சித்தர்களின் மூலம், பாரம்பரியம், இன்றைய நிலை

வரலாற்று நோக்கில் சித்தர்கள் ஆராய்ச்சி

Archive for the ‘சித்தஜலம்’ Category

1450 BCEயிலிருந்து முகமதுநபி (570-632 CE) காலம்வரை அரேபியாவில் வாழ்ந்தவர்கள் யார்?

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 23, 2012

1450 BCEயிலிருந்து முகமதுநபி (570-632 CE) காலம்வரை அரேபியாவில் வாழ்ந்தவர்கள் யார்?

 

இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக இஸ்லாமிற்கு-முகமது நபிக்கு முன்னர் அரேபியாவில் வாழ்ந்தவர்கள் யார் என்ற கேள்வி எழுகின்றது. அக்காலத்தில் சுற்றிலும் இருந்த நாகரிகத்தவர் சிறந்திருந்ததால், அரேபிய மக்களும் சிறப்பான நாகரிகத்தைக் கொண்டிருக்க வேண்டும். அவர்களில் முனிவர், அறிஞர், சித்தர், ஞானியர் போன்றோர் இருந்திருக்கவேண்டும். மக்கள் ஆரோக்யம், உடல்நலம் விஷயங்களிலும் சிறந்திருக்க வேண்டும். அதற்கான மருத்துவமுறையும்  இருந்திருக்க வேண்டும்.  அப்படியிருக்கையில், இஸ்லாமிற்கு-முகமது நபிக்கு முன்பான அரேபிய சரித்திரம் இருட்டடிக்கப் பட்டுள்ளது. அம்மக்கள் இருண்ட காலத்தில், அறியாமையில், விக்கிர ஆராதனை போன்ற பாவச்செயல்களில் ஈடுபட்டிருந்தனர் என்றும் விவரிக்கப்படுகிறது. ஆனால், அவர்களின் மொழியான அரேபியமொழி இன்றைய முஸ்லீம்களுக்கு தேவமொழியாக இருக்கிறது. நபி பேசிய மற்றும் குரான் மொழி அரேபிய மொழிதான். பிறகு அத்தகைய தேவமொழியைப் பேசி வந்தவர்கள் எப்படி இருண்ட காலத்தில், அறியாமையில் மூழ்கியிருந்தார்கள் என்று தெரியவில்லை.

அரேபியாஎன்பதுஎன்ன?: ஜைனர்கள் பாரத்தத்தின் வடமேற்குப் பகுதி வழியாக வெளியே சென்றனர், கிரேக்கர் உள்ளே வந்தனர் எனும்போது, அரேபியாவிற்கும் அவ்வாறுதான் சென்றிருப்பர். முதலில் அரேபியா மற்றும் அரேபியர் என்பன என்னவென்று புரிந்து கொள்ளவேண்டும்[1], ஏனெனில் இஸ்லாமிற்கு – நபிக்கு (570-632 CE) முன்பான அரேபியர்களைப் பற்றிய முழு விவரங்களை சரித்திர ஆசிரியர்கள் முழுமையாகக் கொடுப்பதில்லை. அவற்றை நூறு-இருநூறு ஆண்டுகள் பழமையான புத்தகங்களினின்று பெறவேண்டியுள்ளது. ஜெஸிரத்-அல்-அரப் (Jezirat-al-arab) என்பவர்கள் அரேபியாவில் இருந்தவர்கள் என்றும், அவர்கள் இருந்த இடம் அரபிஸ்தான் (Arabistan) என்றும் பாரசீகர்கள் மற்றும் துருக்கியர்கள் குறிப்பிட்டு வந்தார்கள்[2]. “ஜெஸிரத்அல்அரப்” என்றால் “அரேபியரது தீவு” என்று பொருள். அதாவது முன்னர் அரேபியா தீவாக இருந்ததா அல்லது அரேபியர் மற்ற மக்களிடமிருந்து தனித்து இருந்தார்களா என்று தெரியவில்லை. பாரசீகர்கள் ஒரு “சத்ரப்பை”த் தொடங்கி அதற்கு “அராபியா” என்று பெயரிட்டனர்[3]. பாரசீக “சத்ரபி” என்ற சொல் “க்ஷத்ரபாவ” என்ற சமஸ்கிருத சொல்லினின்று உருவானது, க்ஷத்திரியர்கள் வாழும் / ஆட்சிசெய்யும் இடம் என்று பொருள். “அரேபியா” என்றால் சதுரமான இடம் என்று பொருள். அரேபிய மொழியில் “மக்பி” என்றால் கனச்சதுரம் மற்றும் “காபா” என்பது முஸ்லீம்கள் வழிபடும் இடமாகும். “அரப்” என்றால் “பதவியா / பெதுவியா” என்ற நாடோடிக் கூட்டத்தையும் குறிக்கும். யூதமொழியில் “இரப்” என்றல் பாலைவனம், அதாவது செமித்திய மொழியிலும் பாலைவனம் மற்றும் அங்குவாழும் மக்களைக் குறிக்கிறது ஆனால் எந்த மக்களினத்தையோ, நாட்டையோக் குறிக்கவில்லை[4].

அரேபியர்கள்எவ்வாறுஅடையாளங்காணப்பட்டனர்?: அரேபிய அகராதிகளில் அரபி (ஆண்பால் ஒருமை. அரபியா (பெண்பால் ஒருமை) மற்றும் அரப் (பலவின்பால்) என்று அரேபிய மக்களைக் குறிக்கின்றன:

  1. ஒருவனுடைய மொழி அல்லது பேச்சு அரேபிக் மொழியானது அல்லது தூய்மையான அரேபியமொழியானது.
  2. அஜீரணமாகி, வயற்று உபாதையினால் அவஸ்தைப் படுபவன்.
  3. யாரொருவன் குழம்பி அல்லது சிதைந்து போயுள்ளானோ அவன்.
  4. யாரொருவன் அரேபியர்களுடன் கலந்து ஐக்கியமாகியுள்ளானோ அவன்.

பிறகு “அரப்” என்பது “அஜப்” என்ற வார்த்தையோடு ஒப்பிடும்போது, “அரப்” என்பது “தெளிவாகப் பேசுவது” ஆனால் “அஜப்” என்றால் தெளிவில்லாமல் பேசுவது அல்லது மற்றவர்களுக்குப் புரியாதமாதிரி பேசுவது என்று பொருள் கொள்ளப்படுகிறது. உண்மையில் பாரசீகர் அரேபியரை குறைவாக மதிப்பிட்டபோது, பதிலுக்கு அரேபியர் பாரசீகர்களை “அஜப்” என்று கூறிக் கிண்டலடித்தனர். சமஸ்கிருதத்தில் “ரப்” என்பது “சத்தம், கூச்சல், இரைச்சல்” என்று பொருள். “ரவ்” என்பது “ரப்” என்றும் உச்சரிக்கப்படும், அல்+ரவ் அல்லது அல்+ரப் =அரவ் / அரப் என்றானது. அதனால்தான் சத்தம்போடுபவனை, கூச்சலிடுபவனை “அரவவாடு” என்று தெலுங்கர் அழைக்கின்றனர். மேலும் இப்பகுதியில் குதிரைகள் உள்ளன அல்லது குதிரைகள் வரவழைக்கப்படுகின்றன என்பதால் “அரவஸ்தான்” என்று அழைக்கப்பட்டது[5]. அரபிஸ்தான்-அரவஸ்தான்-அரவத்தான்-ராவுத்தன் என்று தமிழில் பெறப்படுகிறது. மாவுத்தன் யானைப்பாகன் என்றால் ராவுத்தன் குதிரையோட்டியாகிறான்[6]. அதாவது குதிரைகளை வாங்குபவன், விற்பவன், வளர்ப்பவன், பழக்குபவன் என்றுள்ளது.

அரேபியர்கள் யார்?: இதைத்தவிர, அரேபியாவில் வாழ்ந்த எல்லோரும் அரேபியர் என்றழைக்கப்பாட்டாலும், அரேபிய எழுத்தாளர்கள், அவர்களைப் பிரித்துக் காட்ட, கீழ்கண்டவாறு அழைத்தனர்:

  1. அல்அரப்அல்பைதா = காணாமல் போன அரேபியர், மறைந்து போன அல்லது சரித்திரகாலத்திற்கு முந்தைய அரேபியர், முதல் அல்லது உண்மையான அரேபியர்.
  2. அல்அரப்அல்அரிபா = உண்மையான அரேபியர் அதாவது தென்னரேபியாவில் வாழும் அரேபியர் அல்லது கஹ்தான் வழிவந்தவர்கள் (ஜோக்தான் என்று பைபிளில் சொல்லப்படுகிறது).
  3. அல்அரப்அல்மூதா‘அர்ரிபா = அரேபியர்களுடன் ஐக்கியமானவர்கள், அல்-முஸ்தா ‘ரிபா = அரேபியர்களை நாடுபவர்கள், அரேபியமயமாக்கப்பட்டவர்கள். மோஸ்தராபியர் அல்லது இஸ்மாயில் வழிவந்தவர்கள்.

ஆகவே அரேபியாவில் இருப்பவர்கள் எல்லோருமே “அரேபியர்” அல்லர். அதேபோல இஸ்லாம் தோன்றி வளர்ந்தபிறகு, அரேபியாவில் இருந்தவர்கள் முஸ்லீம்களாக மாறியப் பிறகுக் கூட அரேபியர் எல்லோருமே “முகமதியர்”, “முசல்மான்கள்”, “முஸ்லீம்கள்” ஆகிவிடவில்லை. இந்திய கல்வெட்டுகளில் “துருக்கர், துலுக்கர், துருக்ஸாஸ்” எனப்படுபவர் எல்லோரும் முகமதியரா அல்லது துருக்கியிலிருந்து வந்தவரா என்றும் ஆராயவேண்டியுள்ளது. இஸ்லாம் தோன்றுவதற்கு முந்தைய இருந்த அரேபியர் மற்றும் இஸ்லாம் தோன்றிய பின்னர் அரேபியர் அனைவரையும் “முகமதியர்” என்றோ “இஸ்லாமியர் / முஸ்லீம்கள்” என்றோ எழுதிவைப்பது பிற்கால முஸ்லீம் எழுத்தாளர்களுக்கு வழக்கமாகியது[7].

அரேபியர்கள் இந்தியர்கள் செய்வதை தலைகீழாக செய்பவர்களா?: வேதமதத்தினர்-இந்துக்கள் செய்வதை தலைக்கீழாக செய்பவர்கள் ஜைனர்கள்-பௌத்தர்கள்-முகமதியர்கள் என்ற வழக்கும் உள்ளது. முதலில் ஜைனர்கள்-பௌத்தர்கள் அவ்வாறு செய்தாலும், பிறகு, பொதுவான இந்திய கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் மற்றும் நாகரிக காரணிகளால் சேர்ந்தே வாழ்ந்தார்கள். ஆனால், முகமதியர் ஆரம்பத்திலிருந்தே, வேறுபட்டு தலைகீழாக செய்து வந்ததால் அவர்களை “அரவநாட்டவர்” என்றே அழைத்தனர். தெலுங்குக்காரர்களை “கொலுடி” என்று தமிழர்கள் கலாட்டா செய்வது வழக்கம். அதாவது தெலுகு என்பதனை திருப்பிப் போட்டு குலுதி-குலுடி-கொலுடி என்று கிண்டல் செய்தனர். இதனால், தெலுங்கர் தமிழர்களை “அரவர் / அரவவாடு” என்று சொல்வதுண்டு. அதவாது துலுக்கர்களைப் போல தலைகீழாகச் செய்பவர்கள் என்ற பொருட்பட கூறினர். இந்துக்கள் அழுதால், துலுக்கர் சிரிப்பர்; இந்துக்கள் சிரித்தால், துலுக்கர் அழுவர்; குழந்தை பிறந்தால் அழுவர், யாராவது இறந்தால் சிரிப்பர் என்றெல்லாம் சொல்வதுண்டு. மேலே பாரசீகர்-அரேபியர் ஒருவரையொருவர் எவ்வாறுக் கூறிக் கொள்வர் என்று எடுத்துக் காட்டப்பட்டது. அதுபோல, ஆயிரக்கணக்கான வருடங்களாக அரேபியாவில் இருந்து வரும் பழக்க-வழக்கங்களை முழுவதுமாக மாற்ற முடியாது என்பதனால், அவற்றை மாற்றியமைத்திருக்கலாம்.

சதுரமானகனச்சதுரமானஇடம்“சதுரகிரியா”அல்லதுகாபாவா?: காபாவைப் பொறுத்தவரையிலும், நிச்சயமாக அது முகமதியர்-முஸல்மான்-முஸ்லீம்களின் வழிபாட்டு ஸ்தலமல்ல. “காபத்துல்லா” என்றழைக்கப்பட்ட “இறைவன் உறையும் இடத்தில்” – வளகத்தில் நடுவில் ஒரு விக்கிரகம் இருந்தது, அதனைச் சுற்றி 360 விக்கிரங்கள் இருந்தன. அவை சதுரமாக அல்லது வட்டவடிவில் வைக்கப்பட்டிருந்தனவா என்று தெரியவில்லை. ஏனெனில், சித்திரங்கள் இருவிதமாகவும் சித்தரித்துக் காட்டுகின்றன. எப்படியாகிலும் வட்டத்தை-சதுரமாக, சதுரத்தை-வட்டமாக்கும் வித்தைகளை இந்தியர்கள் தாம் அறிந்திருந்ததால், குறிப்பாக மந்திர-தந்திர-யந்திர வித்தைகளில் ஈடுபட்டிருந்ததால், அவ்வளாகம் அவ்விதமாக அமைக்கப்பட்டிருந்தது என்றறியலாம். 64-யோகினி-ஜோகினி கோவில்கள், வளாகங்கள் அவ்விதமாகவே அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதனை இந்தியாவில் காணப்படும் உதாரணங்களினின்று அறிந்து கொள்ளலாம்.  காபாவின் தரைப்படம் மற்றும் இந்த யோகினி கோவில்களின் தரைப்படங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மையினைப் பார்த்தேத் தெரிந்து கொள்ளலாம். இதனால் தான், முகமதியர் இந்தியாவில் நுழைந்தபோது, நபி அழித்தவையெல்லாம் இங்குள்ளனவே என்று அவரைப் போலவே செய்யவேண்டும் என்றுதான், முகமத் கஜினி, முகமது கோரி முதலியோர் செய்தனர். அதாவது அத்தகைய கோவில்களை அழித்தனர், விக்கிரங்கள உடைத்தனர், புத்தகங்களை எரித்தனர். ஒரிஸ்ஸாவில் உள்ள 64-ஜோகினி கோவில் ஓரளவிற்கு புனர்நிர்மாணம் செய்யப்பட்டிருக்கும் போது, மத்தியப்பிரதேசத்தில் உள்ள 64-ஜோகினி கோவில் எந்த அளவிற்கு சேதப்படுத்தப் பட்டுள்ளது என்பதனை அச்சிற்பங்களை வைத்தே கண்ட் உ கொள்ளலாம். சோமனாதபுரம் அல்-லத் என்ற விக்கிரமாக இருக்கும் என்றுதான் 17 முறை வந்து விக்கிரகத்தை-சிவலிங்கத்தை உடைத்தழித்துச் சென்றான்.

நபிகள் விட்டு வைத்ததை நபிகளின் வழிவந்தவர்கள் சிதைத்தது ஏன்?: நடுவில் ஒரு சதுரம், அதில் பிரதான தேவதை-பெண் கடவுள், சுற்றி வட்டத்தில் 64 தேவதைகளின் விக்கிரங்கள், சிற்பங்கள் இருக்கும். இவையெல்லாமே வெவ்வேறான பெயர்களில் குறிப்பிடப்படும் சக்திகள் தாம். அதேபோல, காபாவில் 360 விக்கிரங்கள் இருந்ததை முகமதியர்களே ஒப்புக் கொண்டுள்ளனர். அல்-அஜர்கி என்பவர் மற்றப;அ விக்கிரங்கள், ஓவியங்கள் காபாவில் இருந்ததாகக் கூறியுள்ளார்[8]. அவற்றை நபி அழித்தாலும், நடுவில் இருந்ததை அங்குள்ள மக்களின் வேண்டுகோளின் மீது விட்டு வைத்தார். ஆனால், பின்வந்தவர்கள் அதனையும் விட்டு வைக்காமல் உடைத்ததாலும், ஏரித்ததாலும் அவ்விக்கிரகம் சிதைந்து உருமாறிவிட்டது. 930ல் மெக்காவிலிருந்து தூக்கிச் செல்லப் பட்ட அக்கல் அல்லது கற்பாகங்கள் 931ல் திரும்ப கொண்டு வந்து வைக்கப்பட்டது[9]. அதாவது அவர்கள் நபியைப் போலவே தாங்களும் அத்தகைய வேலையை செய்யவேண்டும் என்ற போக்கில், இருப்பதையும் அழிக்கத்துணிந்தனர், அவ்வாறே சிதைக்கவும் செய்தனர். அதனால்தான், அவ்விக்கிரகம்-அக்கல் வெள்ளை நிறத்தில் இருந்தது, கருப்பு நிறத்தில் இருந்தது, ஒன்றாக இருந்தது, மூன்று துண்டுகளாக இருந்தன, என்று பலவாறாக சித்திரங்களில் காணப்படுகின்றன. அதே போல அபிரஹாம் மற்றும் அவரது மகன் சிற்பங்கள் இருந்தன, ஆனால் அவற்றையும் உடைத்தார் அல்லது அபிரஹாம் விக்கிரத்தை மட்டும் விட்டு வைத்தார் என்று பலவாறுக் கூறப்படுகின்றன[10]. எது எப்படியாகிலும் இருந்த விக்கிரகங்கள் அழிக்கப்பட்டதால், சரித்திர ஆதாரங்கள் மறைந்து விட்டன என்றாகிறது.

© வேதபிரகாஷ்

22-09-2012


[1] அரேபியா-அரேபியர் பற்றிய விவரங்கள் கீழ்கண்ட கட்டுரையிலிருந்து பெறப்பட்டது:

K. V. Ramakrishna Rao, The Presence of Arabs in South India before and after the advent of Islam, a paper presented  at the sixth session of Tamilnadu History Congress held at Islamiah College, Vaniyambadi, from October 23 to 24, 1999. இக்கட்டுரை முன்பாகவே குரியர் மற்றும் மின்னஞ்சலில் அனுப்பட்டும், அதற்கான ஆதாரங்கள் இருந்தும், ஜனாப் சஹாப்புத்தீன் என்பவர் “ஆய்வுக் கட்டுரை பட்டியலில்” கூட இடம் பெறாமல் மறைக்கப் பார்த்தார். இருப்பினும், திரு. ராஜு தலைமையில் நடந்த அமைவில் திரு கோ. வே. இராமகிருட்டிண ராவ் படித்துள்ளளர்.

[2] Henri Stierlin, Great Civilizations: The Cultural History of the Arabs, Italy, 1981, p.10.

[3] M. TH. Houtsma, T.W.Arnold and Harmann (Eds.), E. J. Brill’s First Encyclopedi of Islam 1913-1936, Netherlands, 1987, Vol.I, p.367.

[4] Pihilp K. Hitti, History of Arabs, Macmillan, 1985, Hongkong, p.41.

[5] Col. Wilford, Asiatik Researches, Vol.III, p.326.

[6] இடைக்காலத்தில் அருணகிரிநாதர், முருகனை, “குதிரையேறும் ரரவுத்தனே” என்று விளித்துப் பாடியுள்ளார்.

[7] K. V. Ramakrishna Rao, The Presence of Arabs in South India before and after the advent of Islam, opt.cit.

S. M. Kamal, Muslimkalum, Tamizhagamum, Islamiya Ayvu Panpattu Maiyyam, Madras, 1990, p.22.

இவர் தமிழகத்தில் மூன்றாம் நூற்றாண்டிலேயே முஸ்லீம்கள் இருந்தார்கள் என்று எழுதுகியுள்ளார்!

[8] Oleg Graber, The Formation of Islamic art, Yale University, USA, 1973, pp.60-61. He gives the details about other objects, jewels etc., kept at Kaba till Mohammed destroyed them.

[9] Gerald de Gaury, Rulers of Meca, Roy Publishers New York, 1949, pp.109-110.

[10] De Lacy O’Leary, Arabia before Muhammed, Kegan Pauk, Lonon, 1927.

Posted in அப்ரோடைட், அரேபியா, அல்-அரப்-அல்-அரிபா, அல்-அரப்-அல்-பைதா, அல்-அரப்அல்-மூதா‘அர்ரிபா, ஆதிநாத, ஆத்மா, ஆனந்தம், ஆன்மா, ஆயுர்வேதம், ஆயுள், ஆயுள்வேதம், ஆரியன், ஆரியம், உஸ்பெகிஸ்தான், எபிகுயூரியன், ஓடந்தபூர், ஓலை, கத்தி, கம்பளி, காபாலிக, காபாலிகம், கிர்கிஸ்தான், சடங்குகள், சிகிச்சை, சிதர், சிதார், சித், சித்தகுரு, சித்தஜலம், சித்தஞானம், சித்தபுரி, சித்தம், சித்தயோகம், சித்தர், சித்தார்த், சித்து, சிந்து, சிந்து சமவெளி நாகரிகம், சீனா, சூபி, தஜிகிஸ்தான், தத்துவஞானிகள், தந்திரம், திகம்பர, திகம்பரம், திகம்பரர், திபெத், துர்க்மேனிஸ்தான், துறவி, நிர்வாணம், பாதரசம், பிண்டம், பித், யோகா | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

இஸ்லாமிற்கு–நபிக்கு (570-632 CE) முன்புஅரேபியாவில்இருந்தவர்கள் (சித்தர்களைத்தேடி)

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 23, 2012

இஸ்லாமிற்குநபிக்கு (570-632 CE) முன்புஅரேபியாவில்இருந்தவர்கள் (சித்தர்களைத்தேடி)

இந்தியசரித்திரத்தைப்புரட்டிஅல்லதுதவறாகஎழுதிமற்றநாட்டுசரித்திரங்களைஅறிந்துகொள்ளமுடியாது: கிரேக்கர்களுக்கு முன்பு (c.1800 – 327 BCE) – பின்பு (326 – 100 BCE) எப்படி இந்திய சரித்திரம், மேனாட்டவர்களால் புரட்டப்பட்டதோ, அதாவது இந்திய சரித்திர உண்மைகளைத் திரித்து மேனாட்டவர்கள் தங்களுக்கு சாதகமாக சரித்திரத்தை எழுதிகொண்டார்களோ, அதேபோல, அரேபியர்களுக்கு முன்பு (100- 712 CE) -பின்பு (712 – 1707 CE) என்றும் இந்திய சரித்திரம் புரட்டப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது[1]. முஹமது நபிக்கு (570-632 CE) முன்பிருந்த அரேபிய சரித்திரத்தை மறைத்து உண்மைகளை அறியமுடியாது. இந்தியாவிற்கும், அரேபியாவிற்கு அல்லது அரபிஸ்தானத்திற்கும் உள்ள தொடர்பை அறிந்தால் தான் ஆன்மீகரீதியில், மருத்துவரீதியில், விஞ்ஞானரீதியில் உண்மைகளை அறியமுடியும். அரேபியாவில் இருந்த சித்தர்களை அறியவேண்டுமானால், இஸ்லாம் பிறப்பதற்கு முந்தியுள்ள – இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செல்ல வேண்டியிருக்கிறது.

கிரேக்கமருத்துவர்களால்அலெக்சாந்தரைஏன்காப்பாற்றமுடியவில்லை?: இந்தியாவின் சரித்திரமே 327-326 BCEலிருந்துதான் ஆரம்பிக்கிறது, அதுதான் இந்திய சரித்திரத்தின் உறுதியான, தீர்மானிக்கப்பட்ட ஆரம்பகாலம் என்றனர்[2]. ஆனால் 327-326 BCE என்பது அலெக்சாந்தர் பாரதத்தின்மீது படையெடுத்துத் தோற்று, கிரேக்கத்திற்கு திரும்பச் செல்லாமலே வழியிலேயே 323 BCEல் பாபிலோனியாவில் இறந்து போன காலத்தைக் குறிக்கிறது[3]. அதாவது ஈட்டிக் குத்தி காயப்பட்டு, ரத்தப்பெருக்கு ஏற்பட்ட அலெக்சாந்தரை, தலைசிறந்த கிரேக்க மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவன் 10 நிர்வாண சாமியார்களைப் பிடித்தபோது, ஒரு சாமியார் பூமியின்மீது தனது காலை உதைத்து சைகை செய்தபோது, அவர் என்ன செய்கிறார் என்று கேட்டபோது, அவனது கிரேக்க அறிவுரையாளர்கள்[4], “நீங்கள் மண்ணோடு மண்ணாகி விடுவாய்”, என்று உருவகமாகக் கூறுவதாக விளக்கம் அளித்தபோது, கோபம் கொண்டு அவர்களைக் கொன்றுவிடுவதாக கிரேக்கக் கதைகள் கூறுகின்றன[5]. அதாவது இந்தியத் துறவிகளை அந்த அளவிற்குத் துன்புறுத்தியுள்ளான். ஞானத்தை அறியவேண்டுமானால், ஞானிகளிடம் பணிவாக இருந்து கற்றுக் கொள்ளவேண்டும். அதிகாரத்தினால், ஆணவத்தினால், பனத்தினால் ஞானத்தைப் பெறமுடியாது. அவற்றால் வசதிகளைப் பெருக்கிக் கொள்ளலாம். ஆனால், சீக்கிரமாகவே அத்தகைய வசதிகள் அழிவிற்கு எடுத்துச் செல்கின்றன.

சுமார் 1450 BCEயில்அரேபியாவிற்குவடமேற்கில்வேதமதம்இருந்தது: சித்தர்களைத் தேடும் முயற்சியில், கிரேக்கத்திற்குப் பிறகு அரேபியாவிலும் தேடவேண்டியுள்ளது. கிரேக்கத்திற்கும் இந்தியாவிற்கும் தரைவழியாக போக்குவரத்து துருக்கி, மெசபடோமியா (இராக்), பாரசீகம் (இரான்), காந்தாரம் (ஆப்கானிஸ்தான்), சிந்து (பலுச்சிஸ்தான், பாகிஸ்தான்) முதலிய நாடுகளின் வழியாக இருந்து வந்தது. துருக்கி-மெசபடோமியா பகுதிகளுக்குக் கீழ் அரேபியா-அரேபியதீபகற்பம் உள்ளது. அங்குள்ள மக்களும் அங்கிருக்கும் சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கேற்ப தங்களது வாழ்க்கையினை தவமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்திருப்பர். போகோஸ்காய் (Bogazkoi, Turkey) என்ற இடத்தில் கிடைத்த கல்வெட்டு ஒன்று, மிட்டானிய (Mittanians) மற்றும் ஹிட்டைட் (Hittites) மக்கள் “இந்திரசீல்மித்ரசீல்வருணசீல்நசாத்யா” என்ற கடவுளர்களை தமக்குள் ஏற்பட்ட ஒரு உடன்படிக்கைக்கு சாட்சிகளாக இருக்குமாறு விளித்ததாகக் கூறப்பட்டுள்ளது. இவர்கள் மற்ற கடவுளர்களான தேஷுப் (Teshup) மற்றும் ஹெபா (Hepa) என்கின்றவர்களையும் சேர்த்து வேண்டுகிறார்கள்[6]. அதாவது அக்காலத்தில், அந்த இடத்தில் அத்தகைய சமரசம் மிட்டடனிய-ஹிட்டை மக்களிடம் இருந்துள்ளது. இக்கல்வெட்டு சுமார் 1450 BCE காலத்தைச் சேர்ந்தது என்று அகழ்வாய்வு நிபுணர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். அக்கடவுளர்கள் இந்திரன், மித்திரன், வருணன், அஸ்வினி தேவர்கள் ஆவர். அஸ்வினி தேவர்கள் மருத்துவத்தின் தேவதைகளாகக் கருதப்படுகின்றனர்.

அரேபியாவின்வடக்கில்இரானில்இருந்தமக்கள் (சுமார். 2500-2000 BCE): இதைத்தவிர, இந்ததஸு, இந்தபீபி, இந்தத்து, ஹிந்தியன், எனபல் பெயர்கள் இப்பழமையான நாகரிகங்களில், அரசர்களுக்கு, படைத்தளபதிகளுக்கு, நதிகளுக்கு, இடங்களுக்கு உபயோகப்படுத்தியுள்ளனர்[7]:

  1. இந்ததஸு/இந்தாஸு – ஊர்- III காலத்தைச் சேர்ந்த அரசன்[8].
  2. ஷிருக்-து, இந்தாஸு வரையில் வெற்றிக் கொள்ள விரும்பினான்[9].
  3. ஷாமஸ்-ஷும்-உகின் என்ற அரசனை இந்த்பீபி என்ற தளபதி வென்றான்[10].
  4. ஷுதுர்-நஹுந்தே, இந்தததாவின் மைந்தன்[11].
  5. இந்தத்து – இஷின் என்ற நநட்டின் அரசன்[12].
  6. ஹிந்தியன்– மெசபடோமியயவில் பபயும் ஐந்து நதிகளில் ஒன்று, இதன் மறுபெயர் ஜுரேஹ்[13].
  7. ஹிந்தாரு – சர்கோன் என்பவன், கம்புலு மக்களின் இடங்களை வென்றான். அவற்றுள் ஒரு இடத்தின்பெயர்[14].

எனவே, அரேபியாவிற்கு வடக்கில் அத்தகைய வேதமதத்தைப் பின்பற்றுபவர்கள் அல்லது வேதமதக் கடவுளர்களை அறிந்தவர்கள் அக்காலக்கட்டத்தில் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. இது ஜைனர்கள் அப்பகுதிகளில் சென்ற தேதியை ஒத்துள்ளது.

அரேபியாவின்வடக்கிழக்கில்சுமார் 3000 BCEல்மருந்துமூலத்திரவியத்தொகுப்பு (Phamacopoeia): சுமேரிய நாகரிகத்தை ஆய்ந்தவர்கள், சுமார் 3000 BCEல் முதல் மருந்துமூலத் திரவியத் தொகுப்பு (Phamacopoeia) உண்டாக்கப்பட்டது, என்கிறார்கள்[15].  ஆனால், சிந்துசமவெளி மருத்துவத்தைப் பற்றி அடக்கி வாசிக்கிறர்கள். கேட்டால் அவர்கள் சரித்திர-ககலத்திற்கு முந்தையவர்கள் என்கிறார்கள்[16]. கியூனிபாம் எழுத்துகளின் (Cuniform tablet) மண்பலகைகள் கிடைத்திலிருந்து, அவற்றைப் படித்து, அவர்கள் இவ்வாறு எடுத்துக் காட்டியுள்ளனர். அவை முழுமையாக இல்லாததினால், முழுவிவரங்களை பெறமுடியவில்லை என்றும் ஒப்புக் கொள்கிறார்கள். இருப்பினும், அம்மருத்துவத்தின் தேவதை பௌ (Bau), நினிசின்னா (Ninisinna) மற்றும் குலா (Gula) என்று அழைக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். அம்மருந்து தயாரிப்பில் உபயோகப்படும் ரசாயனப் பொருட்கள் – உப்பு (Sodium Chloride), வெடியுப்பு (Salt peter – Poataasium nitrate).  மற்றவையெல்லாம் மூலிகைகள், மரப்பட்டைகள், மரப்பிசின்கள் முதலியன. பொட்டாசியம் நைட்ரேட் பெறும் முறை எகிப்தியர் மற்றும் இந்தியர்களுக்குத் தெரியும் என்று அவர்களே எடுத்துக் காட்டுகிறார்கள்[17]. அப்படியென்றால், சிந்துசமவெளி மருத்துவத்திற்குண்டான மருந்துமூலத் திரவியத் தொகுப்பு (Phamacopoeia) இருந்ததா, இல்லை காணாமல் போயிற்றா, இல்லை கண்டெடுக்கப்பட்டும் மறைக்கப் பட்டதா?

மேற்கே எழுத-படிக்கத் தெரிந்த ஆரியர்கள் பாரத்ததிற்கு வந்ததும் படிக்கத்தெரியாமல் போய்விட்டார்களா? மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று விஷயங்களை ஆராயவேண்டியுள்ளது.

  1. சுமார் 1450 BCEயில் அரேபியாவிற்கு வடக்கில் வேதமதம் இருந்தது.
  2. இரானில் இருந்த மக்கள் (சுமார். 2500-2000 BCE)
  3. சுமார் 3000 BCEல் மருந்துமூலத் திரவியத் தொகுப்பு (Phamacopoeia)

அரேபியாவின் வடகிழக்குப் பகுதியில் சுமார் 1450 BCEயில் வேதமதம் இருந்து, சுமார். 2500-2000 BCEல் அவர்கள் பெயர்கள் மட்டும் இருந்து, சுமார் 3000 BCEல் முதல் மருந்துமூலத் திரவியத் தொகுப்பு (Phamacopoeia) உருவாகிறது எனும்போது, அதிலுள்ள காலக்கணக்கியல் உறுத்துகிறது, உதைக்கிறது மற்றும் முரண்பபடாகத் தோன்ருகிறது. ஏனெனில், ஆரியர்கள், இந்தோ-ஆரியர்கள் போன்றோர், மேற்கிலிருந்து, கிழக்கில் வந்து இந்தியாவில் புகுந்தனர் என்றால், அத்தேதிகள் எப்படி 1450 BCE – சுமார். 2500-2000 BCE – சுமார் 3000 BCE என்றிருக்கும்? இந்தியாவில் நுழைந்த ஆரியர்களின் காலம் 1500-1000 BCEல் வைக்கப்படுகிறது. அப்படியென்றால், அக்காலக்கணக்கீடு BCE – சுமார் 3000 BCE – சுமார். 2500-2000 – 1450 BCE என்றுதான் இருக்கவேண்டும் அப்பொழுது இந்தியாவில் நுழைந்த காலம் 1500-1000 BCEயுடன் ஒத்துப்போகின்றது. இல்லையென்றால், ஆரியர்கள் இந்தியயவிலிருந்து வெளியே சென்றிருக்க வேண்டும். அப்படியென்றால் அவர்களின் காலம் சுமார் 3000 BCEற்கு முன்பாக இருந்திருக்க வேண்டும். அதாவது, கிழக்கில் படிக்கத் தெரியாதவர்களாக இருந்து, மேற்கே செல்ல-செல்ல அவர்களுக்கு படிப்பறிவு வருகிறது என்றால், அது எந்த சித்து வேலை என்று தெரியவில்லை. இதே முறைதான், அலெக்சாந்தர் இந்தியாவின் மீது படையெடுத்தான் என்ற கதையிலும் வருகிறது.

எந்த மக்களின் நநகரிகம் தொடர்ந்து “வாழ்ந்து வரும் நாகரிகமாக” இருக்க முடியும்?: மக்களின் நீண்ட ஆயுள்காலம், ஆரோக்கியம், வளமான வாழ்வு, முதலியவைதாம் ஒரு நாகரிகம் எத்தகைய தாக்குதல்களில் சிக்குண்டாலும், எதிர்த்து மறையாமல் தொடர்ந்து வாழ்ந்துக் கொண்டிருக்கின்ற நாகரிகமாக இருக்க முடியும். அப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நாகரிகம் இந்திய நாகரிகம் தான்[18]. இந்தியாவைவிட உயர்ந்தவை, இந்தியா அவற்றிடமிருந்து காப்பியடித்து, அவர்களிடமிருந்து கடன் வாங்கிக் கொண்டு சிறந்தது என்ற் மேனாட்டவர் பெருமை பேசி, இந்தியாவை சிறுமைப் படுத்தி வந்தாலும், அந்நாகரிகங்கள் ஏன் அப்படி இருந்த இடம் தெரியாமல் அழிந்து விட்டன என்று அவர்கள் விளக்குவதில்லை. ஆகவே, மேனனட்டவர்கள் எப்படி சரித்திரத்தைப் புரட்டியிருக்கிறார்கள்-தலைகீழாக்கியிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம். அரேபியர்கள் முகபதியர்கள் ஆனவுடன், அதேபோல பழைய பழக்க-வழக்கங்களை மமர்ரியமைத்திருக்கிறார்கள்.

பாலியல், ரசவாதம், ஆயுள்நீட்டிப்பு: கிரேக்கமதம் இந்துமதத்தை ஒத்திருந்தாலும், ஜைனர்களால் அது பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு, உருமாற ஆரம்பித்தது. பைதாகோரஸ் போன்றோர் உண்மையான ஞானம் போன்றவற்றில் ஈடுபட்டாலும், மற்ற கிரேக்க சாமியார்கள் பலவித முறைகளைக் கையாண்டார்கள்.

  • எபிகுயூரியன் (342-270 BCE) என்பவரின் போதனைகள் வாழ்க்கை வாழ்வதற்கே, சந்தோஷத்திற்கே, அனுவவி ராஜா அனுபவி போன்ற கொள்கைகளில் (Hedonism[19]) இருந்தது.
  • சிம்போஸியத்தில் கிரேக்கர்கள் நிர்வாணமாகப் பங்கு கொண்டார்கள் என்று மேலே எடுத்துக் காட்டப்பட்டது.
  • 4 நுற்றாண்டில் BCE பெண்-நிர்வாணமும் மறுக்கப்படவில்லை.
  • ஓரினப்புணர்ச்சி கிரேக்கர்களிடத்தில் அதிகமாகவே இருந்தது. சோடோமி (Sodomy) என்பது ஆண்களுக்கிடையிலுள்ள ஓரினப்புணர்ச்சி[20].
  • இதைத்தவிர ஆணுமில்லை-பெண்ணுமில்லை என்றுள்ள அப்ரோடைட் (Aphrodite) என்பவர்களும் இருந்தார்கள்[21]. ஆண்களுக்கு பெண்களின் உறுப்புகளும், பெண்களுக்கு ஆண்களின் உருப்புகளும் உள்ள மனிதர்கள் அப்ரோடைட் எனப்பட்டார்கள்.
  • ஹெர்மாபுரோடிடோஸ் அல்லது ஹெர்மாபுரோடிடஸ் (Hermaphroditos or Hermaphroditus) ஹெர்மாபுரோடைட்டுகளின் ஆண்-தேவதை. இவன் ஹெர்மிஸ் (Hermes) மற்றும் அப்ரோடைட் (Aphrodite) என்பவர்களுக்குப் பிறந்தவன். எரோட்டுகள் (Erotes) என்ற தேவதைகளுள் சேர்க்கப்பட்டுள்ளான்.
  • பெரும்பாலான காமம், கொக்கோகம், பாலியல் முதலியவாற்றில் உபயோகப்படுத்தப்படும் சொற்கள் கிரேக்கத்திலிருந்துதான் பெறப்பட்டுள்ளன – ஈராஸ் = Eros (Love), ஆசை / காமம் (Himeros =Desire), பெருங்காமம் (Pothos =Passion), காமவெறி (Voluptas = sez-raged.
  • வீனஸ் என்ற தேவத்தையிலிருந்து பெறப்படும் இச்சொற்கள் காதல், உடலுறவு, பாலியல், பாலியல் நோய்கள், மருந்துகள் முதலியவற்றிற்கு உபயோகப்படுத்தப் படுகின்றன[22].
  • அரிஸ்டாடில் ஆலிவ் எண்ணையை கர்ப்பத்தைத் தடுக்கும் களிம்பாக உபயோகப்படுத்தலாம் என்று 4 BCEயில் கூறினார்.
  • ஹெர்மிஸ் (Hermes) என்பவன் தான் ரகசிய சித்தாந்தங்கள், ரசவாதம் முதலியவற்றிற்கு தேவன்[23]. அதாவது கிரேக்கர்களைப் பொறுத்தவரைக்கும், காமம் ரசவாதத்துடன் இணைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
  • ஓவிட் (Ovid) மற்றும் லூசியன் (Lucian) போன்றோரது கொக்கோக-காமக்களியாட்ட இலக்கியங்கள், அவர்களது கிரக்கத்தின் உச்சத்தைக் காட்டுகின்றன.
  • இதைத்தவிர பாலியல், உடலுறவு செய்முறை நூல்களும் பெருகின[24].

மேலே குறிப்பிட்ட ஒன்றொன்றிற்கும் அக்கால சிற்பங்கள், ஓவியங்கள், உலோக விக்கிரங்கள் முதலியவை உலக பிரசித்தி பெற்ற கலைக்கூடங்களில், அருங்காட்சியகங்களில் உள்ளன. கிரேக்கர்களைப் பின்பற்றி வந்த ரோமானியர்களில் இவ்விஷயங்களில் சளைத்தர்கள் அல்லர்[25]. அதிக உடலுறவு கொண்டால், ஆயுள் பெருகும்; அதிக பெண்களிடம் உடலுறவு கொண்டால் ஆயுள் பெருகும்;  கன்னிகளுடன் உடலுறவு கொண்டால், ஆயுள் பெருகும், என்று தவறான பல கருத்துகள் உருவானதால், அத்தகைய தீய இலக்கியங்கள் உருவாகின, சமூகமும் சீரழிந்தது. கிரேக்க ரசவாதம் இப்படி பாலியில் உருமாறி, உருக்குலைந்ததற்குக் காரணம் அவர்கள் ஜைனர்களின் முறைகளை துஷ்பிரயோகம் செய்தது தான். இதனால் மந்திர-தந்திர-யந்திர போன்ற சடங்குகள் அங்கும் கடைபிடிக்கப்பட்டன என்று தெரிகிறது. ஆனால், அவை பாலிய ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதால் பலவித பாலியல் திரிபுகள் ஏற்பட்டன.

வெள்ளையாடைஅணிந்தமற்றசாமியார்கள் / சந்நியாசிகள்: வெள்ளையாடையை அணிந்த எஸ்ஸென்ஸ் (Essences), ஞாஸ்டிக் (Gnostic), மணிக்கியர் (Manichaeans) போன்றோர் பிரமச்சரியம், ஒழுங்கு, கட்டுப்பாடு முதலிவற்றைப் பின்பற்றினர். பின்னர் வந்த மணி (216-276 CE) என்பவரோ, இல்வாழ்க்கை வேண்டாம், திருமணம் வேண்டாம் என்றெல்லாம் போதித்தார். இங்கு முக்கியமான விஷயம் என்னவென்றால், மணி பாரசீகத்தில் துறவரம் கடைப்பிடித்த ஆசாரமான யூதகுடும்பத்தில் பிறந்தவர். பன்னிரெண்டு வயதில் ஞானம் பெற்று, போதிக்க ஆரம்பித்தார். கிழக்கில் பாரதம் வரையில் வந்ததாகச் சொல்லப்படுகிறது. பிறகு மத்திய ஆசியா சென்று மெடபடோமியா, சிரியா, இஸ்ரேல் வழியாக அலெக்சாந்திரியாவிற்கு வந்தார். ஆனால் இவரது போதனைகள் ஒவ்வாததனால், அங்கிருந்த பஹ்ரம் – I (Bahram – I 273-276) இவரை 276ல் தூக்கிலிட்டான். இருப்பினும், மணியுடைய பிரமச்சரியக் கொள்கைகள் மேற்கில் எகிப்து, ரோம், இங்கிலாந்து மற்றும் கிழக்கில் சைனா வரை பரவியது[26].

300-500 காலத்தில் இதன் தாக்கம் இருந்தது. கிரேக்க-ஜைனர்களில் அளவிற்கு மீறிய பாலியல் தீமைகள், கொடுமைகள் மற்றும் குற்றங்கள், இவற்றை எதிர்த்து, திருத்தத்தான், இம்மதம் மக்களிடம் வேகமாகப் பரவியது எனலாம். இதேபோல ஞாஸ்திக மதத்தின் (Gnosticism) தாக்கமும் அதிகமாகவே இருந்தது. இதன் மூலங்களை மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரியாது அல்லது ஒருக்கின்ற யூதமதத்திலிருந்துதான் தோன்றியது என்று வாதிட்டாலும், ஜைனர்களின் தாக்கத்தைக் காணமுடிகிறது. அதாவது, 1450 BCEல் இருந்த வேதமதத்தை மறந்துவிட முடியாது.

அரேபியாவியாவைச்சுற்றியிருந்தவேதமதம்: அரேபியைச் சுற்றியிருந்த வேதமதம் அரேபியாவிற்குள் நுழையவில்லை என்றாகாது. இஸ்லாம் வரும்வரை அங்கிருந்த மக்கள் அநாகரிகமாக, பாகன்களைப் போலிருந்தார்கள் (Pagans, Barbarians) என்று சொல்வது சரித்திரப் பொய்யாகும். 1450 BCEலிருந்து 650 CE வரை அப்படியே இருந்தார்கள் என்றால், அது எவ்வளவு பெரிய பொய் என்பதனையும் அறிந்து கொள்ளலாம்.

மேலேயுள்ள வரைப்படத்திலிருந்து சுமார் 1400 BCE காலத்தில் கானான், அமுறு, நுஹாஷே, மிட்டானி, ஹஸ்ஸுக்கன்னி, அசூர் (அசீரியா), தூர்-குரிகள்ஜு, கேசைட் (பாபிலோனியா) முதலிய மக்கள், அரேபியாவின் வடமேற்கு-வடக்கு-வடகிழக்குப் பகுதிகளில் வாழ்ந்தனர். மேற்குறிப்பிட்ட பகுதிகள் இப்பொழுது, இஸ்ரேல், ஜோர்டன், லெபனான், சிரியா, இராக், இரான் என்ற நாடுகளாக உள்ளன. அவர்களது சிற்பங்களை பார்த்தால், அவை பாரதநாட்டவருடையது என்று எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது[27]. அவ்விடங்களின் பெயர்கள் – ஏயில்காயா, நிஸந்தா, அம்பர்லிகாயா, புயுக்காயா, ஹத்துஸா, போகாஜ்கோய் என்றுள்ளன. ஆகவே, அரேபியர் தனித்து வேறு நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு கொண்ட மக்களாக இருந்திருக்க முடியாது. அரேபியாவில் கிடைத்துள்ள அகழ்வாய்வுப் பொருட்கள், சிற்பங்கள், பாத்திரங்கள் முதலியனவும் மேற்குறிப்பிட்ட மக்களின் நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாட்டுக் காரணிகளுடன் ஒத்துப் போகின்றன. ஆகவே, அங்கு சக்தி-சிவன், சிவ-சக்தி, மும்மூர்த்தி, மூன்றுதேவதைகள் முதலியவர்களின் வழிபாடு இருந்துள்ளது வியப்பாக இல்லை.

இடைப்பட்ட நூற்றாண்டுகளில் இப்பகுதிகளில் யூதம், கிருத்துவம் மற்றும் முகமதியம் ஒவ்வொன்றாக வளர்ந்து வரும் போது பழைய நாகரிகங்கள் அழிந்தன அல்லது அழிக்கப்பட்டன. 670 BCEல் அசீரியர் எகிப்தை வென்றனர்.  356-323 BCE காலத்தில் எகிப்தை அலெக்சாந்தர் வென்று, தனது தளபதி டாலமியை அரசனாக்கினான். 30 CE காலத்தில் ரோமர்களால், கிரேக்கம் மற்றும் எகிப்து ஆக்கிரமிக்கப்பட்டன. இப்படி அம்மக்கள் ஒருவருக்குள் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டதால், பாபிலோனியர் (Babylonians), அசீரியர் (Assyrians), சால்டியர் (Chaldeans), அராமியர் (Araamaeans), போனீஷியர் (Phoenecians), முதலியோரது நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு முதலியன அம்மக்களோடு மறைந்து வெறும் கதைகளாகி விட்டன. இருப்பினும், அங்கிருக்கும் மக்கள் சில பழைய சடங்குகள், சம்பிரதாயங்கள், விழாக்கள் முதலியற்ரைத் தொடர்ந்து நடத்திவருவதால், அவற்றிலிருந்து அந்த பழைய கூறுகளை அறிந்து கொள்ள முடிகிறது.

© வேதபிரகாஷ்

21-09-2012


[1] வின்சென்ட் ஸ்மித், ஜான் பிளீட் போன்றோர்அலெக்சாந்தர் பாரத்தத்தின்மீது படையெடுத்த 327-326 BCE காலத்திலிருந்து தான் இந்திய சரித்திரம் ஆரம்பிக்கிறது, அதற்கு முன்னர் இந்தியாவிற்கு சரித்திரமே இல்லை என்ற அடிப்படையில் எழுதி வைத்த சரித்திரத்தைத் தான், இப்பொழுதும் இந்தியர்கள் இப்பொழுதும் படித்துக் கொண்டிருக்கின்றனர். அலெக்சாந்தர் காலத்தில் பாரத்தை ஆண்டது குப்தர் வம்சத்தின் சந்திரகுப்தர் இல்லை, மௌரியர் வம்சத்தின் சந்திரகுப்தர் என்று திரித்ததால் 1200 வருட இந்திய சரித்திரம் சுருக்கப்பட்டது. இதனால் தான் இந்திய சரித்திரத்தில் பல புதிர்கள் உண்டாயின. புரிந்து கொள்ளாதோர் புதிய விளக்கங்கள் கொடுத்து, உள்ள சரித்திரத்தையே புரட்டிவிட்டு, அதற்கும் ஒரு முறையை உண்டாக்கி குழப்பியுள்ளனர்.

[2] The British history writers arbitaratily declared that “The Alexander’s invasion is is the sheet anchor of Indian history”, without any authority.

[3] K. V. Ramakrishna Rao, The Myth, Romance and Historicity of Alexander and their Influence on India, www.hinduwebsite.com

[4] Arrian.viii, 1.5 ff.

[5] McCrindle, The Invasion of India by Alexander the Great as described by Arrian, Quitus Curtius, Diodorus, Plutarch and Justin, London, 1896.

[6] George Roux, Ancient Iraq, Penguin Books, U.K, 1980, p.218.

[7] D. T. Potts, The Archaeology of Elam – Formation and Transformaton of an Ancient Indian Iranian state, Cambridge University Press, UK, 1999, p.

[8] Indassu – name of an ensi of Zabshali in the Ur III eriod, p.168.

[9] Shiruk-tuh wanted to conquer upto Indassu, p.141.

[10] Indabibi – name of a general who overthrown Shamash-shum-ukin, p.282

[11] Shutur-Nahhunte, son of Indada, p.303.

[12] Indattu – king of Isin, p.148.

[13] Hindian – one of the five rivers flowing in Mesopotomia, otherwise mentioned as Zuhreh, p.15.

[14] Hindaru – a place conquered by Sargon, of the Gambulu tribe.

[15] Samuel Noah Kramer, History Begins at Sumer – Thirty-Nine Firsts in Man’s Recorded History, University of Pennsylvania Press, Phladelphia, USA, 1981, pp.60-64.

[16] இப்பொழுது புரோட்டோ ஹிஸ்டரி (Protohistory) என்ற சொல்லை உபயோகித்ததலும், மனங்களில் பிரி-ஹிஸ்டரி (pre-history) என்ற கருத்தை வைத்துக் கொண்டுதான் படிப்பறிவு இல்லாத ஹரப்பன்கள் (Illiterate Harappans) என்று அந்த மேனனட்டு அறிவுஜீவிகள் கூறிவருகின்றன. நமது திராவிட கூட்டங்களும் அடிவருடிக் கொண்டு, பட்டங்கள் கொடுத்து பபராட்டு விழா எடுத்துக் கொண்டிருக்கின்றன.

[17] Samuel Noah Kramer, History Begins at Sumer – Thirty-Nine Firsts in Man’s Recorded History, University of Pennsylvania Press, Phladelphia, USA, 1981, pp.62-63

[18] சீன நாகரிகமும் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த இரு நாகரிகங்கள் தாம் தொடர்ந்து இருந்து வருகின்றன, மற்றவை மறைந்து விட்டன.

[19] Hedone was the spirit (daimona) of pleasure, enjoyment and delight. As a daughter of Eros (Love) she was associated more specifically with sensual pleasure. Her opposite numbers were the Algea (Pains). The Romans named her Voluptas.

[20] Sodomy, sodomites inhabitants of Sodom. Male homosex.

[21] Hermaphroditism = human being having both man and animal characteristic, nymph Solmacts

[22] Aphrodite = Aphrodiastic venereal, drug producing venereal disease,

Aphrodiasiac, aphrodisios, aphrodite = derived from Venus, the goddess of love etc.

[23] Hermes = author of mysterious doctrines, ecrets of alchemy

[24] Twleve Arts of the Actions of Love, Ovid’s Arts Amatoria etc are covered under “Classical literature”.

[25] David Mountfield, Greek and Roman Erotica, Miller Graphics, Italy, 1982.

[26] Richard Foltz, Religions of the Silk Road, St. Martin’s Press, New York 1999.

[27] கூகுள் தேடலில் – Yazilkaya, Nisantas, Ambarlikaya, Mihraplikaya, Büyükkaya, Hattusha, Boğazköy – என்ற வார்த்தைகளை தட்டெச்சு செய்தால் அச்சிற்பங்களைப் பார்க்கலாம்.

Posted in அப்ரோடைட், அரேபியா, ஆகாயம், ஆன்மா, ஆயுர்வேதம், ஆயுள், ஆயுள்வேதம், ஆரியன், ஆரியம், இந்தியவிரோதிகள், இந்தியா, உடல், உயிர், உஸ்பெகிஸ்தான், எபிகுயூரியன், கஜகிஸ்தான், கண், கத்தி, கனிமம், கம்பளி, கருத்து, கரைசல், கற்பம், கலாச்சாரம், கல்பம், காபாலிக, காமாக்கியா, காயம், காற்று, கிர்கிஸ்தான், கை, சக்தி, சடங்குகள், சட்டைமுனி, சம்பிரதாயங்கள், சஹஜயான, சிகிச்சை, சிதர், சிதார், சித், சித்தகுரு, சித்தஜலம், சித்தஞானம், சித்தபுரம், சித்தபுரி, சித்தபுருஷன், சித்தப்பிரமை, சித்தம், சித்தயோகம், சித்தர், சித்தர் பாடல்கள், சித்தார்த், சித்து, சிந்து, சிந்து சமவெளி நாகரிகம், சீனா, சுத்தம், சூபி, சைனா, சைவம், ஞானம், ஞானி, தந்திரம், திகம்பர, திகம்பரம், திகம்பரர், துர்க்மேனிஸ்தான், துறந்தவர், துறவி, நாகரிகம், நாட்டு மருத்துவம், நாத்திகம், நிம்மதி, நிர்வாணம், நீர், நுண்ணிய அறிவு, பகுத்தறிவு, பஞ்சபூதங்கள், பதினென் சித்தர்கள், பரம்பரை வைத்தியர், பாதரசம், பாரதம், பாரம்பரியம், பாலியல், பித்து, போகோஸ்காய், மத்திய ஆசியா, மந்திரம், மனச்சிதைவு, மனம், மருந்து, முஹம்மது கஜினி, யோகா, விழாக்கள், வேதம், ஹெர்மாபுரோடிடோஸ், ஹெர்மிஸ் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

பௌத்தமத அல்லது பௌத்தர் காலத்தில் சித்தர்கள்

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 15, 2012

பௌத்தமத அல்லது பௌத்தர் காலத்தில் சித்தர்கள்

ஜைன-பௌத்தக் குழப்பங்கள்: சரித்திரரீதியில் ஜைனம்-பௌத்தம் தனித்தனியாக இருந்ததா, ஒரே காலத்தில் இருந்து, பிறகு பிரிந்ததா, மஹாவீரரும், புத்தரும் ஒருவரா அல்லது தனித்தனியானவர்களா, ஒரேகாலத்தைச் சேர்ந்தவர்களா, ஒருவர் மற்றொருவரின் சீடரா, கொள்கைகளினால் பிரிந்து போயினரா என்ற பற்பல கேள்விகளுக்கு விடைகாணாமல், சர்ச்சைகளில் ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் ஈடுப்பட்டனர்[1]. “சித்தார்தர்” என்ற பெயரையுடைய அரசருக்குப் பிறந்தவர் மஹாவீரர். (c.599-527 BCE) ஆனால் சித்தார்த்தர் என்ற பெயர் கொண்டவர் புத்தர் (c.567-487 BCE). மஹாவீரர் போதிக்கும் கூட்டத்திற்கு புத்தர் வந்திருந்தார் என்று ஜைனர்கள் சரித்திரம் கூறுகிறது. ஆனால், ஆர்தர் வின்சென்ட் ஸ்மித் என்பவன் எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, இதுதான் இந்திய சரித்திரம் என்று எழுதிவைத்து விட்டான். அலெக்சாந்தருக்குப் பிறகுதான் “இந்திய சரித்திரமே” ஆரம்பிக்கிறது என்றபோது, மஹாவீரரும், புத்தரும் சரித்திரகாலத்திற்கு முன்பு (Pre-historic) தள்ளப்படுகின்றனர். ஆனால், இந்தியர்கள் இத்தகைய நுணுக்கங்களை அறியாமல் சரித்திரத்தைப் படித்து வருகின்றனர். திராவிட சித்தாந்திகளைப் பற்றியோ கேட்கவே வேண்டாம், “கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்தேத் தோன்றிய மூத்தக்குடி, தமிழ்குடி”, என்று பறைச்சாற்றிக் காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பர்!

வேத-ஜைன-பௌத்த முறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள்: ஜைனர்கள் மற்றும் பௌத்தர்கள் வேதங்களின்று தான் தமது ஞானத்தைப் பெற்றனர். அதனை மஹாவீரரோ அல்லது புத்தரோ மறுத்ததில்லை[2]. அவர்களது வாதங்கள் பிராமணர்களுக்கு எதிராகவும், அவர்கள் பிராமணர்களை வாதங்களில் வென்றதாகவும் தான் அவர்கள் நூல்களில் இருக்கும்[3]. அதனால், அவர்கள் பிராமணர்களுக்கு விரோதிகள் இல்லை. சிரவணர்கள்-பிராமணர்கள் அவர்கள் காலங்களில் சேர்ந்தே பணிசெய்துள்ளார்கள். ஆனால், பிறகு தோற்றுவிக்கப் பட்ட அவர்களது வாழ்க்கை வரலாற்று நூல்களில் அவ்வாறு வேத-பிராமண-விரோதிகளாகச் சித்தரிக்கப்பட்டனர். 1800-500 BCE காலங்களில் இம்மத நம்பிக்கையாளர்கள் ஆட்சியில் இருந்ததால், எப்படி, இக்கால அரசியல் நிர்ணயச் சட்டத்தில் மாறுதல்கள் செய்கிறார்களோ, அதுபோல சாஸ்திரங்களில் தமக்கு சாதகமாக பல திருத்தங்களை செய்தார்கள். அதுமட்டுமல்லாது, இதிகாச-புராணங்களையும் மாற்றியெழுதினர். வேதமத்தவர் தமது நூல்களைக் காத்துக் கொள்ள மற்றும் ஜைன-பௌத்தர்களின் திருத்தங்களுக்கு உட்படாமல் காக்கத் தகுந்த முறைகளை கையாண்டார்கள். அந்நிலையில் வேதங்கள் மற்றவர்கள் படிக்கக் கூடாது என்று தீர்மானித்திருக்கலாம். அந்நிலையிலும் அவர்கள் பிராமணர்களைப் போல வேடமிட்டு வந்து வேதங்களைக் கற்றுக் கொள்ள முயற்ச்சித்துள்ளார்கள்[4]. அப்பொழுது தான், அவர்களை “பாஷாண்டிகள்” என்று அழைத்தார்கள். இத்தடையை நீக்கத்தான், எல்லோரும் வேதங்களைக் கற்கலாம் என்றறிவித்தார்கள். ஆனால், தத்தமது மதங்களில் பெண்களை அடக்கிவைத்தார்கள்[5]. நிர்வாணத்திலும் கூட சமவுரிமை கிடையாது என்று அறிவித்தனர்[6]. ஆனால், பிறகு சங்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டபோதுதான் பிரச்சினைகள் வந்தன. தந்திரங்களில் பாலியல் ரீதியாக அவர்கள் பயன்படுத்தப் பட்டனர்[7], துன்புறுத்தப்பட்டனர்[8], அடக்கி வைக்கப் பட்டனர்[9].

மந்த்ர-தந்ட்ர-யந்த்ர முறைகளில் மாற்றம்: தந்திரிக-தாந்திரிகமுறை வேதமுறைகளினின்று, ஜைனம் மற்றும் பௌத்த மதங்களில் மாற்றப்பட்டு, மாறி வந்துள்ளன. இடைக்காலத்தில் இவை தோன்றியதாக சில நூல்களை வைத்து விளக்கம் கொடுத்தாலும், மூலநூல்கள் ஆரம்ப நூற்றாண்டுகளைச் சேர்ந்ததாக உள்ளன. யாமள, காளிகா, ர‌க்ஷகாளிகா, இந்திவர காளிகா, ஜீவகாளி, பைரவிதக்ணி, சித்திலக்ஷ்மி தந்திரங்களைக் குறிப்பிட்டாலும், ஜைனர்கள் அவற்றை மாற்றியமைத்துக் கொண்டனர்[10]. ஆனால், குல்லுகபட்டர் என்பவர் பாரதப்பாரம்பரிய ஞானம் – வேத மற்றும் தந்திர என்று இரண்டு வகைகளில் பிரிக்கப்பட்டுள்ளாதாகக் குறிப்பிட்டுள்ளார்[11]. ஆனால், “தந்த்ர/தந்திர” என்ற சொல்லிற்கு அர்த்தம் வேதத்திலிருந்துதான் பெறப்படுகிறது[12]. முதலில் தந்திரிகமுறைகளை எதிர்த்த பௌத்தர்களும் அவ்வாறே சிவ-சக்தி முறைகளை மாற்றிக் கொண்டனர். சிவலோகேஷ்வரரை, அவலோகேஷ்வர் என்று மாற்றிக் கொண்டனர். சஹஜ / சஹஜீய என்ற சமரசமுறைகளில் இருமதங்களும் வேத மந்த்ர-தந்ட்ர-யந்த்ர முறைகளை பெரும்பாலும் ஏற்றுக் கொண்டன. திருமூலரும் அவ்வாறே செய்துள்ளார். அதனால், திருமந்திரத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது. ஆனால் ஜைன-பௌத்த மதங்கள் கடவுள் இல்லை என்று அறிவித்துவிட்டு, தந்திரமுறைகளுக்கு தேவதைகளை வைத்துக் கொண்டார்கள், அவையெல்லாமே இந்து கடவுளர்கள் தாம்.

இருகாலகட்டங்களில் தந்திரங்களில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள்: கிரேக்கர்களாக ஜைனர்கள் இந்தியாவில் வந்தபோது ஏற்பட்ட மாற்றங்கள், அரேபியர்கள் வந்தபோது ஏற்பட்ட மாற்றங்கள் என இரண்டு வகையாக பார்க்கலாம். ஆகவே, ஜைன-பௌத்த சித்தர்கள் வேதமுறைகளை தகவமைத்துக் கொண்டதில், இரு காலகட்டங்களைப் பார்க்கலாம். அரேபியர்-முகமதியர் படையெடுப்பு-தாக்குதல்களுக்கு முன்னர் மற்றும் பின்னர் என்று இரு காலகட்டங்களில் மாறுதல்களை, மாற்றங்களை, சீரழிவுகளைப் பார்க்கலாம். முதலில்-முன்னர் ஏற்பட்ட பிறழ்ச்சி, அழிவு, சீரழிவு ஜைன-பௌத்தர்களால் ஏற்பட்டது.  பின்னர் ஏற்பட்ட பிறழ்ச்சி, அழிவு, சீரழிவு அரேபியர்-முகமதியர்களால் ஏற்பட்டது. இடைக்காலத்தில் அல்லது முகமதியர் காலத்திலும் மந்த்ர-தந்ட்ர-யந்த்ர நூல்கள் தோற்றுவிக்கப்பட்டன. ஆனால், அவை முகமதியர்களின் காம-உடலின்ப சரச-சல்லாபங்களுக்கு உதவும் வகையில் ஏற்பட்டவை. பல மந்த்ர-தந்ட்ர-யந்த்ர பண்டிதர்கள் வலுக்கட்டாயமாக, துன்புறுத்தப் பட்டு, தமகேற்றபடி அத்தகைய நூல்களை எழுதவைத்தனர். அவ்வாறு உருவானவைதாம் அனங்கரங்க, ஆனந்தரங்க, காமசூத்திர போன்ற பாலியல் நூல்கள்[13]. முகமதியர் காலத்தில் ஆயிரக்கணக்கான மருத்துவ நூல்கள் அரேபிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, மூலங்கள் அழிக்கப்பட்டன. அவற்றை அந்நூல்களைப் படிக்கும்போதே அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாது, அவர்களில் சிலர் ஆயுர்வேத நூல்களைப் படித்துள்ளோம், அவற்றை சேகரித்துள்ளோம் என்று ஒப்புக்கொண்டுள்ளனர்[14].

தெற்கில் ஜைன-பௌத்த மதங்கள் இரண்டாம் முறை தலைத்தூக்கி அடங்கியது: முகமதியர்கள் வடக்கில் ஆதிக்கம் செல்லுத்தியபோதுதான், கர்நாடகத்தில் ஜைனர்கள் மறுபடியும் தலைத்தூக்கினர். தென்னிந்தியாவில் ஜைன-பௌத்தர்களின் தாக்கம் முதல் நூற்றாண்டுகளிலேயே காணப்படுகிறது. களப்பிரர்களினால், தமிழக கலாச்சாரம் அழிந்தது, அதனால், “களப்பர்களின் இருண்ட காலம்” என்றும் தமிழக சரித்திரத்தில் சொல்லப்படுகிறது. பிறகு சைவத்தின் எழுத்தியால் இரண்டும் அடக்கப்பட்டன. கர்நாடகத்தில், வீரசைவத்தின் மறுமலர்ச்சியால், இரண்டும் அடக்கப்பட்டு, பிறகு வந்த முகமதியர்களையும் கட்டுக்குள் வைத்தது. அதனால்தான், வீரவல்லாளன் போன்றோர் ஜைனர்களாக இருந்தார்கள். இருப்பினும், பிறகு சைவரானார்கள், முகமதிய மதத்தை எதிர்க்கவும் செய்தனர். அதனால்தான், வல்லாளன் வயதான காலத்திலும், வஞ்சகத்தால் சிறைப்பிடிக்கப்பட்டு, குரூரமாகத் தோலுறித்துக் கொல்லப்படுகிறான். ஜைன-பௌத்த மதங்களுக்கும் வியாபாரரீதியில்-அரசியல் ரீதியில் போராட்டங்கள் நடந்துள்ளன. அப்பொழுது, அரேபியர்களின் மற்றும் சீனர்களுடன் வைத்துக் கொண்ட கூட்டும், அவர்களின் அழிவிற்கு காரணமாக இருந்தது. “அகாலங்க” என்ற ஜைனமுனிவர் 788ல் பௌத்தர்களை வென்று, இலங்கைக்கு அனுப்பியதாக, கல்வெட்டுகள் கூறுகின்றன[15].

பௌத்தமதத்தில் சித்தர்கள்: வேதமதத்தில் தந்த்ரமுறை சக்திவழிபாட்டில் இருந்தது. பிறகு ஜைனர்கள் அதை மாற்ரித் தகவமைத்துக் கொண்டனர்.  இந்து பெண்-கடவுளர்கள் அவர்களுக்கு தேவதைகளாயினர். அவர்கள் பெயரில் தந்த்ர நூல்களையும் மாற்றியெழுதிக் கொண்டனர். பிறகு பௌத்தர்கள் அதனை பின்பற்ற ஆரம்பித்தபோது, அவர்களும் மாற்றங்களைச் செய்தனர். சக்திற்கு பதிலாக பிரஜ்ன-ஞானம் என்று வைத்து பௌத்த-தந்த்ர முறையினை வளர்த்தனர்[16]. சக்தியை அவர்கள் மாயை என்றழைத்தனர். இருப்பினும், சூன்யதா தான் பிரஜ்ன, உயர்ந்தநிலை ஞானம்-அறிவு என்றனர். ஜைனர்கள் பெண்களுக்கு தந்த்ரமுறையில் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். பௌத்தத்திலும் அவ்வாறேயிருந்தாலும், வெளிப்படையில் ஆண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதைப் போலக் காட்டிக் கொண்டனர். இருப்பினும் பெண்களின் பங்கில்லாமல், தந்தரமுறைகளை பிரயோகம் செய்யமுடியாது. இதனால்தான், இருமதங்களும் இம்முறைகளில் தோல்வியடைந்தன.

புத்தர் ஜாதகக் கதைகள் புராணங்களைப் பின்பற்றியமுறை: புத்தர் ஜாதகக் கதைகள் என்பவை புத்தருடைய முற்பிறவிகள், இக்காலப்பிறப்பு, மாயாதேவியின் கனவுகள் முதலிவற்றைப் பற்றியக் கதைகளின் தொகுப்பாகும். ஜாதகமாலா என்ற நூலின்படி, சித்தர்கள் வங்கமலையில் வசித்தவர்கள் (விஸ்வந்தர கதை), மானஸசரஸில் திருதராஷ்ட்ர என்ற பெயரில் போதிசத்வராக இருந்தபோது அங்கு சித்தர் கூட்டம் இருந்தது (புனித அன்னங்கள் கதை). சித்தர்கள், வித்யாரண்யர், ரிஷிக்களுடன் வசித்து வந்தனர்[17]. இவையெல்லாம் புராணங்களில் உள்ள விவரங்கள் போன்றேயுள்ளன.

® வேதபிரகாஷ்

13-09-2012


[1] Brahmachari Sital Prasadji, A Comparative Study of Jainism and Buddhism, The Jaina Mission Society, Madras, 1932.

[2] J. G. Jennings, The Vedantic Buddhism of the Buddha, Geoferry Cumerlege, Oxford University Press, London, 1947.

[3] முகமதியரும், பிறகு வந்த கிருத்துவர்களும் இதேமுறைத்தான் கையாண்டனர். சீசன்பால்கு, தான் பிராமணர்களுன் 300 கருத்தரங்கள் நடத்தியதாக எழுதி வைத்துக் கொண்டான். ஆனால், கலந்து கொண்ட பிராமணர்களைப் பற்றி எந்த விவரங்களையும் கொடுக்கவில்லை. ஆகையால், அவை உண்மையா, கட்டுக்கதையா, கற்பனையா என்று தெரியாது.

[4] முகமதியரும், பிறகு வந்த கிருத்துவர்களும் இதேமுறைத்தான் கையாண்டனர். இதனால்தான், சித்தர்களிலும் பல போலி சித்தர்கள் உருவானார்கள். ராபர்ட் டி நொபிலி இதே மாதிரி வேடமிட்டுக் கொண்டு, வேதங்களைக் கற்றுக் கொள்ள முயற்ச்சித்தான்.

[5] Padmanabh S. Jaini, Gender and Salvation: Jaina Debates on the Spiritual Liberation of Women, University of California, USA, 1991, pp.18-19.

[6] Walther Schubring, The Doctrine of the Jains – Described after the Old Sources, Motilal Banarasidas publishers, New Delhi, 2000, p.61.

[7] Brhatk Bhasya.1.2670; Therigat (139-344) where nun Khema was invited to enjoy sensual pleasure.

[8] N. N. Bhattacharya, History of the Tantric Religion (A Historical, Ritualistic and Philosophical study), Manohar, New Delhi, 1987, pp.181-193.

[9] Analayo, Theories on the Foundation of the Nun’s Order – a Critical Evaluation, in JCBSSL, Vol.VI, can be accessed from here: http://buddhistinformatics.ddbc.edu.tw/analayo/TheoriesFoundation.pdf

[10] O. P. Jaggi, Yogic and Tantric Medicine, in History of Science, Technology and Medicine in India, Vol.V, Atma Ram & Sons, New Delhi, 1979, p136.

[11] N. N. Bhattacharya, History of the Tantric Religion, Manohar, New Delhi, 1987, Introduction, p.1

[12] Rigveda.X.71.9; Atharvaveda.X.7.42; Taittriya Brahmana.II.5.5.3; Panini derived the word “tantraka” (woven cloth) (V.2.70) from “Tantra” (loom). Thus, the act of weaving is “tantra”.

[13] முகமதியர்கள் தங்களது ஹேரங்களில் /அந்தப்புறங்களில், நுற்றுக்கணக்கான பெண்களை அவ்வாறு தேர்ந்தெடுத்து அனுபவித்து வந்தார்கள். அப்பொழுது ஏற்பட்டதுத்தான், பிரங்கி/பறங்கி/மேகவியாதி. அதனால் தான், அந்நோயைத் தீர்க்க மருத்துவர்கள் முயன்றனர்.

[14] O. P. Jaggi, Medicine in Medieval India, in History of Science, Technology and Medicine in India, Vol.V, Atma Ram & Sons, New Delhi, 1979, pp.73-79, p103, 108.

[15] K. A. Nilakanda Sastri, Sravanabelagola, Department of Archaeology, Mysore, 1981, p.4, based on Epigraphica Karnataka, Vol.II.

[16] Anagarika Govinda, Tantric Buddhism, in P. V. Bapat (Gen.editor), 2500 Years of Buddhism, Publication Division, Government of India, New Delhi, 1997, p.318.

[17] J. S. Speyer (Trans.), The Jatakamala or Garland of Birth-stories of Aryasura, Motilal Banarasisas, New Delhi, 1982 (1895 edition), p.77, 182.

Posted in அறுவை சிகிச்சை, அறுவைசிகிச்சை, ஆகாயம், ஆத்மா, ஆனந்தம், ஆன்மா, ஆயுர்வேதம், ஆயுள், ஆயுள்வேதம், ஆரியன், கந்தகம், கந்தரவர், கருத்து, கரைசல், கற்பம், கலாச்சாரம், கல்பம், சிதார், சித், சித்தகுரு, சித்தஜலம், சித்தஞானம், சித்தபிரமை, சித்தபுரம், சித்தர், ஜோகினி, ஞானம், ஞானி, தத்துவஞானிகள், தந்திரம், தமிழகம், நினைவு, நிம்மதி, நிர்வாணம், நிலம், பௌத்தம், மத்திய ஆசியா, மந்திரம், யோகா, யோகினி, யோசனை, ரணச்சிகிச்சை, ரிஷி | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

வேதமத அல்லது வேதகாலத்தில் இருந்த சித்தர்கள்

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 7, 2012

வேதமத அல்லது வேதகாலத்தில் இருந்த சித்தர்கள்

வேதமதசித்தர்கள்: வேதமதத்தில் அல்லது வேதகாலத்தில்[1] “சித்தர்கள்” என்பவர்கள் எல்லாவற்றையும் அடைந்தவர், வெற்றிகொண்டவர், முழுமைப்பெற்றவர் என்ற நிலையிலிருந்து எல்லாவற்றையும் செய்ய வல்லவர், சாதிக்கக்கூடியவர், அதற்கான சக்திகளைக் கொண்டவர் என்றுள்ளது. “सिद्ध” = சித்த என்ற வார்த்தைக்கு அவ்விதமாகப் பொருள்கொள்ளப்படுகிறது. அந்நிலையை அடைந்தவர்களை “சித்தி”யடைந்தனர் என்றும் வழங்கப்பட்டது. தெய்வீக, என்றும் நிலையுள்ள, போற்றக்கூடிய, மேன்மையான என்ற அடைமொழிகளிலும்  விளக்கம் உள்ளது. இதனை அடைமொழியாகக் கொண்டு ஆயிரக்கணக்கான வார்த்தைகள் உருவாகியுள்ளது, இதன் மிகவுயர்வான தன்மையைக் காட்டுகிறது. மிகவுயர்வானது, மிகச்சிறந்தது, மிகத்தூய்மையானது, என்ற முறையில் அச்சொற்றொடர்கள் விளக்கம் அளிக்கின்றன[2]. ஆனால் இவர்கள் எல்லோரும் மருத்துவர்கள் அல்லர். ஆயிர்வேதமுறை பின்பற்றவந்தபோது, உடல்-மனம் முதலியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதனால், மனம்-உடல்-உயிர்; மூச்சு-ஆயுள்-ஆரோக்யம்; முதலியவற்றை இணைக்கும் யோகா சிறப்பானது. இது எதிர்மறைசிந்தனை-மனச்சிதைவு-மனநோய்; உடலின்பம்-அநாரோக்யம்-நோய் முதலியவற்றை எதிர்க்கும் மருந்தாகப் பயன்பட்டது.

சித்தசித்திசித்தம் முதலிய வார்த்தைகளுக்கு பொருள்: சித் என்ற வார்த்தை, சித்த, சித்தி, சித்தம் என்ற சொற்கூறுகளுக்கு ஆதாரமாகி, “சித்த” என்ற அடைமொழி பல வார்த்தைகளை உண்டாக்கியுள்ளது.

சித்தகல்ப, சித்தகாம, சித்தக்ஷேத்ர, சித்தக்காண்ட, சித்தகங்க, சித்தகிருஹம் சித்தத்துவ, சித்தாந்த, சித்தார்த, சித்தம், சித்ததேவ, சித்த-தர்ஷணம், சித்த-நாகார்ஜுன, சித்தநாத, சித்தபக்ஷ, சித்தப்பாத, சித்தபுத்ர, சித்தபுரி, சித்தபுருஷ, சித்தபுஷ்ப, சித்தபுத்த, சித்தமாதா, சித்தமந்திர, சித்தமனஸ, சித்தய்ந்திர, சித்தயாமல, சித்த்யோக, சித்தரத்ன, சித்தரஸ, சித்தராஜா, சித்தகாமுதி, சித்தோதய…………..என நீண்டுக் கொண்டேயிருக்கிறது.

சித்ததாது, சித்தரச / சித்தரஸ என்ற சொற்றொடர் பாதகரசத்தைக் குறிக்கிறது.

சித்தரச – ரசவாதி / ரஸவாதி

சித்தபக்ஷ / சித்தபட்சம் என்பது குறிப்பிட்ட தத்துவவாதத்தைக் குறிக்கிறது.

சித்த, சித்தயோகின் – சிவன்

சித்தசங்கல்பம் – நினைத்தை முடிப்பவர்

சித்தசேன – கார்த்திகேயன், முருகன்

சித்தஸ்தாலி – கமண்டலம், குடுவை, பாத்திரம்

சித்தநதி, சிந்து – தெய்வீக நதியைக்குறிக்கிறது

சித்தஜலம் – அரிசி கஞ்சி

இதுபோன்ற பல வார்த்தைகளை சமஸ்கிருத அகராதிகளில் காணலாம்[3]. முதல் நூற்றாண்டுகளினின்று இடைக்காலத்தில் வரை அதன் அர்த்தம் மாற ஆரம்பித்தது. அதாவது, பாதரசத்தை உபயோகப்படுத்தியதால், மருத்துவமுறையில் ஏதோ ஒரு மாற்றம் அல்லது குழப்பம் ஏற்பட்டது என்று தெரிகிறது. இது பிற்காலத்தில் யோகம்-பிரானாயாமம் முறையிலிருந்து, காயகல்பம் முறைக்கு மாறியதைக் கட்டுகிறது.

சித்தர் என்ற வார்த்தை புத்தனை, சிவனைக்குறிப்பது பிற்கால வழக்கம்: பொதுவாக “சித்த” என்றால் சிவன் என்றும், பிற்கால சமஸ்கிருத இலக்கியங்களில் புத்தரையும் குறிப்பதாக உள்ளது. ஆனால், எங்குமே அவர்கள் மருத்துவர்கள் அல்லது மருத்துவமுறைகளைப் பின்பற்றியவர்கள் என்றில்லை. நாரதர்கூட திரிலோக சஞ்சாரி = மூன்று உலகங்களிலும் சென்றுவரும் தமைப் பெற்றவர் என்றிருந்தாலும், அவரை என்று சித்தர் என்று சொல்லப்படவில்லை. ஆக கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் கூட இப்பெயரின்  சிறப்பை, மதிப்பை, பெருமையை அறிந்துணர்ந்து உபயோகப்படுத்தினர் என்ப்ச்து தெரிகிறது. அவ்வாறு ஜைனர்கள்-பௌத்தர்கள் வேதங்களைப் படித்தபோது, அவர்கள் “பாஷாண்டிகள்” எனப்பட்டனர்.

சித்தர் சித்தியை அஷ்டமாசித்திகளை பெற்றவர்கள்: சித்திகள் எட்டு, அவற்றை அடைந்தவர் சித்தர். மஹாபாரதம், மனுஸ்மிருதி, பஞ்சதஎதிரம் முதலிய நூல்களில் இதற்கு விளக்கம் காணப்படுகிறது.

  1. अणिमा – அணிமா – சிறிய உருவம் பெறும் தன்மை
  2. महिमा – மஹிமா – பெரிய உருவம் பெறும் தன்மை.
  3. गरिमा – கரிமா – அதிக பலம் / எடைக் கொள்ளும் தன்மை
  4. लघिमा – லகிமா – குறைவான எடைக் கொள்லும் தன்மை
  5. प्राप्ति – பிராப்தி – நினைத்ததை நினைத்த மாதிரி பெறும் தன்மை.
  6. प्राकाम्य – பிராக்யாம – அதிக சக்திகளை – வல்லமைகளை, திறமைகளைப் பெறும் தன்மை.
  7. ईशित्व – ஈசித்துவ – கடவுட்தன்மையை அடைவது அல்லது மற்றவர் வணங்கும் நிலையை அடைவது
  8. वशित्व – வசித்துவ – மற்றவரை தமதிச்சைக்கேற்றபடி நடக்கவைக்கும் தன்மை

இவற்றைத்தவிர, ஸ்ரீ கிருஷ்ணர் கீழ்கண்ட பத்து குணாதிசயங்களைக் கொண்டவர் சித்தர் என்று “பகவத் புராணத்தில்” குறிப்பிடுகிறார்.

எண்

சமஸ்கிருதம்

தமிழ்உச்சரிப்பு

விளக்கம்

1 अनूर्मिमत्वम् அனூமிர்மத்துவம் பஞ்சேந்திரியங்களின் விருப்பு-வெறுப்பு-தேவைகளைக் கடந்தத் தன்மை
2 दूरश्रवण தூர்ஷ்ரவண் தூரத்திலிருந்து கேட்கக்கூடிய சக்தி
3 दूरदर्शनम् தூர்தர்ஷணம் தூரத்திலிருந்து பார்க்கக்கூடிய சக்தி
4 मनोजवः மனோஜவம் மனோசக்தி
5 कामरूपम् காமரூபம் விரும்பும் உருவத்தைப் பெறுவது
6 परकायाप्रवेशनम् பிரகாயபிரவேசனம் அடுத்த தேகத்தில் நுழைவது
7 स्वछन्द मृत्युः ஸ்வச்சந்த மிருத்யு உண்மையான நினைக்கும் நேரத்தில் இறப்பைப் பெறுவது, முக்தியடைவது
8 देवानां सह क्रीडा अनुदर्शनम् தேவனாம் சஹ கிரிடா அனுதர்ஷனம் எல்லா இடங்களிலும் நடப்பதைப் பார்க்கக்கூடிய சக்தி
9 यथासंकल्पसंसिद्धिः யதாஸம்கல்பஸம்சித்தி அனைத்தையும் அடைந்து முடியும் சக்தி
10 आज्ञा अप्रतिहता गतिः ஆக்ந்யா அபர்திஹதா கதி ஆணையை மற்றவர்கள் செய்யும் விதம்

பிறகு அவர்களை “सिद्ध पुरुष”, சித்தபுருஷர்கள் – மனிதர்களாக இருந்தும் சித்தர்களைப் போன்ற நிலையை அடைந்தனர் என்றா ரீதியில் – அழைத்தனர்[4].

வேதகால ரிஷிக்கள், முனிவர்கள் மருத்துவ சித்தர்கள் ஆகார்: வேதத்தைக் கற்று, கற்பித்து, வாழ்ந்தவர்கள் ரிஷிக்கள்-முனிக்கள். ஆனால் அவர்கள் “மருத்துவ சித்தர்கள்” இல்லை.  வேதாங்கங்களை போதிப்பர், ஆனால், அதனை பின்பற்றுவோர் வேறுக்குழுமத்தைச் சேர்ந்தவர்கள். சுஷ்ருதர், சரகர், வாகபட்ட முதலியோர் தலைசிறந்த அறுவைசிகிச்சை வல்லுனர்கள், பதஞ்சலி யோக விஞ்ஞானி. அவர்கள் “சித்தர்கள்” என்று குறிப்பிடப்படவில்லை. ஆயுர்வேத மருத்துவ நூல்களை எழுதியவர்களும் “சித்தர்கள்” என்று அழைக்கப்படவில்லை. ஏன் ஆயுர்வேதத்தை அளித்தவர், ஆயுர்வேதத்தின் தந்தை என்று சொல்லப்படக்கூடிய தகுதியுள்ளவரும் அவ்வாறு கருதப்படவில்லை. ஆனால், நூற்களை எழுதியவர்கள், அத்தொழிலை செய்யவில்லை அல்லது அவர்களுக்குத் தெரியாது என்றாகாது. ஏனெனில் அக்காலத்தில், மருத்துவம் இலவசமாக வழங்கப்பட்டது. அதனால் அவரவர் வேலைகளை, கடமைகளை செய்து வந்தனர். அதாவது ஒவ்வொருவரும் அவரவர் துறையில் சிறந்தவர்கள் (specialists), வல்லுனர்கள் (Experts), விஞ்ஞானிகள் (Scientists) என்றிருப்பர்.

எண்

முறை

அர்த்தம் / பொருள்

விளக்கம்

1 शिक्षा

சிஷா

மந்திரங்களை எப்படி உச்சரிப்பது, மனப்பாடம், நினைவுகொள்வது என்றமுறை ஒரு படிப்பு படிக்கும்போது, அத்துறையில் உள்ள வார்த்தைகளுக்கு முறையான உச்சரிப்பு, பொருள் தெரிந்துகொண்டு படிப்பது.
2 कल्प

கல்ப

மந்திரங்களை எங்கு, எப்பொழுது, ஏன் உபயோகிக்கவேண்டும் என்று விளக்குவது. இதில் மூன்றுசூத்திரங்கள் / பிரிவுகள் உள்ளன. श्रौत सूत्र= சௌர்த்தगृह्य सूत्र = கிருஹधर्मसूत्र = தர்ம
3 व्याकरण

வியாக்ரண

இதில் மந்திரச் சொற்களை எவ்வாறு எந்தமுறையில், மற்றச் சொற்களோடு உபயோகிக்கவேண்டும், அவற்றின் விளைவு இலக்கணம் என்றில்லாமல், நடைமுறையில் கற்றுக் கொள்ளவேண்டிய விவரங்கள்.
4 निरुक्त

நிருக்த

ஒரே மந்திரத்திற்கு, சொல்லுக்கு பற்பல அர்த்தங்கள் இருப்பது, அவற்றின் விளக்கம் உதாரணத்திற்கு நுண்ணுய பொருட்துகள் – அணு, செல், என்று பலவாக உயிருள்ளவை-உயிரற்றவைகளில் உள்ளன.
5 ज्योतिष

ஜோதிஷ

சோதிடம் என்றால் வானவியல், இது, பூகோளம், கிரகங்கள், காலவியல், கணக்கியல் முதலியவற்றைக் கொண்டது. சோதிடம் என்றால் இக்காலத்தையது பொலல்ல. வேதாங்க சோதிடம் என்பது உலகத்திலேயே உள்ள மிகப்பழமையான வானியல் சாத்திரப் புத்தகமாகும்.
6 छन्द

சந்த

மந்திர வார்த்தைகள், சொற்றொடர்கள், வரிகள் முதலியவற்றை அவற்றின் சப்தத்திற்கேற்றபடி, அமைத்து உருக்கொடுத்தல். பிங்கள சந்த சூத்ர இன்று உலகளவில் பிரசித்தியகியிருக்கிறது. ஏனெனில் அது 0 மற்றும் 1 கணக்கீட்டிற்கு முறையைக் கொடுத்துள்ளது.

இதிஹாசபுராணங்களில்சித்தர்கள்: இதிஹாச புராணங்களில் சித்தர்கள் – தேவரிஷிகள், சாரணர், கின்னரர், கந்தர்வர் போன்றவர்களுடன் சேர்ந்து வாழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றது[5]. ராமாயணம் சித்தாஷ்ரம் (सिद्धाश्रम) ஒன்றிருந்தத்தைக் குறிப்பிடுகிறது (ஆதிகாண்டம்.29வது சர்க்கம், சுலோகங்கள்.3-6). அந்த மிகச்சிறந்த ஆஷ்ரமம் (ஆதி.5.24) வாமனருக்கு முன்பாகவே இருந்தது. விஷ்ணு இங்கு தவம் செய்து சித்தி பெற்று, வாமன அவதாரம் எடுத்ததால், அப்பெயர் பெற்றது[6]. விஷ்வாமித்திரர், ராமரை இங்கு அழைத்து வந்தார். மஹாபாரத்திலும் அதேப்போன்ற குரிப்புள்ளது[7]. மேரு மலையைச் சுற்றியுள்ள மலைகளின் உச்சிகளில் அவர்கள் வாழ்ந்திருந்தனர்.

மஹாபாரதம்.ஆதிபர்வம்.அத்தி.65.சுலோ.46 – ஒரு தேவகந்தர்வன். கஸ்யபர் மற்றும் பிராதா என்பருக்கும் பிறந்தவன்.

மஹாபாரதம்.ஆதிபர்வம்.அத்தி.70.சுலோ.15 – சித்தர்கள், தேவர்களின் குழுமம். அவர்கள் இமயமலை அடிவாரத்தில் கண்வ முனிவர் ஆசிரமத்திற்கு அருகில் வாந்தனர்.

மஹாபாரதம்.சபாபர்வம்.அத்தி.8.சுலோ.29 – சித்தர்கள் யமனுடைய அரண்மனையில் தங்கி, அவனுக்கு சேவை செய்து வந்தார்கள்.

சித்தகிரஹா – சித்தர்களால் சபிக்கப்பட்ட ஒரு துர்தேவதை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சித்தபிரமைப் பிடித்து பைத்தியமாவார்கள்.

சித்தார்த்த[8] – 1. குரோதவாச என்ற அசுரனின் மறுபிறவி;

2. தசரதருடைய அமைச்சர்களில் ஒருவன்;

3. சுப்ரமணியருடைய வீரர்களில் ஒருவன்;

4. பிறகு புத்தருடைய பெயராகவும் உள்ளது.

விஷ்ணுபுராணத்திலும் (The Vishnu Purana: Book II: Chapter V) அவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது[9]. சித்தர் முதலியோர் அனந்தன் என்ற பெரிய நாகத்தைப் போற்றுவதாக உள்ளது. வாயுபுராணம், ஜம்புதீவபத்தின் வடபகுதியில் ஜாருதி மலைப்பகுதியில் பலர் வாழ்ந்திருந்தனர். குறிப்பாக அம்மலைமீது சித்தர்களும், தேவரிஷிகளும் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்காக அம்மலையின் நடுப்பகுதி ஆபரணங்களினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு ஆனந்த ஜலம் என்ற மிகத்தூய்மையான நீர் கொண்ட ஏரி ஒன்று இருந்தது. அதில்தான் சித்தர்களும், தேவரிஷிகளும் நீராடுவார்கள் (அத்தி.41:66-73). அதேபோல மேருமலையின் வடக்குப் பக்கத்தில் “ரமணக வர்ஷ” என்ற மலையுள்ளது. அங்கும் சித்தர்கள், சாரணர்கள் வாழ்ந்து வந்தனர். உத்தரகுருவின் தெற்கில் உள்ள மலையிலும் சித்தர்கள், சாரணர்கள் வாழ்ந்து வந்தனர் பிறகு மற்றொரு சுலோகத்தில் சித்தர்கள் தேவர், ராக்ஷஸர், பன்னகர், யக்ஷர், கந்தர்வர், கின்னரர்களுடன் சேர்ந்து வாழ்வதாக கூறுகிறது (அத்தி.39.1). மேலும் இவர்கள் இப்படி தனியாக, தொலைவில் இருப்பது, பொதுமக்களுக்கு உதவுவதாகவோ, அவர்களுக்காக மருத்துவம் செய்வதாகவோ இல்லை.பிறகு வானியல் நூல்களில் உலகில் நான்கு திசைகளில் பூமத்திய ரேகையிலுள்ள நான்கு நகரங்களில்[10] ஒன்று “சித்தபுர” என்றும் அங்கிருப்பவர் “சித்தர்” என்று வழங்கப்பட்டது.  ஆனால் அவர்கள் மருத்துவ அல்லது ஆன்மீக சித்தர்கள் அல்லர்.

இந்திய மருத்து வமுறையின் பண்பாடு: இந்திய மருத்துவம் அல்லது எந்ததுறையிலும், ஒரு பாரம்பரியம் பின்பற்றப்பட்டு வந்தது. அதாவது, தாம் யாரிடமிருந்து படிப்பை, வித்தையை, ஞானத்தை பெற்றோம் என்பதனை அவர்கள் தவறாமல் தங்களது நூற்களில் குறிப்பிட்டு வந்தார்கள்[11]. ஆனால், மற்ற நாகரிகங்களில் மூலங்களைக் குறிப்பிடும் அத்தகைய பண்பாடு இல்லை. அவர்களே எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு அல்லது கண்டுபிடித்து எழுதியதைப் போலக் காட்டிக் கொள்வார்கள். அதனால், அந்த புத்தகங்களே அவர்கள் பெயர்களில் தான் இருக்கும். ஒரே நூலாக இருந்தாலும், பத்து பேர் எழுதினால், அந்த பத்து பேர் பெயரிலும் உலா வரும் வேதங்கள் பற்பல ஆண்-பெண்[12] ரிஷிக்களால் போதிக்கப்பட்டவை, ஆனால், அவை அவரவர் பெயர்களில் வழங்கப்படுவதில்லை. இந்தியமுறைகளில் பாஷ்யங்களுக்குத்தான் (உரைகள்) உரையாசிரியர்களின் பெயரிடப்படும். சாயனருடை உரை, ஆதிசங்கரருடைய பாஷ்யம் என்றிருக்கும். மருத்துவ நூல்கள் எல்லாம் “சம்ஹிதை” என்ற பிரிவில் வரும்[13].

© வேதபிரகாஷ்

06-09-2012


[1] வேதமதம் என்று தனியாக ஒன்றும் இல்லை. உண்மையில் பாரத்தில் இருந்தது அல்லது பாரத நாட்டவர் உலகம் முழுவதும் பரந்திருந்தபோது, பின்பற்றிய மதம் ஒன்றுதான். அது பிற்காலங்களில், வர்த்தமான – தேசகால மாற்றங்களினால், வித்தியாசங்களைப் பெற்றது.

[2] Monier Williams, A Sanskrit-English Dictionary, Motilal Banarasidas, New Delhi, 1996, pp.1215-1216.

[3] V. P. Apte, Sanskrit-English Dictionary, Motilal Banarasdas, New Delhi, 1963.

[4] பிற்காலத்தில் வர்த்தமான மஹாவீரர் “सिद्धार्थ” மற்றும் “சித்தார்த்த” என்றவர் “புத்தர்” ஆனத்தை நோக்கவும். அதாவது, இச்சொல் மிகவும் உயர்வாக மதிப்பக்கப்பட்டது.

[5] M. R. Singh, Geographical Data in the Early Puranas – A Critical study, Punthi Pustak, Calcutta, 1972.

[6] Bimala Churn Law, Historical Geography of Ancient India, Orient Reprint, New Delhi, 1984, p.126.

[7] Kinnaras were mentioned along with other exotic tribes like the Nagas, Uragas, Pannagas, Suparnas, Vidyadharas, Siddhas, Charanas, Valikhilyas, Pisachas, Gandharvas, Apsaras, Kimpurushas, Yakshas, Rakhsasas, Vanaras etc. at various places. (1-18,66), (2-10), (3-82,84,104,108,139,200,223,273) (4-70), (5-12), (7-108,160), (8-11), (9-46), (12- 168,227,231,302,327,334,(13-58,83,87,140), (14-43,44,88,92).

Siddhas were mentioned along with the Kinnaras, Charanas, Gandharvas, , Apsaras and Vanaras. They were seen by the Puru king Dushmantha (Dushyanta) in a forest where his would-be wifSakuntala lived. In that forest on the banks of a river called Malini (Ganges?) he saw the habitations of Kinnaras. He also saw Yotis (Yati in theHimalayas) and the Valikhilyas.

[8] Vettam Mani, Puranic Encyclopedia – A Comprehensive work with special reference to the Epic and Puranic literature, Motilal Banarasidass, New Delhi, 1998, p.716

[9] Gandharbas, Apsarasas, Siddhas, Kinnaras, Uragas, and Chárańas are unequal to hymn his praises, and therefore he is called the infinite (Ananta), the imperishable.

http://www.sacred-texts.com/hin/vp/vp063.htm

[10]லங்க, ரோமக, யவகோடி, சித்தபுர என்ற நான்கு நகரங்கள் இருந்ததாக சூரியசித்தாந்தம் முதலிய வானியல் நூல்கள் எடுத்துக் காட்டுகின்றன.,

[11] வேதம், வேதாங்கம், சித்தாந்தம், இதிஹாசம், புராணம் என்ற எந்த படிப்புமுறையாகிலும் தமது முன்னோடிகளை, ஆசிரியர்களைக் குறிப்பிட்டு, வணக்கம் செல்லுத்துவிட்டு தான் புத்தகத்தை எழுத ஆரம்பிப்பர். தொல்காப்பியம் இந்த பண்பாட்டைப் பின்பற்றியுள்ளடது.

[12] வேதங்களை பெண்களே இயற்றியிருக்கும் போது, பெண்கள் வேதங்களைப் படிக்கக் கூடாது என்று பிறகு ஜைனர்கள்-பௌத்தர்கள் தடைவிதித்தை, இன்று வேறுமாதிரியான விளக்கங்கள் அளித்து வருவதை நோக்கவும்.

[13] ऋग्वे, सामवेद, यजुर्वेद अथर्ववेद சம்ஹிதைகள் மற்றுமில்லாது சரக, சுஷ்ரத சம்ஹிதைகளும் வரும்.

Posted in கந்தருவர், சித்தஜலம், சித்தபுரம், சித்தபுரி, சித்தபுருஷன், சித்தப்பிரமை, சித்தம், சித்தயோகம், சித்த்ஞானம், தேவர், விவேகானந்தர், வேதாசலம், வைத்தியர் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »