சித்தர்களின் மூலம், பாரம்பரியம், இன்றைய நிலை

வரலாற்று நோக்கில் சித்தர்கள் ஆராய்ச்சி

Archive for the ‘ஓலை’ Category

1450 BCEயிலிருந்து முகமதுநபி (570-632 CE) காலம்வரை அரேபியாவில் வாழ்ந்தவர்கள் யார்?

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 23, 2012

1450 BCEயிலிருந்து முகமதுநபி (570-632 CE) காலம்வரை அரேபியாவில் வாழ்ந்தவர்கள் யார்?

 

இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக இஸ்லாமிற்கு-முகமது நபிக்கு முன்னர் அரேபியாவில் வாழ்ந்தவர்கள் யார் என்ற கேள்வி எழுகின்றது. அக்காலத்தில் சுற்றிலும் இருந்த நாகரிகத்தவர் சிறந்திருந்ததால், அரேபிய மக்களும் சிறப்பான நாகரிகத்தைக் கொண்டிருக்க வேண்டும். அவர்களில் முனிவர், அறிஞர், சித்தர், ஞானியர் போன்றோர் இருந்திருக்கவேண்டும். மக்கள் ஆரோக்யம், உடல்நலம் விஷயங்களிலும் சிறந்திருக்க வேண்டும். அதற்கான மருத்துவமுறையும்  இருந்திருக்க வேண்டும்.  அப்படியிருக்கையில், இஸ்லாமிற்கு-முகமது நபிக்கு முன்பான அரேபிய சரித்திரம் இருட்டடிக்கப் பட்டுள்ளது. அம்மக்கள் இருண்ட காலத்தில், அறியாமையில், விக்கிர ஆராதனை போன்ற பாவச்செயல்களில் ஈடுபட்டிருந்தனர் என்றும் விவரிக்கப்படுகிறது. ஆனால், அவர்களின் மொழியான அரேபியமொழி இன்றைய முஸ்லீம்களுக்கு தேவமொழியாக இருக்கிறது. நபி பேசிய மற்றும் குரான் மொழி அரேபிய மொழிதான். பிறகு அத்தகைய தேவமொழியைப் பேசி வந்தவர்கள் எப்படி இருண்ட காலத்தில், அறியாமையில் மூழ்கியிருந்தார்கள் என்று தெரியவில்லை.

அரேபியாஎன்பதுஎன்ன?: ஜைனர்கள் பாரத்தத்தின் வடமேற்குப் பகுதி வழியாக வெளியே சென்றனர், கிரேக்கர் உள்ளே வந்தனர் எனும்போது, அரேபியாவிற்கும் அவ்வாறுதான் சென்றிருப்பர். முதலில் அரேபியா மற்றும் அரேபியர் என்பன என்னவென்று புரிந்து கொள்ளவேண்டும்[1], ஏனெனில் இஸ்லாமிற்கு – நபிக்கு (570-632 CE) முன்பான அரேபியர்களைப் பற்றிய முழு விவரங்களை சரித்திர ஆசிரியர்கள் முழுமையாகக் கொடுப்பதில்லை. அவற்றை நூறு-இருநூறு ஆண்டுகள் பழமையான புத்தகங்களினின்று பெறவேண்டியுள்ளது. ஜெஸிரத்-அல்-அரப் (Jezirat-al-arab) என்பவர்கள் அரேபியாவில் இருந்தவர்கள் என்றும், அவர்கள் இருந்த இடம் அரபிஸ்தான் (Arabistan) என்றும் பாரசீகர்கள் மற்றும் துருக்கியர்கள் குறிப்பிட்டு வந்தார்கள்[2]. “ஜெஸிரத்அல்அரப்” என்றால் “அரேபியரது தீவு” என்று பொருள். அதாவது முன்னர் அரேபியா தீவாக இருந்ததா அல்லது அரேபியர் மற்ற மக்களிடமிருந்து தனித்து இருந்தார்களா என்று தெரியவில்லை. பாரசீகர்கள் ஒரு “சத்ரப்பை”த் தொடங்கி அதற்கு “அராபியா” என்று பெயரிட்டனர்[3]. பாரசீக “சத்ரபி” என்ற சொல் “க்ஷத்ரபாவ” என்ற சமஸ்கிருத சொல்லினின்று உருவானது, க்ஷத்திரியர்கள் வாழும் / ஆட்சிசெய்யும் இடம் என்று பொருள். “அரேபியா” என்றால் சதுரமான இடம் என்று பொருள். அரேபிய மொழியில் “மக்பி” என்றால் கனச்சதுரம் மற்றும் “காபா” என்பது முஸ்லீம்கள் வழிபடும் இடமாகும். “அரப்” என்றால் “பதவியா / பெதுவியா” என்ற நாடோடிக் கூட்டத்தையும் குறிக்கும். யூதமொழியில் “இரப்” என்றல் பாலைவனம், அதாவது செமித்திய மொழியிலும் பாலைவனம் மற்றும் அங்குவாழும் மக்களைக் குறிக்கிறது ஆனால் எந்த மக்களினத்தையோ, நாட்டையோக் குறிக்கவில்லை[4].

அரேபியர்கள்எவ்வாறுஅடையாளங்காணப்பட்டனர்?: அரேபிய அகராதிகளில் அரபி (ஆண்பால் ஒருமை. அரபியா (பெண்பால் ஒருமை) மற்றும் அரப் (பலவின்பால்) என்று அரேபிய மக்களைக் குறிக்கின்றன:

  1. ஒருவனுடைய மொழி அல்லது பேச்சு அரேபிக் மொழியானது அல்லது தூய்மையான அரேபியமொழியானது.
  2. அஜீரணமாகி, வயற்று உபாதையினால் அவஸ்தைப் படுபவன்.
  3. யாரொருவன் குழம்பி அல்லது சிதைந்து போயுள்ளானோ அவன்.
  4. யாரொருவன் அரேபியர்களுடன் கலந்து ஐக்கியமாகியுள்ளானோ அவன்.

பிறகு “அரப்” என்பது “அஜப்” என்ற வார்த்தையோடு ஒப்பிடும்போது, “அரப்” என்பது “தெளிவாகப் பேசுவது” ஆனால் “அஜப்” என்றால் தெளிவில்லாமல் பேசுவது அல்லது மற்றவர்களுக்குப் புரியாதமாதிரி பேசுவது என்று பொருள் கொள்ளப்படுகிறது. உண்மையில் பாரசீகர் அரேபியரை குறைவாக மதிப்பிட்டபோது, பதிலுக்கு அரேபியர் பாரசீகர்களை “அஜப்” என்று கூறிக் கிண்டலடித்தனர். சமஸ்கிருதத்தில் “ரப்” என்பது “சத்தம், கூச்சல், இரைச்சல்” என்று பொருள். “ரவ்” என்பது “ரப்” என்றும் உச்சரிக்கப்படும், அல்+ரவ் அல்லது அல்+ரப் =அரவ் / அரப் என்றானது. அதனால்தான் சத்தம்போடுபவனை, கூச்சலிடுபவனை “அரவவாடு” என்று தெலுங்கர் அழைக்கின்றனர். மேலும் இப்பகுதியில் குதிரைகள் உள்ளன அல்லது குதிரைகள் வரவழைக்கப்படுகின்றன என்பதால் “அரவஸ்தான்” என்று அழைக்கப்பட்டது[5]. அரபிஸ்தான்-அரவஸ்தான்-அரவத்தான்-ராவுத்தன் என்று தமிழில் பெறப்படுகிறது. மாவுத்தன் யானைப்பாகன் என்றால் ராவுத்தன் குதிரையோட்டியாகிறான்[6]. அதாவது குதிரைகளை வாங்குபவன், விற்பவன், வளர்ப்பவன், பழக்குபவன் என்றுள்ளது.

அரேபியர்கள் யார்?: இதைத்தவிர, அரேபியாவில் வாழ்ந்த எல்லோரும் அரேபியர் என்றழைக்கப்பாட்டாலும், அரேபிய எழுத்தாளர்கள், அவர்களைப் பிரித்துக் காட்ட, கீழ்கண்டவாறு அழைத்தனர்:

  1. அல்அரப்அல்பைதா = காணாமல் போன அரேபியர், மறைந்து போன அல்லது சரித்திரகாலத்திற்கு முந்தைய அரேபியர், முதல் அல்லது உண்மையான அரேபியர்.
  2. அல்அரப்அல்அரிபா = உண்மையான அரேபியர் அதாவது தென்னரேபியாவில் வாழும் அரேபியர் அல்லது கஹ்தான் வழிவந்தவர்கள் (ஜோக்தான் என்று பைபிளில் சொல்லப்படுகிறது).
  3. அல்அரப்அல்மூதா‘அர்ரிபா = அரேபியர்களுடன் ஐக்கியமானவர்கள், அல்-முஸ்தா ‘ரிபா = அரேபியர்களை நாடுபவர்கள், அரேபியமயமாக்கப்பட்டவர்கள். மோஸ்தராபியர் அல்லது இஸ்மாயில் வழிவந்தவர்கள்.

ஆகவே அரேபியாவில் இருப்பவர்கள் எல்லோருமே “அரேபியர்” அல்லர். அதேபோல இஸ்லாம் தோன்றி வளர்ந்தபிறகு, அரேபியாவில் இருந்தவர்கள் முஸ்லீம்களாக மாறியப் பிறகுக் கூட அரேபியர் எல்லோருமே “முகமதியர்”, “முசல்மான்கள்”, “முஸ்லீம்கள்” ஆகிவிடவில்லை. இந்திய கல்வெட்டுகளில் “துருக்கர், துலுக்கர், துருக்ஸாஸ்” எனப்படுபவர் எல்லோரும் முகமதியரா அல்லது துருக்கியிலிருந்து வந்தவரா என்றும் ஆராயவேண்டியுள்ளது. இஸ்லாம் தோன்றுவதற்கு முந்தைய இருந்த அரேபியர் மற்றும் இஸ்லாம் தோன்றிய பின்னர் அரேபியர் அனைவரையும் “முகமதியர்” என்றோ “இஸ்லாமியர் / முஸ்லீம்கள்” என்றோ எழுதிவைப்பது பிற்கால முஸ்லீம் எழுத்தாளர்களுக்கு வழக்கமாகியது[7].

அரேபியர்கள் இந்தியர்கள் செய்வதை தலைகீழாக செய்பவர்களா?: வேதமதத்தினர்-இந்துக்கள் செய்வதை தலைக்கீழாக செய்பவர்கள் ஜைனர்கள்-பௌத்தர்கள்-முகமதியர்கள் என்ற வழக்கும் உள்ளது. முதலில் ஜைனர்கள்-பௌத்தர்கள் அவ்வாறு செய்தாலும், பிறகு, பொதுவான இந்திய கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் மற்றும் நாகரிக காரணிகளால் சேர்ந்தே வாழ்ந்தார்கள். ஆனால், முகமதியர் ஆரம்பத்திலிருந்தே, வேறுபட்டு தலைகீழாக செய்து வந்ததால் அவர்களை “அரவநாட்டவர்” என்றே அழைத்தனர். தெலுங்குக்காரர்களை “கொலுடி” என்று தமிழர்கள் கலாட்டா செய்வது வழக்கம். அதாவது தெலுகு என்பதனை திருப்பிப் போட்டு குலுதி-குலுடி-கொலுடி என்று கிண்டல் செய்தனர். இதனால், தெலுங்கர் தமிழர்களை “அரவர் / அரவவாடு” என்று சொல்வதுண்டு. அதவாது துலுக்கர்களைப் போல தலைகீழாகச் செய்பவர்கள் என்ற பொருட்பட கூறினர். இந்துக்கள் அழுதால், துலுக்கர் சிரிப்பர்; இந்துக்கள் சிரித்தால், துலுக்கர் அழுவர்; குழந்தை பிறந்தால் அழுவர், யாராவது இறந்தால் சிரிப்பர் என்றெல்லாம் சொல்வதுண்டு. மேலே பாரசீகர்-அரேபியர் ஒருவரையொருவர் எவ்வாறுக் கூறிக் கொள்வர் என்று எடுத்துக் காட்டப்பட்டது. அதுபோல, ஆயிரக்கணக்கான வருடங்களாக அரேபியாவில் இருந்து வரும் பழக்க-வழக்கங்களை முழுவதுமாக மாற்ற முடியாது என்பதனால், அவற்றை மாற்றியமைத்திருக்கலாம்.

சதுரமானகனச்சதுரமானஇடம்“சதுரகிரியா”அல்லதுகாபாவா?: காபாவைப் பொறுத்தவரையிலும், நிச்சயமாக அது முகமதியர்-முஸல்மான்-முஸ்லீம்களின் வழிபாட்டு ஸ்தலமல்ல. “காபத்துல்லா” என்றழைக்கப்பட்ட “இறைவன் உறையும் இடத்தில்” – வளகத்தில் நடுவில் ஒரு விக்கிரகம் இருந்தது, அதனைச் சுற்றி 360 விக்கிரங்கள் இருந்தன. அவை சதுரமாக அல்லது வட்டவடிவில் வைக்கப்பட்டிருந்தனவா என்று தெரியவில்லை. ஏனெனில், சித்திரங்கள் இருவிதமாகவும் சித்தரித்துக் காட்டுகின்றன. எப்படியாகிலும் வட்டத்தை-சதுரமாக, சதுரத்தை-வட்டமாக்கும் வித்தைகளை இந்தியர்கள் தாம் அறிந்திருந்ததால், குறிப்பாக மந்திர-தந்திர-யந்திர வித்தைகளில் ஈடுபட்டிருந்ததால், அவ்வளாகம் அவ்விதமாக அமைக்கப்பட்டிருந்தது என்றறியலாம். 64-யோகினி-ஜோகினி கோவில்கள், வளாகங்கள் அவ்விதமாகவே அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதனை இந்தியாவில் காணப்படும் உதாரணங்களினின்று அறிந்து கொள்ளலாம்.  காபாவின் தரைப்படம் மற்றும் இந்த யோகினி கோவில்களின் தரைப்படங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மையினைப் பார்த்தேத் தெரிந்து கொள்ளலாம். இதனால் தான், முகமதியர் இந்தியாவில் நுழைந்தபோது, நபி அழித்தவையெல்லாம் இங்குள்ளனவே என்று அவரைப் போலவே செய்யவேண்டும் என்றுதான், முகமத் கஜினி, முகமது கோரி முதலியோர் செய்தனர். அதாவது அத்தகைய கோவில்களை அழித்தனர், விக்கிரங்கள உடைத்தனர், புத்தகங்களை எரித்தனர். ஒரிஸ்ஸாவில் உள்ள 64-ஜோகினி கோவில் ஓரளவிற்கு புனர்நிர்மாணம் செய்யப்பட்டிருக்கும் போது, மத்தியப்பிரதேசத்தில் உள்ள 64-ஜோகினி கோவில் எந்த அளவிற்கு சேதப்படுத்தப் பட்டுள்ளது என்பதனை அச்சிற்பங்களை வைத்தே கண்ட் உ கொள்ளலாம். சோமனாதபுரம் அல்-லத் என்ற விக்கிரமாக இருக்கும் என்றுதான் 17 முறை வந்து விக்கிரகத்தை-சிவலிங்கத்தை உடைத்தழித்துச் சென்றான்.

நபிகள் விட்டு வைத்ததை நபிகளின் வழிவந்தவர்கள் சிதைத்தது ஏன்?: நடுவில் ஒரு சதுரம், அதில் பிரதான தேவதை-பெண் கடவுள், சுற்றி வட்டத்தில் 64 தேவதைகளின் விக்கிரங்கள், சிற்பங்கள் இருக்கும். இவையெல்லாமே வெவ்வேறான பெயர்களில் குறிப்பிடப்படும் சக்திகள் தாம். அதேபோல, காபாவில் 360 விக்கிரங்கள் இருந்ததை முகமதியர்களே ஒப்புக் கொண்டுள்ளனர். அல்-அஜர்கி என்பவர் மற்றப;அ விக்கிரங்கள், ஓவியங்கள் காபாவில் இருந்ததாகக் கூறியுள்ளார்[8]. அவற்றை நபி அழித்தாலும், நடுவில் இருந்ததை அங்குள்ள மக்களின் வேண்டுகோளின் மீது விட்டு வைத்தார். ஆனால், பின்வந்தவர்கள் அதனையும் விட்டு வைக்காமல் உடைத்ததாலும், ஏரித்ததாலும் அவ்விக்கிரகம் சிதைந்து உருமாறிவிட்டது. 930ல் மெக்காவிலிருந்து தூக்கிச் செல்லப் பட்ட அக்கல் அல்லது கற்பாகங்கள் 931ல் திரும்ப கொண்டு வந்து வைக்கப்பட்டது[9]. அதாவது அவர்கள் நபியைப் போலவே தாங்களும் அத்தகைய வேலையை செய்யவேண்டும் என்ற போக்கில், இருப்பதையும் அழிக்கத்துணிந்தனர், அவ்வாறே சிதைக்கவும் செய்தனர். அதனால்தான், அவ்விக்கிரகம்-அக்கல் வெள்ளை நிறத்தில் இருந்தது, கருப்பு நிறத்தில் இருந்தது, ஒன்றாக இருந்தது, மூன்று துண்டுகளாக இருந்தன, என்று பலவாறாக சித்திரங்களில் காணப்படுகின்றன. அதே போல அபிரஹாம் மற்றும் அவரது மகன் சிற்பங்கள் இருந்தன, ஆனால் அவற்றையும் உடைத்தார் அல்லது அபிரஹாம் விக்கிரத்தை மட்டும் விட்டு வைத்தார் என்று பலவாறுக் கூறப்படுகின்றன[10]. எது எப்படியாகிலும் இருந்த விக்கிரகங்கள் அழிக்கப்பட்டதால், சரித்திர ஆதாரங்கள் மறைந்து விட்டன என்றாகிறது.

