சித்தர்களின் மூலம், பாரம்பரியம், இன்றைய நிலை

வரலாற்று நோக்கில் சித்தர்கள் ஆராய்ச்சி

Archive for the ‘திகம்பர’ Category

1450 BCEயிலிருந்து முகமதுநபி (570-632 CE) காலம்வரை அரேபியாவில் வாழ்ந்தவர்கள் யார்?

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 23, 2012

1450 BCEயிலிருந்து முகமதுநபி (570-632 CE) காலம்வரை அரேபியாவில் வாழ்ந்தவர்கள் யார்?

 

இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக இஸ்லாமிற்கு-முகமது நபிக்கு முன்னர் அரேபியாவில் வாழ்ந்தவர்கள் யார் என்ற கேள்வி எழுகின்றது. அக்காலத்தில் சுற்றிலும் இருந்த நாகரிகத்தவர் சிறந்திருந்ததால், அரேபிய மக்களும் சிறப்பான நாகரிகத்தைக் கொண்டிருக்க வேண்டும். அவர்களில் முனிவர், அறிஞர், சித்தர், ஞானியர் போன்றோர் இருந்திருக்கவேண்டும். மக்கள் ஆரோக்யம், உடல்நலம் விஷயங்களிலும் சிறந்திருக்க வேண்டும். அதற்கான மருத்துவமுறையும்  இருந்திருக்க வேண்டும்.  அப்படியிருக்கையில், இஸ்லாமிற்கு-முகமது நபிக்கு முன்பான அரேபிய சரித்திரம் இருட்டடிக்கப் பட்டுள்ளது. அம்மக்கள் இருண்ட காலத்தில், அறியாமையில், விக்கிர ஆராதனை போன்ற பாவச்செயல்களில் ஈடுபட்டிருந்தனர் என்றும் விவரிக்கப்படுகிறது. ஆனால், அவர்களின் மொழியான அரேபியமொழி இன்றைய முஸ்லீம்களுக்கு தேவமொழியாக இருக்கிறது. நபி பேசிய மற்றும் குரான் மொழி அரேபிய மொழிதான். பிறகு அத்தகைய தேவமொழியைப் பேசி வந்தவர்கள் எப்படி இருண்ட காலத்தில், அறியாமையில் மூழ்கியிருந்தார்கள் என்று தெரியவில்லை.

அரேபியாஎன்பதுஎன்ன?: ஜைனர்கள் பாரத்தத்தின் வடமேற்குப் பகுதி வழியாக வெளியே சென்றனர், கிரேக்கர் உள்ளே வந்தனர் எனும்போது, அரேபியாவிற்கும் அவ்வாறுதான் சென்றிருப்பர். முதலில் அரேபியா மற்றும் அரேபியர் என்பன என்னவென்று புரிந்து கொள்ளவேண்டும்[1], ஏனெனில் இஸ்லாமிற்கு – நபிக்கு (570-632 CE) முன்பான அரேபியர்களைப் பற்றிய முழு விவரங்களை சரித்திர ஆசிரியர்கள் முழுமையாகக் கொடுப்பதில்லை. அவற்றை நூறு-இருநூறு ஆண்டுகள் பழமையான புத்தகங்களினின்று பெறவேண்டியுள்ளது. ஜெஸிரத்-அல்-அரப் (Jezirat-al-arab) என்பவர்கள் அரேபியாவில் இருந்தவர்கள் என்றும், அவர்கள் இருந்த இடம் அரபிஸ்தான் (Arabistan) என்றும் பாரசீகர்கள் மற்றும் துருக்கியர்கள் குறிப்பிட்டு வந்தார்கள்[2]. “ஜெஸிரத்அல்அரப்” என்றால் “அரேபியரது தீவு” என்று பொருள். அதாவது முன்னர் அரேபியா தீவாக இருந்ததா அல்லது அரேபியர் மற்ற மக்களிடமிருந்து தனித்து இருந்தார்களா என்று தெரியவில்லை. பாரசீகர்கள் ஒரு “சத்ரப்பை”த் தொடங்கி அதற்கு “அராபியா” என்று பெயரிட்டனர்[3]. பாரசீக “சத்ரபி” என்ற சொல் “க்ஷத்ரபாவ” என்ற சமஸ்கிருத சொல்லினின்று உருவானது, க்ஷத்திரியர்கள் வாழும் / ஆட்சிசெய்யும் இடம் என்று பொருள். “அரேபியா” என்றால் சதுரமான இடம் என்று பொருள். அரேபிய மொழியில் “மக்பி” என்றால் கனச்சதுரம் மற்றும் “காபா” என்பது முஸ்லீம்கள் வழிபடும் இடமாகும். “அரப்” என்றால் “பதவியா / பெதுவியா” என்ற நாடோடிக் கூட்டத்தையும் குறிக்கும். யூதமொழியில் “இரப்” என்றல் பாலைவனம், அதாவது செமித்திய மொழியிலும் பாலைவனம் மற்றும் அங்குவாழும் மக்களைக் குறிக்கிறது ஆனால் எந்த மக்களினத்தையோ, நாட்டையோக் குறிக்கவில்லை[4].

அரேபியர்கள்எவ்வாறுஅடையாளங்காணப்பட்டனர்?: அரேபிய அகராதிகளில் அரபி (ஆண்பால் ஒருமை. அரபியா (பெண்பால் ஒருமை) மற்றும் அரப் (பலவின்பால்) என்று அரேபிய மக்களைக் குறிக்கின்றன:

  1. ஒருவனுடைய மொழி அல்லது பேச்சு அரேபிக் மொழியானது அல்லது தூய்மையான அரேபியமொழியானது.
  2. அஜீரணமாகி, வயற்று உபாதையினால் அவஸ்தைப் படுபவன்.
  3. யாரொருவன் குழம்பி அல்லது சிதைந்து போயுள்ளானோ அவன்.
  4. யாரொருவன் அரேபியர்களுடன் கலந்து ஐக்கியமாகியுள்ளானோ அவன்.

பிறகு “அரப்” என்பது “அஜப்” என்ற வார்த்தையோடு ஒப்பிடும்போது, “அரப்” என்பது “தெளிவாகப் பேசுவது” ஆனால் “அஜப்” என்றால் தெளிவில்லாமல் பேசுவது அல்லது மற்றவர்களுக்குப் புரியாதமாதிரி பேசுவது என்று பொருள் கொள்ளப்படுகிறது. உண்மையில் பாரசீகர் அரேபியரை குறைவாக மதிப்பிட்டபோது, பதிலுக்கு அரேபியர் பாரசீகர்களை “அஜப்” என்று கூறிக் கிண்டலடித்தனர். சமஸ்கிருதத்தில் “ரப்” என்பது “சத்தம், கூச்சல், இரைச்சல்” என்று பொருள். “ரவ்” என்பது “ரப்” என்றும் உச்சரிக்கப்படும், அல்+ரவ் அல்லது அல்+ரப் =அரவ் / அரப் என்றானது. அதனால்தான் சத்தம்போடுபவனை, கூச்சலிடுபவனை “அரவவாடு” என்று தெலுங்கர் அழைக்கின்றனர். மேலும் இப்பகுதியில் குதிரைகள் உள்ளன அல்லது குதிரைகள் வரவழைக்கப்படுகின்றன என்பதால் “அரவஸ்தான்” என்று அழைக்கப்பட்டது[5]. அரபிஸ்தான்-அரவஸ்தான்-அரவத்தான்-ராவுத்தன் என்று தமிழில் பெறப்படுகிறது. மாவுத்தன் யானைப்பாகன் என்றால் ராவுத்தன் குதிரையோட்டியாகிறான்[6]. அதாவது குதிரைகளை வாங்குபவன், விற்பவன், வளர்ப்பவன், பழக்குபவன் என்றுள்ளது.

அரேபியர்கள் யார்?: இதைத்தவிர, அரேபியாவில் வாழ்ந்த எல்லோரும் அரேபியர் என்றழைக்கப்பாட்டாலும், அரேபிய எழுத்தாளர்கள், அவர்களைப் பிரித்துக் காட்ட, கீழ்கண்டவாறு அழைத்தனர்:

  1. அல்அரப்அல்பைதா = காணாமல் போன அரேபியர், மறைந்து போன அல்லது சரித்திரகாலத்திற்கு முந்தைய அரேபியர், முதல் அல்லது உண்மையான அரேபியர்.
  2. அல்அரப்அல்அரிபா = உண்மையான அரேபியர் அதாவது தென்னரேபியாவில் வாழும் அரேபியர் அல்லது கஹ்தான் வழிவந்தவர்கள் (ஜோக்தான் என்று பைபிளில் சொல்லப்படுகிறது).
  3. அல்அரப்அல்மூதா‘அர்ரிபா = அரேபியர்களுடன் ஐக்கியமானவர்கள், அல்-முஸ்தா ‘ரிபா = அரேபியர்களை நாடுபவர்கள், அரேபியமயமாக்கப்பட்டவர்கள். மோஸ்தராபியர் அல்லது இஸ்மாயில் வழிவந்தவர்கள்.

ஆகவே அரேபியாவில் இருப்பவர்கள் எல்லோருமே “அரேபியர்” அல்லர். அதேபோல இஸ்லாம் தோன்றி வளர்ந்தபிறகு, அரேபியாவில் இருந்தவர்கள் முஸ்லீம்களாக மாறியப் பிறகுக் கூட அரேபியர் எல்லோருமே “முகமதியர்”, “முசல்மான்கள்”, “முஸ்லீம்கள்” ஆகிவிடவில்லை. இந்திய கல்வெட்டுகளில் “துருக்கர், துலுக்கர், துருக்ஸாஸ்” எனப்படுபவர் எல்லோரும் முகமதியரா அல்லது துருக்கியிலிருந்து வந்தவரா என்றும் ஆராயவேண்டியுள்ளது. இஸ்லாம் தோன்றுவதற்கு முந்தைய இருந்த அரேபியர் மற்றும் இஸ்லாம் தோன்றிய பின்னர் அரேபியர் அனைவரையும் “முகமதியர்” என்றோ “இஸ்லாமியர் / முஸ்லீம்கள்” என்றோ எழுதிவைப்பது பிற்கால முஸ்லீம் எழுத்தாளர்களுக்கு வழக்கமாகியது[7].

அரேபியர்கள் இந்தியர்கள் செய்வதை தலைகீழாக செய்பவர்களா?: வேதமதத்தினர்-இந்துக்கள் செய்வதை தலைக்கீழாக செய்பவர்கள் ஜைனர்கள்-பௌத்தர்கள்-முகமதியர்கள் என்ற வழக்கும் உள்ளது. முதலில் ஜைனர்கள்-பௌத்தர்கள் அவ்வாறு செய்தாலும், பிறகு, பொதுவான இந்திய கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் மற்றும் நாகரிக காரணிகளால் சேர்ந்தே வாழ்ந்தார்கள். ஆனால், முகமதியர் ஆரம்பத்திலிருந்தே, வேறுபட்டு தலைகீழாக செய்து வந்ததால் அவர்களை “அரவநாட்டவர்” என்றே அழைத்தனர். தெலுங்குக்காரர்களை “கொலுடி” என்று தமிழர்கள் கலாட்டா செய்வது வழக்கம். அதாவது தெலுகு என்பதனை திருப்பிப் போட்டு குலுதி-குலுடி-கொலுடி என்று கிண்டல் செய்தனர். இதனால், தெலுங்கர் தமிழர்களை “அரவர் / அரவவாடு” என்று சொல்வதுண்டு. அதவாது துலுக்கர்களைப் போல தலைகீழாகச் செய்பவர்கள் என்ற பொருட்பட கூறினர். இந்துக்கள் அழுதால், துலுக்கர் சிரிப்பர்; இந்துக்கள் சிரித்தால், துலுக்கர் அழுவர்; குழந்தை பிறந்தால் அழுவர், யாராவது இறந்தால் சிரிப்பர் என்றெல்லாம் சொல்வதுண்டு. மேலே பாரசீகர்-அரேபியர் ஒருவரையொருவர் எவ்வாறுக் கூறிக் கொள்வர் என்று எடுத்துக் காட்டப்பட்டது. அதுபோல, ஆயிரக்கணக்கான வருடங்களாக அரேபியாவில் இருந்து வரும் பழக்க-வழக்கங்களை முழுவதுமாக மாற்ற முடியாது என்பதனால், அவற்றை மாற்றியமைத்திருக்கலாம்.

சதுரமானகனச்சதுரமானஇடம்“சதுரகிரியா”அல்லதுகாபாவா?: காபாவைப் பொறுத்தவரையிலும், நிச்சயமாக அது முகமதியர்-முஸல்மான்-முஸ்லீம்களின் வழிபாட்டு ஸ்தலமல்ல. “காபத்துல்லா” என்றழைக்கப்பட்ட “இறைவன் உறையும் இடத்தில்” – வளகத்தில் நடுவில் ஒரு விக்கிரகம் இருந்தது, அதனைச் சுற்றி 360 விக்கிரங்கள் இருந்தன. அவை சதுரமாக அல்லது வட்டவடிவில் வைக்கப்பட்டிருந்தனவா என்று தெரியவில்லை. ஏனெனில், சித்திரங்கள் இருவிதமாகவும் சித்தரித்துக் காட்டுகின்றன. எப்படியாகிலும் வட்டத்தை-சதுரமாக, சதுரத்தை-வட்டமாக்கும் வித்தைகளை இந்தியர்கள் தாம் அறிந்திருந்ததால், குறிப்பாக மந்திர-தந்திர-யந்திர வித்தைகளில் ஈடுபட்டிருந்ததால், அவ்வளாகம் அவ்விதமாக அமைக்கப்பட்டிருந்தது என்றறியலாம். 64-யோகினி-ஜோகினி கோவில்கள், வளாகங்கள் அவ்விதமாகவே அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதனை இந்தியாவில் காணப்படும் உதாரணங்களினின்று அறிந்து கொள்ளலாம்.  காபாவின் தரைப்படம் மற்றும் இந்த யோகினி கோவில்களின் தரைப்படங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மையினைப் பார்த்தேத் தெரிந்து கொள்ளலாம். இதனால் தான், முகமதியர் இந்தியாவில் நுழைந்தபோது, நபி அழித்தவையெல்லாம் இங்குள்ளனவே என்று அவரைப் போலவே செய்யவேண்டும் என்றுதான், முகமத் கஜினி, முகமது கோரி முதலியோர் செய்தனர். அதாவது அத்தகைய கோவில்களை அழித்தனர், விக்கிரங்கள உடைத்தனர், புத்தகங்களை எரித்தனர். ஒரிஸ்ஸாவில் உள்ள 64-ஜோகினி கோவில் ஓரளவிற்கு புனர்நிர்மாணம் செய்யப்பட்டிருக்கும் போது, மத்தியப்பிரதேசத்தில் உள்ள 64-ஜோகினி கோவில் எந்த அளவிற்கு சேதப்படுத்தப் பட்டுள்ளது என்பதனை அச்சிற்பங்களை வைத்தே கண்ட் உ கொள்ளலாம். சோமனாதபுரம் அல்-லத் என்ற விக்கிரமாக இருக்கும் என்றுதான் 17 முறை வந்து விக்கிரகத்தை-சிவலிங்கத்தை உடைத்தழித்துச் சென்றான்.

நபிகள் விட்டு வைத்ததை நபிகளின் வழிவந்தவர்கள் சிதைத்தது ஏன்?: நடுவில் ஒரு சதுரம், அதில் பிரதான தேவதை-பெண் கடவுள், சுற்றி வட்டத்தில் 64 தேவதைகளின் விக்கிரங்கள், சிற்பங்கள் இருக்கும். இவையெல்லாமே வெவ்வேறான பெயர்களில் குறிப்பிடப்படும் சக்திகள் தாம். அதேபோல, காபாவில் 360 விக்கிரங்கள் இருந்ததை முகமதியர்களே ஒப்புக் கொண்டுள்ளனர். அல்-அஜர்கி என்பவர் மற்றப;அ விக்கிரங்கள், ஓவியங்கள் காபாவில் இருந்ததாகக் கூறியுள்ளார்[8]. அவற்றை நபி அழித்தாலும், நடுவில் இருந்ததை அங்குள்ள மக்களின் வேண்டுகோளின் மீது விட்டு வைத்தார். ஆனால், பின்வந்தவர்கள் அதனையும் விட்டு வைக்காமல் உடைத்ததாலும், ஏரித்ததாலும் அவ்விக்கிரகம் சிதைந்து உருமாறிவிட்டது. 930ல் மெக்காவிலிருந்து தூக்கிச் செல்லப் பட்ட அக்கல் அல்லது கற்பாகங்கள் 931ல் திரும்ப கொண்டு வந்து வைக்கப்பட்டது[9]. அதாவது அவர்கள் நபியைப் போலவே தாங்களும் அத்தகைய வேலையை செய்யவேண்டும் என்ற போக்கில், இருப்பதையும் அழிக்கத்துணிந்தனர், அவ்வாறே சிதைக்கவும் செய்தனர். அதனால்தான், அவ்விக்கிரகம்-அக்கல் வெள்ளை நிறத்தில் இருந்தது, கருப்பு நிறத்தில் இருந்தது, ஒன்றாக இருந்தது, மூன்று துண்டுகளாக இருந்தன, என்று பலவாறாக சித்திரங்களில் காணப்படுகின்றன. அதே போல அபிரஹாம் மற்றும் அவரது மகன் சிற்பங்கள் இருந்தன, ஆனால் அவற்றையும் உடைத்தார் அல்லது அபிரஹாம் விக்கிரத்தை மட்டும் விட்டு வைத்தார் என்று பலவாறுக் கூறப்படுகின்றன[10]. எது எப்படியாகிலும் இருந்த விக்கிரகங்கள் அழிக்கப்பட்டதால், சரித்திர ஆதாரங்கள் மறைந்து விட்டன என்றாகிறது.

© வேதபிரகாஷ்

22-09-2012


[1] அரேபியா-அரேபியர் பற்றிய விவரங்கள் கீழ்கண்ட கட்டுரையிலிருந்து பெறப்பட்டது:

K. V. Ramakrishna Rao, The Presence of Arabs in South India before and after the advent of Islam, a paper presented  at the sixth session of Tamilnadu History Congress held at Islamiah College, Vaniyambadi, from October 23 to 24, 1999. இக்கட்டுரை முன்பாகவே குரியர் மற்றும் மின்னஞ்சலில் அனுப்பட்டும், அதற்கான ஆதாரங்கள் இருந்தும், ஜனாப் சஹாப்புத்தீன் என்பவர் “ஆய்வுக் கட்டுரை பட்டியலில்” கூட இடம் பெறாமல் மறைக்கப் பார்த்தார். இருப்பினும், திரு. ராஜு தலைமையில் நடந்த அமைவில் திரு கோ. வே. இராமகிருட்டிண ராவ் படித்துள்ளளர்.

[2] Henri Stierlin, Great Civilizations: The Cultural History of the Arabs, Italy, 1981, p.10.

[3] M. TH. Houtsma, T.W.Arnold and Harmann (Eds.), E. J. Brill’s First Encyclopedi of Islam 1913-1936, Netherlands, 1987, Vol.I, p.367.

[4] Pihilp K. Hitti, History of Arabs, Macmillan, 1985, Hongkong, p.41.

[5] Col. Wilford, Asiatik Researches, Vol.III, p.326.

[6] இடைக்காலத்தில் அருணகிரிநாதர், முருகனை, “குதிரையேறும் ரரவுத்தனே” என்று விளித்துப் பாடியுள்ளார்.

[7] K. V. Ramakrishna Rao, The Presence of Arabs in South India before and after the advent of Islam, opt.cit.

S. M. Kamal, Muslimkalum, Tamizhagamum, Islamiya Ayvu Panpattu Maiyyam, Madras, 1990, p.22.

இவர் தமிழகத்தில் மூன்றாம் நூற்றாண்டிலேயே முஸ்லீம்கள் இருந்தார்கள் என்று எழுதுகியுள்ளார்!

[8] Oleg Graber, The Formation of Islamic art, Yale University, USA, 1973, pp.60-61. He gives the details about other objects, jewels etc., kept at Kaba till Mohammed destroyed them.

[9] Gerald de Gaury, Rulers of Meca, Roy Publishers New York, 1949, pp.109-110.

[10] De Lacy O’Leary, Arabia before Muhammed, Kegan Pauk, Lonon, 1927.

Posted in அப்ரோடைட், அரேபியா, அல்-அரப்-அல்-அரிபா, அல்-அரப்-அல்-பைதா, அல்-அரப்அல்-மூதா‘அர்ரிபா, ஆதிநாத, ஆத்மா, ஆனந்தம், ஆன்மா, ஆயுர்வேதம், ஆயுள், ஆயுள்வேதம், ஆரியன், ஆரியம், உஸ்பெகிஸ்தான், எபிகுயூரியன், ஓடந்தபூர், ஓலை, கத்தி, கம்பளி, காபாலிக, காபாலிகம், கிர்கிஸ்தான், சடங்குகள், சிகிச்சை, சிதர், சிதார், சித், சித்தகுரு, சித்தஜலம், சித்தஞானம், சித்தபுரி, சித்தம், சித்தயோகம், சித்தர், சித்தார்த், சித்து, சிந்து, சிந்து சமவெளி நாகரிகம், சீனா, சூபி, தஜிகிஸ்தான், தத்துவஞானிகள், தந்திரம், திகம்பர, திகம்பரம், திகம்பரர், திபெத், துர்க்மேனிஸ்தான், துறவி, நிர்வாணம், பாதரசம், பிண்டம், பித், யோகா | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

இஸ்லாமிற்கு–நபிக்கு (570-632 CE) முன்புஅரேபியாவில்இருந்தவர்கள் (சித்தர்களைத்தேடி)

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 23, 2012

இஸ்லாமிற்குநபிக்கு (570-632 CE) முன்புஅரேபியாவில்இருந்தவர்கள் (சித்தர்களைத்தேடி)

இந்தியசரித்திரத்தைப்புரட்டிஅல்லதுதவறாகஎழுதிமற்றநாட்டுசரித்திரங்களைஅறிந்துகொள்ளமுடியாது: கிரேக்கர்களுக்கு முன்பு (c.1800 – 327 BCE) – பின்பு (326 – 100 BCE) எப்படி இந்திய சரித்திரம், மேனாட்டவர்களால் புரட்டப்பட்டதோ, அதாவது இந்திய சரித்திர உண்மைகளைத் திரித்து மேனாட்டவர்கள் தங்களுக்கு சாதகமாக சரித்திரத்தை எழுதிகொண்டார்களோ, அதேபோல, அரேபியர்களுக்கு முன்பு (100- 712 CE) -பின்பு (712 – 1707 CE) என்றும் இந்திய சரித்திரம் புரட்டப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது[1]. முஹமது நபிக்கு (570-632 CE) முன்பிருந்த அரேபிய சரித்திரத்தை மறைத்து உண்மைகளை அறியமுடியாது. இந்தியாவிற்கும், அரேபியாவிற்கு அல்லது அரபிஸ்தானத்திற்கும் உள்ள தொடர்பை அறிந்தால் தான் ஆன்மீகரீதியில், மருத்துவரீதியில், விஞ்ஞானரீதியில் உண்மைகளை அறியமுடியும். அரேபியாவில் இருந்த சித்தர்களை அறியவேண்டுமானால், இஸ்லாம் பிறப்பதற்கு முந்தியுள்ள – இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செல்ல வேண்டியிருக்கிறது.

கிரேக்கமருத்துவர்களால்அலெக்சாந்தரைஏன்காப்பாற்றமுடியவில்லை?: இந்தியாவின் சரித்திரமே 327-326 BCEலிருந்துதான் ஆரம்பிக்கிறது, அதுதான் இந்திய சரித்திரத்தின் உறுதியான, தீர்மானிக்கப்பட்ட ஆரம்பகாலம் என்றனர்[2]. ஆனால் 327-326 BCE என்பது அலெக்சாந்தர் பாரதத்தின்மீது படையெடுத்துத் தோற்று, கிரேக்கத்திற்கு திரும்பச் செல்லாமலே வழியிலேயே 323 BCEல் பாபிலோனியாவில் இறந்து போன காலத்தைக் குறிக்கிறது[3]. அதாவது ஈட்டிக் குத்தி காயப்பட்டு, ரத்தப்பெருக்கு ஏற்பட்ட அலெக்சாந்தரை, தலைசிறந்த கிரேக்க மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவன் 10 நிர்வாண சாமியார்களைப் பிடித்தபோது, ஒரு சாமியார் பூமியின்மீது தனது காலை உதைத்து சைகை செய்தபோது, அவர் என்ன செய்கிறார் என்று கேட்டபோது, அவனது கிரேக்க அறிவுரையாளர்கள்[4], “நீங்கள் மண்ணோடு மண்ணாகி விடுவாய்”, என்று உருவகமாகக் கூறுவதாக விளக்கம் அளித்தபோது, கோபம் கொண்டு அவர்களைக் கொன்றுவிடுவதாக கிரேக்கக் கதைகள் கூறுகின்றன[5]. அதாவது இந்தியத் துறவிகளை அந்த அளவிற்குத் துன்புறுத்தியுள்ளான். ஞானத்தை அறியவேண்டுமானால், ஞானிகளிடம் பணிவாக இருந்து கற்றுக் கொள்ளவேண்டும். அதிகாரத்தினால், ஆணவத்தினால், பனத்தினால் ஞானத்தைப் பெறமுடியாது. அவற்றால் வசதிகளைப் பெருக்கிக் கொள்ளலாம். ஆனால், சீக்கிரமாகவே அத்தகைய வசதிகள் அழிவிற்கு எடுத்துச் செல்கின்றன.

சுமார் 1450 BCEயில்அரேபியாவிற்குவடமேற்கில்வேதமதம்இருந்தது: சித்தர்களைத் தேடும் முயற்சியில், கிரேக்கத்திற்குப் பிறகு அரேபியாவிலும் தேடவேண்டியுள்ளது. கிரேக்கத்திற்கும் இந்தியாவிற்கும் தரைவழியாக போக்குவரத்து துருக்கி, மெசபடோமியா (இராக்), பாரசீகம் (இரான்), காந்தாரம் (ஆப்கானிஸ்தான்), சிந்து (பலுச்சிஸ்தான், பாகிஸ்தான்) முதலிய நாடுகளின் வழியாக இருந்து வந்தது. துருக்கி-மெசபடோமியா பகுதிகளுக்குக் கீழ் அரேபியா-அரேபியதீபகற்பம் உள்ளது. அங்குள்ள மக்களும் அங்கிருக்கும் சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கேற்ப தங்களது வாழ்க்கையினை தவமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்திருப்பர். போகோஸ்காய் (Bogazkoi, Turkey) என்ற இடத்தில் கிடைத்த கல்வெட்டு ஒன்று, மிட்டானிய (Mittanians) மற்றும் ஹிட்டைட் (Hittites) மக்கள் “இந்திரசீல்மித்ரசீல்வருணசீல்நசாத்யா” என்ற கடவுளர்களை தமக்குள் ஏற்பட்ட ஒரு உடன்படிக்கைக்கு சாட்சிகளாக இருக்குமாறு விளித்ததாகக் கூறப்பட்டுள்ளது. இவர்கள் மற்ற கடவுளர்களான தேஷுப் (Teshup) மற்றும் ஹெபா (Hepa) என்கின்றவர்களையும் சேர்த்து வேண்டுகிறார்கள்[6]. அதாவது அக்காலத்தில், அந்த இடத்தில் அத்தகைய சமரசம் மிட்டடனிய-ஹிட்டை மக்களிடம் இருந்துள்ளது. இக்கல்வெட்டு சுமார் 1450 BCE காலத்தைச் சேர்ந்தது என்று அகழ்வாய்வு நிபுணர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். அக்கடவுளர்கள் இந்திரன், மித்திரன், வருணன், அஸ்வினி தேவர்கள் ஆவர். அஸ்வினி தேவர்கள் மருத்துவத்தின் தேவதைகளாகக் கருதப்படுகின்றனர்.

அரேபியாவின்வடக்கில்இரானில்இருந்தமக்கள் (சுமார். 2500-2000 BCE): இதைத்தவிர, இந்ததஸு, இந்தபீபி, இந்தத்து, ஹிந்தியன், எனபல் பெயர்கள் இப்பழமையான நாகரிகங்களில், அரசர்களுக்கு, படைத்தளபதிகளுக்கு, நதிகளுக்கு, இடங்களுக்கு உபயோகப்படுத்தியுள்ளனர்[7]:

  1. இந்ததஸு/இந்தாஸு – ஊர்- III காலத்தைச் சேர்ந்த அரசன்[8].
  2. ஷிருக்-து, இந்தாஸு வரையில் வெற்றிக் கொள்ள விரும்பினான்[9].
  3. ஷாமஸ்-ஷும்-உகின் என்ற அரசனை இந்த்பீபி என்ற தளபதி வென்றான்[10].
  4. ஷுதுர்-நஹுந்தே, இந்தததாவின் மைந்தன்[11].
  5. இந்தத்து – இஷின் என்ற நநட்டின் அரசன்[12].
  6. ஹிந்தியன்– மெசபடோமியயவில் பபயும் ஐந்து நதிகளில் ஒன்று, இதன் மறுபெயர் ஜுரேஹ்[13].
  7. ஹிந்தாரு – சர்கோன் என்பவன், கம்புலு மக்களின் இடங்களை வென்றான். அவற்றுள் ஒரு இடத்தின்பெயர்[14].

எனவே, அரேபியாவிற்கு வடக்கில் அத்தகைய வேதமதத்தைப் பின்பற்றுபவர்கள் அல்லது வேதமதக் கடவுளர்களை அறிந்தவர்கள் அக்காலக்கட்டத்தில் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. இது ஜைனர்கள் அப்பகுதிகளில் சென்ற தேதியை ஒத்துள்ளது.

அரேபியாவின்வடக்கிழக்கில்சுமார் 3000 BCEல்மருந்துமூலத்திரவியத்தொகுப்பு (Phamacopoeia): சுமேரிய நாகரிகத்தை ஆய்ந்தவர்கள், சுமார் 3000 BCEல் முதல் மருந்துமூலத் திரவியத் தொகுப்பு (Phamacopoeia) உண்டாக்கப்பட்டது, என்கிறார்கள்[15].  ஆனால், சிந்துசமவெளி மருத்துவத்தைப் பற்றி அடக்கி வாசிக்கிறர்கள். கேட்டால் அவர்கள் சரித்திர-ககலத்திற்கு முந்தையவர்கள் என்கிறார்கள்[16]. கியூனிபாம் எழுத்துகளின் (Cuniform tablet) மண்பலகைகள் கிடைத்திலிருந்து, அவற்றைப் படித்து, அவர்கள் இவ்வாறு எடுத்துக் காட்டியுள்ளனர். அவை முழுமையாக இல்லாததினால், முழுவிவரங்களை பெறமுடியவில்லை என்றும் ஒப்புக் கொள்கிறார்கள். இருப்பினும், அம்மருத்துவத்தின் தேவதை பௌ (Bau), நினிசின்னா (Ninisinna) மற்றும் குலா (Gula) என்று அழைக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். அம்மருந்து தயாரிப்பில் உபயோகப்படும் ரசாயனப் பொருட்கள் – உப்பு (Sodium Chloride), வெடியுப்பு (Salt peter – Poataasium nitrate).  மற்றவையெல்லாம் மூலிகைகள், மரப்பட்டைகள், மரப்பிசின்கள் முதலியன. பொட்டாசியம் நைட்ரேட் பெறும் முறை எகிப்தியர் மற்றும் இந்தியர்களுக்குத் தெரியும் என்று அவர்களே எடுத்துக் காட்டுகிறார்கள்[17]. அப்படியென்றால், சிந்துசமவெளி மருத்துவத்திற்குண்டான மருந்துமூலத் திரவியத் தொகுப்பு (Phamacopoeia) இருந்ததா, இல்லை காணாமல் போயிற்றா, இல்லை கண்டெடுக்கப்பட்டும் மறைக்கப் பட்டதா?

மேற்கே எழுத-படிக்கத் தெரிந்த ஆரியர்கள் பாரத்ததிற்கு வந்ததும் படிக்கத்தெரியாமல் போய்விட்டார்களா? மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று விஷயங்களை ஆராயவேண்டியுள்ளது.

  1. சுமார் 1450 BCEயில் அரேபியாவிற்கு வடக்கில் வேதமதம் இருந்தது.
  2. இரானில் இருந்த மக்கள் (சுமார். 2500-2000 BCE)
  3. சுமார் 3000 BCEல் மருந்துமூலத் திரவியத் தொகுப்பு (Phamacopoeia)

அரேபியாவின் வடகிழக்குப் பகுதியில் சுமார் 1450 BCEயில் வேதமதம் இருந்து, சுமார். 2500-2000 BCEல் அவர்கள் பெயர்கள் மட்டும் இருந்து, சுமார் 3000 BCEல் முதல் மருந்துமூலத் திரவியத் தொகுப்பு (Phamacopoeia) உருவாகிறது எனும்போது, அதிலுள்ள காலக்கணக்கியல் உறுத்துகிறது, உதைக்கிறது மற்றும் முரண்பபடாகத் தோன்ருகிறது. ஏனெனில், ஆரியர்கள், இந்தோ-ஆரியர்கள் போன்றோர், மேற்கிலிருந்து, கிழக்கில் வந்து இந்தியாவில் புகுந்தனர் என்றால், அத்தேதிகள் எப்படி 1450 BCE – சுமார். 2500-2000 BCE – சுமார் 3000 BCE என்றிருக்கும்? இந்தியாவில் நுழைந்த ஆரியர்களின் காலம் 1500-1000 BCEல் வைக்கப்படுகிறது. அப்படியென்றால், அக்காலக்கணக்கீடு BCE – சுமார் 3000 BCE – சுமார். 2500-2000 – 1450 BCE என்றுதான் இருக்கவேண்டும் அப்பொழுது இந்தியாவில் நுழைந்த காலம் 1500-1000 BCEயுடன் ஒத்துப்போகின்றது. இல்லையென்றால், ஆரியர்கள் இந்தியயவிலிருந்து வெளியே சென்றிருக்க வேண்டும். அப்படியென்றால் அவர்களின் காலம் சுமார் 3000 BCEற்கு முன்பாக இருந்திருக்க வேண்டும். அதாவது, கிழக்கில் படிக்கத் தெரியாதவர்களாக இருந்து, மேற்கே செல்ல-செல்ல அவர்களுக்கு படிப்பறிவு வருகிறது என்றால், அது எந்த சித்து வேலை என்று தெரியவில்லை. இதே முறைதான், அலெக்சாந்தர் இந்தியாவின் மீது படையெடுத்தான் என்ற கதையிலும் வருகிறது.

எந்த மக்களின் நநகரிகம் தொடர்ந்து “வாழ்ந்து வரும் நாகரிகமாக” இருக்க முடியும்?: மக்களின் நீண்ட ஆயுள்காலம், ஆரோக்கியம், வளமான வாழ்வு, முதலியவைதாம் ஒரு நாகரிகம் எத்தகைய தாக்குதல்களில் சிக்குண்டாலும், எதிர்த்து மறையாமல் தொடர்ந்து வாழ்ந்துக் கொண்டிருக்கின்ற நாகரிகமாக இருக்க முடியும். அப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நாகரிகம் இந்திய நாகரிகம் தான்[18]. இந்தியாவைவிட உயர்ந்தவை, இந்தியா அவற்றிடமிருந்து காப்பியடித்து, அவர்களிடமிருந்து கடன் வாங்கிக் கொண்டு சிறந்தது என்ற் மேனாட்டவர் பெருமை பேசி, இந்தியாவை சிறுமைப் படுத்தி வந்தாலும், அந்நாகரிகங்கள் ஏன் அப்படி இருந்த இடம் தெரியாமல் அழிந்து விட்டன என்று அவர்கள் விளக்குவதில்லை. ஆகவே, மேனனட்டவர்கள் எப்படி சரித்திரத்தைப் புரட்டியிருக்கிறார்கள்-தலைகீழாக்கியிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம். அரேபியர்கள் முகபதியர்கள் ஆனவுடன், அதேபோல பழைய பழக்க-வழக்கங்களை மமர்ரியமைத்திருக்கிறார்கள்.

பாலியல், ரசவாதம், ஆயுள்நீட்டிப்பு: கிரேக்கமதம் இந்துமதத்தை ஒத்திருந்தாலும், ஜைனர்களால் அது பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு, உருமாற ஆரம்பித்தது. பைதாகோரஸ் போன்றோர் உண்மையான ஞானம் போன்றவற்றில் ஈடுபட்டாலும், மற்ற கிரேக்க சாமியார்கள் பலவித முறைகளைக் கையாண்டார்கள்.

  • எபிகுயூரியன் (342-270 BCE) என்பவரின் போதனைகள் வாழ்க்கை வாழ்வதற்கே, சந்தோஷத்திற்கே, அனுவவி ராஜா அனுபவி போன்ற கொள்கைகளில் (Hedonism[19]) இருந்தது.
  • சிம்போஸியத்தில் கிரேக்கர்கள் நிர்வாணமாகப் பங்கு கொண்டார்கள் என்று மேலே எடுத்துக் காட்டப்பட்டது.
  • 4 நுற்றாண்டில் BCE பெண்-நிர்வாணமும் மறுக்கப்படவில்லை.
  • ஓரினப்புணர்ச்சி கிரேக்கர்களிடத்தில் அதிகமாகவே இருந்தது. சோடோமி (Sodomy) என்பது ஆண்களுக்கிடையிலுள்ள ஓரினப்புணர்ச்சி[20].
  • இதைத்தவிர ஆணுமில்லை-பெண்ணுமில்லை என்றுள்ள அப்ரோடைட் (Aphrodite) என்பவர்களும் இருந்தார்கள்[21]. ஆண்களுக்கு பெண்களின் உறுப்புகளும், பெண்களுக்கு ஆண்களின் உருப்புகளும் உள்ள மனிதர்கள் அப்ரோடைட் எனப்பட்டார்கள்.
  • ஹெர்மாபுரோடிடோஸ் அல்லது ஹெர்மாபுரோடிடஸ் (Hermaphroditos or Hermaphroditus) ஹெர்மாபுரோடைட்டுகளின் ஆண்-தேவதை. இவன் ஹெர்மிஸ் (Hermes) மற்றும் அப்ரோடைட் (Aphrodite) என்பவர்களுக்குப் பிறந்தவன். எரோட்டுகள் (Erotes) என்ற தேவதைகளுள் சேர்க்கப்பட்டுள்ளான்.
  • பெரும்பாலான காமம், கொக்கோகம், பாலியல் முதலியவாற்றில் உபயோகப்படுத்தப்படும் சொற்கள் கிரேக்கத்திலிருந்துதான் பெறப்பட்டுள்ளன – ஈராஸ் = Eros (Love), ஆசை / காமம் (Himeros =Desire), பெருங்காமம் (Pothos =Passion), காமவெறி (Voluptas = sez-raged.
  • வீனஸ் என்ற தேவத்தையிலிருந்து பெறப்படும் இச்சொற்கள் காதல், உடலுறவு, பாலியல், பாலியல் நோய்கள், மருந்துகள் முதலியவற்றிற்கு உபயோகப்படுத்தப் படுகின்றன[22].
  • அரிஸ்டாடில் ஆலிவ் எண்ணையை கர்ப்பத்தைத் தடுக்கும் களிம்பாக உபயோகப்படுத்தலாம் என்று 4 BCEயில் கூறினார்.
  • ஹெர்மிஸ் (Hermes) என்பவன் தான் ரகசிய சித்தாந்தங்கள், ரசவாதம் முதலியவற்றிற்கு தேவன்[23]. அதாவது கிரேக்கர்களைப் பொறுத்தவரைக்கும், காமம் ரசவாதத்துடன் இணைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
  • ஓவிட் (Ovid) மற்றும் லூசியன் (Lucian) போன்றோரது கொக்கோக-காமக்களியாட்ட இலக்கியங்கள், அவர்களது கிரக்கத்தின் உச்சத்தைக் காட்டுகின்றன.
  • இதைத்தவிர பாலியல், உடலுறவு செய்முறை நூல்களும் பெருகின[24].

மேலே குறிப்பிட்ட ஒன்றொன்றிற்கும் அக்கால சிற்பங்கள், ஓவியங்கள், உலோக விக்கிரங்கள் முதலியவை உலக பிரசித்தி பெற்ற கலைக்கூடங்களில், அருங்காட்சியகங்களில் உள்ளன. கிரேக்கர்களைப் பின்பற்றி வந்த ரோமானியர்களில் இவ்விஷயங்களில் சளைத்தர்கள் அல்லர்[25]. அதிக உடலுறவு கொண்டால், ஆயுள் பெருகும்; அதிக பெண்களிடம் உடலுறவு கொண்டால் ஆயுள் பெருகும்;  கன்னிகளுடன் உடலுறவு கொண்டால், ஆயுள் பெருகும், என்று தவறான பல கருத்துகள் உருவானதால், அத்தகைய தீய இலக்கியங்கள் உருவாகின, சமூகமும் சீரழிந்தது. கிரேக்க ரசவாதம் இப்படி பாலியில் உருமாறி, உருக்குலைந்ததற்குக் காரணம் அவர்கள் ஜைனர்களின் முறைகளை துஷ்பிரயோகம் செய்தது தான். இதனால் மந்திர-தந்திர-யந்திர போன்ற சடங்குகள் அங்கும் கடைபிடிக்கப்பட்டன என்று தெரிகிறது. ஆனால், அவை பாலிய ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதால் பலவித பாலியல் திரிபுகள் ஏற்பட்டன.

வெள்ளையாடைஅணிந்தமற்றசாமியார்கள் / சந்நியாசிகள்: வெள்ளையாடையை அணிந்த எஸ்ஸென்ஸ் (Essences), ஞாஸ்டிக் (Gnostic), மணிக்கியர் (Manichaeans) போன்றோர் பிரமச்சரியம், ஒழுங்கு, கட்டுப்பாடு முதலிவற்றைப் பின்பற்றினர். பின்னர் வந்த மணி (216-276 CE) என்பவரோ, இல்வாழ்க்கை வேண்டாம், திருமணம் வேண்டாம் என்றெல்லாம் போதித்தார். இங்கு முக்கியமான விஷயம் என்னவென்றால், மணி பாரசீகத்தில் துறவரம் கடைப்பிடித்த ஆசாரமான யூதகுடும்பத்தில் பிறந்தவர். பன்னிரெண்டு வயதில் ஞானம் பெற்று, போதிக்க ஆரம்பித்தார். கிழக்கில் பாரதம் வரையில் வந்ததாகச் சொல்லப்படுகிறது. பிறகு மத்திய ஆசியா சென்று மெடபடோமியா, சிரியா, இஸ்ரேல் வழியாக அலெக்சாந்திரியாவிற்கு வந்தார். ஆனால் இவரது போதனைகள் ஒவ்வாததனால், அங்கிருந்த பஹ்ரம் – I (Bahram – I 273-276) இவரை 276ல் தூக்கிலிட்டான். இருப்பினும், மணியுடைய பிரமச்சரியக் கொள்கைகள் மேற்கில் எகிப்து, ரோம், இங்கிலாந்து மற்றும் கிழக்கில் சைனா வரை பரவியது[26].

300-500 காலத்தில் இதன் தாக்கம் இருந்தது. கிரேக்க-ஜைனர்களில் அளவிற்கு மீறிய பாலியல் தீமைகள், கொடுமைகள் மற்றும் குற்றங்கள், இவற்றை எதிர்த்து, திருத்தத்தான், இம்மதம் மக்களிடம் வேகமாகப் பரவியது எனலாம். இதேபோல ஞாஸ்திக மதத்தின் (Gnosticism) தாக்கமும் அதிகமாகவே இருந்தது. இதன் மூலங்களை மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரியாது அல்லது ஒருக்கின்ற யூதமதத்திலிருந்துதான் தோன்றியது என்று வாதிட்டாலும், ஜைனர்களின் தாக்கத்தைக் காணமுடிகிறது. அதாவது, 1450 BCEல் இருந்த வேதமதத்தை மறந்துவிட முடியாது.

அரேபியாவியாவைச்சுற்றியிருந்தவேதமதம்: அரேபியைச் சுற்றியிருந்த வேதமதம் அரேபியாவிற்குள் நுழையவில்லை என்றாகாது. இஸ்லாம் வரும்வரை அங்கிருந்த மக்கள் அநாகரிகமாக, பாகன்களைப் போலிருந்தார்கள் (Pagans, Barbarians) என்று சொல்வது சரித்திரப் பொய்யாகும். 1450 BCEலிருந்து 650 CE வரை அப்படியே இருந்தார்கள் என்றால், அது எவ்வளவு பெரிய பொய் என்பதனையும் அறிந்து கொள்ளலாம்.

மேலேயுள்ள வரைப்படத்திலிருந்து சுமார் 1400 BCE காலத்தில் கானான், அமுறு, நுஹாஷே, மிட்டானி, ஹஸ்ஸுக்கன்னி, அசூர் (அசீரியா), தூர்-குரிகள்ஜு, கேசைட் (பாபிலோனியா) முதலிய மக்கள், அரேபியாவின் வடமேற்கு-வடக்கு-வடகிழக்குப் பகுதிகளில் வாழ்ந்தனர். மேற்குறிப்பிட்ட பகுதிகள் இப்பொழுது, இஸ்ரேல், ஜோர்டன், லெபனான், சிரியா, இராக், இரான் என்ற நாடுகளாக உள்ளன. அவர்களது சிற்பங்களை பார்த்தால், அவை பாரதநாட்டவருடையது என்று எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது[27]. அவ்விடங்களின் பெயர்கள் – ஏயில்காயா, நிஸந்தா, அம்பர்லிகாயா, புயுக்காயா, ஹத்துஸா, போகாஜ்கோய் என்றுள்ளன. ஆகவே, அரேபியர் தனித்து வேறு நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு கொண்ட மக்களாக இருந்திருக்க முடியாது. அரேபியாவில் கிடைத்துள்ள அகழ்வாய்வுப் பொருட்கள், சிற்பங்கள், பாத்திரங்கள் முதலியனவும் மேற்குறிப்பிட்ட மக்களின் நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாட்டுக் காரணிகளுடன் ஒத்துப் போகின்றன. ஆகவே, அங்கு சக்தி-சிவன், சிவ-சக்தி, மும்மூர்த்தி, மூன்றுதேவதைகள் முதலியவர்களின் வழிபாடு இருந்துள்ளது வியப்பாக இல்லை.

இடைப்பட்ட நூற்றாண்டுகளில் இப்பகுதிகளில் யூதம், கிருத்துவம் மற்றும் முகமதியம் ஒவ்வொன்றாக வளர்ந்து வரும் போது பழைய நாகரிகங்கள் அழிந்தன அல்லது அழிக்கப்பட்டன. 670 BCEல் அசீரியர் எகிப்தை வென்றனர்.  356-323 BCE காலத்தில் எகிப்தை அலெக்சாந்தர் வென்று, தனது தளபதி டாலமியை அரசனாக்கினான். 30 CE காலத்தில் ரோமர்களால், கிரேக்கம் மற்றும் எகிப்து ஆக்கிரமிக்கப்பட்டன. இப்படி அம்மக்கள் ஒருவருக்குள் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டதால், பாபிலோனியர் (Babylonians), அசீரியர் (Assyrians), சால்டியர் (Chaldeans), அராமியர் (Araamaeans), போனீஷியர் (Phoenecians), முதலியோரது நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு முதலியன அம்மக்களோடு மறைந்து வெறும் கதைகளாகி விட்டன. இருப்பினும், அங்கிருக்கும் மக்கள் சில பழைய சடங்குகள், சம்பிரதாயங்கள், விழாக்கள் முதலியற்ரைத் தொடர்ந்து நடத்திவருவதால், அவற்றிலிருந்து அந்த பழைய கூறுகளை அறிந்து கொள்ள முடிகிறது.

© வேதபிரகாஷ்

21-09-2012


[1] வின்சென்ட் ஸ்மித், ஜான் பிளீட் போன்றோர்அலெக்சாந்தர் பாரத்தத்தின்மீது படையெடுத்த 327-326 BCE காலத்திலிருந்து தான் இந்திய சரித்திரம் ஆரம்பிக்கிறது, அதற்கு முன்னர் இந்தியாவிற்கு சரித்திரமே இல்லை என்ற அடிப்படையில் எழுதி வைத்த சரித்திரத்தைத் தான், இப்பொழுதும் இந்தியர்கள் இப்பொழுதும் படித்துக் கொண்டிருக்கின்றனர். அலெக்சாந்தர் காலத்தில் பாரத்தை ஆண்டது குப்தர் வம்சத்தின் சந்திரகுப்தர் இல்லை, மௌரியர் வம்சத்தின் சந்திரகுப்தர் என்று திரித்ததால் 1200 வருட இந்திய சரித்திரம் சுருக்கப்பட்டது. இதனால் தான் இந்திய சரித்திரத்தில் பல புதிர்கள் உண்டாயின. புரிந்து கொள்ளாதோர் புதிய விளக்கங்கள் கொடுத்து, உள்ள சரித்திரத்தையே புரட்டிவிட்டு, அதற்கும் ஒரு முறையை உண்டாக்கி குழப்பியுள்ளனர்.

[2] The British history writers arbitaratily declared that “The Alexander’s invasion is is the sheet anchor of Indian history”, without any authority.

[3] K. V. Ramakrishna Rao, The Myth, Romance and Historicity of Alexander and their Influence on India, www.hinduwebsite.com

[4] Arrian.viii, 1.5 ff.

[5] McCrindle, The Invasion of India by Alexander the Great as described by Arrian, Quitus Curtius, Diodorus, Plutarch and Justin, London, 1896.

[6] George Roux, Ancient Iraq, Penguin Books, U.K, 1980, p.218.

[7] D. T. Potts, The Archaeology of Elam – Formation and Transformaton of an Ancient Indian Iranian state, Cambridge University Press, UK, 1999, p.

[8] Indassu – name of an ensi of Zabshali in the Ur III eriod, p.168.

[9] Shiruk-tuh wanted to conquer upto Indassu, p.141.

[10] Indabibi – name of a general who overthrown Shamash-shum-ukin, p.282

[11] Shutur-Nahhunte, son of Indada, p.303.

[12] Indattu – king of Isin, p.148.

[13] Hindian – one of the five rivers flowing in Mesopotomia, otherwise mentioned as Zuhreh, p.15.

[14] Hindaru – a place conquered by Sargon, of the Gambulu tribe.

[15] Samuel Noah Kramer, History Begins at Sumer – Thirty-Nine Firsts in Man’s Recorded History, University of Pennsylvania Press, Phladelphia, USA, 1981, pp.60-64.

[16] இப்பொழுது புரோட்டோ ஹிஸ்டரி (Protohistory) என்ற சொல்லை உபயோகித்ததலும், மனங்களில் பிரி-ஹிஸ்டரி (pre-history) என்ற கருத்தை வைத்துக் கொண்டுதான் படிப்பறிவு இல்லாத ஹரப்பன்கள் (Illiterate Harappans) என்று அந்த மேனனட்டு அறிவுஜீவிகள் கூறிவருகின்றன. நமது திராவிட கூட்டங்களும் அடிவருடிக் கொண்டு, பட்டங்கள் கொடுத்து பபராட்டு விழா எடுத்துக் கொண்டிருக்கின்றன.

[17] Samuel Noah Kramer, History Begins at Sumer – Thirty-Nine Firsts in Man’s Recorded History, University of Pennsylvania Press, Phladelphia, USA, 1981, pp.62-63

[18] சீன நாகரிகமும் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த இரு நாகரிகங்கள் தாம் தொடர்ந்து இருந்து வருகின்றன, மற்றவை மறைந்து விட்டன.

[19] Hedone was the spirit (daimona) of pleasure, enjoyment and delight. As a daughter of Eros (Love) she was associated more specifically with sensual pleasure. Her opposite numbers were the Algea (Pains). The Romans named her Voluptas.

[20] Sodomy, sodomites inhabitants of Sodom. Male homosex.

[21] Hermaphroditism = human being having both man and animal characteristic, nymph Solmacts

[22] Aphrodite = Aphrodiastic venereal, drug producing venereal disease,

Aphrodiasiac, aphrodisios, aphrodite = derived from Venus, the goddess of love etc.

[23] Hermes = author of mysterious doctrines, ecrets of alchemy

[24] Twleve Arts of the Actions of Love, Ovid’s Arts Amatoria etc are covered under “Classical literature”.

[25] David Mountfield, Greek and Roman Erotica, Miller Graphics, Italy, 1982.

[26] Richard Foltz, Religions of the Silk Road, St. Martin’s Press, New York 1999.

[27] கூகுள் தேடலில் – Yazilkaya, Nisantas, Ambarlikaya, Mihraplikaya, Büyükkaya, Hattusha, Boğazköy – என்ற வார்த்தைகளை தட்டெச்சு செய்தால் அச்சிற்பங்களைப் பார்க்கலாம்.

Posted in அப்ரோடைட், அரேபியா, ஆகாயம், ஆன்மா, ஆயுர்வேதம், ஆயுள், ஆயுள்வேதம், ஆரியன், ஆரியம், இந்தியவிரோதிகள், இந்தியா, உடல், உயிர், உஸ்பெகிஸ்தான், எபிகுயூரியன், கஜகிஸ்தான், கண், கத்தி, கனிமம், கம்பளி, கருத்து, கரைசல், கற்பம், கலாச்சாரம், கல்பம், காபாலிக, காமாக்கியா, காயம், காற்று, கிர்கிஸ்தான், கை, சக்தி, சடங்குகள், சட்டைமுனி, சம்பிரதாயங்கள், சஹஜயான, சிகிச்சை, சிதர், சிதார், சித், சித்தகுரு, சித்தஜலம், சித்தஞானம், சித்தபுரம், சித்தபுரி, சித்தபுருஷன், சித்தப்பிரமை, சித்தம், சித்தயோகம், சித்தர், சித்தர் பாடல்கள், சித்தார்த், சித்து, சிந்து, சிந்து சமவெளி நாகரிகம், சீனா, சுத்தம், சூபி, சைனா, சைவம், ஞானம், ஞானி, தந்திரம், திகம்பர, திகம்பரம், திகம்பரர், துர்க்மேனிஸ்தான், துறந்தவர், துறவி, நாகரிகம், நாட்டு மருத்துவம், நாத்திகம், நிம்மதி, நிர்வாணம், நீர், நுண்ணிய அறிவு, பகுத்தறிவு, பஞ்சபூதங்கள், பதினென் சித்தர்கள், பரம்பரை வைத்தியர், பாதரசம், பாரதம், பாரம்பரியம், பாலியல், பித்து, போகோஸ்காய், மத்திய ஆசியா, மந்திரம், மனச்சிதைவு, மனம், மருந்து, முஹம்மது கஜினி, யோகா, விழாக்கள், வேதம், ஹெர்மாபுரோடிடோஸ், ஹெர்மிஸ் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

சிரவணர்களும்-பிராமணர்களும், ஜைனர்களும்-பௌத்தர்களும், இந்தியர்களும்-கிரேக்கர்களும்

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 15, 2012

சிரவணர்களும்-பிராமணர்களும், ஜைனர்களும்-பௌத்தர்களும், இந்தியர்களும்-கிரேக்கர்களும்

வேதகாலத்தில் அல்லது வேதங்கள் படிப்புமுறையாக இருந்த காலத்தில் மஹாவீரர்-புத்தர் தோன்றியது: மஹாவீரரும், புத்தரும் திடீரென்று அறிவாளிகளாக, ஞானிகளாக, தீர்த்தங்கராக அல்லது புத்தராகிவிடவில்லை. பாரதத்தில் பிறந்ததால் வேதங்கள், வேதாங்கங்கள் மற்றும் இதர புத்தகங்களைப் படித்துதான் அந்நிலையை அடைந்திருந்தார்கள். குருகுலத்தில் பிராமணர்களிடம்தாம் அவர்கள் பயின்றார்கள். க்ஷத்தியர்களாக இருந்தும் அந்நிலையை அடைந்தார்கள் எனும்போது, அக்காலத்தில் எந்தவித வேறுபாடும் இல்லையென்றாகிறது. அதாவது, வேதங்களை யார் வேண்டுமானாலும் படிக்கலாம் கற்கலாம் என்றிருந்தது. இருந்த பிராமணர்களுடன் வாதிட்டு, தத்தமது புதிய கருத்துகளை மக்களிடம் பரப்பி அவர்கள் தங்களது சீடர்களை, நம்பிக்கையாளர்களை, அபிமானிகளை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். இவற்றை அந்தந்த ஜைன-பௌத்த நூல்களே எடுத்துக் காட்டுகின்றன. ஆனால், பாரதத்தின் வடமேற்கு பகுதிகள் வழியாக ஜைனர்களின் வெளியேற்றம், கிரேக்கர்களின் நுழைவுகள் சில மாற்றங்களை ஏற்படுத்தின.

ஜைன-பௌத்த மதங்களில் இருந்தது சில வித்தியாசங்களே: மஹாவீரர். (c.599-527 BCE) மற்றும் புத்தர் (c.567-487 BCE) சமகாலத்தவர்கள் தாம். இருவர்களின் போதனைகளும் ஒரேமாதிரியாகத்தான் இருந்தன. கடவுட்கொள்கையைத் தவிர, பெரும்பாலான விஷயங்களில், வேதங்களிலிருந்து விலகவில்லை. பொதுஜனங்களுக்கேற்ற வரையில், ஜைன-பௌத்தர்கள் வேதமத நம்பிக்கையாளர்களைப் போலவே இருந்தார்கள் என்று தெரிகிறது. அவர்களது தலைவர்களும் பிராமணர்கள் போன்றே இருந்தனர் என்று தெரிகிறது. இதனால் தான், சமகால கிரேக்கர்களும் அடையாளம் காணாமல் குழம்பிபோய் இருந்தனர். ஜைன-பௌத்தர்கள் பாரத சமூகத்தில் அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் என்று அத்தகைய வெளித்தோற்றத்தைக் கொண்டிருந்தார்கள் என்றும் தெரிகிறது[1].

கிரேக்கர்கள் இந்தியாவிற்கு வந்து படித்துச் சென்றது: இந்தியா அக்காலத்தில் விஞ்ஞானம், மருத்துவம், முதலிய துறைகளில் சிறந்து விளங்கியதாலும், அதற்கான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் (ஆசிரமங்கள்) இருந்ததினாலும், பல பாரதத்திற்கு கற்க வந்தனர். சுமார் 300 BCE க்தேசியாஸ் (Keasiast) மற்றும் மெகஸ்தனிஸ் (Megasthanese) என்ற இரு கிரேக்க மருத்துவர்கள் இந்தியாவிற்கு வந்து வடவிந்தியாவில் தங்கியதாக மேனாட்டு சரித்திராசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். அவர்கள் ஒன்றும் அப்படியொன்றும் வெறுமனே தங்கியிருக்க வரவில்லை. முன்னர் கிரேக்க தத்துவஞானிகள், அறிஞர்கள் – பிதாகோரஸ்[2] (Pythagorus c.560-480 BCE), பிளாட்டோ[3] (Plato – 427-347 BCE) முதலியோரும் வந்துள்ளதாக அவர்களேக் குறிப்பிட்டுள்ளனர்[4]. இதனால்தான் கிரேக்கத் தத்துவங்களில் இந்தியத்தாக்கம் வெளியாகிறது[5]. ஆன்மா, ஆன்மா பலவுடல்களைப் பெறுவது, மறுஜென்மம், பாவம்-புண்ணியம், கர்மா போன்ற கருத்துகள் காணப்படுகின்றன. பொதுவாக கிரேக்க நுழைவுகளினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, ஏனெனில் அவர்கள் க்ஷத்தியர்களில் தாழ்ந்தவர்களாக (degraded), விலக்கி வைக்கப்பட்டவர்களாக (excommunicated) பிரிந்து போனவர்களாக, இந்தியமுறைகளினின்று மாறுபட்டவர்களாகக் கருதப்பட்டனர்[6].  புராணங்கள் இவ்விவரங்களை அதிகமாகவே தருகின்றன. எட்வர்ட் போக்காக் (Edward Pococke), காலனில் டோட் (Col. Tod), வில்லியம் ஜோன்ஸ் (William Jones) போன்றவர்களும் இதனை எடுத்துக் காட்டியுள்ளனர்.

ஜைனர்கள்-பௌத்தர்கள்-பிராமணர்கள் பற்றிய கிரேக்கர்களின் குழப்பம்: கிரேக்கர்கள், பிராமணர்களை அறிந்திருந்தனர், ஆனால், மேற்சொல்லப்பட்டக் காரணங்களால், கிரேக்கர்களை பிராமணர்கள் ஜம்புத்வீபத்தில் இருப்பவர்களாகக் கருதவில்லை[7]. மெகஸ்தனிஸ் போன்றவர்கள் பிராமணர்களை “தத்துவஞானிகள்” என்று குறிபிட்டிருக்கிறார்கள்[8]. இன்னொரு கிரேக்க ஆவணமோ அந்த தத்துவஞானிகளில் இரு பிரிவினர் சர்மேன்ஸ் (Sarmanes) மற்றும் பிராக்மேன்ஸ் (Brachmanes) என்றிருந்ததாகக் குறிப்பிட்டுகிறது. இருப்பினும் சிரவணர்கள் மற்றும் பிராமணர்கள் இடையில் கிரேக்கர்களுக்குக் குழப்பம் இருந்தது. மெகஸ்தனிஸ் இந்திய முனிவர்களை “ஹைலோபியோய்” (hylobioi) என்று குறிப்பிட்டு மற்றவரை “பௌத்த”வின் சீடர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் “ஹைலோபியோய்” என்பவர்கள் பிராமணர்கள் என்றும், “பௌத்த”வின் சீடர்கள் சிரவணர்கள் என்றும் கொள்ளலாம்.  உண்மையில் மெகஸ்தனிஸ் எழுதியதாக சொல்லப்படும் “இண்டிகா” என்ற நூலேயில்லை. பிற்காலத்தில் மெகஸ்தனிஸ் சொன்னது என்று பல கிரேக்க நூல்களில் உள்ளவற்றைத் தொகுத்து வெளியிட்டதுதான் அந்த “இண்டிகா” என்பது.

முதல் நூற்றாண்டுகளிலும் தொடர்ந்த குழப்பம்: இன்னொரு மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டு கிரேக்க ஆவணத்தை வைத்துக் கொண்டு, இந்த பிராச்மேன்கள் / பிராக்மேன்கள் / பிராமணர்கள் (Brachmanes) துங்கபத்திரை ஆற்றங்கரையில் நிர்வாணமாகச் சுற்றிக் கொண்டிருந்தார்கள் என்று விளக்கம் கொடுக்கிறார்கள்[9]. ஆனால் அப்படி நிர்வாணமாக சுற்றும் சாமியார்கள், திகம்பர ஜைன சாமியார்கள்தாம். ஆகவே கிரேக்கர்களுக்கு பௌத்த-ஜைன துறவிகளிடையே கூட வித்தியாசம் தெரியவில்லை என்று தெரிகிறது. இல்லை மேலே எடுத்துக் காட்டியபடி, அலெக்சாந்தர் தோற்றதை மறைக்க இப்படி குழப்பியிருக்கலாம். இல்லை சுமார் 250 BCE லிருந்து நான்காம் நூற்றாண்டு வரை ஜைன-பௌத்த-பிராமணர்களுக்கு வித்தியாசமே இல்லாமல் இருந்தது போலும். இல்லை ஜைன-பௌத்தர்கள் பிராமணர்களைப் போலவே தோற்றம் கொண்டு, வேடமிட்டு உலாவந்து கொண்டிருந்தார்கள் போலும். அதனால்தான், பிராமணர்கள் அவர்களை “பாஷாண்டிகள்” என்றழைத்தனர். அவர்களுக்கு வேதங்களைக் கற்றுக் கொடுக்க மறுத்தனர். ஏனெனில், வேதங்களைப் படித்து பிறகு வேதங்களையே குறைக்கூறுவது, தூஷிப்பது அவர்களது வேலையாக இருந்தது. மேலும், வேதங்களிலுள்ள பெரும்பாலான கருத்துகளையும், அடிப்படை உண்மைகளையும் ஏற்றுக் கொண்டு, அவ்வாறு வேதங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் அவர்களது போக்கும் போலித்தனமாகப் பட்டது.

அசோகர்காலத்தில் (c.250-200 BCE) சிரவணர்கள்பிராமணர்கள்சமமாக பாவிக்கப்பட்டார்கள்: அவர்களுக்கு அவர்கள் க்ஷத்தியர்களில் தாழ்ந்தவர்களாக (degraded), விலக்கி வைக்கப்பட்டவர்களாக (excommunicated) பிரிந்து போனவர்களாக, இந்தியமுறைகளினின்று மாறுபட்டவர்களாகக் கருதப்பட்டனர்[10].  அதனால், அசோகனுடைய கல்வெட்டுகளும் சிரவணர்கள், பிராமணர்கள் என்று குறிப்பிட்டு, கிரேக்கர்களைக் குறிப்பிடாமல் இருக்கின்றன சிரவணர்கள் மற்றும் பிராமணர்கள் இல்லாத சமூகக்குழுமங்களே/நாடுகளேயில்லை, ஆனால் கிரேக்கர்களிடம் மட்டும் அவர்கள் இல்லை[11]. அதாவது கிரேக்கர்கள் தங்களது நாட்டை அவ்வாறுக் கூறிக்கொள்ளவில்லை. இங்கு பண்டார்கர் போன்றோர் அயோனியர்கள் வேறு, கிரேக்கர்கள் வேறு என்று கூறுகின்றனர்[12]. ஆனால் மேற்பட்ட நம்பிக்கைகள் கொண்ட மதத்தைக் கொண்டிருந்தனர். எப்படியாகிலும் இருக்குழுக்களுமே சமுக்கத்தில் உயர்வாக மதிக்கப்பட்டார்கள் என்று தெரிகிறது. அசோகரைப் பொறுத்தவரைக்கும் இருவர்களுன் சமமாக பாவிக்கப்பட்டார்கள். “ப்ரமணஸ்ரவண” மறும் “ஸ்ரவணப்ரமண” என்ற சொற்றோடர் மாறிமாறி அசோகரின் கல்வெட்டுகளில் பல இடங்களில் உபயோகப்படுத்தப் பட்டுள்ளன.

ஜைன-பௌத்த காலத்தில் படிப்புமுறையில் மாற்றங்கள் ஏற்பட்டது: ஜைனர்கள்-பௌத்தர்கள் வேதநெறிகளினின்று மிகவும் விலகி மந்திர-தந்திர-யந்திரமுறைகளில் ஈடுபட்டபோது, சமூகத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. பெண்கள் ஒருபக்கத்தில் உரிமைகள் கொடுக்கப்பட்டாலும், மந்திர-தந்திர-யந்திரமுறைகளில் பாலியல் ரீதியில் மிகவும் சதாய்க்கப்பட்டார்கள் (Sexually exploited) என்று தெரிகிறது. மேலும் அஹிம்சையை (non-violence) போதித்துக் கொண்டு, ஹிம்சை வேலைகளில் ஈடுபட்டது, உள்ள நிலைமையை அனுசரித்து, அசோகனும் தனது கல்வெட்டில் தினமும் மூன்று மிருகங்கள் – இரண்டு மயில் மற்றும் ஒரு கருப்பு மான் – கறிக்காகக் கொல்லப்படலாம் என்று விலக்கு அளித்துள்ளார்[13]. மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். குறிப்பாக அஹிம்சை போதித்து, பௌத்தர்கள் மாமிச உணவை உட்கொண்டது பெரிய முரண்பாடே. அதேபோல, அஹிம்சை கடைபிடிக்கும் ஜைனர்கள் போர்களில் ஈடுபாட்டு, நாடுகளை தங்களது ஆதிக்கத்தில் கொண்டு வந்தது. அதில் அசோகன் மட்டும் விதிவிலக்காக இருந்தான். அவரும் கலிங்கப் போருக்குப் பிறகுதான் மாறினான். இதனால், இவர்கள் காலத்தில் பொதுப்படையாக, வெளிப்படையாக இருந்த ஆசிரமமுறை பள்ளிக்கூடங்கள் மாறி, விகாரங்கள்-மடாலயங்கள் முறை படிப்புமுறை தோன்றியது. ஆனால், ஜைன-பௌத்த விகாரங்கள்-மடாலயங்கள் ஊர்களுக்கு-நகரங்களில் வெளியில், ஒதுக்குப்புறத்தில், தூரத்தில் இருந்தன. அங்கு யார் வேண்டுமானாலும் சென்றுவிடமுடியாது, சேர்ந்து படிக்க முடியாது. அதாவது ஜைன-பௌத்தர்களுக்குத்தான் முதலிடம் என்பது தெரிந்த விஷயமே.

மடாலய-குருக்குல வேறுபாடுகள் பல்கலைக்கழகப் படிப்புகளில் சண்டை-சச்சரவானது: ஒதுக்குப்புறமாக விகாரங்களில் நடக்கும் விஷயங்கள் பொது மக்களுக்குத் தெரியாமல் இருந்தாலும், விளைவுகள் தெரியவரத்தான் செய்தன. படிப்புமுறைகளில் மட்டுமல்லாது, மருத்துவமுறைகளில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. மந்திர-தந்திர-யந்திரமுறைகள் கவனமாகக் கற்றுக் கொள்ளப்பட்டு, முறையாக, வேண்டிய காரியங்களுக்கு மட்டும் தான், உபயோகப் படுத்தப் படவேண்டும் என்றமுறை போய், யார் வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும், எப்படியும் உபயோகப் படுத்தலாம், பரிசோதிக்கலாம் என்று வந்தபோதுதான், துஷ்பிரயோகங்கள் ஆரம்பித்தன. காபாலிகர், காலபைரவர், காளாமுகர், பாசுபத, லகுலீஸ போன்றோர் தாம் பிணங்களை அறுப்பது (dissection of dead bodies – cadavre), அறுவைசிகிச்சைச் செய்வது என்றமுறை போய், மற்றவர்களும் செய்ய ஆரம்பித்தனர். கண்-பொறை நீக்கல், மண்டையோட்டு அறுவைசிகிச்சை, மற்ற ரணசிகிச்சை முதலியவை வேண்டியவர்களுக்கு ஜாக்கிரதையாக முறையாகச் செய்யப்பட்டன. புத்தரே அறுவைசிகிச்சைமூலம் பிறந்து இறந்தார், அதாவது சிஸரியன் ஆபரேஷன் மூலம் பிறந்து, தனது எண்பதாவது வயதில் பன்றி மாமிசம் உண்டபோது, உணவுக்குடலில் சிக்கிக் கொண்டு, அறுவைசிகிச்சை செய்யப்பட்டு, பலன் அளிக்காமல் இறந்தார். இதனால், அறுவைசிகிச்சைமுறை, பாரத்தில் தடை செய்யப்பட்டது. ஆனால், பாரத்ததிற்கு வெளியே தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டது[14].

பிணங்களை அறுப்பது-அறுவைசிச்சை செய்வது முதலியன: அஹிம்சை போதித்த ஜைனர்-பௌத்தர் எப்படி பிணங்களை அறுத்து மருத்துவர்கள் ஆகியிருக்க முடியும் என்று யாரும் யோசித்ததாகத் தெரியவில்லை. இதனால்தான், சரகசம்ஹிதையை சரியாகப் படிக்காதவர்கள், அறுவைசிகிச்சை பயிலும் மாணவர்களுக்கு பிணங்களுக்கு பதிலாக, காய்கறிகள் கொடுத்து, அவற்றையறுத்து பயிற்சி பெற்றனர் என்று விளக்கம் அளிக்கின்றனர். அதுமட்டுமல்லாது, இந்தியர்களுக்கு எலும்பியல் அறிவேயில்லை என்றும் முடிவுக்கு வந்து திரிபு விளக்கங்கள் கொடுக்கின்றனர். ஒரு வாதத்திற்கு எடுத்துக் கொள்வதாக இருந்தால், யாகங்கள் புரிந்த வேதகாலத்தவர்கள் ஆடு, மாடு, குதிரை போன்றவற்றைப் பலிக்கொடுத்திருந்தால், அவர்களுக்கு பிணங்களை அறுக்க ஒன்றும் தயக்கமோ, பயமோ, அறுவருப்போ இருந்திருக்காது. ஆனால், அஹிம்சை போதித்த ஜைனர்-பௌத்தர் அவ்வாறு செய்திருக்க முடியாது. ஆகவே உண்மையில் உயிர்பலி, கொலை முதலியன ஏன் தடுக்கப்பட்டது என்று ஆராயவேண்டியுள்ளது.

இன்றைக்கும் ஆயுர்வேதம்-சித்தா படிக்கும் மாணவர்கள் [B.A.M.S (Bachelor of Ayurvedic Medicine and Surgery) மற்றும் B.S.M.S (Bachelor of Siddha Medicine and Surgery)] பிணங்களை அறுத்து (dissection of dead bodies – cadavre) பயிற்சி இல்லாமல் மருத்துவர் ஆகமுடியாது. அம்மருத்துவக் கல்லூரிகளில் பிணங்கள் அழுகாமல் பாதுகாத்துவைக்க குளிர் அறை இருந்தால் தான், அப்படிப்புகளுக்கு ஒப்புதலே அளிக்கப்படுகிறது. ஆகவே, பழங்காலத்தில் ஒன்றும் தெரியாமல், கண்-பொறை நீக்கல், மண்டையோட்டு அறுவைசிகிச்சை, மற்ற ரணசிகிச்சை முதலியவற்றை செய்தனர் என்பது ஏதோ “சித்துவேலை” காட்டுவதைப் போல இருக்கும். அத்தகைய “சித்தர்கள்” அக்காலத்தில் இருந்திருக்க முடியாது. எனவே அறுவைசிகிச்சை செய்யப்பட்டதற்கு அகழ்வாய்வு ஆதாரங்கள் இருக்கும் போது, அதற்கான மருத்துவர்கள் மற்றும் அறுவைசிகிச்சை வல்லுனர்கள் இல்லை என்று வாதிடுவது அற்பத்தனமாகவே தோன்றுகிறது.

© வேதபிரகாஷ்

14-09-2012


[1] இது சூப்பிக்கள் இந்துமதத்துறவிகள் போல, பிற்காலத்தில் சித்தர்கள் போல வேடமிட்டு உலா வந்தது போன்றது எனலாம். கிருத்துவர்களும் அதேபோல காவியுடையணிந்து, குடுமி வைத்துக் கொண்டு உலல வந்தார்கள். இன்றைக்கும் கிருத்துவர்கள் தங்களை பத்மா முதலியார், மணி ஐயர் என்று கூறிக்கொண்டு, பாமர மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

[2] Pythagoras arrived in India too late to come into personal contact with the Buddha, he was greatly influenced by his teachings. He went to India a student, he left it as a teacher, and even to this day he is known in that country as Pitar Guru, and as Yavanacharya, the Ionian Teacher.

http://www.ship.edu/~cgboeree/greeks.html; http://9waysmysteryschool.tripod.com/sacredsoundtools/id13.html

[3] Typically Indian are the dying words of Plotinus, noblest of the Neo-platonists “Now I seek to lead back the self within me to the All-self.” One great teacher has said, “The end of knowledge is to know God – not only believe; to become one with God – not only to worship afar off.” We gain a hint in the Kathopanishat (V1- 17) “Let a man with firmness separate it (the soul) from his own body, as a grass stalk from its sheath,” to which point we will return later.

[4] Richard Garbe, India and Christendom, He points out, “…………….the historical possibility of the Greecian world of thought being influenced by India through the medium of persia must unquestionably be granted, and with it the possibility of the above-mentioned ideas (of the Sankyan and Vedanta Philosophy) being transferred from India to Greece”.

E. W. Hopkins says: “Plato is full of Sankhyan thought, worked out by him, but taken from Pythagoras. Before the sixth century B.C. all the religious philosophical ideas of Pythagoras are current in India. (L. Schroeder, Pythagoras). If there were but one or two of these cases, they might be set aside as accidental coincidences, but such coincidences are too numerous to be the result of change. ”

[5] வில்லியம் ஜோன்ஸ் போன்றோர் பாரதம் மற்றும் கிரேக்க கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, முதலியவற்றிலுள்ள பல ஒற்ருமைகளை எடுத்துக் காட்டியுள்ளனர். இக்கருத்து வலுப்பட்டபோது தான், தலைக்கீழ் கருதுகோள்களை மேனாட்டவர் உண்டாக்கி, கிரேக்கர்களிடமிருந்து இந்தியர்கள் காப்பியடித்தார்கள் என்று முன்வைத்தார்கள்.

[6] மஹாபாரத யுத்தம் நடந்த பின்னர், க்ஷத்தியர்கள் பாண்டவர்-கௌரவர் என்று இருதரப்பில் சேந்து சண்டையிட்டதால் அவர்களிடம் அவ்வாறான பாகுபாடு ஏற்பட்டது. மேலும் துவாரகை கடலில் மூழ்கி யாதவர்கள் முழுவதுமாக அழிந்தபோது, கிருஷ்ணரும் மறைந்தார். அப்பொழுது ஒன்பது கோள்களும் ஒரே கோட்டில் வந்ததால் கலியுகம் பிறந்ததாகக் கணக்கிடப்படுகிறது. அது 3102 BCEயிலிருந்து ஆரம்பிக்கிறது. இக்கலி சகாப்தம் குறிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான கல்வெட்டுகளும் ஆவணங்களும் உள்ளன.

[7] Romila Thapar, Asoka and the Decline of the Mauryas, Oxford University Press, New Delhi, 1987, p.167.

[8] Strabo, XV, I, p.59.

[9] Pseudo-Origen, Philosophia, p.24.

[10] மஹாபாரத யுத்தம் நடந்த பின்னர், க்ஷத்தியர்கள் பாண்டவர்-கௌரவர் என்று இருதரப்பில் சேந்து சண்டையிட்டதால் அவர்களிடம் அவ்வாறான பாகுபாடு ஏற்பட்டது. மேலும் துவாரகை கடலில் மூழ்கி யாதவர்கள் முழுவதுமாக அழிந்தபோது, கிருஷ்ணரும் மறைந்தார். அப்பொழுது ஒன்பது கோள்களும் ஒரே கோட்டில் வந்ததால் கலியுகம் பிறந்ததாகக் கணக்கிடப்படுகிறது. அது 3102 BCEயிலிருந்து ஆரம்பிக்கிறது. இக்கலி சகாப்தம் குறிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான கல்வெட்டுகளும் ஆவணங்களும் உள்ளன.

[11] J. Bloch, Les Inscriptions d’Asoka, Paris, 1950, p.128.

[12] D. R. Bhandarkar, Asoka, Univesity of Calcutta, 1969, P.27

[13] அசோகருடைய 14ம் கல்வெட்டு. Edict.No.I, The Sacredness of life.

[14] K.V. Ramakrishna Rao, The Position of Surgery before and after Buddha, in Sastra Trayi-Proceedngs of Bhaskariyam-Bharatiyam-Dhanvantariyam, 2007, Bangalore, pp.197-198.

Posted in அகத்தியர், அரேபியா, அறிவு ஜீவி, அறுத்தல், அறுவை சிகிச்சை, அறுவைசிகிச்சை, ஆத்மா, ஆனந்தம், ஆன்மா, ஆபரேஷன், ஆயுர்வேதம், ஆயுள், ஆயுள்வேதம், ஆரியன், ஆரியம், எலும்பியல், ஓலை, கடைசல் ஊசி, கத்தி, கந்தகம், கரைசல், காபாலிகம், காயம், சக்தி, சல்ய, சல்லிய, சிகிச்சை, சித்தார்த், சித்த்ஞானம், சிந்தனை, சீனா, திகம்பர, திகம்பரம், திரவிடம், திராவிடன், திராவிடம், திருமூலர், நரம்பு, பாதரசம், பாரதம், பிணம், பிண்டம், பித், பித்தம், மந்திரம், மனச்சிதைவு, மூச்சு, மூளை, மேரு, வில்லியம் ஜோன்ஸ் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 Comments »

ஜைனமத அல்லது ஜைனகாலத்தில் இருந்த சித்தர்கள்

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 9, 2012

ஜைனமத அல்லது ஜைனகாலத்தில் இருந்த சித்தர்கள்

 

ஜைனமதம், தோற்றம், காலம்: ஜைனமத்தைத் தோற்றுவித்த மஹாவீரர், ஒரு அரசர் / க்ஷத்திரியர். அவருடைய காலம் சுமார் 599-527 BCE என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும், உண்மையான தேதி குறிப்பிடப்படாமல் உள்ளது[1]. 23வது தீர்த்தங்கரான பாஸ்வநாதருடைய காலம் c.872-772 BCE என்று கணிக்கப்பட்டுள்ளது. மற்ற ஜீனர்களின் காலம் கிருஷ்ணர் காலம் c.3100 BCE வரைச் செல்கிறது. இந்தியாவில் ஜைனர்களின் ஆளுமை, அரசாட்சி மற்றும் ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது. பெரும்பாலான வீரர்கள் / க்ஷத்திரியர்கள் மற்றும் வணிகர்கள் / வைசியர்கள் ஜைனமதத்தினராக இருந்ததினால், அவர்கள் இந்தியாவின் பெரும்பகுதியை ஆளமுடிந்தது. பாரதத்தின் (இக்கால இந்தியாவின் வடமேற்கு-மேற்குப்பகுதிகள்) மேற்குப்பகுதியில் ராஜஸ்தானை மையமாக வைத்துத் தோன்றிய ஜைன மதம், ஒரு க்ஷத்திரிய (வீரர்களின்) மதமாகும். வீரம்தான் பிரதானம் என்றதால் அவர்கள் அடிக்கடி வீரதீர செயல்களில் ஈடுபட்டிருந்தனர். மற்ற அரசர்களை வெல்வதில் ஈடுபட்டிருந்தனர். வென்ற நாடுகளில் தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி, வியாபாரம் மூலம் செல்வாக்குப் பெற்றனர். இதனால் க்ஷத்திரிய-வைசியகூட்டு/கூட்டணி ஜைனத்தில் பிரதானமாக இருந்தது. இது, பிறகு வந்த பௌத்தத்திலும் பெரும் பங்கு வகித்தது[2]. அடிக்கடி சண்டை-போர்கள் என்றாலே அடிப்பட்டவர்களுக்கு, கை-கால் இழந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனைகளின் அவசியம் தேவையாகிறது.

ஜைனமதம் பேரரசர்களின் / சக்கரவர்த்திகளின் மதம்: பெரிய அரசர்கள் – சந்திரகுப்த மௌரியர், பிம்பிசாரர், அசோகன்[3], காரவேலன் எல்லோருமே ஜைனர்கள் தாம். 63 மிகப்பெரிய மனிதர்கள் என்ற பாடியலிலும் க்ஷத்தியர்களே வருகின்றனர்:

  1. தீர்த்தங்கரர்   – 24
  2. சக்கரவர்த்தி  – 12
  3. பலதேவர்     – 9
  4. வாசுதேவர்     – 9
  5. பிரதிவாசுதேவர் – 9

ஜெகோபி என்ற ஆராய்ச்சியாளர்கள், கிருஷ்ணரின் கதைகளை வைத்துக் கொண்டுதான், 24ஐ 63 என்று பெருக்கியிருக்கிறார்கள் என்று எடுத்துக் காட் டியுள்ளார்[4]. ஏனெனில் அந்த ஜைனகதைகள் கிருஷ்ண-பலராமர் கதைகளைப் போன்றேயுள்ளன. ஜைனர்கள் மக்களிடையே பிரபலமாகயிருந்த இதிகாச-புராணங்களை ஜைனமதரீதியில் மாற்றியெழுதினர். அதுமட்டுமல்லாது, ஜைனர்கள் கல்வித்துறையிலும் அதிக ஆதிக்கம் செல்லுத்தினர். மடாலயங்களில் நூலகங்களை உருவாக்கி பற்பலத்துறை நூல்கள் சேகரிக்கப்பட்டன. திகம்பர ஜைனர்கள் தனியாக, தூரத்தில் வசித்து வந்ததால், அவர்கள் தங்களது நேரத்தை இதில் செலவழித்தனர். இதனால், அவர்காலத்தில், பிரபலமாக இருந்த இலக்கியங்கள் திருத்தம் செய்யப்பட்டன. பெரும்பாலான மக்களின் இலக்கியங்களான ராமாயணம்-மஹாபாரதம் போன்றவை இருந்ததால், அவற்றிற்கு இணையான இலக்கியங்களை உருவாக்க முயன்றன. மஹாபாரத்திலும் இடைசெருகல்கள் செய்தனர். இராமாயணத்திற்கு எதிராக, அவர்களே ஒரு இராமாயணத்தை உருவாக்கினர். அதுதான் இப்பொழுது “ஜைன இராமாயணம்” என்று வழங்கிவருகிறது[5]. அதனால்தான், இதிகாசங்களில் ஜைனர்களின் பெயர்கள் வருகின்றன. தசாவதாரத்திற்கு இணையாக தமது தீர்த்தங்கர்களின் புராணங்களை உருவாக்கினர் (விவரங்களுக்குக் கிழே பார்க்கவும்). தெற்கிலும் மேற்குக் கடற்கடற்கரை வழியாக அவர்களின் ஆதிக்கம் வளர்ந்தது. சுமார் 450 CE காலத்தில், தமிழகத்தில் மதுரையில் நாகநந்தி தலைமையில் தமிழ்சங்கம் இயங்கி வந்தது. இதனால், அவர்கள் தமிழ் இலக்கியங்களையும் திருத்தினர்[6]. இதனால் எல்லாமே ஜைனர்களின் நூல்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது[7].

ஜைனமதம்பாரத்தின்மேற்கில்பரவியவிதம்: திகம்பர-ஆடையணியாத மற்றும் ஸ்வேதாம்பர-வெண்ணிற ஆடையணிந்த ஜைனர்கள் ஆரம்பகாலத்திலேயே இந்தியாவிலிருந்து வெளியேற நேர்ந்தது. இதனால் அவர்கள் மேற்கில் சென்று, மத்தியத்தரைக்கடல் நாடுகளில் தங்கியபோது, எஸ்ஸென்ஸ் (Essences), கினாஸ்டிக் (Gnostic), அயோனியர் (Ionean), மணிக்கியர் (Manichean) என்று பற்பல பெயர்களில் அழைக்கப்பட்டனர்[8]. தாம் பிறகு கிரேக்கர்கள் ஆயினர். கிரேக்க சித்தாந்திகள், தத்துவஞானிகள் எல்லோருமே திகம்பரர்கள்தாம். அதாவது ஆடையணியமாட்டார்கள். சிம்போசியம் (Symposium) என்றாலே, ஆடையில்லாமல் வந்து தர்க்கிக்கும், வாதாடும் இடம் என்று பொருள்[9]. ஆரம்பகால ஒலிம்பிக் விளையாட்டுகளில் வீரர்கள் நிர்வாணமாகத்தான் பங்கேற்றனர்[10]. இவ்வாறு ஜைனர்கள் கிரேக்கர்கள் ஆனதை மறைக்கத்தான், ஆங்கிலேயர் அலெக்சாந்தர் கட்டுக்கதையை புனைந்து, அவர் இந்தியாவை வென்றார், அதனால்தான் இந்தியர்களுக்கு எழுத்துமுறை வந்தது, கல்லிலே சிற்பங்கள் வடிக்க-வீடுகளைக் கட்டிக் கொள்ள கற்றுக் கொண்டான், வானியலைக் காப்பியடித்தார்கள், என்றெல்லாம் எழுத ஆரம்பித்தனர். உண்மையில் அலெக்சாந்தர், இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் நுழைந்தபோது, போரஸிடம் தோற்று ஓடிப்போனான். இதனை இப்பொழுது வெளிவந்த (2000) அலெக்சாந்தர் என்ற திரைப்படமும் எடுத்துக் காட்டுகிறது[11]. அப்பொழுது இந்திய ரிஷி-முனிகளை-தத்துவஞானிகளைக் வலுக்கட்டாயமாக கடத்திக் கொண்டு போனான்[12].  அதாவது பாரத நிர்வாண (Gymnophists) சாமியார்களைத் தூக்கிக் கொண்டு போனான் என்று அவர்கள் எழுதிவைத்தனர். அவர்களே நிர்வாணத்தைக் கடைபிடித்தபோது, அவர்கள் தத்துவஞானிகள், அறிஞர்கள் நிர்வாணத்தைக் கடைபிடித்தபோது, இவன் ஏன் நிர்வாண (Gymnophists) சாமியார்களைத் தூக்கிக் கொண்டு போனான் என்ற கேள்வி எழுகின்றது. மேலும் அவன் தனது நாட்டிற்குச் செல்லும் முன்னரே இறந்துவிடுவதால், யார் அவர்களை எடுத்துச் சென்றிருக்கக் கூடும் என்ற கேள்வியும் எழுகின்றது. ஒருவேளை முன்னர் பைதாகோரஸ், பிளாட்டோ முதலியோர் இந்தியாவிற்குச் சென்றனர் என்பதனை இப்படி மாற்றி எழுதினர் போலும். எல்லாவற்றையும் தலைகீழாக்குவது, மாற்றி-மாற்றி எழுதுவது அவர்கள் வழக்கம் என்பதனால் இவ்வாறு பொருள் கொள்ளவேண்டும் போலிருக்கிறது.

கிரேக்கர்களின்நுழைவுஅல்லதுவரவு (c.300-200 BCE): நாடுகடத்தப் பட்ட, பாரதத்தில் ஏற்றுக்கொள்ளப்படாத, இந்திய-கிரேக்கர்கள் மறுபடியும் இந்தியாவில் நுழைய முயற்சித்திருக்கலாம். அத்தகைய போராட்டங்கள் இந்தோ-கிரேக்கர்கள் என்ற கலப்பையுண்டாக்கியிருக்கலாம். ஆனால், போராட்டங்கள் இல்லாமலும் இந்திய-கிரேக்கர்கள் பாரத்தத்திற்கு வந்துள்ளனர். இந்தியா அக்காலத்தில் விஞ்ஞானம், மருத்துவம், முதலிய துறைகளில் சிறந்து விளங்கியதாலும், அதற்கான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் (ஆசிரமங்கள்) இருந்ததினாலும், பல பாரதத்திற்கு கற்க வந்தனர். சுமார் 300 BCE க்தேசியாஸ் (Keasiast) மற்றும் மெகஸ்தனிஸ் (Megasthanese) என்ற இரு கிரேக்க மருத்துவர்கள் இந்தியாவிற்கு வந்து வடவிந்தியாவில் தங்கியதாக மேனாட்டு சரித்திராசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். முன்னர் கிரேக்க தத்துவஞானிகள், அறிஞர்கள் – பிதாகோரஸ்[13] (Pythagorus c.560-480 BCE), பிளாட்டோ[14] (Plato – 427-347 BCE) முதலியோரும் வந்துள்ளதாக அவர்களேக் குறிப்பிட்டுள்ளனர்[15]. பொதுவாக கிரேக்க நுழைவுகளினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, ஏனெனில் அவர்கள் க்ஷத்தியர்களில் தாழ்ந்தவர்களாக (degraded), விலக்கி வைக்கப்பட்டவர்களாக (excommunicated) பிரிந்து போனவர்களாக, இந்தியமுறைகளினின்று மாறுபட்டவர்களாகக் கருதப்பட்டனர்[16].  எட்வர்ட் போக்காக் (Edward Pococke), காலனில் டோட் (Col. Tod), வில்லியம் ஜோன்ஸ் (William Jones) போன்றவர்களும் இதனை எடுத்துக் காட்டியுள்ளனர். ஜைன-பௌத்தர்களுக்குப் பிறகு அரேபியர் மற்றும் முஸ்லீம்களான அரேபியர்களால்தான் அதிக தாக்கம், மாறுதல் மற்றும் அழிவுகள் ஏற்பட்டன.

சிந்துசமவெளிமற்றும்மௌரியஅரசுஇடைவெளிக்காலசரித்திரம்என்னவாயிற்று?: ஆங்கிலேய எழுத்தாளர்கள் (English historiographers) எழுதிவைத்ததைப் போல, இந்திய சரித்திரம் அலெக்சாந்தரின் படையெடுப்பிலிருந்து ஆரம்பிக்கிறது (Alexander’s invasion as the sheet anchor of Indian history) என்பது பொய்யான சரித்திரம் ஆகும். சிந்துசமவெளி மற்றும் மௌரிய அரசு இடைவெளிக்கால சரித்திரத்தை மறைக்க முடியாது. சிந்துசமவெளி நாகரிகத்தின் உச்சநிலை c.2250-1850 BCE (peak period of IVC) என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. பின்னோக்கிச் செல்வதற்கு c.9500 BCE வரை அகழ்வாய்வு அத்தாட்சிகள் உள்ளன. ஆகவே திடீரென்று c.300 BCE வாக்கில் சந்திரகுப்தர் பேரரசராகத் தோன்ற முடியாது, அவரது பேரன் அசோகன் மிகப்பெரிய அரசனாக – சக்கரவர்த்தியாக, “தி கிரேட்” (Asoka, the Great) ஆகியிருக்க முடியாது. பெறுமையிலிருந்து ஒன்றும் வராது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும், இந்தியர்களை அவ்வாறு ஏமாற்றியிருக்கிறார்கள். இன்றைக்கும் அதனை இந்தியர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே c.2250-1850 BCEலிருந்து c.300 BCE வரை பாரதத்தில் என்ன நடந்தது என்று அவர்கள் ஏன் சொல்லவில்லை? 1800 வருடங்களில் பாரத மக்கள் இல்லாமலேயிருந்தார்களா அல்லது மறுபடியும் பரிணாம வளர்ச்சியில், பழங்கற்காலம் (paleaolithic)-பெருங்கற்காலம் (megalithic), இடை-பழங்கற்காலம் (mesolithic), புதிய-பழங்கற்காலம் (neolithic), என்று வளர்ந்து மௌரியர்களாக மாறினார்களா?

சிந்துசமவெளி நாகரிகத்தின் மருத்துவ சரித்திரம் எழுதப்பட வேண்டும்: மூளை, பல் முதலிய அறுவைசிகிச்சைகள் நடந்திருக்கின்றன, உலோகவியலில் மிகச்சிறந்தவர்களாக இருந்திருக்கின்றனர், ஆரோக்யமான வாழ்வு வாழ்ந்திருந்தனர். பிறகு அவர்களுடைய மருத்துவமுறை ஏன் ஆராய்ச்சி செய்யப்படவில்லை? 5000-10,000 வருட காலத்தைய வரலாற்றை மறைக்க முடியாது. அத்தனையாண்டு காலமக்கள் கற்கால மக்களாக்வே இருந்திருக்க மாட்டார்கள். நன்றாக நாகரிகமுள்ள, விஞ்ஞான-தொழிற்நுட்பமுள்ள நாகரிக மக்களாகத்தான் இருந்திருக்க வேண்டும், இல்லையென்றால் சிந்துசமவெளி நாகரிகமே பிறந்திருக்காது. அதுபோலவே அவகளின் ஆரோஜ்க்யமான வாழ்க்கைமுறை, மருத்துவமுறை, மருத்துவமனைகள் முதலியனவும் சிறந்திருக்கவேண்டும். அவரது எழுத்துமுறையை அறிந்து கொள்ளாமல், இக்காலத்தவர் அதனை படிக்க முடியாமல் இருப்பதனால், அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று அமைதியாக இருந்துவிட முடியாது.

ஏகப்பட்ட சங்குகள் கிடைத்துள்ளன. சங்கு மூலம் மருந்துகளை ஊட்டுவது பாரத மக்களின் வழக்கம்[17]. கருப்பு நிறத்தில் கரிபோல சிலாஜித் அல்லது சிலாஜாது என்ற மருந்து மருந்து சிந்துசமவெளி நாகரிகத்தின் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது[18]. இவ்வாறு இயற்கையில் கிடைக்கும் கனிமத்தை அதன் தன்மையையறிந்து மருந்தாக உபயோகப்படுத்தப்பட்டது 8000-9000 வருடங்களுக்கு முன்பு. இது ஹிமாலய-கற்களிலிருந்து வெளிவரும் கனிமப்பொருளாகும். ஆயுர்வேத மருந்துவர்கள் இதனை நன்றாக அறிந்திருந்தனர். சரகர், இதைப்பற்றி சொல்வதாவது, “இதனால்தீர்க்கப்படமுடியாதநோய்எதுவுமேஇல்லைஎன்றுசொல்லலாம்”. இதைத்தவிர பெருங்காயம் தயாரிக்க உபயோகப்படும் அஸப் / அஸபிடிடா (Asafetida = hing) என்ற கோந்து வகை இப்பிரதேசத்தில் (காந்தாரம் = தற்போதைய ஆப்கானிஸ்தானம்) கிடைக்கிறது[19]. ஹரப்பாவில் ஒரு அலங்கரிக்கப்பட்ட மட்பாத்திரத்தில் லெட்-கார்போனேட் = கரி-காரீய உலோகக்கலவை தூள் கிடைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது சின்னபார் = பாதரச சல்பைடும் கிடைத்துள்ளது. இவை எதற்காக உபயோகப்பட்டது என்று தெரியவில்லை என்று சர் என்வின் பாஸ்கோவ் கருத்துத் தெரிவித்தார். அழகுசாதனப் பொருள் அல்லது மருந்தாக உபயோகப்பட்டிருக்கலாம் என்றும் தனது யூகத்தை வெளியிட்டார்[20]. மற்ற கனிமங்களின் பகுப்பாய்வு முடிவுகளைப் பட்டியலிட்டுள்ளபோது, இவற்றின் முடிவுகளை – அவற்றின் கனிமகலப்பு விகிதங்களை ஏன் வெளியிடவில்லை என்று தெரியவில்லை.

ஆரிய-திராவிட இனவாதங்களை செய்யும், காலத்தை விரயமாக்கும் அறிவுஜீவிகள் எல்லாம் இதைப்பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. படித்தும் இருக்க மாட்டார்கள். இனி இதைப் படித்துவிட்டு, தாமே அறிந்த மாதிரி, சிந்துசமவெளியிலேயே தமிழ் சித்தர்கள் ரசவாதம் புரிந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன என்று எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் நம்மாட்கள் காப்பியடிப்பதில் வல்லவர்கள். அடுத்தவர்களின் ஆராய்ச்சியை, அறிவைத் திருட வல்லவர்கள். “சித்தர் பாடல்களையே” அவ்வாறு தயாரித்திருக்கும்போது, இதெல்லாம் அவர்களுக்கு சொல்லித்தரவேண்டுமா என்ன?

© வேதபிரகாஷ்

07-09-2012


[1] The date of Pasvanatha, the 23rd Tirthankara is given as c.872-772 BCE. Kalanemi and other examples prove that Jaina-like creed was there during Krishna period (c.3100 BCE).

[2] ஐம்பெருங்காப்ப்பியங்களிலும் இந்த க்ஷத்திரிய-வைசியகூட்டு இணைப்பு செயல்பட்டதைக் காணலாம்.

K. V. Ramakrishna Rao, Hindu Dharma in the Five Great Epics, Hindu Dharma Sabha, Chennai – 600 031, January 2000. The author explains the prevalent of Indian religions in Tamizhagam as reflected in the literature and as well as the Buddhist and Jaina bias in the literature, particularly noted in the works of Manimekhalar by Sittalai Sattanar and Civaka Cintamani by Tiruttakka Thevar.

[3] அசோகன் என்ற பெயரில் இரண்டு பேர் இருந்திருக்கிறார்கள் – ஒருவன் ஜைனமதத்தைச் சேர்ந்தவன். கல்ஹணரால் குறிப்பிடப்பட்டவன். இன்னொருவன் சந்திரகுப்த மௌரியரின் மைந்தன், புத்தமதத்தைத் தழுவி, உலகம் முழுவதும் பரப்பியவன். வின்சென்ட் ஸ்மித் என்ற ஆங்கிலேய அதிகாரித்தான், இருவரும் ஒன்று என்று இணைத்து, இருந்த கல்வெட்டுகளையும் அவ்வாறே படித்து திரித்து எழுதினார்.

Edward Thomas, Jainism or the Early Faith of Asoka, Asian Educational Services, New Delhi, 1995 (Reprint of 1877 edition, London: Trurner & Co., 57 and 59, Ludgate Hill).

[4] Jagdishchandra Jain, Life in Ancient India as depicted in Jaina Canon and Commentaries, Munshiram Manoharlal Publishers, New Delhi,  1984, p.444.

[5] இதைவைத்துதான், நாத்திகர்கள், இந்துவிரோதிகள் புரட்டுக் கதைகளையும், தூஷணங்களையும் செய்து வருகின்றனர். இதனால் “விடியவிடிய இராமாயணம் படித்துவிட்டு, சீதைக்கு ராமன் சித்தப்பா என்றானாம்”, என்ற பழமொழியே உண்டாயிற்று!

[6] Tirugnana Sambandar, Thevaram, Sri Kasi Madam, Tanjore, 1996. It gives ample evidences as to why even docile devotee should have gone to the extent of debating with Jains to contain their evil-propaganda against nourished tradition, heritage and culture of India. Moreover, the trend set by the Buddhists and Jains was to create and circulate literature as their own, but in fact to confuse the existing tradition, heritage and culture. In education and teaching, Indian system never faced such degradation carried on under the guise of “Sangha” purportedly to promote education. Ironically, the abusive Jains were producing many ethical books also, which are covered under “Padinen Kizh Kanakku”.

K. V. Ramakrishna Rao, Hindu Dharma in the Five Great Epics, Hindu Dharma Sabha, Chennai – 600 031, January 2000.  அடிக்குறிப்பு.29.

[7] இன்றைக்கும் இடைச்செருகல்களை வைத்துக் கொண்டு, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, தொல்காப்பியம், திருக்குறள் முதலிய நூல்களுக்கு காலநிர்ணயம் செய்துவரும் அறிவுஜீவிகள், அவற்றை 7-8-9-10-11-12 நூற்றாண்டு என்று நீட்டிவருகின்றனர்.

[8] Edward Pockocke, Indian in Greece, entire book available in e-book form online.

Col. Tod, Annals and Antiquities of Rajasthan, Motilal Banarasidas, New Delhi.

[9] Jeffrey M. Hurwit, The Problem with Dexileos: Heroic and other Nudities in Greek Art, American Journal of Archaeology, Vol.111, No.1, January 2007, pp.35-60.

[10] John Mouratidis, The Orign of Nudity in Greek Athletics, Journal of Sport History, Vol.12, No.3 (Winter, 1983), pp.213-232.

[11] பலகோடிகள் செலவழிக்கப்பட்டு, பல சரித்திராசிரியர்களுடன் கலந்தோலாசிக்கப்பட்டு, அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த சான்றுகளை அப்படியே புணர்நிர்மானம் செய்து காட்சிகளைப் படமாக்கியிருக்கின்றனர். அதில் அலெக்சாந்தரின் குதிரை போரஸின் யானையைப் பார்த்து பயந்து பின்வாங்குகிறது. அப்பொழுது, ஒருவன் எரிந்த ஈட்டி அலெக்சாந்தரின் மார்பில் பாய்ந்து பின்பக்கமாக விழுகிறான். பலத்த காயமடைகிறான். யானைப்படைக் கண்டு, கிரேக்கர்களின் குதிரைப்படை பயந்தோடுகிறது. செல்லும் வழியிலேயே அலெக்சாந்தர் இறக்கிறான். அதாவது, அலெக்சாந்தர், போரஸிடன் தோற்றுப் போகிறான், ஆனால் ஆங்கிலேய எழுத்தாளர்கள், இதனை தலைகீழாகப் புரட்டி, புரட்டு சரித்திரம் எழுதிவைத்துச் சென்றுள்ளனர்.

[12] இதேமுறைத்தான் பிறகு வந்த கோரிமுகமது, கஜினிமுகமது பொன்ற கொள்ளைக்காரர்கள் கையாண்டனர். அவர்கள் கூட்டமாக வந்தபோது மருத்துவர்கள் முதலியோரைக் கடத்திக் கொண்டு சென்றனர். இப்பொழுதும் சிறந்த விஞ்ஞானிகள் கடத்தப் படுகின்றனர் அல்லது பணம், பதவி ஆசைக்காட்டி இழுத்துக் கொள்கின்றனர். கடைப்பிடிக்கும் முறைகள் காலங்களில் மாறினாலும், குறிக்கோள் ஒன்றுதான்.

[13] Pythagoras arrived in India too late to come into personal contact with the Buddha, he was greatly influenced by his teachings. He went to India a student, he left it as a teacher, and even to this day he is known in that country as Pitar Guru, and as Yavanacharya, the Ionian Teacher.

http://www.ship.edu/~cgboeree/greeks.html; http://9waysmysteryschool.tripod.com/sacredsoundtools/id13.html

[14] Typically Indian are the dying words of Plotinus, noblest of the Neo-platonists “Now I seek to lead back the self within me to the All-self.” One great teacher has said, “The end of knowledge is to know God – not only believe; to become one with God – not only to worship afar off.” We gain a hint in the Kathopanishat (V1- 17) “Let a man with firmness separate it (the soul) from his own body, as a grass stalk from its sheath,” to which point we will return later.

[15] Richard Garbe, India and Christendom, He points out, “…………….the historical possibility of the Greecian world of thought being influenced by India through the medium of persia must unquestionably be granted, and with it the possibility of the above-mentioned ideas (of the Sankyan and Vedanta Philosophy) being transferred from India to Greece”.

E. W. Hopkins says: “Plato is full of Sankhyan thought, worked out by him, but taken from Pythagoras. Before the sixth century B.C. all the religious philosophical ideas of Pythagoras are current in India. (L. Schroeder, Pythagoras). If there were but one or two of these cases, they might be set aside as accidental coincidences, but such coincidences are too numerous to be the result of change. ”

[16] மஹாபாரத யுத்தம் நடந்த பின்னர், க்ஷத்தியர்கள் பாண்டவர்-கௌரவர் என்று இருதரப்பில் சேந்து சண்டையிட்டதால் அவர்களிடம் அவ்வாறான பாகுபாடு ஏற்பட்டது. மேலும் துவாரகை கடலில் மூழ்கி யாதவர்கள் முழுவதுமாக அழிந்தபோது, கிருஷ்ணரும் மறைந்தார். அப்பொழுது ஒன்பது கோள்களும் ஒரே கோட்டில் வந்ததால் கலியுகம் பிறந்ததாகக் கணக்கிடப்படுகிறது. அது 3102 BCEயிலிருந்து ஆரம்பிக்கிறது. இக்கலி சகாப்தம் குறிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான கல்வெட்டுகளும் ஆவணங்களும் உள்ளன.

[17] Jonathan Mark Kenoyer, Ancient Cities of the Indus Valley Civilization, American Institute of Pakistan Studies, Oxaford University Press,  Pakistan, 2000, p.119. See also “Shell working industries of the Indus Civilization” by the same author.

[18] John Marshall (Ed.), Mohenjo-Daro and the Indus Civilization, Vol.II, Asian Educational Services (Reprint), New Delhi, 1996, p.689. See under Chapter XXXII – Minerals and Metals and Appendices.

[19] Jonathan Mark Kenoyer, Ancient Cities of the Indus Valley Civilization, American Institute of Pakistan Studies, Oxaford University Press,  Pakistan, 2000, pp.169-170.

[20] John Marshall (Ed.), Mohenjo-Daro and the Indus Civilization, Vol.II, Asian Educational Services (Reprint), New Delhi, 1996, pp.690-691.

Posted in சத், சித்தாந்திகள், ஞானி, தத்துவஞானிகள், திகம்பர, திகம்பரர், துறந்தவர், துறவி, நிர்வாணம், பித், பித்தம், பித்து, பிரமை | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »