சித்தர்களின் மூலம், பாரம்பரியம், இன்றைய நிலை

வரலாற்று நோக்கில் சித்தர்கள் ஆராய்ச்சி

Archive for the ‘காபாலிகம்’ Category

1450 BCEயிலிருந்து முகமதுநபி (570-632 CE) காலம்வரை அரேபியாவில் வாழ்ந்தவர்கள் யார்?

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 23, 2012

1450 BCEயிலிருந்து முகமதுநபி (570-632 CE) காலம்வரை அரேபியாவில் வாழ்ந்தவர்கள் யார்?

 

இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக இஸ்லாமிற்கு-முகமது நபிக்கு முன்னர் அரேபியாவில் வாழ்ந்தவர்கள் யார் என்ற கேள்வி எழுகின்றது. அக்காலத்தில் சுற்றிலும் இருந்த நாகரிகத்தவர் சிறந்திருந்ததால், அரேபிய மக்களும் சிறப்பான நாகரிகத்தைக் கொண்டிருக்க வேண்டும். அவர்களில் முனிவர், அறிஞர், சித்தர், ஞானியர் போன்றோர் இருந்திருக்கவேண்டும். மக்கள் ஆரோக்யம், உடல்நலம் விஷயங்களிலும் சிறந்திருக்க வேண்டும். அதற்கான மருத்துவமுறையும்  இருந்திருக்க வேண்டும்.  அப்படியிருக்கையில், இஸ்லாமிற்கு-முகமது நபிக்கு முன்பான அரேபிய சரித்திரம் இருட்டடிக்கப் பட்டுள்ளது. அம்மக்கள் இருண்ட காலத்தில், அறியாமையில், விக்கிர ஆராதனை போன்ற பாவச்செயல்களில் ஈடுபட்டிருந்தனர் என்றும் விவரிக்கப்படுகிறது. ஆனால், அவர்களின் மொழியான அரேபியமொழி இன்றைய முஸ்லீம்களுக்கு தேவமொழியாக இருக்கிறது. நபி பேசிய மற்றும் குரான் மொழி அரேபிய மொழிதான். பிறகு அத்தகைய தேவமொழியைப் பேசி வந்தவர்கள் எப்படி இருண்ட காலத்தில், அறியாமையில் மூழ்கியிருந்தார்கள் என்று தெரியவில்லை.

அரேபியாஎன்பதுஎன்ன?: ஜைனர்கள் பாரத்தத்தின் வடமேற்குப் பகுதி வழியாக வெளியே சென்றனர், கிரேக்கர் உள்ளே வந்தனர் எனும்போது, அரேபியாவிற்கும் அவ்வாறுதான் சென்றிருப்பர். முதலில் அரேபியா மற்றும் அரேபியர் என்பன என்னவென்று புரிந்து கொள்ளவேண்டும்[1], ஏனெனில் இஸ்லாமிற்கு – நபிக்கு (570-632 CE) முன்பான அரேபியர்களைப் பற்றிய முழு விவரங்களை சரித்திர ஆசிரியர்கள் முழுமையாகக் கொடுப்பதில்லை. அவற்றை நூறு-இருநூறு ஆண்டுகள் பழமையான புத்தகங்களினின்று பெறவேண்டியுள்ளது. ஜெஸிரத்-அல்-அரப் (Jezirat-al-arab) என்பவர்கள் அரேபியாவில் இருந்தவர்கள் என்றும், அவர்கள் இருந்த இடம் அரபிஸ்தான் (Arabistan) என்றும் பாரசீகர்கள் மற்றும் துருக்கியர்கள் குறிப்பிட்டு வந்தார்கள்[2]. “ஜெஸிரத்அல்அரப்” என்றால் “அரேபியரது தீவு” என்று பொருள். அதாவது முன்னர் அரேபியா தீவாக இருந்ததா அல்லது அரேபியர் மற்ற மக்களிடமிருந்து தனித்து இருந்தார்களா என்று தெரியவில்லை. பாரசீகர்கள் ஒரு “சத்ரப்பை”த் தொடங்கி அதற்கு “அராபியா” என்று பெயரிட்டனர்[3]. பாரசீக “சத்ரபி” என்ற சொல் “க்ஷத்ரபாவ” என்ற சமஸ்கிருத சொல்லினின்று உருவானது, க்ஷத்திரியர்கள் வாழும் / ஆட்சிசெய்யும் இடம் என்று பொருள். “அரேபியா” என்றால் சதுரமான இடம் என்று பொருள். அரேபிய மொழியில் “மக்பி” என்றால் கனச்சதுரம் மற்றும் “காபா” என்பது முஸ்லீம்கள் வழிபடும் இடமாகும். “அரப்” என்றால் “பதவியா / பெதுவியா” என்ற நாடோடிக் கூட்டத்தையும் குறிக்கும். யூதமொழியில் “இரப்” என்றல் பாலைவனம், அதாவது செமித்திய மொழியிலும் பாலைவனம் மற்றும் அங்குவாழும் மக்களைக் குறிக்கிறது ஆனால் எந்த மக்களினத்தையோ, நாட்டையோக் குறிக்கவில்லை[4].

அரேபியர்கள்எவ்வாறுஅடையாளங்காணப்பட்டனர்?: அரேபிய அகராதிகளில் அரபி (ஆண்பால் ஒருமை. அரபியா (பெண்பால் ஒருமை) மற்றும் அரப் (பலவின்பால்) என்று அரேபிய மக்களைக் குறிக்கின்றன:

  1. ஒருவனுடைய மொழி அல்லது பேச்சு அரேபிக் மொழியானது அல்லது தூய்மையான அரேபியமொழியானது.
  2. அஜீரணமாகி, வயற்று உபாதையினால் அவஸ்தைப் படுபவன்.
  3. யாரொருவன் குழம்பி அல்லது சிதைந்து போயுள்ளானோ அவன்.
  4. யாரொருவன் அரேபியர்களுடன் கலந்து ஐக்கியமாகியுள்ளானோ அவன்.

பிறகு “அரப்” என்பது “அஜப்” என்ற வார்த்தையோடு ஒப்பிடும்போது, “அரப்” என்பது “தெளிவாகப் பேசுவது” ஆனால் “அஜப்” என்றால் தெளிவில்லாமல் பேசுவது அல்லது மற்றவர்களுக்குப் புரியாதமாதிரி பேசுவது என்று பொருள் கொள்ளப்படுகிறது. உண்மையில் பாரசீகர் அரேபியரை குறைவாக மதிப்பிட்டபோது, பதிலுக்கு அரேபியர் பாரசீகர்களை “அஜப்” என்று கூறிக் கிண்டலடித்தனர். சமஸ்கிருதத்தில் “ரப்” என்பது “சத்தம், கூச்சல், இரைச்சல்” என்று பொருள். “ரவ்” என்பது “ரப்” என்றும் உச்சரிக்கப்படும், அல்+ரவ் அல்லது அல்+ரப் =அரவ் / அரப் என்றானது. அதனால்தான் சத்தம்போடுபவனை, கூச்சலிடுபவனை “அரவவாடு” என்று தெலுங்கர் அழைக்கின்றனர். மேலும் இப்பகுதியில் குதிரைகள் உள்ளன அல்லது குதிரைகள் வரவழைக்கப்படுகின்றன என்பதால் “அரவஸ்தான்” என்று அழைக்கப்பட்டது[5]. அரபிஸ்தான்-அரவஸ்தான்-அரவத்தான்-ராவுத்தன் என்று தமிழில் பெறப்படுகிறது. மாவுத்தன் யானைப்பாகன் என்றால் ராவுத்தன் குதிரையோட்டியாகிறான்[6]. அதாவது குதிரைகளை வாங்குபவன், விற்பவன், வளர்ப்பவன், பழக்குபவன் என்றுள்ளது.

அரேபியர்கள் யார்?: இதைத்தவிர, அரேபியாவில் வாழ்ந்த எல்லோரும் அரேபியர் என்றழைக்கப்பாட்டாலும், அரேபிய எழுத்தாளர்கள், அவர்களைப் பிரித்துக் காட்ட, கீழ்கண்டவாறு அழைத்தனர்:

  1. அல்அரப்அல்பைதா = காணாமல் போன அரேபியர், மறைந்து போன அல்லது சரித்திரகாலத்திற்கு முந்தைய அரேபியர், முதல் அல்லது உண்மையான அரேபியர்.
  2. அல்அரப்அல்அரிபா = உண்மையான அரேபியர் அதாவது தென்னரேபியாவில் வாழும் அரேபியர் அல்லது கஹ்தான் வழிவந்தவர்கள் (ஜோக்தான் என்று பைபிளில் சொல்லப்படுகிறது).
  3. அல்அரப்அல்மூதா‘அர்ரிபா = அரேபியர்களுடன் ஐக்கியமானவர்கள், அல்-முஸ்தா ‘ரிபா = அரேபியர்களை நாடுபவர்கள், அரேபியமயமாக்கப்பட்டவர்கள். மோஸ்தராபியர் அல்லது இஸ்மாயில் வழிவந்தவர்கள்.

ஆகவே அரேபியாவில் இருப்பவர்கள் எல்லோருமே “அரேபியர்” அல்லர். அதேபோல இஸ்லாம் தோன்றி வளர்ந்தபிறகு, அரேபியாவில் இருந்தவர்கள் முஸ்லீம்களாக மாறியப் பிறகுக் கூட அரேபியர் எல்லோருமே “முகமதியர்”, “முசல்மான்கள்”, “முஸ்லீம்கள்” ஆகிவிடவில்லை. இந்திய கல்வெட்டுகளில் “துருக்கர், துலுக்கர், துருக்ஸாஸ்” எனப்படுபவர் எல்லோரும் முகமதியரா அல்லது துருக்கியிலிருந்து வந்தவரா என்றும் ஆராயவேண்டியுள்ளது. இஸ்லாம் தோன்றுவதற்கு முந்தைய இருந்த அரேபியர் மற்றும் இஸ்லாம் தோன்றிய பின்னர் அரேபியர் அனைவரையும் “முகமதியர்” என்றோ “இஸ்லாமியர் / முஸ்லீம்கள்” என்றோ எழுதிவைப்பது பிற்கால முஸ்லீம் எழுத்தாளர்களுக்கு வழக்கமாகியது[7].

அரேபியர்கள் இந்தியர்கள் செய்வதை தலைகீழாக செய்பவர்களா?: வேதமதத்தினர்-இந்துக்கள் செய்வதை தலைக்கீழாக செய்பவர்கள் ஜைனர்கள்-பௌத்தர்கள்-முகமதியர்கள் என்ற வழக்கும் உள்ளது. முதலில் ஜைனர்கள்-பௌத்தர்கள் அவ்வாறு செய்தாலும், பிறகு, பொதுவான இந்திய கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் மற்றும் நாகரிக காரணிகளால் சேர்ந்தே வாழ்ந்தார்கள். ஆனால், முகமதியர் ஆரம்பத்திலிருந்தே, வேறுபட்டு தலைகீழாக செய்து வந்ததால் அவர்களை “அரவநாட்டவர்” என்றே அழைத்தனர். தெலுங்குக்காரர்களை “கொலுடி” என்று தமிழர்கள் கலாட்டா செய்வது வழக்கம். அதாவது தெலுகு என்பதனை திருப்பிப் போட்டு குலுதி-குலுடி-கொலுடி என்று கிண்டல் செய்தனர். இதனால், தெலுங்கர் தமிழர்களை “அரவர் / அரவவாடு” என்று சொல்வதுண்டு. அதவாது துலுக்கர்களைப் போல தலைகீழாகச் செய்பவர்கள் என்ற பொருட்பட கூறினர். இந்துக்கள் அழுதால், துலுக்கர் சிரிப்பர்; இந்துக்கள் சிரித்தால், துலுக்கர் அழுவர்; குழந்தை பிறந்தால் அழுவர், யாராவது இறந்தால் சிரிப்பர் என்றெல்லாம் சொல்வதுண்டு. மேலே பாரசீகர்-அரேபியர் ஒருவரையொருவர் எவ்வாறுக் கூறிக் கொள்வர் என்று எடுத்துக் காட்டப்பட்டது. அதுபோல, ஆயிரக்கணக்கான வருடங்களாக அரேபியாவில் இருந்து வரும் பழக்க-வழக்கங்களை முழுவதுமாக மாற்ற முடியாது என்பதனால், அவற்றை மாற்றியமைத்திருக்கலாம்.

சதுரமானகனச்சதுரமானஇடம்“சதுரகிரியா”அல்லதுகாபாவா?: காபாவைப் பொறுத்தவரையிலும், நிச்சயமாக அது முகமதியர்-முஸல்மான்-முஸ்லீம்களின் வழிபாட்டு ஸ்தலமல்ல. “காபத்துல்லா” என்றழைக்கப்பட்ட “இறைவன் உறையும் இடத்தில்” – வளகத்தில் நடுவில் ஒரு விக்கிரகம் இருந்தது, அதனைச் சுற்றி 360 விக்கிரங்கள் இருந்தன. அவை சதுரமாக அல்லது வட்டவடிவில் வைக்கப்பட்டிருந்தனவா என்று தெரியவில்லை. ஏனெனில், சித்திரங்கள் இருவிதமாகவும் சித்தரித்துக் காட்டுகின்றன. எப்படியாகிலும் வட்டத்தை-சதுரமாக, சதுரத்தை-வட்டமாக்கும் வித்தைகளை இந்தியர்கள் தாம் அறிந்திருந்ததால், குறிப்பாக மந்திர-தந்திர-யந்திர வித்தைகளில் ஈடுபட்டிருந்ததால், அவ்வளாகம் அவ்விதமாக அமைக்கப்பட்டிருந்தது என்றறியலாம். 64-யோகினி-ஜோகினி கோவில்கள், வளாகங்கள் அவ்விதமாகவே அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதனை இந்தியாவில் காணப்படும் உதாரணங்களினின்று அறிந்து கொள்ளலாம்.  காபாவின் தரைப்படம் மற்றும் இந்த யோகினி கோவில்களின் தரைப்படங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மையினைப் பார்த்தேத் தெரிந்து கொள்ளலாம். இதனால் தான், முகமதியர் இந்தியாவில் நுழைந்தபோது, நபி அழித்தவையெல்லாம் இங்குள்ளனவே என்று அவரைப் போலவே செய்யவேண்டும் என்றுதான், முகமத் கஜினி, முகமது கோரி முதலியோர் செய்தனர். அதாவது அத்தகைய கோவில்களை அழித்தனர், விக்கிரங்கள உடைத்தனர், புத்தகங்களை எரித்தனர். ஒரிஸ்ஸாவில் உள்ள 64-ஜோகினி கோவில் ஓரளவிற்கு புனர்நிர்மாணம் செய்யப்பட்டிருக்கும் போது, மத்தியப்பிரதேசத்தில் உள்ள 64-ஜோகினி கோவில் எந்த அளவிற்கு சேதப்படுத்தப் பட்டுள்ளது என்பதனை அச்சிற்பங்களை வைத்தே கண்ட் உ கொள்ளலாம். சோமனாதபுரம் அல்-லத் என்ற விக்கிரமாக இருக்கும் என்றுதான் 17 முறை வந்து விக்கிரகத்தை-சிவலிங்கத்தை உடைத்தழித்துச் சென்றான்.

நபிகள் விட்டு வைத்ததை நபிகளின் வழிவந்தவர்கள் சிதைத்தது ஏன்?: நடுவில் ஒரு சதுரம், அதில் பிரதான தேவதை-பெண் கடவுள், சுற்றி வட்டத்தில் 64 தேவதைகளின் விக்கிரங்கள், சிற்பங்கள் இருக்கும். இவையெல்லாமே வெவ்வேறான பெயர்களில் குறிப்பிடப்படும் சக்திகள் தாம். அதேபோல, காபாவில் 360 விக்கிரங்கள் இருந்ததை முகமதியர்களே ஒப்புக் கொண்டுள்ளனர். அல்-அஜர்கி என்பவர் மற்றப;அ விக்கிரங்கள், ஓவியங்கள் காபாவில் இருந்ததாகக் கூறியுள்ளார்[8]. அவற்றை நபி அழித்தாலும், நடுவில் இருந்ததை அங்குள்ள மக்களின் வேண்டுகோளின் மீது விட்டு வைத்தார். ஆனால், பின்வந்தவர்கள் அதனையும் விட்டு வைக்காமல் உடைத்ததாலும், ஏரித்ததாலும் அவ்விக்கிரகம் சிதைந்து உருமாறிவிட்டது. 930ல் மெக்காவிலிருந்து தூக்கிச் செல்லப் பட்ட அக்கல் அல்லது கற்பாகங்கள் 931ல் திரும்ப கொண்டு வந்து வைக்கப்பட்டது[9]. அதாவது அவர்கள் நபியைப் போலவே தாங்களும் அத்தகைய வேலையை செய்யவேண்டும் என்ற போக்கில், இருப்பதையும் அழிக்கத்துணிந்தனர், அவ்வாறே சிதைக்கவும் செய்தனர். அதனால்தான், அவ்விக்கிரகம்-அக்கல் வெள்ளை நிறத்தில் இருந்தது, கருப்பு நிறத்தில் இருந்தது, ஒன்றாக இருந்தது, மூன்று துண்டுகளாக இருந்தன, என்று பலவாறாக சித்திரங்களில் காணப்படுகின்றன. அதே போல அபிரஹாம் மற்றும் அவரது மகன் சிற்பங்கள் இருந்தன, ஆனால் அவற்றையும் உடைத்தார் அல்லது அபிரஹாம் விக்கிரத்தை மட்டும் விட்டு வைத்தார் என்று பலவாறுக் கூறப்படுகின்றன[10]. எது எப்படியாகிலும் இருந்த விக்கிரகங்கள் அழிக்கப்பட்டதால், சரித்திர ஆதாரங்கள் மறைந்து விட்டன என்றாகிறது.

© வேதபிரகாஷ்

22-09-2012


[1] அரேபியா-அரேபியர் பற்றிய விவரங்கள் கீழ்கண்ட கட்டுரையிலிருந்து பெறப்பட்டது:

K. V. Ramakrishna Rao, The Presence of Arabs in South India before and after the advent of Islam, a paper presented  at the sixth session of Tamilnadu History Congress held at Islamiah College, Vaniyambadi, from October 23 to 24, 1999. இக்கட்டுரை முன்பாகவே குரியர் மற்றும் மின்னஞ்சலில் அனுப்பட்டும், அதற்கான ஆதாரங்கள் இருந்தும், ஜனாப் சஹாப்புத்தீன் என்பவர் “ஆய்வுக் கட்டுரை பட்டியலில்” கூட இடம் பெறாமல் மறைக்கப் பார்த்தார். இருப்பினும், திரு. ராஜு தலைமையில் நடந்த அமைவில் திரு கோ. வே. இராமகிருட்டிண ராவ் படித்துள்ளளர்.

[2] Henri Stierlin, Great Civilizations: The Cultural History of the Arabs, Italy, 1981, p.10.

[3] M. TH. Houtsma, T.W.Arnold and Harmann (Eds.), E. J. Brill’s First Encyclopedi of Islam 1913-1936, Netherlands, 1987, Vol.I, p.367.

[4] Pihilp K. Hitti, History of Arabs, Macmillan, 1985, Hongkong, p.41.

[5] Col. Wilford, Asiatik Researches, Vol.III, p.326.

[6] இடைக்காலத்தில் அருணகிரிநாதர், முருகனை, “குதிரையேறும் ரரவுத்தனே” என்று விளித்துப் பாடியுள்ளார்.

[7] K. V. Ramakrishna Rao, The Presence of Arabs in South India before and after the advent of Islam, opt.cit.

S. M. Kamal, Muslimkalum, Tamizhagamum, Islamiya Ayvu Panpattu Maiyyam, Madras, 1990, p.22.

இவர் தமிழகத்தில் மூன்றாம் நூற்றாண்டிலேயே முஸ்லீம்கள் இருந்தார்கள் என்று எழுதுகியுள்ளார்!

[8] Oleg Graber, The Formation of Islamic art, Yale University, USA, 1973, pp.60-61. He gives the details about other objects, jewels etc., kept at Kaba till Mohammed destroyed them.

[9] Gerald de Gaury, Rulers of Meca, Roy Publishers New York, 1949, pp.109-110.

[10] De Lacy O’Leary, Arabia before Muhammed, Kegan Pauk, Lonon, 1927.

Posted in அப்ரோடைட், அரேபியா, அல்-அரப்-அல்-அரிபா, அல்-அரப்-அல்-பைதா, அல்-அரப்அல்-மூதா‘அர்ரிபா, ஆதிநாத, ஆத்மா, ஆனந்தம், ஆன்மா, ஆயுர்வேதம், ஆயுள், ஆயுள்வேதம், ஆரியன், ஆரியம், உஸ்பெகிஸ்தான், எபிகுயூரியன், ஓடந்தபூர், ஓலை, கத்தி, கம்பளி, காபாலிக, காபாலிகம், கிர்கிஸ்தான், சடங்குகள், சிகிச்சை, சிதர், சிதார், சித், சித்தகுரு, சித்தஜலம், சித்தஞானம், சித்தபுரி, சித்தம், சித்தயோகம், சித்தர், சித்தார்த், சித்து, சிந்து, சிந்து சமவெளி நாகரிகம், சீனா, சூபி, தஜிகிஸ்தான், தத்துவஞானிகள், தந்திரம், திகம்பர, திகம்பரம், திகம்பரர், திபெத், துர்க்மேனிஸ்தான், துறவி, நிர்வாணம், பாதரசம், பிண்டம், பித், யோகா | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

சிரவணர்களும்-பிராமணர்களும், ஜைனர்களும்-பௌத்தர்களும், இந்தியர்களும்-கிரேக்கர்களும்

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 15, 2012

சிரவணர்களும்-பிராமணர்களும், ஜைனர்களும்-பௌத்தர்களும், இந்தியர்களும்-கிரேக்கர்களும்

வேதகாலத்தில் அல்லது வேதங்கள் படிப்புமுறையாக இருந்த காலத்தில் மஹாவீரர்-புத்தர் தோன்றியது: மஹாவீரரும், புத்தரும் திடீரென்று அறிவாளிகளாக, ஞானிகளாக, தீர்த்தங்கராக அல்லது புத்தராகிவிடவில்லை. பாரதத்தில் பிறந்ததால் வேதங்கள், வேதாங்கங்கள் மற்றும் இதர புத்தகங்களைப் படித்துதான் அந்நிலையை அடைந்திருந்தார்கள். குருகுலத்தில் பிராமணர்களிடம்தாம் அவர்கள் பயின்றார்கள். க்ஷத்தியர்களாக இருந்தும் அந்நிலையை அடைந்தார்கள் எனும்போது, அக்காலத்தில் எந்தவித வேறுபாடும் இல்லையென்றாகிறது. அதாவது, வேதங்களை யார் வேண்டுமானாலும் படிக்கலாம் கற்கலாம் என்றிருந்தது. இருந்த பிராமணர்களுடன் வாதிட்டு, தத்தமது புதிய கருத்துகளை மக்களிடம் பரப்பி அவர்கள் தங்களது சீடர்களை, நம்பிக்கையாளர்களை, அபிமானிகளை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். இவற்றை அந்தந்த ஜைன-பௌத்த நூல்களே எடுத்துக் காட்டுகின்றன. ஆனால், பாரதத்தின் வடமேற்கு பகுதிகள் வழியாக ஜைனர்களின் வெளியேற்றம், கிரேக்கர்களின் நுழைவுகள் சில மாற்றங்களை ஏற்படுத்தின.

ஜைன-பௌத்த மதங்களில் இருந்தது சில வித்தியாசங்களே: மஹாவீரர். (c.599-527 BCE) மற்றும் புத்தர் (c.567-487 BCE) சமகாலத்தவர்கள் தாம். இருவர்களின் போதனைகளும் ஒரேமாதிரியாகத்தான் இருந்தன. கடவுட்கொள்கையைத் தவிர, பெரும்பாலான விஷயங்களில், வேதங்களிலிருந்து விலகவில்லை. பொதுஜனங்களுக்கேற்ற வரையில், ஜைன-பௌத்தர்கள் வேதமத நம்பிக்கையாளர்களைப் போலவே இருந்தார்கள் என்று தெரிகிறது. அவர்களது தலைவர்களும் பிராமணர்கள் போன்றே இருந்தனர் என்று தெரிகிறது. இதனால் தான், சமகால கிரேக்கர்களும் அடையாளம் காணாமல் குழம்பிபோய் இருந்தனர். ஜைன-பௌத்தர்கள் பாரத சமூகத்தில் அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் என்று அத்தகைய வெளித்தோற்றத்தைக் கொண்டிருந்தார்கள் என்றும் தெரிகிறது[1].