© வேதபிரகாஷ்

22-09-2012


[1] அரேபியா-அரேபியர் பற்றிய விவரங்கள் கீழ்கண்ட கட்டுரையிலிருந்து பெறப்பட்டது:

K. V. Ramakrishna Rao, The Presence of Arabs in South India before and after the advent of Islam, a paper presented  at the sixth session of Tamilnadu History Congress held at Islamiah College, Vaniyambadi, from October 23 to 24, 1999. இக்கட்டுரை முன்பாகவே குரியர் மற்றும் மின்னஞ்சலில் அனுப்பட்டும், அதற்கான ஆதாரங்கள் இருந்தும், ஜனாப் சஹாப்புத்தீன் என்பவர் “ஆய்வுக் கட்டுரை பட்டியலில்” கூட இடம் பெறாமல் மறைக்கப் பார்த்தார். இருப்பினும், திரு. ராஜு தலைமையில் நடந்த அமைவில் திரு கோ. வே. இராமகிருட்டிண ராவ் படித்துள்ளளர்.

[2] Henri Stierlin, Great Civilizations: The Cultural History of the Arabs, Italy, 1981, p.10.

[3] M. TH. Houtsma, T.W.Arnold and Harmann (Eds.), E. J. Brill’s First Encyclopedi of Islam 1913-1936, Netherlands, 1987, Vol.I, p.367.

[4] Pihilp K. Hitti, History of Arabs, Macmillan, 1985, Hongkong, p.41.

[5] Col. Wilford, Asiatik Researches, Vol.III, p.326.

[6] இடைக்காலத்தில் அருணகிரிநாதர், முருகனை, “குதிரையேறும் ரரவுத்தனே” என்று விளித்துப் பாடியுள்ளார்.

[7] K. V. Ramakrishna Rao, The Presence of Arabs in South India before and after the advent of Islam, opt.cit.

S. M. Kamal, Muslimkalum, Tamizhagamum, Islamiya Ayvu Panpattu Maiyyam, Madras, 1990, p.22.

இவர் தமிழகத்தில் மூன்றாம் நூற்றாண்டிலேயே முஸ்லீம்கள் இருந்தார்கள் என்று எழுதுகியுள்ளார்!

[8] Oleg Graber, The Formation of Islamic art, Yale University, USA, 1973, pp.60-61. He gives the details about other objects, jewels etc., kept at Kaba till Mohammed destroyed them.

[9] Gerald de Gaury, Rulers of Meca, Roy Publishers New York, 1949, pp.109-110.

[10] De Lacy O’Leary, Arabia before Muhammed, Kegan Pauk, Lonon, 1927.

Posted in அப்ரோடைட், அரேபியா, அல்-அரப்-அல்-அரிபா, அல்-அரப்-அல்-பைதா, அல்-அரப்அல்-மூதா‘அர்ரிபா, ஆதிநாத, ஆத்மா, ஆனந்தம், ஆன்மா, ஆயுர்வேதம், ஆயுள், ஆயுள்வேதம், ஆரியன், ஆரியம், உஸ்பெகிஸ்தான், எபிகுயூரியன், ஓடந்தபூர், ஓலை, கத்தி, கம்பளி, காபாலிக, காபாலிகம், கிர்கிஸ்தான், சடங்குகள், சிகிச்சை, சிதர், சிதார், சித், சித்தகுரு, சித்தஜலம், சித்தஞானம், சித்தபுரி, சித்தம், சித்தயோகம், சித்தர், சித்தார்த், சித்து, சிந்து, சிந்து சமவெளி நாகரிகம், சீனா, சூபி, தஜிகிஸ்தான், தத்துவஞானிகள், தந்திரம், திகம்பர, திகம்பரம், திகம்பரர், திபெத், துர்க்மேனிஸ்தான், துறவி, நிர்வாணம், பாதரசம், பிண்டம், பித், யோகா | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

பௌத்த-திபெத்திய சித்தர் பட்டியலிலிருந்து திராவிட சித்தர்களின் பட்டியல் பெறப்பட்டதா?

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 15, 2012

பௌத்த-திபெத்திய சித்தர் பட்டியலிலிருந்து திராவிட சித்தர்களின் பட்டியல் பெறப்பட்டதா?

பௌத்த பல்கலைக்கழகங்கள் தாக்கப்பட்டதால் பௌத்த சித்தர்கள் மற்ற நாடுகளுக்குச் சென்றது: பௌத்தமத்தத்தில் வஜ்ரயான தந்த்ர போதனைகளைப் பரப்புவதில் தீவிரமாக இருந்தவர்கள் சித்தர்கள் என்றழைக்கப்பட்டனர். இந்தியாவில் அவர்கள் ஏழாவது நூற்றாண்டிலிருந்து 11ம் நூற்றாண்டு வரை சிறந்திருந்தனர்[1].  முகமதியப் படையெடுப்புகளினால் தக்ஷசிலா (Dhakshasila), நாலாந்தா (Nalanda), விக்ரமசிலா (Vikramasila), ஓடந்தபூர் (Odantapur) போன்ற மிக்கப்பெரிய பல்கலைக்கழகங்கள் / மஹாவிஸ்வவித்யாலயங்கள் முதலியவை தாக்கி அழிக்கப்பட்டதால், பேராசிசியர்கள், மாணவர்கள், மருத்துவர்கள், ஞானிகள் முதலியோர் தப்பியோட வேண்டியதாயிற்று. அவர்கள் நாலாப்பக்கங்களிலும் சிதறியோடினர். இதனால் தந்தரமுறைகள் அந்தந்த நாடுகளில் பரவியது[2]. வைரோச்சன என்பவர் பௌத்த தந்திரிகமுறையைத் தோற்றுவித்தவர். குலாச்சார, வாமாசார, சஹஜயான, வஜ்ரயானப் பிரிவுகள் அந்நாடுகளில் பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டன. ஒவ்வொரு ஆண்தேவதைக்கும், ராகினி, லாகினி, சாகினி, ஹாகினி, குபுஜீகா போன்ற பெண்தேவதையும் சேர்க்கப்பட்டது[3].

நாடுகளில் பரவியது

வைரோச்சனின் பெயர் / மாற்றம்

விளக்கம்

மஹாயான பௌத்தம் தியானி புத்தா சிவன் புத்தனைப்போல சித்தரித்துள்ளார்கள். அதனால், ஒரு புத்தருக்குப் பதிலாக ஐந்து புத்தர்கள், ஐந்துதிசைகளில் (சிவனின் ஐந்து முகங்கள் போல) உள்ளனர். பிறகு சக்தியையும் சேர்த்துள்ளனர். ஒன்று மூன்றாகி, ஐந்தாகி, எழாகி, ஒன்பதாகி விட்டன. எட்டு, 84 என்றாகியதைப் போல சித்திகள் சக்திகளுடன் இணைத்து, முறைகளும் புகுத்தப்பட்டன.
நேபாளம் ஆதிபுத்தா
சீனா வஜ்ரசத்வா,நாகார்ஜுனா, வஜ்ரபோதி, அமோகவவஜ்ர
ஜப்பான் வஜ்ரசத்வா, நாகார்ஜுனா, வஜ்ரபோதி, அமோகவவஜ்ர
ஜாவா முதலிய தென்கிழக்காசிய நாடுகள்

எண்பத்து நான்கு பௌத்த சித்தர்கள்: 84 சித்தர்கள் இருந்தார்கள் என்று 1506 ஆண்டு தேதியிட்ட மைதிலி மொழியில் எழுதப்பட்டுள்ள ஒரு ஆவணம் – “வர்ணரத்னாகர” என்ற நூல் – பட்டியலிட்டுக் காட்டுகிறது. ஆனால் 76 பெயர்கள் மட்டும்தான் காணப்படுகிறது[4].

  1. மீனநாத
  2. கோரக்கநாத
  3. சௌரங்கிநாத
  4. சாமரிநாத
  5. தந்திபா
  6. ஹாலிபா
  7. கேதாரிபா
  8. தோங்கபா
  9. தாரிபா
  10. விருபா
  11. கபாலி
  12. கமாரி
  13. காண்ஹ
  14. கனஹல
  15. மேகல
  16. உன்மன
  17. காந்தலி
  18. தோவி
  19. ஜாலந்தரா
  1.   தோங்கி
  2. மவஹா
  3. நாகார்ஜுனா
  4. தௌளி
  5. பிஷாலா
  6. அசிதி
  7. சம்பக
  8. தேந்தச
  9. பூம்பாரி
  10. பாகலி
  11. துஜி
  12. சர்பதி
  13. பாடே
  14. சாந்தனா
  15. காமரி
  16. கரவத்
  17. தர்மபாபதங்க
  18. பத்ரா
  19. பாதலிபத்
  1. பலிஹிஹ
  2. பானு
  3. மீன
  4. நிர்தய
  5. சவர
  6. சாந்தி
  7. பாரதிஹரி
  8. பிஷண
  9. படி
  10. கங்கப
  11. கமார
  12. மேனுரா
  13. குமார
  14. ஜீவன
  15. அகோசாதவ
  16. கிரிவர
  17. சியாரி
  18. நாகவலி
  19. பிபவத்
  1.  சாரங்க
  2. விவிகதஜா
  3. மகரதஜ
  4. அசித
  5. பிசித
  6. நேசக
  7. சாதல
  8. நாசன
  9. பிலோ
  10. பாஹல
  11. பாசல
  12. கமலகங்காரி
  13. சிபில
  14. கோவிந்த
  15. பீம
  16. பைரவ
  17. பத்ர
  18. பமரி
  19. புருக

திபெத்திய பாரம்பரியப்படி எண்பத்து நான்கு பௌத்த சித்தர்கள்: திபெத்திய பாரம்பரியத்தில் 84-சித்தர்களின் பெயர்கள் (சதுரசிதிஸ்சித்தர்), “சதுரசிதி-சித்த-பிரவுருத்தி” என்ற நூலில் காணப்படுகிறது, விளக்கம் இவ்வாறுள்ளன. அபயதத்தர் (சுமார். 1100 CE) என்பவர் இந்த விவரங்களைக் கொடுத்துள்ளார்[5]. இந்த ஓலைசுவடிப் புத்தகத்தில் அழகான சித்தர்களின் வண்ணப்படங்களும் உள்ளன[6]. இங்கு “ப” என்பதனை “பாத” என்று வாசிக்க வேண்டும். அஜிந்தபாதன், அஜோகிபாதன், சம்பகபாதன், சௌரங்கிபாதன் என்று பெயர்கள் வரும், அவற்றிலிருந்து அப்பெயர்களின் பொருளை அறிந்து கொள்ளலாம்.

எண் பெயர் பொருள் விளக்கம்
1 அசிந்த / அசிந்தப பேராசைக் கொண்ட துறவி விறகுவெட்டி, விறகு வியாபாரம்
2 அஜோகி /அயோஜிப ஒதுக்கப்பட்ட பிரயோகமில்லாதவன் பிணமாக நடித்தவன்
3 அனங்கப/அனங்க/அனங்கவஜ்ர அழகான முட்டாள் சுந்தரானந்தர் / குதம்பைச் சித்தர்?
4 ஆர்யதேவ/ஒருகண்ணையுடைவர் நாகார்ஜுனரின் சீடர் மஹாசித்தர்களில் ஒருவர்
5 பபஹ சுற்றித் திரியும் காதலன்
6 பத்ரப ஜம்பப் பேர்வழி தனியான பிராமணன்
7 பண்டேப பொறாமைப்படும் கடவுள்
8 பிக்ஷனப இரண்டு பற்கள் கொண்ட சித்தன்
9 புஸுகு/புஸுகுபாத சோம்பேரி சந்நியாசி ஜடம்-ஒருவேலையும் செய்யாதவன்
10 சமரிப தெய்வீக சக்கிலியன்
11 சம்பக/சம்பகபாத மலர்களுக்கு அரசன்
12 சர்பரிப/சர்பதி மக்களைக் கல்லாக்கியவன் கல்லாக்குபவன்; கல்லுளி சித்தர்?
13 சத்ரப ராசியுள்ள பிச்சைக்காரன் அதிருஷ்டம் உள்ளவன்
14 சௌரங்கிப அங்கஹீனன் கை-கால்கள் இல்லாதவன்
15 சேலுகப மறுபடியும் வீர்யம் பெற்றக் கொக்கு கொங்கணவன்
16 தரிகப கோவில் விபச்சாரியின் அடிமை அரசன்
17 தேன்கிப பிராமண அடிமை
18 தௌலிப முற்கள் கொண்ட கயிறு திரிப்பவன்
19 தர்மப என்றைக்கும் மாணவன்
20 திலீப சந்தோஷமான வியாபாரி சுகவான்; தேரையர்?
21 தோபின அறிவுள்ள வண்ணான்
22 தோகரிப பாத்திரங்களை சுமப்பவன்
23 தோம்பி ஹெருக புலி சவாரி செய்பவன் புலிப்பாணி?
24 துக்காண்டி பெருக்குபவன், சுத்தம் செய்பவன்
25 கண்டப பிரமச்சரியத்தைக் கடைபிடிக்கும் துறவி மணியடிக்கும் துறவி
26 கர்பரி/கர்பரிப துக்கமளிக்கும் பண்டிதன்
27 கோதுரிப/கோரூர பறவைப் பிடிப்பவன்
28 கோரக்ஷ / கோரக்கநாத நிரந்தரமாக மாடு மேய்ப்பவன் பசுக்களைக் காப்பவன் – இவர் கோரக்கரக்கவும் அல்லது திருமூலராகவும் கொள்ளலாம்.
29 இந்திரபூதி திலோபனின் குரு எந்திரியங்களை வென்றவன்
30 ஜலதார தகிணி என்பவரின் சேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவன் நீரைப்போன்று வேகமாமக செல்லக்கூடியவன்/ ஓடுபவன்
31 ஜெயந்தர காக்கையின் ஆசிரியர் காகபுசசுண்டர்?
32 ஜோகிப சித்தப் பிரயாணி அலைந்து-திரிந்து கொண்டிருப்பவன்
33 கலப அழகான பைத்தியம் சுந்தரானந்தர்?/ குதம்பைச் சித்தர்?
34 கம்பரிப கொல்லன் இரும்பு முதலிய உலோகவேலை செய்பவன்
35 கம்பள கருப்புக் கம்பள யோகி கருப்புக் கம்பளம் போர்த்தியவன்; சட்டைமுனி?
36 கணக்கல முண்டமாமன இரு சகோதரிகளின் இளைய சகோதரன் ஏழுதலையுள்ள சகோதரிகளின் இளைய சகோதரன்
37 கண்ஹ / கணப கருப்புத் தோலன் கருப்பு சித்தர்
38 கங்கண சித்தராஜ சித்தர்களுக்கு அரசன்
39 கங்கரிப காதல் பித்தம் கொண்ட விதவை
40 கந்தாலிப குப்பைப் பொறுக்குபவன் கந்தை தையல்காரன்
41 கபலப கபாலம் கொண்டவன் காபாலிகன்
42 கட்கப திருட்டுராஜா பயமில்லாதத்ன் திருடன்
43 கிலகிலப தள்ளிவைக்கப்பட்ட லொடலொட வாயன் வீண்பேச்சாளிடமரானந்தர் / பிண்ணாகீசர்?
44 கிரபலப வென்று துக்கப்படுபவன்
45 கோகிலப நிம்மதியான ஓவியன் கலைஞானி
46 கோடலிப விவசாயியான குரு  
47 குசிப கழுத்துவீங்கிய யோகி  
48 குக்கிரிப நாய் விரும்பி தத்தாரேயர்?
49 கும்பாரிப பானையன் / பானை செய்வோன் அகத்தியர்?
50 லக்ஷ்மீன்கர பைத்தியமான இளவரசன்
51 லிலப ராஜீய சுகவாசி என்றும் இன்பம் துய்ப்பவன்
52 லுசிகப தப்பித்துக் கொள்பவன் பொறுப்பற்றவன்
53 லுயிப மீன்-குப்பையைத் தின்பவன் மச்சேந்திரர் / மச்சமுனி?
54 மஜிப மிகப்பெரியவன்
55 மணிபத்ர மாதிரி மனைவி இவள்தான் மனைவி என்று போற்றப்படுபவள்
56 மெதினி களைத்த விவசாயி
57 மேகல முண்டமான இரு சகோதரிகளில் மூத்தவள் ஏழு சகோதரிகளில் மூத்தவள்
58 மெகோப முழிக்கும் குரு கண்ணிமைக்காத சித்தன்
59 மீனப மீன் பிடிப்பவன் மச்சேந்திரர் / மச்சமுனி?
60 நாகபோதி சிவப்புக் கொம்புத் திருடன் ஆரியதேவ /  ஒற்றைக்கொம்பன்
61 நாகார்ஜுன யோகி
62 கலினப சுதந்திர இளவரசன் யார் மீதும் ஆதாரமாக இல்லாதவன்
63 நரோப
64 நிர்குணப அறிவான முட்டாள்
65 பச்சரிப மாமிசம் சமைப்பவன் புலத்தியர்?
66 பங்கஜப தாமரையில் பிறந்த பிராமணன் பிரம்மா, கமலமுனி?
67 புதலிப மருந்து பாத்திரம் சுமப்பவன் தன்வந்திரி?
68 ராஹுல இளமைப் பெற்ற பழைய முட்டாள்
69 சரஹ அம்பு செய்பவன்
70 சகர கடலில் செல்பவன்? டமரானந்தர்?
71 சமுதர முத்தெடுப்பவன்
72 சாந்திப மிக்கப்படித்தவன்/அறிவுஜீவி அமைதியான பிரச்சாரி
73 சர்வபக்ஷ வெற்று வயிரன் நன்றாக சாப்பிடுபவன்
74 சவரிப வேட்டைக்காரன்
75 சாலிப நரி யோகி
76 தந்தேப சூதாடி
77 தந்திப முதுமைப் பெற்ற நெசவாளி
78 தகநப தேர்ந்தெடுத்தப் பொய்யன்
79 திலோப
80 உடிலிப பறக்கும் சித்தர் பறவை-மனிதன்டமரானந்தர்?
81 உபான செருப்புத் தைப்பவன்
82 வினப சங்கீதம் விரும்பி பாட்டுப்பாடுபவன்
83 விருப
84 வியலப அரசாங்க ரசவாதி யூகிமுனி?

இந்த பௌத்த சித்தர்களின் கதைகளைப் படித்தால், அவை அப்படியே நமது சித்தர்களின் கதைகளைப் போலவே இருக்கின்றன. நிச்சயமாக இக்கதைகளைப் படித்தறிந்தவர்கள், அவற்றை தமிழகத்திற்கு ஏற்றவாறு, சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து அதற்கேற்றாவாறு மாற்றியிருக்கிறார்கள். பௌத்த-திபெத்திய பாரம்பரியங்களில் 16ம் நூற்றாண்டு ஆவணத்தில் அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பௌத்த மஹாசித்தர்கள்: ஹடயோகப்ரதீபிகா[7] என்ற 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த நூல் 32 மஹாசித்தர்களின் பெயர்களைக் கொடுக்கிறது[8].

  1. ஆதிநாத
  2. மச்சேந்திர
  3. சாவர
  4. ஆனந்தபைரவ
  5. சௌரங்கி
  6. மீனநாத
  7. கோரக்கநாத
  8. விருபாக்ஷ
  1. பிலேசயா
  2. மந்தான
  3. பைரவ
  4. சித்திபுத்த
  5. கந்தடி
  6. கோராம்தக
  7. சுரானந்த
  8. சித்தபாத
  1. சர்பதி
  2. கானேரி
  3. பூஜ்யபாத
  4. நித்யானந்த
  5. நிரஞ்சன
  6. கபாலி
  7. பிந்துநாத
  8. காகசண்டீஸ்வர
  1. அல்லாம
  2. பிரபுதேவ
  3. கோட
  4. சோலி
  5. திமிந்தி
  6. பானுகி
  7. நாரதேவ
  8. கண்டகாபாலிக

அதாவது 84 சித்தர்களில் இந்த 32 சித்தர்கள் அவ்வாறு “மஹா சித்தர்க்ள்” என்று தேர்ந்தெடுத்துள்ளனர். ஒருவேளை நம்மாட்கள் இதனைப் பார்க்கவில்லையோ என்னமோ? ஒருவேளை, 14 பேர்களை விடுத்து, 18 பேர்களைத் தேர்ந்தெடுத்தனரோ என்னமோ? இல்லை ஜைனர்கள் எப்படி “மஹாசித்தர்கள்” என்று தீர்த்தர்ங்களையும் குறைத்துக் கொண்டார்களோ அவ்வாறிருக்கலாம். பௌத்தம் பொருத்த வரையில், தாந்திரீகத்தை பின்பற்றி சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள். பௌத்த சித்தர்கள் அனைவரும் தாந்தீர்கர்களே.

பௌத்த நூல்களைப் பின்பற்றி “திராவிட சித்தர்கள்” கதைகள் உருவானது: பொதுவாக ஜைன-பௌத்த நூல்கள் எல்லாமே சமஸ்கிருத நூல்களினின்று பெற்றப்பட்டவைதாம். ஜைனம் மற்றும் பௌத்தம் வேதங்களின் நிலைநிறுத்தப்பட்ட விஷயங்களை ஏற்றுக் கொண்டு, பெருமான்மையான மக்களின் நம்பிக்கைகளையும் தகவமைத்துக் கொண்டு உருவாக்கப்பட்ட மதங்கள் தாம்[9]. பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு, கர்மா, பாவம், புண்ணியம், ஆன்மா / ஆத்மா முதலி எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டன[10]. எப்படி வேதங்களப் படித்து, அதற்கு எதிராக சில தர்க்கநூல்களை உருவாக்கினார்களோ, அதேபோல இதிகாச-புராணங்களுக்கு மாறாகவும் தயாரித்தார்கள் என்று முன்னமே எடுத்துக் காட்டப்பட்டது. “கதா சரித் சாகர” போன்ற கதைகளில் சித்தர்கள் ஏதோ மந்திர-தந்திரங்களில் வல்லவர்கள் போன்று சித்தரிக்கப் பட்டனர். அதேபோல ஆரியர்களை உருவாக்கி, அவர்களுக்கு எதிராக திராவிடர்களை தயாரித்தவர்களே, ஜைன-சித்தர்கள், பௌத்த-சித்தர்கள் போல, திராவிட-சித்தர்களை உருவாக்கியிருக்கின்றனர். கொடுத்துள்ள பெயர்கள், விளக்கம் முதலியவற்றைப் படிக்கும்போதே, தெரிவது என்னவென்றால், நிச்சயமாக இதைப்படித்து, 19-20ம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் புதியதான “திராவிட சித்தர்களை” உருவாக்கியிருக்கிறார்கள் என்பதுதான். மேலும் யாரை சேர்ப்பது-விடுப்பது என்று குழம்பி, பட்டியலை உருவாக்கினதால், “பதினெண் சித்தர்” பட்டியலும் குழம்பிவிட்டது. அகத்தியர் பெயரில் உள்ள நூல்களைப் படித்து, இவற்றையும் படித்தால், எப்படி இக்கதைகளைக் காப்பியடித்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

ஆங்கிலேயர் ஆதரவுடன் அல்லது உத்தரவுடன் தமிழ் பண்டிதர்கள் உருவாக்கியுள்ளனர்: ஆங்கிலேயர் மற்றும் ஐரோப்பிய மிஷனரிகள் சேர்ந்து வேலை செய்து வந்துள்ளதால், ராபர்டோ டி நொபிலி, சீசன்பால்கு, பெஸ்கி போன்றவர்கள், தமிழ் பண்டிதர்களின் உதவியுடன், அத்தகைய சித்தர் பாடல்களை உருவாக்கியிருக்கலாம். சீசன்பால்கு கணபதி உபாத்யாயாவை மிரட்டி தமிழ் கற்றுக் கொண்டான், நூல்களையும் எழுதவைத்தான் மற்றும் அவரது சாவதற்கும் காரணமாக இருந்தான். ராபர்டோ டி நொபிலி “ஆத்தும நிர்ணயம்”, “புனர் ஜென்ம ஆக்ஷேபம்”, “அக்கியாண நிவாரணம்”, திவ்விய மாதிரிகை, ஞான சஞ்சீவி, அண்ட பிண்ட வியாக்கியானம், உலக பிராமண சாஸ்திரம், பரமசுமாக்ஷபிபிராயம் போன்ற நூல்களை எப்படி தமிழ் பண்டிதர்களை விலைக்கு வாங்கி எழுத வைத்தார்களோ அதேபோலத்தான் எழுதப்பட்டன[11]. ஐரோப்பியர்கள் ஓலைச்சுவடி புத்தகங்கள் எல்லாவற்றையும் சேகரித்து எடுத்துச் சென்றிருப்பதால், மேலும் பலவற்றிற்கு மூலப்பிரதிகளை எடுத்து, காகித நகல்களை வைத்துச் சென்றுள்ளதால், நிச்சயமாக அவர்கள் இந்த வேலையை செய்திருக்க வேண்டும்.  உலக மகாயுத்தங்களுக்குப் பிறகு, ஐரோப்பிய ஆட்சியாளர்கள் தத்தமது காலனிய நாடுகளினின்று வெளியேற வேண்டும் என்று தெரிந்தபோது, அங்கங்கு இத்தகைய போலி ஆவணங்களை, கட்டுக்கதைகளை, புரட்டு சரித்திரங்களை உற்பத்தி செய்து வைத்துவிட்டனர். மேலும் 19ம் நூற்றாண்டில் இந்திய மருத்துவமுறைகளுக்கு எதிராக ஆங்கிலேயர் அதிக அளவில் அடக்குமுறைகளைமேற்கொண்டு வந்தனர். உள்ள மருத்துவமுறைகளை “நாட்டு மருந்துவம்” (Native medicine), “காட்டு மருந்துவம்” (Tribal medicine), “கிராம மருந்துவம்” (village / folk medicine), “அநாகரிக மருத்துவம்” (Uncivilized / crude medicinal practices), “பில்லி-சூன்ய மருத்துவம்” (Shamanism / Witchcraft), “போலி மருத்துவம்” (Pseudo-medicine), “பேய்-பிசாசுகளை ஓட்டும் முறை” (Exorcism) என்றெல்லாம், பழித்துப்பேசி, இகழ்வாக எழுதி, எதிர்த்துச் சட்டங்களை இயற்றித் தடையும் செய்தனர்.

© வேதபிரகாஷ்

15-09-2012


[1] Anagarika Govinda, Tantric Buddhism, in P. V. Bapat (Gen.editor), 2500 Years of Buddhism, Publication Division, Government of India, New Delhi, 1997, p.315.

[2] Radhakamal Mukerjee, The March of Tantrika art over the Pacific, in Studies in Asian History, pp.289-296.

[3] Probodh Chandra Bagchi, Studies in the Tantras, Part-I, University of Calcutta, 1975, see under the chapter “On Foreign element in the Tantra”, pp.45-55.

[4] A list of eighty-four Siddhas (though, actually only 76 names are mentioned) is found in a manuscript (manuscript no 48/34 of the Asiatic Society of Bengal) dated Lakshmana Samvat 388 (1506) of a medieval Maithili work, theVarna(na)ratnākara written by Kaviśekharācārya Jyotirīśvara Ṭhākura, the court poet of King Harisimhadeva of Mithila (reigned 1300–1321). An interesting feature of this list is that the names of the most revered Nathas are incorporated in this list along with the Buddhist Siddhacharyas.

[6] Scott Hajicek-Dobberstein, Soma Siddhas and alchemical enlightenment: pasychedelic mushrooms in Buddhist tradition, Journal of Ethnopharmacology, 1995, vol.48, pp.99-118.

[7] Dasgupta, Sashibhusan (1995). Obscure Religious Cults, Firma K.L.M., Calcutta, ISBN 81-7102-020-8, pp.203ff, 204.

[8] Shastri Haraprasad (ed.) (Hajar Bacharer Purano Bangala Bhasay Bauddhagan O Doha (in Bengali), 1916, 3rd edition 2006). Kolkata: Vangiya Sahitya Parishad, pp.xxxv-vi.

[9] J. G. Jennings, The Vedantic Buddhism of the Buddha, Geoferry Cumerlege, Oxford University Press, London, 1947.

[10] Ananda K. Coomaraswamy, Hinduism and Buddhism, The Wisdom Library, New York.

[11] எஸ். ராஜமாணிக்கம் (பதிப்.), ஆத்தும நிர்ணயம், பாளையங்கோட்டை, 1967.

பதிப்பாசிரியரே ராபர்டோ டி நொபிலி பெயரில் உலாவரும் நூற்களில் பெரும்பாலும் அவரால் எழுதப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார் பக்கங்கள்.xxii-xxiv. அவற்றில் உபயோகப்படுத்தப்பட்டுள்ள சொற்கள் – சுவர்க்கம், நரகம், வைகுந்தம், கைலயம்…….பாவம், புண்ணியம்…..போன்ற விஷயங்கள் கிருத்துவத்திற்கு கிஞ்சித்தேனும் சம்பந்தம் இல்லை. ஏதோ ஒரு தமிழ்நூலை, கிருத்துவநூல் என்று சொல்லிக்கொள்வது நன்றாகவே தெரிகிறது.

Posted in அகத்திய, அகத்தியர், அகஸ்தியர், அரேபியா, அறிவு ஜீவி, ஆதிநாத, ஆயுர்வேதம், ஆயுள், ஆயுள்வேதம், ஆரியன், இந்தியவிரோதிகள், ஓடந்தபூர், ஓலை, ஓலைச்சுவடி, கபாலி, கம்பளி, கலாச்சாரம், காபாலிக, குலாச்சார, கௌதம, க்ஷத்திரியர், சட்டைமுனி, சரகர், சல்ய, சல்லிய, சஹஜயான, சாரணர், சிகிச்சை, சிதம்பரம், சிதர், சித்தஞானம், சித்தபாத, சித்தபிரமை, சித்தபுரம், சித்தபுருஷன், சித்தப்பிரமை, சித்தம், சித்தர் பாடல்கள், சித்தாந்திகள், சுவடி, டமரானந்தர், தக்ஷசிலா, தந்திரம், தமிழகம், தமிழ், தமிழ்நாடு, திரவிடம், திராவிடன், துறவி, தேரையர், நரதேவ, நாரதேவ, நாலாந்தா, பகுத்தறிவு, பஞ்சபூதங்கள், பதஞ்சலி, பதினென் சித்தர்கள், பரம்பரை, பரம்பரை வைத்தியர், பராசர, பல்தேயமொழியோர், பல்மொழிதெயத்தோர், பாலியல், புத்தகம், புனிதம், புலஸ்தியர், பூதங்கள், பூர்ணலிங்கம் பிள்ளை, பெரிய ஞானக் கோவை, பௌத்தம், மச்சேந்திர, மந்திரம், மயக்கம், மருந்து, யந்திரம், வஜ்ரயான, வாமாசார, விக்ரமசிலா, வீரசைவம், வேதம், வேதாங்கம், வேதாந்தம், வைத்தியர், ஹடயோகப்ரதீபிகா | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

சிரவணர்களும்-பிராமணர்களும், ஜைனர்களும்-பௌத்தர்களும், இந்தியர்களும்-கிரேக்கர்களும்

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 15, 2012

சிரவணர்களும்-பிராமணர்களும், ஜைனர்களும்-பௌத்தர்களும், இந்தியர்களும்-கிரேக்கர்களும்

வேதகாலத்தில் அல்லது வேதங்கள் படிப்புமுறையாக இருந்த காலத்தில் மஹாவீரர்-புத்தர் தோன்றியது: மஹாவீரரும், புத்தரும் திடீரென்று அறிவாளிகளாக, ஞானிகளாக, தீர்த்தங்கராக அல்லது புத்தராகிவிடவில்லை. பாரதத்தில் பிறந்ததால் வேதங்கள், வேதாங்கங்கள் மற்றும் இதர புத்தகங்களைப் படித்துதான் அந்நிலையை அடைந்திருந்தார்கள். குருகுலத்தில் பிராமணர்களிடம்தாம் அவர்கள் பயின்றார்கள். க்ஷத்தியர்களாக இருந்தும் அந்நிலையை அடைந்தார்கள் எனும்போது, அக்காலத்தில் எந்தவித வேறுபாடும் இல்லையென்றாகிறது. அதாவது, வேதங்களை யார் வேண்டுமானாலும் படிக்கலாம் கற்கலாம் என்றிருந்தது. இருந்த பிராமணர்களுடன் வாதிட்டு, தத்தமது புதிய கருத்துகளை மக்களிடம் பரப்பி அவர்கள் தங்களது சீடர்களை, நம்பிக்கையாளர்களை, அபிமானிகளை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். இவற்றை அந்தந்த ஜைன-பௌத்த நூல்களே எடுத்துக் காட்டுகின்றன. ஆனால், பாரதத்தின் வடமேற்கு பகுதிகள் வழியாக ஜைனர்களின் வெளியேற்றம், கிரேக்கர்களின் நுழைவுகள் சில மாற்றங்களை ஏற்படுத்தின.

ஜைன-பௌத்த மதங்களில் இருந்தது சில வித்தியாசங்களே: மஹாவீரர். (c.599-527 BCE) மற்றும் புத்தர் (c.567-487 BCE) சமகாலத்தவர்கள் தாம். இருவர்களின் போதனைகளும் ஒரேமாதிரியாகத்தான் இருந்தன. கடவுட்கொள்கையைத் தவிர, பெரும்பாலான விஷயங்களில், வேதங்களிலிருந்து விலகவில்லை. பொதுஜனங்களுக்கேற்ற வரையில், ஜைன-பௌத்தர்கள் வேதமத நம்பிக்கையாளர்களைப் போலவே இருந்தார்கள் என்று தெரிகிறது. அவர்களது தலைவர்களும் பிராமணர்கள் போன்றே இருந்தனர் என்று தெரிகிறது. இதனால் தான், சமகால கிரேக்கர்களும் அடையாளம் காணாமல் குழம்பிபோய் இருந்தனர். ஜைன-பௌத்தர்கள் பாரத சமூகத்தில் அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் என்று அத்தகைய வெளித்தோற்றத்தைக் கொண்டிருந்தார்கள் என்றும் தெரிகிறது[1].

கிரேக்கர்கள் இந்தியாவிற்கு வந்து படித்துச் சென்றது: இந்தியா அக்காலத்தில் விஞ்ஞானம், மருத்துவம், முதலிய துறைகளில் சிறந்து விளங்கியதாலும், அதற்கான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் (ஆசிரமங்கள்) இருந்ததினாலும், பல பாரதத்திற்கு கற்க வந்தனர். சுமார் 300 BCE க்தேசியாஸ் (Keasiast) மற்றும் மெகஸ்தனிஸ் (Megasthanese) என்ற இரு கிரேக்க மருத்துவர்கள் இந்தியாவிற்கு வந்து வடவிந்தியாவில் தங்கியதாக மேனாட்டு சரித்திராசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். அவர்கள் ஒன்றும் அப்படியொன்றும் வெறுமனே தங்கியிருக்க வரவில்லை. முன்னர் கிரேக்க தத்துவஞானிகள், அறிஞர்கள் – பிதாகோரஸ்[2] (Pythagorus c.560-480 BCE), பிளாட்டோ[3] (Plato – 427-347 BCE) முதலியோரும் வந்துள்ளதாக அவர்களேக் குறிப்பிட்டுள்ளனர்[4]. இதனால்தான் கிரேக்கத் தத்துவங்களில் இந்தியத்தாக்கம் வெளியாகிறது[5]. ஆன்மா, ஆன்மா பலவுடல்களைப் பெறுவது, மறுஜென்மம், பாவம்-புண்ணியம், கர்மா போன்ற கருத்துகள் காணப்படுகின்றன. பொதுவாக கிரேக்க நுழைவுகளினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, ஏனெனில் அவர்கள் க்ஷத்தியர்களில் தாழ்ந்தவர்களாக (degraded), விலக்கி வைக்கப்பட்டவர்களாக (excommunicated) பிரிந்து போனவர்களாக, இந்தியமுறைகளினின்று மாறுபட்டவர்களாகக் கருதப்பட்டனர்[6].  புராணங்கள் இவ்விவரங்களை அதிகமாகவே தருகின்றன. எட்வர்ட் போக்காக் (Edward Pococke), காலனில் டோட் (Col. Tod), வில்லியம் ஜோன்ஸ் (William Jones) போன்றவர்களும் இதனை எடுத்துக் காட்டியுள்ளனர்.

ஜைனர்கள்-பௌத்தர்கள்-பிராமணர்கள் பற்றிய கிரேக்கர்களின் குழப்பம்: கிரேக்கர்கள், பிராமணர்களை அறிந்திருந்தனர், ஆனால், மேற்சொல்லப்பட்டக் காரணங்களால், கிரேக்கர்களை பிராமணர்கள் ஜம்புத்வீபத்தில் இருப்பவர்களாகக் கருதவில்லை[7]. மெகஸ்தனிஸ் போன்றவர்கள் பிராமணர்களை “தத்துவஞானிகள்” என்று குறிபிட்டிருக்கிறார்கள்[8]. இன்னொரு கிரேக்க ஆவணமோ அந்த தத்துவஞானிகளில் இரு பிரிவினர் சர்மேன்ஸ் (Sarmanes) மற்றும் பிராக்மேன்ஸ் (Brachmanes) என்றிருந்ததாகக் குறிப்பிட்டுகிறது. இருப்பினும் சிரவணர்கள் மற்றும் பிராமணர்கள் இடையில் கிரேக்கர்களுக்குக் குழப்பம் இருந்தது. மெகஸ்தனிஸ் இந்திய முனிவர்களை “ஹைலோபியோய்” (hylobioi) என்று குறிப்பிட்டு மற்றவரை “பௌத்த”வின் சீடர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் “ஹைலோபியோய்” என்பவர்கள் பிராமணர்கள் என்றும், “பௌத்த”வின் சீடர்கள் சிரவணர்கள் என்றும் கொள்ளலாம்.  உண்மையில் மெகஸ்தனிஸ் எழுதியதாக சொல்லப்படும் “இண்டிகா” என்ற நூலேயில்லை. பிற்காலத்தில் மெகஸ்தனிஸ் சொன்னது என்று பல கிரேக்க நூல்களில் உள்ளவற்றைத் தொகுத்து வெளியிட்டதுதான் அந்த “இண்டிகா” என்பது.

முதல் நூற்றாண்டுகளிலும் தொடர்ந்த குழப்பம்: இன்னொரு மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டு கிரேக்க ஆவணத்தை வைத்துக் கொண்டு, இந்த பிராச்மேன்கள் / பிராக்மேன்கள் / பிராமணர்கள் (Brachmanes) துங்கபத்திரை ஆற்றங்கரையில் நிர்வாணமாகச் சுற்றிக் கொண்டிருந்தார்கள் என்று விளக்கம் கொடுக்கிறார்கள்[9]. ஆனால் அப்படி நிர்வாணமாக சுற்றும் சாமியார்கள், திகம்பர ஜைன சாமியார்கள்தாம். ஆகவே கிரேக்கர்களுக்கு பௌத்த-ஜைன துறவிகளிடையே கூட வித்தியாசம் தெரியவில்லை என்று தெரிகிறது. இல்லை மேலே எடுத்துக் காட்டியபடி, அலெக்சாந்தர் தோற்றதை மறைக்க இப்படி குழப்பியிருக்கலாம். இல்லை சுமார் 250 BCE லிருந்து நான்காம் நூற்றாண்டு வரை ஜைன-பௌத்த-பிராமணர்களுக்கு வித்தியாசமே இல்லாமல் இருந்தது போலும். இல்லை ஜைன-பௌத்தர்கள் பிராமணர்களைப் போலவே தோற்றம் கொண்டு, வேடமிட்டு உலாவந்து கொண்டிருந்தார்கள் போலும். அதனால்தான், பிராமணர்கள் அவர்களை “பாஷாண்டிகள்” என்றழைத்தனர். அவர்களுக்கு வேதங்களைக் கற்றுக் கொடுக்க மறுத்தனர். ஏனெனில், வேதங்களைப் படித்து பிறகு வேதங்களையே குறைக்கூறுவது, தூஷிப்பது அவர்களது வேலையாக இருந்தது. மேலும், வேதங்களிலுள்ள பெரும்பாலான கருத்துகளையும், அடிப்படை உண்மைகளையும் ஏற்றுக் கொண்டு, அவ்வாறு வேதங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் அவர்களது போக்கும் போலித்தனமாகப் பட்டது.

அசோகர்காலத்தில் (c.250-200 BCE) சிரவணர்கள்பிராமணர்கள்சமமாக பாவிக்கப்பட்டார்கள்: அவர்களுக்கு அவர்கள் க்ஷத்தியர்களில் தாழ்ந்தவர்களாக (degraded), விலக்கி வைக்கப்பட்டவர்களாக (excommunicated) பிரிந்து போனவர்களாக, இந்தியமுறைகளினின்று மாறுபட்டவர்களாகக் கருதப்பட்டனர்[10].  அதனால், அசோகனுடைய கல்வெட்டுகளும் சிரவணர்கள், பிராமணர்கள் என்று குறிப்பிட்டு, கிரேக்கர்களைக் குறிப்பிடாமல் இருக்கின்றன சிரவணர்கள் மற்றும் பிராமணர்கள் இல்லாத சமூகக்குழுமங்களே/நாடுகளேயில்லை, ஆனால் கிரேக்கர்களிடம் மட்டும் அவர்கள் இல்லை[11]. அதாவது கிரேக்கர்கள் தங்களது நாட்டை அவ்வாறுக் கூறிக்கொள்ளவில்லை. இங்கு பண்டார்கர் போன்றோர் அயோனியர்கள் வேறு, கிரேக்கர்கள் வேறு என்று கூறுகின்றனர்[12]. ஆனால் மேற்பட்ட நம்பிக்கைகள் கொண்ட மதத்தைக் கொண்டிருந்தனர். எப்படியாகிலும் இருக்குழுக்களுமே சமுக்கத்தில் உயர்வாக மதிக்கப்பட்டார்கள் என்று தெரிகிறது. அசோகரைப் பொறுத்தவரைக்கும் இருவர்களுன் சமமாக பாவிக்கப்பட்டார்கள். “ப்ரமணஸ்ரவண” மறும் “ஸ்ரவணப்ரமண” என்ற சொற்றோடர் மாறிமாறி அசோகரின் கல்வெட்டுகளில் பல இடங்களில் உபயோகப்படுத்தப் பட்டுள்ளன.

ஜைன-பௌத்த காலத்தில் படிப்புமுறையில் மாற்றங்கள் ஏற்பட்டது: ஜைனர்கள்-பௌத்தர்கள் வேதநெறிகளினின்று மிகவும் விலகி மந்திர-தந்திர-யந்திரமுறைகளில் ஈடுபட்டபோது, சமூகத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. பெண்கள் ஒருபக்கத்தில் உரிமைகள் கொடுக்கப்பட்டாலும், மந்திர-தந்திர-யந்திரமுறைகளில் பாலியல் ரீதியில் மிகவும் சதாய்க்கப்பட்டார்கள் (Sexually exploited) என்று தெரிகிறது. மேலும் அஹிம்சையை (non-violence) போதித்துக் கொண்டு, ஹிம்சை வேலைகளில் ஈடுபட்டது, உள்ள நிலைமையை அனுசரித்து, அசோகனும் தனது கல்வெட்டில் தினமும் மூன்று மிருகங்கள் – இரண்டு மயில் மற்றும் ஒரு கருப்பு மான் – கறிக்காகக் கொல்லப்படலாம் என்று விலக்கு அளித்துள்ளார்[13]. மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். குறிப்பாக அஹிம்சை போதித்து, பௌத்தர்கள் மாமிச உணவை உட்கொண்டது பெரிய முரண்பாடே. அதேபோல, அஹிம்சை கடைபிடிக்கும் ஜைனர்கள் போர்களில் ஈடுபாட்டு, நாடுகளை தங்களது ஆதிக்கத்தில் கொண்டு வந்தது. அதில் அசோகன் மட்டும் விதிவிலக்காக இருந்தான். அவரும் கலிங்கப் போருக்குப் பிறகுதான் மாறினான். இதனால், இவர்கள் காலத்தில் பொதுப்படையாக, வெளிப்படையாக இருந்த ஆசிரமமுறை பள்ளிக்கூடங்கள் மாறி, விகாரங்கள்-மடாலயங்கள் முறை படிப்புமுறை தோன்றியது. ஆனால், ஜைன-பௌத்த விகாரங்கள்-மடாலயங்கள் ஊர்களுக்கு-நகரங்களில் வெளியில், ஒதுக்குப்புறத்தில், தூரத்தில் இருந்தன. அங்கு யார் வேண்டுமானாலும் சென்றுவிடமுடியாது, சேர்ந்து படிக்க முடியாது. அதாவது ஜைன-பௌத்தர்களுக்குத்தான் முதலிடம் என்பது தெரிந்த விஷயமே.

மடாலய-குருக்குல வேறுபாடுகள் பல்கலைக்கழகப் படிப்புகளில் சண்டை-சச்சரவானது: ஒதுக்குப்புறமாக விகாரங்களில் நடக்கும் விஷயங்கள் பொது மக்களுக்குத் தெரியாமல் இருந்தாலும், விளைவுகள் தெரியவரத்தான் செய்தன. படிப்புமுறைகளில் மட்டுமல்லாது, மருத்துவமுறைகளில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. மந்திர-தந்திர-யந்திரமுறைகள் கவனமாகக் கற்றுக் கொள்ளப்பட்டு, முறையாக, வேண்டிய காரியங்களுக்கு மட்டும் தான், உபயோகப் படுத்தப் படவேண்டும் என்றமுறை போய், யார் வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும், எப்படியும் உபயோகப் படுத்தலாம், பரிசோதிக்கலாம் என்று வந்தபோதுதான், துஷ்பிரயோகங்கள் ஆரம்பித்தன. காபாலிகர், காலபைரவர், காளாமுகர், பாசுபத, லகுலீஸ போன்றோர் தாம் பிணங்களை அறுப்பது (dissection of dead bodies – cadavre), அறுவைசிகிச்சைச் செய்வது என்றமுறை போய், மற்றவர்களும் செய்ய ஆரம்பித்தனர். கண்-பொறை நீக்கல், மண்டையோட்டு அறுவைசிகிச்சை, மற்ற ரணசிகிச்சை முதலியவை வேண்டியவர்களுக்கு ஜாக்கிரதையாக முறையாகச் செய்யப்பட்டன. புத்தரே அறுவைசிகிச்சைமூலம் பிறந்து இறந்தார், அதாவது சிஸரியன் ஆபரேஷன் மூலம் பிறந்து, தனது எண்பதாவது வயதில் பன்றி மாமிசம் உண்டபோது, உணவுக்குடலில் சிக்கிக் கொண்டு, அறுவைசிகிச்சை செய்யப்பட்டு, பலன் அளிக்காமல் இறந்தார். இதனால், அறுவைசிகிச்சைமுறை, பாரத்தில் தடை செய்யப்பட்டது. ஆனால், பாரத்ததிற்கு வெளியே தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டது[14].

பிணங்களை அறுப்பது-அறுவைசிச்சை செய்வது முதலியன: அஹிம்சை போதித்த ஜைனர்-பௌத்தர் எப்படி பிணங்களை அறுத்து மருத்துவர்கள் ஆகியிருக்க முடியும் என்று யாரும் யோசித்ததாகத் தெரியவில்லை. இதனால்தான், சரகசம்ஹிதையை சரியாகப் படிக்காதவர்கள், அறுவைசிகிச்சை பயிலும் மாணவர்களுக்கு பிணங்களுக்கு பதிலாக, காய்கறிகள் கொடுத்து, அவற்றையறுத்து பயிற்சி பெற்றனர் என்று விளக்கம் அளிக்கின்றனர். அதுமட்டுமல்லாது, இந்தியர்களுக்கு எலும்பியல் அறிவேயில்லை என்றும் முடிவுக்கு வந்து திரிபு விளக்கங்கள் கொடுக்கின்றனர். ஒரு வாதத்திற்கு எடுத்துக் கொள்வதாக இருந்தால், யாகங்கள் புரிந்த வேதகாலத்தவர்கள் ஆடு, மாடு, குதிரை போன்றவற்றைப் பலிக்கொடுத்திருந்தால், அவர்களுக்கு பிணங்களை அறுக்க ஒன்றும் தயக்கமோ, பயமோ, அறுவருப்போ இருந்திருக்காது. ஆனால், அஹிம்சை போதித்த ஜைனர்-பௌத்தர் அவ்வாறு செய்திருக்க முடியாது. ஆகவே உண்மையில் உயிர்பலி, கொலை முதலியன ஏன் தடுக்கப்பட்டது என்று ஆராயவேண்டியுள்ளது.

இன்றைக்கும் ஆயுர்வேதம்-சித்தா படிக்கும் மாணவர்கள் [B.A.M.S (Bachelor of Ayurvedic Medicine and Surgery) மற்றும் B.S.M.S (Bachelor of Siddha Medicine and Surgery)] பிணங்களை அறுத்து (dissection of dead bodies – cadavre) பயிற்சி இல்லாமல் மருத்துவர் ஆகமுடியாது. அம்மருத்துவக் கல்லூரிகளில் பிணங்கள் அழுகாமல் பாதுகாத்துவைக்க குளிர் அறை இருந்தால் தான், அப்படிப்புகளுக்கு ஒப்புதலே அளிக்கப்படுகிறது. ஆகவே, பழங்காலத்தில் ஒன்றும் தெரியாமல், கண்-பொறை நீக்கல், மண்டையோட்டு அறுவைசிகிச்சை, மற்ற ரணசிகிச்சை முதலியவற்றை செய்தனர் என்பது ஏதோ “சித்துவேலை” காட்டுவதைப் போல இருக்கும். அத்தகைய “சித்தர்கள்” அக்காலத்தில் இருந்திருக்க முடியாது. எனவே அறுவைசிகிச்சை செய்யப்பட்டதற்கு அகழ்வாய்வு ஆதாரங்கள் இருக்கும் போது, அதற்கான மருத்துவர்கள் மற்றும் அறுவைசிகிச்சை வல்லுனர்கள் இல்லை என்று வாதிடுவது அற்பத்தனமாகவே தோன்றுகிறது.

© வேதபிரகாஷ்

14-09-2012


[1] இது சூப்பிக்கள் இந்துமதத்துறவிகள் போல, பிற்காலத்தில் சித்தர்கள் போல வேடமிட்டு உலா வந்தது போன்றது எனலாம். கிருத்துவர்களும் அதேபோல காவியுடையணிந்து, குடுமி வைத்துக் கொண்டு உலல வந்தார்கள். இன்றைக்கும் கிருத்துவர்கள் தங்களை பத்மா முதலியார், மணி ஐயர் என்று கூறிக்கொண்டு, பாமர மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

[2] Pythagoras arrived in India too late to come into personal contact with the Buddha, he was greatly influenced by his teachings. He went to India a student, he left it as a teacher, and even to this day he is known in that country as Pitar Guru, and as Yavanacharya, the Ionian Teacher.

http://www.ship.edu/~cgboeree/greeks.html; http://9waysmysteryschool.tripod.com/sacredsoundtools/id13.html

[3] Typically Indian are the dying words of Plotinus, noblest of the Neo-platonists “Now I seek to lead back the self within me to the All-self.” One great teacher has said, “The end of knowledge is to know God – not only believe; to become one with God – not only to worship afar off.” We gain a hint in the Kathopanishat (V1- 17) “Let a man with firmness separate it (the soul) from his own body, as a grass stalk from its sheath,” to which point we will return later.

[4] Richard Garbe, India and Christendom, He points out, “…………….the historical possibility of the Greecian world of thought being influenced by India through the medium of persia must unquestionably be granted, and with it the possibility of the above-mentioned ideas (of the Sankyan and Vedanta Philosophy) being transferred from India to Greece”.

E. W. Hopkins says: “Plato is full of Sankhyan thought, worked out by him, but taken from Pythagoras. Before the sixth century B.C. all the religious philosophical ideas of Pythagoras are current in India. (L. Schroeder, Pythagoras). If there were but one or two of these cases, they might be set aside as accidental coincidences, but such coincidences are too numerous to be the result of change. ”

[5] வில்லியம் ஜோன்ஸ் போன்றோர் பாரதம் மற்றும் கிரேக்க கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, முதலியவற்றிலுள்ள பல ஒற்ருமைகளை எடுத்துக் காட்டியுள்ளனர். இக்கருத்து வலுப்பட்டபோது தான், தலைக்கீழ் கருதுகோள்களை மேனாட்டவர் உண்டாக்கி, கிரேக்கர்களிடமிருந்து இந்தியர்கள் காப்பியடித்தார்கள் என்று முன்வைத்தார்கள்.

[6] மஹாபாரத யுத்தம் நடந்த பின்னர், க்ஷத்தியர்கள் பாண்டவர்-கௌரவர் என்று இருதரப்பில் சேந்து சண்டையிட்டதால் அவர்களிடம் அவ்வாறான பாகுபாடு ஏற்பட்டது. மேலும் துவாரகை கடலில் மூழ்கி யாதவர்கள் முழுவதுமாக அழிந்தபோது, கிருஷ்ணரும் மறைந்தார். அப்பொழுது ஒன்பது கோள்களும் ஒரே கோட்டில் வந்ததால் கலியுகம் பிறந்ததாகக் கணக்கிடப்படுகிறது. அது 3102 BCEயிலிருந்து ஆரம்பிக்கிறது. இக்கலி சகாப்தம் குறிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான கல்வெட்டுகளும் ஆவணங்களும் உள்ளன.

[7] Romila Thapar, Asoka and the Decline of the Mauryas, Oxford University Press, New Delhi, 1987, p.167.

[8] Strabo, XV, I, p.59.

[9] Pseudo-Origen, Philosophia, p.24.

[10] மஹாபாரத யுத்தம் நடந்த பின்னர், க்ஷத்தியர்கள் பாண்டவர்-கௌரவர் என்று இருதரப்பில் சேந்து சண்டையிட்டதால் அவர்களிடம் அவ்வாறான பாகுபாடு ஏற்பட்டது. மேலும் துவாரகை கடலில் மூழ்கி யாதவர்கள் முழுவதுமாக அழிந்தபோது, கிருஷ்ணரும் மறைந்தார். அப்பொழுது ஒன்பது கோள்களும் ஒரே கோட்டில் வந்ததால் கலியுகம் பிறந்ததாகக் கணக்கிடப்படுகிறது. அது 3102 BCEயிலிருந்து ஆரம்பிக்கிறது. இக்கலி சகாப்தம் குறிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான கல்வெட்டுகளும் ஆவணங்களும் உள்ளன.

[11] J. Bloch, Les Inscriptions d’Asoka, Paris, 1950, p.128.

[12] D. R. Bhandarkar, Asoka, Univesity of Calcutta, 1969, P.27

[13] அசோகருடைய 14ம் கல்வெட்டு. Edict.No.I, The Sacredness of life.

[14] K.V. Ramakrishna Rao, The Position of Surgery before and after Buddha, in Sastra Trayi-Proceedngs of Bhaskariyam-Bharatiyam-Dhanvantariyam, 2007, Bangalore, pp.197-198.

Posted in அகத்தியர், அரேபியா, அறிவு ஜீவி, அறுத்தல், அறுவை சிகிச்சை, அறுவைசிகிச்சை, ஆத்மா, ஆனந்தம், ஆன்மா, ஆபரேஷன், ஆயுர்வேதம், ஆயுள், ஆயுள்வேதம், ஆரியன், ஆரியம், எலும்பியல், ஓலை, கடைசல் ஊசி, கத்தி, கந்தகம், கரைசல், காபாலிகம், காயம், சக்தி, சல்ய, சல்லிய, சிகிச்சை, சித்தார்த், சித்த்ஞானம், சிந்தனை, சீனா, திகம்பர, திகம்பரம், திரவிடம், திராவிடன், திராவிடம், திருமூலர், நரம்பு, பாதரசம், பாரதம், பிணம், பிண்டம், பித், பித்தம், மந்திரம், மனச்சிதைவு, மூச்சு, மூளை, மேரு, வில்லியம் ஜோன்ஸ் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 Comments »

சைவ சித்தாந்தமும், சித்தர் பாடல்களும், சித்த மருத்துவமும்

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 3, 2012

சைவ சித்தாந்தமும், சித்தர் பாடல்களும், சித்த மருத்துவமும்

இடைக்காலத்தில் தோன்றிய சைவசித்தாந்தத்திலும், சித்து, சித்தி முதலிய வார்த்தைகள் காணப்படுகின்றன. ஆனால், அவர்களுக்கும் இந்த சித்தர்களும் எந்த சம்பந்தமும் இல்லை. சிவஞான சித்தியாரை, “சித்தர்” என்றோ, “”சித்த மருத்துவர் யாரும் கூறவில்லை. ஆகவே, சித்தியாரை சித்தராக்க முடியாது. சித்தாந்தத்தில் உள்ள சித்தி, இங்குள்ள சித்தியோடு ஒப்பிட முடியாது. பஞ்சபூதத் தத்துவம், திரிதோஷம், ஆறு சக்கரங்கள், பிரணாயாமம், யோகா முதலிவற்றை ஏற்காமல் இருந்தால், அவை சைவசித்தாந்தத்தில் இருக்க முடியாது. வேதத்தின் அந்தத்தை, முடிவை பெறும் முயற்சி போல, சித்தாந்தி – சித்தின் முடிவை – ஞானத்தின் முடிவை அறிய விரும்பினார்கள். சிவனை மறுக்கும் சித்தாந்தம் இருக்க முடியாது, அதுபோலவே சித்தர்களும் இருக்கமுடியாது. ஆகவே, “கடவுளை எதிர்க்கும், மறுக்கும் நாத்திகவாதிகள் சித்தர்கள்” என்பது பொய்யான வாதமாகிறது. திருமூலரே ஆத்திகவாதியாக இருந்து, வேத-புராணங்களை ஏற்றுக் கொண்டு, சிவபக்தராக இருந்தும், மும்மூர்த்திகளின் தத்துவங்களை ஏற்றுக் கொண்டு, மந்திரம்-யந்திரம்-தந்திரம் முறைகளை தகவமைத்துக் கொண்டுதான் சித்தராக இருந்தார். அப்பொழுது, திருமூலரின் சித்தாந்தத்தை மறுத்து, சைவ சித்தாந்தத்தையும் வெறுத்து “சித்தர்கள்” இருக்க முடியுமா? அவர்கள் “சித்தர்கள்” ஆவார்களா?

சித்தமருத்துவ நூல்கள் தமிழ் சித்தர்களால் எழுதப்பட்டவையா?: சித்தர்களின் பெயர்களில் பற்பல மருத்துவ நூல்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சித்தர் பெயரின் பின்னால் சாத்திரம், காண்டம், வைத்தியம், தந்திரம், சூத்திரம் என்றும், எண்கள் – 10, 20, 50, 100, 1000 என்றும் சேர்த்துக் கொண்டு பல நூல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் குறைவாகவே கிடைக்கப் பெற்றுள்ளன. தாதுக்கள், உப்புக்கள், கனிமங்கள் முதலியவற்றின் பெயர்களைப் பார்க்கும் போது அவையெல்லாம் 19 அல்லது 20ம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை என்று நன்றாகத் தெரிகிறது. ஏனெனில் அதற்கு முன்பு, அவற்றிற்கு அத்தகைய சொல் பிரயோகங்கள் இல்லை.

அகத்தியர் ஐந்து சாத்திரம்,
அகத்தியர் கிரியை நூல்,
அகத்தியர் அட்டமாசித்து, ,
வைத்திய ரத்னாகரம்,
வைத்தியக் கண்ணாடி,
வைத்தியம் 1500,
வைத்தியம் 4600,
செந்தூரன் 300,
மணி 400,
வைத்திய சிந்தாமணி,
கரிசில்பச்யம்,
நாடி சாஸ்திரப் பசானி,
பஸ்மம்200,
கர்மவியாபகம்,
அகத்தியர் சூத்திரம் 30,
அகத்தியர் ஞானம்
திருமூலர் சல்லியம் – 1000
திருமூலர் வைத்திய காவியம் – 1000
திருமூலர் வைத்திய கருக்கிடை – 600
திருமூலர் வைத்திய சுருக்கம் – 200
திருமூலர் தீட்சை விதி – 18
திருமூலர் யோக ஞானம் – 16
16. திருமூலர் விதி நூல் – 24
திருமூலர் ஆறாதாரம் – 64
திருமூலர் பச்சை நூல் – 24
திருமூலர் பெருநூல் – 3000
திருமூலர் ஞானோபதேசம் 30
திருமூலர் வியாதிக் கூறு 100
திருமூலர் முப்பு சூத்திரம் 100.
போகர் – 12,000
சப்த காண்டம் – 7000
போகர் நிகண்டு – 1700
போகர் வைத்தியம் – 1000
போகர் சரக்கு வைப்பு – 800
போகர் ஜெனன சாகரம் – 550
போகர் கற்பம் – 360
போகர் உபதேசம் – 150
போகர் இரண விகடம் – 100
போகர் ஞானசாராம்சம் – 100
போகர் கற்ப சூத்திரம் – 54
போகர் வைத்திய சூத்திரம் – 77
போகர் மூப்பு சூத்திரம் – 51
போகர் ஞான சூத்திரம் – 37போகர் அட்டாங்க யோகம் – 24
கருவூரார் வாத காவியம் – 700
கருவூரார் வைத்தியம் – 500
கருவூரார் யோக ஞானம் – 500
கருவூரார் பலதிட்டு – 300
கருவூரார் குரு நரல் சூத்திரம் – 105
கருவூரார் பூரண ஞானம் – 100
கருவூரார் மெய் சுருக்கம் – 52
கருவூரார் சிவஞானபோதம் – 42
கருவூரார் கட்ப விதி – 39
கருவூரார் மூப்பு சூத்திரம் – 3
கொங்கணவர் வாதகாவியம் – 3000
கொங்கணவர் முக்காண்டங்கள் – 1500
கொங்கணவர் தனிக்குணம் – 200
கொங்கணவர் வைத்தியம் – 200
கொங்கணவர் வாதசூத்திரம் – 200
கொங்கணவர் தண்டகம் – 120
கொங்கணவர் ஞான சைதன்யம் – 109
கொங்கணவர் சரக்கு வைப்பு – 111
கொங்கணவர் கற்ப சூத்திரம் – 100
கொங்கணவர் வாலைக்கும்பி – 100
கொங்கணவர் ஞான வெண்பா சூத்திரம் – 49
கொங்கணவர் ஆதியந்த சூத்திரம் – 45
கொங்கணவர் மூப்பு சூத்திரம் – 40
கொங்கணவர் உற்பத்தி ஞானம் – 21,
புலிப்பாணி வைத்தியம் – 500
புலிப்பாணி சோதிடம் – 300
புலிப்பாணி ஜாலம் – 325
புலிப்பாணி வைத்திய சூத்திரம் – 200
புலிப்பாணி பூஜாவிதி – 50
புலிப்பாணி சண்முக பூசை – 30
புலிப்பாணி சிமிழ் வித்தை – 25
புலிப்பாணி சூத்திர ஞானம் – 12
புலிப்பாணி சூத்திரம் – 9

சித்தர்களே மருத்துவ நூல்களை இயற்றினார்களா அல்லது பிறகு தயாரிக்கப்பட்ட நூல்களுக்கு, அதிகாரம், ஏற்பு மற்றும் பிரபலம் முதலிய காரணங்களுக்காக சித்தர்கள் பெயர்கள் தலைப்பாக சேர்த்திடப்பட்டனவா என்று யோசிக்கவேண்டியுள்ளது.

சைவம் வடக்கிலிருந்து தெற்கில் வந்துள்ளது என்பது வீரசைவ நூல்களினின்று தெரிய வருகின்றது. அதற்கான கல்வெட்டு, கட்டிட, அகழ்வாய்வு ஆதாரங்கள் உள்ளன. தமிழகத்தில் உள்ள கல்வெட்டு, கட்டிட, அகழ்வாய்வு ஆதாரங்கள் மௌரிய காலத்திற்கு முன்னாக இருந்தால் தான், இந்த வாதத்தை மறுக்க முடியும். அதாவது, உள்ள பல்லவர்காலத்து கொகைக்கோவில்கள் முதலியன அக்காலத்திற்கு முன்பாக இருந்திருந்தால், சைவத்தின் தொன்மை சங்ககாலத்திற்கு முன்பாக இருந்ததாகிறது. உண்மையில் உள்ள கல்வெட்டு, கட்டிட, சிற்பங்கள் முதலியவை நேரிடையாக தேதியிடப்படவில்லை. ஒப்பீட்டுமுறையில் தேதியிடப்பட்டுள்ளது. அந்நிலையில் சைவசித்தாஅந்தம் தோன்றிய பிறகுதான் “சித்தர்” வழக்கு வந்திருக்க வேண்டும் என்றால், அது வடவிந்திய நாதமரபிற்குப் பின்னர்தான் ஏற்பட்டிருக்கவேண்டும்.

இவை சித்தமருத்தப் பாடல்களா, அவற்றின் காலத்தை நிர்ணயிப்பது எப்படி?: கீழே சித்த வைத்தியர் ஒருவரால் எழுதப்பட்ட சிலபாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதனையே நாதாக்க ளெல்லோருஞ் சொன்னா ரிகத்தெவர்க்கு

மிதனையே சொன்னாரியேசு கிறிஸ்து வெமதிறைவ

னிதந்தரு நாமத்தை வீணாக வுச்சரிக் கேலெனவும்

பதந்தரு நற்பரி சுத்தாவி ஞானம் படிகெனவே (297)

 

\எனவுரைத் தேவ நாமமெம்போது மியம்புகவென்றுங்

கனமுறு மிந்தனற் சத்திய வேதக் கலையுணர்ந்தோ

ரினம்பிற வாரென்றிசைத்தார் முகம்ம தெனுநபிநம்

மினமெலாம் வேதங்கீ ழாக்கி யிறந்தோ மெதிர்மறையே (298)

 

எதிராகச் செய்யு மறையோர்க் கினிப்பிறப்பில்லையென்றா

ரிதினுண்மை யெல்லா மறந்தார்கள் நூலோரெனும் பெயரின்

வதிவோ ரெலாம்பஞ்சை யானார்கள் பார்ப்பெனு மண்ணவரோ

முதிய கிழமா யிருந்திறக் கின்றார் முறையழிந்தே (299)

 

அழிந்து கெடுகின் றனர்சைவப் பேரோ ரதிகொலைசெய்

தழித்துத்தன் னான்மாவைக் சூத்திரப் பேரோரவரிடத்து

மொழியுநற் சூத்திர மில்லை கிறிஸ்தவர் முன்னுரைத்த

அழியாத தேவனன் நாம மெதுவென் றறிகிலரே (300)

 

அறிகிலட் நற்பரிசுத்தமாம் ஆவி யதுநபிமுன்

னறி வ்த்த நேர்யதி ராம்மறை யீதென் றறிதலற்று

முறையெதி ரான தவறுகள் செய்து முகம்மதியர்

நிறையற் றனருல கோரிவ் விதமென் னியாயமென்னோ (301)

 

மேலேயுள்ள பாடல்கள் எல்லாம் சித்தர்களுடைய பாடல்கள் என்று படிப்பவர்களுக்த் தோன்றலாம். ஆனால், இவை தேவக்கோட்டையைச் சேர்ந்த “வைத்தியமணி” சித.வே.ஷண்முகநாத பிள்ளை எழுதியுள்ள மீனாமிர்தம்[1] என்ற நூலில் உள்ளவை. 1887ல் பிறந்த இவர் 1947ல் இப்புத்தகத்தை வெளியிடுகிறார். அப்பொழுதே முகம்மது, ஏசு, பரிசுத்த ஆவி என்றெல்லாம் சேர்த்து எழுதியுள்ளார். இந்நூல் சித்தவைத்தியர்கள் எல்லோருக்கும், வைத்தியக் கல்லூரிகளுக்கும், பொதுவாக பூத பௌதிக தத்துவ விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களுக்கும் பயன்தரத்தக்க சிறந்த நூல்களாக இருக்கின்றன என்று வெளியிடப்பட்டுள்ளது[2]. ஆகவே தமிழ் பண்டிதர்கள் அவ்வாறு எழுதக்கூடும் என்று தெரிகிறது. கிருத்துவப் பாதிரியார்கள் எப்படி தமிழ்பண்டிதர்களை வைத்துக் கொண்டு, அவ்வாறான முறையைக் கையாண்டார்களோ, அதேமுறையை “சித்தர் பாடல்கள்” உருவாக்கக் கையாண்டிருக்கலாம்.

© வேதபிரகாஷ்

03-09-2012


[1] சித. வே. ஷண்முகநாத பிள்ளை, உயிர் நிலைக்கலை என்னும் மீனாமிர்தம் (அருமருந்துக் கோவை சேர்ந்தது), இலக்கியப் பதிப்பகம், காரைக்குடி, 1947.

[2] சித்த வைத்திய சங்கத்தின் 13-10-1946 தேதியிட்ட கடிதத்தின்படி. சித்த வைத்திய சங்கம் (ரிஜிஸ்டர்டு), அருப்புக்கோட்டை ரோடு, மதுரை.

Posted in அக்னி, அண்டம், அறிவு ஜீவி, ஆகாயம், ஆத்மா, ஆனந்தம், ஆன்மா, ஆயுர்வேதம், ஆயுள், ஆரியன், உடல், உயிர், ஓலை, ஓலைச்சுவடி, கண், கந்தகம், கனிமம், கன்னிமாரா நூலகம், கருத்து, கரைசல், கற்பம், கலாச்சாரம், கல்பம், காது, காமாக்கியா, காயம், காற்று, கால், கை, கைராச்சிக்காரர், சக்தி, சத், சிதம்பரம், சிதர், சிதார், சித், சித்தம், சித்தர், சித்தர் பாடல்கள், சித்து, சிந்தனை, சுவடி, சூபி, செவி, சோர்வு, தங்கம், தந்திரம், தமிழகம், தமிழ், திரவிடம், திராவிடன், திராவிடம், திருமூலர், தேவி, பதஞ்சலி, பதினென் சித்தர்கள், பரம்பரை, பரம்பரை வைத்தியர், பாதம், பாதரசம், பாரம்பரியம், பிண்டம், பிரதி, புத்தகம், பூதங்கள், பூர்ணலிங்கம் பிள்ளை, மந்திரம், மனச்சிதைவு, மனப்பாங்கு, மனம், மபப்பாங்கு, மருந்து, முஹம்மது கஜினி, மூக்கு, மூச்சு, மூலம், மூளை, யோகா, யோசனை, யோனி, ராமலிங்கம், லிங்கம், வள்ளலார், வேதாசலம், வைத்தியர் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

நவீனகால சித்தர் பாடல்களுக்கும், சித்த மருத்துவத்திற்கும் என்ன தொடர்பு?

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 3, 2012

நவீனகால சித்தர் பாடல்களுக்கும், சித்த மருத்துவத்திற்கும் என்ன தொடர்பு?

சித்தர்கள் பதினெட்டு என்றால் அவர்கள் பட்டியல் ஏன் வேறுபடுகிறது?: “பதினென் சித்தர்கள்” என்ற கணக்கீடு பிரபலமாக சித்தமருத்துவர்கள், சித்த-எழுத்தாளர்கள் மற்றும் சித்த-ஆராய்ச்சியாளர்கள் உபயோகித்து வருகிறார்கள். ஆனால், அத்தகைய கணக்கீட்டிற்கு ஆதாரம் ஏதாவது உள்ளதா என்று பார்க்கும் போது, பல பட்டியல்கள் தோன்றுகின்றன. உதாரணத்திற்கு பிரபலமாக மற்ற சித்த எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடும் பட்டியல்கள் சில கீழே கொடுக்கப்படுகின்றன:

கருவூரார் மாந்திரீக அட்டமா சித்து நிஜானந்த போதம் அபிதான சிந்தாமணி ஏ. சண்முகவேலன்
1. கும்ப முனி
2. நந்தி முனி
3. கோரக்கர்
4. புலிப்பாணி
5. புசுண்டரிஷி
6. திருமுலர்
7. தேரையர்
8. யூகி முனி
9. மச்சமுனி
10.புண்ணாக்கீசர்
11. இடைக்காடர்
12. பூனைக் கண்ணர்
13. சிவவாக்கியர்
14.சண்டிகேசர்
15. உரோமருஷி
16. சட்டநாதர்
17. காலாங்கி
18. போகர்
1. அகத்தியர்
2. போகர்
3. நந்தீசர்
4. புண்ணாக்கீசர்
5. கருவூரார்
6. சுந்தரானந்தர்
7. ஆனந்தர்
8. கொங்கணர்
9. பிரம்மமுனி
10.உரோமமுனி
11. வாசமுனி
12. அமலமுனி
13. கமலமுனி
14. கோரக்கர்,
15.சட்டைமுனி
16. மச்சமுனி,
17. இடைக்காடர்
18. பிரம்மமுனி
1. அகத்தியர்
2. போகர்

3.கோரக்கர்

4.  கைலாசநாதர்
5. சட்டைமுனி
6.திருமுலர்
7. நந்தி
8. கூன் கண்ணர்
9. கொங்கணர்
10. மச்சமுனி
11.வாசமுனி
12. கூர்மமுனி
13. கமலமுனி
14. இடைக்காடர்
15. உரோமருஷி
16.புண்ணாக்கீசர்
17. சுந்தரனானந்தர்
18. பிரம்மமுனி

  1. நந்தி
  2. திருமூலர்
  3. அகத்தியர்
  4. புண்ணாக்கீசர்
  5. புலத்தியர்
  6. பூனைக் கண்ணர்
  7. இடைக்காடர்
  8.   போகர்
  9. புலிக்கையீசர்
  10. கொங்கணர்
  11. அழுகணி
  12. கருவூரார்
  13. காலாங்கி
  14. அகப்பேய்
  15. பாம்பாட்டி
  16. தேரையர்
  17. குதம்பை
  18. சட்டைநாதர்
எம்.எஸ்.பூர்ணலிங்கம் பிள்ளை கா.சு. பிள்ளை, சி. பாலசுப்ரமணியம் ஏ.வி.சுப்ரமணியன் அரு.ராமநாதன்
  1. நந்தி
  2. சனகர்
  3. சனாதர்
  4. சனந்தர்
  5. சனற்குமார்
  6. திருமூலர்
  7. பதஞ்சலி
  8. அகத்தியர்
  9. புலத்தியர்
  10. புசுண்டர்
  11. காலாங்கி
  12. போகர்
  13. கொங்கணர்
  14. கருவூரார்
  15. தன்வந்திரி
  16. சட்டைஉனி
  17. தேரையர்
  18. யூகிமுனி
  1. அகத்தியர்
  2. புலத்தியர்
  3. புசுண்டர்
  4. நந்தி
  5. திருமூலர்
  6. காலாங்கிநாதர்
  7. போகர்
  8. கொங்கணர்
  9. சட்டைமுனி
  10. ரோமமுனி
  11. மச்சமுனி
  12. கருவூரார்.
  13. தன்வந்திரி.
  14. புண்ணாகீசர்
  15. கோரக்கர்
  16. யூகிமுனி
  17. தேரரயர்
  18. இடைக்காடர்
  1. அகத்தியர்
  2. திருமூலர்
  3. போகர்
  4. கோரக்கர்
  5. சட்டைமுனி
  6. நந்தி
  7. கொங்கணர்
  8. கமலமுனி
  9. இடைக்ககடர்
  10. சுந்தரானந்தர்
  11. ரோமமுனி
  12. பிரம்மமுனி
  13. மச்சமுனி
  14. வராஹமுனி
  15. கூர்மமுனி
  16. புண்ணாகீசர்
  17. கைலலசநாதர்
  18. கூன்கண்ணர்
  1. நந்தி
  2. அகத்தியர்
  3. மூலர்
  4. புண்ணாக்கீசர்
  5. புலத்தியர்
  6. பூனைக் கண்ணர்
  7. இடைக்காடர்
  8. போகர்
  9. புலிக்கையீசர்
  10. கருவூரார்
  11. கொங்கணன்
  12. காலாங்கி
  13. எழுகண்ணர்
  14. அகப்பேய்
  15. பாம்பாட்டி
  16. தேரையர்
  17. குதம்பை
  18. சட்டைநாதர்

இத்தகைய எண்ணிக்கைகள் எவ்வாறு வந்துள்ளன என்று இனி மூலங்களைப் பார்ப்போம்.

நந்தி யருள் பெற்ற நாதரை நாடினின்நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி

மன்ற தொழுத பதஞ்சலி வியாக்ரமர்

என்றிவர் என்னோ டெண்மருமே

(திருமந்திரம்.68)

  1. நந்தி
  2. சனகர்
  3. சனந்தர்
  4. சனாதர்
  5. சனற்குமாரர்
  6. பதஞ்சலி
  7. வியாக்ரமர்
  8. திருமூலர்

இப்பாடலை வைத்துக் கொண்டுப் பார்த்தால் – எண்மர் என்று வருகிறது. அவருடைய சீடர்கள் என அவரே குறிப்பிடுவது:

மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்இந்திரன் சோமன் பிரம்மன் உருத்திரன்

கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோ

டிந்த எழுவரும் என் வழியாமே

  1. மாலாங்கன்
  2. இந்திரன்
  3. சோமன்
  4. பிரம்மன்
  5. உருத்திரன்
  6. கந்துருக் காலாங்கி
  7. கஞ்ச மலையன்

ஆக திருமூலர் காலத்தில் 15 பேர் உள்ளனர். ஆனால், திராவிட இனவாதத்தின்படி, ஆரியர்கள் இதில் இருக்கக் கூடாது. ஆகையால் தான் மாலாங்கன், இந்திரன், சோமன், பிரம்மன், உருத்திரன், கந்துருக் காலாங்கி, கஞ்ச மலையன் என்ற பட்டியலில், காலாங்கியை மற்றும் தேர்ந்தெடுத்துள்ளனர். சமரசம் செய்து கொண்டவர்கள் அல்லது சைவ அபிமானிகள் எண்மரை சேர்த்துக் கொண்டுள்ளனர். போகரைப் படித்து குழம்பிப்போனவர்கள் பட்டியலை தமதிச்சைகேற்றாவாறு குழப்பியுள்ளனர்.

போகர் 7000 கொடுக்கும் சித்தர்கள் பட்டியல் ஜாதகம் முதலியன: போகர் 7000 என்ற நூலில் தான் சித்தர்கள் பற்றிய அதிகமான செய்திகள் உள்ளன, சித்தர்கள் “பதினெண்மர்” என்று குறிப்பிட்டு, 40ற்கும் மேற்பட்ட சித்தர்களின் பிறந்த மாதம், நட்சத்திரம், சாதிகளையும் குறிப்பிடுகின்றது. போகருக்கு 63 சீடர்கள் இருந்தார்களாம், அவர்கள் விண்வெளியில் பறக்கும் சக்தி கொண்டிருந்தார்களாம். எல்லா சித்தர்களையும் இணைக்க வேண்டும் என்ற முயற்சியில் இந்நூல் இயற்றப்பட்டிருக்கிறது. அதனால் காலத்தைப் பற்றி கவலைப்படவில்லை. முன்னுக்கு முரணாக எல்லோரையும் இணைக்க முனைந்துள்ளது. தசாவாரம் தெரிந்திருந்தத்தால் அந்த பத்து அவதாரப் பெயர்களை வைத்து பத்து ரிஷிக்களை உண்டாக்கியிருக்கிறது, பிறகு அவர்களும் சித்தர்கள் ஆகிறார்கள் (6868-6906). இதில் புத்தரைச் சேர்த்துள்ளது நோக்கத்தக்கது. நான்கு யுகங்கள், 1008 தீர்த்தங்கள் முதலியன சொல்லப்பட்டுள்ளன. ஆனால், பாடல்களை சாதாரணமாக வாசித்துப் பார்த்தாலே இது ஒரு போலிநூல் என்று தெரிகிறது. அதாவது 19/20ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று தெரிகிறது.

ஆரிய-திராவிட போராட்டத்தில் சிக்கிக் கொண்ட சித்தர்கள்: ஜே. எம். நல்லசுவாமி பிள்ளை (1864-1920) சைவராகயிருந்து, ஆரிய-திராவிட சித்தாந்த்தை ஏற்றுக் கொண்டவர். அதனால், திராவிடம்-சைவ சித்தாந்தம், ஆரியத்தை-வேத-உபநிடதங்களைவிட சிறந்தது என்று வாதிட்டார்[1]. அத்தகைய சைவம், பிராமணர்-அல்லாத இயக்கமாக மாறி, பிராமணர்-எதிர்ப்பு இயக்கமாக உருமாறி, திராவிட மாயைக்குள் சிக்குண்டது. இதனால் சித்தர்-எழுத்தாளர்களும் உருமாற வேண்டியிருந்தது. பகுத்தறிவில் இந்துமதத்தைப் பழிக்க வேண்டிருந்தது; நாத்திகத்தில் சிவனை மறக்கவேண்டியிருந்தது. திராவிட சித்தாந்தத்தில் திருமூலர் மரபையே மறைக்க வேண்டி வந்தது. அதன்படியே, பிறகு வந்தவர்கள் தமக்குக்கிடைத்துள்ள பிரதிகள் அல்லது புத்தகங்களை வைத்துக் கொண்டு, இந்த பட்டியல்களைத் தயாரித்துள்ளனர் என தெரிகிறது. இதைத்தவிர திருமந்திர பாரம்பரியத்தை ஏற்பதா வேண்டாமா என்ற மனசஞ்சலம், குழப்பம் மற்றும் திராவிட சித்தாந்த போராட்டம் 20 நூற்றாண்டு சித்தர் ஆராய்ச்சியாளர்களிடையே இருந்தது என்பதனையும் இது (இப்பட்டியல்கள்) எடுத்துக் காட்டுகிறது. சாமான்ய மக்களுக்குப் புரியவேண்டும் என்று இவர்கள் பாடல்களை இயற்றினார்கள் எனும் போது, மக்களிடையே பிரபலமாக இருக்கும் பெயர்களைத்தான் “சித்தர்கள்” வைத்துக் கொள்ள வேண்டும் அல்லது அப்போலி பாடல்களை உருவாக்கியவர்கள் வைக்க வேண்டும். அதனால்தான், புனைப்பெயர்கள் புராணப் பெயர்களாக, ரிஷிகளின் பெயர்களாக மாற்றப்பட்டன. அப்பொழுது, எதை விடுவது, எதை சேர்ப்பது என்ற குழப்பத்தில், அவரவர் விருப்பத்திற்கேற்றப்படி பட்டியலைத் தயாரித்துள்ளார்கள் என்று நன்றாகவே தெரிகிறது. கடந்த நூற்றாண்டுகளில் ஏற்பட்டிருக்கிறது என்பது, அவர்கள் பெயர்களைக் குறிப்பிடுகின்ற பட்டியல்களே சான்றாக உள்ளன.

சித்தர்கள் எண்ணிக்கை ஒன்பதா பதினெட்டானதா?: நாத-நவநாத சித்தர்களிடமிருந்து தான், இம்மரபு வருகிறது என்றதால், வடவிந்திய நாதசித்தர்களை விட தமிழ்சித்தர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்று உயர்வாகச் சொல்லிக்கொள்ள ஒன்பதை பதினெட்டாக்கியிருக்கலாம். இதனை மாணிக்கவாசகம், தெற்கில் பதினெண்சித்தர்கள் எனக்குறிப்பது போலவே வடக்கே நவநாத சித்தர்கள் எனக்குறிக்கும் மரபு உள்ளது, என்கிறார். அதாவது அவர்கள் தங்களது பட்டியலைச் சுருக்கிக் கொண்டார்கள் போலும்! 18ல் குழப்பம் உள்ளது போல 9லும் உள்ளது என்பதனை, “பதினெண்மர் யாவர் என்பதிலே கருத்து வேறுபாடு இருப்பது போல நவநாத சித்தர் யாவர் என்பதிலும் கருத்து வேறுபாடு இருந்து வருகின்றது”, என்று மூன்று பட்டியல்களைக் கொடுக்கிறார்[2].

அபிதான சிந்தாமணி எம்.எஸ்.பூர்ணலிங்கம் பிள்ளை சட்டைமுனி பின்ஞானம் மூன்று
  1. சத்துவநாதர்
  2. சாலோகநாதர்
  3. ஆதிநாதர்
  4. அருளிநாதர்
  5. மதங்கநாதர்
  6. மச்சேந்திரநாதர்
  7. கடயேந்திரநாதர்
  8. கோரக்கநாதர்
  9. குக்குடநாதர்
  1. சத்யநாதர்
  2. சுகோதநாதர்
  3. ஆதிநாதர்
  4. அனாதிநாதர்
  5. வகுளிநாதர்
  6. மதங்கநாதர்
  7. மச்சேந்திரநாதர்
  8. கடயேந்திரநாதர்
  9. கோரக்கநாதர்
  1. திருமூலர்
  2. சண்டிகேசர்
  3. சனகர்
  4. சனந்தர்
  5. சனாதனர்
  6. சனற்குமாரர்
  7. வியாக்கிரபாதர்
  8. பதஞ்சலி
  9. சட்டைமுனி

இப்பெயர்களைப் படிக்கும்போதே, அறிவதாவது, முதல் இரண்டிலும் அதிகமான வேறுபாடில்லை மற்றும் மூன்றாவது திருமந்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள பெயர்களை வைத்து பட்டியல் தயாரிக்கப் பட்டுள்ளது என்று தெரிகிறது. பிறகு பௌத்தத்தில் தந்திரமுறைகளைக் கற்றுக் கொடுக்கும் “முதல் ஆசிரியர்கள்” 84-சித்தர்கள் ஆவர் என்றுள்ளது. லாமா கோவிந்த என்பவர் இவர்களது பரிபாஷையைப் பற்றிக் குறிப்பிடும் போது, இதனை எடுத்துக் காட்டுகிறார்[3]. பிறகு திபெத்தியர்களின்  பாரம்பரியத்தில் பூசுகபாதர் என்பவர் எப்பொழுதும் சித்தர் என்றே அவர்களின் பட்டியல்களில் காணப்படுகிறார். அவர் விஞ்ஞான, மத்யாத்மக மற்றும் வேதாந்த சித்தாந்தகளை இணைத்துப் போதிப்பவராகத் தெரிகிறார்[4]. இதையும் விஞ்சவேண்டும் இல்லையா, அதனால் பட்டியலை நீட்ட ஆரம்பித்தனர் ;போலும். இப்படி, நீண்டு கொண்டே போகும் போது, 58, 64, 84, 108 என்றும் சித்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தனர்[5]. இதற்கு மேலும் யாதாவது, பிரச்சினை அல்லது குற்ரம் கண்டுபிடித்தால், எல்லாமே இதில் அடக்கம் என்பதுபோல, இன்னொரு “அனைத்தும் இதில் அடங்கும்” என்ற பட்டியல் தயாரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

1.     பதினெட்டாம்படிக் கருப்புகள்
2.     நவகோடி சித்தர்கள்
3.     நவநாத சித்தர்கள்
4.     நாத சித்தர்கள்
5.     நாதாந்த சித்தர்கள்
6.     வேத சித்தர்கள்
7.     வேதாந்த சித்தர்கள்
8.     சித்த சித்தர்கள்
9.     சித்தாந்த சித்தர்கள்
10.     தவ சித்தர்கள்
11.     வேள்விச் சித்தர்கள்
12.     ஞான சித்தர்கள்
13.     மறைச் சித்தர்கள்
14.     முறைச் சித்தர்கள்
15.     நெறிச் சித்தர்கள்
16.     மந்திரச் சித்தர்கள்
17.     எந்திரச் சித்தர்கள்
18.     மந்தரச் சித்தர்கள்
19.     மாந்தரச் சித்தர்கள்
20.     மாந்தரீகச் சித்தர்கள்
21.     தந்திரச் சித்தர்கள்
22.     தாந்தரச் சித்தர்கள்
23.     தாந்தரீகச் சித்தர்கள்
24.     நான்மறைச் சித்தர்கள்
25.     நான்முறைச் சித்தர்கள்
26.     நானெறிச் சித்தர்கள்
27.     நான்வேதச் சித்தர்கள்
28.     பத்த சித்தர்கள்
29.     பத்தாந்த சித்தர்கள்
30.     போத்த சித்தர்கள்
31.     போத்தாந்த சித்தர்கள்
32.     புத்த சித்தர்கள்
33.     புத்தாந்த சித்தர்கள்
34.     முத்த சித்தர்கள்
35.     முத்தாந்த சித்தர்கள்
36.     சீவன்முத்த சித்தர்கள்
37.     சீவன்முத்தாந்த சித்தர்கள்
38.     அருவ சித்தர்கள்
39.     அருவுருவ சித்தர்கள்
40.     உருவ சித்தர்கள்

எப்படி கற்பனைக் கொடிகட்டிப் பறந்துள்ளது என்று தெரிகிறது. இவற்றிற்கு ஆதாரங்கள் உள்ளனவா என்பதுபற்றிக் கூட கவலைப்படவில்லை.
© வேதபிரகாஷ்

02-09-2012


[1] J. M. Nallaswami Pillai (trans.), Sivagnana Botham, Madras, 1895, preface, p.iii.

[2] இரா. மாணிக்கவாசகம், சித்தர்கள், இரா. மாணிக்கவாசகம், சித்தர்கள், ப.139-140.

[3] Lama Anagarika Govinda, Grundlagen Tibetischer Mystick, Zurich, 1957, pp.45-46.

Agehananda Bharati, The Tantric Tradition, B. I. Publications, New Delhi,1976, p.28, 167-168.

[4] Agehananda Bharati, The Tantric Tradition, B. I. Publications, New Delhi,1976, p.29.

[5] இரா. மாணிக்கவாசகம், சித்தர்கள், பெருங்காப்பியச் சிற்றிலக்கியப் பெருந்தமிழ், சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு, 1975, ப.127-169. பக்கம்.168ல் 58 சித்தர்கள் பட்டியலைக் கொடுத்துள்ளார்.

Posted in அக்னி, அண்டம், அறிவு ஜீவி, ஆகாயம், ஆத்மா, ஆனந்தம், ஆன்மா, ஆயுள், ஆரியன், ஆரியம், இதயம், இந்திரியம், உடல், உயிர், ஓலை, ஓலைச்சுவடி, கண், கந்தகம், கனிமம், கருத்து, கரைசல், கற்பம், கலாச்சாரம், காது, காமாக்கியா, காயம், காற்று, கால், கீழைத்திசை நூலகம், கை, கைராச்சிக்காரர், சக்தி, சத், சிதம்பரம், சிதர், சிதார், சித், சித்தம், சித்தர், சித்தர் பாடல்கள், சித்து, சிந்தனை, சுவடி, சூபி, செவி, சோர்வு, தங்கம், தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகம், தந்திரம், திராவிடம், திருமூலர், தேவி, நகல், நரம்பு, நாகரிகம், நாடி, நாட்டு மருத்துவம், நாதசித்த மரபு, நாத்திகம், நினைவு, நிம்மதி, நிலம், நீர், நுண்ணிய அறிவு, நெருப்பு, பகுத்தறிவு, பஞ்சபூதங்கள், பதஞ்சலி, பதினென் சித்தர்கள், பரம்பரை, பரம்பரை வைத்தியர், பாதம், பாதரசம், பாரம்பரியம், பிண்டம், பிரதி, பீர், புத்தகம், பூதங்கள், பூர்ணலிங்கம் பிள்ளை, பெரிய ஞானக் கோவை, மந்திரம், மனச்சிதைவு, மனப்பாங்கு, மனம், மபப்பாங்கு, மருந்து, மறைமலை அடிகள், மூக்கு, மூச்சு, மூலம், மூளை, யோகா, யோசனை, யோனி, ராமலிங்கம், லிங்கம், வள்ளலார், வேதாசலம், வைத்தியர் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

சித்தர்களைப் பற்றிய பலவாரானக் கருத்துகள்

Posted by vedaprakash மேல் ஓகஸ்ட் 3, 2012

சித்தர்கள், சித்தமருத்துவம் பற்றிய ஆராய்ச்சி

சித்தர்களைப் பற்றிய பலவாரானக் கருத்துகள் நிலவி வருகின்றன, ஏனெனில் அத்தகைய கருத்துகளைத் தெரிவிப்பவர்கள் மூலங்களைப் படிக்காமல் பேசுவதால், எழுதுவதால் அத்தகைய நிலை ஏற்படுகிறது. மேலும் “சித்தர் பாடல்கள்” என்று பிரபலமாக வழங்கிவரும் பாடல்கள் சித்த மருத்துவத்துடன், தொடர்பு கொண்டிருந்தாலும், அவை, மருந்துகள் தயாரிக்கும் முறைகளைச் சொல்வதில்லை. இதையறிமால் எழுதுவதால் தான் தமிழ் சித்தர்களைப் பற்றிய கருத்துகள் ஏராளமாக, தாராளமாக ஆதாரங்களே இல்லாமல் பற்பல செய்திகளாகக் கொடுக்கப் பட்டு வருகின்றன[1]. மூலங்களைப் படிக்காமலே, பிரபலமாக எழுதப் பட்டுவரும் புத்தகங்களை வைத்துக் கொண்டு சமீபத்தில் வரையப் பட்டுள்ள உருவாக்கப்பட்டுள்ள சித்திரங்களை வைத்துக் கொண்டு பிரமிக்க வைக்கும் அளவில் இணைதளங்களில் வர்ணனைகளை குவித்து வருகிறார்கள்[2]. அவையும் வேகமாகப் பரவி வருகின்றன. ஏதோ எல்லா நோய்களையும் சித்தமருத்துவம் தீர்த்துவிடும் அல்லது சித்தமருத்துவத்தில் இல்லாத தீர்வுகளே இல்லை என்பது போல எழுதி, விளம்பரப்படுத்தி வருகிறார்கள்[3].

ஆதாரங்களைக் கொடுக்காமல் எழுதப் படும் புத்தகங்கள்: சித்தர்களைப் பற்றி சித்தமருத்துவ முறையைப் பற்றி எழுதுபவர்களும் மூலங்களை – முதன்மை அல்லது இரண்டாம் வகை – கொடுப்பதில்லை[4]. எழுதுபவர் தம்மை அல்லது பதிப்பகத்தார் – ஆசிரியர் / வைத்தியர் / மருத்துவர் / சித்தவைத்தியர் / சித்தமருத்துவர் / வைத்தியத் திலகம்/ சித்தர் என்றெல்லாம் கூறிக்கொண்டு –

  • பரம்பரை சித்த வைத்தியர்,
  • மூன்று  பரம்பரையாக சித்தவைத்தியம் பார்த்து வருபவர்,
  • கைராச்சிக்காரர்,
  • தீராத நோய்களைத் தீர்த்து வைத்தவர்,

அறிமுகப்படுத்தப் படுகிறார் அல்லது அறிமுகமாகிறார். ஆனால் அவர்களுடைய  நோயாளிகளைப் பற்றியோ, அவர்கள் எவ்விதமாக சிகிச்சையளிக்கப் பட்டு, எத்தனை நாட்களில் காலத்தில் குணமடைந்தார் என்று குறிப்பிடுவதில்லை.  இருக்கும் மற்றும் புதியதாக தோன்றும் ஒவ்வொரு பதிப்பகமும் சித்தர்களைப் பற்றி, சித்தமருத்துவத்தைப் பற்றி யாதாவது ஒரு புத்தகத்தை வெளியிட்டுத் தீருவது என்று தீர்மானமாக இருக்கிறது[5]. ஆனால், எழுதுபவரோ, எழுதும் ஆசிரியர் மற்றும் வைத்தியரோ அரைத்த மாவை அரைக்கிறாரே தவிர, புதியதாக எதையும் எழுதுவது கிடையாது. ஏதோ பத்து புத்தகங்களைப் படித்து ஒரு புத்தகம் எழுதுவது போலத்தான் எழுதி வருகிறார்கள். அதிலும் அந்த பத்து புத்தகங்களையும் குறிப்பிடுவதில்லை. உள்ள விஷயங்களை, விவரங்களை, செய்திகளைத் தொகுத்துக் கொடுக்கிறார்கள். அவ்வாறு கொடுக்கும் போதும் மூலங்களைக் கொடுப்பதில்லை. சில விலக்குகளும் உள்ளன[6].

சித்தர் பாடல்கள் பதிப்புகள், வெளியீடுகள்: பெரிய ஞானக் கோவை என்று சித்தர் பாடல்கள் பெரிய எழுத்துப் புத்தகங்கள் முறையில் வெளியிடப்பட்டு வந்தன. சித்தர் ஞானக் கோவை என்று மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பித்து வெளியிட்டார். சமீபகாலத்தில் (1980-90களில்) எஸ்.பி. ராமச்சந்திரன்[7] என்பவர் நூற்றுக்கணக்கான சித்தர்நூல்களைப் பதிப்பித்துள்ளார். ஆனால் மற்ற பிரதிகளை ஆய்ந்து, சரிபார்த்து, திருத்தி வெளியிடவில்லை. இருப்பதை அப்படியே வெளியிட்டுள்ளார். பி. இரத்தின நாயக்கர் அண்ட் சன்ஸ்[8], பிரேமா பிரசுரம் போல வெளியிடப்பட்டுள்ளன. வி. பலாரமய்யாவின் புத்தகங்களில் சில கூர்மையான அலசல்கள் உள்ளன[9]. மீ.ப.சோமசுந்தரம்[10] எழுதியுள்ள “சித்தர் இலக்கியம்” ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியாகயுள்ளது. ஆனால், மேலே குறிப்பிட்டுள்ளபடி, எழுதப்பட்டுள்ள புத்தகங்களில் இவற்றைக்கூடக் குறிப்பிடுவது கிடையாது. ஒருவேளை அவர்கள் இவற்றையும் பார்த்திருக்க மாட்டார்கள் அல்லது படித்திருக்க மாட்டார்கள் போலும்.

ஓலைச்சுவடிகள், நகல்கள், பதிப்பிக்கப்படாதவை: கோபன்ஹேகன் (டென்மார்க்), பாரிஸ் (பிரான்ஸ்), பெர்லின் (ஜெர்மனி), டப்லின் (அயர்லாந்து), ரோம் (இத்தாலி), ஆம்ஸ்டெர்டாம் (நெதர்லாந்து), லிஸ்பன் (போர்ச்சுகல்), லண்டன் (இங்கிலாந்து) முதலிய நாடுகளிலுள்ள நூலகங்கள் மற்றும் ஆவணக்காப்பகங்களில் ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடிகள், பழைய நூல்கள் முதலியவையுள்ளன. இவை ஆராய்ச்சியாளர்களுக்கு எட்டப்படாத நிலையில் உள்ளன. அவற்றைப் பார்க்க, படிக்க, நகல் எடுக்க ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் செல்வழிக்க வேண்டியுள்ளது. இதனாலேயே ஆராய்ச்சியாளர்கள் செலவிற்கு பயந்து, இரண்டாம்தர மூலங்களை அதாவது பதிக்கப்பட்ட புத்தகங்களை நாடவேண்டியுள்ளது. இவற்றில்தான் பாரபட்சம், விருப்பு-வெறுப்பு, சித்தாந்தம் முதலிய வேறுப்பாடுகள் வருகின்றன. அவற்றினால் உண்மைகளை மறைத்தல், திரித்து / மாற்றி எழுதுதல், வேண்டியவற்றை மட்டும் எடுத்துக் காட்டுதல் – மற்றவற்றை மறைத்தல், தமது கருத்தேற்றி எழுதுதல் முதலியவை வருகின்றன.

ஐரோப்பியர்கள் ஒலைச்சுவடி புத்தகங்களை எடுத்துச் சென்றது: ஐரோப்பியர்களின் ஆட்சி காலங்களில், தென்னிந்தியாவிலிருந்து லட்சக் கணக்கான ஓலைச்சுவடி புத்தகங்கள், மரப்பட்டை நூல்கள், துணிப் படங்கள், கருவிகள், உபகரணங்கள் முதலியன அவரவர் நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பதிலுக்கு கையினால் காகிதங்களில் எழுதப் பட்ட ஆவணங்கள் வைக்கப்பட்டன. ஆனால், எடுத்துச் செல்லப்பட்ட எல்லாவற்றிற்கும் நகல்கள் அவ்வாறு எழுதிவைக்கப் படவில்லை. மெக்கன்ஸி சேகரிப்பே அதற்கு ஆதாரம். இருப்பினும் ஆற்றில் ஓலைச்சுவடிகளைப் போட்டார்கள், அதனால், தமிழ் நூல்கள் பல அழிந்துவிட்டன என்றும் கூறப்படுகிறது. அந்நியர்கள் அவ்வாறு எடுத்துச் செல்லாமல் இருக்க ஆற்றில் போட்டார்களா, பழைய செல்லரித்த ஓலைகளைப் போட்டார்களா என்று எடுத்துக் காட்டப்படவில்லை. கடந்த 100-200 ஆண்டுகளில் சித்தர்களின் பெயரில் பற்பல போலி நூல்கள் எழுதப் பட்டுப் பதிப்பிக்கப் பட்டுள்ளன. சில குழுமங்கள் ஆவணக் காப்பகங்கள் முதலிய இடங்களினின்றே அத்தகைய போலிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளன. இன்றும் அத்தகைய நூல்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மூலங்கள், மூலப்பிரதிகள், பிரதிகளின் நிலை: சித்தர் பாடல்களின் அச்சிட்டப் புத்தகங்களைப் பார்த்துவிட்டு, அவற்றின் மூலப்பிரதிகள் எங்குள்ளன என்று கீழைத்திசை நூலகம், தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகம், உ. வே. சுவாமிநாத ஐயர் நூலகம், கன்னிமாரா நூலகம் முதலிவற்றில் சென்று பார்த்தால், பெரும்பாலானவை காகிதத்தில் எழுதப்பட்டுள்ளவையாகவே உள்ளன[11]. ஓலைச்சுவடியில் எழுதப்பட்டுள்ளவைகளும் சமீபத்தில் எழுதப்பட்டுள்ளவை என்று, எழுதியுள்ள முறை, உபயோகப்படுத்தப் பட்டுள்ள ஓலை, எழுதுகோலின் கூர்தன்மை முதலியவற்றிலிருந்து தெரிகிறது[12]. இடைக்கால ஓலைச்சுவடிகளில் உள்ள தமிழைப் படிப்பது கடினம், வரிகள் இடைவெளி இல்லாமல் எழுதப்பட்டிருக்கும். வார்த்தைகளைப் பிரித்துப் படித்தப் பின்னரே, செய்யுளின் அடிகள், கிரமம் முதலியவற்றைப் புரிந்து கொள்ளமுடியும்[13]. ஆனால், இவற்றில் சுலபமாக, புத்தகத்தைப் பார்த்துப் படித்தபைப் போல படித்தறிய முடிகிறது. அதாவது, இப்பொழுதிலிருந்து (2012), கணக்கிட்டால் சுமார் 100-150 ஆண்டு காலத்தில் – 1850-1910 காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஸ்வாசகாச சிகிச்சை, வாதரோக சிகிச்சை, கர்ப்பிணி பாலரோகம், மாடுகள்-குதிரைகள்-லட்சணம் வைத்தியம், சித்த மருத்துவச் சுடர், கர்ப்பிணி ரக்ஸா, முதலிய நூல்களை தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகம் வெளியிட்டுள்ளது. ஆனால், இவற்றைப் படித்துப் பார்க்கும் போது, இந்த “சித்தர்” பாடல்களுக்கும், இந்நூல்களுக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. அக்காலத்தில் கிடைத்துள்ள விவரங்களை பாட்டுபோல் எழுதிவைத்துள்ளனர் என்று தெரிகிறது.

புரட்டு-போலி-மோசடி “சித்தர் பாடல்கள்” என்று உலவி வருவதைத் தடுப்பதெப்படி?:  பி. வே. நமச்சிவாய முதலியார், தமது தமிழ்மொழி அகராதியில் குறிப்பிட்டுள்ளது[14], “இவர்கள் செய்த நூல்கள் பெரும்பாலும் இறந்தன. இவர்களால் செய்யப்பட்ட நூல்களென்று சொல்லப்பட்டு இக்காலத்து வழங்குவன யாவரோ சாமானியர் பாடிய புரட்டு நூல்களேயாம்”. இதற்கு பொ. பாண்டித்துரைத்தேவர், பூவை. கலியாணசுந்தரமுதலியார், முதலியோர் சிறப்பித்து அணிந்துரை பாடல்களுடன் வெளியிடப்பட்டுள்ளது[15]. அதாவது 1911 காலத்திலேயே, தமிழ் பண்டிதர்கள் அவற்றை “யாவரோ சாமானியர் பாடிய புரட்டு நூல்களேயாம்” என்று தீர்மானித்து ஒதுக்கியுள்ளனர். ஆனால், அவற்றை உண்மை நூல்கள் போன்று, திரிபு விளக்கங்கள் கொடுத்து “சித்தர் பாடல்கள்” என்று இன்றளவும் பலர் வெளியிட்டு வருகிறார்கள். அவர்கள் உண்மையறிந்து செய்கிறார்களா அல்லது வியாபாரத்திற்காகச் செய்கிறார்களா என்று தெரியவில்லை. உண்மையிலேயே, சித்தர் இலக்கியம், சித்தர் பாரம்பரியம், சித்த மருத்துவம் முதலியை காக்கப் படவேண்டுமானால், இத்தகைய புரட்டு நூல்கள் வெளியிடப்படுவதை தடை செய்ய வேண்டும். அத்தகையோர் உண்மையறிந்து, தம்மைத் திருத்திக் கொள்ளவேண்டும். இல்லையெனில் “சித்தர்” என்று அடைமொழியை உபயோகித்துக் கொண்டு அத்தகைய போலி-புரட்டு பேச்சு, எழுத்து, ஆராய்ச்சி செய்பவர்களையும் மற்றவர்கள் அடையாளங்கண்டு கொள்ள வேண்டும்.

© வேதபிரகாஷ்


[1] சித்தர் ஆரூடம், சித்தர் ஜோதிடம், சித்தர் நெறி, சித்தர் தத்துவம், சித்த மருத்துவ பச்சிலைகள், சித்தர் பரிபாஷை, சித்தர் கையேடு…..என்று “சித்தர்” மற்ரும் “சித்த மருத்துவ” அடைமொழிகளோடு உருவாக்கபட்ட சொற்றொடர்கள் தலைப்புகளாக் கொண்ட ஆயிரக்கணக்கான புத்தகங்கள் கடந்த 70 ஆண்டு காலத்தில் தோன்றியுள்ளன.

[2] பல இணைதளங்கள் சித்தர்களைப் பற்றி, சித்தர்மருத்துவத்தைப் பற்றி இணைதளங்களில் அதிகமாகவே விவரங்களைத் தொகுத்துக் கொடுத்துள்ளார்கள். ஆனால் வழக்கம் போல மூலங்களைக் கொடுக்காமல், மற்றவர்களின் எழுத்துகளை, கருத்துகளை, தமது போல வெளியிட்டு வருகிறார்கள்.

[3] Weiss, Richard S, Recipes for Immortality – Medicine, Religion and Community in South India, , Oxford University Press, USA, 2008, pp.3-4.

[4] படிப்பவர்களுக்கு எல்லாம் தெரியும் என்பதனால், அவ்வாறு எழுதுகிறார்களா அல்லது மூலங்களைக் கொடுத்தால், தமது கையாண்ட முறை தெரிந்துவிடும் என்று தயங்குகிறார்களா அல்லது அவை இல்லவேயில்லையா என்ற சந்தேகங்களும் எழவேண்டிய நிலையுள்ளதால், மூலங்களைக் கொடுப்பது நல்லது.

[5] நூற்றுக்கணக்கான பதிப்பகங்கள் அவ்வாறு நூற்களை வெளியிட்டுள்ளதால் அவற்றைக் குறிப்பாக பெயர் சொல்லி எடுத்துக் காட்டவில்லை.

[6] சீ. கல்யாணராமன், பா. கமலக்கண்ணன் எழுதியுள்ள புத்தகங்களில் குறிப்பாக முக்கிய விஷயங்களை ஆதாரத்துடன் தந்துள்ளார்கள். வானதி பதிப்பகம் (17, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை – 600 017) பின்னவருடைய நூல்களை வெளியிட்டுள்ளது. கல்யாணராமன் தானே வெளியிட்டுள்ளார் – 1, 35வது தெரு, நங்கநல்லூர் காலனி, சென்னை – 600 061.

[7] தாமரை நூலகம், 7, என்.ஜி.ஓ.காலனி, வடபழனி, சென்னை – 600 026.

[8] பி. இரத்தின நாயக்கர் அண்ட் சன்ஸ், 25, வெங்கட்ராமர் தெரு, கொண்டித்தோப்பு, சென்னை – 600 079.

[9] அருள் ஜோதி பதிப்பகம், 10, ஜட்ஜ் பங்களா, சஞ்சீவி நகர், அரும்பபக்கம், சென்னை – 600 106.

[10] மீ.ப.சோமசுந்தரம், சித்தர்இலக்கியம்(இரண்டு பகுதிகள்), அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம், 1988.

[11] மெக்கன்சி ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடி புத்தகங்களை எடுத்துச் சென்றான். பிறகு மூன்றில் ஒருபங்குதான் திரும்பக் கொடுக்கப்பட்டது. அவற்றிலும் பல பிரதிகளே. ஆங்கிலேயர் காலட்திலேயே, காகிதத்தில் பிரதியெடுக்கும் வேலை ஆரம்பித்தது.

[12] சாதாரணமாக, முறையாக பதப்படுத்தி, முறையான எழுதுகோல் மூலம், எழுதும் திறமையுடையவர்களால் எழுதப்பட்டுள்ள ஓலைச்சுவடிகள் ஆயிரம் ஆண்டு காலம் வரை இருக்கும். ஆனால், புதிய ஓலைச்சுவடிகளில், சமீபத்தில் எழுதியிருந்தால், அதனைத் தொடும்போது, நுகரும்போது காட்டிக் கொடுத்துவிடும். இப்பொழுது பதப்படுத்த ரசாயனப் பொருட்களை உபயோகப்படுத்துகிறார்கள்.

[13] இவையெல்லாம் முறையான அத்தகைய வாசிப்பு அனுபவம் உள்ளவர்கள் மற்றும் தமிழ் பண்டிதர்கள் முதலியோர்களால் தான் முடியும். எல்லோரும், தமிழ் படிக்கத்தெரிந்தவர்கள் எல்லோரும், படித்து அர்த்தமும் தெரிந்து கொள்ளலாம் எனும்போது, அதன் ககலத்தைக் கட்டிக் கொடுத்துவிடுகிறது.

[14] P. V. Namasivaya Mudaliar, The Coronation Tamil Dictionary – A guide indispensable to Tamil Professors and scholars, Madras, 1911, p.626.

[15] இத்தமிழ் அகராதி நா. கதிரைவேற்பிள்ளை அவர்களால் தொகுக்கப்பட்டு நமச்சிவாய முதலியார் அவர்களால் 1911ல் ஆங்கில அரசன் “இந்திய சக்கவர்த்தியாக” முடிசூட்டிக் கொண்டதன் நினைவாக வெளியிடப்பட்டது. பிறகு ஏசியன் எடுகேஷனல் சர்வீசஸ் என்ற பதிப்பகம், அதனை நா. கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதி என்று வெளியிட்டு வருகிறது.

N. Kathiraiver Pillai’s Tamil Moli Akarathi, Asian Educational Srvices, New Delhi, 1992.

Posted in அக்னி, அண்டம், அறிவு ஜீவி, ஆகாயம், ஆத்மா, ஆனந்தம், ஆன்மா, ஆயுர்வேதம், ஆயுள், ஆரியன், ஆரியம், இதயம், இந்திரியம், உ. வே. சுவாமிநாத ஐயர் நூலகம், உடல், உயிர், ஓலை, ஓலைச்சுவடி, கண், கந்தகம், கனிமம், கன்னிமாரா நூலகம், கருத்து, கரைசல், கற்பம், கலாச்சாரம், கல்பம், காது, காமாக்கியா, காயம், காற்று, கால், கீழைத்திசை நூலகம், கை, கைராச்சிக்காரர், சக்தி, சத், சிதம்பரம், சிதர், சிதார், சித், சித்தம், சித்தர், சித்தர் பாடல்கள், சித்து, சிந்தனை, சுவடி, சூபி, செவி, சோர்வு, தங்கம், தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகம், தந்திரம், தமிழகம், தமிழ், தமிழ்நாடு, திரவிடம், திராவிடன், திராவிடம், திருமூலர், தேவி, நகல், நரம்பு, நாகரிகம், நாடி, நாட்டு மருத்துவம், நாதசித்த மரபு, நாத்திகம், நினைவு, நிம்மதி, நிலம், நீர், நுண்ணிய அறிவு, நெருப்பு, பகுத்தறிவு, பஞ்சபூதங்கள், பதஞ்சலி, பதினென் சித்தர்கள், பரம்பரை, பரம்பரை வைத்தியர், பாதம், பாதரசம், பாரம்பரியம், பிண்டம், பிரதி, பீர், புத்தகம், பூதங்கள், பூர்ணலிங்கம் பிள்ளை, பெரிய ஞானக் கோவை, மந்திரம், மனச்சிதைவு, மனப்பாங்கு, மனம், மபப்பாங்கு, மருந்து, மறைமலை அடிகள், முஹம்மது கஜினி, முஹம்மது பக்தியார் கில்ஜி, மூக்கு, மூச்சு, மூலம், மூளை, யோகா, யோசனை, வேதாசலம், வைத்தியர் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 Comments »