சித்தர்களின் மூலம், பாரம்பரியம், இன்றைய நிலை

வரலாற்று நோக்கில் சித்தர்கள் ஆராய்ச்சி

Posts Tagged ‘சூபி’

திகம்பர-நிர்வாண அரேபியர்கள்–வெள்ளையுடையணிந்தவராக – ஸ்வேதம்பரர்களானது எவ்வாறு?

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 23, 2012

திகம்பரநிர்வாண அரேபியர்கள்வெள்ளையுடையணிந்தவராகஸ்வேதம்பரர்களானது எவ்வாறு?

திகம்பர அரேபியர்கள் ஸ்வேதம்பரர்களானது எவ்வாறு?: முஸ்லீம்கள் ஹஜ் பயணம் செய்வது இப்பொழுது, ஊடகங்களில் காட்டி வருவதால், ஓரளவிற்கு அவர்களது பழக்க-வழக்கங்கள் தெரிய வருகின்றன. இருப்பினும் பெரும்பான்மையான விவரங்கள் முஸ்லீம்களுக்குத்தான் தெரியும். அத்தகைய கிடைக்கும் விஷயங்களை ஓரளவிற்கு எடுத்துக்கொண்டு இங்கு அலசப்படுகின்றன. ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரை செல்லும் முஸ்லீம்கள் பிராமணர்களைப் போல தலையை மழித்துக் கொண்டு, ஒற்றை வெள்ளாடை அணிந்து, இக்கல்லை ஏழுமுறை சுற்றி வருகின்றனர் (தவஃப்). வித்தியாசம் என்னவென்றால் அப்பிரதக்ஷணமாக (இடப்பக்கமாக வலம் வருதல்) சுற்றுகின்றனர். உண்மையில் அவர்கள் நிர்வாணமாக சுற்றிவரவேண்டும்[1]. அதாவது மனிதர்கள் பிறக்கும் போது, நிர்வாணமாக பிறாப்பதால், ஆண்டவன் முன்பாக செல்லும்போது, அதே கோலத்தில் / நிலையில் இருக்கவேண்டும். அப்பொழுதுதான், ஆண்டவன் வேண்டியதைக் கொடுப்பான் என்ற நம்பிக்கை இருந்தது. பெண்களும் அவ்வாறே இரவு நேரத்தில் சுற்றி வந்தனர்.

அரேபியர் காபாவை நிர்வாணமாகச் சுற்ற வேண்டும், கூடாது என்பதற்கான வாதவிவாதங்கள்: அக்காலத்தில் காபா வளாகம் குரேஷி மக்கள் வசம் இருந்து, நிர்வாகிக்கப்பட்டு வந்தது. காபாவில் சென்று சுற்றுவதற்கு அவர்களிடம் துணி வாங்கிக் கொண்டு செல்லவேண்டும், ஆனால், அதற்கு பணம் இல்லாதவர்கள் நிர்வாணமாகச் சென்றார்கள் என்று சில இஸ்லாமிய பண்டிதர்கள் விளக்கம் கொடுக்கிறார்கள். இருப்பினும், ஆடை அணிந்து கொண்டும், ஆடையில்லாமலும், ஒரே நேரத்தில் பக்தர்கள் காபாவைச் சுற்றிவர முடியாது. இதனால் ஏற்பட்ட பிரச்சினையைத் தீர்க்க அனைவருமே ஆடையணிந்து வரவேண்டும் என்ற முறை ஏற்படுத்தப் பட்டிருக்கலாம். இதனால், அவர்கள் வெள்ளையுடை அணிந்து கொண்டு சுற்றிவர ஆரம்பித்தனர். இப்பழக்கம் 630-631 (ஹிஜிரி 9) ஆண்டுகளின்று அமூலுக்கு வந்ததாகத் தெரிகிறது[2]. “யயூம்உன்நஹ்ர்” (Yeum-un-Nahr) என்ற பெரிய திருவிழாவின் போது, நபிகள் இனிமேல் விக்கிர ஆராதனையாளர்கள் யாரும் அங்கு வரக்கூடாது மற்றும் நிர்வாணமாக சுற்றிவரக்கூடாது, என்று ஆணையிட்டார்[3] (அலி மூலம் பிரகடனப்படுத்தப் பட்டது). முதலில் ஆண்கள்-பெண்கள் எல்லோருமே அங்கு சென்று வழிபட்டு வந்தனர். ஆகவே 630-631 CE வரை அரேபியர்கள் அத்தகைய நிர்வாண வழிபாட்டை தொடர்ந்து கடைபிடித்து வந்தனர். இதைத்தவிர பற்பல சடங்குமுறைகளை பின்பற்றிவந்தது, இன்றும் வருவது (இவற்றை ஆசார முஸ்லீம்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்[4]) கடந்தகாலத்தை நினைவூட்டுவதாக இருக்கிறது எனலாம்.

  1. சந்திரனைப் பார்ப்பது.
  2. நாற்பது நாட்கள் நோன்பு காப்பது.
  3. சூரியன் உதிப்பதிலிருந்து, மறையும் வரை உண்ணாமலிருப்பது.
  4. ஹஜ் யாத்திரைக்குச் செல்வது.
  5. ஆண்கள்-பெண்கள் சுத்தமாக இருப்பது. பெண்கள் மாதவிடாய் காலத்தில் இருக்கக்கூடாது.
  6. அப்ரஹாமைப் போல பலியிடுவதற்குப் பதிலாக, தலையை வெட்டிக் கொள்வதற்கு பதிலாக, மொட்டை அடித்துக் கொள்வது.
  7. மொட்டையடித்துக் கொள்வது, நீராடுவது, ஒற்றையாடை அணிவது.
  8. பெண்கள் ஆண்களைப் போன்று ஆடையணியாமல் இருப்பது. பச்சைநிற ஆடைகள் கிடைக்கவில்லையென்றால், மற்ற நிற ஆடைகளை அணிவது.
  9. பெண்கள் முகத்தை மறைக்காமல் இருப்பது
  10. ஆண்கள் வலது தோள் தெரியும்படி இஹ்ரம் அணியவேண்டும், ஆனால், பெண்கள் அவ்வாறு செய்யக்கூடாது.
  11. இஹ்ரம் அணிந்த பிறகு சொரியாமல் இருப்பது.
  12. காபாவை ஏழுமுறை சுற்றி வருவது (தவாஃப்), ஆனால், பெண்கள் மறுக்கப்படுவது.
  13. முதல் மூன்று சுற்றுகளில் ஆண்கள் ஓடிவரவேண்டும், பெண்கள் ஓடவேண்டாம்.
  14. பெண்கள் காபாவிற்கு அருகில் செல்லாமல் இருப்பது, தவாஃப் இரவில் செய்வது.
  15. கருப்புக்கல்லை பெண்கள் முத்தமிடாமல், தூரத்திலிருந்து கையை ஆட்டுவது, சைகை செய்வது.
  16. மிருகத்தைப் பலியிடுவது, ஆனால், வேட்டையாடமல் இருப்பது.
  17. சஃபா மற்றும் மார்வா என்ற குன்றுகளிக்கிடையே ஓடுவது (ரமால்).
  18. புனிதமான அராஃபத் மலையை அடைவது.
  19. ஆண்கள் மொட்டையடித்துக் கொள்வது, பெண்கள் சிறிது முடியை வெட்டிக் கொள்வது.
  20. ஹஜ் முடியும்வரை தலையை நிமிர்த்தி வைத்துக் கொள்வது
  21. புனித பள்ளிவாசலுக்குச் சென்று (உம்ரா), ஹஜ்ஜை பூர்த்தி செய்து கொள்வது.

இதைத்தவிர குரானில் இல்லாதவற்றைப் பின்பற்றப்படுவதாக, கீழ்கண்ட சடங்குகள் சொல்லப்படுகின்றன[5]:

  1. எத்தகைய செருப்பை அணிவது
  2. இஹ்ரம் (ஒற்றை வெள்ளையாடை) கட்ட பின்னை உபயோகப்படுத்துவது.
  3. அராஃபத்தில் தொழுகை
  4. எவ்விதமான கற்களைப் பொறுக்கி எடுத்துக் கொள்வது
  5. ஹஜ் சென்றுவந்தால் செய்த பாவங்கள் போய்விடும் என்று நம்புவது.
  6. பிறந்த குழந்தைக்கு மொட்டை அடிப்பது.
  7. காணிக்கைச் செல்லுத்துவது.

இவற்றைத் தவிர அதிகமான, சர்ச்சைக்குறியவைகள் பல இருப்பதால், அவை கொடுக்கப்படவில்லை.

இச்சடங்குகளை உன்னிப்பாகப் பார்க்கும்போது, மந்த்ரதந்தரயந்த்ர வழிபாடுகள், கிரியைகள், சடங்குகள் பின்பற்றப்பட்டு வந்தன, ஆனால், நபிக்குப் பிறகு அவை மாற்றப்பட்டன, மறைக்கப் பட்டன என்று தெரிகிறது. எது எப்படியாகிலும், இப்படி சரித்திரத்தை மறைப்பதனால் உண்மையினை அறியமுடியுமா? மெய்ஞானம், மெய்ஞானியர், சூபிக்கள், சித்தர்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் போது, இவற்றை மறைத்து, மறந்து உண்மையினை புரிந்து கொள்ள முடியுமா?

வெள்ளைக் கருப்பானது, நிர்வாணம் மறைந்தது: ஜைனர்கள் மேற்குப் பக்கமாக சென்று பல பகுதிகளில் குடியேறினர் என்று முன்னமே சுட்டிக் காட்டப்ட்டது. அலெக்சாந்தர் எப்படி நிர்வாண சாமியார்களைக் கண்டு வாதத்தில் ஈடுபட்டு தோற்றானோ, அதேபோல, மற்றவர்களும் நிர்வாண சாமியார்களிடம் தோற்றிருப்பர். அதனால்தான் கிரேக்க சாமியார்கள் நிர்வாணமாக இருந்தனர் என்று எடுத்துக் காட்டப்பட்டது. அதாவது நிர்வாணம் என்பது பழங்கால மதங்களில் புனிதமாகக் கருதப்பட்டது. ஆனால், அது சாதாரண மக்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது. இக்காலத்தைய மொழியில் சொல்லவேண்டுமானால் கொச்சைப்படுத்தப்பட்டது. எதனால் அத்தகைய சடங்குகள் செய்யப்பட்டன என்று சொல்லப்படவில்லை. ஆனால், வெள்ளையுடை அணியலாம், பெண்கள் பங்குக் கொள்ளக் கூடாது என்றெல்லாம் விதிமுறைகள் ஏன் வந்தன என்று விளக்கப்படவில்லை.

முன்னர் அரேபியர் அறியாமையில் இருந்தனர், பின்னர் ஒளி (நூர்) வந்தது என்றால், இரண்டு முறைகளுக்கும் உள்ள வேற்றுமைகளை அடிப்படையில் விளக்க வேண்டும். வெள்ளையாடை அணிந்து கொண்டோ அல்லது நிர்வாணமாகவோ நட்டகல்லை சுற்றி வந்தால் என்ன பலன் ஏற்படும்? இருப்பினும் அரேபியப் பகுதிகளில் அவர்கள் நெடுங்காலமாக தமது நம்பிக்கைகளுடன் தொடர்ந்து வாழ்ந்திருப்பர். பெண்களை நடத்துவதில், அடக்கி வைப்பதில் ஜைனர்கள் மற்றும் அரேபியர்களிடம் ஒற்றுமையைக் காணலாம். பிறகு பௌத்தம் ஆதிக்கத்தில் வந்தபோதும், அதே நிலை தொடர்ந்தது. பௌத்தத்தில் திகம்பரகள் இல்லாவிட்டாலும், மற்ற கொள்கைகள், நம்பிக்கைகள் ஒரேமாதிரியாகத் தான் இருந்தன. ஆகவே இப்படி பல காலக்கட்டத்தில் அரேபியர்கள் மாறியபோது, பழைய பழக்க-வழக்கங்கள், நம்பிக்கைகள் தொடர்ந்தன. அதனால்தான், நபிகள் மெக்காவில் காபாவில் கல்லை விட்டுவைத்தார். வருடம் தோறும் நடைப்பெற்றுவ்வந்த யாத்திரை, சடங்குகள் முதலியவற்றை மாற்றியமைத்தார்.

அரேபியா முகமது நபிக்கு முன்னர் மற்றும் பின்னர்: மத்திய ஆசியாயைப் போல வளைகுடா (Gulf), செங்கடல் (Red Sea) மற்றும் மத்தியத்தரைக்கடல் (Mediterranean) நாடுகளிலேயும் வேத-ஜைன-பௌத்த மதங்கள் இருந்து, பிறகு அவை கிரேக்க-மணிக்கிய-கிருத்துவ-முகமதிய மதங்களாக அங்கங்கு உருமாறியுள்ளன. அசோகர் காலத்தில் புத்தமதம் எகிப்து வரை பரவியிருந்தது. எகிப்தில் லக்ஷார் (Luxor) என்ற இடத்தில் உள்ள புத்தர்சிலை இதற்கு சான்றாக உள்ளது. அலெக்ஸ்சாண்டிரியா, டமாஸ்கஸ், பாக்தாத், நிஷாபுரி, காந்தாரம், மூல்தான், கங்காபூர், இந்திரபிரஸ்தம் பாதையில் (traditional route) மக்கள் சென்று வந்துள்ளனர். முகமது நபி (570-632 CE) தோன்றுவதற்கு முன்பு அரேபியாவில் இருந்த மதத்தைப் பற்றிய குறிப்புகள் பல இருப்பினும் முகமதியர்கள் அவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. முஸ்லீம்களைப் பொறுத்தவரையில், முகமது நபிக்கு முந்தைய அரேபிய காலத்தை காஃபிர்கள் (நம்பிக்கையில்லாதர்கள் வாழ்ந்த) இருண்டகாலமாகவே (ஜஹல்லியா) கருதுகின்றனர். இஸ்லாமின் ஒளிபட்ட பிறகுதான் அங்கு, நம்பிக்கையுள்ளவர்களின் (மோமின்கள்) வாழ்க்கை மலர்ந்தது. ஆகையால் பழங்காலத்தை– 7ம் நூற்றாண்டிற்கு முந்தையதைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை. அவற்றை மறைக்க, மறக்க, மறுக்க முயல்கின்றனர்[6].

அரேபியாவில் ஹிந்துக்கள் / இந்தியர்கள்: அசோகனின் கல்வெட்டுகள் மேற்காசியாவில் இருந்தன என்பது, அவை அங்கிருக்கும் இந்தியர்களுக்குத் தான் என்று தெரிகிறது. அதாவது ஒரு பக்கம் பாரசீகர் மறுபக்கம் கிரேக்கர்கள் ஆதிக்கத்தில் இருந்தாலும் இந்தியர்களின் சமூக ஆதிக்கம் அவற்றைவிட உயர்ந்திருந்தது என்பதனை அது காட்டுகிறது. பாரசீகர் மற்றும் கிரேக்கர்கள் தமது சரித்திரத்தில் இந்தியாவை வென்றது மாதிரி எழுதி வைத்துக் கொண்டாலும், உண்மையில் அவ்வாறில்லை என்பது இக்கல்வெட்டு ஆதாரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இரண்டாம் நூற்றாண்டில் யூப்ரடீஸ் (Euphrates) நதிக்கு மேலே, வான் என்ற ஏரிக்கு மேற்கே டாரோன் (canton of Taron) என்ற பகுதியில் இந்தியர்களின் காலனி இருந்தது என்று ஜெனோப் (Zenob) என்ற சிரிய எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார்[7]. இந்துக்கள் அங்கு இரண்டு கோவில்களைக்கட்டி அதில் 16 மற்றும் 22 அடி உயரமுள்ள விக்கிரங்களைப் பிரதிஸ்டை செய்து வழிபட்டனர்[8]. அரேபிய எழுத்தாளர்கள் அவர்களை ஜுத், மெய்த், சியபஜாப், அஹமிரா, அஸ்விர என்றழைத்தனர். இந்துக்கள் அந்தளவிற்கு பெருபான்மயினராகவும், செல்வாக்குடனும் இல்லாமலிருந்தால் தான், அவர்களால் அங்கு கோவில் கட்டிக் கொள்ள முடிந்தது.

இந்துக்கள் முக்கியமான வேலைகளில் அமர்த்தப்பட்டது எப்படி, ஏன்?: டபிள்யூ. எச். சித்திக்கி என்பவர் இந்த வார்த்தைகளுக்கு என்ன பொருள் என்று விளக்கியுள்ளார்[9].  இங்கு “அஸ்விரா” என்ற சொல்லிற்கான விளக்கம் முக்கியமாக உள்ளது.  இந்தியர்கள் ராணுவம், கருவூலம், ஜெயில்-பாதுகாப்பு, சமையல் போன்ற வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள், ஏனெனில் அவர்கள் “மிக்க பலசாலிகள் மற்றும் வீரர்கள்”, “சிந்து பகுதிகளிலிருந்து வந்த சிவப்பானவர்கள்” மற்றும் “நம்பிக்கையுள்ள காப்பாளிகள்” என்றெல்லாம் விவரிக்கப்பட்டுள்ளார்கள். அவ்வாறான இந்துக்களை இந்தியாவிலிருந்து வரவழைத்து அங்கு “நம்பிக்கையான—பாதுகாப்பு-கருவூலம்” போன்ற வேலைகளுக்கு அமர்த்தப்பட்டார்கள் என்பதைவிட, அவர்கள் அங்கேயே வாழ்ந்து வந்ததால், அக்காலம் வரை இந்துக்கள் அதிகமாக இருந்தார்கள் என்பதினால், அவர்கள் வேலைக்கு அமர்த்தப் பட்டார்கள் என்று தெரிகிறது. அந்த அளவிற்கு இந்துக்கள் சிறந்திருக்கும் போது, அவர்களது மதம் மற்றும் மதகுருக்கள் முதலியோர் அங்கு சிறந்திருந்தன என்பதில் வியப்பில்லை. அதனால்தான் 16 மற்றும் 22 அடி உயரமுள்ள விக்கிரங்களைப் பிரதிஸ்டை செய்து வழிபட்டனர் என்றுள்ளது.

ஹிந்த்ஹிந்த்ஸாஹிந்தானி: “அஸ்விரா” என்ற வார்த்தை “அஸ்வவரா” என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து பெறப்பட்டது. இந்தியாவில் செய்யப்பட்ட கத்திகள் மிகவும் சிறந்தவை, மெல்லியவை ஆனால் கெட்டியானவை, வளைக்கக்கூடியதாக உள்ளவை ஆனால் உடையாதவை என்று “சைஃப் அல்ஹிந்த்”, “ஹிந்தி”, “முஹான்னித்”, “ஹிந்தானி”, “ஹந்தவானி” அதாவது “ஹிந்தியாவிலிருந்து / இந்தியாவிலிருந்து” வந்தவை என்று பொருள். இந்தியப்பொருள்கள் எல்லாம் அரேபியமொழியாக்கம் பட்டு வழங்கி வந்தன. கபூர் (கற்பூர்=கற்பூரம்), ஜென்ஜ்பீல் (ஜெஞ்பீர்=இஞ்சி), ஃபுல்ஃபில் (பீபல்=அரசமரம்), சஜ் (சக்வான்), குஸ்த் (குஸ்தா), தாஜி (தரி), கரான்புல் (கரான்ஃபூல்) என்று சமஸ்கிருதச் சொற்கள் மாற்றப்பட்டவை என்று எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இதைத்தவிர அரிசி, தோகை போன்ற தமிழ்சொற்களும் காணப்படுகின்றன. ஆகவே, 1300 வருடங்களுக்கு முந்தைய அரேபிய வரலாற்றை மறந்து, மறுத்து, மறைத்து உண்மை வரலாறு படிப்பதாகாது. மூலங்களை மறைத்து, எந்த நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியம் உண்மையினை அறியமுடியாது. அப்படி மறைத்தால் புதியதாக வந்துள்ளது என்று பொருளாகிவிடும்.

இந்திய புத்தகங்கள் அரேபியமொழியில் மொழி பெயர்க்கப்பட்டது, பிறகு இலத்தீனில் மொழிபெயர்க்கப்பட்டது, ஐரோப்பிய நாடுகளில் பரவியது: முகமது மறைந்து நூற்றாண்டுகளில் அப்பாஸித் காலத்தில் (8-9 நூற்றாண்டுகள்) பாரதத்திலிருந்து சமஸ்கிருதப் பண்டிதர்கள் வரவழைக்கப் பட்டு, இந்திய மருத்துவ, வானியல் முதலிய நூற்கள் அரேபிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன.  அப்பாஸித் சுல்தான்கள் 750-1242 வரை பாக்தாத்லிருந்து ஆட்சி செய்து வந்தனர்[10]. பாக்தாத், கெய்ரோ, கர்டோவா முதலிய இடங்களில் ஏற்படுத்தப்பட்ட பல்கலைக்கழகங்களில் அவர்கள் பெரும்பங்காற்றினர். “விஸ்வ-வித்தியாலயா” என்பவை அக்காலத்தில் பாரதத்தில் தான் பிரபலமாக இருந்தன. அதனால் தான், உலகம் முழுவதும் அறிஞர்களே அங்குச் சென்று படித்துச் சென்றனர். பைதாகோரஸ், பிளாட்டோ முதலியோர் வந்து சென்றது முன்னமே குறிப்பிடப்பட்டது.

அப்பாஸித் காலத்தில் இந்திய புத்தகங்கள் அரேபிய மொழியில் மொழி பெயர்க்கப் பட்டது: அப்பாஸித் காலத்தில் (8-9 நூற்றாண்டுகள்) பாரதத்திலிருந்து சமஸ்கிருதப் பண்டிதர்கள் அரேபியா சென்றுவரக்கூடிய நிலைமை இருந்தது. காலிப் அரூன் அல்-ரஷீத் (786-809 CE) மற்றும் அல்-மா’மூன் (813-33 CE) காலத்தில் பல நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன[11]. அப்படியென்றால் அவர்களுக்கு சமஸ்கிருதம்-அரபி இரண்டு மொழிகளும் தெரிந்திருந்தது என்றாகிறது. பிறகு அரேபிய எழுத்தாளர்கள் மற்றும் உள்ளூர் மருத்துவர்கள் இந்தியமுறைகளை மாற்றி மற்றும் தங்களது சொற்களைச் சேர்ந்து எழுதினர். அமீர் பஹர் அல்-ஜாஹிஸ்[12] (பாஸ்ராவைச் சேர்ந்தவர், 869ல் இறந்தார்), அல்யாகுபி[13] (900ல் இறந்தார்), அபூ மஷார் அல்-பல்கி[14] (885ல் இறந்தார்), முதலியோர் அரேபிய மருத்துவ முறைகளில் இருக்கும் இந்திய தாக்கத்தைப் பதிவு செய்துள்ளனர்.  அரேபியர்களுக்கு எல்லாம் தெரிந்திருந்தது என்றால், அவர்கள் இந்திய பண்டிதர்களை அங்கு வரவழைத்திருக்க வேண்டாம். முன்னரிருந்தவர்கள் தங்களது பாரம்பரையத்தை படிப்பிலும் தொடர்ந்திருந்தால், அந்நிலை ஏற்பட்டிருக்காது. ஆனால், அவர்கள் தங்களது பாரம்பரியங்களை மறந்ததினாலும், புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆட்சிகளில் மாற்றுமுறைகள் ஏற்படுத்தியதாலும், பழயவை மறக்கடிக்கப் பட்டிருக்கலாம். இதனால் தான், சரித்திரம் எழுதுவதில் பிரச்சினை வருகிறது.

அரேபியர் மூலம் இந்திய புத்தகங்கள் ஐரோப்பிய நாடுகளில் பரவியது: 9-11 நூற்றாண்டுகளில் அரேபிய மருத்துவர்கள், இந்தியமருத்துவ முறைகள் பலவற்றை தமது நூல்களில் சேர்த்துக் கொண்டுள்ளனர், தகவமைத்துக் கொண்டுள்ளனர். இவை 13ம் நூற்றாண்டில் இலத்தீனில் மொழிபெயர்க்கப்பட்டு, ஐரோப்பிய நாடுகளில் பொதுப் புத்தகங்களாக உலா வந்தன. இந்தவிதமாக இந்திய மருத்துவமுறையைப் பற்றிய ஞானம் இடைக்காலத்தில் ஐரோப்பாவில் தெரியவந்தது. முதலில் அரேபியர்கள் மூலம் அறிந்தததால், அவை அரேபியர்கள் தான் கண்டுபிடித்தனர், உருவாக்கினர் என்று தவறாகப் புரிந்து கொண்டு “அரேபிய மருத்துவம்”, “அரேபிய எண்கள்”, “அரேபியப் பொருட்கள்” என்று ஐரோப்பியர் குறிப்பிட்டனர். ஆனால், பிறகு உண்மையறிந்துதான், இந்தியாவிற்கு வரத்துடித்தனர். யுனானி மருத்துவத்தை கூர்மையாக ஆராய்ந்து பார்த்தால், எதோ இந்தியமுறையில் உள்ளவற்றிற்கு முன் “அல்” என்ற வார்த்தையைச் சேர்ந்தால் யுனானியாகி விடுகிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. மருத்துவ முறைகள், நிச்சயமாக இடத்திற்கு இடம், சுற்றுச்சூழல், மக்களின் நிலை முதலியவற்றிற்கேற்றபடி மாற்றப்பட்டிருக்கும் அல்லது தகவமைக்கப்பட்டிருக்கும். ஆனால், அடிப்படை சித்தாந்தங்கள் ஒன்றாக உள்ளது, மருத்துவமுறைகளில் உள்ள சம்பந்தத்தைக் காட்டுகிறது.

அரேபியாவில் அதர்வண வேதத்தைப் பின்பற்றியவர்கள் இருந்தார்களா?: குரேஷி மக்களுக்கும் முகமது நபியைப் பின்பற்றுபவர்களுக்கும் இருந்த சண்டைகளில் அவர்கள் மிகவும் களைத்து விட்டார்கள். அதாவது குரேஷிகள் அவர்களை எதிர்த்து கொல்லப்பட்டப்வர்களின் பிணங்களைச் சேதப்படுத்துவதில் மிகவும் களைத்து விட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது[15]. ஹிந்த் என்பவள் ஓத்பா என்ற குரேஷியின பெண்ணின் மகள், அபு சுபியாவின் மனைவி. இப்பெண்கள் ஹம்ஜா / ஹம்ஸா என்ற பெண்ணின் இதயத்தைக் கிழித்து, பிணங்களின் காதுகள், மூக்குகள் அறுத்து அவற்றை கழுத்தணியாக செய்துகொண்டு அணிவித்துக் கொண்டனர். அதாவது அப்பெண்கள் அப்படி வஞ்சம் தீர்த்துக் கொண்டனர் என்பதைவிட, அத்தகைய முறைகள் இருந்துள்ளன என்று தெரிகிறது. இவை மறைமுகமாக மந்த்ர-தந்தர-யந்த்ர முறைகள் பின்பற்றியதாகக் கொள்ளலாம். இந்தியாவில் குற்றம் செய்த பெண்களைக் கொல்வதில்லை, மாறாக மூக்கு-காது இவற்றை அறுத்து உயிருடன் விட்டுவிடுவது வழக்கம். பிறகு அவர்கள் அறுவைசிகிச்சை மூலம் சரிசெய்து கொள்ளலாம். இம்முறை மஹாரஷ்ட்ரத்தில் 19ம் நூற்றாண்டு வரை இருந்தது.

முஹம்மதுகாலத்திற்குமுந்தைய / இஸ்லாமியகாலத்திற்குமுந்தையஅரேபியாவில் இருந்த  இந்துக்களின் விக்கிரங்கள்: அரேபியாவில் சிவன், சிவசக்தி, மும்மூர்த்தி வழிபாடுகள் இருந்தன என்பதற்கான அகழ்வாய்வு ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. நபி வீனஸை வழிபட்டுவந்தார் என்றுள்ளது. சந்திரன் அவகளுக்கு விருப்பமான கடவுளாக இருந்தது. குரானிலேயே “அல்லாவின் மூன்று மகள்கள்” என்று அல்-மனத், அல்-லத், அல்-உஜ்ஜா என்று மூன்று பெண்தேவதைகளின் பெயர்கள் காணப்படுகின்றன. இவையெல்லாம் முஹம்மது-காலத்திற்கு-முந்தைய-அரேபியாவில் / இஸ்லாமிய- காலத்திற்கு-முந்தைய-அரேபியாவில் (Pre-Mohammedan Arabia / Pre-Islamic Arabia) இருந்தன என்று எழுதப்படுகிறது. 11ம் நூற்றாண்டின் பாரசீக குறும்சித்திரத்தில் காபா-வளாகத்தில் இருந்த 360 விக்கிரங்கள் எப்படி அழிக்கப்பட்டன என்பதனை விளக்குகிறது அதாவது சுமார் நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சியை இச்சித்திரம் விவரிக்கிறது. இச்சித்திரம் பைபிளியோதெக் நேஷனல், பாரிஸ். (the Bibliotheque Nationale, Paris) என்ற ஆவணக்காப்பகத்தில் உள்ளது.

காபாவில் இருந்த 360 விக்கிரங்கள் உடைத்து அழிக்கப் பட்டது: அச்சித்திரம் இடது பக்கமேல் மூலையைக் காட்டுவதாக உள்ளது. மூலையிலிருது இருபக்கமும் ஆறு விக்கிரங்கள் இருப்பதாக உள்ளது. தலையில் கிரீடம், இரு கைகள் உயர்த்தப்பட்ட நிலையில் அவற்றில் ஆயுதங்கள் இருப்பது போல உள்ளன. பீடத்தின் மேலே பத்மாஷணத்தில் உட்கார்ந்திருக்கின்றன. அவற்றைப் பார்க்கும்போதே அவையெல்லாம் இந்துக்களின் விக்கிரங்கள் என்று பார்ப்பவர் யாராக இருந்தாலும் தெரிந்து கொள்ளலாம். அவை எவ்வாறு அழிக்கப்பட்டன என்று படிப்படியாக சித்தரிக்கப்பட்டுள்ளன:

  1. நூற்றுக்கணக்கான வீரர்கள் கைகளில் தடி, கடப்பாரைப் போன்ற கருவிகளுடன் விக்கிரங்களை நெருங்கி வருகிறார்கள்.
  2. நபியின் ஆணைப்படி, உடைக்கிறார்கள், நபி ஒரு வெள்ளைக் குதிரையின் மீது உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.
  3. மூலைப்பகுதியில் 13 சந்நிதானங்களில், 13 விக்கிரங்கள் உள்ளன. உடைந்த நான்கு விக்கிரங்கள், தரையில் வீழ்ந்து கிடக்கின்றன.
  4. பீடத்தில் இருந்த விக்கிரகம் தலைகீழாகப் புரட்டப் பட்டு, தீ வைத்துக் கொளுத்தப்படுகிறது.
  5. இன்னொன்று பீடத்திலிருந்து தள்ளிவிடப்பட்டு, தலை, கால்கள் முதலியவை துண்டு-துண்டாக உடைக்கப்பட்ட நிலையில் உள்ளது.
  6. ஒரு விக்கிரகத்தில் உள்ள கடவுள் / தேவதை, அஒயப்பன் போன்றே கால்களை வௌத்துக் கொண்டு உட்கார்ந்த நிலையில் காணப்படுகிறது.
  7. ஒரு விக்கிரத்தின் முண்டம் கீழே தரையில் காணப்படுகிறது. அருகில் தலையுள்ளது.
  8. இன்னொரு உடைந்த விக்கிரத்தின் மீது, ஒருவன் நின்றுக் கொண்டிருக்கிறான்.

629 CEல் நபி மெக்காவிற்கு வந்தபோது, மணிஃப் (Manif) என்ற விக்கிரத்தை உடைத்து தனது கால்களின் கீழ் போட்டு மிதித்தார்[16]. அவர்களைப் பின்பற்றியவர்களும், இப்படி விக்கிரங்களை அழிப்பது, நபியின் வழி என்று பின்பற்றினர். இதனால், உலகில் பல ஆதாரங்கள் அழிந்தன. அரேபியர் ரோம் மற்றும் பாரசீக நாகரிகங்களை அழித்தனர்.

ஹிந்த் உம் சல்மா,  ஹிந்த் முதலிய இந்தியப் பெண்மணிகள்: அபு சுபியாவின் மனைவி ஹிந்த் என்பவள் ஓத்பா என்ற குரேஷியின பெண்ணின் மகள், என்று குறிப்பிடப்பட்டது. அதேபோல முகமது நபியின் மனைவிகளில் ஒருத்தியின் பெயர் ஹிந்த் உம் சல்மா என்பதாகும்[17]. இங்கு “ஹிந்த்” என்றால் ஹிந்து மற்றும் இந்தியப் பெண்மணி என்று பொருள்படும். ஹிந்த் = இந்தியாவிலிருந்து; ஹிந்தஸா = இந்திய எண்கள், இந்தியாவிலிருந்து வந்தவை; சிந்த்-ஹிந்த் = சித்தாந்த் = இந்திய வானியல் நூல்களைக் குறிக்கும். எனவே ஹிந்தியாவின் தாக்கம் அதிகமாகவேயுள்ளது. பர்தௌஸ்-உல்-ஹிகமத்[18]  என்ற புத்தகம் இந்திய மருத்துவத்தை (ஆயுர்வேதம்) அதிகமாகவே விளக்கியுள்ளது. ஆகவே முகமதுவிற்குப் பிறகு, இஸ்லாம் தோன்றிய பிறகு 11ம் நூற்றாண்டு வரை, பாரதத்துடன் நல்லுறவை அரேபியர்கள் வைத்திருந்தார்கள் என்று தெரிகிறது. இருப்பினும் 712 CEல் சிந்துவின் மீது அரேபியர் எப்படி படையெடுத்துவந்து நாசப்படுத்தினர் என்று தெரியவில்லை. ஆகவே, தீவிரவாத இஸ்லாம் பிரிவுகள், மிதவாதப் பிரிவுகளை விஞ்சியது என்று தெரிகிறது. பிறகு வந்தவர்கள் மதவெறியுடன் செயல்பட்டபோது, காந்தாரம், சிந்து முதலிய வடமேற்கில் இருந்த பாரதத்தின் பகுதிகள் பாதிக்கப்பட்டன. பௌத்தர்கள் பெரும்பாலும் கொல்லப்பட்டனர், அல்லது மதம் மாற்றப்பட்டனர், தப்பித்தவர்கள், சீனா, திபெத் நாடுகளுக்கு ஓடினர். வேதமதத்தினருக்கும் அதேகதிதான் ஏற்பட்டது.

வேதமதம் மாற்றப்பட்டது, மாறியது, திரிந்தது: ஆதிசங்கரர் தனது காலத்தில் இருந்த நூற்றுக்கணக்கான நம்பிக்கையாளர்களை ஒன்றிணைக்கக் கடும்பாடு பட்டாகவேண்டியிருந்தது. வேதங்களை அறிவுபூர்வமாக மட்டுமல்லாது, செயல்படுத்துவதிலும் மக்கள் பல மாற்றுமுறைகளைக் கையாளத்தொடங்கினர். ஜைன-பௌத்தர்களின் மந்திர-தந்திர-யந்திர முறைகள் பலக்குழுக்களால் பின்பற்றப்பட்டு வந்தமையால், முன்னமே எடுத்துக் காட்டியபடி, பற்பல மாற்றங்கள், திரிபுகள், துஷ்பிரயோகங்கள் ஏற்பட்டன. இதனால் வேதமதத்தினரும், போட்டியாக புதியமுறைகளை புகுத்த ஆரம்பித்தனர். யாகங்களை தமது இச்சைகளுக்காக நடத்த ஆரம்பித்தனர். மந்திரப்புருஷர்களை தத்தமது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள, ஏவலிட ஆரம்பித்தனர். அதர்வணவேதம் வெறும் பில்லி, சூன்னியம், ஏவல் போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால்தான் ஆசாரமிக்க வேதமதத்தினர் அவர்களை ஒதுக்கி வைத்தது. அதனால் அக்கால அரேபிய மக்கள், கிரேக்கர்களைப் போன்றே பிராமணர்களில் தாழ்ந்தவர்களாக (degraded), விலக்கி வைக்கப்பட்டவர்களாக (excommunicated) பிரிந்து போனவர்களாக, இந்தியமுறைகளினின்று மாறுபட்டவர்களாகக் கருதப்பட்டனர். இதனால்தான் அதர்வணவேதம் “சதுர்வேதங்களில்” சேர்க்கப்படாமல் “திரிவேதங்களாக” இருந்தன.  “திரிவேத-சதுர்வேத” பிரச்சினைகள் இதனால் தான் வந்தது.

ஆதிசங்கரரின் அரேபிய விஜயம் (509-477 BCE / 788-820 CE): சங்கர திக்விஜயத்தில், ஆதிசங்கரர் பற்பல நாடுகளுக்குச் சென்றபோது, வடமேற்கிலுள்ள பஹ்லிக[19], காந்தாரம், பாரசீகம் மூலமாக அரேபியாவிற்குச் சென்றதாக[20] குறிப்புள்ளது[21]. அக்காலத்தில் காபாலிகர், காலபைரவர், காளாமுகர், பாசுபத, லகுலீஸ போன்றோர் வாமச்சாரியம் என்ற கொடுமையான மந்திர-தந்திர-யந்திர முறைகளை அவர்கள் கடைப்பிடித்து, மக்களைத் துன்புறுத்த உபயோகப்படுத்தி வந்தனர். மேலும் அக்குழுக்கள் தங்களுக்குள் தங்களுடைய தேவதை-கடவுள் தான் பெரியது, சக்திவாய்ந்தது என்று சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இதனால், ஆதிசங்கரர் தர்க்கரீதியில் மற்றுமல்லாது (அத்தி.10), மற்றமுறைகளிலும் மற்றவர்களை எதிர்கொள்ளவேண்டியதாயிற்று. இதனால், –

  1. அவர் உடல் விட்டு உடல் மாறுதல் (அத்தி.9-10),
  2. மந்திர-தந்திர-யந்திர முறைகளை மூலம் அதர்வண வேதத்தை துஷ்பிரயோகம் செய்தவர்களை அடக்குதல்,
  3. நரசிம்ஹ மந்திரத்தை ஜெபித்து காபாலிகனைக் கொல்லுதல் (அத்தி.11),
  4. ஆகாயத்தில் பறந்து அரேபியாவிற்குச் சென்று அங்குள்ளவர்களை அடக்குதல்,
  5. ஜைன-பௌத்தர்களை வெல்லுதல் (அத்தி.15), போன்ற செயல்களைச் செய்துள்ளதாக திவ் மந்திர-தந்திர-யந்திர முறைகளை திக்விஜயங்கள் கூறுகின்றன.
  6. தனக்கே கொடிய வியாதியை கொடுத்தபோது, சிவனை ஜெபித்து, அஸ்வினிகுமாரர்கள் அனுப்பி வைக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை செய்து குணமானதாக விவரங்கள் உள்ளன (அத்தி.16).

பிறகு அவர்களுக்கு வேதாந்தத் தத்துவத்தை போதித்தார். இதனால் அவர்கள் பற்பல தெய்வங்களை வழிபட்டு, பின்பற்றி வந்தவர்கள், சிலவற்றை நம்பி வழிபாடு செய்யும் முறைக்களுக்குள் வந்தனர். இன்றும் அரேபிய தீபகற்பத்தில் இருக்கும் இஸ்லாமிய நாடுகளில் கிடைக்கும் அகழ்வாய்வு பொருட்கள் இந்திய நாகரிகத்தைப் பொன்றேயுள்ளன. இருப்பினும் அவர்கள் உலகமெங்கும் உள்ள மக்கள் அவற்றை அறிந்து கொள்ளாதவாறு அமைதி காக்கின்றனர்.

சங்கர திக்விஜயத்தில் மருத்துவர்களைப் பற்றிய குறிப்புகள்: அபிநவகுதன் என்பவன் மந்திரத்தால், ஏவல் செய்து ஆதிசங்கருக்குக் கொடிய நோயை உண்டாக்குகிறான். அந்நிலையில், முதலில் தனது நோயைக் குணப்படுத்த மருத்துவர்களின் சிகிச்சையை மறுத்தாலும், பிறகு ஒப்புக் கொள்கிறார். அப்பொழுது, கீழ்கண்ட விவரங்கள் தரப்படுகின்றன:

  1. நோய் என்பது முந்தைய ஜென்பங்களில் செய்த காரியங்களின் பலன் (இப்பொழுது ஜீன்கள் தாம் காரணம் என்று கூறுகின்றனர்). ஆகையால் இஜ்ஜென்மத்தில் அனுபவிக்கவேண்டிய நோய்களை தவித்தால், அடுத்த ஜென்மத்தில் அனுபவிக்க வேண்டியிருக்கும் (16-9).
  2. நோய்முறைகளை அறிந்தவர்கள் கூறுவதாவது, நோய் இரண்டுமுறைகளில் வருகின்றன.

i.      பழைய காரியங்கள், ஒருவர் கடந்த காலத்தில் செய்த காரியங்கள்.

ii.      எந்திரியங்களின் கட்டுப்பாட்டை மீறி செய்த காரியங்கள்.

முன்னதை கடந்த காரியங்களின் விளைவுகள் அழித்துதான் குணப்படுத்த முடியும், பின்னதை மருந்து மூலம் குணப்படுத்தலாம் (16-10).

  1. எனக்கு வந்துள்ள நோயை அனுபவித்துதான் தீர்க்கவேண்டும். அதனால் நான் எந்தவிதமான சிகிச்சையும் பெறவிரும்பவில்லை. இதனால் நான் இறந்தாலும் பரவாயில்லை (16-11).
  2. இந்த நாட்டில் மருத்துவர்கள் அதிகமாக இல்லை. ஆனால் நோயாளிகளோ அதிகமாக உள்ளார்கள். அதனால் நோய்களைப் போக்க அவர்கள் உங்களைத் தேடி அலையும் போது, நீங்கள் அங்குபோக வேண்டும்”, என்று மருத்துவர்களுக்கு அறிவுருத்துகின்றார் (16-24).
  3. நோயாளிகள் நோய்களை உண்டாக்கிக் கொண்டதற்குக் காரணமாக இருந்தாலும், அவர்களைக் காக்கவேண்டிய பொறுப்பு மருத்தவர்களுக்குள்ளது. அது அவர்களுக்குக் கடமையாகிறது. மருத்துவர்கள் அத்தகையவராக இல்லாவிட்டால், அவர்கள் மருத்துவர்களாக இருப்பதே பிரயோஜனமில்லை, அவர்கள் பிறந்ததும் வீணே. ஏனெனில் மருத்துவர், விஷ்ணுவைப் போலாகிறார், அதாவது அவர் எல்லோரையும் காக்கிறார்” (16-25).

இவையெல்லாம் இக்கால மருத்துவ ஒழுங்குமுறை, வைத்திய-நீதிமுறை, கட்டுப்பாடு, தரநிர்ணயம் போன்ற விதிகளைப் போன்றுள்ளன.

ஆதிசங்கரர் அரேபியாவிற்கு எப்பொழுது சென்றிருப்பார்?: சங்கர விஜயத்தின்படி, ஆதிசங்கரர் அரேபியாவிற்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு போதித்தாக உள்ளது.  ஆனால், அவருக்கு இரண்டு தேதிகள் கொடுக்கப்படுகின்றன –

  1. 509-477 BCE காலம்.
  2. 788-820 CE காலம்.

இதிலும் 1200 வருடங்கள் வித்தியாசம் வருவதைப் பார்க்கலாம். சரித்திர ஆசிரியர்கள் 788-820 CE தேதியைப் பரவலாக ஒப்புக் கொண்டுள்ளனர். அப்படியென்றால் இக்காலத்தில் அவர் அரேபியாவிற்கு சென்றிருக்கவே முடியாது. ஏனெனில், இஸ்லாம் அப்பொழுதுதான் உச்சக்கட்டத்தில், பலநாடுகளிலும் பரவ ஆரம்பித்தது. முகமதியர்கள் தங்களது படைகளுடன், மற்ற நாகரிகங்கள் மீது படையெடுத்துச் சென்று அழித்து வந்தனர். எனவே அக்காலத்தில் அவர் அங்கு சென்றால் என்பதை நினைத்துக் கூட பார்க்கமுடியாது. எனவே, 509-477 BCE காலத்தை எடுத்துக் கொண்டு ஆராய்ந்தால், அத்தகைய வாய்ப்புள்ளது. ஏனெனில், அப்பொழுது, மற்ற மதத்தலைவர்கள், ஞானிகள், தத்துவஞானிகள் முதலியோர், மற்ற நாடுகளுக்குச் சென்று வந்ததாக உள்ளது. பைதாகோரஸ் போன்றோர் இந்தியாவிற்கு வந்துள்ளபோது, ஆதிசங்கரர் அரேபியாவிற்குச் சென்றதில் ஒன்றும் வியப்பில்லை. மேலும், அங்கிருந்த இந்துக்கள், விக்கிர ஆராதனையாளர்கள், காஃபிர்கள் அவரை வரவேற்று உபசரித்திருப்பர். அப்பாஸித் காலத்தில் சமஸ்கிருத பண்டிதர்கள் வரவழைக்கப்பட்டார்கள் என்பதனை நினைவு கூரத்தக்கது. அதாவது 500 BCEலிருந்து 700 CE வரை – 1200 ஆண்டுகளாக எந்த பிரச்சினையும் இல்லை, ஆனால், அதற்குப் பிறகு, முகமதியர் இந்துக்களுக்கு எதிராக கிளம்பியுள்ளனர்.

© வேதபிரகாஷ்

23-09-2012


[1] Syed Ameer Ali, The Spirit of Islam – A History of the Evolution and Ideals of Islam with a life of the Prophet, University Paperpacks, Methuen & Co., London, 1967, p.lxiv.

Hered and sixty idols,  were ranged the three hundred idols, one of each day, round the great god Hobal, carved of red agate, two ghazalas, gazelles of gold and silver,and the imageof Abraham nd of his son. Here the tribes came, year after year, “to kiss the black stone which had fallen from heaven in the primeval days of Adam, and to make the seven circuits of the temple naked.”.

[2] 600ல் வெள்ளத்தினால் காபா அழிக்கப்பட்டதால், திரும்பவும் குரேஷி மக்கள் கட்டினர். 605ல் இது புனர்நிர்மாணம் செய்து கட்டப்பட்டது என்றும் உள்ளது.

[3] Syed Ameer Ali, The Spirit of Islam – A History of the Evolution and Ideals of Islam with a life of the Prophet, University Paperpacks, Methuen & Co., London, 1967, p.108.

[4] Muhammad Alshareef,  A Woman’s Guide To Hajj full article can be read or downloaded from here:
http://www.performhajj.com/women_guide_to_hajj.php

[5] Muhammad Alshareef,  A Woman’s Guide To Hajj full article can be read or downloaded from here:
http://www.performhajj.com/women_guide_to_hajj.php

[6] எட்டாவது நூற்றாண்டில் அரேபியர் சிந்துமாகாணத்தை வெற்றிக் கொண்டு, 12ம் நூற்றாண்டில் தில்லி வரை நுழைந்தனர். 16ம் நூற்றாண்டில் வடவிந்தியா முழுவதையும் ஆதிக்கத்தில் கொண்டு வந்து 18ம் நூற்றாண்டுகளில் (1707ல் ஔரங்கசீப்பின் மறைவிற்குப் பிறகு) தென்னகத்தில் அவர்களுடைய பிரதிநிதிகள் என்றமுறையில் நவாப்புகளின் ஆட்சி ஏற்படுத்தப் பட்டது.

[7] Journal of Royal Asiartic Society, 1904, p.209.

[8] R. C. Majumdar, The Age of Imperial Unity, Bharatiya Vidhya Bhawan, Bombay, p.633.

[9] W. H. Siddiqi, India’s Conribution to Arab World, in India’s Contribution to World Thought, Vivekananda Kendra, Madras, 1970, pp.577-588.

[10] Syed Ameer Ali, The Spirit of Islam – A History of the Evolution and Ideals of Islam with a life of the Prophet, University Paperpacks, Methuen & Co., London, 1967, pp.498-497.

[11] சிந்துபாத், ஆயிரத்தோரு இரவுகள் போன்ற கதைகள் எல்லாம் இந்தியக்கதைகளைத் தழுவி, மாற்றி இக்காலத்தில்தான் எழுதப்பட்டன.

[12] M. Z. Siddhiqi, History of Arabic and Pesian Medical literature, Calcutta, 1959, p.32; See also Islamic Culture, Issue.6, p.624, 1932.

O. P. Jaggi, Indian Influence on Arab Medicine, in History of Science, Technology and Medicine in India, Vol.VIII, Atma Ram & Sons, New Delhi, 1981, pp.73.

[13] M. Z. Siddhiqi, History of Arabic and Pesian Medical literature, Calcutta, 1959, p.33; See also Islamic Culture, Issue.6, p.624, 1932.

O. P. Jaggi, Indian Influence on Arab Medicine, in History of Science, Technology and Medicine in India, Vol.VIII, Atma Ram & Sons, New Delhi, 1981, pp.74.

[14] M. Z. Siddhiqi, History of Arabic and Pesian Medical literature, Calcutta, 1959, p.41; See also Islamic Culture, Issue.6, p.624, 1932.

O. P. Jaggi, Indian Influence on Arab Medicine, in History of Science, Technology and Medicine in India, Vol.VIII, Atma Ram & Sons, New Delhi, 1981, pp.75.

[15] Syed Ameer Ali, The Spirit of Islam – A History of the Evolution and Ideals of Islam with a life of the Prophet, University Paperpacks, Methuen & Co., London, 1967, pp.70-71.

[16] H. G. Wells, The Outline of History, Cassel & Co., U.K, 1932, p.603.

[17] Syed Ameer Ali, The Spirit of Islam – A History of the Evolution and Ideals of Islam with a life of the Prophet, University Paperpacks, Methuen & Co., London, 1967, p.235.

[18] Firdaus-ul Hikamat of Ali B. Rabban-al-Tabari, B.D.M.H, 1963, 1, 1, p.26.

[19] K. V. Subbaratnam (Trans.), Madhaviya SrimacCankaradhikviya, Akhila Bharata Sankara Seva Samiti, Vani Vilas Press, Sri Rangam, 1972,  Chapter.XV, verses.142-143.

[20] K. V. Subbaratnam, The Date of Sri Sankara, Sri Vani Vilas Press, Sri Rangam, 1987, p.24.

Based on “Vimarsa”, in which it has been mentioned that Sankara visited Arabia through sky and stood poised in the sky for 64 days and taught threefold Vedic Wisdom of Karma, Upasana and Jnana to the yogins who lived there that these instructions were given in the Arabic language and recorded verbatim by the disciples yogins and that these records form the Holy Quran!

[21] ஸ்ரீவித்யாரண்யர், ஸ்ரீமச்சங்கராதிக்விஜயஹ (ஸ்ரீமாத்வீய ஸ்ரீமச்சங்கராதிக்விஜயஹ), அகிலபாரத சங்கர சேவா சமிதி, ஸ்ரீவாணிவிலாச முத்ரரலய, ஸ்ரீரங்கம், 1972.

Posted in அஜப், அரபஸ்தான், அரபி, அரபு, அரப், அரவர், அரவவாடு, அரவஸ்தான், அரேபியம், அரேபியா, அல்-ரப், அல்லா, அஸ்வினி, அஸ்வினி குமாரர், ஆயுள், இந்திரன், இந்த்ரசீல், இஸ்லாம், உடல், உயிர், காஃபிர், காபத்துல்லா, காபிரிஸ்தான், காபிர், குதிரை, சத்ரபி, சல், சாத்தான், சித்தாந்த், சிந்து, சிந்த், சிந்த்-ஹிந்த், சூபி, சூபித்துவம், துருக்கர், துருக்சாஸ், துருக்ஸாஸ், துலுக்கர், நசாத்தியா, நபி, நூரிஸ்தான், நூர், பலூச்சிஸ்தான், போகாஸ்கோய், மக்பி, மணி, மிட்டானி, மிட்டானியர், மித்திரன், மித்ரசீல், முகமது, முஸ்லீம், ரப், ரப்பா, ரப்பி, ராவுத்தன், லப்பை, வருணன், வருணாசீல், ஸல், ஹஜ், ஹஜ் பயணம், ஹலால், ஹிட்டைட், ஹிட்டைட்டவர், ஹிந்தானி, ஹிந்த், ஹிந்த்-சிந்த், ஹிந்த்ஸா, ஹீரத் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 10 Comments »

சிரவணர்களும்-பிராமணர்களும், ஜைனர்களும்-பௌத்தர்களும், இந்தியர்களும்-கிரேக்கர்களும்

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 15, 2012

சிரவணர்களும்-பிராமணர்களும், ஜைனர்களும்-பௌத்தர்களும், இந்தியர்களும்-கிரேக்கர்களும்

வேதகாலத்தில் அல்லது வேதங்கள் படிப்புமுறையாக இருந்த காலத்தில் மஹாவீரர்-புத்தர் தோன்றியது: மஹாவீரரும், புத்தரும் திடீரென்று அறிவாளிகளாக, ஞானிகளாக, தீர்த்தங்கராக அல்லது புத்தராகிவிடவில்லை. பாரதத்தில் பிறந்ததால் வேதங்கள், வேதாங்கங்கள் மற்றும் இதர புத்தகங்களைப் படித்துதான் அந்நிலையை அடைந்திருந்தார்கள். குருகுலத்தில் பிராமணர்களிடம்தாம் அவர்கள் பயின்றார்கள். க்ஷத்தியர்களாக இருந்தும் அந்நிலையை அடைந்தார்கள் எனும்போது, அக்காலத்தில் எந்தவித வேறுபாடும் இல்லையென்றாகிறது. அதாவது, வேதங்களை யார் வேண்டுமானாலும் படிக்கலாம் கற்கலாம் என்றிருந்தது. இருந்த பிராமணர்களுடன் வாதிட்டு, தத்தமது புதிய கருத்துகளை மக்களிடம் பரப்பி அவர்கள் தங்களது சீடர்களை, நம்பிக்கையாளர்களை, அபிமானிகளை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். இவற்றை அந்தந்த ஜைன-பௌத்த நூல்களே எடுத்துக் காட்டுகின்றன. ஆனால், பாரதத்தின் வடமேற்கு பகுதிகள் வழியாக ஜைனர்களின் வெளியேற்றம், கிரேக்கர்களின் நுழைவுகள் சில மாற்றங்களை ஏற்படுத்தின.

ஜைன-பௌத்த மதங்களில் இருந்தது சில வித்தியாசங்களே: மஹாவீரர். (c.599-527 BCE) மற்றும் புத்தர் (c.567-487 BCE) சமகாலத்தவர்கள் தாம். இருவர்களின் போதனைகளும் ஒரேமாதிரியாகத்தான் இருந்தன. கடவுட்கொள்கையைத் தவிர, பெரும்பாலான விஷயங்களில், வேதங்களிலிருந்து விலகவில்லை. பொதுஜனங்களுக்கேற்ற வரையில், ஜைன-பௌத்தர்கள் வேதமத நம்பிக்கையாளர்களைப் போலவே இருந்தார்கள் என்று தெரிகிறது. அவர்களது தலைவர்களும் பிராமணர்கள் போன்றே இருந்தனர் என்று தெரிகிறது. இதனால் தான், சமகால கிரேக்கர்களும் அடையாளம் காணாமல் குழம்பிபோய் இருந்தனர். ஜைன-பௌத்தர்கள் பாரத சமூகத்தில் அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் என்று அத்தகைய வெளித்தோற்றத்தைக் கொண்டிருந்தார்கள் என்றும் தெரிகிறது[1].

கிரேக்கர்கள் இந்தியாவிற்கு வந்து படித்துச் சென்றது: இந்தியா அக்காலத்தில் விஞ்ஞானம், மருத்துவம், முதலிய துறைகளில் சிறந்து விளங்கியதாலும், அதற்கான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் (ஆசிரமங்கள்) இருந்ததினாலும், பல பாரதத்திற்கு கற்க வந்தனர். சுமார் 300 BCE க்தேசியாஸ் (Keasiast) மற்றும் மெகஸ்தனிஸ் (Megasthanese) என்ற இரு கிரேக்க மருத்துவர்கள் இந்தியாவிற்கு வந்து வடவிந்தியாவில் தங்கியதாக மேனாட்டு சரித்திராசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். அவர்கள் ஒன்றும் அப்படியொன்றும் வெறுமனே தங்கியிருக்க வரவில்லை. முன்னர் கிரேக்க தத்துவஞானிகள், அறிஞர்கள் – பிதாகோரஸ்[2] (Pythagorus c.560-480 BCE), பிளாட்டோ[3] (Plato – 427-347 BCE) முதலியோரும் வந்துள்ளதாக அவர்களேக் குறிப்பிட்டுள்ளனர்[4]. இதனால்தான் கிரேக்கத் தத்துவங்களில் இந்தியத்தாக்கம் வெளியாகிறது[5]. ஆன்மா, ஆன்மா பலவுடல்களைப் பெறுவது, மறுஜென்மம், பாவம்-புண்ணியம், கர்மா போன்ற கருத்துகள் காணப்படுகின்றன. பொதுவாக கிரேக்க நுழைவுகளினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, ஏனெனில் அவர்கள் க்ஷத்தியர்களில் தாழ்ந்தவர்களாக (degraded), விலக்கி வைக்கப்பட்டவர்களாக (excommunicated) பிரிந்து போனவர்களாக, இந்தியமுறைகளினின்று மாறுபட்டவர்களாகக் கருதப்பட்டனர்[6].  புராணங்கள் இவ்விவரங்களை அதிகமாகவே தருகின்றன. எட்வர்ட் போக்காக் (Edward Pococke), காலனில் டோட் (Col. Tod), வில்லியம் ஜோன்ஸ் (William Jones) போன்றவர்களும் இதனை எடுத்துக் காட்டியுள்ளனர்.

ஜைனர்கள்-பௌத்தர்கள்-பிராமணர்கள் பற்றிய கிரேக்கர்களின் குழப்பம்: கிரேக்கர்கள், பிராமணர்களை அறிந்திருந்தனர், ஆனால், மேற்சொல்லப்பட்டக் காரணங்களால், கிரேக்கர்களை பிராமணர்கள் ஜம்புத்வீபத்தில் இருப்பவர்களாகக் கருதவில்லை[7]. மெகஸ்தனிஸ் போன்றவர்கள் பிராமணர்களை “தத்துவஞானிகள்” என்று குறிபிட்டிருக்கிறார்கள்[8]. இன்னொரு கிரேக்க ஆவணமோ அந்த தத்துவஞானிகளில் இரு பிரிவினர் சர்மேன்ஸ் (Sarmanes) மற்றும் பிராக்மேன்ஸ் (Brachmanes) என்றிருந்ததாகக் குறிப்பிட்டுகிறது. இருப்பினும் சிரவணர்கள் மற்றும் பிராமணர்கள் இடையில் கிரேக்கர்களுக்குக் குழப்பம் இருந்தது. மெகஸ்தனிஸ் இந்திய முனிவர்களை “ஹைலோபியோய்” (hylobioi) என்று குறிப்பிட்டு மற்றவரை “பௌத்த”வின் சீடர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் “ஹைலோபியோய்” என்பவர்கள் பிராமணர்கள் என்றும், “பௌத்த”வின் சீடர்கள் சிரவணர்கள் என்றும் கொள்ளலாம்.  உண்மையில் மெகஸ்தனிஸ் எழுதியதாக சொல்லப்படும் “இண்டிகா” என்ற நூலேயில்லை. பிற்காலத்தில் மெகஸ்தனிஸ் சொன்னது என்று பல கிரேக்க நூல்களில் உள்ளவற்றைத் தொகுத்து வெளியிட்டதுதான் அந்த “இண்டிகா” என்பது.

முதல் நூற்றாண்டுகளிலும் தொடர்ந்த குழப்பம்: இன்னொரு மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டு கிரேக்க ஆவணத்தை வைத்துக் கொண்டு, இந்த பிராச்மேன்கள் / பிராக்மேன்கள் / பிராமணர்கள் (Brachmanes) துங்கபத்திரை ஆற்றங்கரையில் நிர்வாணமாகச் சுற்றிக் கொண்டிருந்தார்கள் என்று விளக்கம் கொடுக்கிறார்கள்[9]. ஆனால் அப்படி நிர்வாணமாக சுற்றும் சாமியார்கள், திகம்பர ஜைன சாமியார்கள்தாம். ஆகவே கிரேக்கர்களுக்கு பௌத்த-ஜைன துறவிகளிடையே கூட வித்தியாசம் தெரியவில்லை என்று தெரிகிறது. இல்லை மேலே எடுத்துக் காட்டியபடி, அலெக்சாந்தர் தோற்றதை மறைக்க இப்படி குழப்பியிருக்கலாம். இல்லை சுமார் 250 BCE லிருந்து நான்காம் நூற்றாண்டு வரை ஜைன-பௌத்த-பிராமணர்களுக்கு வித்தியாசமே இல்லாமல் இருந்தது போலும். இல்லை ஜைன-பௌத்தர்கள் பிராமணர்களைப் போலவே தோற்றம் கொண்டு, வேடமிட்டு உலாவந்து கொண்டிருந்தார்கள் போலும். அதனால்தான், பிராமணர்கள் அவர்களை “பாஷாண்டிகள்” என்றழைத்தனர். அவர்களுக்கு வேதங்களைக் கற்றுக் கொடுக்க மறுத்தனர். ஏனெனில், வேதங்களைப் படித்து பிறகு வேதங்களையே குறைக்கூறுவது, தூஷிப்பது அவர்களது வேலையாக இருந்தது. மேலும், வேதங்களிலுள்ள பெரும்பாலான கருத்துகளையும், அடிப்படை உண்மைகளையும் ஏற்றுக் கொண்டு, அவ்வாறு வேதங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் அவர்களது போக்கும் போலித்தனமாகப் பட்டது.

அசோகர்காலத்தில் (c.250-200 BCE) சிரவணர்கள்பிராமணர்கள்சமமாக பாவிக்கப்பட்டார்கள்: அவர்களுக்கு அவர்கள் க்ஷத்தியர்களில் தாழ்ந்தவர்களாக (degraded), விலக்கி வைக்கப்பட்டவர்களாக (excommunicated) பிரிந்து போனவர்களாக, இந்தியமுறைகளினின்று மாறுபட்டவர்களாகக் கருதப்பட்டனர்[10].  அதனால், அசோகனுடைய கல்வெட்டுகளும் சிரவணர்கள், பிராமணர்கள் என்று குறிப்பிட்டு, கிரேக்கர்களைக் குறிப்பிடாமல் இருக்கின்றன சிரவணர்கள் மற்றும் பிராமணர்கள் இல்லாத சமூகக்குழுமங்களே/நாடுகளேயில்லை, ஆனால் கிரேக்கர்களிடம் மட்டும் அவர்கள் இல்லை[11]. அதாவது கிரேக்கர்கள் தங்களது நாட்டை அவ்வாறுக் கூறிக்கொள்ளவில்லை. இங்கு பண்டார்கர் போன்றோர் அயோனியர்கள் வேறு, கிரேக்கர்கள் வேறு என்று கூறுகின்றனர்[12]. ஆனால் மேற்பட்ட நம்பிக்கைகள் கொண்ட மதத்தைக் கொண்டிருந்தனர். எப்படியாகிலும் இருக்குழுக்களுமே சமுக்கத்தில் உயர்வாக மதிக்கப்பட்டார்கள் என்று தெரிகிறது. அசோகரைப் பொறுத்தவரைக்கும் இருவர்களுன் சமமாக பாவிக்கப்பட்டார்கள். “ப்ரமணஸ்ரவண” மறும் “ஸ்ரவணப்ரமண” என்ற சொற்றோடர் மாறிமாறி அசோகரின் கல்வெட்டுகளில் பல இடங்களில் உபயோகப்படுத்தப் பட்டுள்ளன.

ஜைன-பௌத்த காலத்தில் படிப்புமுறையில் மாற்றங்கள் ஏற்பட்டது: ஜைனர்கள்-பௌத்தர்கள் வேதநெறிகளினின்று மிகவும் விலகி மந்திர-தந்திர-யந்திரமுறைகளில் ஈடுபட்டபோது, சமூகத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. பெண்கள் ஒருபக்கத்தில் உரிமைகள் கொடுக்கப்பட்டாலும், மந்திர-தந்திர-யந்திரமுறைகளில் பாலியல் ரீதியில் மிகவும் சதாய்க்கப்பட்டார்கள் (Sexually exploited) என்று தெரிகிறது. மேலும் அஹிம்சையை (non-violence) போதித்துக் கொண்டு, ஹிம்சை வேலைகளில் ஈடுபட்டது, உள்ள நிலைமையை அனுசரித்து, அசோகனும் தனது கல்வெட்டில் தினமும் மூன்று மிருகங்கள் – இரண்டு மயில் மற்றும் ஒரு கருப்பு மான் – கறிக்காகக் கொல்லப்படலாம் என்று விலக்கு அளித்துள்ளார்[13]. மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். குறிப்பாக அஹிம்சை போதித்து, பௌத்தர்கள் மாமிச உணவை உட்கொண்டது பெரிய முரண்பாடே. அதேபோல, அஹிம்சை கடைபிடிக்கும் ஜைனர்கள் போர்களில் ஈடுபாட்டு, நாடுகளை தங்களது ஆதிக்கத்தில் கொண்டு வந்தது. அதில் அசோகன் மட்டும் விதிவிலக்காக இருந்தான். அவரும் கலிங்கப் போருக்குப் பிறகுதான் மாறினான். இதனால், இவர்கள் காலத்தில் பொதுப்படையாக, வெளிப்படையாக இருந்த ஆசிரமமுறை பள்ளிக்கூடங்கள் மாறி, விகாரங்கள்-மடாலயங்கள் முறை படிப்புமுறை தோன்றியது. ஆனால், ஜைன-பௌத்த விகாரங்கள்-மடாலயங்கள் ஊர்களுக்கு-நகரங்களில் வெளியில், ஒதுக்குப்புறத்தில், தூரத்தில் இருந்தன. அங்கு யார் வேண்டுமானாலும் சென்றுவிடமுடியாது, சேர்ந்து படிக்க முடியாது. அதாவது ஜைன-பௌத்தர்களுக்குத்தான் முதலிடம் என்பது தெரிந்த விஷயமே.

மடாலய-குருக்குல வேறுபாடுகள் பல்கலைக்கழகப் படிப்புகளில் சண்டை-சச்சரவானது: ஒதுக்குப்புறமாக விகாரங்களில் நடக்கும் விஷயங்கள் பொது மக்களுக்குத் தெரியாமல் இருந்தாலும், விளைவுகள் தெரியவரத்தான் செய்தன. படிப்புமுறைகளில் மட்டுமல்லாது, மருத்துவமுறைகளில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. மந்திர-தந்திர-யந்திரமுறைகள் கவனமாகக் கற்றுக் கொள்ளப்பட்டு, முறையாக, வேண்டிய காரியங்களுக்கு மட்டும் தான், உபயோகப் படுத்தப் படவேண்டும் என்றமுறை போய், யார் வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும், எப்படியும் உபயோகப் படுத்தலாம், பரிசோதிக்கலாம் என்று வந்தபோதுதான், துஷ்பிரயோகங்கள் ஆரம்பித்தன. காபாலிகர், காலபைரவர், காளாமுகர், பாசுபத, லகுலீஸ போன்றோர் தாம் பிணங்களை அறுப்பது (dissection of dead bodies – cadavre), அறுவைசிகிச்சைச் செய்வது என்றமுறை போய், மற்றவர்களும் செய்ய ஆரம்பித்தனர். கண்-பொறை நீக்கல், மண்டையோட்டு அறுவைசிகிச்சை, மற்ற ரணசிகிச்சை முதலியவை வேண்டியவர்களுக்கு ஜாக்கிரதையாக முறையாகச் செய்யப்பட்டன. புத்தரே அறுவைசிகிச்சைமூலம் பிறந்து இறந்தார், அதாவது சிஸரியன் ஆபரேஷன் மூலம் பிறந்து, தனது எண்பதாவது வயதில் பன்றி மாமிசம் உண்டபோது, உணவுக்குடலில் சிக்கிக் கொண்டு, அறுவைசிகிச்சை செய்யப்பட்டு, பலன் அளிக்காமல் இறந்தார். இதனால், அறுவைசிகிச்சைமுறை, பாரத்தில் தடை செய்யப்பட்டது. ஆனால், பாரத்ததிற்கு வெளியே தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டது[14].

பிணங்களை அறுப்பது-அறுவைசிச்சை செய்வது முதலியன: அஹிம்சை போதித்த ஜைனர்-பௌத்தர் எப்படி பிணங்களை அறுத்து மருத்துவர்கள் ஆகியிருக்க முடியும் என்று யாரும் யோசித்ததாகத் தெரியவில்லை. இதனால்தான், சரகசம்ஹிதையை சரியாகப் படிக்காதவர்கள், அறுவைசிகிச்சை பயிலும் மாணவர்களுக்கு பிணங்களுக்கு பதிலாக, காய்கறிகள் கொடுத்து, அவற்றையறுத்து பயிற்சி பெற்றனர் என்று விளக்கம் அளிக்கின்றனர். அதுமட்டுமல்லாது, இந்தியர்களுக்கு எலும்பியல் அறிவேயில்லை என்றும் முடிவுக்கு வந்து திரிபு விளக்கங்கள் கொடுக்கின்றனர். ஒரு வாதத்திற்கு எடுத்துக் கொள்வதாக இருந்தால், யாகங்கள் புரிந்த வேதகாலத்தவர்கள் ஆடு, மாடு, குதிரை போன்றவற்றைப் பலிக்கொடுத்திருந்தால், அவர்களுக்கு பிணங்களை அறுக்க ஒன்றும் தயக்கமோ, பயமோ, அறுவருப்போ இருந்திருக்காது. ஆனால், அஹிம்சை போதித்த ஜைனர்-பௌத்தர் அவ்வாறு செய்திருக்க முடியாது. ஆகவே உண்மையில் உயிர்பலி, கொலை முதலியன ஏன் தடுக்கப்பட்டது என்று ஆராயவேண்டியுள்ளது.

இன்றைக்கும் ஆயுர்வேதம்-சித்தா படிக்கும் மாணவர்கள் [B.A.M.S (Bachelor of Ayurvedic Medicine and Surgery) மற்றும் B.S.M.S (Bachelor of Siddha Medicine and Surgery)] பிணங்களை அறுத்து (dissection of dead bodies – cadavre) பயிற்சி இல்லாமல் மருத்துவர் ஆகமுடியாது. அம்மருத்துவக் கல்லூரிகளில் பிணங்கள் அழுகாமல் பாதுகாத்துவைக்க குளிர் அறை இருந்தால் தான், அப்படிப்புகளுக்கு ஒப்புதலே அளிக்கப்படுகிறது. ஆகவே, பழங்காலத்தில் ஒன்றும் தெரியாமல், கண்-பொறை நீக்கல், மண்டையோட்டு அறுவைசிகிச்சை, மற்ற ரணசிகிச்சை முதலியவற்றை செய்தனர் என்பது ஏதோ “சித்துவேலை” காட்டுவதைப் போல இருக்கும். அத்தகைய “சித்தர்கள்” அக்காலத்தில் இருந்திருக்க முடியாது. எனவே அறுவைசிகிச்சை செய்யப்பட்டதற்கு அகழ்வாய்வு ஆதாரங்கள் இருக்கும் போது, அதற்கான மருத்துவர்கள் மற்றும் அறுவைசிகிச்சை வல்லுனர்கள் இல்லை என்று வாதிடுவது அற்பத்தனமாகவே தோன்றுகிறது.

© வேதபிரகாஷ்

14-09-2012


[1] இது சூப்பிக்கள் இந்துமதத்துறவிகள் போல, பிற்காலத்தில் சித்தர்கள் போல வேடமிட்டு உலா வந்தது போன்றது எனலாம். கிருத்துவர்களும் அதேபோல காவியுடையணிந்து, குடுமி வைத்துக் கொண்டு உலல வந்தார்கள். இன்றைக்கும் கிருத்துவர்கள் தங்களை பத்மா முதலியார், மணி ஐயர் என்று கூறிக்கொண்டு, பாமர மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

[2] Pythagoras arrived in India too late to come into personal contact with the Buddha, he was greatly influenced by his teachings. He went to India a student, he left it as a teacher, and even to this day he is known in that country as Pitar Guru, and as Yavanacharya, the Ionian Teacher.

http://www.ship.edu/~cgboeree/greeks.html; http://9waysmysteryschool.tripod.com/sacredsoundtools/id13.html

[3] Typically Indian are the dying words of Plotinus, noblest of the Neo-platonists “Now I seek to lead back the self within me to the All-self.” One great teacher has said, “The end of knowledge is to know God – not only believe; to become one with God – not only to worship afar off.” We gain a hint in the Kathopanishat (V1- 17) “Let a man with firmness separate it (the soul) from his own body, as a grass stalk from its sheath,” to which point we will return later.

[4] Richard Garbe, India and Christendom, He points out, “…………….the historical possibility of the Greecian world of thought being influenced by India through the medium of persia must unquestionably be granted, and with it the possibility of the above-mentioned ideas (of the Sankyan and Vedanta Philosophy) being transferred from India to Greece”.

E. W. Hopkins says: “Plato is full of Sankhyan thought, worked out by him, but taken from Pythagoras. Before the sixth century B.C. all the religious philosophical ideas of Pythagoras are current in India. (L. Schroeder, Pythagoras). If there were but one or two of these cases, they might be set aside as accidental coincidences, but such coincidences are too numerous to be the result of change. ”

[5] வில்லியம் ஜோன்ஸ் போன்றோர் பாரதம் மற்றும் கிரேக்க கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, முதலியவற்றிலுள்ள பல ஒற்ருமைகளை எடுத்துக் காட்டியுள்ளனர். இக்கருத்து வலுப்பட்டபோது தான், தலைக்கீழ் கருதுகோள்களை மேனாட்டவர் உண்டாக்கி, கிரேக்கர்களிடமிருந்து இந்தியர்கள் காப்பியடித்தார்கள் என்று முன்வைத்தார்கள்.

[6] மஹாபாரத யுத்தம் நடந்த பின்னர், க்ஷத்தியர்கள் பாண்டவர்-கௌரவர் என்று இருதரப்பில் சேந்து சண்டையிட்டதால் அவர்களிடம் அவ்வாறான பாகுபாடு ஏற்பட்டது. மேலும் துவாரகை கடலில் மூழ்கி யாதவர்கள் முழுவதுமாக அழிந்தபோது, கிருஷ்ணரும் மறைந்தார். அப்பொழுது ஒன்பது கோள்களும் ஒரே கோட்டில் வந்ததால் கலியுகம் பிறந்ததாகக் கணக்கிடப்படுகிறது. அது 3102 BCEயிலிருந்து ஆரம்பிக்கிறது. இக்கலி சகாப்தம் குறிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான கல்வெட்டுகளும் ஆவணங்களும் உள்ளன.

[7] Romila Thapar, Asoka and the Decline of the Mauryas, Oxford University Press, New Delhi, 1987, p.167.

[8] Strabo, XV, I, p.59.

[9] Pseudo-Origen, Philosophia, p.24.

[10] மஹாபாரத யுத்தம் நடந்த பின்னர், க்ஷத்தியர்கள் பாண்டவர்-கௌரவர் என்று இருதரப்பில் சேந்து சண்டையிட்டதால் அவர்களிடம் அவ்வாறான பாகுபாடு ஏற்பட்டது. மேலும் துவாரகை கடலில் மூழ்கி யாதவர்கள் முழுவதுமாக அழிந்தபோது, கிருஷ்ணரும் மறைந்தார். அப்பொழுது ஒன்பது கோள்களும் ஒரே கோட்டில் வந்ததால் கலியுகம் பிறந்ததாகக் கணக்கிடப்படுகிறது. அது 3102 BCEயிலிருந்து ஆரம்பிக்கிறது. இக்கலி சகாப்தம் குறிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான கல்வெட்டுகளும் ஆவணங்களும் உள்ளன.

[11] J. Bloch, Les Inscriptions d’Asoka, Paris, 1950, p.128.

[12] D. R. Bhandarkar, Asoka, Univesity of Calcutta, 1969, P.27

[13] அசோகருடைய 14ம் கல்வெட்டு. Edict.No.I, The Sacredness of life.

[14] K.V. Ramakrishna Rao, The Position of Surgery before and after Buddha, in Sastra Trayi-Proceedngs of Bhaskariyam-Bharatiyam-Dhanvantariyam, 2007, Bangalore, pp.197-198.

Posted in அகத்தியர், அரேபியா, அறிவு ஜீவி, அறுத்தல், அறுவை சிகிச்சை, அறுவைசிகிச்சை, ஆத்மா, ஆனந்தம், ஆன்மா, ஆபரேஷன், ஆயுர்வேதம், ஆயுள், ஆயுள்வேதம், ஆரியன், ஆரியம், எலும்பியல், ஓலை, கடைசல் ஊசி, கத்தி, கந்தகம், கரைசல், காபாலிகம், காயம், சக்தி, சல்ய, சல்லிய, சிகிச்சை, சித்தார்த், சித்த்ஞானம், சிந்தனை, சீனா, திகம்பர, திகம்பரம், திரவிடம், திராவிடன், திராவிடம், திருமூலர், நரம்பு, பாதரசம், பாரதம், பிணம், பிண்டம், பித், பித்தம், மந்திரம், மனச்சிதைவு, மூச்சு, மூளை, மேரு, வில்லியம் ஜோன்ஸ் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 Comments »