சித்தர்களின் மூலம், பாரம்பரியம், இன்றைய நிலை

வரலாற்று நோக்கில் சித்தர்கள் ஆராய்ச்சி

Archive for the ‘தந்திரம்’ Category

1450 BCEயிலிருந்து முகமதுநபி (570-632 CE) காலம்வரை அரேபியாவில் வாழ்ந்தவர்கள் யார்?

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 23, 2012

1450 BCEயிலிருந்து முகமதுநபி (570-632 CE) காலம்வரை அரேபியாவில் வாழ்ந்தவர்கள் யார்?

 

இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக இஸ்லாமிற்கு-முகமது நபிக்கு முன்னர் அரேபியாவில் வாழ்ந்தவர்கள் யார் என்ற கேள்வி எழுகின்றது. அக்காலத்தில் சுற்றிலும் இருந்த நாகரிகத்தவர் சிறந்திருந்ததால், அரேபிய மக்களும் சிறப்பான நாகரிகத்தைக் கொண்டிருக்க வேண்டும். அவர்களில் முனிவர், அறிஞர், சித்தர், ஞானியர் போன்றோர் இருந்திருக்கவேண்டும். மக்கள் ஆரோக்யம், உடல்நலம் விஷயங்களிலும் சிறந்திருக்க வேண்டும். அதற்கான மருத்துவமுறையும்  இருந்திருக்க வேண்டும்.  அப்படியிருக்கையில், இஸ்லாமிற்கு-முகமது நபிக்கு முன்பான அரேபிய சரித்திரம் இருட்டடிக்கப் பட்டுள்ளது. அம்மக்கள் இருண்ட காலத்தில், அறியாமையில், விக்கிர ஆராதனை போன்ற பாவச்செயல்களில் ஈடுபட்டிருந்தனர் என்றும் விவரிக்கப்படுகிறது. ஆனால், அவர்களின் மொழியான அரேபியமொழி இன்றைய முஸ்லீம்களுக்கு தேவமொழியாக இருக்கிறது. நபி பேசிய மற்றும் குரான் மொழி அரேபிய மொழிதான். பிறகு அத்தகைய தேவமொழியைப் பேசி வந்தவர்கள் எப்படி இருண்ட காலத்தில், அறியாமையில் மூழ்கியிருந்தார்கள் என்று தெரியவில்லை.

அரேபியாஎன்பதுஎன்ன?: ஜைனர்கள் பாரத்தத்தின் வடமேற்குப் பகுதி வழியாக வெளியே சென்றனர், கிரேக்கர் உள்ளே வந்தனர் எனும்போது, அரேபியாவிற்கும் அவ்வாறுதான் சென்றிருப்பர். முதலில் அரேபியா மற்றும் அரேபியர் என்பன என்னவென்று புரிந்து கொள்ளவேண்டும்[1], ஏனெனில் இஸ்லாமிற்கு – நபிக்கு (570-632 CE) முன்பான அரேபியர்களைப் பற்றிய முழு விவரங்களை சரித்திர ஆசிரியர்கள் முழுமையாகக் கொடுப்பதில்லை. அவற்றை நூறு-இருநூறு ஆண்டுகள் பழமையான புத்தகங்களினின்று பெறவேண்டியுள்ளது. ஜெஸிரத்-அல்-அரப் (Jezirat-al-arab) என்பவர்கள் அரேபியாவில் இருந்தவர்கள் என்றும், அவர்கள் இருந்த இடம் அரபிஸ்தான் (Arabistan) என்றும் பாரசீகர்கள் மற்றும் துருக்கியர்கள் குறிப்பிட்டு வந்தார்கள்[2]. “ஜெஸிரத்அல்அரப்” என்றால் “அரேபியரது தீவு” என்று பொருள். அதாவது முன்னர் அரேபியா தீவாக இருந்ததா அல்லது அரேபியர் மற்ற மக்களிடமிருந்து தனித்து இருந்தார்களா என்று தெரியவில்லை. பாரசீகர்கள் ஒரு “சத்ரப்பை”த் தொடங்கி அதற்கு “அராபியா” என்று பெயரிட்டனர்[3]. பாரசீக “சத்ரபி” என்ற சொல் “க்ஷத்ரபாவ” என்ற சமஸ்கிருத சொல்லினின்று உருவானது, க்ஷத்திரியர்கள் வாழும் / ஆட்சிசெய்யும் இடம் என்று பொருள். “அரேபியா” என்றால் சதுரமான இடம் என்று பொருள். அரேபிய மொழியில் “மக்பி” என்றால் கனச்சதுரம் மற்றும் “காபா” என்பது முஸ்லீம்கள் வழிபடும் இடமாகும். “அரப்” என்றால் “பதவியா / பெதுவியா” என்ற நாடோடிக் கூட்டத்தையும் குறிக்கும். யூதமொழியில் “இரப்” என்றல் பாலைவனம், அதாவது செமித்திய மொழியிலும் பாலைவனம் மற்றும் அங்குவாழும் மக்களைக் குறிக்கிறது ஆனால் எந்த மக்களினத்தையோ, நாட்டையோக் குறிக்கவில்லை[4].

அரேபியர்கள்எவ்வாறுஅடையாளங்காணப்பட்டனர்?: அரேபிய அகராதிகளில் அரபி (ஆண்பால் ஒருமை. அரபியா (பெண்பால் ஒருமை) மற்றும் அரப் (பலவின்பால்) என்று அரேபிய மக்களைக் குறிக்கின்றன:

  1. ஒருவனுடைய மொழி அல்லது பேச்சு அரேபிக் மொழியானது அல்லது தூய்மையான அரேபியமொழியானது.
  2. அஜீரணமாகி, வயற்று உபாதையினால் அவஸ்தைப் படுபவன்.
  3. யாரொருவன் குழம்பி அல்லது சிதைந்து போயுள்ளானோ அவன்.
  4. யாரொருவன் அரேபியர்களுடன் கலந்து ஐக்கியமாகியுள்ளானோ அவன்.

பிறகு “அரப்” என்பது “அஜப்” என்ற வார்த்தையோடு ஒப்பிடும்போது, “அரப்” என்பது “தெளிவாகப் பேசுவது” ஆனால் “அஜப்” என்றால் தெளிவில்லாமல் பேசுவது அல்லது மற்றவர்களுக்குப் புரியாதமாதிரி பேசுவது என்று பொருள் கொள்ளப்படுகிறது. உண்மையில் பாரசீகர் அரேபியரை குறைவாக மதிப்பிட்டபோது, பதிலுக்கு அரேபியர் பாரசீகர்களை “அஜப்” என்று கூறிக் கிண்டலடித்தனர். சமஸ்கிருதத்தில் “ரப்” என்பது “சத்தம், கூச்சல், இரைச்சல்” என்று பொருள். “ரவ்” என்பது “ரப்” என்றும் உச்சரிக்கப்படும், அல்+ரவ் அல்லது அல்+ரப் =அரவ் / அரப் என்றானது. அதனால்தான் சத்தம்போடுபவனை, கூச்சலிடுபவனை “அரவவாடு” என்று தெலுங்கர் அழைக்கின்றனர். மேலும் இப்பகுதியில் குதிரைகள் உள்ளன அல்லது குதிரைகள் வரவழைக்கப்படுகின்றன என்பதால் “அரவஸ்தான்” என்று அழைக்கப்பட்டது[5]. அரபிஸ்தான்-அரவஸ்தான்-அரவத்தான்-ராவுத்தன் என்று தமிழில் பெறப்படுகிறது. மாவுத்தன் யானைப்பாகன் என்றால் ராவுத்தன் குதிரையோட்டியாகிறான்[6]. அதாவது குதிரைகளை வாங்குபவன், விற்பவன், வளர்ப்பவன், பழக்குபவன் என்றுள்ளது.

அரேபியர்கள் யார்?: இதைத்தவிர, அரேபியாவில் வாழ்ந்த எல்லோரும் அரேபியர் என்றழைக்கப்பாட்டாலும், அரேபிய எழுத்தாளர்கள், அவர்களைப் பிரித்துக் காட்ட, கீழ்கண்டவாறு அழைத்தனர்:

  1. அல்அரப்அல்பைதா = காணாமல் போன அரேபியர், மறைந்து போன அல்லது சரித்திரகாலத்திற்கு முந்தைய அரேபியர், முதல் அல்லது உண்மையான அரேபியர்.
  2. அல்அரப்அல்அரிபா = உண்மையான அரேபியர் அதாவது தென்னரேபியாவில் வாழும் அரேபியர் அல்லது கஹ்தான் வழிவந்தவர்கள் (ஜோக்தான் என்று பைபிளில் சொல்லப்படுகிறது).
  3. அல்அரப்அல்மூதா‘அர்ரிபா = அரேபியர்களுடன் ஐக்கியமானவர்கள், அல்-முஸ்தா ‘ரிபா = அரேபியர்களை நாடுபவர்கள், அரேபியமயமாக்கப்பட்டவர்கள். மோஸ்தராபியர் அல்லது இஸ்மாயில் வழிவந்தவர்கள்.

ஆகவே அரேபியாவில் இருப்பவர்கள் எல்லோருமே “அரேபியர்” அல்லர். அதேபோல இஸ்லாம் தோன்றி வளர்ந்தபிறகு, அரேபியாவில் இருந்தவர்கள் முஸ்லீம்களாக மாறியப் பிறகுக் கூட அரேபியர் எல்லோருமே “முகமதியர்”, “முசல்மான்கள்”, “முஸ்லீம்கள்” ஆகிவிடவில்லை. இந்திய கல்வெட்டுகளில் “துருக்கர், துலுக்கர், துருக்ஸாஸ்” எனப்படுபவர் எல்லோரும் முகமதியரா அல்லது துருக்கியிலிருந்து வந்தவரா என்றும் ஆராயவேண்டியுள்ளது. இஸ்லாம் தோன்றுவதற்கு முந்தைய இருந்த அரேபியர் மற்றும் இஸ்லாம் தோன்றிய பின்னர் அரேபியர் அனைவரையும் “முகமதியர்” என்றோ “இஸ்லாமியர் / முஸ்லீம்கள்” என்றோ எழுதிவைப்பது பிற்கால முஸ்லீம் எழுத்தாளர்களுக்கு வழக்கமாகியது[7].

அரேபியர்கள் இந்தியர்கள் செய்வதை தலைகீழாக செய்பவர்களா?: வேதமதத்தினர்-இந்துக்கள் செய்வதை தலைக்கீழாக செய்பவர்கள் ஜைனர்கள்-பௌத்தர்கள்-முகமதியர்கள் என்ற வழக்கும் உள்ளது. முதலில் ஜைனர்கள்-பௌத்தர்கள் அவ்வாறு செய்தாலும், பிறகு, பொதுவான இந்திய கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் மற்றும் நாகரிக காரணிகளால் சேர்ந்தே வாழ்ந்தார்கள். ஆனால், முகமதியர் ஆரம்பத்திலிருந்தே, வேறுபட்டு தலைகீழாக செய்து வந்ததால் அவர்களை “அரவநாட்டவர்” என்றே அழைத்தனர். தெலுங்குக்காரர்களை “கொலுடி” என்று தமிழர்கள் கலாட்டா செய்வது வழக்கம். அதாவது தெலுகு என்பதனை திருப்பிப் போட்டு குலுதி-குலுடி-கொலுடி என்று கிண்டல் செய்தனர். இதனால், தெலுங்கர் தமிழர்களை “அரவர் / அரவவாடு” என்று சொல்வதுண்டு. அதவாது துலுக்கர்களைப் போல தலைகீழாகச் செய்பவர்கள் என்ற பொருட்பட கூறினர். இந்துக்கள் அழுதால், துலுக்கர் சிரிப்பர்; இந்துக்கள் சிரித்தால், துலுக்கர் அழுவர்; குழந்தை பிறந்தால் அழுவர், யாராவது இறந்தால் சிரிப்பர் என்றெல்லாம் சொல்வதுண்டு. மேலே பாரசீகர்-அரேபியர் ஒருவரையொருவர் எவ்வாறுக் கூறிக் கொள்வர் என்று எடுத்துக் காட்டப்பட்டது. அதுபோல, ஆயிரக்கணக்கான வருடங்களாக அரேபியாவில் இருந்து வரும் பழக்க-வழக்கங்களை முழுவதுமாக மாற்ற முடியாது என்பதனால், அவற்றை மாற்றியமைத்திருக்கலாம்.

சதுரமானகனச்சதுரமானஇடம்“சதுரகிரியா”அல்லதுகாபாவா?: காபாவைப் பொறுத்தவரையிலும், நிச்சயமாக அது முகமதியர்-முஸல்மான்-முஸ்லீம்களின் வழிபாட்டு ஸ்தலமல்ல. “காபத்துல்லா” என்றழைக்கப்பட்ட “இறைவன் உறையும் இடத்தில்” – வளகத்தில் நடுவில் ஒரு விக்கிரகம் இருந்தது, அதனைச் சுற்றி 360 விக்கிரங்கள் இருந்தன. அவை சதுரமாக அல்லது வட்டவடிவில் வைக்கப்பட்டிருந்தனவா என்று தெரியவில்லை. ஏனெனில், சித்திரங்கள் இருவிதமாகவும் சித்தரித்துக் காட்டுகின்றன. எப்படியாகிலும் வட்டத்தை-சதுரமாக, சதுரத்தை-வட்டமாக்கும் வித்தைகளை இந்தியர்கள் தாம் அறிந்திருந்ததால், குறிப்பாக மந்திர-தந்திர-யந்திர வித்தைகளில் ஈடுபட்டிருந்ததால், அவ்வளாகம் அவ்விதமாக அமைக்கப்பட்டிருந்தது என்றறியலாம். 64-யோகினி-ஜோகினி கோவில்கள், வளாகங்கள் அவ்விதமாகவே அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதனை இந்தியாவில் காணப்படும் உதாரணங்களினின்று அறிந்து கொள்ளலாம்.  காபாவின் தரைப்படம் மற்றும் இந்த யோகினி கோவில்களின் தரைப்படங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மையினைப் பார்த்தேத் தெரிந்து கொள்ளலாம். இதனால் தான், முகமதியர் இந்தியாவில் நுழைந்தபோது, நபி அழித்தவையெல்லாம் இங்குள்ளனவே என்று அவரைப் போலவே செய்யவேண்டும் என்றுதான், முகமத் கஜினி, முகமது கோரி முதலியோர் செய்தனர். அதாவது அத்தகைய கோவில்களை அழித்தனர், விக்கிரங்கள உடைத்தனர், புத்தகங்களை எரித்தனர். ஒரிஸ்ஸாவில் உள்ள 64-ஜோகினி கோவில் ஓரளவிற்கு புனர்நிர்மாணம் செய்யப்பட்டிருக்கும் போது, மத்தியப்பிரதேசத்தில் உள்ள 64-ஜோகினி கோவில் எந்த அளவிற்கு சேதப்படுத்தப் பட்டுள்ளது என்பதனை அச்சிற்பங்களை வைத்தே கண்ட் உ கொள்ளலாம். சோமனாதபுரம் அல்-லத் என்ற விக்கிரமாக இருக்கும் என்றுதான் 17 முறை வந்து விக்கிரகத்தை-சிவலிங்கத்தை உடைத்தழித்துச் சென்றான்.

நபிகள் விட்டு வைத்ததை நபிகளின் வழிவந்தவர்கள் சிதைத்தது ஏன்?: நடுவில் ஒரு சதுரம், அதில் பிரதான தேவதை-பெண் கடவுள், சுற்றி வட்டத்தில் 64 தேவதைகளின் விக்கிரங்கள், சிற்பங்கள் இருக்கும். இவையெல்லாமே வெவ்வேறான பெயர்களில் குறிப்பிடப்படும் சக்திகள் தாம். அதேபோல, காபாவில் 360 விக்கிரங்கள் இருந்ததை முகமதியர்களே ஒப்புக் கொண்டுள்ளனர். அல்-அஜர்கி என்பவர் மற்றப;அ விக்கிரங்கள், ஓவியங்கள் காபாவில் இருந்ததாகக் கூறியுள்ளார்[8]. அவற்றை நபி அழித்தாலும், நடுவில் இருந்ததை அங்குள்ள மக்களின் வேண்டுகோளின் மீது விட்டு வைத்தார். ஆனால், பின்வந்தவர்கள் அதனையும் விட்டு வைக்காமல் உடைத்ததாலும், ஏரித்ததாலும் அவ்விக்கிரகம் சிதைந்து உருமாறிவிட்டது. 930ல் மெக்காவிலிருந்து தூக்கிச் செல்லப் பட்ட அக்கல் அல்லது கற்பாகங்கள் 931ல் திரும்ப கொண்டு வந்து வைக்கப்பட்டது[9]. அதாவது அவர்கள் நபியைப் போலவே தாங்களும் அத்தகைய வேலையை செய்யவேண்டும் என்ற போக்கில், இருப்பதையும் அழிக்கத்துணிந்தனர், அவ்வாறே சிதைக்கவும் செய்தனர். அதனால்தான், அவ்விக்கிரகம்-அக்கல் வெள்ளை நிறத்தில் இருந்தது, கருப்பு நிறத்தில் இருந்தது, ஒன்றாக இருந்தது, மூன்று துண்டுகளாக இருந்தன, என்று பலவாறாக சித்திரங்களில் காணப்படுகின்றன. அதே போல அபிரஹாம் மற்றும் அவரது மகன் சிற்பங்கள் இருந்தன, ஆனால் அவற்றையும் உடைத்தார் அல்லது அபிரஹாம் விக்கிரத்தை மட்டும் விட்டு வைத்தார் என்று பலவாறுக் கூறப்படுகின்றன[10]. எது எப்படியாகிலும் இருந்த விக்கிரகங்கள் அழிக்கப்பட்டதால், சரித்திர ஆதாரங்கள் மறைந்து விட்டன என்றாகிறது.

© வேதபிரகாஷ்

22-09-2012


[1] அரேபியா-அரேபியர் பற்றிய விவரங்கள் கீழ்கண்ட கட்டுரையிலிருந்து பெறப்பட்டது:

K. V. Ramakrishna Rao, The Presence of Arabs in South India before and after the advent of Islam, a paper presented  at the sixth session of Tamilnadu History Congress held at Islamiah College, Vaniyambadi, from October 23 to 24, 1999. இக்கட்டுரை முன்பாகவே குரியர் மற்றும் மின்னஞ்சலில் அனுப்பட்டும், அதற்கான ஆதாரங்கள் இருந்தும், ஜனாப் சஹாப்புத்தீன் என்பவர் “ஆய்வுக் கட்டுரை பட்டியலில்” கூட இடம் பெறாமல் மறைக்கப் பார்த்தார். இருப்பினும், திரு. ராஜு தலைமையில் நடந்த அமைவில் திரு கோ. வே. இராமகிருட்டிண ராவ் படித்துள்ளளர்.

[2] Henri Stierlin, Great Civilizations: The Cultural History of the Arabs, Italy, 1981, p.10.

[3] M. TH. Houtsma, T.W.Arnold and Harmann (Eds.), E. J. Brill’s First Encyclopedi of Islam 1913-1936, Netherlands, 1987, Vol.I, p.367.

[4] Pihilp K. Hitti, History of Arabs, Macmillan, 1985, Hongkong, p.41.

[5] Col. Wilford, Asiatik Researches, Vol.III, p.326.

[6] இடைக்காலத்தில் அருணகிரிநாதர், முருகனை, “குதிரையேறும் ரரவுத்தனே” என்று விளித்துப் பாடியுள்ளார்.

[7] K. V. Ramakrishna Rao, The Presence of Arabs in South India before and after the advent of Islam, opt.cit.

S. M. Kamal, Muslimkalum, Tamizhagamum, Islamiya Ayvu Panpattu Maiyyam, Madras, 1990, p.22.

இவர் தமிழகத்தில் மூன்றாம் நூற்றாண்டிலேயே முஸ்லீம்கள் இருந்தார்கள் என்று எழுதுகியுள்ளார்!

[8] Oleg Graber, The Formation of Islamic art, Yale University, USA, 1973, pp.60-61. He gives the details about other objects, jewels etc., kept at Kaba till Mohammed destroyed them.

[9] Gerald de Gaury, Rulers of Meca, Roy Publishers New York, 1949, pp.109-110.

[10] De Lacy O’Leary, Arabia before Muhammed, Kegan Pauk, Lonon, 1927.

Posted in அப்ரோடைட், அரேபியா, அல்-அரப்-அல்-அரிபா, அல்-அரப்-அல்-பைதா, அல்-அரப்அல்-மூதா‘அர்ரிபா, ஆதிநாத, ஆத்மா, ஆனந்தம், ஆன்மா, ஆயுர்வேதம், ஆயுள், ஆயுள்வேதம், ஆரியன், ஆரியம், உஸ்பெகிஸ்தான், எபிகுயூரியன், ஓடந்தபூர், ஓலை, கத்தி, கம்பளி, காபாலிக, காபாலிகம், கிர்கிஸ்தான், சடங்குகள், சிகிச்சை, சிதர், சிதார், சித், சித்தகுரு, சித்தஜலம், சித்தஞானம், சித்தபுரி, சித்தம், சித்தயோகம், சித்தர், சித்தார்த், சித்து, சிந்து, சிந்து சமவெளி நாகரிகம், சீனா, சூபி, தஜிகிஸ்தான், தத்துவஞானிகள், தந்திரம், திகம்பர, திகம்பரம், திகம்பரர், திபெத், துர்க்மேனிஸ்தான், துறவி, நிர்வாணம், பாதரசம், பிண்டம், பித், யோகா | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

இஸ்லாமிற்கு–நபிக்கு (570-632 CE) முன்புஅரேபியாவில்இருந்தவர்கள் (சித்தர்களைத்தேடி)

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 23, 2012

இஸ்லாமிற்குநபிக்கு (570-632 CE) முன்புஅரேபியாவில்இருந்தவர்கள் (சித்தர்களைத்தேடி)

இந்தியசரித்திரத்தைப்புரட்டிஅல்லதுதவறாகஎழுதிமற்றநாட்டுசரித்திரங்களைஅறிந்துகொள்ளமுடியாது: கிரேக்கர்களுக்கு முன்பு (c.1800 – 327 BCE) – பின்பு (326 – 100 BCE) எப்படி இந்திய சரித்திரம், மேனாட்டவர்களால் புரட்டப்பட்டதோ, அதாவது இந்திய சரித்திர உண்மைகளைத் திரித்து மேனாட்டவர்கள் தங்களுக்கு சாதகமாக சரித்திரத்தை எழுதிகொண்டார்களோ, அதேபோல, அரேபியர்களுக்கு முன்பு (100- 712 CE) -பின்பு (712 – 1707 CE) என்றும் இந்திய சரித்திரம் புரட்டப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது[1]. முஹமது நபிக்கு (570-632 CE) முன்பிருந்த அரேபிய சரித்திரத்தை மறைத்து உண்மைகளை அறியமுடியாது. இந்தியாவிற்கும், அரேபியாவிற்கு அல்லது அரபிஸ்தானத்திற்கும் உள்ள தொடர்பை அறிந்தால் தான் ஆன்மீகரீதியில், மருத்துவரீதியில், விஞ்ஞானரீதியில் உண்மைகளை அறியமுடியும். அரேபியாவில் இருந்த சித்தர்களை அறியவேண்டுமானால், இஸ்லாம் பிறப்பதற்கு முந்தியுள்ள – இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செல்ல வேண்டியிருக்கிறது.

கிரேக்கமருத்துவர்களால்அலெக்சாந்தரைஏன்காப்பாற்றமுடியவில்லை?: இந்தியாவின் சரித்திரமே 327-326 BCEலிருந்துதான் ஆரம்பிக்கிறது, அதுதான் இந்திய சரித்திரத்தின் உறுதியான, தீர்மானிக்கப்பட்ட ஆரம்பகாலம் என்றனர்[2]. ஆனால் 327-326 BCE என்பது அலெக்சாந்தர் பாரதத்தின்மீது படையெடுத்துத் தோற்று, கிரேக்கத்திற்கு திரும்பச் செல்லாமலே வழியிலேயே 323 BCEல் பாபிலோனியாவில் இறந்து போன காலத்தைக் குறிக்கிறது[3]. அதாவது ஈட்டிக் குத்தி காயப்பட்டு, ரத்தப்பெருக்கு ஏற்பட்ட அலெக்சாந்தரை, தலைசிறந்த கிரேக்க மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவன் 10 நிர்வாண சாமியார்களைப் பிடித்தபோது, ஒரு சாமியார் பூமியின்மீது தனது காலை உதைத்து சைகை செய்தபோது, அவர் என்ன செய்கிறார் என்று கேட்டபோது, அவனது கிரேக்க அறிவுரையாளர்கள்[4], “நீங்கள் மண்ணோடு மண்ணாகி விடுவாய்”, என்று உருவகமாகக் கூறுவதாக விளக்கம் அளித்தபோது, கோபம் கொண்டு அவர்களைக் கொன்றுவிடுவதாக கிரேக்கக் கதைகள் கூறுகின்றன[5]. அதாவது இந்தியத் துறவிகளை அந்த அளவிற்குத் துன்புறுத்தியுள்ளான். ஞானத்தை அறியவேண்டுமானால், ஞானிகளிடம் பணிவாக இருந்து கற்றுக் கொள்ளவேண்டும். அதிகாரத்தினால், ஆணவத்தினால், பனத்தினால் ஞானத்தைப் பெறமுடியாது. அவற்றால் வசதிகளைப் பெருக்கிக் கொள்ளலாம். ஆனால், சீக்கிரமாகவே அத்தகைய வசதிகள் அழிவிற்கு எடுத்துச் செல்கின்றன.

சுமார் 1450 BCEயில்அரேபியாவிற்குவடமேற்கில்வேதமதம்இருந்தது: சித்தர்களைத் தேடும் முயற்சியில், கிரேக்கத்திற்குப் பிறகு அரேபியாவிலும் தேடவேண்டியுள்ளது. கிரேக்கத்திற்கும் இந்தியாவிற்கும் தரைவழியாக போக்குவரத்து துருக்கி, மெசபடோமியா (இராக்), பாரசீகம் (இரான்), காந்தாரம் (ஆப்கானிஸ்தான்), சிந்து (பலுச்சிஸ்தான், பாகிஸ்தான்) முதலிய நாடுகளின் வழியாக இருந்து வந்தது. துருக்கி-மெசபடோமியா பகுதிகளுக்குக் கீழ் அரேபியா-அரேபியதீபகற்பம் உள்ளது. அங்குள்ள மக்களும் அங்கிருக்கும் சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கேற்ப தங்களது வாழ்க்கையினை தவமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்திருப்பர். போகோஸ்காய் (Bogazkoi, Turkey) என்ற இடத்தில் கிடைத்த கல்வெட்டு ஒன்று, மிட்டானிய (Mittanians) மற்றும் ஹிட்டைட் (Hittites) மக்கள் “இந்திரசீல்மித்ரசீல்வருணசீல்நசாத்யா” என்ற கடவுளர்களை தமக்குள் ஏற்பட்ட ஒரு உடன்படிக்கைக்கு சாட்சிகளாக இருக்குமாறு விளித்ததாகக் கூறப்பட்டுள்ளது. இவர்கள் மற்ற கடவுளர்களான தேஷுப் (Teshup) மற்றும் ஹெபா (Hepa) என்கின்றவர்களையும் சேர்த்து வேண்டுகிறார்கள்[6]. அதாவது அக்காலத்தில், அந்த இடத்தில் அத்தகைய சமரசம் மிட்டடனிய-ஹிட்டை மக்களிடம் இருந்துள்ளது. இக்கல்வெட்டு சுமார் 1450 BCE காலத்தைச் சேர்ந்தது என்று அகழ்வாய்வு நிபுணர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். அக்கடவுளர்கள் இந்திரன், மித்திரன், வருணன், அஸ்வினி தேவர்கள் ஆவர். அஸ்வினி தேவர்கள் மருத்துவத்தின் தேவதைகளாகக் கருதப்படுகின்றனர்.

அரேபியாவின்வடக்கில்இரானில்இருந்தமக்கள் (சுமார். 2500-2000 BCE): இதைத்தவிர, இந்ததஸு, இந்தபீபி, இந்தத்து, ஹிந்தியன், எனபல் பெயர்கள் இப்பழமையான நாகரிகங்களில், அரசர்களுக்கு, படைத்தளபதிகளுக்கு, நதிகளுக்கு, இடங்களுக்கு உபயோகப்படுத்தியுள்ளனர்[7]:

  1. இந்ததஸு/இந்தாஸு – ஊர்- III காலத்தைச் சேர்ந்த அரசன்[8].
  2. ஷிருக்-து, இந்தாஸு வரையில் வெற்றிக் கொள்ள விரும்பினான்[9].
  3. ஷாமஸ்-ஷும்-உகின் என்ற அரசனை இந்த்பீபி என்ற தளபதி வென்றான்[10].
  4. ஷுதுர்-நஹுந்தே, இந்தததாவின் மைந்தன்[11].
  5. இந்தத்து – இஷின் என்ற நநட்டின் அரசன்[12].
  6. ஹிந்தியன்– மெசபடோமியயவில் பபயும் ஐந்து நதிகளில் ஒன்று, இதன் மறுபெயர் ஜுரேஹ்[13].
  7. ஹிந்தாரு – சர்கோன் என்பவன், கம்புலு மக்களின் இடங்களை வென்றான். அவற்றுள் ஒரு இடத்தின்பெயர்[14].

எனவே, அரேபியாவிற்கு வடக்கில் அத்தகைய வேதமதத்தைப் பின்பற்றுபவர்கள் அல்லது வேதமதக் கடவுளர்களை அறிந்தவர்கள் அக்காலக்கட்டத்தில் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. இது ஜைனர்கள் அப்பகுதிகளில் சென்ற தேதியை ஒத்துள்ளது.

அரேபியாவின்வடக்கிழக்கில்சுமார் 3000 BCEல்மருந்துமூலத்திரவியத்தொகுப்பு (Phamacopoeia): சுமேரிய நாகரிகத்தை ஆய்ந்தவர்கள், சுமார் 3000 BCEல் முதல் மருந்துமூலத் திரவியத் தொகுப்பு (Phamacopoeia) உண்டாக்கப்பட்டது, என்கிறார்கள்[15].  ஆனால், சிந்துசமவெளி மருத்துவத்தைப் பற்றி அடக்கி வாசிக்கிறர்கள். கேட்டால் அவர்கள் சரித்திர-ககலத்திற்கு முந்தையவர்கள் என்கிறார்கள்[16]. கியூனிபாம் எழுத்துகளின் (Cuniform tablet) மண்பலகைகள் கிடைத்திலிருந்து, அவற்றைப் படித்து, அவர்கள் இவ்வாறு எடுத்துக் காட்டியுள்ளனர். அவை முழுமையாக இல்லாததினால், முழுவிவரங்களை பெறமுடியவில்லை என்றும் ஒப்புக் கொள்கிறார்கள். இருப்பினும், அம்மருத்துவத்தின் தேவதை பௌ (Bau), நினிசின்னா (Ninisinna) மற்றும் குலா (Gula) என்று அழைக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். அம்மருந்து தயாரிப்பில் உபயோகப்படும் ரசாயனப் பொருட்கள் – உப்பு (Sodium Chloride), வெடியுப்பு (Salt peter – Poataasium nitrate).  மற்றவையெல்லாம் மூலிகைகள், மரப்பட்டைகள், மரப்பிசின்கள் முதலியன. பொட்டாசியம் நைட்ரேட் பெறும் முறை எகிப்தியர் மற்றும் இந்தியர்களுக்குத் தெரியும் என்று அவர்களே எடுத்துக் காட்டுகிறார்கள்[17]. அப்படியென்றால், சிந்துசமவெளி மருத்துவத்திற்குண்டான மருந்துமூலத் திரவியத் தொகுப்பு (Phamacopoeia) இருந்ததா, இல்லை காணாமல் போயிற்றா, இல்லை கண்டெடுக்கப்பட்டும் மறைக்கப் பட்டதா?

மேற்கே எழுத-படிக்கத் தெரிந்த ஆரியர்கள் பாரத்ததிற்கு வந்ததும் படிக்கத்தெரியாமல் போய்விட்டார்களா? மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று விஷயங்களை ஆராயவேண்டியுள்ளது.

  1. சுமார் 1450 BCEயில் அரேபியாவிற்கு வடக்கில் வேதமதம் இருந்தது.
  2. இரானில் இருந்த மக்கள் (சுமார். 2500-2000 BCE)
  3. சுமார் 3000 BCEல் மருந்துமூலத் திரவியத் தொகுப்பு (Phamacopoeia)

அரேபியாவின் வடகிழக்குப் பகுதியில் சுமார் 1450 BCEயில் வேதமதம் இருந்து, சுமார். 2500-2000 BCEல் அவர்கள் பெயர்கள் மட்டும் இருந்து, சுமார் 3000 BCEல் முதல் மருந்துமூலத் திரவியத் தொகுப்பு (Phamacopoeia) உருவாகிறது எனும்போது, அதிலுள்ள காலக்கணக்கியல் உறுத்துகிறது, உதைக்கிறது மற்றும் முரண்பபடாகத் தோன்ருகிறது. ஏனெனில், ஆரியர்கள், இந்தோ-ஆரியர்கள் போன்றோர், மேற்கிலிருந்து, கிழக்கில் வந்து இந்தியாவில் புகுந்தனர் என்றால், அத்தேதிகள் எப்படி 1450 BCE – சுமார். 2500-2000 BCE – சுமார் 3000 BCE என்றிருக்கும்? இந்தியாவில் நுழைந்த ஆரியர்களின் காலம் 1500-1000 BCEல் வைக்கப்படுகிறது. அப்படியென்றால், அக்காலக்கணக்கீடு BCE – சுமார் 3000 BCE – சுமார். 2500-2000 – 1450 BCE என்றுதான் இருக்கவேண்டும் அப்பொழுது இந்தியாவில் நுழைந்த காலம் 1500-1000 BCEயுடன் ஒத்துப்போகின்றது. இல்லையென்றால், ஆரியர்கள் இந்தியயவிலிருந்து வெளியே சென்றிருக்க வேண்டும். அப்படியென்றால் அவர்களின் காலம் சுமார் 3000 BCEற்கு முன்பாக இருந்திருக்க வேண்டும். அதாவது, கிழக்கில் படிக்கத் தெரியாதவர்களாக இருந்து, மேற்கே செல்ல-செல்ல அவர்களுக்கு படிப்பறிவு வருகிறது என்றால், அது எந்த சித்து வேலை என்று தெரியவில்லை. இதே முறைதான், அலெக்சாந்தர் இந்தியாவின் மீது படையெடுத்தான் என்ற கதையிலும் வருகிறது.

எந்த மக்களின் நநகரிகம் தொடர்ந்து “வாழ்ந்து வரும் நாகரிகமாக” இருக்க முடியும்?: மக்களின் நீண்ட ஆயுள்காலம், ஆரோக்கியம், வளமான வாழ்வு, முதலியவைதாம் ஒரு நாகரிகம் எத்தகைய தாக்குதல்களில் சிக்குண்டாலும், எதிர்த்து மறையாமல் தொடர்ந்து வாழ்ந்துக் கொண்டிருக்கின்ற நாகரிகமாக இருக்க முடியும். அப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நாகரிகம் இந்திய நாகரிகம் தான்[18]. இந்தியாவைவிட உயர்ந்தவை, இந்தியா அவற்றிடமிருந்து காப்பியடித்து, அவர்களிடமிருந்து கடன் வாங்கிக் கொண்டு சிறந்தது என்ற் மேனாட்டவர் பெருமை பேசி, இந்தியாவை சிறுமைப் படுத்தி வந்தாலும், அந்நாகரிகங்கள் ஏன் அப்படி இருந்த இடம் தெரியாமல் அழிந்து விட்டன என்று அவர்கள் விளக்குவதில்லை. ஆகவே, மேனனட்டவர்கள் எப்படி சரித்திரத்தைப் புரட்டியிருக்கிறார்கள்-தலைகீழாக்கியிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம். அரேபியர்கள் முகபதியர்கள் ஆனவுடன், அதேபோல பழைய பழக்க-வழக்கங்களை மமர்ரியமைத்திருக்கிறார்கள்.

பாலியல், ரசவாதம், ஆயுள்நீட்டிப்பு: கிரேக்கமதம் இந்துமதத்தை ஒத்திருந்தாலும், ஜைனர்களால் அது பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு, உருமாற ஆரம்பித்தது. பைதாகோரஸ் போன்றோர் உண்மையான ஞானம் போன்றவற்றில் ஈடுபட்டாலும், மற்ற கிரேக்க சாமியார்கள் பலவித முறைகளைக் கையாண்டார்கள்.

  • எபிகுயூரியன் (342-270 BCE) என்பவரின் போதனைகள் வாழ்க்கை வாழ்வதற்கே, சந்தோஷத்திற்கே, அனுவவி ராஜா அனுபவி போன்ற கொள்கைகளில் (Hedonism[19]) இருந்தது.
  • சிம்போஸியத்தில் கிரேக்கர்கள் நிர்வாணமாகப் பங்கு கொண்டார்கள் என்று மேலே எடுத்துக் காட்டப்பட்டது.
  • 4 நுற்றாண்டில் BCE பெண்-நிர்வாணமும் மறுக்கப்படவில்லை.
  • ஓரினப்புணர்ச்சி கிரேக்கர்களிடத்தில் அதிகமாகவே இருந்தது. சோடோமி (Sodomy) என்பது ஆண்களுக்கிடையிலுள்ள ஓரினப்புணர்ச்சி[20].
  • இதைத்தவிர ஆணுமில்லை-பெண்ணுமில்லை என்றுள்ள அப்ரோடைட் (Aphrodite) என்பவர்களும் இருந்தார்கள்[21]. ஆண்களுக்கு பெண்களின் உறுப்புகளும், பெண்களுக்கு ஆண்களின் உருப்புகளும் உள்ள மனிதர்கள் அப்ரோடைட் எனப்பட்டார்கள்.
  • ஹெர்மாபுரோடிடோஸ் அல்லது ஹெர்மாபுரோடிடஸ் (Hermaphroditos or Hermaphroditus) ஹெர்மாபுரோடைட்டுகளின் ஆண்-தேவதை. இவன் ஹெர்மிஸ் (Hermes) மற்றும் அப்ரோடைட் (Aphrodite) என்பவர்களுக்குப் பிறந்தவன். எரோட்டுகள் (Erotes) என்ற தேவதைகளுள் சேர்க்கப்பட்டுள்ளான்.
  • பெரும்பாலான காமம், கொக்கோகம், பாலியல் முதலியவாற்றில் உபயோகப்படுத்தப்படும் சொற்கள் கிரேக்கத்திலிருந்துதான் பெறப்பட்டுள்ளன – ஈராஸ் = Eros (Love), ஆசை / காமம் (Himeros =Desire), பெருங்காமம் (Pothos =Passion), காமவெறி (Voluptas = sez-raged.
  • வீனஸ் என்ற தேவத்தையிலிருந்து பெறப்படும் இச்சொற்கள் காதல், உடலுறவு, பாலியல், பாலியல் நோய்கள், மருந்துகள் முதலியவற்றிற்கு உபயோகப்படுத்தப் படுகின்றன[22].
  • அரிஸ்டாடில் ஆலிவ் எண்ணையை கர்ப்பத்தைத் தடுக்கும் களிம்பாக உபயோகப்படுத்தலாம் என்று 4 BCEயில் கூறினார்.
  • ஹெர்மிஸ் (Hermes) என்பவன் தான் ரகசிய சித்தாந்தங்கள், ரசவாதம் முதலியவற்றிற்கு தேவன்[23]. அதாவது கிரேக்கர்களைப் பொறுத்தவரைக்கும், காமம் ரசவாதத்துடன் இணைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
  • ஓவிட் (Ovid) மற்றும் லூசியன் (Lucian) போன்றோரது கொக்கோக-காமக்களியாட்ட இலக்கியங்கள், அவர்களது கிரக்கத்தின் உச்சத்தைக் காட்டுகின்றன.
  • இதைத்தவிர பாலியல், உடலுறவு செய்முறை நூல்களும் பெருகின[24].

மேலே குறிப்பிட்ட ஒன்றொன்றிற்கும் அக்கால சிற்பங்கள், ஓவியங்கள், உலோக விக்கிரங்கள் முதலியவை உலக பிரசித்தி பெற்ற கலைக்கூடங்களில், அருங்காட்சியகங்களில் உள்ளன. கிரேக்கர்களைப் பின்பற்றி வந்த ரோமானியர்களில் இவ்விஷயங்களில் சளைத்தர்கள் அல்லர்[25]. அதிக உடலுறவு கொண்டால், ஆயுள் பெருகும்; அதிக பெண்களிடம் உடலுறவு கொண்டால் ஆயுள் பெருகும்;  கன்னிகளுடன் உடலுறவு கொண்டால், ஆயுள் பெருகும், என்று தவறான பல கருத்துகள் உருவானதால், அத்தகைய தீய இலக்கியங்கள் உருவாகின, சமூகமும் சீரழிந்தது. கிரேக்க ரசவாதம் இப்படி பாலியில் உருமாறி, உருக்குலைந்ததற்குக் காரணம் அவர்கள் ஜைனர்களின் முறைகளை துஷ்பிரயோகம் செய்தது தான். இதனால் மந்திர-தந்திர-யந்திர போன்ற சடங்குகள் அங்கும் கடைபிடிக்கப்பட்டன என்று தெரிகிறது. ஆனால், அவை பாலிய ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதால் பலவித பாலியல் திரிபுகள் ஏற்பட்டன.

வெள்ளையாடைஅணிந்தமற்றசாமியார்கள் / சந்நியாசிகள்: வெள்ளையாடையை அணிந்த எஸ்ஸென்ஸ் (Essences), ஞாஸ்டிக் (Gnostic), மணிக்கியர் (Manichaeans) போன்றோர் பிரமச்சரியம், ஒழுங்கு, கட்டுப்பாடு முதலிவற்றைப் பின்பற்றினர். பின்னர் வந்த மணி (216-276 CE) என்பவரோ, இல்வாழ்க்கை வேண்டாம், திருமணம் வேண்டாம் என்றெல்லாம் போதித்தார். இங்கு முக்கியமான விஷயம் என்னவென்றால், மணி பாரசீகத்தில் துறவரம் கடைப்பிடித்த ஆசாரமான யூதகுடும்பத்தில் பிறந்தவர். பன்னிரெண்டு வயதில் ஞானம் பெற்று, போதிக்க ஆரம்பித்தார். கிழக்கில் பாரதம் வரையில் வந்ததாகச் சொல்லப்படுகிறது. பிறகு மத்திய ஆசியா சென்று மெடபடோமியா, சிரியா, இஸ்ரேல் வழியாக அலெக்சாந்திரியாவிற்கு வந்தார். ஆனால் இவரது போதனைகள் ஒவ்வாததனால், அங்கிருந்த பஹ்ரம் – I (Bahram – I 273-276) இவரை 276ல் தூக்கிலிட்டான். இருப்பினும், மணியுடைய பிரமச்சரியக் கொள்கைகள் மேற்கில் எகிப்து, ரோம், இங்கிலாந்து மற்றும் கிழக்கில் சைனா வரை பரவியது[26].

300-500 காலத்தில் இதன் தாக்கம் இருந்தது. கிரேக்க-ஜைனர்களில் அளவிற்கு மீறிய பாலியல் தீமைகள், கொடுமைகள் மற்றும் குற்றங்கள், இவற்றை எதிர்த்து, திருத்தத்தான், இம்மதம் மக்களிடம் வேகமாகப் பரவியது எனலாம். இதேபோல ஞாஸ்திக மதத்தின் (Gnosticism) தாக்கமும் அதிகமாகவே இருந்தது. இதன் மூலங்களை மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரியாது அல்லது ஒருக்கின்ற யூதமதத்திலிருந்துதான் தோன்றியது என்று வாதிட்டாலும், ஜைனர்களின் தாக்கத்தைக் காணமுடிகிறது. அதாவது, 1450 BCEல் இருந்த வேதமதத்தை மறந்துவிட முடியாது.

அரேபியாவியாவைச்சுற்றியிருந்தவேதமதம்: அரேபியைச் சுற்றியிருந்த வேதமதம் அரேபியாவிற்குள் நுழையவில்லை என்றாகாது. இஸ்லாம் வரும்வரை அங்கிருந்த மக்கள் அநாகரிகமாக, பாகன்களைப் போலிருந்தார்கள் (Pagans, Barbarians) என்று சொல்வது சரித்திரப் பொய்யாகும். 1450 BCEலிருந்து 650 CE வரை அப்படியே இருந்தார்கள் என்றால், அது எவ்வளவு பெரிய பொய் என்பதனையும் அறிந்து கொள்ளலாம்.

மேலேயுள்ள வரைப்படத்திலிருந்து சுமார் 1400 BCE காலத்தில் கானான், அமுறு, நுஹாஷே, மிட்டானி, ஹஸ்ஸுக்கன்னி, அசூர் (அசீரியா), தூர்-குரிகள்ஜு, கேசைட் (பாபிலோனியா) முதலிய மக்கள், அரேபியாவின் வடமேற்கு-வடக்கு-வடகிழக்குப் பகுதிகளில் வாழ்ந்தனர். மேற்குறிப்பிட்ட பகுதிகள் இப்பொழுது, இஸ்ரேல், ஜோர்டன், லெபனான், சிரியா, இராக், இரான் என்ற நாடுகளாக உள்ளன. அவர்களது சிற்பங்களை பார்த்தால், அவை பாரதநாட்டவருடையது என்று எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது[27]. அவ்விடங்களின் பெயர்கள் – ஏயில்காயா, நிஸந்தா, அம்பர்லிகாயா, புயுக்காயா, ஹத்துஸா, போகாஜ்கோய் என்றுள்ளன. ஆகவே, அரேபியர் தனித்து வேறு நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு கொண்ட மக்களாக இருந்திருக்க முடியாது. அரேபியாவில் கிடைத்துள்ள அகழ்வாய்வுப் பொருட்கள், சிற்பங்கள், பாத்திரங்கள் முதலியனவும் மேற்குறிப்பிட்ட மக்களின் நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாட்டுக் காரணிகளுடன் ஒத்துப் போகின்றன. ஆகவே, அங்கு சக்தி-சிவன், சிவ-சக்தி, மும்மூர்த்தி, மூன்றுதேவதைகள் முதலியவர்களின் வழிபாடு இருந்துள்ளது வியப்பாக இல்லை.

இடைப்பட்ட நூற்றாண்டுகளில் இப்பகுதிகளில் யூதம், கிருத்துவம் மற்றும் முகமதியம் ஒவ்வொன்றாக வளர்ந்து வரும் போது பழைய நாகரிகங்கள் அழிந்தன அல்லது அழிக்கப்பட்டன. 670 BCEல் அசீரியர் எகிப்தை வென்றனர்.  356-323 BCE காலத்தில் எகிப்தை அலெக்சாந்தர் வென்று, தனது தளபதி டாலமியை அரசனாக்கினான். 30 CE காலத்தில் ரோமர்களால், கிரேக்கம் மற்றும் எகிப்து ஆக்கிரமிக்கப்பட்டன. இப்படி அம்மக்கள் ஒருவருக்குள் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டதால், பாபிலோனியர் (Babylonians), அசீரியர் (Assyrians), சால்டியர் (Chaldeans), அராமியர் (Araamaeans), போனீஷியர் (Phoenecians), முதலியோரது நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு முதலியன அம்மக்களோடு மறைந்து வெறும் கதைகளாகி விட்டன. இருப்பினும், அங்கிருக்கும் மக்கள் சில பழைய சடங்குகள், சம்பிரதாயங்கள், விழாக்கள் முதலியற்ரைத் தொடர்ந்து நடத்திவருவதால், அவற்றிலிருந்து அந்த பழைய கூறுகளை அறிந்து கொள்ள முடிகிறது.

© வேதபிரகாஷ்

21-09-2012


[1] வின்சென்ட் ஸ்மித், ஜான் பிளீட் போன்றோர்அலெக்சாந்தர் பாரத்தத்தின்மீது படையெடுத்த 327-326 BCE காலத்திலிருந்து தான் இந்திய சரித்திரம் ஆரம்பிக்கிறது, அதற்கு முன்னர் இந்தியாவிற்கு சரித்திரமே இல்லை என்ற அடிப்படையில் எழுதி வைத்த சரித்திரத்தைத் தான், இப்பொழுதும் இந்தியர்கள் இப்பொழுதும் படித்துக் கொண்டிருக்கின்றனர். அலெக்சாந்தர் காலத்தில் பாரத்தை ஆண்டது குப்தர் வம்சத்தின் சந்திரகுப்தர் இல்லை, மௌரியர் வம்சத்தின் சந்திரகுப்தர் என்று திரித்ததால் 1200 வருட இந்திய சரித்திரம் சுருக்கப்பட்டது. இதனால் தான் இந்திய சரித்திரத்தில் பல புதிர்கள் உண்டாயின. புரிந்து கொள்ளாதோர் புதிய விளக்கங்கள் கொடுத்து, உள்ள சரித்திரத்தையே புரட்டிவிட்டு, அதற்கும் ஒரு முறையை உண்டாக்கி குழப்பியுள்ளனர்.

[2] The British history writers arbitaratily declared that “The Alexander’s invasion is is the sheet anchor of Indian history”, without any authority.

[3] K. V. Ramakrishna Rao, The Myth, Romance and Historicity of Alexander and their Influence on India, www.hinduwebsite.com

[4] Arrian.viii, 1.5 ff.

[5] McCrindle, The Invasion of India by Alexander the Great as described by Arrian, Quitus Curtius, Diodorus, Plutarch and Justin, London, 1896.

[6] George Roux, Ancient Iraq, Penguin Books, U.K, 1980, p.218.

[7] D. T. Potts, The Archaeology of Elam – Formation and Transformaton of an Ancient Indian Iranian state, Cambridge University Press, UK, 1999, p.

[8] Indassu – name of an ensi of Zabshali in the Ur III eriod, p.168.

[9] Shiruk-tuh wanted to conquer upto Indassu, p.141.

[10] Indabibi – name of a general who overthrown Shamash-shum-ukin, p.282

[11] Shutur-Nahhunte, son of Indada, p.303.

[12] Indattu – king of Isin, p.148.

[13] Hindian – one of the five rivers flowing in Mesopotomia, otherwise mentioned as Zuhreh, p.15.

[14] Hindaru – a place conquered by Sargon, of the Gambulu tribe.

[15] Samuel Noah Kramer, History Begins at Sumer – Thirty-Nine Firsts in Man’s Recorded History, University of Pennsylvania Press, Phladelphia, USA, 1981, pp.60-64.

[16] இப்பொழுது புரோட்டோ ஹிஸ்டரி (Protohistory) என்ற சொல்லை உபயோகித்ததலும், மனங்களில் பிரி-ஹிஸ்டரி (pre-history) என்ற கருத்தை வைத்துக் கொண்டுதான் படிப்பறிவு இல்லாத ஹரப்பன்கள் (Illiterate Harappans) என்று அந்த மேனனட்டு அறிவுஜீவிகள் கூறிவருகின்றன. நமது திராவிட கூட்டங்களும் அடிவருடிக் கொண்டு, பட்டங்கள் கொடுத்து பபராட்டு விழா எடுத்துக் கொண்டிருக்கின்றன.

[17] Samuel Noah Kramer, History Begins at Sumer – Thirty-Nine Firsts in Man’s Recorded History, University of Pennsylvania Press, Phladelphia, USA, 1981, pp.62-63

[18] சீன நாகரிகமும் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த இரு நாகரிகங்கள் தாம் தொடர்ந்து இருந்து வருகின்றன, மற்றவை மறைந்து விட்டன.

[19] Hedone was the spirit (daimona) of pleasure, enjoyment and delight. As a daughter of Eros (Love) she was associated more specifically with sensual pleasure. Her opposite numbers were the Algea (Pains). The Romans named her Voluptas.

[20] Sodomy, sodomites inhabitants of Sodom. Male homosex.

[21] Hermaphroditism = human being having both man and animal characteristic, nymph Solmacts

[22] Aphrodite = Aphrodiastic venereal, drug producing venereal disease,

Aphrodiasiac, aphrodisios, aphrodite = derived from Venus, the goddess of love etc.

[23] Hermes = author of mysterious doctrines, ecrets of alchemy

[24] Twleve Arts of the Actions of Love, Ovid’s Arts Amatoria etc are covered under “Classical literature”.

[25] David Mountfield, Greek and Roman Erotica, Miller Graphics, Italy, 1982.

[26] Richard Foltz, Religions of the Silk Road, St. Martin’s Press, New York 1999.

[27] கூகுள் தேடலில் – Yazilkaya, Nisantas, Ambarlikaya, Mihraplikaya, Büyükkaya, Hattusha, Boğazköy – என்ற வார்த்தைகளை தட்டெச்சு செய்தால் அச்சிற்பங்களைப் பார்க்கலாம்.

Posted in அப்ரோடைட், அரேபியா, ஆகாயம், ஆன்மா, ஆயுர்வேதம், ஆயுள், ஆயுள்வேதம், ஆரியன், ஆரியம், இந்தியவிரோதிகள், இந்தியா, உடல், உயிர், உஸ்பெகிஸ்தான், எபிகுயூரியன், கஜகிஸ்தான், கண், கத்தி, கனிமம், கம்பளி, கருத்து, கரைசல், கற்பம், கலாச்சாரம், கல்பம், காபாலிக, காமாக்கியா, காயம், காற்று, கிர்கிஸ்தான், கை, சக்தி, சடங்குகள், சட்டைமுனி, சம்பிரதாயங்கள், சஹஜயான, சிகிச்சை, சிதர், சிதார், சித், சித்தகுரு, சித்தஜலம், சித்தஞானம், சித்தபுரம், சித்தபுரி, சித்தபுருஷன், சித்தப்பிரமை, சித்தம், சித்தயோகம், சித்தர், சித்தர் பாடல்கள், சித்தார்த், சித்து, சிந்து, சிந்து சமவெளி நாகரிகம், சீனா, சுத்தம், சூபி, சைனா, சைவம், ஞானம், ஞானி, தந்திரம், திகம்பர, திகம்பரம், திகம்பரர், துர்க்மேனிஸ்தான், துறந்தவர், துறவி, நாகரிகம், நாட்டு மருத்துவம், நாத்திகம், நிம்மதி, நிர்வாணம், நீர், நுண்ணிய அறிவு, பகுத்தறிவு, பஞ்சபூதங்கள், பதினென் சித்தர்கள், பரம்பரை வைத்தியர், பாதரசம், பாரதம், பாரம்பரியம், பாலியல், பித்து, போகோஸ்காய், மத்திய ஆசியா, மந்திரம், மனச்சிதைவு, மனம், மருந்து, முஹம்மது கஜினி, யோகா, விழாக்கள், வேதம், ஹெர்மாபுரோடிடோஸ், ஹெர்மிஸ் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

பௌத்த-திபெத்திய சித்தர் பட்டியலிலிருந்து திராவிட சித்தர்களின் பட்டியல் பெறப்பட்டதா?

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 15, 2012

பௌத்த-திபெத்திய சித்தர் பட்டியலிலிருந்து திராவிட சித்தர்களின் பட்டியல் பெறப்பட்டதா?

பௌத்த பல்கலைக்கழகங்கள் தாக்கப்பட்டதால் பௌத்த சித்தர்கள் மற்ற நாடுகளுக்குச் சென்றது: பௌத்தமத்தத்தில் வஜ்ரயான தந்த்ர போதனைகளைப் பரப்புவதில் தீவிரமாக இருந்தவர்கள் சித்தர்கள் என்றழைக்கப்பட்டனர். இந்தியாவில் அவர்கள் ஏழாவது நூற்றாண்டிலிருந்து 11ம் நூற்றாண்டு வரை சிறந்திருந்தனர்[1].  முகமதியப் படையெடுப்புகளினால் தக்ஷசிலா (Dhakshasila), நாலாந்தா (Nalanda), விக்ரமசிலா (Vikramasila), ஓடந்தபூர் (Odantapur) போன்ற மிக்கப்பெரிய பல்கலைக்கழகங்கள் / மஹாவிஸ்வவித்யாலயங்கள் முதலியவை தாக்கி அழிக்கப்பட்டதால், பேராசிசியர்கள், மாணவர்கள், மருத்துவர்கள், ஞானிகள் முதலியோர் தப்பியோட வேண்டியதாயிற்று. அவர்கள் நாலாப்பக்கங்களிலும் சிதறியோடினர். இதனால் தந்தரமுறைகள் அந்தந்த நாடுகளில் பரவியது[2]. வைரோச்சன என்பவர் பௌத்த தந்திரிகமுறையைத் தோற்றுவித்தவர். குலாச்சார, வாமாசார, சஹஜயான, வஜ்ரயானப் பிரிவுகள் அந்நாடுகளில் பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டன. ஒவ்வொரு ஆண்தேவதைக்கும், ராகினி, லாகினி, சாகினி, ஹாகினி, குபுஜீகா போன்ற பெண்தேவதையும் சேர்க்கப்பட்டது[3].

நாடுகளில் பரவியது

வைரோச்சனின் பெயர் / மாற்றம்

விளக்கம்

மஹாயான பௌத்தம் தியானி புத்தா சிவன் புத்தனைப்போல சித்தரித்துள்ளார்கள். அதனால், ஒரு புத்தருக்குப் பதிலாக ஐந்து புத்தர்கள், ஐந்துதிசைகளில் (சிவனின் ஐந்து முகங்கள் போல) உள்ளனர். பிறகு சக்தியையும் சேர்த்துள்ளனர். ஒன்று மூன்றாகி, ஐந்தாகி, எழாகி, ஒன்பதாகி விட்டன. எட்டு, 84 என்றாகியதைப் போல சித்திகள் சக்திகளுடன் இணைத்து, முறைகளும் புகுத்தப்பட்டன.
நேபாளம் ஆதிபுத்தா
சீனா வஜ்ரசத்வா,நாகார்ஜுனா, வஜ்ரபோதி, அமோகவவஜ்ர
ஜப்பான் வஜ்ரசத்வா, நாகார்ஜுனா, வஜ்ரபோதி, அமோகவவஜ்ர
ஜாவா முதலிய தென்கிழக்காசிய நாடுகள்

எண்பத்து நான்கு பௌத்த சித்தர்கள்: 84 சித்தர்கள் இருந்தார்கள் என்று 1506 ஆண்டு தேதியிட்ட மைதிலி மொழியில் எழுதப்பட்டுள்ள ஒரு ஆவணம் – “வர்ணரத்னாகர” என்ற நூல் – பட்டியலிட்டுக் காட்டுகிறது. ஆனால் 76 பெயர்கள் மட்டும்தான் காணப்படுகிறது[4].

  1. மீனநாத
  2. கோரக்கநாத
  3. சௌரங்கிநாத
  4. சாமரிநாத
  5. தந்திபா
  6. ஹாலிபா
  7. கேதாரிபா
  8. தோங்கபா
  9. தாரிபா
  10. விருபா
  11. கபாலி
  12. கமாரி
  13. காண்ஹ
  14. கனஹல
  15. மேகல
  16. உன்மன
  17. காந்தலி
  18. தோவி
  19. ஜாலந்தரா
  1.   தோங்கி
  2. மவஹா
  3. நாகார்ஜுனா
  4. தௌளி
  5. பிஷாலா
  6. அசிதி
  7. சம்பக
  8. தேந்தச
  9. பூம்பாரி
  10. பாகலி
  11. துஜி
  12. சர்பதி
  13. பாடே
  14. சாந்தனா
  15. காமரி
  16. கரவத்
  17. தர்மபாபதங்க
  18. பத்ரா
  19. பாதலிபத்
  1. பலிஹிஹ
  2. பானு
  3. மீன
  4. நிர்தய
  5. சவர
  6. சாந்தி
  7. பாரதிஹரி
  8. பிஷண
  9. படி
  10. கங்கப
  11. கமார
  12. மேனுரா
  13. குமார
  14. ஜீவன
  15. அகோசாதவ
  16. கிரிவர
  17. சியாரி
  18. நாகவலி
  19. பிபவத்
  1.  சாரங்க
  2. விவிகதஜா
  3. மகரதஜ
  4. அசித
  5. பிசித
  6. நேசக
  7. சாதல
  8. நாசன
  9. பிலோ
  10. பாஹல
  11. பாசல
  12. கமலகங்காரி
  13. சிபில
  14. கோவிந்த
  15. பீம
  16. பைரவ
  17. பத்ர
  18. பமரி
  19. புருக

திபெத்திய பாரம்பரியப்படி எண்பத்து நான்கு பௌத்த சித்தர்கள்: திபெத்திய பாரம்பரியத்தில் 84-சித்தர்களின் பெயர்கள் (சதுரசிதிஸ்சித்தர்), “சதுரசிதி-சித்த-பிரவுருத்தி” என்ற நூலில் காணப்படுகிறது, விளக்கம் இவ்வாறுள்ளன. அபயதத்தர் (சுமார். 1100 CE) என்பவர் இந்த விவரங்களைக் கொடுத்துள்ளார்[5]. இந்த ஓலைசுவடிப் புத்தகத்தில் அழகான சித்தர்களின் வண்ணப்படங்களும் உள்ளன[6]. இங்கு “ப” என்பதனை “பாத” என்று வாசிக்க வேண்டும். அஜிந்தபாதன், அஜோகிபாதன், சம்பகபாதன், சௌரங்கிபாதன் என்று பெயர்கள் வரும், அவற்றிலிருந்து அப்பெயர்களின் பொருளை அறிந்து கொள்ளலாம்.

எண் பெயர் பொருள் விளக்கம்
1 அசிந்த / அசிந்தப பேராசைக் கொண்ட துறவி விறகுவெட்டி, விறகு வியாபாரம்
2 அஜோகி /அயோஜிப ஒதுக்கப்பட்ட பிரயோகமில்லாதவன் பிணமாக நடித்தவன்
3 அனங்கப/அனங்க/அனங்கவஜ்ர அழகான முட்டாள் சுந்தரானந்தர் / குதம்பைச் சித்தர்?
4 ஆர்யதேவ/ஒருகண்ணையுடைவர் நாகார்ஜுனரின் சீடர் மஹாசித்தர்களில் ஒருவர்
5 பபஹ சுற்றித் திரியும் காதலன்
6 பத்ரப ஜம்பப் பேர்வழி தனியான பிராமணன்
7 பண்டேப பொறாமைப்படும் கடவுள்
8 பிக்ஷனப இரண்டு பற்கள் கொண்ட சித்தன்
9 புஸுகு/புஸுகுபாத சோம்பேரி சந்நியாசி ஜடம்-ஒருவேலையும் செய்யாதவன்
10 சமரிப தெய்வீக சக்கிலியன்
11 சம்பக/சம்பகபாத மலர்களுக்கு அரசன்
12 சர்பரிப/சர்பதி மக்களைக் கல்லாக்கியவன் கல்லாக்குபவன்; கல்லுளி சித்தர்?
13 சத்ரப ராசியுள்ள பிச்சைக்காரன் அதிருஷ்டம் உள்ளவன்
14 சௌரங்கிப அங்கஹீனன் கை-கால்கள் இல்லாதவன்
15 சேலுகப மறுபடியும் வீர்யம் பெற்றக் கொக்கு கொங்கணவன்
16 தரிகப கோவில் விபச்சாரியின் அடிமை அரசன்
17 தேன்கிப பிராமண அடிமை
18 தௌலிப முற்கள் கொண்ட கயிறு திரிப்பவன்
19 தர்மப என்றைக்கும் மாணவன்
20 திலீப சந்தோஷமான வியாபாரி சுகவான்; தேரையர்?
21 தோபின அறிவுள்ள வண்ணான்
22 தோகரிப பாத்திரங்களை சுமப்பவன்
23 தோம்பி ஹெருக புலி சவாரி செய்பவன் புலிப்பாணி?
24 துக்காண்டி பெருக்குபவன், சுத்தம் செய்பவன்
25 கண்டப பிரமச்சரியத்தைக் கடைபிடிக்கும் துறவி மணியடிக்கும் துறவி
26 கர்பரி/கர்பரிப துக்கமளிக்கும் பண்டிதன்
27 கோதுரிப/கோரூர பறவைப் பிடிப்பவன்
28 கோரக்ஷ / கோரக்கநாத நிரந்தரமாக மாடு மேய்ப்பவன் பசுக்களைக் காப்பவன் – இவர் கோரக்கரக்கவும் அல்லது திருமூலராகவும் கொள்ளலாம்.
29 இந்திரபூதி திலோபனின் குரு எந்திரியங்களை வென்றவன்
30 ஜலதார தகிணி என்பவரின் சேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவன் நீரைப்போன்று வேகமாமக செல்லக்கூடியவன்/ ஓடுபவன்
31 ஜெயந்தர காக்கையின் ஆசிரியர் காகபுசசுண்டர்?
32 ஜோகிப சித்தப் பிரயாணி அலைந்து-திரிந்து கொண்டிருப்பவன்
33 கலப அழகான பைத்தியம் சுந்தரானந்தர்?/ குதம்பைச் சித்தர்?
34 கம்பரிப கொல்லன் இரும்பு முதலிய உலோகவேலை செய்பவன்
35 கம்பள கருப்புக் கம்பள யோகி கருப்புக் கம்பளம் போர்த்தியவன்; சட்டைமுனி?
36 கணக்கல முண்டமாமன இரு சகோதரிகளின் இளைய சகோதரன் ஏழுதலையுள்ள சகோதரிகளின் இளைய சகோதரன்
37 கண்ஹ / கணப கருப்புத் தோலன் கருப்பு சித்தர்
38 கங்கண சித்தராஜ சித்தர்களுக்கு அரசன்
39 கங்கரிப காதல் பித்தம் கொண்ட விதவை
40 கந்தாலிப குப்பைப் பொறுக்குபவன் கந்தை தையல்காரன்
41 கபலப கபாலம் கொண்டவன் காபாலிகன்
42 கட்கப திருட்டுராஜா பயமில்லாதத்ன் திருடன்
43 கிலகிலப தள்ளிவைக்கப்பட்ட லொடலொட வாயன் வீண்பேச்சாளிடமரானந்தர் / பிண்ணாகீசர்?
44 கிரபலப வென்று துக்கப்படுபவன்
45 கோகிலப நிம்மதியான ஓவியன் கலைஞானி
46 கோடலிப விவசாயியான குரு  
47 குசிப கழுத்துவீங்கிய யோகி  
48 குக்கிரிப நாய் விரும்பி தத்தாரேயர்?
49 கும்பாரிப பானையன் / பானை செய்வோன் அகத்தியர்?
50 லக்ஷ்மீன்கர பைத்தியமான இளவரசன்
51 லிலப ராஜீய சுகவாசி என்றும் இன்பம் துய்ப்பவன்
52 லுசிகப தப்பித்துக் கொள்பவன் பொறுப்பற்றவன்
53 லுயிப மீன்-குப்பையைத் தின்பவன் மச்சேந்திரர் / மச்சமுனி?
54 மஜிப மிகப்பெரியவன்
55 மணிபத்ர மாதிரி மனைவி இவள்தான் மனைவி என்று போற்றப்படுபவள்
56 மெதினி களைத்த விவசாயி
57 மேகல முண்டமான இரு சகோதரிகளில் மூத்தவள் ஏழு சகோதரிகளில் மூத்தவள்
58 மெகோப முழிக்கும் குரு கண்ணிமைக்காத சித்தன்
59 மீனப மீன் பிடிப்பவன் மச்சேந்திரர் / மச்சமுனி?
60 நாகபோதி சிவப்புக் கொம்புத் திருடன் ஆரியதேவ /  ஒற்றைக்கொம்பன்
61 நாகார்ஜுன யோகி
62 கலினப சுதந்திர இளவரசன் யார் மீதும் ஆதாரமாக இல்லாதவன்
63 நரோப
64 நிர்குணப அறிவான முட்டாள்
65 பச்சரிப மாமிசம் சமைப்பவன் புலத்தியர்?
66 பங்கஜப தாமரையில் பிறந்த பிராமணன் பிரம்மா, கமலமுனி?
67 புதலிப மருந்து பாத்திரம் சுமப்பவன் தன்வந்திரி?
68 ராஹுல இளமைப் பெற்ற பழைய முட்டாள்
69 சரஹ அம்பு செய்பவன்
70 சகர கடலில் செல்பவன்? டமரானந்தர்?
71 சமுதர முத்தெடுப்பவன்
72 சாந்திப மிக்கப்படித்தவன்/அறிவுஜீவி அமைதியான பிரச்சாரி
73 சர்வபக்ஷ வெற்று வயிரன் நன்றாக சாப்பிடுபவன்
74 சவரிப வேட்டைக்காரன்
75 சாலிப நரி யோகி
76 தந்தேப சூதாடி
77 தந்திப முதுமைப் பெற்ற நெசவாளி
78 தகநப தேர்ந்தெடுத்தப் பொய்யன்
79 திலோப
80 உடிலிப பறக்கும் சித்தர் பறவை-மனிதன்டமரானந்தர்?
81 உபான செருப்புத் தைப்பவன்
82 வினப சங்கீதம் விரும்பி பாட்டுப்பாடுபவன்
83 விருப
84 வியலப அரசாங்க ரசவாதி யூகிமுனி?

இந்த பௌத்த சித்தர்களின் கதைகளைப் படித்தால், அவை அப்படியே நமது சித்தர்களின் கதைகளைப் போலவே இருக்கின்றன. நிச்சயமாக இக்கதைகளைப் படித்தறிந்தவர்கள், அவற்றை தமிழகத்திற்கு ஏற்றவாறு, சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து அதற்கேற்றாவாறு மாற்றியிருக்கிறார்கள். பௌத்த-திபெத்திய பாரம்பரியங்களில் 16ம் நூற்றாண்டு ஆவணத்தில் அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பௌத்த மஹாசித்தர்கள்: ஹடயோகப்ரதீபிகா[7] என்ற 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த நூல் 32 மஹாசித்தர்களின் பெயர்களைக் கொடுக்கிறது[8].

  1. ஆதிநாத
  2. மச்சேந்திர
  3. சாவர
  4. ஆனந்தபைரவ
  5. சௌரங்கி
  6. மீனநாத
  7. கோரக்கநாத
  8. விருபாக்ஷ
  1. பிலேசயா
  2. மந்தான
  3. பைரவ
  4. சித்திபுத்த
  5. கந்தடி
  6. கோராம்தக
  7. சுரானந்த
  8. சித்தபாத
  1. சர்பதி
  2. கானேரி
  3. பூஜ்யபாத
  4. நித்யானந்த
  5. நிரஞ்சன
  6. கபாலி
  7. பிந்துநாத
  8. காகசண்டீஸ்வர
  1. அல்லாம
  2. பிரபுதேவ
  3. கோட
  4. சோலி
  5. திமிந்தி
  6. பானுகி
  7. நாரதேவ
  8. கண்டகாபாலிக

அதாவது 84 சித்தர்களில் இந்த 32 சித்தர்கள் அவ்வாறு “மஹா சித்தர்க்ள்” என்று தேர்ந்தெடுத்துள்ளனர். ஒருவேளை நம்மாட்கள் இதனைப் பார்க்கவில்லையோ என்னமோ? ஒருவேளை, 14 பேர்களை விடுத்து, 18 பேர்களைத் தேர்ந்தெடுத்தனரோ என்னமோ? இல்லை ஜைனர்கள் எப்படி “மஹாசித்தர்கள்” என்று தீர்த்தர்ங்களையும் குறைத்துக் கொண்டார்களோ அவ்வாறிருக்கலாம். பௌத்தம் பொருத்த வரையில், தாந்திரீகத்தை பின்பற்றி சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள். பௌத்த சித்தர்கள் அனைவரும் தாந்தீர்கர்களே.

பௌத்த நூல்களைப் பின்பற்றி “திராவிட சித்தர்கள்” கதைகள் உருவானது: பொதுவாக ஜைன-பௌத்த நூல்கள் எல்லாமே சமஸ்கிருத நூல்களினின்று பெற்றப்பட்டவைதாம். ஜைனம் மற்றும் பௌத்தம் வேதங்களின் நிலைநிறுத்தப்பட்ட விஷயங்களை ஏற்றுக் கொண்டு, பெருமான்மையான மக்களின் நம்பிக்கைகளையும் தகவமைத்துக் கொண்டு உருவாக்கப்பட்ட மதங்கள் தாம்[9]. பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு, கர்மா, பாவம், புண்ணியம், ஆன்மா / ஆத்மா முதலி எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டன[10]. எப்படி வேதங்களப் படித்து, அதற்கு எதிராக சில தர்க்கநூல்களை உருவாக்கினார்களோ, அதேபோல இதிகாச-புராணங்களுக்கு மாறாகவும் தயாரித்தார்கள் என்று முன்னமே எடுத்துக் காட்டப்பட்டது. “கதா சரித் சாகர” போன்ற கதைகளில் சித்தர்கள் ஏதோ மந்திர-தந்திரங்களில் வல்லவர்கள் போன்று சித்தரிக்கப் பட்டனர். அதேபோல ஆரியர்களை உருவாக்கி, அவர்களுக்கு எதிராக திராவிடர்களை தயாரித்தவர்களே, ஜைன-சித்தர்கள், பௌத்த-சித்தர்கள் போல, திராவிட-சித்தர்களை உருவாக்கியிருக்கின்றனர். கொடுத்துள்ள பெயர்கள், விளக்கம் முதலியவற்றைப் படிக்கும்போதே, தெரிவது என்னவென்றால், நிச்சயமாக இதைப்படித்து, 19-20ம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் புதியதான “திராவிட சித்தர்களை” உருவாக்கியிருக்கிறார்கள் என்பதுதான். மேலும் யாரை சேர்ப்பது-விடுப்பது என்று குழம்பி, பட்டியலை உருவாக்கினதால், “பதினெண் சித்தர்” பட்டியலும் குழம்பிவிட்டது. அகத்தியர் பெயரில் உள்ள நூல்களைப் படித்து, இவற்றையும் படித்தால், எப்படி இக்கதைகளைக் காப்பியடித்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

ஆங்கிலேயர் ஆதரவுடன் அல்லது உத்தரவுடன் தமிழ் பண்டிதர்கள் உருவாக்கியுள்ளனர்: ஆங்கிலேயர் மற்றும் ஐரோப்பிய மிஷனரிகள் சேர்ந்து வேலை செய்து வந்துள்ளதால், ராபர்டோ டி நொபிலி, சீசன்பால்கு, பெஸ்கி போன்றவர்கள், தமிழ் பண்டிதர்களின் உதவியுடன், அத்தகைய சித்தர் பாடல்களை உருவாக்கியிருக்கலாம். சீசன்பால்கு கணபதி உபாத்யாயாவை மிரட்டி தமிழ் கற்றுக் கொண்டான், நூல்களையும் எழுதவைத்தான் மற்றும் அவரது சாவதற்கும் காரணமாக இருந்தான். ராபர்டோ டி நொபிலி “ஆத்தும நிர்ணயம்”, “புனர் ஜென்ம ஆக்ஷேபம்”, “அக்கியாண நிவாரணம்”, திவ்விய மாதிரிகை, ஞான சஞ்சீவி, அண்ட பிண்ட வியாக்கியானம், உலக பிராமண சாஸ்திரம், பரமசுமாக்ஷபிபிராயம் போன்ற நூல்களை எப்படி தமிழ் பண்டிதர்களை விலைக்கு வாங்கி எழுத வைத்தார்களோ அதேபோலத்தான் எழுதப்பட்டன[11]. ஐரோப்பியர்கள் ஓலைச்சுவடி புத்தகங்கள் எல்லாவற்றையும் சேகரித்து எடுத்துச் சென்றிருப்பதால், மேலும் பலவற்றிற்கு மூலப்பிரதிகளை எடுத்து, காகித நகல்களை வைத்துச் சென்றுள்ளதால், நிச்சயமாக அவர்கள் இந்த வேலையை செய்திருக்க வேண்டும்.  உலக மகாயுத்தங்களுக்குப் பிறகு, ஐரோப்பிய ஆட்சியாளர்கள் தத்தமது காலனிய நாடுகளினின்று வெளியேற வேண்டும் என்று தெரிந்தபோது, அங்கங்கு இத்தகைய போலி ஆவணங்களை, கட்டுக்கதைகளை, புரட்டு சரித்திரங்களை உற்பத்தி செய்து வைத்துவிட்டனர். மேலும் 19ம் நூற்றாண்டில் இந்திய மருத்துவமுறைகளுக்கு எதிராக ஆங்கிலேயர் அதிக அளவில் அடக்குமுறைகளைமேற்கொண்டு வந்தனர். உள்ள மருத்துவமுறைகளை “நாட்டு மருந்துவம்” (Native medicine), “காட்டு மருந்துவம்” (Tribal medicine), “கிராம மருந்துவம்” (village / folk medicine), “அநாகரிக மருத்துவம்” (Uncivilized / crude medicinal practices), “பில்லி-சூன்ய மருத்துவம்” (Shamanism / Witchcraft), “போலி மருத்துவம்” (Pseudo-medicine), “பேய்-பிசாசுகளை ஓட்டும் முறை” (Exorcism) என்றெல்லாம், பழித்துப்பேசி, இகழ்வாக எழுதி, எதிர்த்துச் சட்டங்களை இயற்றித் தடையும் செய்தனர்.

© வேதபிரகாஷ்

15-09-2012


[1] Anagarika Govinda, Tantric Buddhism, in P. V. Bapat (Gen.editor), 2500 Years of Buddhism, Publication Division, Government of India, New Delhi, 1997, p.315.

[2] Radhakamal Mukerjee, The March of Tantrika art over the Pacific, in Studies in Asian History, pp.289-296.

[3] Probodh Chandra Bagchi, Studies in the Tantras, Part-I, University of Calcutta, 1975, see under the chapter “On Foreign element in the Tantra”, pp.45-55.

[4] A list of eighty-four Siddhas (though, actually only 76 names are mentioned) is found in a manuscript (manuscript no 48/34 of the Asiatic Society of Bengal) dated Lakshmana Samvat 388 (1506) of a medieval Maithili work, theVarna(na)ratnākara written by Kaviśekharācārya Jyotirīśvara Ṭhākura, the court poet of King Harisimhadeva of Mithila (reigned 1300–1321). An interesting feature of this list is that the names of the most revered Nathas are incorporated in this list along with the Buddhist Siddhacharyas.

[6] Scott Hajicek-Dobberstein, Soma Siddhas and alchemical enlightenment: pasychedelic mushrooms in Buddhist tradition, Journal of Ethnopharmacology, 1995, vol.48, pp.99-118.

[7] Dasgupta, Sashibhusan (1995). Obscure Religious Cults, Firma K.L.M., Calcutta, ISBN 81-7102-020-8, pp.203ff, 204.

[8] Shastri Haraprasad (ed.) (Hajar Bacharer Purano Bangala Bhasay Bauddhagan O Doha (in Bengali), 1916, 3rd edition 2006). Kolkata: Vangiya Sahitya Parishad, pp.xxxv-vi.

[9] J. G. Jennings, The Vedantic Buddhism of the Buddha, Geoferry Cumerlege, Oxford University Press, London, 1947.

[10] Ananda K. Coomaraswamy, Hinduism and Buddhism, The Wisdom Library, New York.

[11] எஸ். ராஜமாணிக்கம் (பதிப்.), ஆத்தும நிர்ணயம், பாளையங்கோட்டை, 1967.

பதிப்பாசிரியரே ராபர்டோ டி நொபிலி பெயரில் உலாவரும் நூற்களில் பெரும்பாலும் அவரால் எழுதப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார் பக்கங்கள்.xxii-xxiv. அவற்றில் உபயோகப்படுத்தப்பட்டுள்ள சொற்கள் – சுவர்க்கம், நரகம், வைகுந்தம், கைலயம்…….பாவம், புண்ணியம்…..போன்ற விஷயங்கள் கிருத்துவத்திற்கு கிஞ்சித்தேனும் சம்பந்தம் இல்லை. ஏதோ ஒரு தமிழ்நூலை, கிருத்துவநூல் என்று சொல்லிக்கொள்வது நன்றாகவே தெரிகிறது.

Posted in அகத்திய, அகத்தியர், அகஸ்தியர், அரேபியா, அறிவு ஜீவி, ஆதிநாத, ஆயுர்வேதம், ஆயுள், ஆயுள்வேதம், ஆரியன், இந்தியவிரோதிகள், ஓடந்தபூர், ஓலை, ஓலைச்சுவடி, கபாலி, கம்பளி, கலாச்சாரம், காபாலிக, குலாச்சார, கௌதம, க்ஷத்திரியர், சட்டைமுனி, சரகர், சல்ய, சல்லிய, சஹஜயான, சாரணர், சிகிச்சை, சிதம்பரம், சிதர், சித்தஞானம், சித்தபாத, சித்தபிரமை, சித்தபுரம், சித்தபுருஷன், சித்தப்பிரமை, சித்தம், சித்தர் பாடல்கள், சித்தாந்திகள், சுவடி, டமரானந்தர், தக்ஷசிலா, தந்திரம், தமிழகம், தமிழ், தமிழ்நாடு, திரவிடம், திராவிடன், துறவி, தேரையர், நரதேவ, நாரதேவ, நாலாந்தா, பகுத்தறிவு, பஞ்சபூதங்கள், பதஞ்சலி, பதினென் சித்தர்கள், பரம்பரை, பரம்பரை வைத்தியர், பராசர, பல்தேயமொழியோர், பல்மொழிதெயத்தோர், பாலியல், புத்தகம், புனிதம், புலஸ்தியர், பூதங்கள், பூர்ணலிங்கம் பிள்ளை, பெரிய ஞானக் கோவை, பௌத்தம், மச்சேந்திர, மந்திரம், மயக்கம், மருந்து, யந்திரம், வஜ்ரயான, வாமாசார, விக்ரமசிலா, வீரசைவம், வேதம், வேதாங்கம், வேதாந்தம், வைத்தியர், ஹடயோகப்ரதீபிகா | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

பௌத்தமத அல்லது பௌத்தர் காலத்தில் சித்தர்கள்

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 15, 2012

பௌத்தமத அல்லது பௌத்தர் காலத்தில் சித்தர்கள்

ஜைன-பௌத்தக் குழப்பங்கள்: சரித்திரரீதியில் ஜைனம்-பௌத்தம் தனித்தனியாக இருந்ததா, ஒரே காலத்தில் இருந்து, பிறகு பிரிந்ததா, மஹாவீரரும், புத்தரும் ஒருவரா அல்லது தனித்தனியானவர்களா, ஒரேகாலத்தைச் சேர்ந்தவர்களா, ஒருவர் மற்றொருவரின் சீடரா, கொள்கைகளினால் பிரிந்து போயினரா என்ற பற்பல கேள்விகளுக்கு விடைகாணாமல், சர்ச்சைகளில் ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் ஈடுப்பட்டனர்[1]. “சித்தார்தர்” என்ற பெயரையுடைய அரசருக்குப் பிறந்தவர் மஹாவீரர். (c.599-527 BCE) ஆனால் சித்தார்த்தர் என்ற பெயர் கொண்டவர் புத்தர் (c.567-487 BCE). மஹாவீரர் போதிக்கும் கூட்டத்திற்கு புத்தர் வந்திருந்தார் என்று ஜைனர்கள் சரித்திரம் கூறுகிறது. ஆனால், ஆர்தர் வின்சென்ட் ஸ்மித் என்பவன் எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, இதுதான் இந்திய சரித்திரம் என்று எழுதிவைத்து விட்டான். அலெக்சாந்தருக்குப் பிறகுதான் “இந்திய சரித்திரமே” ஆரம்பிக்கிறது என்றபோது, மஹாவீரரும், புத்தரும் சரித்திரகாலத்திற்கு முன்பு (Pre-historic) தள்ளப்படுகின்றனர். ஆனால், இந்தியர்கள் இத்தகைய நுணுக்கங்களை அறியாமல் சரித்திரத்தைப் படித்து வருகின்றனர். திராவிட சித்தாந்திகளைப் பற்றியோ கேட்கவே வேண்டாம், “கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்தேத் தோன்றிய மூத்தக்குடி, தமிழ்குடி”, என்று பறைச்சாற்றிக் காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பர்!

வேத-ஜைன-பௌத்த முறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள்: ஜைனர்கள் மற்றும் பௌத்தர்கள் வேதங்களின்று தான் தமது ஞானத்தைப் பெற்றனர். அதனை மஹாவீரரோ அல்லது புத்தரோ மறுத்ததில்லை[2]. அவர்களது வாதங்கள் பிராமணர்களுக்கு எதிராகவும், அவர்கள் பிராமணர்களை வாதங்களில் வென்றதாகவும் தான் அவர்கள் நூல்களில் இருக்கும்[3]. அதனால், அவர்கள் பிராமணர்களுக்கு விரோதிகள் இல்லை. சிரவணர்கள்-பிராமணர்கள் அவர்கள் காலங்களில் சேர்ந்தே பணிசெய்துள்ளார்கள். ஆனால், பிறகு தோற்றுவிக்கப் பட்ட அவர்களது வாழ்க்கை வரலாற்று நூல்களில் அவ்வாறு வேத-பிராமண-விரோதிகளாகச் சித்தரிக்கப்பட்டனர். 1800-500 BCE காலங்களில் இம்மத நம்பிக்கையாளர்கள் ஆட்சியில் இருந்ததால், எப்படி, இக்கால அரசியல் நிர்ணயச் சட்டத்தில் மாறுதல்கள் செய்கிறார்களோ, அதுபோல சாஸ்திரங்களில் தமக்கு சாதகமாக பல திருத்தங்களை செய்தார்கள். அதுமட்டுமல்லாது, இதிகாச-புராணங்களையும் மாற்றியெழுதினர். வேதமத்தவர் தமது நூல்களைக் காத்துக் கொள்ள மற்றும் ஜைன-பௌத்தர்களின் திருத்தங்களுக்கு உட்படாமல் காக்கத் தகுந்த முறைகளை கையாண்டார்கள். அந்நிலையில் வேதங்கள் மற்றவர்கள் படிக்கக் கூடாது என்று தீர்மானித்திருக்கலாம். அந்நிலையிலும் அவர்கள் பிராமணர்களைப் போல வேடமிட்டு வந்து வேதங்களைக் கற்றுக் கொள்ள முயற்ச்சித்துள்ளார்கள்[4]. அப்பொழுது தான், அவர்களை “பாஷாண்டிகள்” என்று அழைத்தார்கள். இத்தடையை நீக்கத்தான், எல்லோரும் வேதங்களைக் கற்கலாம் என்றறிவித்தார்கள். ஆனால், தத்தமது மதங்களில் பெண்களை அடக்கிவைத்தார்கள்[5]. நிர்வாணத்திலும் கூட சமவுரிமை கிடையாது என்று அறிவித்தனர்[6]. ஆனால், பிறகு சங்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டபோதுதான் பிரச்சினைகள் வந்தன. தந்திரங்களில் பாலியல் ரீதியாக அவர்கள் பயன்படுத்தப் பட்டனர்[7], துன்புறுத்தப்பட்டனர்[8], அடக்கி வைக்கப் பட்டனர்[9].

மந்த்ர-தந்ட்ர-யந்த்ர முறைகளில் மாற்றம்: தந்திரிக-தாந்திரிகமுறை வேதமுறைகளினின்று, ஜைனம் மற்றும் பௌத்த மதங்களில் மாற்றப்பட்டு, மாறி வந்துள்ளன. இடைக்காலத்தில் இவை தோன்றியதாக சில நூல்களை வைத்து விளக்கம் கொடுத்தாலும், மூலநூல்கள் ஆரம்ப நூற்றாண்டுகளைச் சேர்ந்ததாக உள்ளன. யாமள, காளிகா, ர‌க்ஷகாளிகா, இந்திவர காளிகா, ஜீவகாளி, பைரவிதக்ணி, சித்திலக்ஷ்மி தந்திரங்களைக் குறிப்பிட்டாலும், ஜைனர்கள் அவற்றை மாற்றியமைத்துக் கொண்டனர்[10]. ஆனால், குல்லுகபட்டர் என்பவர் பாரதப்பாரம்பரிய ஞானம் – வேத மற்றும் தந்திர என்று இரண்டு வகைகளில் பிரிக்கப்பட்டுள்ளாதாகக் குறிப்பிட்டுள்ளார்[11]. ஆனால், “தந்த்ர/தந்திர” என்ற சொல்லிற்கு அர்த்தம் வேதத்திலிருந்துதான் பெறப்படுகிறது[12]. முதலில் தந்திரிகமுறைகளை எதிர்த்த பௌத்தர்களும் அவ்வாறே சிவ-சக்தி முறைகளை மாற்றிக் கொண்டனர். சிவலோகேஷ்வரரை, அவலோகேஷ்வர் என்று மாற்றிக் கொண்டனர். சஹஜ / சஹஜீய என்ற சமரசமுறைகளில் இருமதங்களும் வேத மந்த்ர-தந்ட்ர-யந்த்ர முறைகளை பெரும்பாலும் ஏற்றுக் கொண்டன. திருமூலரும் அவ்வாறே செய்துள்ளார். அதனால், திருமந்திரத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது. ஆனால் ஜைன-பௌத்த மதங்கள் கடவுள் இல்லை என்று அறிவித்துவிட்டு, தந்திரமுறைகளுக்கு தேவதைகளை வைத்துக் கொண்டார்கள், அவையெல்லாமே இந்து கடவுளர்கள் தாம்.

இருகாலகட்டங்களில் தந்திரங்களில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள்: கிரேக்கர்களாக ஜைனர்கள் இந்தியாவில் வந்தபோது ஏற்பட்ட மாற்றங்கள், அரேபியர்கள் வந்தபோது ஏற்பட்ட மாற்றங்கள் என இரண்டு வகையாக பார்க்கலாம். ஆகவே, ஜைன-பௌத்த சித்தர்கள் வேதமுறைகளை தகவமைத்துக் கொண்டதில், இரு காலகட்டங்களைப் பார்க்கலாம். அரேபியர்-முகமதியர் படையெடுப்பு-தாக்குதல்களுக்கு முன்னர் மற்றும் பின்னர் என்று இரு காலகட்டங்களில் மாறுதல்களை, மாற்றங்களை, சீரழிவுகளைப் பார்க்கலாம். முதலில்-முன்னர் ஏற்பட்ட பிறழ்ச்சி, அழிவு, சீரழிவு ஜைன-பௌத்தர்களால் ஏற்பட்டது.  பின்னர் ஏற்பட்ட பிறழ்ச்சி, அழிவு, சீரழிவு அரேபியர்-முகமதியர்களால் ஏற்பட்டது. இடைக்காலத்தில் அல்லது முகமதியர் காலத்திலும் மந்த்ர-தந்ட்ர-யந்த்ர நூல்கள் தோற்றுவிக்கப்பட்டன. ஆனால், அவை முகமதியர்களின் காம-உடலின்ப சரச-சல்லாபங்களுக்கு உதவும் வகையில் ஏற்பட்டவை. பல மந்த்ர-தந்ட்ர-யந்த்ர பண்டிதர்கள் வலுக்கட்டாயமாக, துன்புறுத்தப் பட்டு, தமகேற்றபடி அத்தகைய நூல்களை எழுதவைத்தனர். அவ்வாறு உருவானவைதாம் அனங்கரங்க, ஆனந்தரங்க, காமசூத்திர போன்ற பாலியல் நூல்கள்[13]. முகமதியர் காலத்தில் ஆயிரக்கணக்கான மருத்துவ நூல்கள் அரேபிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, மூலங்கள் அழிக்கப்பட்டன. அவற்றை அந்நூல்களைப் படிக்கும்போதே அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாது, அவர்களில் சிலர் ஆயுர்வேத நூல்களைப் படித்துள்ளோம், அவற்றை சேகரித்துள்ளோம் என்று ஒப்புக்கொண்டுள்ளனர்[14].

தெற்கில் ஜைன-பௌத்த மதங்கள் இரண்டாம் முறை தலைத்தூக்கி அடங்கியது: முகமதியர்கள் வடக்கில் ஆதிக்கம் செல்லுத்தியபோதுதான், கர்நாடகத்தில் ஜைனர்கள் மறுபடியும் தலைத்தூக்கினர். தென்னிந்தியாவில் ஜைன-பௌத்தர்களின் தாக்கம் முதல் நூற்றாண்டுகளிலேயே காணப்படுகிறது. களப்பிரர்களினால், தமிழக கலாச்சாரம் அழிந்தது, அதனால், “களப்பர்களின் இருண்ட காலம்” என்றும் தமிழக சரித்திரத்தில் சொல்லப்படுகிறது. பிறகு சைவத்தின் எழுத்தியால் இரண்டும் அடக்கப்பட்டன. கர்நாடகத்தில், வீரசைவத்தின் மறுமலர்ச்சியால், இரண்டும் அடக்கப்பட்டு, பிறகு வந்த முகமதியர்களையும் கட்டுக்குள் வைத்தது. அதனால்தான், வீரவல்லாளன் போன்றோர் ஜைனர்களாக இருந்தார்கள். இருப்பினும், பிறகு சைவரானார்கள், முகமதிய மதத்தை எதிர்க்கவும் செய்தனர். அதனால்தான், வல்லாளன் வயதான காலத்திலும், வஞ்சகத்தால் சிறைப்பிடிக்கப்பட்டு, குரூரமாகத் தோலுறித்துக் கொல்லப்படுகிறான். ஜைன-பௌத்த மதங்களுக்கும் வியாபாரரீதியில்-அரசியல் ரீதியில் போராட்டங்கள் நடந்துள்ளன. அப்பொழுது, அரேபியர்களின் மற்றும் சீனர்களுடன் வைத்துக் கொண்ட கூட்டும், அவர்களின் அழிவிற்கு காரணமாக இருந்தது. “அகாலங்க” என்ற ஜைனமுனிவர் 788ல் பௌத்தர்களை வென்று, இலங்கைக்கு அனுப்பியதாக, கல்வெட்டுகள் கூறுகின்றன[15].

பௌத்தமதத்தில் சித்தர்கள்: வேதமதத்தில் தந்த்ரமுறை சக்திவழிபாட்டில் இருந்தது. பிறகு ஜைனர்கள் அதை மாற்ரித் தகவமைத்துக் கொண்டனர்.  இந்து பெண்-கடவுளர்கள் அவர்களுக்கு தேவதைகளாயினர். அவர்கள் பெயரில் தந்த்ர நூல்களையும் மாற்றியெழுதிக் கொண்டனர். பிறகு பௌத்தர்கள் அதனை பின்பற்ற ஆரம்பித்தபோது, அவர்களும் மாற்றங்களைச் செய்தனர். சக்திற்கு பதிலாக பிரஜ்ன-ஞானம் என்று வைத்து பௌத்த-தந்த்ர முறையினை வளர்த்தனர்[16]. சக்தியை அவர்கள் மாயை என்றழைத்தனர். இருப்பினும், சூன்யதா தான் பிரஜ்ன, உயர்ந்தநிலை ஞானம்-அறிவு என்றனர். ஜைனர்கள் பெண்களுக்கு தந்த்ரமுறையில் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். பௌத்தத்திலும் அவ்வாறேயிருந்தாலும், வெளிப்படையில் ஆண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதைப் போலக் காட்டிக் கொண்டனர். இருப்பினும் பெண்களின் பங்கில்லாமல், தந்தரமுறைகளை பிரயோகம் செய்யமுடியாது. இதனால்தான், இருமதங்களும் இம்முறைகளில் தோல்வியடைந்தன.

புத்தர் ஜாதகக் கதைகள் புராணங்களைப் பின்பற்றியமுறை: புத்தர் ஜாதகக் கதைகள் என்பவை புத்தருடைய முற்பிறவிகள், இக்காலப்பிறப்பு, மாயாதேவியின் கனவுகள் முதலிவற்றைப் பற்றியக் கதைகளின் தொகுப்பாகும். ஜாதகமாலா என்ற நூலின்படி, சித்தர்கள் வங்கமலையில் வசித்தவர்கள் (விஸ்வந்தர கதை), மானஸசரஸில் திருதராஷ்ட்ர என்ற பெயரில் போதிசத்வராக இருந்தபோது அங்கு சித்தர் கூட்டம் இருந்தது (புனித அன்னங்கள் கதை). சித்தர்கள், வித்யாரண்யர், ரிஷிக்களுடன் வசித்து வந்தனர்[17]. இவையெல்லாம் புராணங்களில் உள்ள விவரங்கள் போன்றேயுள்ளன.

® வேதபிரகாஷ்

13-09-2012


[1] Brahmachari Sital Prasadji, A Comparative Study of Jainism and Buddhism, The Jaina Mission Society, Madras, 1932.

[2] J. G. Jennings, The Vedantic Buddhism of the Buddha, Geoferry Cumerlege, Oxford University Press, London, 1947.

[3] முகமதியரும், பிறகு வந்த கிருத்துவர்களும் இதேமுறைத்தான் கையாண்டனர். சீசன்பால்கு, தான் பிராமணர்களுன் 300 கருத்தரங்கள் நடத்தியதாக எழுதி வைத்துக் கொண்டான். ஆனால், கலந்து கொண்ட பிராமணர்களைப் பற்றி எந்த விவரங்களையும் கொடுக்கவில்லை. ஆகையால், அவை உண்மையா, கட்டுக்கதையா, கற்பனையா என்று தெரியாது.

[4] முகமதியரும், பிறகு வந்த கிருத்துவர்களும் இதேமுறைத்தான் கையாண்டனர். இதனால்தான், சித்தர்களிலும் பல போலி சித்தர்கள் உருவானார்கள். ராபர்ட் டி நொபிலி இதே மாதிரி வேடமிட்டுக் கொண்டு, வேதங்களைக் கற்றுக் கொள்ள முயற்ச்சித்தான்.

[5] Padmanabh S. Jaini, Gender and Salvation: Jaina Debates on the Spiritual Liberation of Women, University of California, USA, 1991, pp.18-19.

[6] Walther Schubring, The Doctrine of the Jains – Described after the Old Sources, Motilal Banarasidas publishers, New Delhi, 2000, p.61.

[7] Brhatk Bhasya.1.2670; Therigat (139-344) where nun Khema was invited to enjoy sensual pleasure.

[8] N. N. Bhattacharya, History of the Tantric Religion (A Historical, Ritualistic and Philosophical study), Manohar, New Delhi, 1987, pp.181-193.

[9] Analayo, Theories on the Foundation of the Nun’s Order – a Critical Evaluation, in JCBSSL, Vol.VI, can be accessed from here: http://buddhistinformatics.ddbc.edu.tw/analayo/TheoriesFoundation.pdf

[10] O. P. Jaggi, Yogic and Tantric Medicine, in History of Science, Technology and Medicine in India, Vol.V, Atma Ram & Sons, New Delhi, 1979, p136.

[11] N. N. Bhattacharya, History of the Tantric Religion, Manohar, New Delhi, 1987, Introduction, p.1

[12] Rigveda.X.71.9; Atharvaveda.X.7.42; Taittriya Brahmana.II.5.5.3; Panini derived the word “tantraka” (woven cloth) (V.2.70) from “Tantra” (loom). Thus, the act of weaving is “tantra”.

[13] முகமதியர்கள் தங்களது ஹேரங்களில் /அந்தப்புறங்களில், நுற்றுக்கணக்கான பெண்களை அவ்வாறு தேர்ந்தெடுத்து அனுபவித்து வந்தார்கள். அப்பொழுது ஏற்பட்டதுத்தான், பிரங்கி/பறங்கி/மேகவியாதி. அதனால் தான், அந்நோயைத் தீர்க்க மருத்துவர்கள் முயன்றனர்.

[14] O. P. Jaggi, Medicine in Medieval India, in History of Science, Technology and Medicine in India, Vol.V, Atma Ram & Sons, New Delhi, 1979, pp.73-79, p103, 108.

[15] K. A. Nilakanda Sastri, Sravanabelagola, Department of Archaeology, Mysore, 1981, p.4, based on Epigraphica Karnataka, Vol.II.

[16] Anagarika Govinda, Tantric Buddhism, in P. V. Bapat (Gen.editor), 2500 Years of Buddhism, Publication Division, Government of India, New Delhi, 1997, p.318.

[17] J. S. Speyer (Trans.), The Jatakamala or Garland of Birth-stories of Aryasura, Motilal Banarasisas, New Delhi, 1982 (1895 edition), p.77, 182.

Posted in அறுவை சிகிச்சை, அறுவைசிகிச்சை, ஆகாயம், ஆத்மா, ஆனந்தம், ஆன்மா, ஆயுர்வேதம், ஆயுள், ஆயுள்வேதம், ஆரியன், கந்தகம், கந்தரவர், கருத்து, கரைசல், கற்பம், கலாச்சாரம், கல்பம், சிதார், சித், சித்தகுரு, சித்தஜலம், சித்தஞானம், சித்தபிரமை, சித்தபுரம், சித்தர், ஜோகினி, ஞானம், ஞானி, தத்துவஞானிகள், தந்திரம், தமிழகம், நினைவு, நிம்மதி, நிர்வாணம், நிலம், பௌத்தம், மத்திய ஆசியா, மந்திரம், யோகா, யோகினி, யோசனை, ரணச்சிகிச்சை, ரிஷி | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

சைவ சித்தாந்தமும், சித்தர் பாடல்களும், சித்த மருத்துவமும்

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 3, 2012

சைவ சித்தாந்தமும், சித்தர் பாடல்களும், சித்த மருத்துவமும்

இடைக்காலத்தில் தோன்றிய சைவசித்தாந்தத்திலும், சித்து, சித்தி முதலிய வார்த்தைகள் காணப்படுகின்றன. ஆனால், அவர்களுக்கும் இந்த சித்தர்களும் எந்த சம்பந்தமும் இல்லை. சிவஞான சித்தியாரை, “சித்தர்” என்றோ, “”சித்த மருத்துவர் யாரும் கூறவில்லை. ஆகவே, சித்தியாரை சித்தராக்க முடியாது. சித்தாந்தத்தில் உள்ள சித்தி, இங்குள்ள சித்தியோடு ஒப்பிட முடியாது. பஞ்சபூதத் தத்துவம், திரிதோஷம், ஆறு சக்கரங்கள், பிரணாயாமம், யோகா முதலிவற்றை ஏற்காமல் இருந்தால், அவை சைவசித்தாந்தத்தில் இருக்க முடியாது. வேதத்தின் அந்தத்தை, முடிவை பெறும் முயற்சி போல, சித்தாந்தி – சித்தின் முடிவை – ஞானத்தின் முடிவை அறிய விரும்பினார்கள். சிவனை மறுக்கும் சித்தாந்தம் இருக்க முடியாது, அதுபோலவே சித்தர்களும் இருக்கமுடியாது. ஆகவே, “கடவுளை எதிர்க்கும், மறுக்கும் நாத்திகவாதிகள் சித்தர்கள்” என்பது பொய்யான வாதமாகிறது. திருமூலரே ஆத்திகவாதியாக இருந்து, வேத-புராணங்களை ஏற்றுக் கொண்டு, சிவபக்தராக இருந்தும், மும்மூர்த்திகளின் தத்துவங்களை ஏற்றுக் கொண்டு, மந்திரம்-யந்திரம்-தந்திரம் முறைகளை தகவமைத்துக் கொண்டுதான் சித்தராக இருந்தார். அப்பொழுது, திருமூலரின் சித்தாந்தத்தை மறுத்து, சைவ சித்தாந்தத்தையும் வெறுத்து “சித்தர்கள்” இருக்க முடியுமா? அவர்கள் “சித்தர்கள்” ஆவார்களா?

சித்தமருத்துவ நூல்கள் தமிழ் சித்தர்களால் எழுதப்பட்டவையா?: சித்தர்களின் பெயர்களில் பற்பல மருத்துவ நூல்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சித்தர் பெயரின் பின்னால் சாத்திரம், காண்டம், வைத்தியம், தந்திரம், சூத்திரம் என்றும், எண்கள் – 10, 20, 50, 100, 1000 என்றும் சேர்த்துக் கொண்டு பல நூல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் குறைவாகவே கிடைக்கப் பெற்றுள்ளன. தாதுக்கள், உப்புக்கள், கனிமங்கள் முதலியவற்றின் பெயர்களைப் பார்க்கும் போது அவையெல்லாம் 19 அல்லது 20ம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை என்று நன்றாகத் தெரிகிறது. ஏனெனில் அதற்கு முன்பு, அவற்றிற்கு அத்தகைய சொல் பிரயோகங்கள் இல்லை.

அகத்தியர் ஐந்து சாத்திரம்,
அகத்தியர் கிரியை நூல்,
அகத்தியர் அட்டமாசித்து, ,
வைத்திய ரத்னாகரம்,
வைத்தியக் கண்ணாடி,
வைத்தியம் 1500,
வைத்தியம் 4600,
செந்தூரன் 300,
மணி 400,
வைத்திய சிந்தாமணி,
கரிசில்பச்யம்,
நாடி சாஸ்திரப் பசானி,
பஸ்மம்200,
கர்மவியாபகம்,
அகத்தியர் சூத்திரம் 30,
அகத்தியர் ஞானம்
திருமூலர் சல்லியம் – 1000
திருமூலர் வைத்திய காவியம் – 1000
திருமூலர் வைத்திய கருக்கிடை – 600
திருமூலர் வைத்திய சுருக்கம் – 200
திருமூலர் தீட்சை விதி – 18
திருமூலர் யோக ஞானம் – 16
16. திருமூலர் விதி நூல் – 24
திருமூலர் ஆறாதாரம் – 64
திருமூலர் பச்சை நூல் – 24
திருமூலர் பெருநூல் – 3000
திருமூலர் ஞானோபதேசம் 30
திருமூலர் வியாதிக் கூறு 100
திருமூலர் முப்பு சூத்திரம் 100.
போகர் – 12,000
சப்த காண்டம் – 7000
போகர் நிகண்டு – 1700
போகர் வைத்தியம் – 1000
போகர் சரக்கு வைப்பு – 800
போகர் ஜெனன சாகரம் – 550
போகர் கற்பம் – 360
போகர் உபதேசம் – 150
போகர் இரண விகடம் – 100
போகர் ஞானசாராம்சம் – 100
போகர் கற்ப சூத்திரம் – 54
போகர் வைத்திய சூத்திரம் – 77
போகர் மூப்பு சூத்திரம் – 51
போகர் ஞான சூத்திரம் – 37போகர் அட்டாங்க யோகம் – 24
கருவூரார் வாத காவியம் – 700
கருவூரார் வைத்தியம் – 500
கருவூரார் யோக ஞானம் – 500
கருவூரார் பலதிட்டு – 300
கருவூரார் குரு நரல் சூத்திரம் – 105
கருவூரார் பூரண ஞானம் – 100
கருவூரார் மெய் சுருக்கம் – 52
கருவூரார் சிவஞானபோதம் – 42
கருவூரார் கட்ப விதி – 39
கருவூரார் மூப்பு சூத்திரம் – 3
கொங்கணவர் வாதகாவியம் – 3000
கொங்கணவர் முக்காண்டங்கள் – 1500
கொங்கணவர் தனிக்குணம் – 200
கொங்கணவர் வைத்தியம் – 200
கொங்கணவர் வாதசூத்திரம் – 200
கொங்கணவர் தண்டகம் – 120
கொங்கணவர் ஞான சைதன்யம் – 109
கொங்கணவர் சரக்கு வைப்பு – 111
கொங்கணவர் கற்ப சூத்திரம் – 100
கொங்கணவர் வாலைக்கும்பி – 100
கொங்கணவர் ஞான வெண்பா சூத்திரம் – 49
கொங்கணவர் ஆதியந்த சூத்திரம் – 45
கொங்கணவர் மூப்பு சூத்திரம் – 40
கொங்கணவர் உற்பத்தி ஞானம் – 21,
புலிப்பாணி வைத்தியம் – 500
புலிப்பாணி சோதிடம் – 300
புலிப்பாணி ஜாலம் – 325
புலிப்பாணி வைத்திய சூத்திரம் – 200
புலிப்பாணி பூஜாவிதி – 50
புலிப்பாணி சண்முக பூசை – 30
புலிப்பாணி சிமிழ் வித்தை – 25
புலிப்பாணி சூத்திர ஞானம் – 12
புலிப்பாணி சூத்திரம் – 9

சித்தர்களே மருத்துவ நூல்களை இயற்றினார்களா அல்லது பிறகு தயாரிக்கப்பட்ட நூல்களுக்கு, அதிகாரம், ஏற்பு மற்றும் பிரபலம் முதலிய காரணங்களுக்காக சித்தர்கள் பெயர்கள் தலைப்பாக சேர்த்திடப்பட்டனவா என்று யோசிக்கவேண்டியுள்ளது.

சைவம் வடக்கிலிருந்து தெற்கில் வந்துள்ளது என்பது வீரசைவ நூல்களினின்று தெரிய வருகின்றது. அதற்கான கல்வெட்டு, கட்டிட, அகழ்வாய்வு ஆதாரங்கள் உள்ளன. தமிழகத்தில் உள்ள கல்வெட்டு, கட்டிட, அகழ்வாய்வு ஆதாரங்கள் மௌரிய காலத்திற்கு முன்னாக இருந்தால் தான், இந்த வாதத்தை மறுக்க முடியும். அதாவது, உள்ள பல்லவர்காலத்து கொகைக்கோவில்கள் முதலியன அக்காலத்திற்கு முன்பாக இருந்திருந்தால், சைவத்தின் தொன்மை சங்ககாலத்திற்கு முன்பாக இருந்ததாகிறது. உண்மையில் உள்ள கல்வெட்டு, கட்டிட, சிற்பங்கள் முதலியவை நேரிடையாக தேதியிடப்படவில்லை. ஒப்பீட்டுமுறையில் தேதியிடப்பட்டுள்ளது. அந்நிலையில் சைவசித்தாஅந்தம் தோன்றிய பிறகுதான் “சித்தர்” வழக்கு வந்திருக்க வேண்டும் என்றால், அது வடவிந்திய நாதமரபிற்குப் பின்னர்தான் ஏற்பட்டிருக்கவேண்டும்.

இவை சித்தமருத்தப் பாடல்களா, அவற்றின் காலத்தை நிர்ணயிப்பது எப்படி?: கீழே சித்த வைத்தியர் ஒருவரால் எழுதப்பட்ட சிலபாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதனையே நாதாக்க ளெல்லோருஞ் சொன்னா ரிகத்தெவர்க்கு

மிதனையே சொன்னாரியேசு கிறிஸ்து வெமதிறைவ

னிதந்தரு நாமத்தை வீணாக வுச்சரிக் கேலெனவும்

பதந்தரு நற்பரி சுத்தாவி ஞானம் படிகெனவே (297)

 

\எனவுரைத் தேவ நாமமெம்போது மியம்புகவென்றுங்

கனமுறு மிந்தனற் சத்திய வேதக் கலையுணர்ந்தோ

ரினம்பிற வாரென்றிசைத்தார் முகம்ம தெனுநபிநம்

மினமெலாம் வேதங்கீ ழாக்கி யிறந்தோ மெதிர்மறையே (298)

 

எதிராகச் செய்யு மறையோர்க் கினிப்பிறப்பில்லையென்றா

ரிதினுண்மை யெல்லா மறந்தார்கள் நூலோரெனும் பெயரின்

வதிவோ ரெலாம்பஞ்சை யானார்கள் பார்ப்பெனு மண்ணவரோ

முதிய கிழமா யிருந்திறக் கின்றார் முறையழிந்தே (299)

 

அழிந்து கெடுகின் றனர்சைவப் பேரோ ரதிகொலைசெய்

தழித்துத்தன் னான்மாவைக் சூத்திரப் பேரோரவரிடத்து

மொழியுநற் சூத்திர மில்லை கிறிஸ்தவர் முன்னுரைத்த

அழியாத தேவனன் நாம மெதுவென் றறிகிலரே (300)

 

அறிகிலட் நற்பரிசுத்தமாம் ஆவி யதுநபிமுன்

னறி வ்த்த நேர்யதி ராம்மறை யீதென் றறிதலற்று

முறையெதி ரான தவறுகள் செய்து முகம்மதியர்

நிறையற் றனருல கோரிவ் விதமென் னியாயமென்னோ (301)

 

மேலேயுள்ள பாடல்கள் எல்லாம் சித்தர்களுடைய பாடல்கள் என்று படிப்பவர்களுக்த் தோன்றலாம். ஆனால், இவை தேவக்கோட்டையைச் சேர்ந்த “வைத்தியமணி” சித.வே.ஷண்முகநாத பிள்ளை எழுதியுள்ள மீனாமிர்தம்[1] என்ற நூலில் உள்ளவை. 1887ல் பிறந்த இவர் 1947ல் இப்புத்தகத்தை வெளியிடுகிறார். அப்பொழுதே முகம்மது, ஏசு, பரிசுத்த ஆவி என்றெல்லாம் சேர்த்து எழுதியுள்ளார். இந்நூல் சித்தவைத்தியர்கள் எல்லோருக்கும், வைத்தியக் கல்லூரிகளுக்கும், பொதுவாக பூத பௌதிக தத்துவ விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களுக்கும் பயன்தரத்தக்க சிறந்த நூல்களாக இருக்கின்றன என்று வெளியிடப்பட்டுள்ளது[2]. ஆகவே தமிழ் பண்டிதர்கள் அவ்வாறு எழுதக்கூடும் என்று தெரிகிறது. கிருத்துவப் பாதிரியார்கள் எப்படி தமிழ்பண்டிதர்களை வைத்துக் கொண்டு, அவ்வாறான முறையைக் கையாண்டார்களோ, அதேமுறையை “சித்தர் பாடல்கள்” உருவாக்கக் கையாண்டிருக்கலாம்.

© வேதபிரகாஷ்

03-09-2012


[1] சித. வே. ஷண்முகநாத பிள்ளை, உயிர் நிலைக்கலை என்னும் மீனாமிர்தம் (அருமருந்துக் கோவை சேர்ந்தது), இலக்கியப் பதிப்பகம், காரைக்குடி, 1947.

[2] சித்த வைத்திய சங்கத்தின் 13-10-1946 தேதியிட்ட கடிதத்தின்படி. சித்த வைத்திய சங்கம் (ரிஜிஸ்டர்டு), அருப்புக்கோட்டை ரோடு, மதுரை.

Posted in அக்னி, அண்டம், அறிவு ஜீவி, ஆகாயம், ஆத்மா, ஆனந்தம், ஆன்மா, ஆயுர்வேதம், ஆயுள், ஆரியன், உடல், உயிர், ஓலை, ஓலைச்சுவடி, கண், கந்தகம், கனிமம், கன்னிமாரா நூலகம், கருத்து, கரைசல், கற்பம், கலாச்சாரம், கல்பம், காது, காமாக்கியா, காயம், காற்று, கால், கை, கைராச்சிக்காரர், சக்தி, சத், சிதம்பரம், சிதர், சிதார், சித், சித்தம், சித்தர், சித்தர் பாடல்கள், சித்து, சிந்தனை, சுவடி, சூபி, செவி, சோர்வு, தங்கம், தந்திரம், தமிழகம், தமிழ், திரவிடம், திராவிடன், திராவிடம், திருமூலர், தேவி, பதஞ்சலி, பதினென் சித்தர்கள், பரம்பரை, பரம்பரை வைத்தியர், பாதம், பாதரசம், பாரம்பரியம், பிண்டம், பிரதி, புத்தகம், பூதங்கள், பூர்ணலிங்கம் பிள்ளை, மந்திரம், மனச்சிதைவு, மனப்பாங்கு, மனம், மபப்பாங்கு, மருந்து, முஹம்மது கஜினி, மூக்கு, மூச்சு, மூலம், மூளை, யோகா, யோசனை, யோனி, ராமலிங்கம், லிங்கம், வள்ளலார், வேதாசலம், வைத்தியர் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

நவீனகால சித்தர் பாடல்களுக்கும், சித்த மருத்துவத்திற்கும் என்ன தொடர்பு?

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 3, 2012

நவீனகால சித்தர் பாடல்களுக்கும், சித்த மருத்துவத்திற்கும் என்ன தொடர்பு?

சித்தர்கள் பதினெட்டு என்றால் அவர்கள் பட்டியல் ஏன் வேறுபடுகிறது?: “பதினென் சித்தர்கள்” என்ற கணக்கீடு பிரபலமாக சித்தமருத்துவர்கள், சித்த-எழுத்தாளர்கள் மற்றும் சித்த-ஆராய்ச்சியாளர்கள் உபயோகித்து வருகிறார்கள். ஆனால், அத்தகைய கணக்கீட்டிற்கு ஆதாரம் ஏதாவது உள்ளதா என்று பார்க்கும் போது, பல பட்டியல்கள் தோன்றுகின்றன. உதாரணத்திற்கு பிரபலமாக மற்ற சித்த எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடும் பட்டியல்கள் சில கீழே கொடுக்கப்படுகின்றன:

கருவூரார் மாந்திரீக அட்டமா சித்து நிஜானந்த போதம் அபிதான சிந்தாமணி ஏ. சண்முகவேலன்
1. கும்ப முனி
2. நந்தி முனி
3. கோரக்கர்
4. புலிப்பாணி
5. புசுண்டரிஷி
6. திருமுலர்
7. தேரையர்
8. யூகி முனி
9. மச்சமுனி
10.புண்ணாக்கீசர்
11. இடைக்காடர்
12. பூனைக் கண்ணர்
13. சிவவாக்கியர்
14.சண்டிகேசர்
15. உரோமருஷி
16. சட்டநாதர்
17. காலாங்கி
18. போகர்
1. அகத்தியர்
2. போகர்
3. நந்தீசர்
4. புண்ணாக்கீசர்
5. கருவூரார்
6. சுந்தரானந்தர்
7. ஆனந்தர்
8. கொங்கணர்
9. பிரம்மமுனி
10.உரோமமுனி
11. வாசமுனி
12. அமலமுனி
13. கமலமுனி
14. கோரக்கர்,
15.சட்டைமுனி
16. மச்சமுனி,
17. இடைக்காடர்
18. பிரம்மமுனி
1. அகத்தியர்
2. போகர்

3.கோரக்கர்

4.  கைலாசநாதர்
5. சட்டைமுனி
6.திருமுலர்
7. நந்தி
8. கூன் கண்ணர்
9. கொங்கணர்
10. மச்சமுனி
11.வாசமுனி
12. கூர்மமுனி
13. கமலமுனி
14. இடைக்காடர்
15. உரோமருஷி
16.புண்ணாக்கீசர்
17. சுந்தரனானந்தர்
18. பிரம்மமுனி

  1. நந்தி
  2. திருமூலர்
  3. அகத்தியர்
  4. புண்ணாக்கீசர்
  5. புலத்தியர்
  6. பூனைக் கண்ணர்
  7. இடைக்காடர்
  8.   போகர்
  9. புலிக்கையீசர்
  10. கொங்கணர்
  11. அழுகணி
  12. கருவூரார்
  13. காலாங்கி
  14. அகப்பேய்
  15. பாம்பாட்டி
  16. தேரையர்
  17. குதம்பை
  18. சட்டைநாதர்
எம்.எஸ்.பூர்ணலிங்கம் பிள்ளை கா.சு. பிள்ளை, சி. பாலசுப்ரமணியம் ஏ.வி.சுப்ரமணியன் அரு.ராமநாதன்
  1. நந்தி
  2. சனகர்
  3. சனாதர்
  4. சனந்தர்
  5. சனற்குமார்
  6. திருமூலர்
  7. பதஞ்சலி
  8. அகத்தியர்
  9. புலத்தியர்
  10. புசுண்டர்
  11. காலாங்கி
  12. போகர்
  13. கொங்கணர்
  14. கருவூரார்
  15. தன்வந்திரி
  16. சட்டைஉனி
  17. தேரையர்
  18. யூகிமுனி
  1. அகத்தியர்
  2. புலத்தியர்
  3. புசுண்டர்
  4. நந்தி
  5. திருமூலர்
  6. காலாங்கிநாதர்
  7. போகர்
  8. கொங்கணர்
  9. சட்டைமுனி
  10. ரோமமுனி
  11. மச்சமுனி
  12. கருவூரார்.
  13. தன்வந்திரி.
  14. புண்ணாகீசர்
  15. கோரக்கர்
  16. யூகிமுனி
  17. தேரரயர்
  18. இடைக்காடர்
  1. அகத்தியர்
  2. திருமூலர்
  3. போகர்
  4. கோரக்கர்
  5. சட்டைமுனி
  6. நந்தி
  7. கொங்கணர்
  8. கமலமுனி
  9. இடைக்ககடர்
  10. சுந்தரானந்தர்
  11. ரோமமுனி
  12. பிரம்மமுனி
  13. மச்சமுனி
  14. வராஹமுனி
  15. கூர்மமுனி
  16. புண்ணாகீசர்
  17. கைலலசநாதர்
  18. கூன்கண்ணர்
  1. நந்தி
  2. அகத்தியர்
  3. மூலர்
  4. புண்ணாக்கீசர்
  5. புலத்தியர்
  6. பூனைக் கண்ணர்
  7. இடைக்காடர்
  8. போகர்
  9. புலிக்கையீசர்
  10. கருவூரார்
  11. கொங்கணன்
  12. காலாங்கி
  13. எழுகண்ணர்
  14. அகப்பேய்
  15. பாம்பாட்டி
  16. தேரையர்
  17. குதம்பை
  18. சட்டைநாதர்

இத்தகைய எண்ணிக்கைகள் எவ்வாறு வந்துள்ளன என்று இனி மூலங்களைப் பார்ப்போம்.

நந்தி யருள் பெற்ற நாதரை நாடினின்நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி

மன்ற தொழுத பதஞ்சலி வியாக்ரமர்

என்றிவர் என்னோ டெண்மருமே

(திருமந்திரம்.68)

  1. நந்தி
  2. சனகர்
  3. சனந்தர்
  4. சனாதர்
  5. சனற்குமாரர்
  6. பதஞ்சலி
  7. வியாக்ரமர்
  8. திருமூலர்

இப்பாடலை வைத்துக் கொண்டுப் பார்த்தால் – எண்மர் என்று வருகிறது. அவருடைய சீடர்கள் என அவரே குறிப்பிடுவது:

மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்இந்திரன் சோமன் பிரம்மன் உருத்திரன்

கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோ

டிந்த எழுவரும் என் வழியாமே

  1. மாலாங்கன்
  2. இந்திரன்
  3. சோமன்
  4. பிரம்மன்
  5. உருத்திரன்
  6. கந்துருக் காலாங்கி
  7. கஞ்ச மலையன்

ஆக திருமூலர் காலத்தில் 15 பேர் உள்ளனர். ஆனால், திராவிட இனவாதத்தின்படி, ஆரியர்கள் இதில் இருக்கக் கூடாது. ஆகையால் தான் மாலாங்கன், இந்திரன், சோமன், பிரம்மன், உருத்திரன், கந்துருக் காலாங்கி, கஞ்ச மலையன் என்ற பட்டியலில், காலாங்கியை மற்றும் தேர்ந்தெடுத்துள்ளனர். சமரசம் செய்து கொண்டவர்கள் அல்லது சைவ அபிமானிகள் எண்மரை சேர்த்துக் கொண்டுள்ளனர். போகரைப் படித்து குழம்பிப்போனவர்கள் பட்டியலை தமதிச்சைகேற்றாவாறு குழப்பியுள்ளனர்.

போகர் 7000 கொடுக்கும் சித்தர்கள் பட்டியல் ஜாதகம் முதலியன: போகர் 7000 என்ற நூலில் தான் சித்தர்கள் பற்றிய அதிகமான செய்திகள் உள்ளன, சித்தர்கள் “பதினெண்மர்” என்று குறிப்பிட்டு, 40ற்கும் மேற்பட்ட சித்தர்களின் பிறந்த மாதம், நட்சத்திரம், சாதிகளையும் குறிப்பிடுகின்றது. போகருக்கு 63 சீடர்கள் இருந்தார்களாம், அவர்கள் விண்வெளியில் பறக்கும் சக்தி கொண்டிருந்தார்களாம். எல்லா சித்தர்களையும் இணைக்க வேண்டும் என்ற முயற்சியில் இந்நூல் இயற்றப்பட்டிருக்கிறது. அதனால் காலத்தைப் பற்றி கவலைப்படவில்லை. முன்னுக்கு முரணாக எல்லோரையும் இணைக்க முனைந்துள்ளது. தசாவாரம் தெரிந்திருந்தத்தால் அந்த பத்து அவதாரப் பெயர்களை வைத்து பத்து ரிஷிக்களை உண்டாக்கியிருக்கிறது, பிறகு அவர்களும் சித்தர்கள் ஆகிறார்கள் (6868-6906). இதில் புத்தரைச் சேர்த்துள்ளது நோக்கத்தக்கது. நான்கு யுகங்கள், 1008 தீர்த்தங்கள் முதலியன சொல்லப்பட்டுள்ளன. ஆனால், பாடல்களை சாதாரணமாக வாசித்துப் பார்த்தாலே இது ஒரு போலிநூல் என்று தெரிகிறது. அதாவது 19/20ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று தெரிகிறது.

ஆரிய-திராவிட போராட்டத்தில் சிக்கிக் கொண்ட சித்தர்கள்: ஜே. எம். நல்லசுவாமி பிள்ளை (1864-1920) சைவராகயிருந்து, ஆரிய-திராவிட சித்தாந்த்தை ஏற்றுக் கொண்டவர். அதனால், திராவிடம்-சைவ சித்தாந்தம், ஆரியத்தை-வேத-உபநிடதங்களைவிட சிறந்தது என்று வாதிட்டார்[1]. அத்தகைய சைவம், பிராமணர்-அல்லாத இயக்கமாக மாறி, பிராமணர்-எதிர்ப்பு இயக்கமாக உருமாறி, திராவிட மாயைக்குள் சிக்குண்டது. இதனால் சித்தர்-எழுத்தாளர்களும் உருமாற வேண்டியிருந்தது. பகுத்தறிவில் இந்துமதத்தைப் பழிக்க வேண்டிருந்தது; நாத்திகத்தில் சிவனை மறக்கவேண்டியிருந்தது. திராவிட சித்தாந்தத்தில் திருமூலர் மரபையே மறைக்க வேண்டி வந்தது. அதன்படியே, பிறகு வந்தவர்கள் தமக்குக்கிடைத்துள்ள பிரதிகள் அல்லது புத்தகங்களை வைத்துக் கொண்டு, இந்த பட்டியல்களைத் தயாரித்துள்ளனர் என தெரிகிறது. இதைத்தவிர திருமந்திர பாரம்பரியத்தை ஏற்பதா வேண்டாமா என்ற மனசஞ்சலம், குழப்பம் மற்றும் திராவிட சித்தாந்த போராட்டம் 20 நூற்றாண்டு சித்தர் ஆராய்ச்சியாளர்களிடையே இருந்தது என்பதனையும் இது (இப்பட்டியல்கள்) எடுத்துக் காட்டுகிறது. சாமான்ய மக்களுக்குப் புரியவேண்டும் என்று இவர்கள் பாடல்களை இயற்றினார்கள் எனும் போது, மக்களிடையே பிரபலமாக இருக்கும் பெயர்களைத்தான் “சித்தர்கள்” வைத்துக் கொள்ள வேண்டும் அல்லது அப்போலி பாடல்களை உருவாக்கியவர்கள் வைக்க வேண்டும். அதனால்தான், புனைப்பெயர்கள் புராணப் பெயர்களாக, ரிஷிகளின் பெயர்களாக மாற்றப்பட்டன. அப்பொழுது, எதை விடுவது, எதை சேர்ப்பது என்ற குழப்பத்தில், அவரவர் விருப்பத்திற்கேற்றப்படி பட்டியலைத் தயாரித்துள்ளார்கள் என்று நன்றாகவே தெரிகிறது. கடந்த நூற்றாண்டுகளில் ஏற்பட்டிருக்கிறது என்பது, அவர்கள் பெயர்களைக் குறிப்பிடுகின்ற பட்டியல்களே சான்றாக உள்ளன.

சித்தர்கள் எண்ணிக்கை ஒன்பதா பதினெட்டானதா?: நாத-நவநாத சித்தர்களிடமிருந்து தான், இம்மரபு வருகிறது என்றதால், வடவிந்திய நாதசித்தர்களை விட தமிழ்சித்தர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்று உயர்வாகச் சொல்லிக்கொள்ள ஒன்பதை பதினெட்டாக்கியிருக்கலாம். இதனை மாணிக்கவாசகம், தெற்கில் பதினெண்சித்தர்கள் எனக்குறிப்பது போலவே வடக்கே நவநாத சித்தர்கள் எனக்குறிக்கும் மரபு உள்ளது, என்கிறார். அதாவது அவர்கள் தங்களது பட்டியலைச் சுருக்கிக் கொண்டார்கள் போலும்! 18ல் குழப்பம் உள்ளது போல 9லும் உள்ளது என்பதனை, “பதினெண்மர் யாவர் என்பதிலே கருத்து வேறுபாடு இருப்பது போல நவநாத சித்தர் யாவர் என்பதிலும் கருத்து வேறுபாடு இருந்து வருகின்றது”, என்று மூன்று பட்டியல்களைக் கொடுக்கிறார்[2].

அபிதான சிந்தாமணி எம்.எஸ்.பூர்ணலிங்கம் பிள்ளை சட்டைமுனி பின்ஞானம் மூன்று
  1. சத்துவநாதர்
  2. சாலோகநாதர்
  3. ஆதிநாதர்
  4. அருளிநாதர்
  5. மதங்கநாதர்
  6. மச்சேந்திரநாதர்
  7. கடயேந்திரநாதர்
  8. கோரக்கநாதர்
  9. குக்குடநாதர்
  1. சத்யநாதர்
  2. சுகோதநாதர்
  3. ஆதிநாதர்
  4. அனாதிநாதர்
  5. வகுளிநாதர்
  6. மதங்கநாதர்
  7. மச்சேந்திரநாதர்
  8. கடயேந்திரநாதர்
  9. கோரக்கநாதர்
  1. திருமூலர்
  2. சண்டிகேசர்
  3. சனகர்
  4. சனந்தர்
  5. சனாதனர்
  6. சனற்குமாரர்
  7. வியாக்கிரபாதர்
  8. பதஞ்சலி
  9. சட்டைமுனி

இப்பெயர்களைப் படிக்கும்போதே, அறிவதாவது, முதல் இரண்டிலும் அதிகமான வேறுபாடில்லை மற்றும் மூன்றாவது திருமந்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள பெயர்களை வைத்து பட்டியல் தயாரிக்கப் பட்டுள்ளது என்று தெரிகிறது. பிறகு பௌத்தத்தில் தந்திரமுறைகளைக் கற்றுக் கொடுக்கும் “முதல் ஆசிரியர்கள்” 84-சித்தர்கள் ஆவர் என்றுள்ளது. லாமா கோவிந்த என்பவர் இவர்களது பரிபாஷையைப் பற்றிக் குறிப்பிடும் போது, இதனை எடுத்துக் காட்டுகிறார்[3]. பிறகு திபெத்தியர்களின்  பாரம்பரியத்தில் பூசுகபாதர் என்பவர் எப்பொழுதும் சித்தர் என்றே அவர்களின் பட்டியல்களில் காணப்படுகிறார். அவர் விஞ்ஞான, மத்யாத்மக மற்றும் வேதாந்த சித்தாந்தகளை இணைத்துப் போதிப்பவராகத் தெரிகிறார்[4]. இதையும் விஞ்சவேண்டும் இல்லையா, அதனால் பட்டியலை நீட்ட ஆரம்பித்தனர் ;போலும். இப்படி, நீண்டு கொண்டே போகும் போது, 58, 64, 84, 108 என்றும் சித்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தனர்[5]. இதற்கு மேலும் யாதாவது, பிரச்சினை அல்லது குற்ரம் கண்டுபிடித்தால், எல்லாமே இதில் அடக்கம் என்பதுபோல, இன்னொரு “அனைத்தும் இதில் அடங்கும்” என்ற பட்டியல் தயாரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

1.     பதினெட்டாம்படிக் கருப்புகள்
2.     நவகோடி சித்தர்கள்
3.     நவநாத சித்தர்கள்
4.     நாத சித்தர்கள்
5.     நாதாந்த சித்தர்கள்
6.     வேத சித்தர்கள்
7.     வேதாந்த சித்தர்கள்
8.     சித்த சித்தர்கள்
9.     சித்தாந்த சித்தர்கள்
10.     தவ சித்தர்கள்
11.     வேள்விச் சித்தர்கள்
12.     ஞான சித்தர்கள்
13.     மறைச் சித்தர்கள்
14.     முறைச் சித்தர்கள்
15.     நெறிச் சித்தர்கள்
16.     மந்திரச் சித்தர்கள்
17.     எந்திரச் சித்தர்கள்
18.     மந்தரச் சித்தர்கள்
19.     மாந்தரச் சித்தர்கள்
20.     மாந்தரீகச் சித்தர்கள்
21.     தந்திரச் சித்தர்கள்
22.     தாந்தரச் சித்தர்கள்
23.     தாந்தரீகச் சித்தர்கள்
24.     நான்மறைச் சித்தர்கள்
25.     நான்முறைச் சித்தர்கள்
26.     நானெறிச் சித்தர்கள்
27.     நான்வேதச் சித்தர்கள்
28.     பத்த சித்தர்கள்
29.     பத்தாந்த சித்தர்கள்
30.     போத்த சித்தர்கள்
31.     போத்தாந்த சித்தர்கள்
32.     புத்த சித்தர்கள்
33.     புத்தாந்த சித்தர்கள்
34.     முத்த சித்தர்கள்
35.     முத்தாந்த சித்தர்கள்
36.     சீவன்முத்த சித்தர்கள்
37.     சீவன்முத்தாந்த சித்தர்கள்
38.     அருவ சித்தர்கள்
39.     அருவுருவ சித்தர்கள்
40.     உருவ சித்தர்கள்

எப்படி கற்பனைக் கொடிகட்டிப் பறந்துள்ளது என்று தெரிகிறது. இவற்றிற்கு ஆதாரங்கள் உள்ளனவா என்பதுபற்றிக் கூட கவலைப்படவில்லை.
© வேதபிரகாஷ்

02-09-2012


[1] J. M. Nallaswami Pillai (trans.), Sivagnana Botham, Madras, 1895, preface, p.iii.

[2] இரா. மாணிக்கவாசகம், சித்தர்கள், இரா. மாணிக்கவாசகம், சித்தர்கள், ப.139-140.

[3] Lama Anagarika Govinda, Grundlagen Tibetischer Mystick, Zurich, 1957, pp.45-46.

Agehananda Bharati, The Tantric Tradition, B. I. Publications, New Delhi,1976, p.28, 167-168.

[4] Agehananda Bharati, The Tantric Tradition, B. I. Publications, New Delhi,1976, p.29.

[5] இரா. மாணிக்கவாசகம், சித்தர்கள், பெருங்காப்பியச் சிற்றிலக்கியப் பெருந்தமிழ், சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு, 1975, ப.127-169. பக்கம்.168ல் 58 சித்தர்கள் பட்டியலைக் கொடுத்துள்ளார்.

Posted in அக்னி, அண்டம், அறிவு ஜீவி, ஆகாயம், ஆத்மா, ஆனந்தம், ஆன்மா, ஆயுள், ஆரியன், ஆரியம், இதயம், இந்திரியம், உடல், உயிர், ஓலை, ஓலைச்சுவடி, கண், கந்தகம், கனிமம், கருத்து, கரைசல், கற்பம், கலாச்சாரம், காது, காமாக்கியா, காயம், காற்று, கால், கீழைத்திசை நூலகம், கை, கைராச்சிக்காரர், சக்தி, சத், சிதம்பரம், சிதர், சிதார், சித், சித்தம், சித்தர், சித்தர் பாடல்கள், சித்து, சிந்தனை, சுவடி, சூபி, செவி, சோர்வு, தங்கம், தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகம், தந்திரம், திராவிடம், திருமூலர், தேவி, நகல், நரம்பு, நாகரிகம், நாடி, நாட்டு மருத்துவம், நாதசித்த மரபு, நாத்திகம், நினைவு, நிம்மதி, நிலம், நீர், நுண்ணிய அறிவு, நெருப்பு, பகுத்தறிவு, பஞ்சபூதங்கள், பதஞ்சலி, பதினென் சித்தர்கள், பரம்பரை, பரம்பரை வைத்தியர், பாதம், பாதரசம், பாரம்பரியம், பிண்டம், பிரதி, பீர், புத்தகம், பூதங்கள், பூர்ணலிங்கம் பிள்ளை, பெரிய ஞானக் கோவை, மந்திரம், மனச்சிதைவு, மனப்பாங்கு, மனம், மபப்பாங்கு, மருந்து, மறைமலை அடிகள், மூக்கு, மூச்சு, மூலம், மூளை, யோகா, யோசனை, யோனி, ராமலிங்கம், லிங்கம், வள்ளலார், வேதாசலம், வைத்தியர் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

சித்தர்களைப் பற்றிய பலவாரானக் கருத்துகள்

Posted by vedaprakash மேல் ஓகஸ்ட் 3, 2012

சித்தர்கள், சித்தமருத்துவம் பற்றிய ஆராய்ச்சி

சித்தர்களைப் பற்றிய பலவாரானக் கருத்துகள் நிலவி வருகின்றன, ஏனெனில் அத்தகைய கருத்துகளைத் தெரிவிப்பவர்கள் மூலங்களைப் படிக்காமல் பேசுவதால், எழுதுவதால் அத்தகைய நிலை ஏற்படுகிறது. மேலும் “சித்தர் பாடல்கள்” என்று பிரபலமாக வழங்கிவரும் பாடல்கள் சித்த மருத்துவத்துடன், தொடர்பு கொண்டிருந்தாலும், அவை, மருந்துகள் தயாரிக்கும் முறைகளைச் சொல்வதில்லை. இதையறிமால் எழுதுவதால் தான் தமிழ் சித்தர்களைப் பற்றிய கருத்துகள் ஏராளமாக, தாராளமாக ஆதாரங்களே இல்லாமல் பற்பல செய்திகளாகக் கொடுக்கப் பட்டு வருகின்றன[1]. மூலங்களைப் படிக்காமலே, பிரபலமாக எழுதப் பட்டுவரும் புத்தகங்களை வைத்துக் கொண்டு சமீபத்தில் வரையப் பட்டுள்ள உருவாக்கப்பட்டுள்ள சித்திரங்களை வைத்துக் கொண்டு பிரமிக்க வைக்கும் அளவில் இணைதளங்களில் வர்ணனைகளை குவித்து வருகிறார்கள்[2]. அவையும் வேகமாகப் பரவி வருகின்றன. ஏதோ எல்லா நோய்களையும் சித்தமருத்துவம் தீர்த்துவிடும் அல்லது சித்தமருத்துவத்தில் இல்லாத தீர்வுகளே இல்லை என்பது போல எழுதி, விளம்பரப்படுத்தி வருகிறார்கள்[3].

ஆதாரங்களைக் கொடுக்காமல் எழுதப் படும் புத்தகங்கள்: சித்தர்களைப் பற்றி சித்தமருத்துவ முறையைப் பற்றி எழுதுபவர்களும் மூலங்களை – முதன்மை அல்லது இரண்டாம் வகை – கொடுப்பதில்லை[4]. எழுதுபவர் தம்மை அல்லது பதிப்பகத்தார் – ஆசிரியர் / வைத்தியர் / மருத்துவர் / சித்தவைத்தியர் / சித்தமருத்துவர் / வைத்தியத் திலகம்/ சித்தர் என்றெல்லாம் கூறிக்கொண்டு –

  • பரம்பரை சித்த வைத்தியர்,
  • மூன்று  பரம்பரையாக சித்தவைத்தியம் பார்த்து வருபவர்,
  • கைராச்சிக்காரர்,
  • தீராத நோய்களைத் தீர்த்து வைத்தவர்,

அறிமுகப்படுத்தப் படுகிறார் அல்லது அறிமுகமாகிறார். ஆனால் அவர்களுடைய  நோயாளிகளைப் பற்றியோ, அவர்கள் எவ்விதமாக சிகிச்சையளிக்கப் பட்டு, எத்தனை நாட்களில் காலத்தில் குணமடைந்தார் என்று குறிப்பிடுவதில்லை.  இருக்கும் மற்றும் புதியதாக தோன்றும் ஒவ்வொரு பதிப்பகமும் சித்தர்களைப் பற்றி, சித்தமருத்துவத்தைப் பற்றி யாதாவது ஒரு புத்தகத்தை வெளியிட்டுத் தீருவது என்று தீர்மானமாக இருக்கிறது[5]. ஆனால், எழுதுபவரோ, எழுதும் ஆசிரியர் மற்றும் வைத்தியரோ அரைத்த மாவை அரைக்கிறாரே தவிர, புதியதாக எதையும் எழுதுவது கிடையாது. ஏதோ பத்து புத்தகங்களைப் படித்து ஒரு புத்தகம் எழுதுவது போலத்தான் எழுதி வருகிறார்கள். அதிலும் அந்த பத்து புத்தகங்களையும் குறிப்பிடுவதில்லை. உள்ள விஷயங்களை, விவரங்களை, செய்திகளைத் தொகுத்துக் கொடுக்கிறார்கள். அவ்வாறு கொடுக்கும் போதும் மூலங்களைக் கொடுப்பதில்லை. சில விலக்குகளும் உள்ளன[6].

சித்தர் பாடல்கள் பதிப்புகள், வெளியீடுகள்: பெரிய ஞானக் கோவை என்று சித்தர் பாடல்கள் பெரிய எழுத்துப் புத்தகங்கள் முறையில் வெளியிடப்பட்டு வந்தன. சித்தர் ஞானக் கோவை என்று மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பித்து வெளியிட்டார். சமீபகாலத்தில் (1980-90களில்) எஸ்.பி. ராமச்சந்திரன்[7] என்பவர் நூற்றுக்கணக்கான சித்தர்நூல்களைப் பதிப்பித்துள்ளார். ஆனால் மற்ற பிரதிகளை ஆய்ந்து, சரிபார்த்து, திருத்தி வெளியிடவில்லை. இருப்பதை அப்படியே வெளியிட்டுள்ளார். பி. இரத்தின நாயக்கர் அண்ட் சன்ஸ்[8], பிரேமா பிரசுரம் போல வெளியிடப்பட்டுள்ளன. வி. பலாரமய்யாவின் புத்தகங்களில் சில கூர்மையான அலசல்கள் உள்ளன[9]. மீ.ப.சோமசுந்தரம்[10] எழுதியுள்ள “சித்தர் இலக்கியம்” ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியாகயுள்ளது. ஆனால், மேலே குறிப்பிட்டுள்ளபடி, எழுதப்பட்டுள்ள புத்தகங்களில் இவற்றைக்கூடக் குறிப்பிடுவது கிடையாது. ஒருவேளை அவர்கள் இவற்றையும் பார்த்திருக்க மாட்டார்கள் அல்லது படித்திருக்க மாட்டார்கள் போலும்.

ஓலைச்சுவடிகள், நகல்கள், பதிப்பிக்கப்படாதவை: கோபன்ஹேகன் (டென்மார்க்), பாரிஸ் (பிரான்ஸ்), பெர்லின் (ஜெர்மனி), டப்லின் (அயர்லாந்து), ரோம் (இத்தாலி), ஆம்ஸ்டெர்டாம் (நெதர்லாந்து), லிஸ்பன் (போர்ச்சுகல்), லண்டன் (இங்கிலாந்து) முதலிய நாடுகளிலுள்ள நூலகங்கள் மற்றும் ஆவணக்காப்பகங்களில் ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடிகள், பழைய நூல்கள் முதலியவையுள்ளன. இவை ஆராய்ச்சியாளர்களுக்கு எட்டப்படாத நிலையில் உள்ளன. அவற்றைப் பார்க்க, படிக்க, நகல் எடுக்க ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் செல்வழிக்க வேண்டியுள்ளது. இதனாலேயே ஆராய்ச்சியாளர்கள் செலவிற்கு பயந்து, இரண்டாம்தர மூலங்களை அதாவது பதிக்கப்பட்ட புத்தகங்களை நாடவேண்டியுள்ளது. இவற்றில்தான் பாரபட்சம், விருப்பு-வெறுப்பு, சித்தாந்தம் முதலிய வேறுப்பாடுகள் வருகின்றன. அவற்றினால் உண்மைகளை மறைத்தல், திரித்து / மாற்றி எழுதுதல், வேண்டியவற்றை மட்டும் எடுத்துக் காட்டுதல் – மற்றவற்றை மறைத்தல், தமது கருத்தேற்றி எழுதுதல் முதலியவை வருகின்றன.

ஐரோப்பியர்கள் ஒலைச்சுவடி புத்தகங்களை எடுத்துச் சென்றது: ஐரோப்பியர்களின் ஆட்சி காலங்களில், தென்னிந்தியாவிலிருந்து லட்சக் கணக்கான ஓலைச்சுவடி புத்தகங்கள், மரப்பட்டை நூல்கள், துணிப் படங்கள், கருவிகள், உபகரணங்கள் முதலியன அவரவர் நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பதிலுக்கு கையினால் காகிதங்களில் எழுதப் பட்ட ஆவணங்கள் வைக்கப்பட்டன. ஆனால், எடுத்துச் செல்லப்பட்ட எல்லாவற்றிற்கும் நகல்கள் அவ்வாறு எழுதிவைக்கப் படவில்லை. மெக்கன்ஸி சேகரிப்பே அதற்கு ஆதாரம். இருப்பினும் ஆற்றில் ஓலைச்சுவடிகளைப் போட்டார்கள், அதனால், தமிழ் நூல்கள் பல அழிந்துவிட்டன என்றும் கூறப்படுகிறது. அந்நியர்கள் அவ்வாறு எடுத்துச் செல்லாமல் இருக்க ஆற்றில் போட்டார்களா, பழைய செல்லரித்த ஓலைகளைப் போட்டார்களா என்று எடுத்துக் காட்டப்படவில்லை. கடந்த 100-200 ஆண்டுகளில் சித்தர்களின் பெயரில் பற்பல போலி நூல்கள் எழுதப் பட்டுப் பதிப்பிக்கப் பட்டுள்ளன. சில குழுமங்கள் ஆவணக் காப்பகங்கள் முதலிய இடங்களினின்றே அத்தகைய போலிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளன. இன்றும் அத்தகைய நூல்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மூலங்கள், மூலப்பிரதிகள், பிரதிகளின் நிலை: சித்தர் பாடல்களின் அச்சிட்டப் புத்தகங்களைப் பார்த்துவிட்டு, அவற்றின் மூலப்பிரதிகள் எங்குள்ளன என்று கீழைத்திசை நூலகம், தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகம், உ. வே. சுவாமிநாத ஐயர் நூலகம், கன்னிமாரா நூலகம் முதலிவற்றில் சென்று பார்த்தால், பெரும்பாலானவை காகிதத்தில் எழுதப்பட்டுள்ளவையாகவே உள்ளன[11]. ஓலைச்சுவடியில் எழுதப்பட்டுள்ளவைகளும் சமீபத்தில் எழுதப்பட்டுள்ளவை என்று, எழுதியுள்ள முறை, உபயோகப்படுத்தப் பட்டுள்ள ஓலை, எழுதுகோலின் கூர்தன்மை முதலியவற்றிலிருந்து தெரிகிறது[12]. இடைக்கால ஓலைச்சுவடிகளில் உள்ள தமிழைப் படிப்பது கடினம், வரிகள் இடைவெளி இல்லாமல் எழுதப்பட்டிருக்கும். வார்த்தைகளைப் பிரித்துப் படித்தப் பின்னரே, செய்யுளின் அடிகள், கிரமம் முதலியவற்றைப் புரிந்து கொள்ளமுடியும்[13]. ஆனால், இவற்றில் சுலபமாக, புத்தகத்தைப் பார்த்துப் படித்தபைப் போல படித்தறிய முடிகிறது. அதாவது, இப்பொழுதிலிருந்து (2012), கணக்கிட்டால் சுமார் 100-150 ஆண்டு காலத்தில் – 1850-1910 காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஸ்வாசகாச சிகிச்சை, வாதரோக சிகிச்சை, கர்ப்பிணி பாலரோகம், மாடுகள்-குதிரைகள்-லட்சணம் வைத்தியம், சித்த மருத்துவச் சுடர், கர்ப்பிணி ரக்ஸா, முதலிய நூல்களை தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகம் வெளியிட்டுள்ளது. ஆனால், இவற்றைப் படித்துப் பார்க்கும் போது, இந்த “சித்தர்” பாடல்களுக்கும், இந்நூல்களுக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. அக்காலத்தில் கிடைத்துள்ள விவரங்களை பாட்டுபோல் எழுதிவைத்துள்ளனர் என்று தெரிகிறது.

புரட்டு-போலி-மோசடி “சித்தர் பாடல்கள்” என்று உலவி வருவதைத் தடுப்பதெப்படி?:  பி. வே. நமச்சிவாய முதலியார், தமது தமிழ்மொழி அகராதியில் குறிப்பிட்டுள்ளது[14], “இவர்கள் செய்த நூல்கள் பெரும்பாலும் இறந்தன. இவர்களால் செய்யப்பட்ட நூல்களென்று சொல்லப்பட்டு இக்காலத்து வழங்குவன யாவரோ சாமானியர் பாடிய புரட்டு நூல்களேயாம்”. இதற்கு பொ. பாண்டித்துரைத்தேவர், பூவை. கலியாணசுந்தரமுதலியார், முதலியோர் சிறப்பித்து அணிந்துரை பாடல்களுடன் வெளியிடப்பட்டுள்ளது[15]. அதாவது 1911 காலத்திலேயே, தமிழ் பண்டிதர்கள் அவற்றை “யாவரோ சாமானியர் பாடிய புரட்டு நூல்களேயாம்” என்று தீர்மானித்து ஒதுக்கியுள்ளனர். ஆனால், அவற்றை உண்மை நூல்கள் போன்று, திரிபு விளக்கங்கள் கொடுத்து “சித்தர் பாடல்கள்” என்று இன்றளவும் பலர் வெளியிட்டு வருகிறார்கள். அவர்கள் உண்மையறிந்து செய்கிறார்களா அல்லது வியாபாரத்திற்காகச் செய்கிறார்களா என்று தெரியவில்லை. உண்மையிலேயே, சித்தர் இலக்கியம், சித்தர் பாரம்பரியம், சித்த மருத்துவம் முதலியை காக்கப் படவேண்டுமானால், இத்தகைய புரட்டு நூல்கள் வெளியிடப்படுவதை தடை செய்ய வேண்டும். அத்தகையோர் உண்மையறிந்து, தம்மைத் திருத்திக் கொள்ளவேண்டும். இல்லையெனில் “சித்தர்” என்று அடைமொழியை உபயோகித்துக் கொண்டு அத்தகைய போலி-புரட்டு பேச்சு, எழுத்து, ஆராய்ச்சி செய்பவர்களையும் மற்றவர்கள் அடையாளங்கண்டு கொள்ள வேண்டும்.

© வேதபிரகாஷ்


[1] சித்தர் ஆரூடம், சித்தர் ஜோதிடம், சித்தர் நெறி, சித்தர் தத்துவம், சித்த மருத்துவ பச்சிலைகள், சித்தர் பரிபாஷை, சித்தர் கையேடு…..என்று “சித்தர்” மற்ரும் “சித்த மருத்துவ” அடைமொழிகளோடு உருவாக்கபட்ட சொற்றொடர்கள் தலைப்புகளாக் கொண்ட ஆயிரக்கணக்கான புத்தகங்கள் கடந்த 70 ஆண்டு காலத்தில் தோன்றியுள்ளன.

[2] பல இணைதளங்கள் சித்தர்களைப் பற்றி, சித்தர்மருத்துவத்தைப் பற்றி இணைதளங்களில் அதிகமாகவே விவரங்களைத் தொகுத்துக் கொடுத்துள்ளார்கள். ஆனால் வழக்கம் போல மூலங்களைக் கொடுக்காமல், மற்றவர்களின் எழுத்துகளை, கருத்துகளை, தமது போல வெளியிட்டு வருகிறார்கள்.

[3] Weiss, Richard S, Recipes for Immortality – Medicine, Religion and Community in South India, , Oxford University Press, USA, 2008, pp.3-4.

[4] படிப்பவர்களுக்கு எல்லாம் தெரியும் என்பதனால், அவ்வாறு எழுதுகிறார்களா அல்லது மூலங்களைக் கொடுத்தால், தமது கையாண்ட முறை தெரிந்துவிடும் என்று தயங்குகிறார்களா அல்லது அவை இல்லவேயில்லையா என்ற சந்தேகங்களும் எழவேண்டிய நிலையுள்ளதால், மூலங்களைக் கொடுப்பது நல்லது.

[5] நூற்றுக்கணக்கான பதிப்பகங்கள் அவ்வாறு நூற்களை வெளியிட்டுள்ளதால் அவற்றைக் குறிப்பாக பெயர் சொல்லி எடுத்துக் காட்டவில்லை.

[6] சீ. கல்யாணராமன், பா. கமலக்கண்ணன் எழுதியுள்ள புத்தகங்களில் குறிப்பாக முக்கிய விஷயங்களை ஆதாரத்துடன் தந்துள்ளார்கள். வானதி பதிப்பகம் (17, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை – 600 017) பின்னவருடைய நூல்களை வெளியிட்டுள்ளது. கல்யாணராமன் தானே வெளியிட்டுள்ளார் – 1, 35வது தெரு, நங்கநல்லூர் காலனி, சென்னை – 600 061.

[7] தாமரை நூலகம், 7, என்.ஜி.ஓ.காலனி, வடபழனி, சென்னை – 600 026.

[8] பி. இரத்தின நாயக்கர் அண்ட் சன்ஸ், 25, வெங்கட்ராமர் தெரு, கொண்டித்தோப்பு, சென்னை – 600 079.

[9] அருள் ஜோதி பதிப்பகம், 10, ஜட்ஜ் பங்களா, சஞ்சீவி நகர், அரும்பபக்கம், சென்னை – 600 106.

[10] மீ.ப.சோமசுந்தரம், சித்தர்இலக்கியம்(இரண்டு பகுதிகள்), அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம், 1988.

[11] மெக்கன்சி ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடி புத்தகங்களை எடுத்துச் சென்றான். பிறகு மூன்றில் ஒருபங்குதான் திரும்பக் கொடுக்கப்பட்டது. அவற்றிலும் பல பிரதிகளே. ஆங்கிலேயர் காலட்திலேயே, காகிதத்தில் பிரதியெடுக்கும் வேலை ஆரம்பித்தது.

[12] சாதாரணமாக, முறையாக பதப்படுத்தி, முறையான எழுதுகோல் மூலம், எழுதும் திறமையுடையவர்களால் எழுதப்பட்டுள்ள ஓலைச்சுவடிகள் ஆயிரம் ஆண்டு காலம் வரை இருக்கும். ஆனால், புதிய ஓலைச்சுவடிகளில், சமீபத்தில் எழுதியிருந்தால், அதனைத் தொடும்போது, நுகரும்போது காட்டிக் கொடுத்துவிடும். இப்பொழுது பதப்படுத்த ரசாயனப் பொருட்களை உபயோகப்படுத்துகிறார்கள்.

[13] இவையெல்லாம் முறையான அத்தகைய வாசிப்பு அனுபவம் உள்ளவர்கள் மற்றும் தமிழ் பண்டிதர்கள் முதலியோர்களால் தான் முடியும். எல்லோரும், தமிழ் படிக்கத்தெரிந்தவர்கள் எல்லோரும், படித்து அர்த்தமும் தெரிந்து கொள்ளலாம் எனும்போது, அதன் ககலத்தைக் கட்டிக் கொடுத்துவிடுகிறது.

[14] P. V. Namasivaya Mudaliar, The Coronation Tamil Dictionary – A guide indispensable to Tamil Professors and scholars, Madras, 1911, p.626.

[15] இத்தமிழ் அகராதி நா. கதிரைவேற்பிள்ளை அவர்களால் தொகுக்கப்பட்டு நமச்சிவாய முதலியார் அவர்களால் 1911ல் ஆங்கில அரசன் “இந்திய சக்கவர்த்தியாக” முடிசூட்டிக் கொண்டதன் நினைவாக வெளியிடப்பட்டது. பிறகு ஏசியன் எடுகேஷனல் சர்வீசஸ் என்ற பதிப்பகம், அதனை நா. கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதி என்று வெளியிட்டு வருகிறது.

N. Kathiraiver Pillai’s Tamil Moli Akarathi, Asian Educational Srvices, New Delhi, 1992.

Posted in அக்னி, அண்டம், அறிவு ஜீவி, ஆகாயம், ஆத்மா, ஆனந்தம், ஆன்மா, ஆயுர்வேதம், ஆயுள், ஆரியன், ஆரியம், இதயம், இந்திரியம், உ. வே. சுவாமிநாத ஐயர் நூலகம், உடல், உயிர், ஓலை, ஓலைச்சுவடி, கண், கந்தகம், கனிமம், கன்னிமாரா நூலகம், கருத்து, கரைசல், கற்பம், கலாச்சாரம், கல்பம், காது, காமாக்கியா, காயம், காற்று, கால், கீழைத்திசை நூலகம், கை, கைராச்சிக்காரர், சக்தி, சத், சிதம்பரம், சிதர், சிதார், சித், சித்தம், சித்தர், சித்தர் பாடல்கள், சித்து, சிந்தனை, சுவடி, சூபி, செவி, சோர்வு, தங்கம், தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகம், தந்திரம், தமிழகம், தமிழ், தமிழ்நாடு, திரவிடம், திராவிடன், திராவிடம், திருமூலர், தேவி, நகல், நரம்பு, நாகரிகம், நாடி, நாட்டு மருத்துவம், நாதசித்த மரபு, நாத்திகம், நினைவு, நிம்மதி, நிலம், நீர், நுண்ணிய அறிவு, நெருப்பு, பகுத்தறிவு, பஞ்சபூதங்கள், பதஞ்சலி, பதினென் சித்தர்கள், பரம்பரை, பரம்பரை வைத்தியர், பாதம், பாதரசம், பாரம்பரியம், பிண்டம், பிரதி, பீர், புத்தகம், பூதங்கள், பூர்ணலிங்கம் பிள்ளை, பெரிய ஞானக் கோவை, மந்திரம், மனச்சிதைவு, மனப்பாங்கு, மனம், மபப்பாங்கு, மருந்து, மறைமலை அடிகள், முஹம்மது கஜினி, முஹம்மது பக்தியார் கில்ஜி, மூக்கு, மூச்சு, மூலம், மூளை, யோகா, யோசனை, வேதாசலம், வைத்தியர் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 Comments »