கிரேக்கர்கள் இந்தியாவிற்கு வந்து படித்துச் சென்றது: இந்தியா அக்காலத்தில் விஞ்ஞானம், மருத்துவம், முதலிய துறைகளில் சிறந்து விளங்கியதாலும், அதற்கான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் (ஆசிரமங்கள்) இருந்ததினாலும், பல பாரதத்திற்கு கற்க வந்தனர். சுமார் 300 BCE க்தேசியாஸ் (Keasiast) மற்றும் மெகஸ்தனிஸ் (Megasthanese) என்ற இரு கிரேக்க மருத்துவர்கள் இந்தியாவிற்கு வந்து வடவிந்தியாவில் தங்கியதாக மேனாட்டு சரித்திராசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். அவர்கள் ஒன்றும் அப்படியொன்றும் வெறுமனே தங்கியிருக்க வரவில்லை. முன்னர் கிரேக்க தத்துவஞானிகள், அறிஞர்கள் – பிதாகோரஸ்[2] (Pythagorus c.560-480 BCE), பிளாட்டோ[3] (Plato – 427-347 BCE) முதலியோரும் வந்துள்ளதாக அவர்களேக் குறிப்பிட்டுள்ளனர்[4]. இதனால்தான் கிரேக்கத் தத்துவங்களில் இந்தியத்தாக்கம் வெளியாகிறது[5]. ஆன்மா, ஆன்மா பலவுடல்களைப் பெறுவது, மறுஜென்மம், பாவம்-புண்ணியம், கர்மா போன்ற கருத்துகள் காணப்படுகின்றன. பொதுவாக கிரேக்க நுழைவுகளினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, ஏனெனில் அவர்கள் க்ஷத்தியர்களில் தாழ்ந்தவர்களாக (degraded), விலக்கி வைக்கப்பட்டவர்களாக (excommunicated) பிரிந்து போனவர்களாக, இந்தியமுறைகளினின்று மாறுபட்டவர்களாகக் கருதப்பட்டனர்[6].  புராணங்கள் இவ்விவரங்களை அதிகமாகவே தருகின்றன. எட்வர்ட் போக்காக் (Edward Pococke), காலனில் டோட் (Col. Tod), வில்லியம் ஜோன்ஸ் (William Jones) போன்றவர்களும் இதனை எடுத்துக் காட்டியுள்ளனர்.

ஜைனர்கள்-பௌத்தர்கள்-பிராமணர்கள் பற்றிய கிரேக்கர்களின் குழப்பம்: கிரேக்கர்கள், பிராமணர்களை அறிந்திருந்தனர், ஆனால், மேற்சொல்லப்பட்டக் காரணங்களால், கிரேக்கர்களை பிராமணர்கள் ஜம்புத்வீபத்தில் இருப்பவர்களாகக் கருதவில்லை[7]. மெகஸ்தனிஸ் போன்றவர்கள் பிராமணர்களை “தத்துவஞானிகள்” என்று குறிபிட்டிருக்கிறார்கள்[8]. இன்னொரு கிரேக்க ஆவணமோ அந்த தத்துவஞானிகளில் இரு பிரிவினர் சர்மேன்ஸ் (Sarmanes) மற்றும் பிராக்மேன்ஸ் (Brachmanes) என்றிருந்ததாகக் குறிப்பிட்டுகிறது. இருப்பினும் சிரவணர்கள் மற்றும் பிராமணர்கள் இடையில் கிரேக்கர்களுக்குக் குழப்பம் இருந்தது. மெகஸ்தனிஸ் இந்திய முனிவர்களை “ஹைலோபியோய்” (hylobioi) என்று குறிப்பிட்டு மற்றவரை “பௌத்த”வின் சீடர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் “ஹைலோபியோய்” என்பவர்கள் பிராமணர்கள் என்றும், “பௌத்த”வின் சீடர்கள் சிரவணர்கள் என்றும் கொள்ளலாம்.  உண்மையில் மெகஸ்தனிஸ் எழுதியதாக சொல்லப்படும் “இண்டிகா” என்ற நூலேயில்லை. பிற்காலத்தில் மெகஸ்தனிஸ் சொன்னது என்று பல கிரேக்க நூல்களில் உள்ளவற்றைத் தொகுத்து வெளியிட்டதுதான் அந்த “இண்டிகா” என்பது.

முதல் நூற்றாண்டுகளிலும் தொடர்ந்த குழப்பம்: இன்னொரு மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டு கிரேக்க ஆவணத்தை வைத்துக் கொண்டு, இந்த பிராச்மேன்கள் / பிராக்மேன்கள் / பிராமணர்கள் (Brachmanes) துங்கபத்திரை ஆற்றங்கரையில் நிர்வாணமாகச் சுற்றிக் கொண்டிருந்தார்கள் என்று விளக்கம் கொடுக்கிறார்கள்[9]. ஆனால் அப்படி நிர்வாணமாக சுற்றும் சாமியார்கள், திகம்பர ஜைன சாமியார்கள்தாம். ஆகவே கிரேக்கர்களுக்கு பௌத்த-ஜைன துறவிகளிடையே கூட வித்தியாசம் தெரியவில்லை என்று தெரிகிறது. இல்லை மேலே எடுத்துக் காட்டியபடி, அலெக்சாந்தர் தோற்றதை மறைக்க இப்படி குழப்பியிருக்கலாம். இல்லை சுமார் 250 BCE லிருந்து நான்காம் நூற்றாண்டு வரை ஜைன-பௌத்த-பிராமணர்களுக்கு வித்தியாசமே இல்லாமல் இருந்தது போலும். இல்லை ஜைன-பௌத்தர்கள் பிராமணர்களைப் போலவே தோற்றம் கொண்டு, வேடமிட்டு உலாவந்து கொண்டிருந்தார்கள் போலும். அதனால்தான், பிராமணர்கள் அவர்களை “பாஷாண்டிகள்” என்றழைத்தனர். அவர்களுக்கு வேதங்களைக் கற்றுக் கொடுக்க மறுத்தனர். ஏனெனில், வேதங்களைப் படித்து பிறகு வேதங்களையே குறைக்கூறுவது, தூஷிப்பது அவர்களது வேலையாக இருந்தது. மேலும், வேதங்களிலுள்ள பெரும்பாலான கருத்துகளையும், அடிப்படை உண்மைகளையும் ஏற்றுக் கொண்டு, அவ்வாறு வேதங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் அவர்களது போக்கும் போலித்தனமாகப் பட்டது.

அசோகர்காலத்தில் (c.250-200 BCE) சிரவணர்கள்பிராமணர்கள்சமமாக பாவிக்கப்பட்டார்கள்: அவர்களுக்கு அவர்கள் க்ஷத்தியர்களில் தாழ்ந்தவர்களாக (degraded), விலக்கி வைக்கப்பட்டவர்களாக (excommunicated) பிரிந்து போனவர்களாக, இந்தியமுறைகளினின்று மாறுபட்டவர்களாகக் கருதப்பட்டனர்[10].  அதனால், அசோகனுடைய கல்வெட்டுகளும் சிரவணர்கள், பிராமணர்கள் என்று குறிப்பிட்டு, கிரேக்கர்களைக் குறிப்பிடாமல் இருக்கின்றன சிரவணர்கள் மற்றும் பிராமணர்கள் இல்லாத சமூகக்குழுமங்களே/நாடுகளேயில்லை, ஆனால் கிரேக்கர்களிடம் மட்டும் அவர்கள் இல்லை[11]. அதாவது கிரேக்கர்கள் தங்களது நாட்டை அவ்வாறுக் கூறிக்கொள்ளவில்லை. இங்கு பண்டார்கர் போன்றோர் அயோனியர்கள் வேறு, கிரேக்கர்கள் வேறு என்று கூறுகின்றனர்[12]. ஆனால் மேற்பட்ட நம்பிக்கைகள் கொண்ட மதத்தைக் கொண்டிருந்தனர். எப்படியாகிலும் இருக்குழுக்களுமே சமுக்கத்தில் உயர்வாக மதிக்கப்பட்டார்கள் என்று தெரிகிறது. அசோகரைப் பொறுத்தவரைக்கும் இருவர்களுன் சமமாக பாவிக்கப்பட்டார்கள். “ப்ரமணஸ்ரவண” மறும் “ஸ்ரவணப்ரமண” என்ற சொற்றோடர் மாறிமாறி அசோகரின் கல்வெட்டுகளில் பல இடங்களில் உபயோகப்படுத்தப் பட்டுள்ளன.

ஜைன-பௌத்த காலத்தில் படிப்புமுறையில் மாற்றங்கள் ஏற்பட்டது: ஜைனர்கள்-பௌத்தர்கள் வேதநெறிகளினின்று மிகவும் விலகி மந்திர-தந்திர-யந்திரமுறைகளில் ஈடுபட்டபோது, சமூகத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. பெண்கள் ஒருபக்கத்தில் உரிமைகள் கொடுக்கப்பட்டாலும், மந்திர-தந்திர-யந்திரமுறைகளில் பாலியல் ரீதியில் மிகவும் சதாய்க்கப்பட்டார்கள் (Sexually exploited) என்று தெரிகிறது. மேலும் அஹிம்சையை (non-violence) போதித்துக் கொண்டு, ஹிம்சை வேலைகளில் ஈடுபட்டது, உள்ள நிலைமையை அனுசரித்து, அசோகனும் தனது கல்வெட்டில் தினமும் மூன்று மிருகங்கள் – இரண்டு மயில் மற்றும் ஒரு கருப்பு மான் – கறிக்காகக் கொல்லப்படலாம் என்று விலக்கு அளித்துள்ளார்[13]. மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். குறிப்பாக அஹிம்சை போதித்து, பௌத்தர்கள் மாமிச உணவை உட்கொண்டது பெரிய முரண்பாடே. அதேபோல, அஹிம்சை கடைபிடிக்கும் ஜைனர்கள் போர்களில் ஈடுபாட்டு, நாடுகளை தங்களது ஆதிக்கத்தில் கொண்டு வந்தது. அதில் அசோகன் மட்டும் விதிவிலக்காக இருந்தான். அவரும் கலிங்கப் போருக்குப் பிறகுதான் மாறினான். இதனால், இவர்கள் காலத்தில் பொதுப்படையாக, வெளிப்படையாக இருந்த ஆசிரமமுறை பள்ளிக்கூடங்கள் மாறி, விகாரங்கள்-மடாலயங்கள் முறை படிப்புமுறை தோன்றியது. ஆனால், ஜைன-பௌத்த விகாரங்கள்-மடாலயங்கள் ஊர்களுக்கு-நகரங்களில் வெளியில், ஒதுக்குப்புறத்தில், தூரத்தில் இருந்தன. அங்கு யார் வேண்டுமானாலும் சென்றுவிடமுடியாது, சேர்ந்து படிக்க முடியாது. அதாவது ஜைன-பௌத்தர்களுக்குத்தான் முதலிடம் என்பது தெரிந்த விஷயமே.

மடாலய-குருக்குல வேறுபாடுகள் பல்கலைக்கழகப் படிப்புகளில் சண்டை-சச்சரவானது: ஒதுக்குப்புறமாக விகாரங்களில் நடக்கும் விஷயங்கள் பொது மக்களுக்குத் தெரியாமல் இருந்தாலும், விளைவுகள் தெரியவரத்தான் செய்தன. படிப்புமுறைகளில் மட்டுமல்லாது, மருத்துவமுறைகளில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. மந்திர-தந்திர-யந்திரமுறைகள் கவனமாகக் கற்றுக் கொள்ளப்பட்டு, முறையாக, வேண்டிய காரியங்களுக்கு மட்டும் தான், உபயோகப் படுத்தப் படவேண்டும் என்றமுறை போய், யார் வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும், எப்படியும் உபயோகப் படுத்தலாம், பரிசோதிக்கலாம் என்று வந்தபோதுதான், துஷ்பிரயோகங்கள் ஆரம்பித்தன. காபாலிகர், காலபைரவர், காளாமுகர், பாசுபத, லகுலீஸ போன்றோர் தாம் பிணங்களை அறுப்பது (dissection of dead bodies – cadavre), அறுவைசிகிச்சைச் செய்வது என்றமுறை போய், மற்றவர்களும் செய்ய ஆரம்பித்தனர். கண்-பொறை நீக்கல், மண்டையோட்டு அறுவைசிகிச்சை, மற்ற ரணசிகிச்சை முதலியவை வேண்டியவர்களுக்கு ஜாக்கிரதையாக முறையாகச் செய்யப்பட்டன. புத்தரே அறுவைசிகிச்சைமூலம் பிறந்து இறந்தார், அதாவது சிஸரியன் ஆபரேஷன் மூலம் பிறந்து, தனது எண்பதாவது வயதில் பன்றி மாமிசம் உண்டபோது, உணவுக்குடலில் சிக்கிக் கொண்டு, அறுவைசிகிச்சை செய்யப்பட்டு, பலன் அளிக்காமல் இறந்தார். இதனால், அறுவைசிகிச்சைமுறை, பாரத்தில் தடை செய்யப்பட்டது. ஆனால், பாரத்ததிற்கு வெளியே தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டது[14].

பிணங்களை அறுப்பது-அறுவைசிச்சை செய்வது முதலியன: அஹிம்சை போதித்த ஜைனர்-பௌத்தர் எப்படி பிணங்களை அறுத்து மருத்துவர்கள் ஆகியிருக்க முடியும் என்று யாரும் யோசித்ததாகத் தெரியவில்லை. இதனால்தான், சரகசம்ஹிதையை சரியாகப் படிக்காதவர்கள், அறுவைசிகிச்சை பயிலும் மாணவர்களுக்கு பிணங்களுக்கு பதிலாக, காய்கறிகள் கொடுத்து, அவற்றையறுத்து பயிற்சி பெற்றனர் என்று விளக்கம் அளிக்கின்றனர். அதுமட்டுமல்லாது, இந்தியர்களுக்கு எலும்பியல் அறிவேயில்லை என்றும் முடிவுக்கு வந்து திரிபு விளக்கங்கள் கொடுக்கின்றனர். ஒரு வாதத்திற்கு எடுத்துக் கொள்வதாக இருந்தால், யாகங்கள் புரிந்த வேதகாலத்தவர்கள் ஆடு, மாடு, குதிரை போன்றவற்றைப் பலிக்கொடுத்திருந்தால், அவர்களுக்கு பிணங்களை அறுக்க ஒன்றும் தயக்கமோ, பயமோ, அறுவருப்போ இருந்திருக்காது. ஆனால், அஹிம்சை போதித்த ஜைனர்-பௌத்தர் அவ்வாறு செய்திருக்க முடியாது. ஆகவே உண்மையில் உயிர்பலி, கொலை முதலியன ஏன் தடுக்கப்பட்டது என்று ஆராயவேண்டியுள்ளது.

இன்றைக்கும் ஆயுர்வேதம்-சித்தா படிக்கும் மாணவர்கள் [B.A.M.S (Bachelor of Ayurvedic Medicine and Surgery) மற்றும் B.S.M.S (Bachelor of Siddha Medicine and Surgery)] பிணங்களை அறுத்து (dissection of dead bodies – cadavre) பயிற்சி இல்லாமல் மருத்துவர் ஆகமுடியாது. அம்மருத்துவக் கல்லூரிகளில் பிணங்கள் அழுகாமல் பாதுகாத்துவைக்க குளிர் அறை இருந்தால் தான், அப்படிப்புகளுக்கு ஒப்புதலே அளிக்கப்படுகிறது. ஆகவே, பழங்காலத்தில் ஒன்றும் தெரியாமல், கண்-பொறை நீக்கல், மண்டையோட்டு அறுவைசிகிச்சை, மற்ற ரணசிகிச்சை முதலியவற்றை செய்தனர் என்பது ஏதோ “சித்துவேலை” காட்டுவதைப் போல இருக்கும். அத்தகைய “சித்தர்கள்” அக்காலத்தில் இருந்திருக்க முடியாது. எனவே அறுவைசிகிச்சை செய்யப்பட்டதற்கு அகழ்வாய்வு ஆதாரங்கள் இருக்கும் போது, அதற்கான மருத்துவர்கள் மற்றும் அறுவைசிகிச்சை வல்லுனர்கள் இல்லை என்று வாதிடுவது அற்பத்தனமாகவே தோன்றுகிறது.

© வேதபிரகாஷ்

14-09-2012


[1] இது சூப்பிக்கள் இந்துமதத்துறவிகள் போல, பிற்காலத்தில் சித்தர்கள் போல வேடமிட்டு உலா வந்தது போன்றது எனலாம். கிருத்துவர்களும் அதேபோல காவியுடையணிந்து, குடுமி வைத்துக் கொண்டு உலல வந்தார்கள். இன்றைக்கும் கிருத்துவர்கள் தங்களை பத்மா முதலியார், மணி ஐயர் என்று கூறிக்கொண்டு, பாமர மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

[2] Pythagoras arrived in India too late to come into personal contact with the Buddha, he was greatly influenced by his teachings. He went to India a student, he left it as a teacher, and even to this day he is known in that country as Pitar Guru, and as Yavanacharya, the Ionian Teacher.

http://www.ship.edu/~cgboeree/greeks.html; http://9waysmysteryschool.tripod.com/sacredsoundtools/id13.html

[3] Typically Indian are the dying words of Plotinus, noblest of the Neo-platonists “Now I seek to lead back the self within me to the All-self.” One great teacher has said, “The end of knowledge is to know God – not only believe; to become one with God – not only to worship afar off.” We gain a hint in the Kathopanishat (V1- 17) “Let a man with firmness separate it (the soul) from his own body, as a grass stalk from its sheath,” to which point we will return later.

[4] Richard Garbe, India and Christendom, He points out, “…………….the historical possibility of the Greecian world of thought being influenced by India through the medium of persia must unquestionably be granted, and with it the possibility of the above-mentioned ideas (of the Sankyan and Vedanta Philosophy) being transferred from India to Greece”.

E. W. Hopkins says: “Plato is full of Sankhyan thought, worked out by him, but taken from Pythagoras. Before the sixth century B.C. all the religious philosophical ideas of Pythagoras are current in India. (L. Schroeder, Pythagoras). If there were but one or two of these cases, they might be set aside as accidental coincidences, but such coincidences are too numerous to be the result of change. ”

[5] வில்லியம் ஜோன்ஸ் போன்றோர் பாரதம் மற்றும் கிரேக்க கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, முதலியவற்றிலுள்ள பல ஒற்ருமைகளை எடுத்துக் காட்டியுள்ளனர். இக்கருத்து வலுப்பட்டபோது தான், தலைக்கீழ் கருதுகோள்களை மேனாட்டவர் உண்டாக்கி, கிரேக்கர்களிடமிருந்து இந்தியர்கள் காப்பியடித்தார்கள் என்று முன்வைத்தார்கள்.

[6] மஹாபாரத யுத்தம் நடந்த பின்னர், க்ஷத்தியர்கள் பாண்டவர்-கௌரவர் என்று இருதரப்பில் சேந்து சண்டையிட்டதால் அவர்களிடம் அவ்வாறான பாகுபாடு ஏற்பட்டது. மேலும் துவாரகை கடலில் மூழ்கி யாதவர்கள் முழுவதுமாக அழிந்தபோது, கிருஷ்ணரும் மறைந்தார். அப்பொழுது ஒன்பது கோள்களும் ஒரே கோட்டில் வந்ததால் கலியுகம் பிறந்ததாகக் கணக்கிடப்படுகிறது. அது 3102 BCEயிலிருந்து ஆரம்பிக்கிறது. இக்கலி சகாப்தம் குறிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான கல்வெட்டுகளும் ஆவணங்களும் உள்ளன.

[7] Romila Thapar, Asoka and the Decline of the Mauryas, Oxford University Press, New Delhi, 1987, p.167.

[8] Strabo, XV, I, p.59.

[9] Pseudo-Origen, Philosophia, p.24.

[10] மஹாபாரத யுத்தம் நடந்த பின்னர், க்ஷத்தியர்கள் பாண்டவர்-கௌரவர் என்று இருதரப்பில் சேந்து சண்டையிட்டதால் அவர்களிடம் அவ்வாறான பாகுபாடு ஏற்பட்டது. மேலும் துவாரகை கடலில் மூழ்கி யாதவர்கள் முழுவதுமாக அழிந்தபோது, கிருஷ்ணரும் மறைந்தார். அப்பொழுது ஒன்பது கோள்களும் ஒரே கோட்டில் வந்ததால் கலியுகம் பிறந்ததாகக் கணக்கிடப்படுகிறது. அது 3102 BCEயிலிருந்து ஆரம்பிக்கிறது. இக்கலி சகாப்தம் குறிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான கல்வெட்டுகளும் ஆவணங்களும் உள்ளன.

[11] J. Bloch, Les Inscriptions d’Asoka, Paris, 1950, p.128.

[12] D. R. Bhandarkar, Asoka, Univesity of Calcutta, 1969, P.27

[13] அசோகருடைய 14ம் கல்வெட்டு. Edict.No.I, The Sacredness of life.

[14] K.V. Ramakrishna Rao, The Position of Surgery before and after Buddha, in Sastra Trayi-Proceedngs of Bhaskariyam-Bharatiyam-Dhanvantariyam, 2007, Bangalore, pp.197-198.

Posted in அகத்தியர், அரேபியா, அறிவு ஜீவி, அறுத்தல், அறுவை சிகிச்சை, அறுவைசிகிச்சை, ஆத்மா, ஆனந்தம், ஆன்மா, ஆபரேஷன், ஆயுர்வேதம், ஆயுள், ஆயுள்வேதம், ஆரியன், ஆரியம், எலும்பியல், ஓலை, கடைசல் ஊசி, கத்தி, கந்தகம், கரைசல், காபாலிகம், காயம், சக்தி, சல்ய, சல்லிய, சிகிச்சை, சித்தார்த், சித்த்ஞானம், சிந்தனை, சீனா, திகம்பர, திகம்பரம், திரவிடம், திராவிடன், திராவிடம், திருமூலர், நரம்பு, பாதரசம், பாரதம், பிணம், பிண்டம், பித், பித்தம், மந்திரம், மனச்சிதைவு, மூச்சு, மூளை, மேரு, வில்லியம் ஜோன்ஸ் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 Comments »

ஜைனசித்தர்கள் – ஜைனகாலத்தைய மருத்துவம், மருத்துவமனைகள் முதலியன

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 9, 2012

ஜைனசித்தர்கள்ஜைனகாலத்தைய மருத்துவம், மருத்துவமனைகள் முதலியன

ஜைனர்காலத்தில்இருந்தமருத்துவமனைகள்: காஷ்மீரத்தை மையமாகக் கொண்டு சுமார் 1800 BCE வாக்கில் ஆட்சி செய்த அசோகன் ஜைனமதத்தைச் சேர்ந்தவன். ஆனால், அவன் காலத்தில் சைவம் ஓங்கியிருந்தது. இமயமலை சார்ந்த மக்கள் சிவனை வழிப்பட்டு வந்தனர். இதனால் சிவனை ஆதாரமாக மந்திர-தந்திர-யந்திர வழிபாடுகள் பெருகின. அதனால் தான், இமயமலையைச் சுற்றியுள்ள நாடுகளில் கிழக்கே – திபெத், சைனா; தெற்கே நேபாளம், காஷ்மீரம்; மேற்கே ஆப்கானிஸ்தான் (காந்தாரம்), மத்தியாசிய நாடுகள் (துர்க்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான்[1]), வடக்கே திபெத்-சீனா பகுதிகள்- இங்கெல்லாம் சிவலிங்கங்கள், அதிலும் மூன்றுமுக, நான்குமுக லிங்கங்கள் அதிகமாகக் கிடைத்துள்ளன. மந்திர-தந்திர-யந்திர வழிபாடுகள் மருத்துவமுறைகளில் வளர்ந்தன. மருத்துவமனைகளும் பெருகின. “கபாலிகர்” என்றழைக்கப்பட்ட, இங்கிருந்த மருத்துவர்கள், அறுவைசிகிச்சை வல்லுனர்கள் தலை-மூளை-மனம் சம்பந்தப்பட்ட நோய்கள், வியாதிகள் முதலியவற்றில் சிறந்து விளங்கினர்.

ஜைன-அசோகன் காலத்தைய மருத்துவமனைகள்: மண்டையோடுகளில் ஓட்டைப் போட்டு சிகிச்சை நடத்தினர். இதற்கான அகழ்வாய்வு ஆதாரங்கள் அதிகமாகவே கிடைத்துள்ளன. லோதல், ஹரப்பா, காலிபங்கன், காஷ்மீர் முதலிய இடங்களில் கிடைத்துள்ள சுமார் 4300 YBP / 2300 BCE ஆண்டுகள் காலத்தைய பழங்கற்கால மனிதனின் மண்டையோடுகளில் மிகநுண்ணிய துளைப்போடும் கடைசல் ஊசி மூலம் போடப்பட்ட துளைகள் காணப்படுகின்றன. இதற்கு ட்ரெபினேஷன்[2] (Trepenation) என்று பெயர் அதாவது ஒருவிதமான மண்டையோட்டு (Cranial surgery) ரணச்சிகிச்சை, மூளை அறுவைசிகிச்சை[3] / ஆபரேஷன் ஆகும்[4]. ஆகவே, இத்தகைய அறுவைசிகிச்சை நடத்த மருத்துவமனைகள் இருந்தது திண்ணம். சுமார் 300-250 BCEயில் அசோகர் மிருகங்ளுக்குக்கூட மருத்துவமனைகள் கட்டினான் என்று அவனது கல்வெட்டுகள் கூறுகின்றன. அப்படியிருக்கும்போது, அவருக்கு 2000 வருடங்களுக்கு முன்பு மருத்துவமனைகள் இல்லாமல் இத்தகைய அறுவைசிகிச்சைகள் நடந்தனவா? இல்லை, அவையெல்லாம் “சித்து”வேலையா, சித்தர்கள் மாயையா? தலை-மூளை-மனம் நோய்கள் எல்லாமே மனபாதிப்பு, மனச்சிதைவு போன்ற மனநோய்கள் சம்பந்தப்பட்டதாக உள்ளன. சித்தம் பிடித்தவர்கள், சித்தப்பிரமைப் பிடித்தவர்கள், பைத்தியம் அல்லது பித்தம் பிடித்தவர்கள் என்றெல்லாம் அத்தகைய நோயாளிகள் அழைக்கப்படுவர். அதனால்தான் அத்தகைய நோய்களைத் தீர்ப்பவர்கள் “சித்தர்கள்” என்ரு அழைக்கப்பட்டார்களா? கீழே ஜைனமத சித்தர்கள் அத்தகைய சித்த, சித்த-புத்த, புத்த-சித்த போன்ற பெயர்களைக் கொண்டிருந்ததைக் காணவும்.

 

ஜைனமத சித்தர்கள்: ஜைனமரபில் சித்தர்கள் மிக உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளார்கள். ஜைனத்தில் யார் சித்தராக முடியும் என்று சரத்துகளைக் குறிப்பிடுகிறது. அதன்படி ஒரு பட்டியலையும் கொடுக்கிறது[5].

  1. ஜீனசித்தா – ரிஷபதேவ, அஜித்நாத், சாந்திநாத், நேமிநாத், பாஷ்வநாத, மஹாவீர முதலியோர்.
  2. அஜீனசித்த – கௌதமசாமி.
  3. தீர்த்தநாத – பொதுவான பெயர்.
  4. அதீர்த்தநாத – மருதேவமாதா.
  5. கிருஹஸ்தலிங் சித்த – சக்கரவர்த்தி பரத.
  6. அன்யலிங் சித்த – வக்கக்சிரி.
  7. ஸ்வலிங் சித்த – முனி ஸ்ரீ பிரசன்னசந்திர.
  8. புருஷலிங் சித்த – சுதர்மசுவாமி.
  9. ஸ்திரீலிங் சித்த – சந்தன்பால, மிருகவதிஜி,.
  10. நபுசங்க்லிங் சித்த – கன்கேயமுனி.
  11. ப்ரத்யேக் சித்த – கர்கண்ட் முனி.
  12. ஸ்வயம்புத்த சித்த – கபில் கேவலி.
  13. புத்த போதித் சித்த – கௌதம முனி, வாயுபூதி.
  14. ஏக் சித்த – மஹாவீரசுவாமி.
  15. அநேக் சித்த – ரிஷபதேவ முதலியோர்.

இதெல்லாம் ஆண்-பெண்-ஆணல்ல-பெண்ணல்ல-ஆணும்-பெண்ணும் சேர்ந்தது என்ற ரீதியில் உள்ளது. சித்த, புத்த-சித்த போன்ற பெயர்களையும் கவனிக்கவும்.  ஒருவேளை இவர்கள் எல்லோரும் பாலியல் நோய்கள் தீர்க்கும் சித்தர்களா? ஜைன மதத்தில் சம்சார சாகரத்தில் இருந்து விடுபட்டு, கடுமையான நியமங்களைப் பின்பற்றி முக்தி நிலையை முயற்சித்தவர்கள், அடைந்தவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப் பட்டனர். இங்கும் “தீர்த்தங்கரர்” என்ற நிலையடைந்தவரை அவ்வாறு ஜைன இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. மேலும் ஜைனவிதிகளைப் பின்பற்றாத, “சித்தபுத்ர” என்பவரைப்பற்றிக் குறிப்பிடும்போது[6], அவர்கள் வெண்ணிற உடையை அணிந்திருக்கவேண்டும், தலையை மழித்து குடுமி வைத்திருக்க வேண்டும், கையில் கொம்பு, பாத்திரம் இல்லாமல் செல்லவேண்டும் என்றும் ஜைனநூல்கள் குறிப்பிடுகின்றன.

மனிதர்கள், சித்தர்கள், சர்வத்த சித்தர்கள்: ஜைனநூல்கள் உயிருள்ள-உயிரற்றவைகளை ஒன்பது பிரிவுகளாகப் பிரிக்கின்றன. அவற்றில், ஐந்து எந்திரியங்கள் உள்ளவற்றை ஒன்பது பிரிவுகளாகப் பிரிக்கின்றன. ஆனால் மனிதர்களில் மேம்பட்டவர்களை எந்திரியங்களை வென்றவர்கள் கர்மங்களை அழித்தவர்கள் இந்திரஜித்துகளாகிறார்கள். அவர்களுக்கு எதுவுமே – உடலையும் சேர்த்து – தேவையில்லாததாகிறது. காற்றைவிட இலேசாகிறார்கள். அதாவது அவர்கள் எல்லாவற்றையும் இழந்து உயிரற்ற ஜடமாகிறார்கள். உண்மையில் ஜைனர்கள் வடக்கிருந்து உணவு எதுவும் உட்கொள்ளாமல் உடலைவிட்டு இறக்கிறார்கள். பிறப்பு-இறப்பு சுழற்சியிலிருந்து விடுபடுகிறார்கள். சாகாநிலையை அடைகிறார்கள். இருப்பினும் தம்முடையத் தனித்தன்மையை நிலைப்படுத்திக் கொள்கிறார்கள். இறந்தும் (ஜீவன்முக்தர்களாக) இருக்கிறார்கள். அவற்றில் சித்தர்கள் வருகிறார்கள்[7]. அவர்கள் மனிதர்களைப் போலவே இருந்தாலும், எப்படி தமது குணாதசயங்களால் மாறுபட்டுள்ளார்கள் என்றும் விளக்குகின்றன. இப்படித்தான் “அரிஹந்தர்”, சித்தர்கள் ஆகிறார்கள்[8]. “அரிஹந்தர்” சித்தர்களுக்கு மேலே வைக்கப்பட்டாலும், அவர்களையும் விட தங்களுடைய துறவினால் மேனிலையை அடைகிறார்கள். சித்தர்களுள் உயர்வானவர்களை “சர்வத்த சித்தர்” என்றும் குறிப்பிடுகின்றன. அதற்கேற்றாற்போல அவர்கள் மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளார்கள், பேரண்டவியலில் இடத்தில் வைக்கப்படுகிறார்கள். இத்தகைய நிலை, உடல்-மூச்சு கலைகளினால் அடைவது. ஆனால், இடைக்காலத்தில் மருந்துகளை உட்கொண்டால் இத்தகைய நிலையை அடையலாம் என்று திரித்து எழுதப்பட்டது. அதனால்தான், பொய்யான நிலையேற்ப்பட்டது.

தசாவதாரம், 12 ராசிகள் போன்ற பிரிவுகள்: ஜைனத்தில் இருந்த 24 தீர்த்தங்கரர்களின் குறிப்பு, சமவய என்ற கல்பசூத்திரம் மற்றும் அவஸ்யக நிருக்தி நூல்களில் காணப்படுகின்றன[9]. அவர்களுக்கான அடையாளச் சின்னங்களும் கொடுக்கப்பட்டுள்ளன[10]. அவை பின்வருமாறு:

தீர்த்தங்கரின் பெயர்

அடையாளச் சின்னம்

  1. ரிஷப, இக்ஷ்வாகு குலத்தில் பிறந்த, முதல் ஜீனர்.
எருது
  1. அஜிதா, ஜிதாசத்ருவின் மகன்
யானை
  1. சம்பவ, ஜிதரியின் மகன்
குதிரை
  1. அபிநந்தன, சம்பரனின் மகன்
 குரங்கு
  1. சுமதி, மேகவின் மகன்
பறவை
  1. பத்மபிரபா, ஸ்ரீதருடைய மகன்
தாமரை
  1. சுபர்ஸ்வ, ரதிஸ்தவின் மகன்
ஸ்வஸ்திக
  1. சந்திரபிரப, மஹாசேனவின் மகன்
சந்திரன்
  1. புஸ்பானந்தா / புஸ்பானந்தா, சுப்ரியாவின் மகன்
முதலை
  1. சீதல, திருதராஷ்டரனின் மகன்
ஸ்ரீவத்ஸ
  1. ஸ்ரீரேயா / ஸ்ரீயன்ஸா, விஷ்ணும்வின் மகன்
காண்டா மிருகம்
  1. அசுபூஜ்ய, வசுபூஜ்யவின் மகன்
எருமை
  1. விமல, கீர்த்திவர்மணனின் மகன்
கரடி
  1. அனாத/அனாதஜித், சிம்மசேனாவின் மகன்
கழுகு
  1. தர்மா, பானுவின் மகன்
இடி
  1. சந்தி, விஸ்வசேனாவின் மகன்
கலைமான்
  1. குந்து, சூராவின் மகன்
ஆடு
  1. அர, சுதர்ஸனனின் மகன்
நந்தியவர்த
  1. மாலி, கும்பவின் மகன்
ஜாடி
  1. முனிசுவர்தா, சுமித்ராவின் மகன்
ஆமை
  1. நிமி, விஜயாவின் மகன்
நீலத்தாமரை
  1. நேமி/அரிஸ்தநேமி, சௌத்ரஜ்யாவின் மகன்
சங்கு
  1. பார்ஸ்வ/பார்ஸவநாத, அஸ்வசேனனின் மகன்
ஐந்தலை நாகம்
  1. வர்த்தமான/மஹாவீர, கடைசி ஜீனர், சித்தார்த்தரின் மகன்
சிங்கம்

இப்பெயர்கள் மற்றும் அடையாளச்சின்னங்களைக் கூர்ந்து கவனித்தால், தசாவதாரத்தை ஒத்திருப்பதுடன், அவற்றை வானவெளி மண்டலத்தின் 24/12 பிரிவுகள் மற்றும் நாட்காட்டியைக் குறிப்பதாகக் கொள்ளலாம். இந்த தசாவதாரத்தை காப்பியடித்து, 19-20 நூற்றாண்டு சித்தர்பாடல்களை எழுதியிருப்பதைக் காணலாம்[11].

சைவஜைனபௌத்தப்பிரிவுகள்ஏன்வந்தன?: இந்திய மருத்துவ வல்லுனர்கள் மந்திரம்-தந்திரம்-யந்திரம் என்ற பிரிவுகளில் அவரவர் கடமைகளை, வேலைகளை செய்து வந்தனர். ஆனால், ஜைன-பௌத்த மதங்கள் வளர ஆரம்பித்தபோது, இவை எல்லோரும் பின்பற்றி வரும் நிலை ஏற்பட்டது. வேதகாலத்தில் பெண்கள் வேதங்களை உருவாக்கியதுடன், படித்தும், போதித்தும் வந்தனர். ஆனால் ஜைன-யோகினியர் தந்திரங்களில் ஈடுபட்டபோது, பாலியல் ரீதியல் தவறுகள், பிறழ்ச்சிகள், குழப்பங்கள் ஏற்பட்டன. விஹாரங்களில் பாலியல் குற்றங்கள் ஏற்பட்டன. இதனால் யோகினி / ஜோகினியர் தனித்து வைக்கப்பட்டனர். அவர்கள் வேதங்களைப் படிக்கக் கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டது. அதாவது சக்திவழிபாட்டு முறைகள் திரித்து விளக்கம் அளித்தமையால் இந்நிலை ஏற்பட்டது. இதனால்தான், 64 / 84 யோகினி / ஜோகினி கோவில்கள் மக்கள் வசிக்கும் இடங்களினின்று தூரத்தில் இருக்கின்றன. பிறகு வந்த புத்தர் இதனால்தான், பெண்களை பிட்சுனிகளாக சங்கத்தில், புத்ததர்மத்தில், விஹாரங்களில் சேர்க்கக்கூடாது என்று ஆணையிட்டார். ஆனால், ஆனந்த என்ற அவருடைய சீடர், வேண்டிக் கொண்டு விலக்குப் பெற்றார். இதனால்தான் இவ்விரு மதங்களும் ஆதிக்கத்தில் இருந்தாலும், மதரீதியில் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொள்ளமுடியவில்லை. சந்திரகுப்த மௌரியர் ஜைனராக இருந்தாலும், ஜைனம் வலரவில்லை. அசோகர் புத்தமதத்தை பரப்பினலும், இந்தியாவில் வளரவில்லை. பிறகு இடைக்காலத்தில் ஜைன-பௌத்தர்களால் முஸ்லீம்களையும் எதிர்கொள்ளமுடியவில்லை.

© வேதபிரகாஷ்

08-09-2012


[1] ருஷ்ய கூட்டணி உடைந்த பிறகு, இவையெல்லாம், இப்பொழுது தனி நாடுகளாகியுள்ளன. முன்பு பாரதத்திலிருந்து சைனாவிற்கு இமயமலையை மேற்கு-வடமேற்கு திசைகளில் சுற்றி செல்ல ஏற்படுத்தப் பட்ட பாரம்பரிய வழி “பட்டு வணிகப் பாதை” (Silk Road) என்று சொல்லப்பட்டது. அவ்வழிகளில் இந்நாடுகள் உள்ளன. இங்கு Marc Aurel Stein (1862-1943), A. F. Rudolph Hoernle போன்றோர் பல அகழ்வாய்வு ஆதாரங்கள், அத்தாட்சிகளை கண்டெடுத்துள்ளனர்.

[2] The trepanation, also called trephination or trephining, had been the oldest craniotomic surgical procedure practised by mankind since the Stone Age by way of drilling or cutting through the skull vault of a living or recently deceased person.

[3] A. R. Snnkhyan and G. R. Schug, First evidence of brain surgery in Bronze Age Harappa, CURRENT SCIENCE (scientific correspondence), VOL. 100, NO. 11, 10 JUNE 2011, pp. 1621-1622; http://www.currentscience.ac.in/Volumes/100/11/1621.pdf

[4] Maria Mednikova, Post-mortem Trepenations in Central Asia: Types and Trends, in Kurgans, Ritual sites and Settlements: Eurasian Bronze and Iron Age, pp.269-279.

[6] Jagdishchandra Jain, Life in Ancient India as depicted in Jaina Canon and Commentaries, Munshiram Manoharlal Publishers, New Delhi,  1984, p.317.

[7] Walther Schubring, The Doctrine of the Jains – Described after the Old Sources, Motilal Banarasidas publishers, New Delhi, 2000, pp.97-98, 246, 279, 329.

[8] Sancheti Asoo and Bhandari Manak Mal, First Steps to Jainismwith Thirty two Plates (Part one), M. Sujan Mal Ugam Kanwar Sancheti Trust, Jodhpur, 1995, p.81.

[9] Jagdishchandra Jain, Life in Ancient India as depicted in Jaina Canon and Commentaries, Mushiram Manoharlal, New Delhi, 1984, pp.3-4.

[10] Colebrooke’s Essays, Vol.II, p.187; Asiatic Researches, Vol.IX, p.305; Burgess, In Indian Antiqyary, 1873, Vol.I, p.134.

[11] 19-20 நூற்றாண்டு “திராவிட சித்தர்கள்” மட்டுமல்ல, 17-18 நூற்றாண்டு கிருத்துவர்கள், 14-15 நூற்றாண்டு முஸ்லீம்கள் கூட அத்தகைய தசாவதார தத்துவத்தைக் காப்பியடித்து தத்தம் மதங்களில் தகவமைத்துக் கொண்டுள்ளனர். இதெல்லாம் பெரும்பான்மையான இந்துக்களைக் கவர மேற்கொண்ட முயற்சிகள் தாம்.

Posted in அறுவை சிகிச்சை, உஸ்பெகிஸ்தான், கஜகிஸ்தான், காபாலிகம், கிர்கிஸ்தான், சீனா, சைனா, சைவம், ஜோகினி, ஞானம், ஞானி, தஜிகிஸ்தான், திகம்பரம், திகம்பரர், திபெத், துர்க்மேனிஸ்தான், நிர்வாணம், மத்திய ஆசியா, யோகினி, ராஜஸ்தான், வாரணாசி, வீரசைவம் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »