சித்தர்களின் மூலம், பாரம்பரியம், இன்றைய நிலை

வரலாற்று நோக்கில் சித்தர்கள் ஆராய்ச்சி

Archive for the ‘ஆயுள்வேதம்’ Category

சென்னையில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம்,  சித்த மருத்துவ ஆராய்ச்சி, சித்த மருத்துவ மாநாடு முதலியன (2)

Posted by vedaprakash மேல் திசெம்பர் 16, 2022

சென்னையில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம்,  சித்த மருத்துவ ஆராய்ச்சி, சித்த மருத்துவ மாநாடு முதலியன (2)

15-12-2022: தேசிய சித்த மருத்துவ மாநாடு தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது[1]: சென்னை, கிண்டியில் உள்ள, தேசிய சித்த மருத்துவ மாநாடு தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை (டிச.15) தொடங்கியது[2]. தொடா்ந்து இரு நாள்கள் நடைபெற்ற அந்த மாநாட்டில் 1,000-க்கும் மேற்பட்ட பாரம்பரிய மருத்துவ வல்லுநா்கள் நாடு முழுவதிலும் இருந்து பங்கேற்றனா்[3]. 600-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டன. பல்கலைக்கழக வெள்ளி விழா அரங்கில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்ற தொடக்க நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமார், தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன், இந்திய மருத்துவம், ஹோமியோபதித் துறை இயக்குநா் கணேஷ், பல்கலைக்கழகப் பதிவாளா் அஸ்வத் நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனா்[4]. இதில், துணை வேந்தர் சுதா சேஷய்யன் பேசியதாவது[5]: “அதிகரித்து வரும் புற்றுநோய், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளை கட்டுப்படுத்த, சித்த மருத்துவம் தன் பங்களிப்பை அளிக்கும். சித்த மருத்துவத்துடன் பல்கலை இணைந்து செயல்படும்……இந்திய பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவம் சமூகத்துக்கு ஆற்றி வரும் பங்களிப்பு அளப்பரியது[6]. நாட்டின் தொன்மையான மருத்துவ முறைகளில் ஒன்றான சித்தா, கரோனா நோயாளிகளைக் குணப்படுத்துவதில் அதிமுக்கிய பங்கு வகித்ததை எவரும் மறுக்க இயலாது. அதேபோன்று, இந்தியாவைக் கடந்து பிற நாடுகளிலும் அந்த மருத்துவம் வியாபித்துள்ளது[7]. அதை உலகெங்கும் முன்னெடுத்து செல்வது அவசியம். அதன் பொருட்டு, கால சூழலுக்குத் தக்கவாறு சில விஷயங்களை அதில் மேம்படுத்துவது அவசியம். குறிப்பாக, சித்த மருத்துவத்தில் ஆராய்ச்சி நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும். அதனுடன் அந்த மருத்துவ முறையை தரப்படுத்துதலும் இன்றியமையாத் தேவையாக உள்ளது. சித்தா்கள் அருளிய அந்த மருத்துவ முறையில் குறிப்பிட்டிருக்கும் மூலிகைகளின் அளவுகள், குணங்கள் தற்போது எவ்வாறு பயன்பாட்டில் உள்ளன என்பதை ஆராய வேண்டும். ஏனென்றால், பொதிகை மலையில் உள்ள மூலிகைகளின் குணத்துக்கும், அதே மூலிகைகள் வேறு மண் பரப்பில் வளரும் போது ஏற்படும் மாற்றத்துக்கும் வேறுபாடு உள்ளது. அவற்றை பகுப்பாய்ந்து நோய்களின் தன்மைக்கேற்ப சித்த மருத்துவத்தை மேம்படுத்துவதே தற்போதைய தலையாய தேவை ….,”. இவ்வாறு அவர் பேசினார்.

16-12-2022 அன்று முடிவடைந்தது: இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் கணேஷ் பேசியதாவது: “தற்போது, அரசு சித்தா டாக்டர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்கான தனி பல்கலை விரைவில் துவங்க உள்ளது. மேலும், 25 கோடி ரூபாய் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது,” இவ்வாறு அவர் பேசினார். ஆய்வு கட்டுரைகள் [சுருக்கம்] அடங்கிய புத்தகம் வெளியிடப் பட்டது.

  1. வரவேற்க்கப் பட்டவர்களின் கட்டுரைகள் -12
  2. வாய்வழி மற்றும் போஸ்டர் மூலம் விளக்கம் [சித்த மருத்துவர்கள்] – 50
  3. வாய்வழி மற்றும் போஸ்டர் மூலம் விளக்கம் [சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மற்றும் முதுகலை வகுப்பினர்] –  157
  4. வாய்வழி மற்றும் போஸ்டர் மூலம் விளக்கம் [இயற்கை விஞ்ஞானம்] – 13
  5. வாய்வழி மற்றும் போஸ்டர் மூலம் விளக்கம் [பட்டப் படிப்பினர்] – 450

இப்படி 607 ஆய்வுக்கட்டுரைகளின் சுருக்கம், 360 பக்கங்களில் அடக்கப் பட்டிருந்தன. ஒவ்வொரு கட்டுரையின் ஆசிரியர் ஒன்றிற்கும் மேலாக, ஏன் 2, 3, 4 என்று நீள்கிறது. பிறகு, இரண்டு என்றாலே 1200, மூன்று என்றால் 1800 என்று கணக்கு வருகிறது. பொறுமையாக அந்த சுருக்கங்களைப் படித்துப் பார்த்தால், 60% அரைத்த மாவையே அரைத்திருக்கிறார்கள். Introduction, aim, methodology, result, conclusion, keywords என்றெல்லாம் போட்டு கட்டுரை தயாரித்தாலும், அதில் செயற்கையான முறை தான் தெரிகிறதே தவிர, புதியதாக எதையும் வெளிப்படுத்துவதாகத் தெரியவில்லை. தமிழில் உள்ள சில கட்டுரைகளில் ஒன்றும் புதியதாக இல்லை. சோதனைக் கூடங்கள் மூலமாக நடத்தப் பட்ட மருத்துவ ஆய்வுகள் [clinical studies] என்று கூறிக் கொண்டாலும்ண் அத்தகைய முறைகள் கையாளப் பட்டதாகத் தெரியவில்லை. எந்திரத்தனமான, வழக்கமான மற்றும் சடங்குப் போன்ற முறையில் எழுதப் பட்ட தோற்றம் தான் புலப்படுகிறது. அந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 2022ல் வந்த செய்தியை கவனிக்க வேண்டியுள்ளது.

ஆகஸ்ட் 2022 – சென்னை சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் சென்னை ஐஐடி செய்து கொண்ட ஒப்பந்தம்: சித்த மருத்துவ முறையில் ஆராய்ச்சி மற்றும் உயர்கல்விக்கான சிறப்பு மையமாக  சென்னை சித்த மருத்துவ நிறுவனம் (என்.ஐ.எஸ்) விளங்குகிறது. அறிவியல் மற்றும் தொழிநுட்ப பாடப்பிரிவுகளில் முன்னணி நிறுவனமாக சென்னை ஐஐடி விளங்குகிறது. இந்நிலையில், சித்த மருத்துவம் கூட்டாண்மை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, என்.ஐ.எஸ். இயக்குநர் டாக்டர் ஆர்.மீனாகுமாரி தலைமையில் கையெழுத்தானது. இது தொடர்பாக, சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பில், “புதிய பாடத் திட்டங்களை கூட்டாக மேம்படுத்துதல், மருத்துவ ஆராய்ச்சி, மூலக்கூறு உயிரியல் மற்றும் ஆய்வக செல்வரிசை ஆராய்ச்சி, சுகாதார அமைப்பு ஆராய்ச்சி உள்ளிட்டவைகளை செயல்படுத்துதல், ஆசிரியர்களை பரிமாறிக் கொள்ளுதல் போன்றவற்றுக்கு இந்த கூட்டாண்மை உதவும்,” என்று தெரிவிக்கப்பட்டது[8].

சித்த மருத்துவத்தை ஆராய்ச்சிக்கு உட்படுத்துவது: இந்த கூட்டுமுயற்சியின் தாக்கம் குறித்து எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் காமகோடி,”இந்திய மருத்துவத்தில் சித்தா மிக முக்கிய புள்ளியாகும். சித்த மருந்துகளின் செயல்திறனை விளக்கும் அறிவியல் அடிப்படையை உருவாக்க இந்த கூட்டாண்மை கவனம் செலுத்தும்,” எனக் குறிப்பிட்டார்[9]. கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள், வெப்மினார்கள், மாநாடுகள், பாடத் திட்டங்களைத் தொடருதல் [தொடர் மருத்துவக் கல்வி (CME) உள்பட], கல்வித் திட்டங்களை உருவாக்குதல் ஆகிய பணிகளை இரு கல்வி நிறுவனங்களும் கூட்டாக மேற்கொள்ளும். கற்பித்தல் மற்றும் பயிற்சிக்காக மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், முதுநிலை ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்களை பரிமாறிக் கொள்ளவும் இக்கல்வி நிறுவனங்கள் ஊக்குவிக்கும் என்றும் கூறினார்.

சித்தமருத்துவ ஆராய்ச்சி இன்றியமையாதது: இவ்வாறு சென்னையிலேயே, சித்த மருத்துவம், சித்த மருத்துவமனை, என்றெல்லாம் மத்திய அரசு, மாநில அரசு, தனியார் நிர்வகித்து வருகின்ற நிலையுள்ளது. ஆனால், சித்த மருத்துவ சோதனை, சித்த மருத்துவ பரிசோதனை, சித்த மருத்துவ சோதனைக் கூடம், சித்த மருந்துகளை உபயோகித்து அதற்றின் நோய் தீர்க்கும் முறை கண்டறிதல், மெய்ப்பித்தல், போன்றவை நடத்தப் பட்டனவா, விலைவுகள் என்ன, முடிவுகள் என்ன, வெற்றி சதவீதம் என்ன போன்றவைப் பற்றி தெரியாமல் இருக்கின்றன. சர்வரோக நிவாரிணி ரீதியில் விளம்பரங்கள், யூ-டியூப் போன்றவற்றை வைத்துக் கொண்டு அதிரடி பேச்சுகள், கவர்ச்சிகரமான வாக்குறுதிகள், என்பவை இருக்கத் தான் செய்கின்றன. ஆகவே, அவை தொடர்ந்து நடக்க வேண்டும், ஆராய்ச்சிகளும் செயல்பட வேண்டும்.

© வேதபிரகாஷ்

16-12-2022.


[1] டி.என்.பி.எஸ்.சி, தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தேசிய சித்த மருத்துவ மாநாடு, TNPSCPortal.In, December 15, 2022.

https://www.tnpscportal.in/2022/12/blog-post_72.html

[2] தினமணி, தேசிய சித்த மருத்துவ மாநாடு இன்று தொடக்கம், By DIN  |   Published On : 15th December 2022 12:15 AM  |   Last Updated : 15th December 2022 12:15 AM.

[3]https://www.dinamani.com/tamilnadu/2022/dec/15/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3967052.html

[4] தினமலர், சித்த மருத்துவ ஆராய்ச்சி ரூ.25 கோடி ஒதுக்கீடு, Added : டிச 16, 2022  08:23.

[5] https://www.dinamalar.com/news_detail.asp?id=3195609

[6] தினமணி, சித்த மருத்துவ ஆராய்ச்சிகளை மேம்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன், By DIN  |   Published On : 16th December 2022 06:35 AM  |   Last Updated : 16th December 2022 06:35 AM

[7]https://www.dinamani.com/tamilnadu/2022/dec/16/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B7%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-3967837.html

[8] நியூஸ்.18.தமிழ், சித்த மருத்துவ ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் சென்னை ஐஐடி: சித்த மருத்துவ நிறுவனத்துடன் ஒப்பந்தம், NEWS18 TAMIL, LAST UPDATED : AUGUST 08, 2022, 14:21 IST

[9] https://tamil.news18.com/news/education/chennai-iit-is-partnering-with-chennai-national-institute-of-siddha-on-research-and-clinical-studies-781927.html

Posted in அறுத்தல், அறுவை சிகிச்சை, அறுவைசிகிச்சை, ஆபரேஷன், ஆயுர்வேதம், ஆயுள், ஆயுள்வேதம், உடல், உயிர், எலும்பியல், ஒத்தடம், கந்தகம், கரைசல், கற்பம், சர்க்கரைநோய், சிகிச்சை, சித்தம், சித்தர், சிந்தனை, சிராய்ப்பு, தீக்காயங்கள், நரம்பு, நாடி, நாட்டு மருத்துவம், நினைவு, நோய், பாரம்பரியம், பிணம், பித்தம், பித்து, மனச்சிதைவு, மனப்பாங்கு, மனம், மயக்கம், மூக்கு, மூச்சு, மூலம், மூளை, யோசனை, ரணச்சிகிச்சை, வர்மம், வைத்தியர் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

சென்னையில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம்,  சித்த மருத்துவ ஆராய்ச்சி, சித்த மருத்துவ மாநாடு முதலியன (1)

Posted by vedaprakash மேல் திசெம்பர் 16, 2022

சென்னையில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம்,  சித்த மருத்துவ ஆராய்ச்சி, சித்த மருத்துவ மாநாடு முதலியன (1)

சென்னையில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம்: மத்திய அரசு நிறுவனமான இது, இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள சென்னையின் தாம்பரம் பகுதியில் அமைந்துள்ளது. இது சித்த மருத்துவத்திற்கான அரசு மருத்துவ மனை மற்றும்ஆராய்ச்சி நிறுவனம். இங்கு சித்த மருத்துவத்துடன் தொடர்புடைய ஆய்வுகளை மேற்கொள்ளவும், சித்த மருத்துவத் துறையில் உயர்கல்வி கற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய மருத்துவத்தை ஊக்குவிக்கும் அரசின் ஏழு கல்வி நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகத் திகழ்கிறது. சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனத்தின் தலைமையகமும் இங்கு அமைந்துள்ளது. திராவிடத்துவ சித்தாந்திகள், எதை-எதையோ பேசுவார்கள், ஆனால், இத்தகைய பாரம்பரிய மருத்துவ முறைகளைக் கண்டுகொள்ளமாட்டார்கள்.

ஒரு நாளைக்கு 2,000 முதல் 2,500 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது: இந்திய மருத்துவத்தை ஊக்குவிக்கும் அரசின் ஏழு கல்வி நிறுவனங்களில் ஒன்றான இந்த மருத்துவமனை 14.78 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. நிசப்தம் நிலவும் மருத்துவமனை வளாகத்தில், 300 வகையான மூலிகைச் செடிகளையும் மரங்களையும் பார்க்கலாம். வெளிநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் துறை, கற்பித்தல் மற்றும் நிர்வாகத்துக்கென தனி தனி கட்டடங்களுடன் செயல்படுகிறது இந்த மருத்துவமனை. இங்கே சராசரியாக ஒரு நாளைக்கு 2,000 முதல் 2,500 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. வருடத்தில் 365 நாள்களும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை வெளி நோயாளிகளுக்கும், 24 மணி நேரமும் உள் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப் படுகிறது: வெளி நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகளுக்கு அந்தந்த நோய்களுக்கு ஏற்ப வர்மம், தொக்கணம், அட்டைவிடுதல், பற்று, ஒத்தடம், புகை, சுட்டிகை மற்றும் யோகம் ஆகிய சித்த மருத்துவமுறைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. சர்க்கரைநோய், இதயநோய், ஆஸ்துமா, மூலம், காயங்கள், சிராய்ப்பு, தீக்காயங்கள் போன்றவற்றுக்குச் சிறப்பாகச் சிகிச்சை அளிக்கிறார்கள். முதியோர் நலம், மகளிர் மருத்துவம், யோகம் – காயகல்பம், உடல் பருமன், ஒப்பனையியல், மகப்பேறின்மை, ஆட்டிசம் மற்றும் புற்றுநோய் போன்றவற்றுக்கும் சிகிச்சை அளிக்கிறார்கள்.

குழந்தைகள் நோய் பிரிவு: குழந்தைகளை பாதிக்கும் நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கும் பகுதியில், சரும நோய்கள், கரப்பான், சொறி சிரங்கு, பூச்சிக்கடியால் ஏற்படும் அலர்ஜி ஆகியவற்றுக்கு இங்கே சிகிச்சை அளிக்கிறார்கள். குழந்தைகளுக்கு ஏற்படும் பசியின்மை, மலச்சிக்கலுக்குச் சுக்கு, மிளகு போன்ற அஞ்சறைப் பெட்டி மருந்துகளை முறைப்படுத்தி, நோயின் நிலைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது. வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் ஓமத்தண்ணீர், மாதுளம்பழ சிரப் (syrup), தயிர்சுண்டி சூரணம் ஆகியவை குழந்தைகளின் உடல்நிலையை ஒரு நாளிலேயே சரிசெய்துவிடலாம் என்பது போன்ற எளிய முறைகளைச் சொல்லித் தருகின்றனர்.  மேலும், சில குழந்தைகளுக்குப் பிறக்கும்போதே இயற்கையாக ஏற்படும் மூளை வாதம், குழந்தையின் ஒரு பக்க உறுப்புகளின் செயல்பாடு குறைவாக இருப்பதால் உண்டாகும் பால வாதத்துக்கும் இங்கே சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆட்டிசம், ஹைப்பர்ஆக்டிவ் டிஸ்ஆர்டர், ஏ.டி.ஹெச்.டி (Attention Deficit Hyperactivity Disorder), கற்றல் கோளாறுகள் ஆகிய பிரச்னைகளுக்கும் இங்கே சிகிச்சை கொடுக்கிறார்கள். உடம்பில் முக்கியமான புள்ளிகளை அழுத்தி, மூளை அல்லது செயலிழந்த நரம்புகளை மீண்டும் செயல்படவைக்கும் வர்ம சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. அதோடு பிசியோதெரபியும் தரப்படுகிறது. சிதம்பரத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து கடந்த இரண்டரை மாதமாக சிகிச்சை பெற்றுவருகிறார். அவரிடம் குழந்தைக்கு என்ன பிரச்னை என்று விசாரித்தோம்… “முன்னாடில்லாம் பேச மாட்டான்; நடக்க மாட்டான். கை, கால் நேரா நிக்காது. இப்போ நல்லா நிக்குறான். சில வார்த்தைகளைப் பேசுறான். எவ்வளவு கூப்பிட்டாலும் ரெஸ்பான்ஸே பண்ணாம இருந்தவன், இப்போ ரியாக்‌ஷன் கொடுக்குறான்’’ என்றார்.

பெண்கள் தொடர்பான எல்லா நோய்களுகள், சிகிச்சை முதலியன: பெண்கள் தொடர்பான எல்லா நோய்களுக்கும் தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை, சூதகத்தடை (Absence of Menstruation), மாதவிடாயின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு (Menorrhagia) ஆகியவற்றுக்கும், `கர்ப்பப்பைக் கட்டி’ (Fibroid) எனப்படும் நார்த்திசுக் கட்டிப் பிரச்னைக்கும் சிகிச்சை… மாதவிடாய்க் காலங்களில் உண்டாகும் மனக்குழப்பங்களுக்கு நோயாளிக்குத் தேவையான கவுன்சலிங் (counselling) கொடுக்கிறார்கள். மகப்பேறின்மைக்காக ஆண்,பெண் இரு பாலருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை இதற்கெனச் சிறப்பு ஓ.பி (புறநோயாளிகள் பிரிவு) இயங்குகிறது. மார்பகங்களில் உண்டாகும் நீர்க்கட்டி, உடல் பருமன் ஆகியவற்றையும் கவனிக்கிறார்கள். பிரசவம் தவிர, கர்ப்பிணிகளுக்குத் தேவையான அனைத்துச் சிகிச்சைகளும், உதவிகளும் இங்கே வழங்கப்படுகின்றன.

பலவிதமானா நோய்கள், குறைபாடுகள் முதலியவற்றிற்கு சிகிச்சை: கழுத்துவலி, இடுப்புவலி, பக்கவாதம், தூக்கமின்மை, மனநிலை மாறுபாடுகள், தலைவலி ஆகியவற்றுக்கு வர்ம சிகிச்சை கொடுக்கிறார்கள். அங்கே வந்திருந்த 72 வயது ஜெயலட்சுமியிடம் பேசினோம்…”எனக்குப் பக்கவாதத்தால கை, கால் செயல்படாமப் போச்சு. ஆறு மாசமா சிகிச்சை எடுக்குறேன். இப்போ கொஞ்சம் பரவாயில்லை. தைலம், லேகியம், மாத்திரைனு நிறைய மருந்துகள் தர்றாங்க,’’ என்றார். எலும்பு பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எண்ணெய் தடவுதல் முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குழந்தைகள், வயதானவர்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும் முறிவு, அடிபடுவதால் ஏற்படும் முறிவு உள்ளிட்ட பல குறைபாடுகளுக்கும் தீர்வு கிடைக்கிறது.

அட்டை வைத்து சிகிச்சைலீச் தெராபி: ‘அட்டைவிடுதல்’ (leech therapy) பகுதி, பிரமிப்பை ஏற்படுத்துகிறது. `அட்டைவிடுதல்’ என்பது, உடலிலுள்ள அசுத்தமான ரத்தத்தை நீக்குவதற்கு அல்லது சுத்தப்படுத்துவதற்கு பாதிப்புக்குள்ளான இடத்தில் அட்டையைவிடும் முறை. அட்டையைக் குறிப்பிட்ட அந்த இடத்தில் கடிக்கவிட்டால், தேவையில்லாத ரத்தம் உறிஞ்சப்படும். காயம்பட்ட இடத்திலிருந்து அதிகபட்சமாக 120 மி.லி வரை ரத்தத்தை உறிஞ்சிவிடுமாம் அட்டை. ஒரு நோயாளிக்கு நான்கு அட்டைகளை கடிக்கவிடுகிறார்கள். `இந்த அட்டை கடிப்பதால் வலி இருக்காது; இதன் மூலம் கரப்பான், புழுவெட்டு, மூட்டு வீங்குதல், அடிபட்ட வீக்கம் போன்ற பாதிப்புகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது’ என்கிறார்கள். 

நவீன வசதிகளும் இங்கே இருக்கின்றன: பெளத்திரம் பிரச்னைக்கு, `கார நூல்’ எனப்படும் மருந்து நூலைக் கொண்டு சிகிச்சை அளிக்கிறார்கள். இந்த மருத்துவமனையில் எளிய ஆசனப் பயிற்சிகள், மூச்சுப்பயிற்சிகளும் கற்றுத்தரப்படுகின்றன. நோய்களுக்கு ஏற்ப யோகா கற்றுத் தரப்படுகிறது. ரத்த அழுத்தம், மன அழுத்தம், தூக்கமின்மை ஆகியவற்றுக்கு யோக மருத்துவச் சிகிச்சையும் தருகிறார்கள். சித்த மருத்துவ அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டாலும் இ.சி.ஜி, எக்ஸ்ரே, யு.எஸ்.ஜி (உயரிய ரத்த சோதனை), பயோ கெமிக்கல் டெஸ்ட் (Bio-chemical Test), நுண்ணுயிரியியல் சோதனை (Microbiological Test), நோய்க் குறியியல் சோதனை (Pathological Test), சித்தா நோய் கண்டறியும் சோதனை (Siddha diagnostic Test) மற்றும் மருந்தகம் (Pharmacology) ஆகிய நவீன வசதிகளும் இங்கே இருக்கின்றன[1]. மொத்தத்தில் எளியோர் முதற்கொண்டு எல்லோரும் பயனடையும் வகையில் சிறப்பாகச் செயல்படுகிறது இந்தச் சித்த மருத்துவமனை[2].

டிசம்பர் 2022ல் கோவாவில் 9வது உலக ஆயுர்வேத காங்கிரஸ்: இன்று கோவாவின் பனாஜியில் மத்திய சுற்றுலா மற்றும் கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் நீர்வழிப்பாதைகள் துறை இணை அமைச்சர் ஸ்ரீ பத் நாயக், முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த், ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்யா ராஜேஷ் கொடேச்சா ஆகியோர் முன்னிலையில் தொடங்கியது. 9வது உலக ஆயுர்வேத காங்கிரஸ், உலக அளவில் ஆயுஷ் மருத்துவ முறைகளின் செயல்திறன் மற்றும் வலிமையை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டில் ஆயுஷ் (ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி) துறையின் சந்தை அளவு 2014 இல் 3 பில்லியன் அமெரிக்க டாலர் என்பதிலிருந்து இப்போது 18 பில்லியன் அமெரிக்க டாலராக வளர்ந்துள்ளது. 2014-2020 ஆம் ஆண்டில், ஆயுஷ் தொழில்துறை ஆண்டுக்கு ஆண்டு 17 சதவீதம் வளர்ச்சியடைந்தது, அதே நேரத்தில் ஆயுர்வேத சந்தை 2021-2026 லிருந்து ஒட்டுமொத்த வருடாந்தர வளர்ச்சி 15 சதவிகிதம்  இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அனைத்து சித்த மருத்துவ நிறுவனங்களும் சேர்ந்து செயல்பட வேண்டும்: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முயற்சியால் ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஓமியோபதி (ஆயுஷ் – AYUSH) துறைகளில் புதிய பல கண்டுபிடிப்புகள் மேற்கொள்வதற்காக தேசிய சித்த மருத்துவம் மற்றும் சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அண்மையில் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சித்த மருத்துவம் குறித்து ஆயுஷ் சாரா மருத்துவர்களுக்கான ஒருங் கிணைந்த பயிற்சி முகாம் கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழக வளாகத்தில் நடந்தது. ஒருவாரம் நடைபெறும் பயிற்சி முகாம், அது குறித்த கையேடும் வெளியிடப் பட்டது.

© வேதபிரகாஷ்

16-12-2022.


[1] விகடன், பாரம்பர்ய சிகிச்சை, நவீன வசதிகள்தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனையில் ஒரு நாள்!, நான்சி மேரி, ஆர்.மகாலட்சுமி, Published:03 Jul 2018 5 PMUpdated:03 Jul 2018 5 PM

[2] https://www.vikatan.com/health/healthy/129633-traditional-treatment-modern-facilities-tambaram-national-siddha-hospital

Posted in அகத்தியர், அறுவை சிகிச்சை, அறுவைசிகிச்சை, ஆபரேஷன், ஆயுர்வேதம், ஆயுள், ஆயுள்வேதம், இந்திரியம், உடல், உயிர், எலும்பியல், ஒத்தடம், கண், கரைசல், கல்பம், காது, கை, சர்க்கரைநோய், சிகிச்சை, சித்தர், சிராய்ப்பு, தமிழ்நாடு, திராவிடம், திருமூலர், தீக்காயங்கள், நாத்திகம், பதஞ்சலி, பரம்பரை, பற்று, மருந்து, வர்மம் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

1450 BCEயிலிருந்து முகமதுநபி (570-632 CE) காலம்வரை அரேபியாவில் வாழ்ந்தவர்கள் யார்?

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 23, 2012

1450 BCEயிலிருந்து முகமதுநபி (570-632 CE) காலம்வரை அரேபியாவில் வாழ்ந்தவர்கள் யார்?

 

இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக இஸ்லாமிற்கு-முகமது நபிக்கு முன்னர் அரேபியாவில் வாழ்ந்தவர்கள் யார் என்ற கேள்வி எழுகின்றது. அக்காலத்தில் சுற்றிலும் இருந்த நாகரிகத்தவர் சிறந்திருந்ததால், அரேபிய மக்களும் சிறப்பான நாகரிகத்தைக் கொண்டிருக்க வேண்டும். அவர்களில் முனிவர், அறிஞர், சித்தர், ஞானியர் போன்றோர் இருந்திருக்கவேண்டும். மக்கள் ஆரோக்யம், உடல்நலம் விஷயங்களிலும் சிறந்திருக்க வேண்டும். அதற்கான மருத்துவமுறையும்  இருந்திருக்க வேண்டும்.  அப்படியிருக்கையில், இஸ்லாமிற்கு-முகமது நபிக்கு முன்பான அரேபிய சரித்திரம் இருட்டடிக்கப் பட்டுள்ளது. அம்மக்கள் இருண்ட காலத்தில், அறியாமையில், விக்கிர ஆராதனை போன்ற பாவச்செயல்களில் ஈடுபட்டிருந்தனர் என்றும் விவரிக்கப்படுகிறது. ஆனால், அவர்களின் மொழியான அரேபியமொழி இன்றைய முஸ்லீம்களுக்கு தேவமொழியாக இருக்கிறது. நபி பேசிய மற்றும் குரான் மொழி அரேபிய மொழிதான். பிறகு அத்தகைய தேவமொழியைப் பேசி வந்தவர்கள் எப்படி இருண்ட காலத்தில், அறியாமையில் மூழ்கியிருந்தார்கள் என்று தெரியவில்லை.

அரேபியாஎன்பதுஎன்ன?: ஜைனர்கள் பாரத்தத்தின் வடமேற்குப் பகுதி வழியாக வெளியே சென்றனர், கிரேக்கர் உள்ளே வந்தனர் எனும்போது, அரேபியாவிற்கும் அவ்வாறுதான் சென்றிருப்பர். முதலில் அரேபியா மற்றும் அரேபியர் என்பன என்னவென்று புரிந்து கொள்ளவேண்டும்[1], ஏனெனில் இஸ்லாமிற்கு – நபிக்கு (570-632 CE) முன்பான அரேபியர்களைப் பற்றிய முழு விவரங்களை சரித்திர ஆசிரியர்கள் முழுமையாகக் கொடுப்பதில்லை. அவற்றை நூறு-இருநூறு ஆண்டுகள் பழமையான புத்தகங்களினின்று பெறவேண்டியுள்ளது. ஜெஸிரத்-அல்-அரப் (Jezirat-al-arab) என்பவர்கள் அரேபியாவில் இருந்தவர்கள் என்றும், அவர்கள் இருந்த இடம் அரபிஸ்தான் (Arabistan) என்றும் பாரசீகர்கள் மற்றும் துருக்கியர்கள் குறிப்பிட்டு வந்தார்கள்[2]. “ஜெஸிரத்அல்அரப்” என்றால் “அரேபியரது தீவு” என்று பொருள். அதாவது முன்னர் அரேபியா தீவாக இருந்ததா அல்லது அரேபியர் மற்ற மக்களிடமிருந்து தனித்து இருந்தார்களா என்று தெரியவில்லை. பாரசீகர்கள் ஒரு “சத்ரப்பை”த் தொடங்கி அதற்கு “அராபியா” என்று பெயரிட்டனர்[3]. பாரசீக “சத்ரபி” என்ற சொல் “க்ஷத்ரபாவ” என்ற சமஸ்கிருத சொல்லினின்று உருவானது, க்ஷத்திரியர்கள் வாழும் / ஆட்சிசெய்யும் இடம் என்று பொருள். “அரேபியா” என்றால் சதுரமான இடம் என்று பொருள். அரேபிய மொழியில் “மக்பி” என்றால் கனச்சதுரம் மற்றும் “காபா” என்பது முஸ்லீம்கள் வழிபடும் இடமாகும். “அரப்” என்றால் “பதவியா / பெதுவியா” என்ற நாடோடிக் கூட்டத்தையும் குறிக்கும். யூதமொழியில் “இரப்” என்றல் பாலைவனம், அதாவது செமித்திய மொழியிலும் பாலைவனம் மற்றும் அங்குவாழும் மக்களைக் குறிக்கிறது ஆனால் எந்த மக்களினத்தையோ, நாட்டையோக் குறிக்கவில்லை[4].

அரேபியர்கள்எவ்வாறுஅடையாளங்காணப்பட்டனர்?: அரேபிய அகராதிகளில் அரபி (ஆண்பால் ஒருமை. அரபியா (பெண்பால் ஒருமை) மற்றும் அரப் (பலவின்பால்) என்று அரேபிய மக்களைக் குறிக்கின்றன:

  1. ஒருவனுடைய மொழி அல்லது பேச்சு அரேபிக் மொழியானது அல்லது தூய்மையான அரேபியமொழியானது.
  2. அஜீரணமாகி, வயற்று உபாதையினால் அவஸ்தைப் படுபவன்.
  3. யாரொருவன் குழம்பி அல்லது சிதைந்து போயுள்ளானோ அவன்.
  4. யாரொருவன் அரேபியர்களுடன் கலந்து ஐக்கியமாகியுள்ளானோ அவன்.

பிறகு “அரப்” என்பது “அஜப்” என்ற வார்த்தையோடு ஒப்பிடும்போது, “அரப்” என்பது “தெளிவாகப் பேசுவது” ஆனால் “அஜப்” என்றால் தெளிவில்லாமல் பேசுவது அல்லது மற்றவர்களுக்குப் புரியாதமாதிரி பேசுவது என்று பொருள் கொள்ளப்படுகிறது. உண்மையில் பாரசீகர் அரேபியரை குறைவாக மதிப்பிட்டபோது, பதிலுக்கு அரேபியர் பாரசீகர்களை “அஜப்” என்று கூறிக் கிண்டலடித்தனர். சமஸ்கிருதத்தில் “ரப்” என்பது “சத்தம், கூச்சல், இரைச்சல்” என்று பொருள். “ரவ்” என்பது “ரப்” என்றும் உச்சரிக்கப்படும், அல்+ரவ் அல்லது அல்+ரப் =அரவ் / அரப் என்றானது. அதனால்தான் சத்தம்போடுபவனை, கூச்சலிடுபவனை “அரவவாடு” என்று தெலுங்கர் அழைக்கின்றனர். மேலும் இப்பகுதியில் குதிரைகள் உள்ளன அல்லது குதிரைகள் வரவழைக்கப்படுகின்றன என்பதால் “அரவஸ்தான்” என்று அழைக்கப்பட்டது[5]. அரபிஸ்தான்-அரவஸ்தான்-அரவத்தான்-ராவுத்தன் என்று தமிழில் பெறப்படுகிறது. மாவுத்தன் யானைப்பாகன் என்றால் ராவுத்தன் குதிரையோட்டியாகிறான்[6]. அதாவது குதிரைகளை வாங்குபவன், விற்பவன், வளர்ப்பவன், பழக்குபவன் என்றுள்ளது.

அரேபியர்கள் யார்?: இதைத்தவிர, அரேபியாவில் வாழ்ந்த எல்லோரும் அரேபியர் என்றழைக்கப்பாட்டாலும், அரேபிய எழுத்தாளர்கள், அவர்களைப் பிரித்துக் காட்ட, கீழ்கண்டவாறு அழைத்தனர்:

  1. அல்அரப்அல்பைதா = காணாமல் போன அரேபியர், மறைந்து போன அல்லது சரித்திரகாலத்திற்கு முந்தைய அரேபியர், முதல் அல்லது உண்மையான அரேபியர்.
  2. அல்அரப்அல்அரிபா = உண்மையான அரேபியர் அதாவது தென்னரேபியாவில் வாழும் அரேபியர் அல்லது கஹ்தான் வழிவந்தவர்கள் (ஜோக்தான் என்று பைபிளில் சொல்லப்படுகிறது).
  3. அல்அரப்அல்மூதா‘அர்ரிபா = அரேபியர்களுடன் ஐக்கியமானவர்கள், அல்-முஸ்தா ‘ரிபா = அரேபியர்களை நாடுபவர்கள், அரேபியமயமாக்கப்பட்டவர்கள். மோஸ்தராபியர் அல்லது இஸ்மாயில் வழிவந்தவர்கள்.

ஆகவே அரேபியாவில் இருப்பவர்கள் எல்லோருமே “அரேபியர்” அல்லர். அதேபோல இஸ்லாம் தோன்றி வளர்ந்தபிறகு, அரேபியாவில் இருந்தவர்கள் முஸ்லீம்களாக மாறியப் பிறகுக் கூட அரேபியர் எல்லோருமே “முகமதியர்”, “முசல்மான்கள்”, “முஸ்லீம்கள்” ஆகிவிடவில்லை. இந்திய கல்வெட்டுகளில் “துருக்கர், துலுக்கர், துருக்ஸாஸ்” எனப்படுபவர் எல்லோரும் முகமதியரா அல்லது துருக்கியிலிருந்து வந்தவரா என்றும் ஆராயவேண்டியுள்ளது. இஸ்லாம் தோன்றுவதற்கு முந்தைய இருந்த அரேபியர் மற்றும் இஸ்லாம் தோன்றிய பின்னர் அரேபியர் அனைவரையும் “முகமதியர்” என்றோ “இஸ்லாமியர் / முஸ்லீம்கள்” என்றோ எழுதிவைப்பது பிற்கால முஸ்லீம் எழுத்தாளர்களுக்கு வழக்கமாகியது[7].

அரேபியர்கள் இந்தியர்கள் செய்வதை தலைகீழாக செய்பவர்களா?: வேதமதத்தினர்-இந்துக்கள் செய்வதை தலைக்கீழாக செய்பவர்கள் ஜைனர்கள்-பௌத்தர்கள்-முகமதியர்கள் என்ற வழக்கும் உள்ளது. முதலில் ஜைனர்கள்-பௌத்தர்கள் அவ்வாறு செய்தாலும், பிறகு, பொதுவான இந்திய கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் மற்றும் நாகரிக காரணிகளால் சேர்ந்தே வாழ்ந்தார்கள். ஆனால், முகமதியர் ஆரம்பத்திலிருந்தே, வேறுபட்டு தலைகீழாக செய்து வந்ததால் அவர்களை “அரவநாட்டவர்” என்றே அழைத்தனர். தெலுங்குக்காரர்களை “கொலுடி” என்று தமிழர்கள் கலாட்டா செய்வது வழக்கம். அதாவது தெலுகு என்பதனை திருப்பிப் போட்டு குலுதி-குலுடி-கொலுடி என்று கிண்டல் செய்தனர். இதனால், தெலுங்கர் தமிழர்களை “அரவர் / அரவவாடு” என்று சொல்வதுண்டு. அதவாது துலுக்கர்களைப் போல தலைகீழாகச் செய்பவர்கள் என்ற பொருட்பட கூறினர். இந்துக்கள் அழுதால், துலுக்கர் சிரிப்பர்; இந்துக்கள் சிரித்தால், துலுக்கர் அழுவர்; குழந்தை பிறந்தால் அழுவர், யாராவது இறந்தால் சிரிப்பர் என்றெல்லாம் சொல்வதுண்டு. மேலே பாரசீகர்-அரேபியர் ஒருவரையொருவர் எவ்வாறுக் கூறிக் கொள்வர் என்று எடுத்துக் காட்டப்பட்டது. அதுபோல, ஆயிரக்கணக்கான வருடங்களாக அரேபியாவில் இருந்து வரும் பழக்க-வழக்கங்களை முழுவதுமாக மாற்ற முடியாது என்பதனால், அவற்றை மாற்றியமைத்திருக்கலாம்.

சதுரமானகனச்சதுரமானஇடம்“சதுரகிரியா”அல்லதுகாபாவா?: காபாவைப் பொறுத்தவரையிலும், நிச்சயமாக அது முகமதியர்-முஸல்மான்-முஸ்லீம்களின் வழிபாட்டு ஸ்தலமல்ல. “காபத்துல்லா” என்றழைக்கப்பட்ட “இறைவன் உறையும் இடத்தில்” – வளகத்தில் நடுவில் ஒரு விக்கிரகம் இருந்தது, அதனைச் சுற்றி 360 விக்கிரங்கள் இருந்தன. அவை சதுரமாக அல்லது வட்டவடிவில் வைக்கப்பட்டிருந்தனவா என்று தெரியவில்லை. ஏனெனில், சித்திரங்கள் இருவிதமாகவும் சித்தரித்துக் காட்டுகின்றன. எப்படியாகிலும் வட்டத்தை-சதுரமாக, சதுரத்தை-வட்டமாக்கும் வித்தைகளை இந்தியர்கள் தாம் அறிந்திருந்ததால், குறிப்பாக மந்திர-தந்திர-யந்திர வித்தைகளில் ஈடுபட்டிருந்ததால், அவ்வளாகம் அவ்விதமாக அமைக்கப்பட்டிருந்தது என்றறியலாம். 64-யோகினி-ஜோகினி கோவில்கள், வளாகங்கள் அவ்விதமாகவே அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதனை இந்தியாவில் காணப்படும் உதாரணங்களினின்று அறிந்து கொள்ளலாம்.  காபாவின் தரைப்படம் மற்றும் இந்த யோகினி கோவில்களின் தரைப்படங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மையினைப் பார்த்தேத் தெரிந்து கொள்ளலாம். இதனால் தான், முகமதியர் இந்தியாவில் நுழைந்தபோது, நபி அழித்தவையெல்லாம் இங்குள்ளனவே என்று அவரைப் போலவே செய்யவேண்டும் என்றுதான், முகமத் கஜினி, முகமது கோரி முதலியோர் செய்தனர். அதாவது அத்தகைய கோவில்களை அழித்தனர், விக்கிரங்கள உடைத்தனர், புத்தகங்களை எரித்தனர். ஒரிஸ்ஸாவில் உள்ள 64-ஜோகினி கோவில் ஓரளவிற்கு புனர்நிர்மாணம் செய்யப்பட்டிருக்கும் போது, மத்தியப்பிரதேசத்தில் உள்ள 64-ஜோகினி கோவில் எந்த அளவிற்கு சேதப்படுத்தப் பட்டுள்ளது என்பதனை அச்சிற்பங்களை வைத்தே கண்ட் உ கொள்ளலாம். சோமனாதபுரம் அல்-லத் என்ற விக்கிரமாக இருக்கும் என்றுதான் 17 முறை வந்து விக்கிரகத்தை-சிவலிங்கத்தை உடைத்தழித்துச் சென்றான்.

நபிகள் விட்டு வைத்ததை நபிகளின் வழிவந்தவர்கள் சிதைத்தது ஏன்?: நடுவில் ஒரு சதுரம், அதில் பிரதான தேவதை-பெண் கடவுள், சுற்றி வட்டத்தில் 64 தேவதைகளின் விக்கிரங்கள், சிற்பங்கள் இருக்கும். இவையெல்லாமே வெவ்வேறான பெயர்களில் குறிப்பிடப்படும் சக்திகள் தாம். அதேபோல, காபாவில் 360 விக்கிரங்கள் இருந்ததை முகமதியர்களே ஒப்புக் கொண்டுள்ளனர். அல்-அஜர்கி என்பவர் மற்றப;அ விக்கிரங்கள், ஓவியங்கள் காபாவில் இருந்ததாகக் கூறியுள்ளார்[8]. அவற்றை நபி அழித்தாலும், நடுவில் இருந்ததை அங்குள்ள மக்களின் வேண்டுகோளின் மீது விட்டு வைத்தார். ஆனால், பின்வந்தவர்கள் அதனையும் விட்டு வைக்காமல் உடைத்ததாலும், ஏரித்ததாலும் அவ்விக்கிரகம் சிதைந்து உருமாறிவிட்டது. 930ல் மெக்காவிலிருந்து தூக்கிச் செல்லப் பட்ட அக்கல் அல்லது கற்பாகங்கள் 931ல் திரும்ப கொண்டு வந்து வைக்கப்பட்டது[9]. அதாவது அவர்கள் நபியைப் போலவே தாங்களும் அத்தகைய வேலையை செய்யவேண்டும் என்ற போக்கில், இருப்பதையும் அழிக்கத்துணிந்தனர், அவ்வாறே சிதைக்கவும் செய்தனர். அதனால்தான், அவ்விக்கிரகம்-அக்கல் வெள்ளை நிறத்தில் இருந்தது, கருப்பு நிறத்தில் இருந்தது, ஒன்றாக இருந்தது, மூன்று துண்டுகளாக இருந்தன, என்று பலவாறாக சித்திரங்களில் காணப்படுகின்றன. அதே போல அபிரஹாம் மற்றும் அவரது மகன் சிற்பங்கள் இருந்தன, ஆனால் அவற்றையும் உடைத்தார் அல்லது அபிரஹாம் விக்கிரத்தை மட்டும் விட்டு வைத்தார் என்று பலவாறுக் கூறப்படுகின்றன[10]. எது எப்படியாகிலும் இருந்த விக்கிரகங்கள் அழிக்கப்பட்டதால், சரித்திர ஆதாரங்கள் மறைந்து விட்டன என்றாகிறது.

© வேதபிரகாஷ்

22-09-2012


[1] அரேபியா-அரேபியர் பற்றிய விவரங்கள் கீழ்கண்ட கட்டுரையிலிருந்து பெறப்பட்டது:

K. V. Ramakrishna Rao, The Presence of Arabs in South India before and after the advent of Islam, a paper presented  at the sixth session of Tamilnadu History Congress held at Islamiah College, Vaniyambadi, from October 23 to 24, 1999. இக்கட்டுரை முன்பாகவே குரியர் மற்றும் மின்னஞ்சலில் அனுப்பட்டும், அதற்கான ஆதாரங்கள் இருந்தும், ஜனாப் சஹாப்புத்தீன் என்பவர் “ஆய்வுக் கட்டுரை பட்டியலில்” கூட இடம் பெறாமல் மறைக்கப் பார்த்தார். இருப்பினும், திரு. ராஜு தலைமையில் நடந்த அமைவில் திரு கோ. வே. இராமகிருட்டிண ராவ் படித்துள்ளளர்.

[2] Henri Stierlin, Great Civilizations: The Cultural History of the Arabs, Italy, 1981, p.10.

[3] M. TH. Houtsma, T.W.Arnold and Harmann (Eds.), E. J. Brill’s First Encyclopedi of Islam 1913-1936, Netherlands, 1987, Vol.I, p.367.

[4] Pihilp K. Hitti, History of Arabs, Macmillan, 1985, Hongkong, p.41.

[5] Col. Wilford, Asiatik Researches, Vol.III, p.326.

[6] இடைக்காலத்தில் அருணகிரிநாதர், முருகனை, “குதிரையேறும் ரரவுத்தனே” என்று விளித்துப் பாடியுள்ளார்.

[7] K. V. Ramakrishna Rao, The Presence of Arabs in South India before and after the advent of Islam, opt.cit.

S. M. Kamal, Muslimkalum, Tamizhagamum, Islamiya Ayvu Panpattu Maiyyam, Madras, 1990, p.22.

இவர் தமிழகத்தில் மூன்றாம் நூற்றாண்டிலேயே முஸ்லீம்கள் இருந்தார்கள் என்று எழுதுகியுள்ளார்!

[8] Oleg Graber, The Formation of Islamic art, Yale University, USA, 1973, pp.60-61. He gives the details about other objects, jewels etc., kept at Kaba till Mohammed destroyed them.

[9] Gerald de Gaury, Rulers of Meca, Roy Publishers New York, 1949, pp.109-110.

[10] De Lacy O’Leary, Arabia before Muhammed, Kegan Pauk, Lonon, 1927.

Posted in அப்ரோடைட், அரேபியா, அல்-அரப்-அல்-அரிபா, அல்-அரப்-அல்-பைதா, அல்-அரப்அல்-மூதா‘அர்ரிபா, ஆதிநாத, ஆத்மா, ஆனந்தம், ஆன்மா, ஆயுர்வேதம், ஆயுள், ஆயுள்வேதம், ஆரியன், ஆரியம், உஸ்பெகிஸ்தான், எபிகுயூரியன், ஓடந்தபூர், ஓலை, கத்தி, கம்பளி, காபாலிக, காபாலிகம், கிர்கிஸ்தான், சடங்குகள், சிகிச்சை, சிதர், சிதார், சித், சித்தகுரு, சித்தஜலம், சித்தஞானம், சித்தபுரி, சித்தம், சித்தயோகம், சித்தர், சித்தார்த், சித்து, சிந்து, சிந்து சமவெளி நாகரிகம், சீனா, சூபி, தஜிகிஸ்தான், தத்துவஞானிகள், தந்திரம், திகம்பர, திகம்பரம், திகம்பரர், திபெத், துர்க்மேனிஸ்தான், துறவி, நிர்வாணம், பாதரசம், பிண்டம், பித், யோகா | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

இஸ்லாமிற்கு–நபிக்கு (570-632 CE) முன்புஅரேபியாவில்இருந்தவர்கள் (சித்தர்களைத்தேடி)

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 23, 2012

இஸ்லாமிற்குநபிக்கு (570-632 CE) முன்புஅரேபியாவில்இருந்தவர்கள் (சித்தர்களைத்தேடி)

இந்தியசரித்திரத்தைப்புரட்டிஅல்லதுதவறாகஎழுதிமற்றநாட்டுசரித்திரங்களைஅறிந்துகொள்ளமுடியாது: கிரேக்கர்களுக்கு முன்பு (c.1800 – 327 BCE) – பின்பு (326 – 100 BCE) எப்படி இந்திய சரித்திரம், மேனாட்டவர்களால் புரட்டப்பட்டதோ, அதாவது இந்திய சரித்திர உண்மைகளைத் திரித்து மேனாட்டவர்கள் தங்களுக்கு சாதகமாக சரித்திரத்தை எழுதிகொண்டார்களோ, அதேபோல, அரேபியர்களுக்கு முன்பு (100- 712 CE) -பின்பு (712 – 1707 CE) என்றும் இந்திய சரித்திரம் புரட்டப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது[1]. முஹமது நபிக்கு (570-632 CE) முன்பிருந்த அரேபிய சரித்திரத்தை மறைத்து உண்மைகளை அறியமுடியாது. இந்தியாவிற்கும், அரேபியாவிற்கு அல்லது அரபிஸ்தானத்திற்கும் உள்ள தொடர்பை அறிந்தால் தான் ஆன்மீகரீதியில், மருத்துவரீதியில், விஞ்ஞானரீதியில் உண்மைகளை அறியமுடியும். அரேபியாவில் இருந்த சித்தர்களை அறியவேண்டுமானால், இஸ்லாம் பிறப்பதற்கு முந்தியுள்ள – இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செல்ல வேண்டியிருக்கிறது.

கிரேக்கமருத்துவர்களால்அலெக்சாந்தரைஏன்காப்பாற்றமுடியவில்லை?: இந்தியாவின் சரித்திரமே 327-326 BCEலிருந்துதான் ஆரம்பிக்கிறது, அதுதான் இந்திய சரித்திரத்தின் உறுதியான, தீர்மானிக்கப்பட்ட ஆரம்பகாலம் என்றனர்[2]. ஆனால் 327-326 BCE என்பது அலெக்சாந்தர் பாரதத்தின்மீது படையெடுத்துத் தோற்று, கிரேக்கத்திற்கு திரும்பச் செல்லாமலே வழியிலேயே 323 BCEல் பாபிலோனியாவில் இறந்து போன காலத்தைக் குறிக்கிறது[3]. அதாவது ஈட்டிக் குத்தி காயப்பட்டு, ரத்தப்பெருக்கு ஏற்பட்ட அலெக்சாந்தரை, தலைசிறந்த கிரேக்க மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவன் 10 நிர்வாண சாமியார்களைப் பிடித்தபோது, ஒரு சாமியார் பூமியின்மீது தனது காலை உதைத்து சைகை செய்தபோது, அவர் என்ன செய்கிறார் என்று கேட்டபோது, அவனது கிரேக்க அறிவுரையாளர்கள்[4], “நீங்கள் மண்ணோடு மண்ணாகி விடுவாய்”, என்று உருவகமாகக் கூறுவதாக விளக்கம் அளித்தபோது, கோபம் கொண்டு அவர்களைக் கொன்றுவிடுவதாக கிரேக்கக் கதைகள் கூறுகின்றன[5]. அதாவது இந்தியத் துறவிகளை அந்த அளவிற்குத் துன்புறுத்தியுள்ளான். ஞானத்தை அறியவேண்டுமானால், ஞானிகளிடம் பணிவாக இருந்து கற்றுக் கொள்ளவேண்டும். அதிகாரத்தினால், ஆணவத்தினால், பனத்தினால் ஞானத்தைப் பெறமுடியாது. அவற்றால் வசதிகளைப் பெருக்கிக் கொள்ளலாம். ஆனால், சீக்கிரமாகவே அத்தகைய வசதிகள் அழிவிற்கு எடுத்துச் செல்கின்றன.

சுமார் 1450 BCEயில்அரேபியாவிற்குவடமேற்கில்வேதமதம்இருந்தது: சித்தர்களைத் தேடும் முயற்சியில், கிரேக்கத்திற்குப் பிறகு அரேபியாவிலும் தேடவேண்டியுள்ளது. கிரேக்கத்திற்கும் இந்தியாவிற்கும் தரைவழியாக போக்குவரத்து துருக்கி, மெசபடோமியா (இராக்), பாரசீகம் (இரான்), காந்தாரம் (ஆப்கானிஸ்தான்), சிந்து (பலுச்சிஸ்தான், பாகிஸ்தான்) முதலிய நாடுகளின் வழியாக இருந்து வந்தது. துருக்கி-மெசபடோமியா பகுதிகளுக்குக் கீழ் அரேபியா-அரேபியதீபகற்பம் உள்ளது. அங்குள்ள மக்களும் அங்கிருக்கும் சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கேற்ப தங்களது வாழ்க்கையினை தவமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்திருப்பர். போகோஸ்காய் (Bogazkoi, Turkey) என்ற இடத்தில் கிடைத்த கல்வெட்டு ஒன்று, மிட்டானிய (Mittanians) மற்றும் ஹிட்டைட் (Hittites) மக்கள் “இந்திரசீல்மித்ரசீல்வருணசீல்நசாத்யா” என்ற கடவுளர்களை தமக்குள் ஏற்பட்ட ஒரு உடன்படிக்கைக்கு சாட்சிகளாக இருக்குமாறு விளித்ததாகக் கூறப்பட்டுள்ளது. இவர்கள் மற்ற கடவுளர்களான தேஷுப் (Teshup) மற்றும் ஹெபா (Hepa) என்கின்றவர்களையும் சேர்த்து வேண்டுகிறார்கள்[6]. அதாவது அக்காலத்தில், அந்த இடத்தில் அத்தகைய சமரசம் மிட்டடனிய-ஹிட்டை மக்களிடம் இருந்துள்ளது. இக்கல்வெட்டு சுமார் 1450 BCE காலத்தைச் சேர்ந்தது என்று அகழ்வாய்வு நிபுணர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். அக்கடவுளர்கள் இந்திரன், மித்திரன், வருணன், அஸ்வினி தேவர்கள் ஆவர். அஸ்வினி தேவர்கள் மருத்துவத்தின் தேவதைகளாகக் கருதப்படுகின்றனர்.

அரேபியாவின்வடக்கில்இரானில்இருந்தமக்கள் (சுமார். 2500-2000 BCE): இதைத்தவிர, இந்ததஸு, இந்தபீபி, இந்தத்து, ஹிந்தியன், எனபல் பெயர்கள் இப்பழமையான நாகரிகங்களில், அரசர்களுக்கு, படைத்தளபதிகளுக்கு, நதிகளுக்கு, இடங்களுக்கு உபயோகப்படுத்தியுள்ளனர்[7]:

  1. இந்ததஸு/இந்தாஸு – ஊர்- III காலத்தைச் சேர்ந்த அரசன்[8].
  2. ஷிருக்-து, இந்தாஸு வரையில் வெற்றிக் கொள்ள விரும்பினான்[9].
  3. ஷாமஸ்-ஷும்-உகின் என்ற அரசனை இந்த்பீபி என்ற தளபதி வென்றான்[10].
  4. ஷுதுர்-நஹுந்தே, இந்தததாவின் மைந்தன்[11].
  5. இந்தத்து – இஷின் என்ற நநட்டின் அரசன்[12].
  6. ஹிந்தியன்– மெசபடோமியயவில் பபயும் ஐந்து நதிகளில் ஒன்று, இதன் மறுபெயர் ஜுரேஹ்[13].
  7. ஹிந்தாரு – சர்கோன் என்பவன், கம்புலு மக்களின் இடங்களை வென்றான். அவற்றுள் ஒரு இடத்தின்பெயர்[14].

எனவே, அரேபியாவிற்கு வடக்கில் அத்தகைய வேதமதத்தைப் பின்பற்றுபவர்கள் அல்லது வேதமதக் கடவுளர்களை அறிந்தவர்கள் அக்காலக்கட்டத்தில் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. இது ஜைனர்கள் அப்பகுதிகளில் சென்ற தேதியை ஒத்துள்ளது.

அரேபியாவின்வடக்கிழக்கில்சுமார் 3000 BCEல்மருந்துமூலத்திரவியத்தொகுப்பு (Phamacopoeia): சுமேரிய நாகரிகத்தை ஆய்ந்தவர்கள், சுமார் 3000 BCEல் முதல் மருந்துமூலத் திரவியத் தொகுப்பு (Phamacopoeia) உண்டாக்கப்பட்டது, என்கிறார்கள்[15].  ஆனால், சிந்துசமவெளி மருத்துவத்தைப் பற்றி அடக்கி வாசிக்கிறர்கள். கேட்டால் அவர்கள் சரித்திர-ககலத்திற்கு முந்தையவர்கள் என்கிறார்கள்[16]. கியூனிபாம் எழுத்துகளின் (Cuniform tablet) மண்பலகைகள் கிடைத்திலிருந்து, அவற்றைப் படித்து, அவர்கள் இவ்வாறு எடுத்துக் காட்டியுள்ளனர். அவை முழுமையாக இல்லாததினால், முழுவிவரங்களை பெறமுடியவில்லை என்றும் ஒப்புக் கொள்கிறார்கள். இருப்பினும், அம்மருத்துவத்தின் தேவதை பௌ (Bau), நினிசின்னா (Ninisinna) மற்றும் குலா (Gula) என்று அழைக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். அம்மருந்து தயாரிப்பில் உபயோகப்படும் ரசாயனப் பொருட்கள் – உப்பு (Sodium Chloride), வெடியுப்பு (Salt peter – Poataasium nitrate).  மற்றவையெல்லாம் மூலிகைகள், மரப்பட்டைகள், மரப்பிசின்கள் முதலியன. பொட்டாசியம் நைட்ரேட் பெறும் முறை எகிப்தியர் மற்றும் இந்தியர்களுக்குத் தெரியும் என்று அவர்களே எடுத்துக் காட்டுகிறார்கள்[17]. அப்படியென்றால், சிந்துசமவெளி மருத்துவத்திற்குண்டான மருந்துமூலத் திரவியத் தொகுப்பு (Phamacopoeia) இருந்ததா, இல்லை காணாமல் போயிற்றா, இல்லை கண்டெடுக்கப்பட்டும் மறைக்கப் பட்டதா?

மேற்கே எழுத-படிக்கத் தெரிந்த ஆரியர்கள் பாரத்ததிற்கு வந்ததும் படிக்கத்தெரியாமல் போய்விட்டார்களா? மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று விஷயங்களை ஆராயவேண்டியுள்ளது.

  1. சுமார் 1450 BCEயில் அரேபியாவிற்கு வடக்கில் வேதமதம் இருந்தது.
  2. இரானில் இருந்த மக்கள் (சுமார். 2500-2000 BCE)
  3. சுமார் 3000 BCEல் மருந்துமூலத் திரவியத் தொகுப்பு (Phamacopoeia)

அரேபியாவின் வடகிழக்குப் பகுதியில் சுமார் 1450 BCEயில் வேதமதம் இருந்து, சுமார். 2500-2000 BCEல் அவர்கள் பெயர்கள் மட்டும் இருந்து, சுமார் 3000 BCEல் முதல் மருந்துமூலத் திரவியத் தொகுப்பு (Phamacopoeia) உருவாகிறது எனும்போது, அதிலுள்ள காலக்கணக்கியல் உறுத்துகிறது, உதைக்கிறது மற்றும் முரண்பபடாகத் தோன்ருகிறது. ஏனெனில், ஆரியர்கள், இந்தோ-ஆரியர்கள் போன்றோர், மேற்கிலிருந்து, கிழக்கில் வந்து இந்தியாவில் புகுந்தனர் என்றால், அத்தேதிகள் எப்படி 1450 BCE – சுமார். 2500-2000 BCE – சுமார் 3000 BCE என்றிருக்கும்? இந்தியாவில் நுழைந்த ஆரியர்களின் காலம் 1500-1000 BCEல் வைக்கப்படுகிறது. அப்படியென்றால், அக்காலக்கணக்கீடு BCE – சுமார் 3000 BCE – சுமார். 2500-2000 – 1450 BCE என்றுதான் இருக்கவேண்டும் அப்பொழுது இந்தியாவில் நுழைந்த காலம் 1500-1000 BCEயுடன் ஒத்துப்போகின்றது. இல்லையென்றால், ஆரியர்கள் இந்தியயவிலிருந்து வெளியே சென்றிருக்க வேண்டும். அப்படியென்றால் அவர்களின் காலம் சுமார் 3000 BCEற்கு முன்பாக இருந்திருக்க வேண்டும். அதாவது, கிழக்கில் படிக்கத் தெரியாதவர்களாக இருந்து, மேற்கே செல்ல-செல்ல அவர்களுக்கு படிப்பறிவு வருகிறது என்றால், அது எந்த சித்து வேலை என்று தெரியவில்லை. இதே முறைதான், அலெக்சாந்தர் இந்தியாவின் மீது படையெடுத்தான் என்ற கதையிலும் வருகிறது.

எந்த மக்களின் நநகரிகம் தொடர்ந்து “வாழ்ந்து வரும் நாகரிகமாக” இருக்க முடியும்?: மக்களின் நீண்ட ஆயுள்காலம், ஆரோக்கியம், வளமான வாழ்வு, முதலியவைதாம் ஒரு நாகரிகம் எத்தகைய தாக்குதல்களில் சிக்குண்டாலும், எதிர்த்து மறையாமல் தொடர்ந்து வாழ்ந்துக் கொண்டிருக்கின்ற நாகரிகமாக இருக்க முடியும். அப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நாகரிகம் இந்திய நாகரிகம் தான்[18]. இந்தியாவைவிட உயர்ந்தவை, இந்தியா அவற்றிடமிருந்து காப்பியடித்து, அவர்களிடமிருந்து கடன் வாங்கிக் கொண்டு சிறந்தது என்ற் மேனாட்டவர் பெருமை பேசி, இந்தியாவை சிறுமைப் படுத்தி வந்தாலும், அந்நாகரிகங்கள் ஏன் அப்படி இருந்த இடம் தெரியாமல் அழிந்து விட்டன என்று அவர்கள் விளக்குவதில்லை. ஆகவே, மேனனட்டவர்கள் எப்படி சரித்திரத்தைப் புரட்டியிருக்கிறார்கள்-தலைகீழாக்கியிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம். அரேபியர்கள் முகபதியர்கள் ஆனவுடன், அதேபோல பழைய பழக்க-வழக்கங்களை மமர்ரியமைத்திருக்கிறார்கள்.

பாலியல், ரசவாதம், ஆயுள்நீட்டிப்பு: கிரேக்கமதம் இந்துமதத்தை ஒத்திருந்தாலும், ஜைனர்களால் அது பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு, உருமாற ஆரம்பித்தது. பைதாகோரஸ் போன்றோர் உண்மையான ஞானம் போன்றவற்றில் ஈடுபட்டாலும், மற்ற கிரேக்க சாமியார்கள் பலவித முறைகளைக் கையாண்டார்கள்.

  • எபிகுயூரியன் (342-270 BCE) என்பவரின் போதனைகள் வாழ்க்கை வாழ்வதற்கே, சந்தோஷத்திற்கே, அனுவவி ராஜா அனுபவி போன்ற கொள்கைகளில் (Hedonism[19]) இருந்தது.
  • சிம்போஸியத்தில் கிரேக்கர்கள் நிர்வாணமாகப் பங்கு கொண்டார்கள் என்று மேலே எடுத்துக் காட்டப்பட்டது.
  • 4 நுற்றாண்டில் BCE பெண்-நிர்வாணமும் மறுக்கப்படவில்லை.
  • ஓரினப்புணர்ச்சி கிரேக்கர்களிடத்தில் அதிகமாகவே இருந்தது. சோடோமி (Sodomy) என்பது ஆண்களுக்கிடையிலுள்ள ஓரினப்புணர்ச்சி[20].
  • இதைத்தவிர ஆணுமில்லை-பெண்ணுமில்லை என்றுள்ள அப்ரோடைட் (Aphrodite) என்பவர்களும் இருந்தார்கள்[21]. ஆண்களுக்கு பெண்களின் உறுப்புகளும், பெண்களுக்கு ஆண்களின் உருப்புகளும் உள்ள மனிதர்கள் அப்ரோடைட் எனப்பட்டார்கள்.
  • ஹெர்மாபுரோடிடோஸ் அல்லது ஹெர்மாபுரோடிடஸ் (Hermaphroditos or Hermaphroditus) ஹெர்மாபுரோடைட்டுகளின் ஆண்-தேவதை. இவன் ஹெர்மிஸ் (Hermes) மற்றும் அப்ரோடைட் (Aphrodite) என்பவர்களுக்குப் பிறந்தவன். எரோட்டுகள் (Erotes) என்ற தேவதைகளுள் சேர்க்கப்பட்டுள்ளான்.
  • பெரும்பாலான காமம், கொக்கோகம், பாலியல் முதலியவாற்றில் உபயோகப்படுத்தப்படும் சொற்கள் கிரேக்கத்திலிருந்துதான் பெறப்பட்டுள்ளன – ஈராஸ் = Eros (Love), ஆசை / காமம் (Himeros =Desire), பெருங்காமம் (Pothos =Passion), காமவெறி (Voluptas = sez-raged.
  • வீனஸ் என்ற தேவத்தையிலிருந்து பெறப்படும் இச்சொற்கள் காதல், உடலுறவு, பாலியல், பாலியல் நோய்கள், மருந்துகள் முதலியவற்றிற்கு உபயோகப்படுத்தப் படுகின்றன[22].
  • அரிஸ்டாடில் ஆலிவ் எண்ணையை கர்ப்பத்தைத் தடுக்கும் களிம்பாக உபயோகப்படுத்தலாம் என்று 4 BCEயில் கூறினார்.
  • ஹெர்மிஸ் (Hermes) என்பவன் தான் ரகசிய சித்தாந்தங்கள், ரசவாதம் முதலியவற்றிற்கு தேவன்[23]. அதாவது கிரேக்கர்களைப் பொறுத்தவரைக்கும், காமம் ரசவாதத்துடன் இணைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
  • ஓவிட் (Ovid) மற்றும் லூசியன் (Lucian) போன்றோரது கொக்கோக-காமக்களியாட்ட இலக்கியங்கள், அவர்களது கிரக்கத்தின் உச்சத்தைக் காட்டுகின்றன.
  • இதைத்தவிர பாலியல், உடலுறவு செய்முறை நூல்களும் பெருகின[24].

மேலே குறிப்பிட்ட ஒன்றொன்றிற்கும் அக்கால சிற்பங்கள், ஓவியங்கள், உலோக விக்கிரங்கள் முதலியவை உலக பிரசித்தி பெற்ற கலைக்கூடங்களில், அருங்காட்சியகங்களில் உள்ளன. கிரேக்கர்களைப் பின்பற்றி வந்த ரோமானியர்களில் இவ்விஷயங்களில் சளைத்தர்கள் அல்லர்[25]. அதிக உடலுறவு கொண்டால், ஆயுள் பெருகும்; அதிக பெண்களிடம் உடலுறவு கொண்டால் ஆயுள் பெருகும்;  கன்னிகளுடன் உடலுறவு கொண்டால், ஆயுள் பெருகும், என்று தவறான பல கருத்துகள் உருவானதால், அத்தகைய தீய இலக்கியங்கள் உருவாகின, சமூகமும் சீரழிந்தது. கிரேக்க ரசவாதம் இப்படி பாலியில் உருமாறி, உருக்குலைந்ததற்குக் காரணம் அவர்கள் ஜைனர்களின் முறைகளை துஷ்பிரயோகம் செய்தது தான். இதனால் மந்திர-தந்திர-யந்திர போன்ற சடங்குகள் அங்கும் கடைபிடிக்கப்பட்டன என்று தெரிகிறது. ஆனால், அவை பாலிய ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதால் பலவித பாலியல் திரிபுகள் ஏற்பட்டன.

வெள்ளையாடைஅணிந்தமற்றசாமியார்கள் / சந்நியாசிகள்: வெள்ளையாடையை அணிந்த எஸ்ஸென்ஸ் (Essences), ஞாஸ்டிக் (Gnostic), மணிக்கியர் (Manichaeans) போன்றோர் பிரமச்சரியம், ஒழுங்கு, கட்டுப்பாடு முதலிவற்றைப் பின்பற்றினர். பின்னர் வந்த மணி (216-276 CE) என்பவரோ, இல்வாழ்க்கை வேண்டாம், திருமணம் வேண்டாம் என்றெல்லாம் போதித்தார். இங்கு முக்கியமான விஷயம் என்னவென்றால், மணி பாரசீகத்தில் துறவரம் கடைப்பிடித்த ஆசாரமான யூதகுடும்பத்தில் பிறந்தவர். பன்னிரெண்டு வயதில் ஞானம் பெற்று, போதிக்க ஆரம்பித்தார். கிழக்கில் பாரதம் வரையில் வந்ததாகச் சொல்லப்படுகிறது. பிறகு மத்திய ஆசியா சென்று மெடபடோமியா, சிரியா, இஸ்ரேல் வழியாக அலெக்சாந்திரியாவிற்கு வந்தார். ஆனால் இவரது போதனைகள் ஒவ்வாததனால், அங்கிருந்த பஹ்ரம் – I (Bahram – I 273-276) இவரை 276ல் தூக்கிலிட்டான். இருப்பினும், மணியுடைய பிரமச்சரியக் கொள்கைகள் மேற்கில் எகிப்து, ரோம், இங்கிலாந்து மற்றும் கிழக்கில் சைனா வரை பரவியது[26].

300-500 காலத்தில் இதன் தாக்கம் இருந்தது. கிரேக்க-ஜைனர்களில் அளவிற்கு மீறிய பாலியல் தீமைகள், கொடுமைகள் மற்றும் குற்றங்கள், இவற்றை எதிர்த்து, திருத்தத்தான், இம்மதம் மக்களிடம் வேகமாகப் பரவியது எனலாம். இதேபோல ஞாஸ்திக மதத்தின் (Gnosticism) தாக்கமும் அதிகமாகவே இருந்தது. இதன் மூலங்களை மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரியாது அல்லது ஒருக்கின்ற யூதமதத்திலிருந்துதான் தோன்றியது என்று வாதிட்டாலும், ஜைனர்களின் தாக்கத்தைக் காணமுடிகிறது. அதாவது, 1450 BCEல் இருந்த வேதமதத்தை மறந்துவிட முடியாது.

அரேபியாவியாவைச்சுற்றியிருந்தவேதமதம்: அரேபியைச் சுற்றியிருந்த வேதமதம் அரேபியாவிற்குள் நுழையவில்லை என்றாகாது. இஸ்லாம் வரும்வரை அங்கிருந்த மக்கள் அநாகரிகமாக, பாகன்களைப் போலிருந்தார்கள் (Pagans, Barbarians) என்று சொல்வது சரித்திரப் பொய்யாகும். 1450 BCEலிருந்து 650 CE வரை அப்படியே இருந்தார்கள் என்றால், அது எவ்வளவு பெரிய பொய் என்பதனையும் அறிந்து கொள்ளலாம்.

மேலேயுள்ள வரைப்படத்திலிருந்து சுமார் 1400 BCE காலத்தில் கானான், அமுறு, நுஹாஷே, மிட்டானி, ஹஸ்ஸுக்கன்னி, அசூர் (அசீரியா), தூர்-குரிகள்ஜு, கேசைட் (பாபிலோனியா) முதலிய மக்கள், அரேபியாவின் வடமேற்கு-வடக்கு-வடகிழக்குப் பகுதிகளில் வாழ்ந்தனர். மேற்குறிப்பிட்ட பகுதிகள் இப்பொழுது, இஸ்ரேல், ஜோர்டன், லெபனான், சிரியா, இராக், இரான் என்ற நாடுகளாக உள்ளன. அவர்களது சிற்பங்களை பார்த்தால், அவை பாரதநாட்டவருடையது என்று எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது[27]. அவ்விடங்களின் பெயர்கள் – ஏயில்காயா, நிஸந்தா, அம்பர்லிகாயா, புயுக்காயா, ஹத்துஸா, போகாஜ்கோய் என்றுள்ளன. ஆகவே, அரேபியர் தனித்து வேறு நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு கொண்ட மக்களாக இருந்திருக்க முடியாது. அரேபியாவில் கிடைத்துள்ள அகழ்வாய்வுப் பொருட்கள், சிற்பங்கள், பாத்திரங்கள் முதலியனவும் மேற்குறிப்பிட்ட மக்களின் நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாட்டுக் காரணிகளுடன் ஒத்துப் போகின்றன. ஆகவே, அங்கு சக்தி-சிவன், சிவ-சக்தி, மும்மூர்த்தி, மூன்றுதேவதைகள் முதலியவர்களின் வழிபாடு இருந்துள்ளது வியப்பாக இல்லை.

இடைப்பட்ட நூற்றாண்டுகளில் இப்பகுதிகளில் யூதம், கிருத்துவம் மற்றும் முகமதியம் ஒவ்வொன்றாக வளர்ந்து வரும் போது பழைய நாகரிகங்கள் அழிந்தன அல்லது அழிக்கப்பட்டன. 670 BCEல் அசீரியர் எகிப்தை வென்றனர்.  356-323 BCE காலத்தில் எகிப்தை அலெக்சாந்தர் வென்று, தனது தளபதி டாலமியை அரசனாக்கினான். 30 CE காலத்தில் ரோமர்களால், கிரேக்கம் மற்றும் எகிப்து ஆக்கிரமிக்கப்பட்டன. இப்படி அம்மக்கள் ஒருவருக்குள் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டதால், பாபிலோனியர் (Babylonians), அசீரியர் (Assyrians), சால்டியர் (Chaldeans), அராமியர் (Araamaeans), போனீஷியர் (Phoenecians), முதலியோரது நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு முதலியன அம்மக்களோடு மறைந்து வெறும் கதைகளாகி விட்டன. இருப்பினும், அங்கிருக்கும் மக்கள் சில பழைய சடங்குகள், சம்பிரதாயங்கள், விழாக்கள் முதலியற்ரைத் தொடர்ந்து நடத்திவருவதால், அவற்றிலிருந்து அந்த பழைய கூறுகளை அறிந்து கொள்ள முடிகிறது.

© வேதபிரகாஷ்

21-09-2012


[1] வின்சென்ட் ஸ்மித், ஜான் பிளீட் போன்றோர்அலெக்சாந்தர் பாரத்தத்தின்மீது படையெடுத்த 327-326 BCE காலத்திலிருந்து தான் இந்திய சரித்திரம் ஆரம்பிக்கிறது, அதற்கு முன்னர் இந்தியாவிற்கு சரித்திரமே இல்லை என்ற அடிப்படையில் எழுதி வைத்த சரித்திரத்தைத் தான், இப்பொழுதும் இந்தியர்கள் இப்பொழுதும் படித்துக் கொண்டிருக்கின்றனர். அலெக்சாந்தர் காலத்தில் பாரத்தை ஆண்டது குப்தர் வம்சத்தின் சந்திரகுப்தர் இல்லை, மௌரியர் வம்சத்தின் சந்திரகுப்தர் என்று திரித்ததால் 1200 வருட இந்திய சரித்திரம் சுருக்கப்பட்டது. இதனால் தான் இந்திய சரித்திரத்தில் பல புதிர்கள் உண்டாயின. புரிந்து கொள்ளாதோர் புதிய விளக்கங்கள் கொடுத்து, உள்ள சரித்திரத்தையே புரட்டிவிட்டு, அதற்கும் ஒரு முறையை உண்டாக்கி குழப்பியுள்ளனர்.

[2] The British history writers arbitaratily declared that “The Alexander’s invasion is is the sheet anchor of Indian history”, without any authority.

[3] K. V. Ramakrishna Rao, The Myth, Romance and Historicity of Alexander and their Influence on India, www.hinduwebsite.com

[4] Arrian.viii, 1.5 ff.

[5] McCrindle, The Invasion of India by Alexander the Great as described by Arrian, Quitus Curtius, Diodorus, Plutarch and Justin, London, 1896.

[6] George Roux, Ancient Iraq, Penguin Books, U.K, 1980, p.218.

[7] D. T. Potts, The Archaeology of Elam – Formation and Transformaton of an Ancient Indian Iranian state, Cambridge University Press, UK, 1999, p.

[8] Indassu – name of an ensi of Zabshali in the Ur III eriod, p.168.

[9] Shiruk-tuh wanted to conquer upto Indassu, p.141.

[10] Indabibi – name of a general who overthrown Shamash-shum-ukin, p.282

[11] Shutur-Nahhunte, son of Indada, p.303.

[12] Indattu – king of Isin, p.148.

[13] Hindian – one of the five rivers flowing in Mesopotomia, otherwise mentioned as Zuhreh, p.15.

[14] Hindaru – a place conquered by Sargon, of the Gambulu tribe.

[15] Samuel Noah Kramer, History Begins at Sumer – Thirty-Nine Firsts in Man’s Recorded History, University of Pennsylvania Press, Phladelphia, USA, 1981, pp.60-64.

[16] இப்பொழுது புரோட்டோ ஹிஸ்டரி (Protohistory) என்ற சொல்லை உபயோகித்ததலும், மனங்களில் பிரி-ஹிஸ்டரி (pre-history) என்ற கருத்தை வைத்துக் கொண்டுதான் படிப்பறிவு இல்லாத ஹரப்பன்கள் (Illiterate Harappans) என்று அந்த மேனனட்டு அறிவுஜீவிகள் கூறிவருகின்றன. நமது திராவிட கூட்டங்களும் அடிவருடிக் கொண்டு, பட்டங்கள் கொடுத்து பபராட்டு விழா எடுத்துக் கொண்டிருக்கின்றன.

[17] Samuel Noah Kramer, History Begins at Sumer – Thirty-Nine Firsts in Man’s Recorded History, University of Pennsylvania Press, Phladelphia, USA, 1981, pp.62-63

[18] சீன நாகரிகமும் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த இரு நாகரிகங்கள் தாம் தொடர்ந்து இருந்து வருகின்றன, மற்றவை மறைந்து விட்டன.

[19] Hedone was the spirit (daimona) of pleasure, enjoyment and delight. As a daughter of Eros (Love) she was associated more specifically with sensual pleasure. Her opposite numbers were the Algea (Pains). The Romans named her Voluptas.

[20] Sodomy, sodomites inhabitants of Sodom. Male homosex.

[21] Hermaphroditism = human being having both man and animal characteristic, nymph Solmacts

[22] Aphrodite = Aphrodiastic venereal, drug producing venereal disease,

Aphrodiasiac, aphrodisios, aphrodite = derived from Venus, the goddess of love etc.

[23] Hermes = author of mysterious doctrines, ecrets of alchemy

[24] Twleve Arts of the Actions of Love, Ovid’s Arts Amatoria etc are covered under “Classical literature”.

[25] David Mountfield, Greek and Roman Erotica, Miller Graphics, Italy, 1982.

[26] Richard Foltz, Religions of the Silk Road, St. Martin’s Press, New York 1999.

[27] கூகுள் தேடலில் – Yazilkaya, Nisantas, Ambarlikaya, Mihraplikaya, Büyükkaya, Hattusha, Boğazköy – என்ற வார்த்தைகளை தட்டெச்சு செய்தால் அச்சிற்பங்களைப் பார்க்கலாம்.

Posted in அப்ரோடைட், அரேபியா, ஆகாயம், ஆன்மா, ஆயுர்வேதம், ஆயுள், ஆயுள்வேதம், ஆரியன், ஆரியம், இந்தியவிரோதிகள், இந்தியா, உடல், உயிர், உஸ்பெகிஸ்தான், எபிகுயூரியன், கஜகிஸ்தான், கண், கத்தி, கனிமம், கம்பளி, கருத்து, கரைசல், கற்பம், கலாச்சாரம், கல்பம், காபாலிக, காமாக்கியா, காயம், காற்று, கிர்கிஸ்தான், கை, சக்தி, சடங்குகள், சட்டைமுனி, சம்பிரதாயங்கள், சஹஜயான, சிகிச்சை, சிதர், சிதார், சித், சித்தகுரு, சித்தஜலம், சித்தஞானம், சித்தபுரம், சித்தபுரி, சித்தபுருஷன், சித்தப்பிரமை, சித்தம், சித்தயோகம், சித்தர், சித்தர் பாடல்கள், சித்தார்த், சித்து, சிந்து, சிந்து சமவெளி நாகரிகம், சீனா, சுத்தம், சூபி, சைனா, சைவம், ஞானம், ஞானி, தந்திரம், திகம்பர, திகம்பரம், திகம்பரர், துர்க்மேனிஸ்தான், துறந்தவர், துறவி, நாகரிகம், நாட்டு மருத்துவம், நாத்திகம், நிம்மதி, நிர்வாணம், நீர், நுண்ணிய அறிவு, பகுத்தறிவு, பஞ்சபூதங்கள், பதினென் சித்தர்கள், பரம்பரை வைத்தியர், பாதரசம், பாரதம், பாரம்பரியம், பாலியல், பித்து, போகோஸ்காய், மத்திய ஆசியா, மந்திரம், மனச்சிதைவு, மனம், மருந்து, முஹம்மது கஜினி, யோகா, விழாக்கள், வேதம், ஹெர்மாபுரோடிடோஸ், ஹெர்மிஸ் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

பௌத்த-திபெத்திய சித்தர் பட்டியலிலிருந்து திராவிட சித்தர்களின் பட்டியல் பெறப்பட்டதா?

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 15, 2012

பௌத்த-திபெத்திய சித்தர் பட்டியலிலிருந்து திராவிட சித்தர்களின் பட்டியல் பெறப்பட்டதா?

பௌத்த பல்கலைக்கழகங்கள் தாக்கப்பட்டதால் பௌத்த சித்தர்கள் மற்ற நாடுகளுக்குச் சென்றது: பௌத்தமத்தத்தில் வஜ்ரயான தந்த்ர போதனைகளைப் பரப்புவதில் தீவிரமாக இருந்தவர்கள் சித்தர்கள் என்றழைக்கப்பட்டனர். இந்தியாவில் அவர்கள் ஏழாவது நூற்றாண்டிலிருந்து 11ம் நூற்றாண்டு வரை சிறந்திருந்தனர்[1].  முகமதியப் படையெடுப்புகளினால் தக்ஷசிலா (Dhakshasila), நாலாந்தா (Nalanda), விக்ரமசிலா (Vikramasila), ஓடந்தபூர் (Odantapur) போன்ற மிக்கப்பெரிய பல்கலைக்கழகங்கள் / மஹாவிஸ்வவித்யாலயங்கள் முதலியவை தாக்கி அழிக்கப்பட்டதால், பேராசிசியர்கள், மாணவர்கள், மருத்துவர்கள், ஞானிகள் முதலியோர் தப்பியோட வேண்டியதாயிற்று. அவர்கள் நாலாப்பக்கங்களிலும் சிதறியோடினர். இதனால் தந்தரமுறைகள் அந்தந்த நாடுகளில் பரவியது[2]. வைரோச்சன என்பவர் பௌத்த தந்திரிகமுறையைத் தோற்றுவித்தவர். குலாச்சார, வாமாசார, சஹஜயான, வஜ்ரயானப் பிரிவுகள் அந்நாடுகளில் பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டன. ஒவ்வொரு ஆண்தேவதைக்கும், ராகினி, லாகினி, சாகினி, ஹாகினி, குபுஜீகா போன்ற பெண்தேவதையும் சேர்க்கப்பட்டது[3].

நாடுகளில் பரவியது

வைரோச்சனின் பெயர் / மாற்றம்

விளக்கம்

மஹாயான பௌத்தம் தியானி புத்தா சிவன் புத்தனைப்போல சித்தரித்துள்ளார்கள். அதனால், ஒரு புத்தருக்குப் பதிலாக ஐந்து புத்தர்கள், ஐந்துதிசைகளில் (சிவனின் ஐந்து முகங்கள் போல) உள்ளனர். பிறகு சக்தியையும் சேர்த்துள்ளனர். ஒன்று மூன்றாகி, ஐந்தாகி, எழாகி, ஒன்பதாகி விட்டன. எட்டு, 84 என்றாகியதைப் போல சித்திகள் சக்திகளுடன் இணைத்து, முறைகளும் புகுத்தப்பட்டன.
நேபாளம் ஆதிபுத்தா
சீனா வஜ்ரசத்வா,நாகார்ஜுனா, வஜ்ரபோதி, அமோகவவஜ்ர
ஜப்பான் வஜ்ரசத்வா, நாகார்ஜுனா, வஜ்ரபோதி, அமோகவவஜ்ர
ஜாவா முதலிய தென்கிழக்காசிய நாடுகள்

எண்பத்து நான்கு பௌத்த சித்தர்கள்: 84 சித்தர்கள் இருந்தார்கள் என்று 1506 ஆண்டு தேதியிட்ட மைதிலி மொழியில் எழுதப்பட்டுள்ள ஒரு ஆவணம் – “வர்ணரத்னாகர” என்ற நூல் – பட்டியலிட்டுக் காட்டுகிறது. ஆனால் 76 பெயர்கள் மட்டும்தான் காணப்படுகிறது[4].

  1. மீனநாத
  2. கோரக்கநாத
  3. சௌரங்கிநாத
  4. சாமரிநாத
  5. தந்திபா
  6. ஹாலிபா
  7. கேதாரிபா
  8. தோங்கபா
  9. தாரிபா
  10. விருபா
  11. கபாலி
  12. கமாரி
  13. காண்ஹ
  14. கனஹல
  15. மேகல
  16. உன்மன
  17. காந்தலி
  18. தோவி
  19. ஜாலந்தரா
  1.   தோங்கி
  2. மவஹா
  3. நாகார்ஜுனா
  4. தௌளி
  5. பிஷாலா
  6. அசிதி
  7. சம்பக
  8. தேந்தச
  9. பூம்பாரி
  10. பாகலி
  11. துஜி
  12. சர்பதி
  13. பாடே
  14. சாந்தனா
  15. காமரி
  16. கரவத்
  17. தர்மபாபதங்க
  18. பத்ரா
  19. பாதலிபத்
  1. பலிஹிஹ
  2. பானு
  3. மீன
  4. நிர்தய
  5. சவர
  6. சாந்தி
  7. பாரதிஹரி
  8. பிஷண
  9. படி
  10. கங்கப
  11. கமார
  12. மேனுரா
  13. குமார
  14. ஜீவன
  15. அகோசாதவ
  16. கிரிவர
  17. சியாரி
  18. நாகவலி
  19. பிபவத்
  1.  சாரங்க
  2. விவிகதஜா
  3. மகரதஜ
  4. அசித
  5. பிசித
  6. நேசக
  7. சாதல
  8. நாசன
  9. பிலோ
  10. பாஹல
  11. பாசல
  12. கமலகங்காரி
  13. சிபில
  14. கோவிந்த
  15. பீம
  16. பைரவ
  17. பத்ர
  18. பமரி
  19. புருக

திபெத்திய பாரம்பரியப்படி எண்பத்து நான்கு பௌத்த சித்தர்கள்: திபெத்திய பாரம்பரியத்தில் 84-சித்தர்களின் பெயர்கள் (சதுரசிதிஸ்சித்தர்), “சதுரசிதி-சித்த-பிரவுருத்தி” என்ற நூலில் காணப்படுகிறது, விளக்கம் இவ்வாறுள்ளன. அபயதத்தர் (சுமார். 1100 CE) என்பவர் இந்த விவரங்களைக் கொடுத்துள்ளார்[5]. இந்த ஓலைசுவடிப் புத்தகத்தில் அழகான சித்தர்களின் வண்ணப்படங்களும் உள்ளன[6]. இங்கு “ப” என்பதனை “பாத” என்று வாசிக்க வேண்டும். அஜிந்தபாதன், அஜோகிபாதன், சம்பகபாதன், சௌரங்கிபாதன் என்று பெயர்கள் வரும், அவற்றிலிருந்து அப்பெயர்களின் பொருளை அறிந்து கொள்ளலாம்.

எண் பெயர் பொருள் விளக்கம்
1 அசிந்த / அசிந்தப பேராசைக் கொண்ட துறவி விறகுவெட்டி, விறகு வியாபாரம்
2 அஜோகி /அயோஜிப ஒதுக்கப்பட்ட பிரயோகமில்லாதவன் பிணமாக நடித்தவன்
3 அனங்கப/அனங்க/அனங்கவஜ்ர அழகான முட்டாள் சுந்தரானந்தர் / குதம்பைச் சித்தர்?
4 ஆர்யதேவ/ஒருகண்ணையுடைவர் நாகார்ஜுனரின் சீடர் மஹாசித்தர்களில் ஒருவர்
5 பபஹ சுற்றித் திரியும் காதலன்
6 பத்ரப ஜம்பப் பேர்வழி தனியான பிராமணன்
7 பண்டேப பொறாமைப்படும் கடவுள்
8 பிக்ஷனப இரண்டு பற்கள் கொண்ட சித்தன்
9 புஸுகு/புஸுகுபாத சோம்பேரி சந்நியாசி ஜடம்-ஒருவேலையும் செய்யாதவன்
10 சமரிப தெய்வீக சக்கிலியன்
11 சம்பக/சம்பகபாத மலர்களுக்கு அரசன்
12 சர்பரிப/சர்பதி மக்களைக் கல்லாக்கியவன் கல்லாக்குபவன்; கல்லுளி சித்தர்?
13 சத்ரப ராசியுள்ள பிச்சைக்காரன் அதிருஷ்டம் உள்ளவன்
14 சௌரங்கிப அங்கஹீனன் கை-கால்கள் இல்லாதவன்
15 சேலுகப மறுபடியும் வீர்யம் பெற்றக் கொக்கு கொங்கணவன்
16 தரிகப கோவில் விபச்சாரியின் அடிமை அரசன்
17 தேன்கிப பிராமண அடிமை
18 தௌலிப முற்கள் கொண்ட கயிறு திரிப்பவன்
19 தர்மப என்றைக்கும் மாணவன்
20 திலீப சந்தோஷமான வியாபாரி சுகவான்; தேரையர்?
21 தோபின அறிவுள்ள வண்ணான்
22 தோகரிப பாத்திரங்களை சுமப்பவன்
23 தோம்பி ஹெருக புலி சவாரி செய்பவன் புலிப்பாணி?
24 துக்காண்டி பெருக்குபவன், சுத்தம் செய்பவன்
25 கண்டப பிரமச்சரியத்தைக் கடைபிடிக்கும் துறவி மணியடிக்கும் துறவி
26 கர்பரி/கர்பரிப துக்கமளிக்கும் பண்டிதன்
27 கோதுரிப/கோரூர பறவைப் பிடிப்பவன்
28 கோரக்ஷ / கோரக்கநாத நிரந்தரமாக மாடு மேய்ப்பவன் பசுக்களைக் காப்பவன் – இவர் கோரக்கரக்கவும் அல்லது திருமூலராகவும் கொள்ளலாம்.
29 இந்திரபூதி திலோபனின் குரு எந்திரியங்களை வென்றவன்
30 ஜலதார தகிணி என்பவரின் சேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவன் நீரைப்போன்று வேகமாமக செல்லக்கூடியவன்/ ஓடுபவன்
31 ஜெயந்தர காக்கையின் ஆசிரியர் காகபுசசுண்டர்?
32 ஜோகிப சித்தப் பிரயாணி அலைந்து-திரிந்து கொண்டிருப்பவன்
33 கலப அழகான பைத்தியம் சுந்தரானந்தர்?/ குதம்பைச் சித்தர்?
34 கம்பரிப கொல்லன் இரும்பு முதலிய உலோகவேலை செய்பவன்
35 கம்பள கருப்புக் கம்பள யோகி கருப்புக் கம்பளம் போர்த்தியவன்; சட்டைமுனி?
36 கணக்கல முண்டமாமன இரு சகோதரிகளின் இளைய சகோதரன் ஏழுதலையுள்ள சகோதரிகளின் இளைய சகோதரன்
37 கண்ஹ / கணப கருப்புத் தோலன் கருப்பு சித்தர்
38 கங்கண சித்தராஜ சித்தர்களுக்கு அரசன்
39 கங்கரிப காதல் பித்தம் கொண்ட விதவை
40 கந்தாலிப குப்பைப் பொறுக்குபவன் கந்தை தையல்காரன்
41 கபலப கபாலம் கொண்டவன் காபாலிகன்
42 கட்கப திருட்டுராஜா பயமில்லாதத்ன் திருடன்
43 கிலகிலப தள்ளிவைக்கப்பட்ட லொடலொட வாயன் வீண்பேச்சாளிடமரானந்தர் / பிண்ணாகீசர்?
44 கிரபலப வென்று துக்கப்படுபவன்
45 கோகிலப நிம்மதியான ஓவியன் கலைஞானி
46 கோடலிப விவசாயியான குரு  
47 குசிப கழுத்துவீங்கிய யோகி  
48 குக்கிரிப நாய் விரும்பி தத்தாரேயர்?
49 கும்பாரிப பானையன் / பானை செய்வோன் அகத்தியர்?
50 லக்ஷ்மீன்கர பைத்தியமான இளவரசன்
51 லிலப ராஜீய சுகவாசி என்றும் இன்பம் துய்ப்பவன்
52 லுசிகப தப்பித்துக் கொள்பவன் பொறுப்பற்றவன்
53 லுயிப மீன்-குப்பையைத் தின்பவன் மச்சேந்திரர் / மச்சமுனி?
54 மஜிப மிகப்பெரியவன்
55 மணிபத்ர மாதிரி மனைவி இவள்தான் மனைவி என்று போற்றப்படுபவள்
56 மெதினி களைத்த விவசாயி
57 மேகல முண்டமான இரு சகோதரிகளில் மூத்தவள் ஏழு சகோதரிகளில் மூத்தவள்
58 மெகோப முழிக்கும் குரு கண்ணிமைக்காத சித்தன்
59 மீனப மீன் பிடிப்பவன் மச்சேந்திரர் / மச்சமுனி?
60 நாகபோதி சிவப்புக் கொம்புத் திருடன் ஆரியதேவ /  ஒற்றைக்கொம்பன்
61 நாகார்ஜுன யோகி
62 கலினப சுதந்திர இளவரசன் யார் மீதும் ஆதாரமாக இல்லாதவன்
63 நரோப
64 நிர்குணப அறிவான முட்டாள்
65 பச்சரிப மாமிசம் சமைப்பவன் புலத்தியர்?
66 பங்கஜப தாமரையில் பிறந்த பிராமணன் பிரம்மா, கமலமுனி?
67 புதலிப மருந்து பாத்திரம் சுமப்பவன் தன்வந்திரி?
68 ராஹுல இளமைப் பெற்ற பழைய முட்டாள்
69 சரஹ அம்பு செய்பவன்
70 சகர கடலில் செல்பவன்? டமரானந்தர்?
71 சமுதர முத்தெடுப்பவன்
72 சாந்திப மிக்கப்படித்தவன்/அறிவுஜீவி அமைதியான பிரச்சாரி
73 சர்வபக்ஷ வெற்று வயிரன் நன்றாக சாப்பிடுபவன்
74 சவரிப வேட்டைக்காரன்
75 சாலிப நரி யோகி
76 தந்தேப சூதாடி
77 தந்திப முதுமைப் பெற்ற நெசவாளி
78 தகநப தேர்ந்தெடுத்தப் பொய்யன்
79 திலோப
80 உடிலிப பறக்கும் சித்தர் பறவை-மனிதன்டமரானந்தர்?
81 உபான செருப்புத் தைப்பவன்
82 வினப சங்கீதம் விரும்பி பாட்டுப்பாடுபவன்
83 விருப
84 வியலப அரசாங்க ரசவாதி யூகிமுனி?

இந்த பௌத்த சித்தர்களின் கதைகளைப் படித்தால், அவை அப்படியே நமது சித்தர்களின் கதைகளைப் போலவே இருக்கின்றன. நிச்சயமாக இக்கதைகளைப் படித்தறிந்தவர்கள், அவற்றை தமிழகத்திற்கு ஏற்றவாறு, சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து அதற்கேற்றாவாறு மாற்றியிருக்கிறார்கள். பௌத்த-திபெத்திய பாரம்பரியங்களில் 16ம் நூற்றாண்டு ஆவணத்தில் அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பௌத்த மஹாசித்தர்கள்: ஹடயோகப்ரதீபிகா[7] என்ற 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த நூல் 32 மஹாசித்தர்களின் பெயர்களைக் கொடுக்கிறது[8].

  1. ஆதிநாத
  2. மச்சேந்திர
  3. சாவர
  4. ஆனந்தபைரவ
  5. சௌரங்கி
  6. மீனநாத
  7. கோரக்கநாத
  8. விருபாக்ஷ
  1. பிலேசயா
  2. மந்தான
  3. பைரவ
  4. சித்திபுத்த
  5. கந்தடி
  6. கோராம்தக
  7. சுரானந்த
  8. சித்தபாத
  1. சர்பதி
  2. கானேரி
  3. பூஜ்யபாத
  4. நித்யானந்த
  5. நிரஞ்சன
  6. கபாலி
  7. பிந்துநாத
  8. காகசண்டீஸ்வர
  1. அல்லாம
  2. பிரபுதேவ
  3. கோட
  4. சோலி
  5. திமிந்தி
  6. பானுகி
  7. நாரதேவ
  8. கண்டகாபாலிக

அதாவது 84 சித்தர்களில் இந்த 32 சித்தர்கள் அவ்வாறு “மஹா சித்தர்க்ள்” என்று தேர்ந்தெடுத்துள்ளனர். ஒருவேளை நம்மாட்கள் இதனைப் பார்க்கவில்லையோ என்னமோ? ஒருவேளை, 14 பேர்களை விடுத்து, 18 பேர்களைத் தேர்ந்தெடுத்தனரோ என்னமோ? இல்லை ஜைனர்கள் எப்படி “மஹாசித்தர்கள்” என்று தீர்த்தர்ங்களையும் குறைத்துக் கொண்டார்களோ அவ்வாறிருக்கலாம். பௌத்தம் பொருத்த வரையில், தாந்திரீகத்தை பின்பற்றி சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள். பௌத்த சித்தர்கள் அனைவரும் தாந்தீர்கர்களே.

பௌத்த நூல்களைப் பின்பற்றி “திராவிட சித்தர்கள்” கதைகள் உருவானது: பொதுவாக ஜைன-பௌத்த நூல்கள் எல்லாமே சமஸ்கிருத நூல்களினின்று பெற்றப்பட்டவைதாம். ஜைனம் மற்றும் பௌத்தம் வேதங்களின் நிலைநிறுத்தப்பட்ட விஷயங்களை ஏற்றுக் கொண்டு, பெருமான்மையான மக்களின் நம்பிக்கைகளையும் தகவமைத்துக் கொண்டு உருவாக்கப்பட்ட மதங்கள் தாம்[9]. பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு, கர்மா, பாவம், புண்ணியம், ஆன்மா / ஆத்மா முதலி எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டன[10]. எப்படி வேதங்களப் படித்து, அதற்கு எதிராக சில தர்க்கநூல்களை உருவாக்கினார்களோ, அதேபோல இதிகாச-புராணங்களுக்கு மாறாகவும் தயாரித்தார்கள் என்று முன்னமே எடுத்துக் காட்டப்பட்டது. “கதா சரித் சாகர” போன்ற கதைகளில் சித்தர்கள் ஏதோ மந்திர-தந்திரங்களில் வல்லவர்கள் போன்று சித்தரிக்கப் பட்டனர். அதேபோல ஆரியர்களை உருவாக்கி, அவர்களுக்கு எதிராக திராவிடர்களை தயாரித்தவர்களே, ஜைன-சித்தர்கள், பௌத்த-சித்தர்கள் போல, திராவிட-சித்தர்களை உருவாக்கியிருக்கின்றனர். கொடுத்துள்ள பெயர்கள், விளக்கம் முதலியவற்றைப் படிக்கும்போதே, தெரிவது என்னவென்றால், நிச்சயமாக இதைப்படித்து, 19-20ம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் புதியதான “திராவிட சித்தர்களை” உருவாக்கியிருக்கிறார்கள் என்பதுதான். மேலும் யாரை சேர்ப்பது-விடுப்பது என்று குழம்பி, பட்டியலை உருவாக்கினதால், “பதினெண் சித்தர்” பட்டியலும் குழம்பிவிட்டது. அகத்தியர் பெயரில் உள்ள நூல்களைப் படித்து, இவற்றையும் படித்தால், எப்படி இக்கதைகளைக் காப்பியடித்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

ஆங்கிலேயர் ஆதரவுடன் அல்லது உத்தரவுடன் தமிழ் பண்டிதர்கள் உருவாக்கியுள்ளனர்: ஆங்கிலேயர் மற்றும் ஐரோப்பிய மிஷனரிகள் சேர்ந்து வேலை செய்து வந்துள்ளதால், ராபர்டோ டி நொபிலி, சீசன்பால்கு, பெஸ்கி போன்றவர்கள், தமிழ் பண்டிதர்களின் உதவியுடன், அத்தகைய சித்தர் பாடல்களை உருவாக்கியிருக்கலாம். சீசன்பால்கு கணபதி உபாத்யாயாவை மிரட்டி தமிழ் கற்றுக் கொண்டான், நூல்களையும் எழுதவைத்தான் மற்றும் அவரது சாவதற்கும் காரணமாக இருந்தான். ராபர்டோ டி நொபிலி “ஆத்தும நிர்ணயம்”, “புனர் ஜென்ம ஆக்ஷேபம்”, “அக்கியாண நிவாரணம்”, திவ்விய மாதிரிகை, ஞான சஞ்சீவி, அண்ட பிண்ட வியாக்கியானம், உலக பிராமண சாஸ்திரம், பரமசுமாக்ஷபிபிராயம் போன்ற நூல்களை எப்படி தமிழ் பண்டிதர்களை விலைக்கு வாங்கி எழுத வைத்தார்களோ அதேபோலத்தான் எழுதப்பட்டன[11]. ஐரோப்பியர்கள் ஓலைச்சுவடி புத்தகங்கள் எல்லாவற்றையும் சேகரித்து எடுத்துச் சென்றிருப்பதால், மேலும் பலவற்றிற்கு மூலப்பிரதிகளை எடுத்து, காகித நகல்களை வைத்துச் சென்றுள்ளதால், நிச்சயமாக அவர்கள் இந்த வேலையை செய்திருக்க வேண்டும்.  உலக மகாயுத்தங்களுக்குப் பிறகு, ஐரோப்பிய ஆட்சியாளர்கள் தத்தமது காலனிய நாடுகளினின்று வெளியேற வேண்டும் என்று தெரிந்தபோது, அங்கங்கு இத்தகைய போலி ஆவணங்களை, கட்டுக்கதைகளை, புரட்டு சரித்திரங்களை உற்பத்தி செய்து வைத்துவிட்டனர். மேலும் 19ம் நூற்றாண்டில் இந்திய மருத்துவமுறைகளுக்கு எதிராக ஆங்கிலேயர் அதிக அளவில் அடக்குமுறைகளைமேற்கொண்டு வந்தனர். உள்ள மருத்துவமுறைகளை “நாட்டு மருந்துவம்” (Native medicine), “காட்டு மருந்துவம்” (Tribal medicine), “கிராம மருந்துவம்” (village / folk medicine), “அநாகரிக மருத்துவம்” (Uncivilized / crude medicinal practices), “பில்லி-சூன்ய மருத்துவம்” (Shamanism / Witchcraft), “போலி மருத்துவம்” (Pseudo-medicine), “பேய்-பிசாசுகளை ஓட்டும் முறை” (Exorcism) என்றெல்லாம், பழித்துப்பேசி, இகழ்வாக எழுதி, எதிர்த்துச் சட்டங்களை இயற்றித் தடையும் செய்தனர்.

© வேதபிரகாஷ்

15-09-2012


[1] Anagarika Govinda, Tantric Buddhism, in P. V. Bapat (Gen.editor), 2500 Years of Buddhism, Publication Division, Government of India, New Delhi, 1997, p.315.

[2] Radhakamal Mukerjee, The March of Tantrika art over the Pacific, in Studies in Asian History, pp.289-296.

[3] Probodh Chandra Bagchi, Studies in the Tantras, Part-I, University of Calcutta, 1975, see under the chapter “On Foreign element in the Tantra”, pp.45-55.

[4] A list of eighty-four Siddhas (though, actually only 76 names are mentioned) is found in a manuscript (manuscript no 48/34 of the Asiatic Society of Bengal) dated Lakshmana Samvat 388 (1506) of a medieval Maithili work, theVarna(na)ratnākara written by Kaviśekharācārya Jyotirīśvara Ṭhākura, the court poet of King Harisimhadeva of Mithila (reigned 1300–1321). An interesting feature of this list is that the names of the most revered Nathas are incorporated in this list along with the Buddhist Siddhacharyas.

[6] Scott Hajicek-Dobberstein, Soma Siddhas and alchemical enlightenment: pasychedelic mushrooms in Buddhist tradition, Journal of Ethnopharmacology, 1995, vol.48, pp.99-118.

[7] Dasgupta, Sashibhusan (1995). Obscure Religious Cults, Firma K.L.M., Calcutta, ISBN 81-7102-020-8, pp.203ff, 204.

[8] Shastri Haraprasad (ed.) (Hajar Bacharer Purano Bangala Bhasay Bauddhagan O Doha (in Bengali), 1916, 3rd edition 2006). Kolkata: Vangiya Sahitya Parishad, pp.xxxv-vi.

[9] J. G. Jennings, The Vedantic Buddhism of the Buddha, Geoferry Cumerlege, Oxford University Press, London, 1947.

[10] Ananda K. Coomaraswamy, Hinduism and Buddhism, The Wisdom Library, New York.

[11] எஸ். ராஜமாணிக்கம் (பதிப்.), ஆத்தும நிர்ணயம், பாளையங்கோட்டை, 1967.

பதிப்பாசிரியரே ராபர்டோ டி நொபிலி பெயரில் உலாவரும் நூற்களில் பெரும்பாலும் அவரால் எழுதப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார் பக்கங்கள்.xxii-xxiv. அவற்றில் உபயோகப்படுத்தப்பட்டுள்ள சொற்கள் – சுவர்க்கம், நரகம், வைகுந்தம், கைலயம்…….பாவம், புண்ணியம்…..போன்ற விஷயங்கள் கிருத்துவத்திற்கு கிஞ்சித்தேனும் சம்பந்தம் இல்லை. ஏதோ ஒரு தமிழ்நூலை, கிருத்துவநூல் என்று சொல்லிக்கொள்வது நன்றாகவே தெரிகிறது.

Posted in அகத்திய, அகத்தியர், அகஸ்தியர், அரேபியா, அறிவு ஜீவி, ஆதிநாத, ஆயுர்வேதம், ஆயுள், ஆயுள்வேதம், ஆரியன், இந்தியவிரோதிகள், ஓடந்தபூர், ஓலை, ஓலைச்சுவடி, கபாலி, கம்பளி, கலாச்சாரம், காபாலிக, குலாச்சார, கௌதம, க்ஷத்திரியர், சட்டைமுனி, சரகர், சல்ய, சல்லிய, சஹஜயான, சாரணர், சிகிச்சை, சிதம்பரம், சிதர், சித்தஞானம், சித்தபாத, சித்தபிரமை, சித்தபுரம், சித்தபுருஷன், சித்தப்பிரமை, சித்தம், சித்தர் பாடல்கள், சித்தாந்திகள், சுவடி, டமரானந்தர், தக்ஷசிலா, தந்திரம், தமிழகம், தமிழ், தமிழ்நாடு, திரவிடம், திராவிடன், துறவி, தேரையர், நரதேவ, நாரதேவ, நாலாந்தா, பகுத்தறிவு, பஞ்சபூதங்கள், பதஞ்சலி, பதினென் சித்தர்கள், பரம்பரை, பரம்பரை வைத்தியர், பராசர, பல்தேயமொழியோர், பல்மொழிதெயத்தோர், பாலியல், புத்தகம், புனிதம், புலஸ்தியர், பூதங்கள், பூர்ணலிங்கம் பிள்ளை, பெரிய ஞானக் கோவை, பௌத்தம், மச்சேந்திர, மந்திரம், மயக்கம், மருந்து, யந்திரம், வஜ்ரயான, வாமாசார, விக்ரமசிலா, வீரசைவம், வேதம், வேதாங்கம், வேதாந்தம், வைத்தியர், ஹடயோகப்ரதீபிகா | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

சிரவணர்களும்-பிராமணர்களும், ஜைனர்களும்-பௌத்தர்களும், இந்தியர்களும்-கிரேக்கர்களும்

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 15, 2012

சிரவணர்களும்-பிராமணர்களும், ஜைனர்களும்-பௌத்தர்களும், இந்தியர்களும்-கிரேக்கர்களும்

வேதகாலத்தில் அல்லது வேதங்கள் படிப்புமுறையாக இருந்த காலத்தில் மஹாவீரர்-புத்தர் தோன்றியது: மஹாவீரரும், புத்தரும் திடீரென்று அறிவாளிகளாக, ஞானிகளாக, தீர்த்தங்கராக அல்லது புத்தராகிவிடவில்லை. பாரதத்தில் பிறந்ததால் வேதங்கள், வேதாங்கங்கள் மற்றும் இதர புத்தகங்களைப் படித்துதான் அந்நிலையை அடைந்திருந்தார்கள். குருகுலத்தில் பிராமணர்களிடம்தாம் அவர்கள் பயின்றார்கள். க்ஷத்தியர்களாக இருந்தும் அந்நிலையை அடைந்தார்கள் எனும்போது, அக்காலத்தில் எந்தவித வேறுபாடும் இல்லையென்றாகிறது. அதாவது, வேதங்களை யார் வேண்டுமானாலும் படிக்கலாம் கற்கலாம் என்றிருந்தது. இருந்த பிராமணர்களுடன் வாதிட்டு, தத்தமது புதிய கருத்துகளை மக்களிடம் பரப்பி அவர்கள் தங்களது சீடர்களை, நம்பிக்கையாளர்களை, அபிமானிகளை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். இவற்றை அந்தந்த ஜைன-பௌத்த நூல்களே எடுத்துக் காட்டுகின்றன. ஆனால், பாரதத்தின் வடமேற்கு பகுதிகள் வழியாக ஜைனர்களின் வெளியேற்றம், கிரேக்கர்களின் நுழைவுகள் சில மாற்றங்களை ஏற்படுத்தின.

ஜைன-பௌத்த மதங்களில் இருந்தது சில வித்தியாசங்களே: மஹாவீரர். (c.599-527 BCE) மற்றும் புத்தர் (c.567-487 BCE) சமகாலத்தவர்கள் தாம். இருவர்களின் போதனைகளும் ஒரேமாதிரியாகத்தான் இருந்தன. கடவுட்கொள்கையைத் தவிர, பெரும்பாலான விஷயங்களில், வேதங்களிலிருந்து விலகவில்லை. பொதுஜனங்களுக்கேற்ற வரையில், ஜைன-பௌத்தர்கள் வேதமத நம்பிக்கையாளர்களைப் போலவே இருந்தார்கள் என்று தெரிகிறது. அவர்களது தலைவர்களும் பிராமணர்கள் போன்றே இருந்தனர் என்று தெரிகிறது. இதனால் தான், சமகால கிரேக்கர்களும் அடையாளம் காணாமல் குழம்பிபோய் இருந்தனர். ஜைன-பௌத்தர்கள் பாரத சமூகத்தில் அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் என்று அத்தகைய வெளித்தோற்றத்தைக் கொண்டிருந்தார்கள் என்றும் தெரிகிறது[1].

கிரேக்கர்கள் இந்தியாவிற்கு வந்து படித்துச் சென்றது: இந்தியா அக்காலத்தில் விஞ்ஞானம், மருத்துவம், முதலிய துறைகளில் சிறந்து விளங்கியதாலும், அதற்கான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் (ஆசிரமங்கள்) இருந்ததினாலும், பல பாரதத்திற்கு கற்க வந்தனர். சுமார் 300 BCE க்தேசியாஸ் (Keasiast) மற்றும் மெகஸ்தனிஸ் (Megasthanese) என்ற இரு கிரேக்க மருத்துவர்கள் இந்தியாவிற்கு வந்து வடவிந்தியாவில் தங்கியதாக மேனாட்டு சரித்திராசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். அவர்கள் ஒன்றும் அப்படியொன்றும் வெறுமனே தங்கியிருக்க வரவில்லை. முன்னர் கிரேக்க தத்துவஞானிகள், அறிஞர்கள் – பிதாகோரஸ்[2] (Pythagorus c.560-480 BCE), பிளாட்டோ[3] (Plato – 427-347 BCE) முதலியோரும் வந்துள்ளதாக அவர்களேக் குறிப்பிட்டுள்ளனர்[4]. இதனால்தான் கிரேக்கத் தத்துவங்களில் இந்தியத்தாக்கம் வெளியாகிறது[5]. ஆன்மா, ஆன்மா பலவுடல்களைப் பெறுவது, மறுஜென்மம், பாவம்-புண்ணியம், கர்மா போன்ற கருத்துகள் காணப்படுகின்றன. பொதுவாக கிரேக்க நுழைவுகளினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, ஏனெனில் அவர்கள் க்ஷத்தியர்களில் தாழ்ந்தவர்களாக (degraded), விலக்கி வைக்கப்பட்டவர்களாக (excommunicated) பிரிந்து போனவர்களாக, இந்தியமுறைகளினின்று மாறுபட்டவர்களாகக் கருதப்பட்டனர்[6].  புராணங்கள் இவ்விவரங்களை அதிகமாகவே தருகின்றன. எட்வர்ட் போக்காக் (Edward Pococke), காலனில் டோட் (Col. Tod), வில்லியம் ஜோன்ஸ் (William Jones) போன்றவர்களும் இதனை எடுத்துக் காட்டியுள்ளனர்.

ஜைனர்கள்-பௌத்தர்கள்-பிராமணர்கள் பற்றிய கிரேக்கர்களின் குழப்பம்: கிரேக்கர்கள், பிராமணர்களை அறிந்திருந்தனர், ஆனால், மேற்சொல்லப்பட்டக் காரணங்களால், கிரேக்கர்களை பிராமணர்கள் ஜம்புத்வீபத்தில் இருப்பவர்களாகக் கருதவில்லை[7]. மெகஸ்தனிஸ் போன்றவர்கள் பிராமணர்களை “தத்துவஞானிகள்” என்று குறிபிட்டிருக்கிறார்கள்[8]. இன்னொரு கிரேக்க ஆவணமோ அந்த தத்துவஞானிகளில் இரு பிரிவினர் சர்மேன்ஸ் (Sarmanes) மற்றும் பிராக்மேன்ஸ் (Brachmanes) என்றிருந்ததாகக் குறிப்பிட்டுகிறது. இருப்பினும் சிரவணர்கள் மற்றும் பிராமணர்கள் இடையில் கிரேக்கர்களுக்குக் குழப்பம் இருந்தது. மெகஸ்தனிஸ் இந்திய முனிவர்களை “ஹைலோபியோய்” (hylobioi) என்று குறிப்பிட்டு மற்றவரை “பௌத்த”வின் சீடர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் “ஹைலோபியோய்” என்பவர்கள் பிராமணர்கள் என்றும், “பௌத்த”வின் சீடர்கள் சிரவணர்கள் என்றும் கொள்ளலாம்.  உண்மையில் மெகஸ்தனிஸ் எழுதியதாக சொல்லப்படும் “இண்டிகா” என்ற நூலேயில்லை. பிற்காலத்தில் மெகஸ்தனிஸ் சொன்னது என்று பல கிரேக்க நூல்களில் உள்ளவற்றைத் தொகுத்து வெளியிட்டதுதான் அந்த “இண்டிகா” என்பது.

முதல் நூற்றாண்டுகளிலும் தொடர்ந்த குழப்பம்: இன்னொரு மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டு கிரேக்க ஆவணத்தை வைத்துக் கொண்டு, இந்த பிராச்மேன்கள் / பிராக்மேன்கள் / பிராமணர்கள் (Brachmanes) துங்கபத்திரை ஆற்றங்கரையில் நிர்வாணமாகச் சுற்றிக் கொண்டிருந்தார்கள் என்று விளக்கம் கொடுக்கிறார்கள்[9]. ஆனால் அப்படி நிர்வாணமாக சுற்றும் சாமியார்கள், திகம்பர ஜைன சாமியார்கள்தாம். ஆகவே கிரேக்கர்களுக்கு பௌத்த-ஜைன துறவிகளிடையே கூட வித்தியாசம் தெரியவில்லை என்று தெரிகிறது. இல்லை மேலே எடுத்துக் காட்டியபடி, அலெக்சாந்தர் தோற்றதை மறைக்க இப்படி குழப்பியிருக்கலாம். இல்லை சுமார் 250 BCE லிருந்து நான்காம் நூற்றாண்டு வரை ஜைன-பௌத்த-பிராமணர்களுக்கு வித்தியாசமே இல்லாமல் இருந்தது போலும். இல்லை ஜைன-பௌத்தர்கள் பிராமணர்களைப் போலவே தோற்றம் கொண்டு, வேடமிட்டு உலாவந்து கொண்டிருந்தார்கள் போலும். அதனால்தான், பிராமணர்கள் அவர்களை “பாஷாண்டிகள்” என்றழைத்தனர். அவர்களுக்கு வேதங்களைக் கற்றுக் கொடுக்க மறுத்தனர். ஏனெனில், வேதங்களைப் படித்து பிறகு வேதங்களையே குறைக்கூறுவது, தூஷிப்பது அவர்களது வேலையாக இருந்தது. மேலும், வேதங்களிலுள்ள பெரும்பாலான கருத்துகளையும், அடிப்படை உண்மைகளையும் ஏற்றுக் கொண்டு, அவ்வாறு வேதங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் அவர்களது போக்கும் போலித்தனமாகப் பட்டது.

அசோகர்காலத்தில் (c.250-200 BCE) சிரவணர்கள்பிராமணர்கள்சமமாக பாவிக்கப்பட்டார்கள்: அவர்களுக்கு அவர்கள் க்ஷத்தியர்களில் தாழ்ந்தவர்களாக (degraded), விலக்கி வைக்கப்பட்டவர்களாக (excommunicated) பிரிந்து போனவர்களாக, இந்தியமுறைகளினின்று மாறுபட்டவர்களாகக் கருதப்பட்டனர்[10].  அதனால், அசோகனுடைய கல்வெட்டுகளும் சிரவணர்கள், பிராமணர்கள் என்று குறிப்பிட்டு, கிரேக்கர்களைக் குறிப்பிடாமல் இருக்கின்றன சிரவணர்கள் மற்றும் பிராமணர்கள் இல்லாத சமூகக்குழுமங்களே/நாடுகளேயில்லை, ஆனால் கிரேக்கர்களிடம் மட்டும் அவர்கள் இல்லை[11]. அதாவது கிரேக்கர்கள் தங்களது நாட்டை அவ்வாறுக் கூறிக்கொள்ளவில்லை. இங்கு பண்டார்கர் போன்றோர் அயோனியர்கள் வேறு, கிரேக்கர்கள் வேறு என்று கூறுகின்றனர்[12]. ஆனால் மேற்பட்ட நம்பிக்கைகள் கொண்ட மதத்தைக் கொண்டிருந்தனர். எப்படியாகிலும் இருக்குழுக்களுமே சமுக்கத்தில் உயர்வாக மதிக்கப்பட்டார்கள் என்று தெரிகிறது. அசோகரைப் பொறுத்தவரைக்கும் இருவர்களுன் சமமாக பாவிக்கப்பட்டார்கள். “ப்ரமணஸ்ரவண” மறும் “ஸ்ரவணப்ரமண” என்ற சொற்றோடர் மாறிமாறி அசோகரின் கல்வெட்டுகளில் பல இடங்களில் உபயோகப்படுத்தப் பட்டுள்ளன.

ஜைன-பௌத்த காலத்தில் படிப்புமுறையில் மாற்றங்கள் ஏற்பட்டது: ஜைனர்கள்-பௌத்தர்கள் வேதநெறிகளினின்று மிகவும் விலகி மந்திர-தந்திர-யந்திரமுறைகளில் ஈடுபட்டபோது, சமூகத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. பெண்கள் ஒருபக்கத்தில் உரிமைகள் கொடுக்கப்பட்டாலும், மந்திர-தந்திர-யந்திரமுறைகளில் பாலியல் ரீதியில் மிகவும் சதாய்க்கப்பட்டார்கள் (Sexually exploited) என்று தெரிகிறது. மேலும் அஹிம்சையை (non-violence) போதித்துக் கொண்டு, ஹிம்சை வேலைகளில் ஈடுபட்டது, உள்ள நிலைமையை அனுசரித்து, அசோகனும் தனது கல்வெட்டில் தினமும் மூன்று மிருகங்கள் – இரண்டு மயில் மற்றும் ஒரு கருப்பு மான் – கறிக்காகக் கொல்லப்படலாம் என்று விலக்கு அளித்துள்ளார்[13]. மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். குறிப்பாக அஹிம்சை போதித்து, பௌத்தர்கள் மாமிச உணவை உட்கொண்டது பெரிய முரண்பாடே. அதேபோல, அஹிம்சை கடைபிடிக்கும் ஜைனர்கள் போர்களில் ஈடுபாட்டு, நாடுகளை தங்களது ஆதிக்கத்தில் கொண்டு வந்தது. அதில் அசோகன் மட்டும் விதிவிலக்காக இருந்தான். அவரும் கலிங்கப் போருக்குப் பிறகுதான் மாறினான். இதனால், இவர்கள் காலத்தில் பொதுப்படையாக, வெளிப்படையாக இருந்த ஆசிரமமுறை பள்ளிக்கூடங்கள் மாறி, விகாரங்கள்-மடாலயங்கள் முறை படிப்புமுறை தோன்றியது. ஆனால், ஜைன-பௌத்த விகாரங்கள்-மடாலயங்கள் ஊர்களுக்கு-நகரங்களில் வெளியில், ஒதுக்குப்புறத்தில், தூரத்தில் இருந்தன. அங்கு யார் வேண்டுமானாலும் சென்றுவிடமுடியாது, சேர்ந்து படிக்க முடியாது. அதாவது ஜைன-பௌத்தர்களுக்குத்தான் முதலிடம் என்பது தெரிந்த விஷயமே.

மடாலய-குருக்குல வேறுபாடுகள் பல்கலைக்கழகப் படிப்புகளில் சண்டை-சச்சரவானது: ஒதுக்குப்புறமாக விகாரங்களில் நடக்கும் விஷயங்கள் பொது மக்களுக்குத் தெரியாமல் இருந்தாலும், விளைவுகள் தெரியவரத்தான் செய்தன. படிப்புமுறைகளில் மட்டுமல்லாது, மருத்துவமுறைகளில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. மந்திர-தந்திர-யந்திரமுறைகள் கவனமாகக் கற்றுக் கொள்ளப்பட்டு, முறையாக, வேண்டிய காரியங்களுக்கு மட்டும் தான், உபயோகப் படுத்தப் படவேண்டும் என்றமுறை போய், யார் வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும், எப்படியும் உபயோகப் படுத்தலாம், பரிசோதிக்கலாம் என்று வந்தபோதுதான், துஷ்பிரயோகங்கள் ஆரம்பித்தன. காபாலிகர், காலபைரவர், காளாமுகர், பாசுபத, லகுலீஸ போன்றோர் தாம் பிணங்களை அறுப்பது (dissection of dead bodies – cadavre), அறுவைசிகிச்சைச் செய்வது என்றமுறை போய், மற்றவர்களும் செய்ய ஆரம்பித்தனர். கண்-பொறை நீக்கல், மண்டையோட்டு அறுவைசிகிச்சை, மற்ற ரணசிகிச்சை முதலியவை வேண்டியவர்களுக்கு ஜாக்கிரதையாக முறையாகச் செய்யப்பட்டன. புத்தரே அறுவைசிகிச்சைமூலம் பிறந்து இறந்தார், அதாவது சிஸரியன் ஆபரேஷன் மூலம் பிறந்து, தனது எண்பதாவது வயதில் பன்றி மாமிசம் உண்டபோது, உணவுக்குடலில் சிக்கிக் கொண்டு, அறுவைசிகிச்சை செய்யப்பட்டு, பலன் அளிக்காமல் இறந்தார். இதனால், அறுவைசிகிச்சைமுறை, பாரத்தில் தடை செய்யப்பட்டது. ஆனால், பாரத்ததிற்கு வெளியே தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டது[14].

பிணங்களை அறுப்பது-அறுவைசிச்சை செய்வது முதலியன: அஹிம்சை போதித்த ஜைனர்-பௌத்தர் எப்படி பிணங்களை அறுத்து மருத்துவர்கள் ஆகியிருக்க முடியும் என்று யாரும் யோசித்ததாகத் தெரியவில்லை. இதனால்தான், சரகசம்ஹிதையை சரியாகப் படிக்காதவர்கள், அறுவைசிகிச்சை பயிலும் மாணவர்களுக்கு பிணங்களுக்கு பதிலாக, காய்கறிகள் கொடுத்து, அவற்றையறுத்து பயிற்சி பெற்றனர் என்று விளக்கம் அளிக்கின்றனர். அதுமட்டுமல்லாது, இந்தியர்களுக்கு எலும்பியல் அறிவேயில்லை என்றும் முடிவுக்கு வந்து திரிபு விளக்கங்கள் கொடுக்கின்றனர். ஒரு வாதத்திற்கு எடுத்துக் கொள்வதாக இருந்தால், யாகங்கள் புரிந்த வேதகாலத்தவர்கள் ஆடு, மாடு, குதிரை போன்றவற்றைப் பலிக்கொடுத்திருந்தால், அவர்களுக்கு பிணங்களை அறுக்க ஒன்றும் தயக்கமோ, பயமோ, அறுவருப்போ இருந்திருக்காது. ஆனால், அஹிம்சை போதித்த ஜைனர்-பௌத்தர் அவ்வாறு செய்திருக்க முடியாது. ஆகவே உண்மையில் உயிர்பலி, கொலை முதலியன ஏன் தடுக்கப்பட்டது என்று ஆராயவேண்டியுள்ளது.

இன்றைக்கும் ஆயுர்வேதம்-சித்தா படிக்கும் மாணவர்கள் [B.A.M.S (Bachelor of Ayurvedic Medicine and Surgery) மற்றும் B.S.M.S (Bachelor of Siddha Medicine and Surgery)] பிணங்களை அறுத்து (dissection of dead bodies – cadavre) பயிற்சி இல்லாமல் மருத்துவர் ஆகமுடியாது. அம்மருத்துவக் கல்லூரிகளில் பிணங்கள் அழுகாமல் பாதுகாத்துவைக்க குளிர் அறை இருந்தால் தான், அப்படிப்புகளுக்கு ஒப்புதலே அளிக்கப்படுகிறது. ஆகவே, பழங்காலத்தில் ஒன்றும் தெரியாமல், கண்-பொறை நீக்கல், மண்டையோட்டு அறுவைசிகிச்சை, மற்ற ரணசிகிச்சை முதலியவற்றை செய்தனர் என்பது ஏதோ “சித்துவேலை” காட்டுவதைப் போல இருக்கும். அத்தகைய “சித்தர்கள்” அக்காலத்தில் இருந்திருக்க முடியாது. எனவே அறுவைசிகிச்சை செய்யப்பட்டதற்கு அகழ்வாய்வு ஆதாரங்கள் இருக்கும் போது, அதற்கான மருத்துவர்கள் மற்றும் அறுவைசிகிச்சை வல்லுனர்கள் இல்லை என்று வாதிடுவது அற்பத்தனமாகவே தோன்றுகிறது.

© வேதபிரகாஷ்

14-09-2012


[1] இது சூப்பிக்கள் இந்துமதத்துறவிகள் போல, பிற்காலத்தில் சித்தர்கள் போல வேடமிட்டு உலா வந்தது போன்றது எனலாம். கிருத்துவர்களும் அதேபோல காவியுடையணிந்து, குடுமி வைத்துக் கொண்டு உலல வந்தார்கள். இன்றைக்கும் கிருத்துவர்கள் தங்களை பத்மா முதலியார், மணி ஐயர் என்று கூறிக்கொண்டு, பாமர மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

[2] Pythagoras arrived in India too late to come into personal contact with the Buddha, he was greatly influenced by his teachings. He went to India a student, he left it as a teacher, and even to this day he is known in that country as Pitar Guru, and as Yavanacharya, the Ionian Teacher.

http://www.ship.edu/~cgboeree/greeks.html; http://9waysmysteryschool.tripod.com/sacredsoundtools/id13.html

[3] Typically Indian are the dying words of Plotinus, noblest of the Neo-platonists “Now I seek to lead back the self within me to the All-self.” One great teacher has said, “The end of knowledge is to know God – not only believe; to become one with God – not only to worship afar off.” We gain a hint in the Kathopanishat (V1- 17) “Let a man with firmness separate it (the soul) from his own body, as a grass stalk from its sheath,” to which point we will return later.

[4] Richard Garbe, India and Christendom, He points out, “…………….the historical possibility of the Greecian world of thought being influenced by India through the medium of persia must unquestionably be granted, and with it the possibility of the above-mentioned ideas (of the Sankyan and Vedanta Philosophy) being transferred from India to Greece”.

E. W. Hopkins says: “Plato is full of Sankhyan thought, worked out by him, but taken from Pythagoras. Before the sixth century B.C. all the religious philosophical ideas of Pythagoras are current in India. (L. Schroeder, Pythagoras). If there were but one or two of these cases, they might be set aside as accidental coincidences, but such coincidences are too numerous to be the result of change. ”

[5] வில்லியம் ஜோன்ஸ் போன்றோர் பாரதம் மற்றும் கிரேக்க கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, முதலியவற்றிலுள்ள பல ஒற்ருமைகளை எடுத்துக் காட்டியுள்ளனர். இக்கருத்து வலுப்பட்டபோது தான், தலைக்கீழ் கருதுகோள்களை மேனாட்டவர் உண்டாக்கி, கிரேக்கர்களிடமிருந்து இந்தியர்கள் காப்பியடித்தார்கள் என்று முன்வைத்தார்கள்.

[6] மஹாபாரத யுத்தம் நடந்த பின்னர், க்ஷத்தியர்கள் பாண்டவர்-கௌரவர் என்று இருதரப்பில் சேந்து சண்டையிட்டதால் அவர்களிடம் அவ்வாறான பாகுபாடு ஏற்பட்டது. மேலும் துவாரகை கடலில் மூழ்கி யாதவர்கள் முழுவதுமாக அழிந்தபோது, கிருஷ்ணரும் மறைந்தார். அப்பொழுது ஒன்பது கோள்களும் ஒரே கோட்டில் வந்ததால் கலியுகம் பிறந்ததாகக் கணக்கிடப்படுகிறது. அது 3102 BCEயிலிருந்து ஆரம்பிக்கிறது. இக்கலி சகாப்தம் குறிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான கல்வெட்டுகளும் ஆவணங்களும் உள்ளன.

[7] Romila Thapar, Asoka and the Decline of the Mauryas, Oxford University Press, New Delhi, 1987, p.167.

[8] Strabo, XV, I, p.59.

[9] Pseudo-Origen, Philosophia, p.24.

[10] மஹாபாரத யுத்தம் நடந்த பின்னர், க்ஷத்தியர்கள் பாண்டவர்-கௌரவர் என்று இருதரப்பில் சேந்து சண்டையிட்டதால் அவர்களிடம் அவ்வாறான பாகுபாடு ஏற்பட்டது. மேலும் துவாரகை கடலில் மூழ்கி யாதவர்கள் முழுவதுமாக அழிந்தபோது, கிருஷ்ணரும் மறைந்தார். அப்பொழுது ஒன்பது கோள்களும் ஒரே கோட்டில் வந்ததால் கலியுகம் பிறந்ததாகக் கணக்கிடப்படுகிறது. அது 3102 BCEயிலிருந்து ஆரம்பிக்கிறது. இக்கலி சகாப்தம் குறிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான கல்வெட்டுகளும் ஆவணங்களும் உள்ளன.

[11] J. Bloch, Les Inscriptions d’Asoka, Paris, 1950, p.128.

[12] D. R. Bhandarkar, Asoka, Univesity of Calcutta, 1969, P.27

[13] அசோகருடைய 14ம் கல்வெட்டு. Edict.No.I, The Sacredness of life.

[14] K.V. Ramakrishna Rao, The Position of Surgery before and after Buddha, in Sastra Trayi-Proceedngs of Bhaskariyam-Bharatiyam-Dhanvantariyam, 2007, Bangalore, pp.197-198.

Posted in அகத்தியர், அரேபியா, அறிவு ஜீவி, அறுத்தல், அறுவை சிகிச்சை, அறுவைசிகிச்சை, ஆத்மா, ஆனந்தம், ஆன்மா, ஆபரேஷன், ஆயுர்வேதம், ஆயுள், ஆயுள்வேதம், ஆரியன், ஆரியம், எலும்பியல், ஓலை, கடைசல் ஊசி, கத்தி, கந்தகம், கரைசல், காபாலிகம், காயம், சக்தி, சல்ய, சல்லிய, சிகிச்சை, சித்தார்த், சித்த்ஞானம், சிந்தனை, சீனா, திகம்பர, திகம்பரம், திரவிடம், திராவிடன், திராவிடம், திருமூலர், நரம்பு, பாதரசம், பாரதம், பிணம், பிண்டம், பித், பித்தம், மந்திரம், மனச்சிதைவு, மூச்சு, மூளை, மேரு, வில்லியம் ஜோன்ஸ் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 Comments »

பௌத்தமத அல்லது பௌத்தர் காலத்தில் சித்தர்கள்

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 15, 2012

பௌத்தமத அல்லது பௌத்தர் காலத்தில் சித்தர்கள்

ஜைன-பௌத்தக் குழப்பங்கள்: சரித்திரரீதியில் ஜைனம்-பௌத்தம் தனித்தனியாக இருந்ததா, ஒரே காலத்தில் இருந்து, பிறகு பிரிந்ததா, மஹாவீரரும், புத்தரும் ஒருவரா அல்லது தனித்தனியானவர்களா, ஒரேகாலத்தைச் சேர்ந்தவர்களா, ஒருவர் மற்றொருவரின் சீடரா, கொள்கைகளினால் பிரிந்து போயினரா என்ற பற்பல கேள்விகளுக்கு விடைகாணாமல், சர்ச்சைகளில் ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் ஈடுப்பட்டனர்[1]. “சித்தார்தர்” என்ற பெயரையுடைய அரசருக்குப் பிறந்தவர் மஹாவீரர். (c.599-527 BCE) ஆனால் சித்தார்த்தர் என்ற பெயர் கொண்டவர் புத்தர் (c.567-487 BCE). மஹாவீரர் போதிக்கும் கூட்டத்திற்கு புத்தர் வந்திருந்தார் என்று ஜைனர்கள் சரித்திரம் கூறுகிறது. ஆனால், ஆர்தர் வின்சென்ட் ஸ்மித் என்பவன் எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, இதுதான் இந்திய சரித்திரம் என்று எழுதிவைத்து விட்டான். அலெக்சாந்தருக்குப் பிறகுதான் “இந்திய சரித்திரமே” ஆரம்பிக்கிறது என்றபோது, மஹாவீரரும், புத்தரும் சரித்திரகாலத்திற்கு முன்பு (Pre-historic) தள்ளப்படுகின்றனர். ஆனால், இந்தியர்கள் இத்தகைய நுணுக்கங்களை அறியாமல் சரித்திரத்தைப் படித்து வருகின்றனர். திராவிட சித்தாந்திகளைப் பற்றியோ கேட்கவே வேண்டாம், “கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்தேத் தோன்றிய மூத்தக்குடி, தமிழ்குடி”, என்று பறைச்சாற்றிக் காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பர்!

வேத-ஜைன-பௌத்த முறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள்: ஜைனர்கள் மற்றும் பௌத்தர்கள் வேதங்களின்று தான் தமது ஞானத்தைப் பெற்றனர். அதனை மஹாவீரரோ அல்லது புத்தரோ மறுத்ததில்லை[2]. அவர்களது வாதங்கள் பிராமணர்களுக்கு எதிராகவும், அவர்கள் பிராமணர்களை வாதங்களில் வென்றதாகவும் தான் அவர்கள் நூல்களில் இருக்கும்[3]. அதனால், அவர்கள் பிராமணர்களுக்கு விரோதிகள் இல்லை. சிரவணர்கள்-பிராமணர்கள் அவர்கள் காலங்களில் சேர்ந்தே பணிசெய்துள்ளார்கள். ஆனால், பிறகு தோற்றுவிக்கப் பட்ட அவர்களது வாழ்க்கை வரலாற்று நூல்களில் அவ்வாறு வேத-பிராமண-விரோதிகளாகச் சித்தரிக்கப்பட்டனர். 1800-500 BCE காலங்களில் இம்மத நம்பிக்கையாளர்கள் ஆட்சியில் இருந்ததால், எப்படி, இக்கால அரசியல் நிர்ணயச் சட்டத்தில் மாறுதல்கள் செய்கிறார்களோ, அதுபோல சாஸ்திரங்களில் தமக்கு சாதகமாக பல திருத்தங்களை செய்தார்கள். அதுமட்டுமல்லாது, இதிகாச-புராணங்களையும் மாற்றியெழுதினர். வேதமத்தவர் தமது நூல்களைக் காத்துக் கொள்ள மற்றும் ஜைன-பௌத்தர்களின் திருத்தங்களுக்கு உட்படாமல் காக்கத் தகுந்த முறைகளை கையாண்டார்கள். அந்நிலையில் வேதங்கள் மற்றவர்கள் படிக்கக் கூடாது என்று தீர்மானித்திருக்கலாம். அந்நிலையிலும் அவர்கள் பிராமணர்களைப் போல வேடமிட்டு வந்து வேதங்களைக் கற்றுக் கொள்ள முயற்ச்சித்துள்ளார்கள்[4]. அப்பொழுது தான், அவர்களை “பாஷாண்டிகள்” என்று அழைத்தார்கள். இத்தடையை நீக்கத்தான், எல்லோரும் வேதங்களைக் கற்கலாம் என்றறிவித்தார்கள். ஆனால், தத்தமது மதங்களில் பெண்களை அடக்கிவைத்தார்கள்[5]. நிர்வாணத்திலும் கூட சமவுரிமை கிடையாது என்று அறிவித்தனர்[6]. ஆனால், பிறகு சங்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டபோதுதான் பிரச்சினைகள் வந்தன. தந்திரங்களில் பாலியல் ரீதியாக அவர்கள் பயன்படுத்தப் பட்டனர்[7], துன்புறுத்தப்பட்டனர்[8], அடக்கி வைக்கப் பட்டனர்[9].

மந்த்ர-தந்ட்ர-யந்த்ர முறைகளில் மாற்றம்: தந்திரிக-தாந்திரிகமுறை வேதமுறைகளினின்று, ஜைனம் மற்றும் பௌத்த மதங்களில் மாற்றப்பட்டு, மாறி வந்துள்ளன. இடைக்காலத்தில் இவை தோன்றியதாக சில நூல்களை வைத்து விளக்கம் கொடுத்தாலும், மூலநூல்கள் ஆரம்ப நூற்றாண்டுகளைச் சேர்ந்ததாக உள்ளன. யாமள, காளிகா, ர‌க்ஷகாளிகா, இந்திவர காளிகா, ஜீவகாளி, பைரவிதக்ணி, சித்திலக்ஷ்மி தந்திரங்களைக் குறிப்பிட்டாலும், ஜைனர்கள் அவற்றை மாற்றியமைத்துக் கொண்டனர்[10]. ஆனால், குல்லுகபட்டர் என்பவர் பாரதப்பாரம்பரிய ஞானம் – வேத மற்றும் தந்திர என்று இரண்டு வகைகளில் பிரிக்கப்பட்டுள்ளாதாகக் குறிப்பிட்டுள்ளார்[11]. ஆனால், “தந்த்ர/தந்திர” என்ற சொல்லிற்கு அர்த்தம் வேதத்திலிருந்துதான் பெறப்படுகிறது[12]. முதலில் தந்திரிகமுறைகளை எதிர்த்த பௌத்தர்களும் அவ்வாறே சிவ-சக்தி முறைகளை மாற்றிக் கொண்டனர். சிவலோகேஷ்வரரை, அவலோகேஷ்வர் என்று மாற்றிக் கொண்டனர். சஹஜ / சஹஜீய என்ற சமரசமுறைகளில் இருமதங்களும் வேத மந்த்ர-தந்ட்ர-யந்த்ர முறைகளை பெரும்பாலும் ஏற்றுக் கொண்டன. திருமூலரும் அவ்வாறே செய்துள்ளார். அதனால், திருமந்திரத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது. ஆனால் ஜைன-பௌத்த மதங்கள் கடவுள் இல்லை என்று அறிவித்துவிட்டு, தந்திரமுறைகளுக்கு தேவதைகளை வைத்துக் கொண்டார்கள், அவையெல்லாமே இந்து கடவுளர்கள் தாம்.

இருகாலகட்டங்களில் தந்திரங்களில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள்: கிரேக்கர்களாக ஜைனர்கள் இந்தியாவில் வந்தபோது ஏற்பட்ட மாற்றங்கள், அரேபியர்கள் வந்தபோது ஏற்பட்ட மாற்றங்கள் என இரண்டு வகையாக பார்க்கலாம். ஆகவே, ஜைன-பௌத்த சித்தர்கள் வேதமுறைகளை தகவமைத்துக் கொண்டதில், இரு காலகட்டங்களைப் பார்க்கலாம். அரேபியர்-முகமதியர் படையெடுப்பு-தாக்குதல்களுக்கு முன்னர் மற்றும் பின்னர் என்று இரு காலகட்டங்களில் மாறுதல்களை, மாற்றங்களை, சீரழிவுகளைப் பார்க்கலாம். முதலில்-முன்னர் ஏற்பட்ட பிறழ்ச்சி, அழிவு, சீரழிவு ஜைன-பௌத்தர்களால் ஏற்பட்டது.  பின்னர் ஏற்பட்ட பிறழ்ச்சி, அழிவு, சீரழிவு அரேபியர்-முகமதியர்களால் ஏற்பட்டது. இடைக்காலத்தில் அல்லது முகமதியர் காலத்திலும் மந்த்ர-தந்ட்ர-யந்த்ர நூல்கள் தோற்றுவிக்கப்பட்டன. ஆனால், அவை முகமதியர்களின் காம-உடலின்ப சரச-சல்லாபங்களுக்கு உதவும் வகையில் ஏற்பட்டவை. பல மந்த்ர-தந்ட்ர-யந்த்ர பண்டிதர்கள் வலுக்கட்டாயமாக, துன்புறுத்தப் பட்டு, தமகேற்றபடி அத்தகைய நூல்களை எழுதவைத்தனர். அவ்வாறு உருவானவைதாம் அனங்கரங்க, ஆனந்தரங்க, காமசூத்திர போன்ற பாலியல் நூல்கள்[13]. முகமதியர் காலத்தில் ஆயிரக்கணக்கான மருத்துவ நூல்கள் அரேபிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, மூலங்கள் அழிக்கப்பட்டன. அவற்றை அந்நூல்களைப் படிக்கும்போதே அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாது, அவர்களில் சிலர் ஆயுர்வேத நூல்களைப் படித்துள்ளோம், அவற்றை சேகரித்துள்ளோம் என்று ஒப்புக்கொண்டுள்ளனர்[14].

தெற்கில் ஜைன-பௌத்த மதங்கள் இரண்டாம் முறை தலைத்தூக்கி அடங்கியது: முகமதியர்கள் வடக்கில் ஆதிக்கம் செல்லுத்தியபோதுதான், கர்நாடகத்தில் ஜைனர்கள் மறுபடியும் தலைத்தூக்கினர். தென்னிந்தியாவில் ஜைன-பௌத்தர்களின் தாக்கம் முதல் நூற்றாண்டுகளிலேயே காணப்படுகிறது. களப்பிரர்களினால், தமிழக கலாச்சாரம் அழிந்தது, அதனால், “களப்பர்களின் இருண்ட காலம்” என்றும் தமிழக சரித்திரத்தில் சொல்லப்படுகிறது. பிறகு சைவத்தின் எழுத்தியால் இரண்டும் அடக்கப்பட்டன. கர்நாடகத்தில், வீரசைவத்தின் மறுமலர்ச்சியால், இரண்டும் அடக்கப்பட்டு, பிறகு வந்த முகமதியர்களையும் கட்டுக்குள் வைத்தது. அதனால்தான், வீரவல்லாளன் போன்றோர் ஜைனர்களாக இருந்தார்கள். இருப்பினும், பிறகு சைவரானார்கள், முகமதிய மதத்தை எதிர்க்கவும் செய்தனர். அதனால்தான், வல்லாளன் வயதான காலத்திலும், வஞ்சகத்தால் சிறைப்பிடிக்கப்பட்டு, குரூரமாகத் தோலுறித்துக் கொல்லப்படுகிறான். ஜைன-பௌத்த மதங்களுக்கும் வியாபாரரீதியில்-அரசியல் ரீதியில் போராட்டங்கள் நடந்துள்ளன. அப்பொழுது, அரேபியர்களின் மற்றும் சீனர்களுடன் வைத்துக் கொண்ட கூட்டும், அவர்களின் அழிவிற்கு காரணமாக இருந்தது. “அகாலங்க” என்ற ஜைனமுனிவர் 788ல் பௌத்தர்களை வென்று, இலங்கைக்கு அனுப்பியதாக, கல்வெட்டுகள் கூறுகின்றன[15].

பௌத்தமதத்தில் சித்தர்கள்: வேதமதத்தில் தந்த்ரமுறை சக்திவழிபாட்டில் இருந்தது. பிறகு ஜைனர்கள் அதை மாற்ரித் தகவமைத்துக் கொண்டனர்.  இந்து பெண்-கடவுளர்கள் அவர்களுக்கு தேவதைகளாயினர். அவர்கள் பெயரில் தந்த்ர நூல்களையும் மாற்றியெழுதிக் கொண்டனர். பிறகு பௌத்தர்கள் அதனை பின்பற்ற ஆரம்பித்தபோது, அவர்களும் மாற்றங்களைச் செய்தனர். சக்திற்கு பதிலாக பிரஜ்ன-ஞானம் என்று வைத்து பௌத்த-தந்த்ர முறையினை வளர்த்தனர்[16]. சக்தியை அவர்கள் மாயை என்றழைத்தனர். இருப்பினும், சூன்யதா தான் பிரஜ்ன, உயர்ந்தநிலை ஞானம்-அறிவு என்றனர். ஜைனர்கள் பெண்களுக்கு தந்த்ரமுறையில் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். பௌத்தத்திலும் அவ்வாறேயிருந்தாலும், வெளிப்படையில் ஆண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதைப் போலக் காட்டிக் கொண்டனர். இருப்பினும் பெண்களின் பங்கில்லாமல், தந்தரமுறைகளை பிரயோகம் செய்யமுடியாது. இதனால்தான், இருமதங்களும் இம்முறைகளில் தோல்வியடைந்தன.

புத்தர் ஜாதகக் கதைகள் புராணங்களைப் பின்பற்றியமுறை: புத்தர் ஜாதகக் கதைகள் என்பவை புத்தருடைய முற்பிறவிகள், இக்காலப்பிறப்பு, மாயாதேவியின் கனவுகள் முதலிவற்றைப் பற்றியக் கதைகளின் தொகுப்பாகும். ஜாதகமாலா என்ற நூலின்படி, சித்தர்கள் வங்கமலையில் வசித்தவர்கள் (விஸ்வந்தர கதை), மானஸசரஸில் திருதராஷ்ட்ர என்ற பெயரில் போதிசத்வராக இருந்தபோது அங்கு சித்தர் கூட்டம் இருந்தது (புனித அன்னங்கள் கதை). சித்தர்கள், வித்யாரண்யர், ரிஷிக்களுடன் வசித்து வந்தனர்[17]. இவையெல்லாம் புராணங்களில் உள்ள விவரங்கள் போன்றேயுள்ளன.

® வேதபிரகாஷ்

13-09-2012


[1] Brahmachari Sital Prasadji, A Comparative Study of Jainism and Buddhism, The Jaina Mission Society, Madras, 1932.

[2] J. G. Jennings, The Vedantic Buddhism of the Buddha, Geoferry Cumerlege, Oxford University Press, London, 1947.

[3] முகமதியரும், பிறகு வந்த கிருத்துவர்களும் இதேமுறைத்தான் கையாண்டனர். சீசன்பால்கு, தான் பிராமணர்களுன் 300 கருத்தரங்கள் நடத்தியதாக எழுதி வைத்துக் கொண்டான். ஆனால், கலந்து கொண்ட பிராமணர்களைப் பற்றி எந்த விவரங்களையும் கொடுக்கவில்லை. ஆகையால், அவை உண்மையா, கட்டுக்கதையா, கற்பனையா என்று தெரியாது.

[4] முகமதியரும், பிறகு வந்த கிருத்துவர்களும் இதேமுறைத்தான் கையாண்டனர். இதனால்தான், சித்தர்களிலும் பல போலி சித்தர்கள் உருவானார்கள். ராபர்ட் டி நொபிலி இதே மாதிரி வேடமிட்டுக் கொண்டு, வேதங்களைக் கற்றுக் கொள்ள முயற்ச்சித்தான்.

[5] Padmanabh S. Jaini, Gender and Salvation: Jaina Debates on the Spiritual Liberation of Women, University of California, USA, 1991, pp.18-19.

[6] Walther Schubring, The Doctrine of the Jains – Described after the Old Sources, Motilal Banarasidas publishers, New Delhi, 2000, p.61.

[7] Brhatk Bhasya.1.2670; Therigat (139-344) where nun Khema was invited to enjoy sensual pleasure.

[8] N. N. Bhattacharya, History of the Tantric Religion (A Historical, Ritualistic and Philosophical study), Manohar, New Delhi, 1987, pp.181-193.

[9] Analayo, Theories on the Foundation of the Nun’s Order – a Critical Evaluation, in JCBSSL, Vol.VI, can be accessed from here: http://buddhistinformatics.ddbc.edu.tw/analayo/TheoriesFoundation.pdf

[10] O. P. Jaggi, Yogic and Tantric Medicine, in History of Science, Technology and Medicine in India, Vol.V, Atma Ram & Sons, New Delhi, 1979, p136.

[11] N. N. Bhattacharya, History of the Tantric Religion, Manohar, New Delhi, 1987, Introduction, p.1

[12] Rigveda.X.71.9; Atharvaveda.X.7.42; Taittriya Brahmana.II.5.5.3; Panini derived the word “tantraka” (woven cloth) (V.2.70) from “Tantra” (loom). Thus, the act of weaving is “tantra”.

[13] முகமதியர்கள் தங்களது ஹேரங்களில் /அந்தப்புறங்களில், நுற்றுக்கணக்கான பெண்களை அவ்வாறு தேர்ந்தெடுத்து அனுபவித்து வந்தார்கள். அப்பொழுது ஏற்பட்டதுத்தான், பிரங்கி/பறங்கி/மேகவியாதி. அதனால் தான், அந்நோயைத் தீர்க்க மருத்துவர்கள் முயன்றனர்.

[14] O. P. Jaggi, Medicine in Medieval India, in History of Science, Technology and Medicine in India, Vol.V, Atma Ram & Sons, New Delhi, 1979, pp.73-79, p103, 108.

[15] K. A. Nilakanda Sastri, Sravanabelagola, Department of Archaeology, Mysore, 1981, p.4, based on Epigraphica Karnataka, Vol.II.

[16] Anagarika Govinda, Tantric Buddhism, in P. V. Bapat (Gen.editor), 2500 Years of Buddhism, Publication Division, Government of India, New Delhi, 1997, p.318.

[17] J. S. Speyer (Trans.), The Jatakamala or Garland of Birth-stories of Aryasura, Motilal Banarasisas, New Delhi, 1982 (1895 edition), p.77, 182.

Posted in அறுவை சிகிச்சை, அறுவைசிகிச்சை, ஆகாயம், ஆத்மா, ஆனந்தம், ஆன்மா, ஆயுர்வேதம், ஆயுள், ஆயுள்வேதம், ஆரியன், கந்தகம், கந்தரவர், கருத்து, கரைசல், கற்பம், கலாச்சாரம், கல்பம், சிதார், சித், சித்தகுரு, சித்தஜலம், சித்தஞானம், சித்தபிரமை, சித்தபுரம், சித்தர், ஜோகினி, ஞானம், ஞானி, தத்துவஞானிகள், தந்திரம், தமிழகம், நினைவு, நிம்மதி, நிர்வாணம், நிலம், பௌத்தம், மத்திய ஆசியா, மந்திரம், யோகா, யோகினி, யோசனை, ரணச்சிகிச்சை, ரிஷி | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

பாரத–பழங்கால இந்தியாவின் சித்தர்கள் ஆரியர்களா-திராவிடர்களா-வந்தேறிகளா?

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 6, 2012

பாரதபழங்கால இந்தியாவின் சித்தர்கள் ஆரியர்களாதிராவிடர்களாவந்தேறிகளா?

இந்தியாவின் மருத்து வத் தொன்மை: நிச்சயமாக இந்தியா மிகத்தொன்மையான நாகரிகத்தை இடையில்லாமல், தொடர்ச்சியாகக் கொண்டுள்ளது. ஆகவே இந்திய மக்களின் தொன்மையும் அவ்வாறே கணக்கிடப்படுகிறது. அத்தொன்மை அம்மக்களின் ஆரோக்யம், மருத்துவமுறை, நோய் தீர்க்கும் முறைகள், குழந்தைகளைப் பெற்றெடுக்கும்-வளர்க்கும் முறைகள், ஆரோக்யமான ஆயுளை நீட்டிக்கும் முறை, முதலியவற்றின் மீது ஆதாரமான உள்ளன.  இவற்றிற்கு மக்களே அத்தாட்சியாக இருக்கிறார்கள். ஏனெனில் உலகத்திலேயே, இரண்டே இரண்டு நாகரிகங்கள் தாம், அதிகமான மக்கட்தொகையுடன், தொடர்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறது. சுவாமி விவேகானந்தர் சொன்னபடி, ஐரோப்பியர்கள் தங்கள் உடல்களில் காட்டுமிராண்டிகள் போல வண்ணங்களைப் பூசிக்கொண்டு, காடுகளில் திரிந்து, குகைகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, இந்தியாவில் தலைசிறந்த நாகரிகம் இருந்தது. அந்நிலையில் இந்திய மருத்துவத் தொன்மையினைப் பற்றி ஆராய்வோம்.

இந்திய எலும்பியல் புத்தகம் (4-5ம்நுற்றாண்டைச்சேர்ந்தது): பவர் ஓலைச்சுவடி (Bower manuscript[1]) என்பது சுமார் நான்காம் நூற்றாண்டு வாக்கில் ஒரு மாணவன் வைத்திருந்த புத்தகம் அல்லது கையெழுத்துப் பிரதி கையேடு ஆகும். மரப்பட்டையில் எழுதப்பட்டு 51 சுவடிகள் கிடைத்தன. அப்படியென்றால் எத்தனை சுவடிகள்-பக்கங்கள் காணாமல் போயின என்று தெரியவில்லை[2]. லெட்டினென்ட் எச். பவர் (Lieutenant Hamilton Bower) என்பவரால் மத்திய ஆசியாவில் 1890ல் கஷ்ச்கர் என்ற இடத்தில் ஒரு பழைய பௌத்த ஸ்தூபியின் அடியில் கண்டெடுத்ததால், அவர் பெயரில் அழைக்கப் படுகிறது[3]. ஆனால் அந்த மருத்துவப் புத்தகம் அல்லது கையேடு யாருடையது என்று தெரிவிக்கப்படவில்லை. கையெழுத்து – வரிவடிவம் அமைப்பு முறையில் அது சுமார் நான்காம் நூற்றாண்டு என்று தேதியிடப்பட்டுள்ளது. ஆனால், அதிலுள்ளவை (மருத்துவ விஷயங்கள்) அந்த நூற்றாண்டைச் சேர்ந்தவையல்ல. இந்திய மருத்துவத்தின் தொன்மைக்கு ஆதாரமாக இது எடுத்துக் காட்டப்படுகிறது. ஆனால் அவற்றில் எழுதப்பட்டவை சுமார் 600 BCE காலத்தில் சுஷ்ருதர் மற்றும் சரகர் எழுதிய மருத்துவ நூல்களில் உள்ளவற்றை உறுதிப்படுத்துகின்றது[4]. அதாவது சுமார் 1000 வருடங்களாகப் பின்பற்றப்பட்டு வந்த எலும்பியல் மருத்துவமுறை அப்புத்தகத்தில் விளக்கப்பட்டிருந்தது.

Contents

Parts I to III, the three medical treatises of the collection, comprise a total of 1,323 verses and some prose; … It is evident from this familiarity with metrical writing that the author of the three medical treatises was well versed in Sanskrit composition. … The author of parts IV-VII was not conversant with scholarly Sanskrit; these treatises are written, in a mixed type of language.

Part I opens with a flowery description of the Himalayas, where a group of mu­nis reside, interested in the names and properties of medicinal plants. Mentioned by name are the following sages: Ātreya, Hārīta, Parāśara, Bhela, Garga, Śāmbavya, SuśrutaVasiṣṭha, Karāla, and Kāpya. Suśruta, whose curiosity is aroused by a particular plant, approaches muni Kāśirāja, enquiring about the nature of this plant. Kāśīrāja, granting his request, tells him about the origin of the plant, which proves to be garlic (laśuna), its properties and uses …. A small tract on miscellaneous [medical] subjects follows.

Part II, which opens with a salutation addressed to the Tathāgatas, contains, as stated by the author, the Navanītaka, a standard manual (siddhasaṃkarṣa), containing the foremost formulae of the great sages, made up by them of old ….

Part III is a fragment of a formulary, the contents of which correspond to chapters one to three of part II.

Parts IV and V contain two short manuals of Pāśakakevalī, or cubomancy, i.e., the art of foretelling a person’s future by means of the cast of dice. …

Parts VI and VII contain two different portions of the same text, the Mahāmāyurī, Vidyārājñī, a Buddhist dhāraṇī that protects against snake-bite and other evils. …

ருடால்ப் ஹார்னெல் (August Rudolf Frederich Hoernle 1841-1918) என்பவர் இதைப் பதிப்பித்துள்ளார்[5]. இவர் எழுதியுள்ள எலும்பியல் (Osteology or the bones of the human body) புத்தகத்தில் இந்தியர்களின் எலும்பியர் அறிவை எடுத்துக் காட்டியுள்ளர்[6]. ஆனால், அதற்கு முன்னிருந்த ஆரோக்யமான இந்திய மனித வாழ்க்கைக்கு எதுவும் ஆதாரம் இல்லை என்பதாகாது. சுமார் 9000 YBP / 7000 BCE ஆண்டுகளுக்கு முன்னர் சிந்து சமவெளி நாகரிகத்தில் வாழ்ந்த மனிதர்களுக்கு பற்களிலுள்ள உபாதைகளைப் போக்க மிகநுண்ணிய 06-0.7 mm துளைப்போடும் கடைசல் ஊசி (drill bit) கொண்டு ஓட்டைப்போட்டு[7] அறுவைசிகிச்சை (dental surgery) செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளன[8]. காஷ்மீரில் கிடைத்துள்ள சுமார் 3000 BCE ஆண்டுகள் காலத்தைய பழங்கற்கால மனிதனின் மண்டையோடுகளில் மிகநுண்ணிய துளைப்போடும் கடைசல் ஊசி மூலம் போடப்பட்ட துளைகள் காணப்படுகின்றன. இதற்கு ட்ரெபினேஷன் (Trepenation) என்று பெயர் அதாவது ஒருவிதமான மண்டையோட்டு (Cranial surgery) ரணச்சிகிச்சை / ஆபரேஷன் ஆகும்[9]. புத்தர் பிறந்ததும், இறந்ததும்[10] அறுவைசிகிச்சையினால்தான்[11]. இதையெல்லாம் சித்தர்கள் செய்தார்களா அல்லது கைதேர்ந்த ரணசிகிச்சை வல்லுனர்கள் செய்தார்களா என்று பார்க்கவேண்டும்.

ஐரோப்பிய இனவாதமாயைகள் இந்தியாவில் வேரூன்றி வேற்றுமையை வளர்த்தவிதம்: 19-20 நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் தங்களது ஆளுமையினை நிலைநிறுத்துக் கொள்ள இனம், ஜாதி, மக்கட்பிரிவு போன்ற பிரிவுமுறைகளை பொய்ஞானத்துடன் (Pseudo-science) விஞ்ஞானம் (Science) என்று வெளியிட்டுப் பரப்பினர். குறிப்பாக ஆசியா, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் தமது காலனிய குற்றங்களை (Colonial atrocities and lootings) மறைக்க அத்தகைய இனவாத சித்தாந்தங்களை (Racial hypotheses and theories) வைத்தது. ஆனால், ஒவ்வொரு நாட்டிலும் உள்ளூர் அரசியல்வாதிகளை அச்சிந்தனையால் ஊக்குவித்து பிரிவினையை உண்டாக்கி வெளியேறினர். அதனால், அப்பிரிவினை எண்ணங்கள் இன்றும் அத்தகைய உள்ளூர் சித்தாந்திகளால் சமூகம் பாதிக்கப்பட்டு வருகிறது. மருத்துவத்திலும் அப்பிரச்சினை வருகிறது.

சித்தர்கள் இந்தியர்கள் தாம், இந்துக்கள்தாம்: இதெல்லாம் ஆரியர்கள் செய்தார்களா-திராவிடர்கள் செய்தார்களா என்று விவாதிப்பது சரியாகாது. ஆனால் திராவிடர்கள்தான் செய்தார்கள் என்று ஆதாரங்கள் இல்லாமல் எழுதுவதுதான் சரியில்லை. அப்படியென்றால் பவர் ஓலைச்சுவடியின் அம்மாணவன் அல்லது நூலாரிசியர் தமிழில் எழுதியிருக்கலாம். ஆனால், சமஸ்கிருதத்தில் எழுதியிருப்பதால், சாதாரண மக்களின் போதனாமொழி சமஸ்கிருதம் என்றாகிறது. மத்திய ஆசியாவில் கிடைத்தது என்பதனால் ஆரியர்கள் என்று கூறுவதும் தவறாகும். அதனால் ஆரியர்கள் தாம் எழுதினார்கள் என்று சொல்வதும் சரியாகாது. ஏனெனில் இனரீதியில் ஆரியர்கள்-திராவிடர்கள் என்று இந்தியர்களைப் பிரித்துப் பார்ப்பது சரித்திர ரீதியிலும், விஞ்ஞான ரீதியிலும் தவறானது[12]. இதே போலத்தான் சித்தர்களின் விவாதமும்.

சித்தமருத்துவத்தின் தொன்மைக்கான ஆதாரங்கள்: இக்கால சரித்திராசிரியர்கள் எழுதப்பட்டுள்ள ஆவணங்கள் (written documents, records) இருந்தால் தான், குறிப்பிட்ட காலத்தின் சரித்திரத்தை ஒப்புக்கொள்வார்கள். அதாவது, எல்லாவற்றிற்கும்– அகழ்வாய்வு (archaeological), கல்வெட்டு (epigraphical), நாணயவியல் (numismatic), சமகால (contemporary) மற்றும் இலக்கிய (literary) ஆதாரங்கள், அத்தாட்சிகள், சான்றுகள் இருந்தால்தான் ஒப்புக்கொள்வார்கள். ஆகவே சித்தர்களைப் பற்றி எழுதினால் அத்தகைய ஆதாரங்கள் இருக்க வேண்டும். சித்தமருத்துவமுறையைப் பற்றி எழுதினால் அவ்வாறான பழமையான ஓலைச்சுவடிப் புத்தகங்களைக் காட்டவேண்டும். சித்தமருத்துவம், மருத்துவமுறை, மருந்துகள், உபகரணங்கள் முதலியவற்றைப் பற்றிய அத்தகைய ஆதாரங்கள் எல்லாமே 19-20 நூற்றாண்டுகளைச் சேர்ந்ததாக இருக்கின்றன. பெரும்பலான சித்தர்-சித்தமருத்துவ எழுத்தாளர்கள் உணர்ச்சிப்பூவமான கருத்துகளையே கொடுத்து வருகிறார்கள்.

சித்தர்களை தமிழுக்குள் அடக்கமுடியாது: சித்தர்களின் இலக்கியங்களிலேயே “சித்த மருத்துவம்” அல்லது “சித்த வைத்தியம்” போன்ற சொற்றொடர்கள் காணப்படவில்லை. மற்ற இடைக்கால அல்லது முந்தகால தமிழ் இலக்கியங்களிலும் இல்லை. ஆனால் “ஆயுள்வேதம்” அல்லது “ஆயுர்வேதம்”, சல்லியதந்திரம் போன்ற சொற்றொடர்கள் காணப்படுகின்றன. யூகிமுனி தனது “சிகிட்ச சார சங்கிரம்” என்ற நூலில் தான் சமஸ்கிருத நூல்களில் உள்ளவற்றை தமிழில் எளிதாக அளிப்பதாகக் குறிப்பிடுகிறார்[13]. அகஸ்தியரோ “பரிபூர்ணம்” என்ற நூலில் “ஆயுர்வேதமிது தோற்றம் காண்டம் நான்கு” எனக்குறிப்பிடுகிறார்[14]. தெலுங்கிலும் அகஸ்தியர் பெயரில் மருத்துவ நூல்கள் உள்ளன. ஆகவே இந்தியாவில் “சித்தர்கள்” என்று தனியாக தமிழகத்தில் இருந்தார்கள், ஆந்திரத்தில் இருந்தார்கள், தென்னிந்தியாவில் இருந்தார்கள், வடவிந்தியாவில் இருந்தார்கள், குமரிக்கண்டத்தில் இருந்தார்கள், சிந்துசமவெளியில் இருந்தார்கள், இருந்தார்கள், என்றெல்லாம் எழுதிவருவது அதைவிட அபத்தமானதாகும். அகத்தியரை புராண ரீதியில் கேவலப்படுத்திவிட்டு, “சங்கங்கள்” என்பது பார்ப்பன சதி என்று ஒதுக்கிவிட்டு[15], பிறகு அவர் முதல் சங்ககாலத்தில் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தார். அதே அகத்தியர் தாம் 19-20 நூற்றாண்டி எழுதப் பட்ட பாடல்களுக்கும் ஆசிரியர் என்று எழுதுவது, பேசுவது மற்றும் அத்தகைய பொய்மையை “சித்தர்கள்” என்றோ “சித்தமருத்துவம்” என்றோ குறிப்பிட்டு, தெய்வீகத்தை, புனிததன்மையை நுழைத்து அதே பழிப்பாளர்கள், தூஷித்தவர்கள், மற்றும் பகுத்தறிவாளிகள் தம்பட்டம் அடித்துக் கொள்வதும் கேவலமானதாகும்.

ஆகவே இங்கு வேதமதத்தில் “சித்தர்கள்”, ஜைனத்தில் “சித்தர்கள்”, பௌத்தத்தில் “சித்தர்கள்” என்றதும் அவ்வாறு தனித்தனியாக இருந்தார்கள் என்பதாகாது. அதேபோல அக்காலத்தில் இருந்த மக்கள் “இந்துக்கள்” என்பதும் நிதர்சனமான உண்மையாகும். அதனால் மதரீதியில் விளக்கம் கொடுக்கப்படுகிறது என்பதாகாது. இனி “சித்தர்கள்” எனப்பட்டவர்கள் வேதகாலத்தில் அல்லது வேதங்களில் சொல்லியவண்ணம் எப்படியிருந்தார்கள் என்று பார்ப்போம்.

© வேதபிரகாஷ்

05-09-2012


[1] The Bower Manuscript is named after Hamilton Bower who, being then a lieutenant, obtained it early in the year 1890, in Kucā, from a local inhabitant during a confidential mission from the Government of India. Kucā is the name of one of the principal oases and settlements of Eastern Turkestan (part of China), on the ancient great caravan route to China. The MS was found by native treasure- seekers in a stūpa close to the Ming­ Öi (the “Thousand Houses”, a system of rock-cut grottos with Buddhist shrines) of Qum Turā about 13 (or 16) miles from Kucā, in February 1890. On his return to In­dia, Lieutenant Bower took the MS to Simla, whence it was forwarded to Colonel J. Waterhouse, who was then the President of the Asiatic Society of Bengal. Colonel Wa­terhouse exhibited the MS at the monthly meeting of the Society on November 5, 1890, when also a note from Lieutenant Bower was read, explaining the circumstances of the discovery. After the meeting some attempts were made to decipher the MS, but they proved unsuccessful. However, a GermanIndologistG. Bühler, succeeded in reading and translating two leaves of the MS, reproduced in the form of heliogravures in the Proceedings of the Asiatic Society of Bengal. Immediately after his return to India in February 1891, A. F. R. Hoernle began to study the MS. At the meeting of the Society in April 1891, he was able to communicate the first decipherment. The Government of India sanctioned, in 1892, Hoernle’s proposal to prepare a complete edition of the text, illustrated with facsimile plates, and accompanied by an annotated English trans­lation. The first part of the edition appeared in 1893, the second part (in two fasciculi) in 1894-95, and the remaining parts in 1897.

G. J. Meulenbeld, A History of Indian Medical Literature, Groningen: Forsten, (1999–2002), vol. IIa, pp. 3–12. an edited extract from the above book. http://en.wikipedia.org/wiki/Bower_Manuscript

[2] In 1889 local treasure hunters found a cache of manuscripts in a site south of Kucha on the northern Silk Road and subsequently sold some to a local scholar, Haji Ghulam Qadir. In turn, one was purchased from him by an Indian Army intelligence officer, Lieutenant Bower, who sent the fifty-one folios of birch bark in an unknown language to the Asiatic Society of Bengal. Here it was studied by A. F. R. (Rudolph) Hoernle, Principal of Calcutta Madrassah and a respected scholar of Indo-Aryan languages. Hoernle soon realised the importance of this manuscript, which contained several Buddhist texts in Sanskrit, and he subsequently wrote that its discovery and publication ‘started the whole modern movement of the archaeological exploration of Eastern Turkestan.’

http://idp.bl.uk/pages/collections_en.a4d

[3] சோழர்களின் செப்பேடுகளை லேடன் என்பவர் ஆராய்ந்ததால், அவை லேடன் பட்டயங்கள் என்றழைக்கப்படுகின்றன. அவை எப்படி லேடனுக்கு சம்பந்தம் இல்லையோ, இதுவும் அதேப்போலத்தான். இந்தியர்களின் மனங்களையும் அடிமையாக்க இத்தகைய யுக்திகளைக் கையாண்டுள்ளார்கள். போகப்போக உண்மையினை மறந்து, அவ்வாறே திரிபு விளக்கம் கொடுத்து சரித்திரமும் எழுதலாம்.

[4] Rudold Hoernle, The Bower Manuscript, Fascimile Leaves, Nagaru Transactions, Romanised Tranaliteration and English translation with notes, Royal Asiatic Society, Calcutta, 1907. ஜூலை 1907 ஆக்ஸ்போர்டில் எழுதிய முன்னுரையில் காண்க.

[5] Rudold Hoernle, The Bower Manuscript, Fascimile Leaves, Nagari Transactions, Romanised Tranaliteration and English translation with notes, Royal Asiatic Society, Calcutta, 1907.

[6] Rudold Hoernle, Osteology or the bones of the human body, Clarendon Press, Oxford, London, 1907.

[8] Coppa, A., et al. 2006. Early Neolithic tradition of dentistry. Nature 440(6 April 2006):755-756.

[9] Maria Mednikova, Post-mortem Trepenations in Central Asia: Types and Trends, in Kurgans, Ritual sites and Settlements: Eurasian Bronze and Iron Age, pp.269-279.

[10] Arthur Waley, Did Buddha die of eating pork?: with a note on Buddha’s image, Melanges Chinois et bouddhiques, Vol.1031-32, Juillet 1932, pp.343-354 (as accessed on August 21, 2006 at http://ccbs.ntu.edu.tw.FULTEXT/JR-MEL/waley.htm

[11] K.V. Ramakrishna Rao, The Position of Surgery before and after Buddha, in Sastra Trayi-Proceedngs of Bhaskariyam-Bharatiyam-Dhanvantariyam, 2007, Bangalore, pp.197-198.

[12] இப்பொழுது மரபணு ஆய்வுகள் இந்தியர்கள் எல்லோரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று எடுத்துக் காட்டியுள்ளன. மனிதவியல் கருத்துகளை சித்தாந்தரீதியில், அரசியல் அல்லது சமூகங்களைப் பிரிப்பதற்காக உபயோகப்படுத்துவது, பெரிய குற்றமாகும். ஆரிய-திராவிட இனவாதம் அப்படித்தான் ஆங்கிலேயர் மற்ரும் கிருத்துவ மிஷனரிகளால் உருவாக்கப்பட்டது.

[13] கந்தசாமி முதலியார், யூகிமுனி சிகிட்ச சார சங்கிரம், 1897.

[14] அகத்தியர், அகஸ்தியர் பரிபூர்ணம் அல்லது அகத்தியர் பெருநூல், நாலுகண்ட வைத்திய காவியம், பக்கம்.2

[15] திராவிட சித்தாந்திகள் இறையனார் அகப்பொருள், நக்கீரன் என்ற பார்ப்பனரால் எழுதப்பட்டது. அவையெல்லாம் பொய், பித்தலாட்டம், ஆரியர்களின் புனைக்கதை, பார்ப்பனர்களின் சதி என்று ஒதுக்கினர்.

Posted in அகத்தியர், அகஸ்தியர், அபின், அறுத்தல், அறுவைசிகிச்சை, ஆபரேஷன், ஆயுர்வேதம், ஆயுள், ஆயுள்வேதம், எலும்பியல், கஞ்சா, கடைசல் ஊசி, கத்தி, சரகர், சல்ய, சல்லிய, சிகிச்சை, சிந்து சமவெளி நாகரிகம், சுவாமி, சுவாமி விவேகானந்தர், சுஷ்ருதர், தேரையர், நூல், நோய், பிணம், புலஸ்தியர், மயக்கம், மருந்து, யூகிமுனி, ரணச்சிகிச்சை, ருடால்ப் ஹார்னெல், லெட்டினென்ட் எச். பவர், விவேகானந்தர் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »