்த பௌத்த சித்தர்களின் கதைகளைப் படித்தால், அவை அப்படியே நமது சித்தர்களின் கதைகளைப் போலவே இருக்கின்றன. நிச்சயமாக இக்கதைகளைப் படித்தறிந்தவர்கள், அவற்றை தமிழகத்திற்கு ஏற்றவாறு, சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து அதற்கேற்றாவாறு மாற்றியிருக்கிறார்கள். பௌத்த-திபெத்திய பாரம்பரியங்களில் 16ம் நூற்றாண்டு ஆவணத்தில் அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பௌத்த மஹாசித்தர்கள்: ஹடயோகப்ரதீபிகா[7] என்ற 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த நூல் 32 மஹாசித்தர்களின் பெயர்களைக் கொடுக்கிறது[8].
ஆதிநாத
மச்சேந்திர
சாவர
ஆனந்தபைரவ
சௌரங்கி
மீனநாத
கோரக்கநாத
விருபாக்ஷ
பிலேசயா
மந்தான
பைரவ
சித்திபுத்த
கந்தடி
கோராம்தக
சுரானந்த
சித்தபாத
சர்பதி
கானேரி
பூஜ்யபாத
நித்யானந்த
நிரஞ்சன
கபாலி
பிந்துநாத
காகசண்டீஸ்வர
அல்லாம
பிரபுதேவ
கோட
சோலி
திமிந்தி
பானுகி
நாரதேவ
கண்டகாபாலிக
அதாவது 84 சித்தர்களில் இந்த 32 சித்தர்கள் அவ்வாறு “மஹா சித்தர்க்ள்” என்று தேர்ந்தெடுத்துள்ளனர். ஒருவேளை நம்மாட்கள் இதனைப் பார்க்கவில்லையோ என்னமோ? ஒருவேளை, 14 பேர்களை விடுத்து, 18 பேர்களைத் தேர்ந்தெடுத்தனரோ என்னமோ? இல்லை ஜைனர்கள் எப்படி “மஹாசித்தர்கள்” என்று தீர்த்தர்ங்களையும் குறைத்துக் கொண்டார்களோ அவ்வாறிருக்கலாம். பௌத்தம் பொருத்த வரையில், தாந்திரீகத்தை பின்பற்றி சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள். பௌத்த சித்தர்கள் அனைவரும் தாந்தீர்கர்களே.
பௌத்த நூல்களைப் பின்பற்றி “திராவிட சித்தர்கள்” கதைகள் உருவானது: பொதுவாக ஜைன-பௌத்த நூல்கள் எல்லாமே சமஸ்கிருத நூல்களினின்று பெற்றப்பட்டவைதாம். ஜைனம் மற்றும் பௌத்தம் வேதங்களின் நிலைநிறுத்தப்பட்ட விஷயங்களை ஏற்றுக் கொண்டு, பெருமான்மையான மக்களின் நம்பிக்கைகளையும் தகவமைத்துக் கொண்டு உருவாக்கப்பட்ட மதங்கள் தாம்[9]. பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு, கர்மா, பாவம், புண்ணியம், ஆன்மா / ஆத்மா முதலி எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டன[10]. எப்படி வேதங்களப் படித்து, அதற்கு எதிராக சில தர்க்கநூல்களை உருவாக்கினார்களோ, அதேபோல இதிகாச-புராணங்களுக்கு மாறாகவும் தயாரித்தார்கள் என்று முன்னமே எடுத்துக் காட்டப்பட்டது. “கதா சரித் சாகர” போன்ற கதைகளில் சித்தர்கள் ஏதோ மந்திர-தந்திரங்களில் வல்லவர்கள் போன்று சித்தரிக்கப் பட்டனர். அதேபோல ஆரியர்களை உருவாக்கி, அவர்களுக்கு எதிராக திராவிடர்களை தயாரித்தவர்களே, ஜைன-சித்தர்கள், பௌத்த-சித்தர்கள் போல, திராவிட-சித்தர்களை உருவாக்கியிருக்கின்றனர். கொடுத்துள்ள பெயர்கள், விளக்கம் முதலியவற்றைப் படிக்கும்போதே, தெரிவது என்னவென்றால், நிச்சயமாக இதைப்படித்து, 19-20ம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் புதியதான “திராவிட சித்தர்களை” உருவாக்கியிருக்கிறார்கள் என்பதுதான். மேலும் யாரை சேர்ப்பது-விடுப்பது என்று குழம்பி, பட்டியலை உருவாக்கினதால், “பதினெண் சித்தர்” பட்டியலும் குழம்பிவிட்டது. அகத்தியர் பெயரில் உள்ள நூல்களைப் படித்து, இவற்றையும் படித்தால், எப்படி இக்கதைகளைக் காப்பியடித்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
ஆங்கிலேயர் ஆதரவுடன் அல்லது உத்தரவுடன் தமிழ் பண்டிதர்கள் உருவாக்கியுள்ளனர்: ஆங்கிலேயர் மற்றும் ஐரோப்பிய மிஷனரிகள் சேர்ந்து வேலை செய்து வந்துள்ளதால், ராபர்டோ டி நொபிலி, சீசன்பால்கு, பெஸ்கி போன்றவர்கள், தமிழ் பண்டிதர்களின் உதவியுடன், அத்தகைய சித்தர் பாடல்களை உருவாக்கியிருக்கலாம். சீசன்பால்கு கணபதி உபாத்யாயாவை மிரட்டி தமிழ் கற்றுக் கொண்டான், நூல்களையும் எழுதவைத்தான் மற்றும் அவரது சாவதற்கும் காரணமாக இருந்தான். ராபர்டோ டி நொபிலி “ஆத்தும நிர்ணயம்”, “புனர் ஜென்ம ஆக்ஷேபம்”, “அக்கியாண நிவாரணம்”, திவ்விய மாதிரிகை, ஞான சஞ்சீவி, அண்ட பிண்ட வியாக்கியானம், உலக பிராமண சாஸ்திரம், பரமசுமாக்ஷபிபிராயம் போன்ற நூல்களை எப்படி தமிழ் பண்டிதர்களை விலைக்கு வாங்கி எழுத வைத்தார்களோ அதேபோலத்தான் எழுதப்பட்டன[11]. ஐரோப்பியர்கள் ஓலைச்சுவடி புத்தகங்கள் எல்லாவற்றையும் சேகரித்து எடுத்துச் சென்றிருப்பதால், மேலும் பலவற்றிற்கு மூலப்பிரதிகளை எடுத்து, காகித நகல்களை வைத்துச் சென்றுள்ளதால், நிச்சயமாக அவர்கள் இந்த வேலையை செய்திருக்க வேண்டும். உலக மகாயுத்தங்களுக்குப் பிறகு, ஐரோப்பிய ஆட்சியாளர்கள் தத்தமது காலனிய நாடுகளினின்று வெளியேற வேண்டும் என்று தெரிந்தபோது, அங்கங்கு இத்தகைய போலி ஆவணங்களை, கட்டுக்கதைகளை, புரட்டு சரித்திரங்களை உற்பத்தி செய்து வைத்துவிட்டனர். மேலும் 19ம் நூற்றாண்டில் இந்திய மருத்துவமுறைகளுக்கு எதிராக ஆங்கிலேயர் அதிக அளவில் அடக்குமுறைகளைமேற்கொண்டு வந்தனர். உள்ள மருத்துவமுறைகளை “நாட்டு மருந்துவம்” (Native medicine), “காட்டு மருந்துவம்” (Tribal medicine), “கிராம மருந்துவம்” (village / folk medicine), “அநாகரிக மருத்துவம்” (Uncivilized / crude medicinal practices), “பில்லி-சூன்ய மருத்துவம்” (Shamanism / Witchcraft), “போலி மருத்துவம்” (Pseudo-medicine), “பேய்-பிசாசுகளை ஓட்டும் முறை” (Exorcism) என்றெல்லாம், பழித்துப்பேசி, இகழ்வாக எழுதி, எதிர்த்துச் சட்டங்களை இயற்றித் தடையும் செய்தனர்.
[1] Anagarika Govinda, Tantric Buddhism, in P. V. Bapat (Gen.editor), 2500 Years of Buddhism, Publication Division, Government of India, New Delhi, 1997, p.315.
[2] Radhakamal Mukerjee, The March of Tantrika art over the Pacific, in Studies in Asian History, pp.289-296.
[3] Probodh Chandra Bagchi, Studies in the Tantras, Part-I, University of Calcutta, 1975, see under the chapter “On Foreign element in the Tantra”, pp.45-55.
[4] A list of eighty-four Siddhas (though, actually only 76 names are mentioned) is found in a manuscript (manuscript no 48/34 of the Asiatic Society of Bengal) dated Lakshmana Samvat 388 (1506) of a medieval Maithili work, theVarna(na)ratnākara written by Kaviśekharācārya Jyotirīśvara Ṭhākura, the court poet of King Harisimhadeva of Mithila (reigned 1300–1321). An interesting feature of this list is that the names of the most revered Nathas are incorporated in this list along with the Buddhist Siddhacharyas.
[6] Scott Hajicek-Dobberstein, Soma Siddhas and alchemical enlightenment: pasychedelic mushrooms in Buddhist tradition, Journal of Ethnopharmacology, 1995, vol.48, pp.99-118.
[7] Dasgupta, Sashibhusan (1995). Obscure Religious Cults, Firma K.L.M., Calcutta, ISBN 81-7102-020-8, pp.203ff, 204.
[9] J. G. Jennings, The Vedantic Buddhism of the Buddha, Geoferry Cumerlege, Oxford University Press, London, 1947.
[10] Ananda K. Coomaraswamy, Hinduism and Buddhism, The Wisdom Library, New York.
[11] எஸ். ராஜமாணிக்கம் (பதிப்.), ஆத்தும நிர்ணயம், பாளையங்கோட்டை, 1967.
பதிப்பாசிரியரே ராபர்டோ டி நொபிலி பெயரில் உலாவரும் நூற்களில் பெரும்பாலும் அவரால் எழுதப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார் பக்கங்கள்.xxii-xxiv. அவற்றில் உபயோகப்படுத்தப்பட்டுள்ள சொற்கள் – சுவர்க்கம், நரகம், வைகுந்தம், கைலயம்…….பாவம், புண்ணியம்…..போன்ற விஷயங்கள் கிருத்துவத்திற்கு கிஞ்சித்தேனும் சம்பந்தம் இல்லை. ஏதோ ஒரு தமிழ்நூலை, கிருத்துவநூல் என்று சொல்லிக்கொள்வது நன்றாகவே தெரிகிறது.
சைவ சித்தாந்தமும், சித்தர் பாடல்களும், சித்த மருத்துவமும்
இடைக்காலத்தில் தோன்றிய சைவசித்தாந்தத்திலும், சித்து, சித்தி முதலிய வார்த்தைகள் காணப்படுகின்றன. ஆனால், அவர்களுக்கும் இந்த சித்தர்களும் எந்த சம்பந்தமும் இல்லை. சிவஞான சித்தியாரை, “சித்தர்” என்றோ, “”சித்த மருத்துவர் யாரும் கூறவில்லை. ஆகவே, சித்தியாரை சித்தராக்க முடியாது. சித்தாந்தத்தில் உள்ள சித்தி, இங்குள்ள சித்தியோடு ஒப்பிட முடியாது. பஞ்சபூதத் தத்துவம், திரிதோஷம், ஆறு சக்கரங்கள், பிரணாயாமம், யோகா முதலிவற்றை ஏற்காமல் இருந்தால், அவை சைவசித்தாந்தத்தில் இருக்க முடியாது. வேதத்தின் அந்தத்தை, முடிவை பெறும் முயற்சி போல, சித்தாந்தி – சித்தின் முடிவை – ஞானத்தின் முடிவை அறிய விரும்பினார்கள். சிவனை மறுக்கும் சித்தாந்தம் இருக்க முடியாது, அதுபோலவே சித்தர்களும் இருக்கமுடியாது. ஆகவே, “கடவுளை எதிர்க்கும், மறுக்கும் நாத்திகவாதிகள் சித்தர்கள்” என்பது பொய்யான வாதமாகிறது. திருமூலரே ஆத்திகவாதியாக இருந்து, வேத-புராணங்களை ஏற்றுக் கொண்டு, சிவபக்தராக இருந்தும், மும்மூர்த்திகளின் தத்துவங்களை ஏற்றுக் கொண்டு, மந்திரம்-யந்திரம்-தந்திரம் முறைகளை தகவமைத்துக் கொண்டுதான் சித்தராக இருந்தார். அப்பொழுது, திருமூலரின் சித்தாந்தத்தை மறுத்து, சைவ சித்தாந்தத்தையும் வெறுத்து “சித்தர்கள்” இருக்க முடியுமா? அவர்கள் “சித்தர்கள்” ஆவார்களா?
சித்தமருத்துவ நூல்கள் தமிழ் சித்தர்களால் எழுதப்பட்டவையா?: சித்தர்களின் பெயர்களில் பற்பல மருத்துவ நூல்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சித்தர் பெயரின் பின்னால் சாத்திரம், காண்டம், வைத்தியம், தந்திரம், சூத்திரம் என்றும், எண்கள் – 10, 20, 50, 100, 1000 என்றும் சேர்த்துக் கொண்டு பல நூல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் குறைவாகவே கிடைக்கப் பெற்றுள்ளன. தாதுக்கள், உப்புக்கள், கனிமங்கள் முதலியவற்றின் பெயர்களைப் பார்க்கும் போது அவையெல்லாம் 19 அல்லது 20ம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை என்று நன்றாகத் தெரிகிறது. ஏனெனில் அதற்கு முன்பு, அவற்றிற்கு அத்தகைய சொல் பிரயோகங்கள் இல்லை.
அகத்தியர் ஐந்து சாத்திரம்,
அகத்தியர் கிரியை நூல்,
அகத்தியர் அட்டமாசித்து, ,
வைத்திய ரத்னாகரம்,
வைத்தியக் கண்ணாடி,
வைத்தியம் 1500,
வைத்தியம் 4600,
செந்தூரன் 300,
மணி 400,
வைத்திய சிந்தாமணி,
கரிசில்பச்யம்,
நாடி சாஸ்திரப் பசானி,
பஸ்மம்200,
கர்மவியாபகம்,
அகத்தியர் சூத்திரம் 30,
அகத்தியர் ஞானம்
திருமூலர் சல்லியம் – 1000
திருமூலர் வைத்திய காவியம் – 1000
திருமூலர் வைத்திய கருக்கிடை – 600
திருமூலர் வைத்திய சுருக்கம் – 200
திருமூலர் தீட்சை விதி – 18
திருமூலர் யோக ஞானம் – 16
16. திருமூலர் விதி நூல் – 24
திருமூலர் ஆறாதாரம் – 64
திருமூலர் பச்சை நூல் – 24
திருமூலர் பெருநூல் – 3000
திருமூலர் ஞானோபதேசம் 30
திருமூலர் வியாதிக் கூறு 100
திருமூலர் முப்பு சூத்திரம் 100.
சித்தர்களே மருத்துவ நூல்களை இயற்றினார்களா அல்லது பிறகு தயாரிக்கப்பட்ட நூல்களுக்கு, அதிகாரம், ஏற்பு மற்றும் பிரபலம் முதலிய காரணங்களுக்காக சித்தர்கள் பெயர்கள் தலைப்பாக சேர்த்திடப்பட்டனவா என்று யோசிக்கவேண்டியுள்ளது.
சைவம் வடக்கிலிருந்து தெற்கில் வந்துள்ளது என்பது வீரசைவ நூல்களினின்று தெரிய வருகின்றது. அதற்கான கல்வெட்டு, கட்டிட, அகழ்வாய்வு ஆதாரங்கள் உள்ளன. தமிழகத்தில் உள்ள கல்வெட்டு, கட்டிட, அகழ்வாய்வு ஆதாரங்கள் மௌரிய காலத்திற்கு முன்னாக இருந்தால் தான், இந்த வாதத்தை மறுக்க முடியும். அதாவது, உள்ள பல்லவர்காலத்து கொகைக்கோவில்கள் முதலியன அக்காலத்திற்கு முன்பாக இருந்திருந்தால், சைவத்தின் தொன்மை சங்ககாலத்திற்கு முன்பாக இருந்ததாகிறது. உண்மையில் உள்ள கல்வெட்டு, கட்டிட, சிற்பங்கள் முதலியவை நேரிடையாக தேதியிடப்படவில்லை. ஒப்பீட்டுமுறையில் தேதியிடப்பட்டுள்ளது. அந்நிலையில் சைவசித்தாஅந்தம் தோன்றிய பிறகுதான் “சித்தர்” வழக்கு வந்திருக்க வேண்டும் என்றால், அது வடவிந்திய நாதமரபிற்குப் பின்னர்தான் ஏற்பட்டிருக்கவேண்டும்.
இவை சித்தமருத்தப் பாடல்களா, அவற்றின் காலத்தை நிர்ணயிப்பது எப்படி?: கீழே சித்த வைத்தியர் ஒருவரால் எழுதப்பட்ட சிலபாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலேயுள்ள பாடல்கள் எல்லாம் சித்தர்களுடைய பாடல்கள் என்று படிப்பவர்களுக்த் தோன்றலாம். ஆனால், இவை தேவக்கோட்டையைச் சேர்ந்த “வைத்தியமணி” சித.வே.ஷண்முகநாத பிள்ளை எழுதியுள்ள மீனாமிர்தம்[1] என்ற நூலில் உள்ளவை. 1887ல் பிறந்த இவர் 1947ல் இப்புத்தகத்தை வெளியிடுகிறார். அப்பொழுதே முகம்மது, ஏசு, பரிசுத்த ஆவி என்றெல்லாம் சேர்த்து எழுதியுள்ளார். இந்நூல் சித்தவைத்தியர்கள் எல்லோருக்கும், வைத்தியக் கல்லூரிகளுக்கும், பொதுவாக பூத பௌதிக தத்துவ விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களுக்கும் பயன்தரத்தக்க சிறந்த நூல்களாக இருக்கின்றன என்று வெளியிடப்பட்டுள்ளது[2]. ஆகவே தமிழ் பண்டிதர்கள் அவ்வாறு எழுதக்கூடும் என்று தெரிகிறது. கிருத்துவப் பாதிரியார்கள் எப்படி தமிழ்பண்டிதர்களை வைத்துக் கொண்டு, அவ்வாறான முறையைக் கையாண்டார்களோ, அதேமுறையை “சித்தர் பாடல்கள்” உருவாக்கக் கையாண்டிருக்கலாம்.
நவீனகால சித்தர் பாடல்களுக்கும், சித்த மருத்துவத்திற்கும் என்ன தொடர்பு?
சித்தர்கள் பதினெட்டு என்றால் அவர்கள் பட்டியல் ஏன் வேறுபடுகிறது?: “பதினென் சித்தர்கள்” என்ற கணக்கீடு பிரபலமாக சித்தமருத்துவர்கள், சித்த-எழுத்தாளர்கள் மற்றும் சித்த-ஆராய்ச்சியாளர்கள் உபயோகித்து வருகிறார்கள். ஆனால், அத்தகைய கணக்கீட்டிற்கு ஆதாரம் ஏதாவது உள்ளதா என்று பார்க்கும் போது, பல பட்டியல்கள் தோன்றுகின்றன. உதாரணத்திற்கு பிரபலமாக மற்ற சித்த எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடும் பட்டியல்கள் சில கீழே கொடுக்கப்படுகின்றன:
இத்தகைய எண்ணிக்கைகள் எவ்வாறு வந்துள்ளன என்று இனி மூலங்களைப் பார்ப்போம்.
நந்தி யருள் பெற்ற நாதரை நாடினின்நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்ற தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
என்றிவர் என்னோ டெண்மருமே
(திருமந்திரம்.68)
நந்தி
சனகர்
சனந்தர்
சனாதர்
சனற்குமாரர்
பதஞ்சலி
வியாக்ரமர்
திருமூலர்
இப்பாடலை வைத்துக் கொண்டுப் பார்த்தால் – எண்மர் என்று வருகிறது. அவருடைய சீடர்கள் என அவரே குறிப்பிடுவது:
மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்இந்திரன் சோமன் பிரம்மன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோ
டிந்த எழுவரும் என் வழியாமே
மாலாங்கன்
இந்திரன்
சோமன்
பிரம்மன்
உருத்திரன்
கந்துருக் காலாங்கி
கஞ்ச மலையன்
ஆக திருமூலர் காலத்தில் 15 பேர் உள்ளனர். ஆனால், திராவிட இனவாதத்தின்படி, ஆரியர்கள் இதில் இருக்கக் கூடாது. ஆகையால் தான் மாலாங்கன், இந்திரன், சோமன், பிரம்மன், உருத்திரன், கந்துருக் காலாங்கி, கஞ்ச மலையன் என்ற பட்டியலில், காலாங்கியை மற்றும் தேர்ந்தெடுத்துள்ளனர். சமரசம் செய்து கொண்டவர்கள் அல்லது சைவ அபிமானிகள் எண்மரை சேர்த்துக் கொண்டுள்ளனர். போகரைப் படித்து குழம்பிப்போனவர்கள் பட்டியலை தமதிச்சைகேற்றாவாறு குழப்பியுள்ளனர்.
போகர் 7000 கொடுக்கும் சித்தர்கள் பட்டியல் ஜாதகம் முதலியன: போகர் 7000 என்ற நூலில் தான் சித்தர்கள் பற்றிய அதிகமான செய்திகள் உள்ளன, சித்தர்கள் “பதினெண்மர்” என்று குறிப்பிட்டு, 40ற்கும் மேற்பட்ட சித்தர்களின் பிறந்த மாதம், நட்சத்திரம், சாதிகளையும் குறிப்பிடுகின்றது. போகருக்கு 63 சீடர்கள் இருந்தார்களாம், அவர்கள் விண்வெளியில் பறக்கும் சக்தி கொண்டிருந்தார்களாம். எல்லா சித்தர்களையும் இணைக்க வேண்டும் என்ற முயற்சியில் இந்நூல் இயற்றப்பட்டிருக்கிறது. அதனால் காலத்தைப் பற்றி கவலைப்படவில்லை. முன்னுக்கு முரணாக எல்லோரையும் இணைக்க முனைந்துள்ளது. தசாவாரம் தெரிந்திருந்தத்தால் அந்த பத்து அவதாரப் பெயர்களை வைத்து பத்து ரிஷிக்களை உண்டாக்கியிருக்கிறது, பிறகு அவர்களும் சித்தர்கள் ஆகிறார்கள் (6868-6906). இதில் புத்தரைச் சேர்த்துள்ளது நோக்கத்தக்கது. நான்கு யுகங்கள், 1008 தீர்த்தங்கள் முதலியன சொல்லப்பட்டுள்ளன. ஆனால், பாடல்களை சாதாரணமாக வாசித்துப் பார்த்தாலே இது ஒரு போலிநூல் என்று தெரிகிறது. அதாவது 19/20ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று தெரிகிறது.
ஆரிய-திராவிட போராட்டத்தில் சிக்கிக் கொண்ட சித்தர்கள்: ஜே. எம். நல்லசுவாமி பிள்ளை (1864-1920) சைவராகயிருந்து, ஆரிய-திராவிட சித்தாந்த்தை ஏற்றுக் கொண்டவர். அதனால், திராவிடம்-சைவ சித்தாந்தம், ஆரியத்தை-வேத-உபநிடதங்களைவிட சிறந்தது என்று வாதிட்டார்[1]. அத்தகைய சைவம், பிராமணர்-அல்லாத இயக்கமாக மாறி, பிராமணர்-எதிர்ப்பு இயக்கமாக உருமாறி, திராவிட மாயைக்குள் சிக்குண்டது. இதனால் சித்தர்-எழுத்தாளர்களும் உருமாற வேண்டியிருந்தது. பகுத்தறிவில் இந்துமதத்தைப் பழிக்க வேண்டிருந்தது; நாத்திகத்தில் சிவனை மறக்கவேண்டியிருந்தது. திராவிட சித்தாந்தத்தில் திருமூலர் மரபையே மறைக்க வேண்டி வந்தது. அதன்படியே, பிறகு வந்தவர்கள் தமக்குக்கிடைத்துள்ள பிரதிகள் அல்லது புத்தகங்களை வைத்துக் கொண்டு, இந்த பட்டியல்களைத் தயாரித்துள்ளனர் என தெரிகிறது. இதைத்தவிர திருமந்திர பாரம்பரியத்தை ஏற்பதா வேண்டாமா என்ற மனசஞ்சலம், குழப்பம் மற்றும் திராவிட சித்தாந்த போராட்டம் 20 நூற்றாண்டு சித்தர் ஆராய்ச்சியாளர்களிடையே இருந்தது என்பதனையும் இது (இப்பட்டியல்கள்) எடுத்துக் காட்டுகிறது. சாமான்ய மக்களுக்குப் புரியவேண்டும் என்று இவர்கள் பாடல்களை இயற்றினார்கள் எனும் போது, மக்களிடையே பிரபலமாக இருக்கும் பெயர்களைத்தான் “சித்தர்கள்” வைத்துக் கொள்ள வேண்டும் அல்லது அப்போலி பாடல்களை உருவாக்கியவர்கள் வைக்க வேண்டும். அதனால்தான், புனைப்பெயர்கள் புராணப் பெயர்களாக, ரிஷிகளின் பெயர்களாக மாற்றப்பட்டன. அப்பொழுது, எதை விடுவது, எதை சேர்ப்பது என்ற குழப்பத்தில், அவரவர் விருப்பத்திற்கேற்றப்படி பட்டியலைத் தயாரித்துள்ளார்கள் என்று நன்றாகவே தெரிகிறது. கடந்த நூற்றாண்டுகளில் ஏற்பட்டிருக்கிறது என்பது, அவர்கள் பெயர்களைக் குறிப்பிடுகின்ற பட்டியல்களே சான்றாக உள்ளன.
சித்தர்கள் எண்ணிக்கை ஒன்பதா பதினெட்டானதா?: நாத-நவநாத சித்தர்களிடமிருந்து தான், இம்மரபு வருகிறது என்றதால், வடவிந்திய நாதசித்தர்களை விட தமிழ்சித்தர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்று உயர்வாகச் சொல்லிக்கொள்ள ஒன்பதை பதினெட்டாக்கியிருக்கலாம். இதனை மாணிக்கவாசகம், தெற்கில் பதினெண்சித்தர்கள் எனக்குறிப்பது போலவே வடக்கே நவநாத சித்தர்கள் எனக்குறிக்கும் மரபு உள்ளது, என்கிறார். அதாவது அவர்கள் தங்களது பட்டியலைச் சுருக்கிக் கொண்டார்கள் போலும்! 18ல் குழப்பம் உள்ளது போல 9லும் உள்ளது என்பதனை, “பதினெண்மர் யாவர் என்பதிலே கருத்து வேறுபாடு இருப்பது போல நவநாத சித்தர் யாவர் என்பதிலும் கருத்து வேறுபாடு இருந்து வருகின்றது”, என்று மூன்று பட்டியல்களைக் கொடுக்கிறார்[2].
அபிதான சிந்தாமணி
எம்.எஸ்.பூர்ணலிங்கம் பிள்ளை
சட்டைமுனி பின்ஞானம் மூன்று
சத்துவநாதர்
சாலோகநாதர்
ஆதிநாதர்
அருளிநாதர்
மதங்கநாதர்
மச்சேந்திரநாதர்
கடயேந்திரநாதர்
கோரக்கநாதர்
குக்குடநாதர்
சத்யநாதர்
சுகோதநாதர்
ஆதிநாதர்
அனாதிநாதர்
வகுளிநாதர்
மதங்கநாதர்
மச்சேந்திரநாதர்
கடயேந்திரநாதர்
கோரக்கநாதர்
திருமூலர்
சண்டிகேசர்
சனகர்
சனந்தர்
சனாதனர்
சனற்குமாரர்
வியாக்கிரபாதர்
பதஞ்சலி
சட்டைமுனி
இப்பெயர்களைப் படிக்கும்போதே, அறிவதாவது, முதல் இரண்டிலும் அதிகமான வேறுபாடில்லை மற்றும் மூன்றாவது திருமந்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள பெயர்களை வைத்து பட்டியல் தயாரிக்கப் பட்டுள்ளது என்று தெரிகிறது. பிறகு பௌத்தத்தில் தந்திரமுறைகளைக் கற்றுக் கொடுக்கும் “முதல் ஆசிரியர்கள்” 84-சித்தர்கள் ஆவர் என்றுள்ளது. லாமா கோவிந்த என்பவர் இவர்களது பரிபாஷையைப் பற்றிக் குறிப்பிடும் போது, இதனை எடுத்துக் காட்டுகிறார்[3]. பிறகு திபெத்தியர்களின் பாரம்பரியத்தில் பூசுகபாதர் என்பவர் எப்பொழுதும் சித்தர் என்றே அவர்களின் பட்டியல்களில் காணப்படுகிறார். அவர் விஞ்ஞான, மத்யாத்மக மற்றும் வேதாந்த சித்தாந்தகளை இணைத்துப் போதிப்பவராகத் தெரிகிறார்[4]. இதையும் விஞ்சவேண்டும் இல்லையா, அதனால் பட்டியலை நீட்ட ஆரம்பித்தனர் ;போலும். இப்படி, நீண்டு கொண்டே போகும் போது, 58, 64, 84, 108 என்றும் சித்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தனர்[5]. இதற்கு மேலும் யாதாவது, பிரச்சினை அல்லது குற்ரம் கண்டுபிடித்தால், எல்லாமே இதில் அடக்கம் என்பதுபோல, இன்னொரு “அனைத்தும் இதில் அடங்கும்” என்ற பட்டியல் தயாரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
சித்தர்களைப் பற்றிய பலவாரானக் கருத்துகள் நிலவி வருகின்றன, ஏனெனில் அத்தகைய கருத்துகளைத் தெரிவிப்பவர்கள் மூலங்களைப் படிக்காமல் பேசுவதால், எழுதுவதால் அத்தகைய நிலை ஏற்படுகிறது. மேலும் “சித்தர் பாடல்கள்” என்று பிரபலமாக வழங்கிவரும் பாடல்கள் சித்த மருத்துவத்துடன், தொடர்பு கொண்டிருந்தாலும், அவை, மருந்துகள் தயாரிக்கும் முறைகளைச் சொல்வதில்லை. இதையறிமால் எழுதுவதால் தான் தமிழ் சித்தர்களைப் பற்றிய கருத்துகள் ஏராளமாக, தாராளமாக ஆதாரங்களே இல்லாமல் பற்பல செய்திகளாகக் கொடுக்கப் பட்டு வருகின்றன[1]. மூலங்களைப் படிக்காமலே, பிரபலமாக எழுதப் பட்டுவரும் புத்தகங்களை வைத்துக் கொண்டு சமீபத்தில் வரையப் பட்டுள்ள உருவாக்கப்பட்டுள்ள சித்திரங்களை வைத்துக் கொண்டு பிரமிக்க வைக்கும் அளவில் இணைதளங்களில் வர்ணனைகளை குவித்து வருகிறார்கள்[2]. அவையும் வேகமாகப் பரவி வருகின்றன. ஏதோ எல்லா நோய்களையும் சித்தமருத்துவம் தீர்த்துவிடும் அல்லது சித்தமருத்துவத்தில் இல்லாத தீர்வுகளே இல்லை என்பது போல எழுதி, விளம்பரப்படுத்தி வருகிறார்கள்[3].
ஆதாரங்களைக் கொடுக்காமல் எழுதப் படும் புத்தகங்கள்: சித்தர்களைப் பற்றி சித்தமருத்துவ முறையைப் பற்றி எழுதுபவர்களும் மூலங்களை – முதன்மை அல்லது இரண்டாம் வகை – கொடுப்பதில்லை[4]. எழுதுபவர் தம்மை அல்லது பதிப்பகத்தார் – ஆசிரியர் / வைத்தியர் / மருத்துவர் / சித்தவைத்தியர் / சித்தமருத்துவர் / வைத்தியத் திலகம்/ சித்தர் என்றெல்லாம் கூறிக்கொண்டு –
பரம்பரை சித்த வைத்தியர்,
மூன்று பரம்பரையாக சித்தவைத்தியம் பார்த்து வருபவர்,
கைராச்சிக்காரர்,
தீராத நோய்களைத் தீர்த்து வைத்தவர்,
அறிமுகப்படுத்தப் படுகிறார் அல்லது அறிமுகமாகிறார். ஆனால் அவர்களுடைய நோயாளிகளைப் பற்றியோ, அவர்கள் எவ்விதமாக சிகிச்சையளிக்கப் பட்டு, எத்தனை நாட்களில் காலத்தில் குணமடைந்தார் என்று குறிப்பிடுவதில்லை. இருக்கும் மற்றும் புதியதாக தோன்றும் ஒவ்வொரு பதிப்பகமும் சித்தர்களைப் பற்றி, சித்தமருத்துவத்தைப் பற்றி யாதாவது ஒரு புத்தகத்தை வெளியிட்டுத் தீருவது என்று தீர்மானமாக இருக்கிறது[5]. ஆனால், எழுதுபவரோ, எழுதும் ஆசிரியர் மற்றும் வைத்தியரோ அரைத்த மாவை அரைக்கிறாரே தவிர, புதியதாக எதையும் எழுதுவது கிடையாது. ஏதோ பத்து புத்தகங்களைப் படித்து ஒரு புத்தகம் எழுதுவது போலத்தான் எழுதி வருகிறார்கள். அதிலும் அந்த பத்து புத்தகங்களையும் குறிப்பிடுவதில்லை. உள்ள விஷயங்களை, விவரங்களை, செய்திகளைத் தொகுத்துக் கொடுக்கிறார்கள். அவ்வாறு கொடுக்கும் போதும் மூலங்களைக் கொடுப்பதில்லை. சில விலக்குகளும் உள்ளன[6].
சித்தர் பாடல்கள் பதிப்புகள், வெளியீடுகள்: பெரிய ஞானக் கோவை என்று சித்தர் பாடல்கள் பெரிய எழுத்துப் புத்தகங்கள் முறையில் வெளியிடப்பட்டு வந்தன. சித்தர் ஞானக் கோவை என்று மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பித்து வெளியிட்டார். சமீபகாலத்தில் (1980-90களில்) எஸ்.பி. ராமச்சந்திரன்[7] என்பவர் நூற்றுக்கணக்கான சித்தர்நூல்களைப் பதிப்பித்துள்ளார். ஆனால் மற்ற பிரதிகளை ஆய்ந்து, சரிபார்த்து, திருத்தி வெளியிடவில்லை. இருப்பதை அப்படியே வெளியிட்டுள்ளார். பி. இரத்தின நாயக்கர் அண்ட் சன்ஸ்[8], பிரேமா பிரசுரம் போல வெளியிடப்பட்டுள்ளன. வி. பலாரமய்யாவின் புத்தகங்களில் சில கூர்மையான அலசல்கள் உள்ளன[9]. மீ.ப.சோமசுந்தரம்[10] எழுதியுள்ள “சித்தர் இலக்கியம்” ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியாகயுள்ளது. ஆனால், மேலே குறிப்பிட்டுள்ளபடி, எழுதப்பட்டுள்ள புத்தகங்களில் இவற்றைக்கூடக் குறிப்பிடுவது கிடையாது. ஒருவேளை அவர்கள் இவற்றையும் பார்த்திருக்க மாட்டார்கள் அல்லது படித்திருக்க மாட்டார்கள் போலும்.
ஓலைச்சுவடிகள், நகல்கள், பதிப்பிக்கப்படாதவை: கோபன்ஹேகன் (டென்மார்க்), பாரிஸ் (பிரான்ஸ்), பெர்லின் (ஜெர்மனி), டப்லின் (அயர்லாந்து), ரோம் (இத்தாலி), ஆம்ஸ்டெர்டாம் (நெதர்லாந்து), லிஸ்பன் (போர்ச்சுகல்), லண்டன் (இங்கிலாந்து) முதலிய நாடுகளிலுள்ள நூலகங்கள் மற்றும் ஆவணக்காப்பகங்களில் ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடிகள், பழைய நூல்கள் முதலியவையுள்ளன. இவை ஆராய்ச்சியாளர்களுக்கு எட்டப்படாத நிலையில் உள்ளன. அவற்றைப் பார்க்க, படிக்க, நகல் எடுக்க ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் செல்வழிக்க வேண்டியுள்ளது. இதனாலேயே ஆராய்ச்சியாளர்கள் செலவிற்கு பயந்து, இரண்டாம்தர மூலங்களை அதாவது பதிக்கப்பட்ட புத்தகங்களை நாடவேண்டியுள்ளது. இவற்றில்தான் பாரபட்சம், விருப்பு-வெறுப்பு, சித்தாந்தம் முதலிய வேறுப்பாடுகள் வருகின்றன. அவற்றினால் உண்மைகளை மறைத்தல், திரித்து / மாற்றி எழுதுதல், வேண்டியவற்றை மட்டும் எடுத்துக் காட்டுதல் – மற்றவற்றை மறைத்தல், தமது கருத்தேற்றி எழுதுதல் முதலியவை வருகின்றன.
ஐரோப்பியர்கள் ஒலைச்சுவடி புத்தகங்களை எடுத்துச் சென்றது: ஐரோப்பியர்களின் ஆட்சி காலங்களில், தென்னிந்தியாவிலிருந்து லட்சக் கணக்கான ஓலைச்சுவடி புத்தகங்கள், மரப்பட்டை நூல்கள், துணிப் படங்கள், கருவிகள், உபகரணங்கள் முதலியன அவரவர் நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பதிலுக்கு கையினால் காகிதங்களில் எழுதப் பட்ட ஆவணங்கள் வைக்கப்பட்டன. ஆனால், எடுத்துச் செல்லப்பட்ட எல்லாவற்றிற்கும் நகல்கள் அவ்வாறு எழுதிவைக்கப் படவில்லை. மெக்கன்ஸி சேகரிப்பே அதற்கு ஆதாரம். இருப்பினும் ஆற்றில் ஓலைச்சுவடிகளைப் போட்டார்கள், அதனால், தமிழ் நூல்கள் பல அழிந்துவிட்டன என்றும் கூறப்படுகிறது. அந்நியர்கள் அவ்வாறு எடுத்துச் செல்லாமல் இருக்க ஆற்றில் போட்டார்களா, பழைய செல்லரித்த ஓலைகளைப் போட்டார்களா என்று எடுத்துக் காட்டப்படவில்லை. கடந்த 100-200 ஆண்டுகளில் சித்தர்களின் பெயரில் பற்பல போலி நூல்கள் எழுதப் பட்டுப் பதிப்பிக்கப் பட்டுள்ளன. சில குழுமங்கள் ஆவணக் காப்பகங்கள் முதலிய இடங்களினின்றே அத்தகைய போலிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளன. இன்றும் அத்தகைய நூல்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
மூலங்கள், மூலப்பிரதிகள், பிரதிகளின் நிலை: சித்தர் பாடல்களின் அச்சிட்டப் புத்தகங்களைப் பார்த்துவிட்டு, அவற்றின் மூலப்பிரதிகள் எங்குள்ளன என்று கீழைத்திசை நூலகம், தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகம், உ. வே. சுவாமிநாத ஐயர் நூலகம், கன்னிமாரா நூலகம் முதலிவற்றில் சென்று பார்த்தால், பெரும்பாலானவை காகிதத்தில் எழுதப்பட்டுள்ளவையாகவே உள்ளன[11]. ஓலைச்சுவடியில் எழுதப்பட்டுள்ளவைகளும் சமீபத்தில் எழுதப்பட்டுள்ளவை என்று, எழுதியுள்ள முறை, உபயோகப்படுத்தப் பட்டுள்ள ஓலை, எழுதுகோலின் கூர்தன்மை முதலியவற்றிலிருந்து தெரிகிறது[12]. இடைக்கால ஓலைச்சுவடிகளில் உள்ள தமிழைப் படிப்பது கடினம், வரிகள் இடைவெளி இல்லாமல் எழுதப்பட்டிருக்கும். வார்த்தைகளைப் பிரித்துப் படித்தப் பின்னரே, செய்யுளின் அடிகள், கிரமம் முதலியவற்றைப் புரிந்து கொள்ளமுடியும்[13]. ஆனால், இவற்றில் சுலபமாக, புத்தகத்தைப் பார்த்துப் படித்தபைப் போல படித்தறிய முடிகிறது. அதாவது, இப்பொழுதிலிருந்து (2012), கணக்கிட்டால் சுமார் 100-150 ஆண்டு காலத்தில் – 1850-1910 காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஸ்வாசகாச சிகிச்சை, வாதரோக சிகிச்சை, கர்ப்பிணி பாலரோகம், மாடுகள்-குதிரைகள்-லட்சணம் வைத்தியம், சித்த மருத்துவச் சுடர், கர்ப்பிணி ரக்ஸா, முதலிய நூல்களை தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகம் வெளியிட்டுள்ளது. ஆனால், இவற்றைப் படித்துப் பார்க்கும் போது, இந்த “சித்தர்” பாடல்களுக்கும், இந்நூல்களுக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. அக்காலத்தில் கிடைத்துள்ள விவரங்களை பாட்டுபோல் எழுதிவைத்துள்ளனர் என்று தெரிகிறது.
புரட்டு-போலி-மோசடி “சித்தர் பாடல்கள்” என்று உலவி வருவதைத் தடுப்பதெப்படி?: பி. வே. நமச்சிவாய முதலியார், தமது தமிழ்மொழி அகராதியில் குறிப்பிட்டுள்ளது[14], “இவர்கள் செய்த நூல்கள் பெரும்பாலும் இறந்தன. இவர்களால் செய்யப்பட்ட நூல்களென்று சொல்லப்பட்டு இக்காலத்து வழங்குவன யாவரோ சாமானியர் பாடிய புரட்டு நூல்களேயாம்”. இதற்கு பொ. பாண்டித்துரைத்தேவர், பூவை. கலியாணசுந்தரமுதலியார், முதலியோர் சிறப்பித்து அணிந்துரை பாடல்களுடன் வெளியிடப்பட்டுள்ளது[15]. அதாவது 1911 காலத்திலேயே, தமிழ் பண்டிதர்கள் அவற்றை “யாவரோ சாமானியர் பாடிய புரட்டு நூல்களேயாம்” என்று தீர்மானித்து ஒதுக்கியுள்ளனர். ஆனால், அவற்றை உண்மை நூல்கள் போன்று, திரிபு விளக்கங்கள் கொடுத்து “சித்தர் பாடல்கள்” என்று இன்றளவும் பலர் வெளியிட்டு வருகிறார்கள். அவர்கள் உண்மையறிந்து செய்கிறார்களா அல்லது வியாபாரத்திற்காகச் செய்கிறார்களா என்று தெரியவில்லை. உண்மையிலேயே, சித்தர் இலக்கியம், சித்தர் பாரம்பரியம், சித்த மருத்துவம் முதலியை காக்கப் படவேண்டுமானால், இத்தகைய புரட்டு நூல்கள் வெளியிடப்படுவதை தடை செய்ய வேண்டும். அத்தகையோர் உண்மையறிந்து, தம்மைத் திருத்திக் கொள்ளவேண்டும். இல்லையெனில் “சித்தர்” என்று அடைமொழியை உபயோகித்துக் கொண்டு அத்தகைய போலி-புரட்டு பேச்சு, எழுத்து, ஆராய்ச்சி செய்பவர்களையும் மற்றவர்கள் அடையாளங்கண்டு கொள்ள வேண்டும்.
[1] சித்தர் ஆரூடம், சித்தர் ஜோதிடம், சித்தர் நெறி, சித்தர் தத்துவம், சித்த மருத்துவ பச்சிலைகள், சித்தர் பரிபாஷை, சித்தர் கையேடு…..என்று “சித்தர்” மற்ரும் “சித்த மருத்துவ” அடைமொழிகளோடு உருவாக்கபட்ட சொற்றொடர்கள் தலைப்புகளாக் கொண்ட ஆயிரக்கணக்கான புத்தகங்கள் கடந்த 70 ஆண்டு காலத்தில் தோன்றியுள்ளன.
[2] பல இணைதளங்கள் சித்தர்களைப் பற்றி, சித்தர்மருத்துவத்தைப் பற்றி இணைதளங்களில் அதிகமாகவே விவரங்களைத் தொகுத்துக் கொடுத்துள்ளார்கள். ஆனால் வழக்கம் போல மூலங்களைக் கொடுக்காமல், மற்றவர்களின் எழுத்துகளை, கருத்துகளை, தமது போல வெளியிட்டு வருகிறார்கள்.
[3] Weiss, Richard S, Recipes for Immortality – Medicine, Religion and Community in South India, , Oxford University Press, USA, 2008, pp.3-4.
[4] படிப்பவர்களுக்கு எல்லாம் தெரியும் என்பதனால், அவ்வாறு எழுதுகிறார்களா அல்லது மூலங்களைக் கொடுத்தால், தமது கையாண்ட முறை தெரிந்துவிடும் என்று தயங்குகிறார்களா அல்லது அவை இல்லவேயில்லையா என்ற சந்தேகங்களும் எழவேண்டிய நிலையுள்ளதால், மூலங்களைக் கொடுப்பது நல்லது.
[5] நூற்றுக்கணக்கான பதிப்பகங்கள் அவ்வாறு நூற்களை வெளியிட்டுள்ளதால் அவற்றைக் குறிப்பாக பெயர் சொல்லி எடுத்துக் காட்டவில்லை.
[6] சீ. கல்யாணராமன், பா. கமலக்கண்ணன் எழுதியுள்ள புத்தகங்களில் குறிப்பாக முக்கிய விஷயங்களை ஆதாரத்துடன் தந்துள்ளார்கள். வானதி பதிப்பகம் (17, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை – 600 017) பின்னவருடைய நூல்களை வெளியிட்டுள்ளது. கல்யாணராமன் தானே வெளியிட்டுள்ளார் – 1, 35வது தெரு, நங்கநல்லூர் காலனி, சென்னை – 600 061.
[7] தாமரை நூலகம், 7, என்.ஜி.ஓ.காலனி, வடபழனி, சென்னை – 600 026.
[8] பி. இரத்தின நாயக்கர் அண்ட் சன்ஸ், 25, வெங்கட்ராமர் தெரு, கொண்டித்தோப்பு, சென்னை – 600 079.
[9] அருள் ஜோதி பதிப்பகம், 10, ஜட்ஜ் பங்களா, சஞ்சீவி நகர், அரும்பபக்கம், சென்னை – 600 106.
[10] மீ.ப.சோமசுந்தரம், சித்தர்இலக்கியம்(இரண்டு பகுதிகள்), அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம், 1988.
[11] மெக்கன்சி ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடி புத்தகங்களை எடுத்துச் சென்றான். பிறகு மூன்றில் ஒருபங்குதான் திரும்பக் கொடுக்கப்பட்டது. அவற்றிலும் பல பிரதிகளே. ஆங்கிலேயர் காலட்திலேயே, காகிதத்தில் பிரதியெடுக்கும் வேலை ஆரம்பித்தது.
[12] சாதாரணமாக, முறையாக பதப்படுத்தி, முறையான எழுதுகோல் மூலம், எழுதும் திறமையுடையவர்களால் எழுதப்பட்டுள்ள ஓலைச்சுவடிகள் ஆயிரம் ஆண்டு காலம் வரை இருக்கும். ஆனால், புதிய ஓலைச்சுவடிகளில், சமீபத்தில் எழுதியிருந்தால், அதனைத் தொடும்போது, நுகரும்போது காட்டிக் கொடுத்துவிடும். இப்பொழுது பதப்படுத்த ரசாயனப் பொருட்களை உபயோகப்படுத்துகிறார்கள்.
[13] இவையெல்லாம் முறையான அத்தகைய வாசிப்பு அனுபவம் உள்ளவர்கள் மற்றும் தமிழ் பண்டிதர்கள் முதலியோர்களால் தான் முடியும். எல்லோரும், தமிழ் படிக்கத்தெரிந்தவர்கள் எல்லோரும், படித்து அர்த்தமும் தெரிந்து கொள்ளலாம் எனும்போது, அதன் ககலத்தைக் கட்டிக் கொடுத்துவிடுகிறது.
[14] P. V. Namasivaya Mudaliar, The Coronation Tamil Dictionary – A guide indispensable to Tamil Professors and scholars, Madras, 1911, p.626.
[15] இத்தமிழ் அகராதி நா. கதிரைவேற்பிள்ளை அவர்களால் தொகுக்கப்பட்டு நமச்சிவாய முதலியார் அவர்களால் 1911ல் ஆங்கில அரசன் “இந்திய சக்கவர்த்தியாக” முடிசூட்டிக் கொண்டதன் நினைவாக வெளியிடப்பட்டது. பிறகு ஏசியன் எடுகேஷனல் சர்வீசஸ் என்ற பதிப்பகம், அதனை நா. கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதி என்று வெளியிட்டு வருகிறது.
N. Kathiraiver Pillai’s Tamil Moli Akarathi, Asian Educational Srvices, New Delhi, 1992.