சித்தர்களின் மூலம், பாரம்பரியம், இன்றைய நிலை

வரலாற்று நோக்கில் சித்தர்கள் ஆராய்ச்சி

Archive for the ‘கஜகிஸ்தான்’ Category

இஸ்லாமிற்கு–நபிக்கு (570-632 CE) முன்புஅரேபியாவில்இருந்தவர்கள் (சித்தர்களைத்தேடி)

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 23, 2012

இஸ்லாமிற்குநபிக்கு (570-632 CE) முன்புஅரேபியாவில்இருந்தவர்கள் (சித்தர்களைத்தேடி)

இந்தியசரித்திரத்தைப்புரட்டிஅல்லதுதவறாகஎழுதிமற்றநாட்டுசரித்திரங்களைஅறிந்துகொள்ளமுடியாது: கிரேக்கர்களுக்கு முன்பு (c.1800 – 327 BCE) – பின்பு (326 – 100 BCE) எப்படி இந்திய சரித்திரம், மேனாட்டவர்களால் புரட்டப்பட்டதோ, அதாவது இந்திய சரித்திர உண்மைகளைத் திரித்து மேனாட்டவர்கள் தங்களுக்கு சாதகமாக சரித்திரத்தை எழுதிகொண்டார்களோ, அதேபோல, அரேபியர்களுக்கு முன்பு (100- 712 CE) -பின்பு (712 – 1707 CE) என்றும் இந்திய சரித்திரம் புரட்டப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது[1]. முஹமது நபிக்கு (570-632 CE) முன்பிருந்த அரேபிய சரித்திரத்தை மறைத்து உண்மைகளை அறியமுடியாது. இந்தியாவிற்கும், அரேபியாவிற்கு அல்லது அரபிஸ்தானத்திற்கும் உள்ள தொடர்பை அறிந்தால் தான் ஆன்மீகரீதியில், மருத்துவரீதியில், விஞ்ஞானரீதியில் உண்மைகளை அறியமுடியும். அரேபியாவில் இருந்த சித்தர்களை அறியவேண்டுமானால், இஸ்லாம் பிறப்பதற்கு முந்தியுள்ள – இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செல்ல வேண்டியிருக்கிறது.

கிரேக்கமருத்துவர்களால்அலெக்சாந்தரைஏன்காப்பாற்றமுடியவில்லை?: இந்தியாவின் சரித்திரமே 327-326 BCEலிருந்துதான் ஆரம்பிக்கிறது, அதுதான் இந்திய சரித்திரத்தின் உறுதியான, தீர்மானிக்கப்பட்ட ஆரம்பகாலம் என்றனர்[2]. ஆனால் 327-326 BCE என்பது அலெக்சாந்தர் பாரதத்தின்மீது படையெடுத்துத் தோற்று, கிரேக்கத்திற்கு திரும்பச் செல்லாமலே வழியிலேயே 323 BCEல் பாபிலோனியாவில் இறந்து போன காலத்தைக் குறிக்கிறது[3]. அதாவது ஈட்டிக் குத்தி காயப்பட்டு, ரத்தப்பெருக்கு ஏற்பட்ட அலெக்சாந்தரை, தலைசிறந்த கிரேக்க மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவன் 10 நிர்வாண சாமியார்களைப் பிடித்தபோது, ஒரு சாமியார் பூமியின்மீது தனது காலை உதைத்து சைகை செய்தபோது, அவர் என்ன செய்கிறார் என்று கேட்டபோது, அவனது கிரேக்க அறிவுரையாளர்கள்[4], “நீங்கள் மண்ணோடு மண்ணாகி விடுவாய்”, என்று உருவகமாகக் கூறுவதாக விளக்கம் அளித்தபோது, கோபம் கொண்டு அவர்களைக் கொன்றுவிடுவதாக கிரேக்கக் கதைகள் கூறுகின்றன[5]. அதாவது இந்தியத் துறவிகளை அந்த அளவிற்குத் துன்புறுத்தியுள்ளான். ஞானத்தை அறியவேண்டுமானால், ஞானிகளிடம் பணிவாக இருந்து கற்றுக் கொள்ளவேண்டும். அதிகாரத்தினால், ஆணவத்தினால், பனத்தினால் ஞானத்தைப் பெறமுடியாது. அவற்றால் வசதிகளைப் பெருக்கிக் கொள்ளலாம். ஆனால், சீக்கிரமாகவே அத்தகைய வசதிகள் அழிவிற்கு எடுத்துச் செல்கின்றன.

சுமார் 1450 BCEயில்அரேபியாவிற்குவடமேற்கில்வேதமதம்இருந்தது: சித்தர்களைத் தேடும் முயற்சியில், கிரேக்கத்திற்குப் பிறகு அரேபியாவிலும் தேடவேண்டியுள்ளது. கிரேக்கத்திற்கும் இந்தியாவிற்கும் தரைவழியாக போக்குவரத்து துருக்கி, மெசபடோமியா (இராக்), பாரசீகம் (இரான்), காந்தாரம் (ஆப்கானிஸ்தான்), சிந்து (பலுச்சிஸ்தான், பாகிஸ்தான்) முதலிய நாடுகளின் வழியாக இருந்து வந்தது. துருக்கி-மெசபடோமியா பகுதிகளுக்குக் கீழ் அரேபியா-அரேபியதீபகற்பம் உள்ளது. அங்குள்ள மக்களும் அங்கிருக்கும் சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கேற்ப தங்களது வாழ்க்கையினை தவமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்திருப்பர். போகோஸ்காய் (Bogazkoi, Turkey) என்ற இடத்தில் கிடைத்த கல்வெட்டு ஒன்று, மிட்டானிய (Mittanians) மற்றும் ஹிட்டைட் (Hittites) மக்கள் “இந்திரசீல்மித்ரசீல்வருணசீல்நசாத்யா” என்ற கடவுளர்களை தமக்குள் ஏற்பட்ட ஒரு உடன்படிக்கைக்கு சாட்சிகளாக இருக்குமாறு விளித்ததாகக் கூறப்பட்டுள்ளது. இவர்கள் மற்ற கடவுளர்களான தேஷுப் (Teshup) மற்றும் ஹெபா (Hepa) என்கின்றவர்களையும் சேர்த்து வேண்டுகிறார்கள்[6]. அதாவது அக்காலத்தில், அந்த இடத்தில் அத்தகைய சமரசம் மிட்டடனிய-ஹிட்டை மக்களிடம் இருந்துள்ளது. இக்கல்வெட்டு சுமார் 1450 BCE காலத்தைச் சேர்ந்தது என்று அகழ்வாய்வு நிபுணர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். அக்கடவுளர்கள் இந்திரன், மித்திரன், வருணன், அஸ்வினி தேவர்கள் ஆவர். அஸ்வினி தேவர்கள் மருத்துவத்தின் தேவதைகளாகக் கருதப்படுகின்றனர்.

அரேபியாவின்வடக்கில்இரானில்இருந்தமக்கள் (சுமார். 2500-2000 BCE): இதைத்தவிர, இந்ததஸு, இந்தபீபி, இந்தத்து, ஹிந்தியன், எனபல் பெயர்கள் இப்பழமையான நாகரிகங்களில், அரசர்களுக்கு, படைத்தளபதிகளுக்கு, நதிகளுக்கு, இடங்களுக்கு உபயோகப்படுத்தியுள்ளனர்[7]:

  1. இந்ததஸு/இந்தாஸு – ஊர்- III காலத்தைச் சேர்ந்த அரசன்[8].
  2. ஷிருக்-து, இந்தாஸு வரையில் வெற்றிக் கொள்ள விரும்பினான்[9].
  3. ஷாமஸ்-ஷும்-உகின் என்ற அரசனை இந்த்பீபி என்ற தளபதி வென்றான்[10].
  4. ஷுதுர்-நஹுந்தே, இந்தததாவின் மைந்தன்[11].
  5. இந்தத்து – இஷின் என்ற நநட்டின் அரசன்[12].
  6. ஹிந்தியன்– மெசபடோமியயவில் பபயும் ஐந்து நதிகளில் ஒன்று, இதன் மறுபெயர் ஜுரேஹ்[13].
  7. ஹிந்தாரு – சர்கோன் என்பவன், கம்புலு மக்களின் இடங்களை வென்றான். அவற்றுள் ஒரு இடத்தின்பெயர்[14].

எனவே, அரேபியாவிற்கு வடக்கில் அத்தகைய வேதமதத்தைப் பின்பற்றுபவர்கள் அல்லது வேதமதக் கடவுளர்களை அறிந்தவர்கள் அக்காலக்கட்டத்தில் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. இது ஜைனர்கள் அப்பகுதிகளில் சென்ற தேதியை ஒத்துள்ளது.

அரேபியாவின்வடக்கிழக்கில்சுமார் 3000 BCEல்மருந்துமூலத்திரவியத்தொகுப்பு (Phamacopoeia): சுமேரிய நாகரிகத்தை ஆய்ந்தவர்கள், சுமார் 3000 BCEல் முதல் மருந்துமூலத் திரவியத் தொகுப்பு (Phamacopoeia) உண்டாக்கப்பட்டது, என்கிறார்கள்[15].  ஆனால், சிந்துசமவெளி மருத்துவத்தைப் பற்றி அடக்கி வாசிக்கிறர்கள். கேட்டால் அவர்கள் சரித்திர-ககலத்திற்கு முந்தையவர்கள் என்கிறார்கள்[16]. கியூனிபாம் எழுத்துகளின் (Cuniform tablet) மண்பலகைகள் கிடைத்திலிருந்து, அவற்றைப் படித்து, அவர்கள் இவ்வாறு எடுத்துக் காட்டியுள்ளனர். அவை முழுமையாக இல்லாததினால், முழுவிவரங்களை பெறமுடியவில்லை என்றும் ஒப்புக் கொள்கிறார்கள். இருப்பினும், அம்மருத்துவத்தின் தேவதை பௌ (Bau), நினிசின்னா (Ninisinna) மற்றும் குலா (Gula) என்று அழைக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். அம்மருந்து தயாரிப்பில் உபயோகப்படும் ரசாயனப் பொருட்கள் – உப்பு (Sodium Chloride), வெடியுப்பு (Salt peter – Poataasium nitrate).  மற்றவையெல்லாம் மூலிகைகள், மரப்பட்டைகள், மரப்பிசின்கள் முதலியன. பொட்டாசியம் நைட்ரேட் பெறும் முறை எகிப்தியர் மற்றும் இந்தியர்களுக்குத் தெரியும் என்று அவர்களே எடுத்துக் காட்டுகிறார்கள்[17]. அப்படியென்றால், சிந்துசமவெளி மருத்துவத்திற்குண்டான மருந்துமூலத் திரவியத் தொகுப்பு (Phamacopoeia) இருந்ததா, இல்லை காணாமல் போயிற்றா, இல்லை கண்டெடுக்கப்பட்டும் மறைக்கப் பட்டதா?

மேற்கே எழுத-படிக்கத் தெரிந்த ஆரியர்கள் பாரத்ததிற்கு வந்ததும் படிக்கத்தெரியாமல் போய்விட்டார்களா? மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று விஷயங்களை ஆராயவேண்டியுள்ளது.

  1. சுமார் 1450 BCEயில் அரேபியாவிற்கு வடக்கில் வேதமதம் இருந்தது.
  2. இரானில் இருந்த மக்கள் (சுமார். 2500-2000 BCE)
  3. சுமார் 3000 BCEல் மருந்துமூலத் திரவியத் தொகுப்பு (Phamacopoeia)

அரேபியாவின் வடகிழக்குப் பகுதியில் சுமார் 1450 BCEயில் வேதமதம் இருந்து, சுமார். 2500-2000 BCEல் அவர்கள் பெயர்கள் மட்டும் இருந்து, சுமார் 3000 BCEல் முதல் மருந்துமூலத் திரவியத் தொகுப்பு (Phamacopoeia) உருவாகிறது எனும்போது, அதிலுள்ள காலக்கணக்கியல் உறுத்துகிறது, உதைக்கிறது மற்றும் முரண்பபடாகத் தோன்ருகிறது. ஏனெனில், ஆரியர்கள், இந்தோ-ஆரியர்கள் போன்றோர், மேற்கிலிருந்து, கிழக்கில் வந்து இந்தியாவில் புகுந்தனர் என்றால், அத்தேதிகள் எப்படி 1450 BCE – சுமார். 2500-2000 BCE – சுமார் 3000 BCE என்றிருக்கும்? இந்தியாவில் நுழைந்த ஆரியர்களின் காலம் 1500-1000 BCEல் வைக்கப்படுகிறது. அப்படியென்றால், அக்காலக்கணக்கீடு BCE – சுமார் 3000 BCE – சுமார். 2500-2000 – 1450 BCE என்றுதான் இருக்கவேண்டும் அப்பொழுது இந்தியாவில் நுழைந்த காலம் 1500-1000 BCEயுடன் ஒத்துப்போகின்றது. இல்லையென்றால், ஆரியர்கள் இந்தியயவிலிருந்து வெளியே சென்றிருக்க வேண்டும். அப்படியென்றால் அவர்களின் காலம் சுமார் 3000 BCEற்கு முன்பாக இருந்திருக்க வேண்டும். அதாவது, கிழக்கில் படிக்கத் தெரியாதவர்களாக இருந்து, மேற்கே செல்ல-செல்ல அவர்களுக்கு படிப்பறிவு வருகிறது என்றால், அது எந்த சித்து வேலை என்று தெரியவில்லை. இதே முறைதான், அலெக்சாந்தர் இந்தியாவின் மீது படையெடுத்தான் என்ற கதையிலும் வருகிறது.

எந்த மக்களின் நநகரிகம் தொடர்ந்து “வாழ்ந்து வரும் நாகரிகமாக” இருக்க முடியும்?: மக்களின் நீண்ட ஆயுள்காலம், ஆரோக்கியம், வளமான வாழ்வு, முதலியவைதாம் ஒரு நாகரிகம் எத்தகைய தாக்குதல்களில் சிக்குண்டாலும், எதிர்த்து மறையாமல் தொடர்ந்து வாழ்ந்துக் கொண்டிருக்கின்ற நாகரிகமாக இருக்க முடியும். அப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நாகரிகம் இந்திய நாகரிகம் தான்[18]. இந்தியாவைவிட உயர்ந்தவை, இந்தியா அவற்றிடமிருந்து காப்பியடித்து, அவர்களிடமிருந்து கடன் வாங்கிக் கொண்டு சிறந்தது என்ற் மேனாட்டவர் பெருமை பேசி, இந்தியாவை சிறுமைப் படுத்தி வந்தாலும், அந்நாகரிகங்கள் ஏன் அப்படி இருந்த இடம் தெரியாமல் அழிந்து விட்டன என்று அவர்கள் விளக்குவதில்லை. ஆகவே, மேனனட்டவர்கள் எப்படி சரித்திரத்தைப் புரட்டியிருக்கிறார்கள்-தலைகீழாக்கியிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம். அரேபியர்கள் முகபதியர்கள் ஆனவுடன், அதேபோல பழைய பழக்க-வழக்கங்களை மமர்ரியமைத்திருக்கிறார்கள்.

பாலியல், ரசவாதம், ஆயுள்நீட்டிப்பு: கிரேக்கமதம் இந்துமதத்தை ஒத்திருந்தாலும், ஜைனர்களால் அது பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு, உருமாற ஆரம்பித்தது. பைதாகோரஸ் போன்றோர் உண்மையான ஞானம் போன்றவற்றில் ஈடுபட்டாலும், மற்ற கிரேக்க சாமியார்கள் பலவித முறைகளைக் கையாண்டார்கள்.

  • எபிகுயூரியன் (342-270 BCE) என்பவரின் போதனைகள் வாழ்க்கை வாழ்வதற்கே, சந்தோஷத்திற்கே, அனுவவி ராஜா அனுபவி போன்ற கொள்கைகளில் (Hedonism[19]) இருந்தது.
  • சிம்போஸியத்தில் கிரேக்கர்கள் நிர்வாணமாகப் பங்கு கொண்டார்கள் என்று மேலே எடுத்துக் காட்டப்பட்டது.
  • 4 நுற்றாண்டில் BCE பெண்-நிர்வாணமும் மறுக்கப்படவில்லை.
  • ஓரினப்புணர்ச்சி கிரேக்கர்களிடத்தில் அதிகமாகவே இருந்தது. சோடோமி (Sodomy) என்பது ஆண்களுக்கிடையிலுள்ள ஓரினப்புணர்ச்சி[20].
  • இதைத்தவிர ஆணுமில்லை-பெண்ணுமில்லை என்றுள்ள அப்ரோடைட் (Aphrodite) என்பவர்களும் இருந்தார்கள்[21]. ஆண்களுக்கு பெண்களின் உறுப்புகளும், பெண்களுக்கு ஆண்களின் உருப்புகளும் உள்ள மனிதர்கள் அப்ரோடைட் எனப்பட்டார்கள்.
  • ஹெர்மாபுரோடிடோஸ் அல்லது ஹெர்மாபுரோடிடஸ் (Hermaphroditos or Hermaphroditus) ஹெர்மாபுரோடைட்டுகளின் ஆண்-தேவதை. இவன் ஹெர்மிஸ் (Hermes) மற்றும் அப்ரோடைட் (Aphrodite) என்பவர்களுக்குப் பிறந்தவன். எரோட்டுகள் (Erotes) என்ற தேவதைகளுள் சேர்க்கப்பட்டுள்ளான்.
  • பெரும்பாலான காமம், கொக்கோகம், பாலியல் முதலியவாற்றில் உபயோகப்படுத்தப்படும் சொற்கள் கிரேக்கத்திலிருந்துதான் பெறப்பட்டுள்ளன – ஈராஸ் = Eros (Love), ஆசை / காமம் (Himeros =Desire), பெருங்காமம் (Pothos =Passion), காமவெறி (Voluptas = sez-raged.
  • வீனஸ் என்ற தேவத்தையிலிருந்து பெறப்படும் இச்சொற்கள் காதல், உடலுறவு, பாலியல், பாலியல் நோய்கள், மருந்துகள் முதலியவற்றிற்கு உபயோகப்படுத்தப் படுகின்றன[22].
  • அரிஸ்டாடில் ஆலிவ் எண்ணையை கர்ப்பத்தைத் தடுக்கும் களிம்பாக உபயோகப்படுத்தலாம் என்று 4 BCEயில் கூறினார்.
  • ஹெர்மிஸ் (Hermes) என்பவன் தான் ரகசிய சித்தாந்தங்கள், ரசவாதம் முதலியவற்றிற்கு தேவன்[23]. அதாவது கிரேக்கர்களைப் பொறுத்தவரைக்கும், காமம் ரசவாதத்துடன் இணைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
  • ஓவிட் (Ovid) மற்றும் லூசியன் (Lucian) போன்றோரது கொக்கோக-காமக்களியாட்ட இலக்கியங்கள், அவர்களது கிரக்கத்தின் உச்சத்தைக் காட்டுகின்றன.
  • இதைத்தவிர பாலியல், உடலுறவு செய்முறை நூல்களும் பெருகின[24].

மேலே குறிப்பிட்ட ஒன்றொன்றிற்கும் அக்கால சிற்பங்கள், ஓவியங்கள், உலோக விக்கிரங்கள் முதலியவை உலக பிரசித்தி பெற்ற கலைக்கூடங்களில், அருங்காட்சியகங்களில் உள்ளன. கிரேக்கர்களைப் பின்பற்றி வந்த ரோமானியர்களில் இவ்விஷயங்களில் சளைத்தர்கள் அல்லர்[25]. அதிக உடலுறவு கொண்டால், ஆயுள் பெருகும்; அதிக பெண்களிடம் உடலுறவு கொண்டால் ஆயுள் பெருகும்;  கன்னிகளுடன் உடலுறவு கொண்டால், ஆயுள் பெருகும், என்று தவறான பல கருத்துகள் உருவானதால், அத்தகைய தீய இலக்கியங்கள் உருவாகின, சமூகமும் சீரழிந்தது. கிரேக்க ரசவாதம் இப்படி பாலியில் உருமாறி, உருக்குலைந்ததற்குக் காரணம் அவர்கள் ஜைனர்களின் முறைகளை துஷ்பிரயோகம் செய்தது தான். இதனால் மந்திர-தந்திர-யந்திர போன்ற சடங்குகள் அங்கும் கடைபிடிக்கப்பட்டன என்று தெரிகிறது. ஆனால், அவை பாலிய ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதால் பலவித பாலியல் திரிபுகள் ஏற்பட்டன.

வெள்ளையாடைஅணிந்தமற்றசாமியார்கள் / சந்நியாசிகள்: வெள்ளையாடையை அணிந்த எஸ்ஸென்ஸ் (Essences), ஞாஸ்டிக் (Gnostic), மணிக்கியர் (Manichaeans) போன்றோர் பிரமச்சரியம், ஒழுங்கு, கட்டுப்பாடு முதலிவற்றைப் பின்பற்றினர். பின்னர் வந்த மணி (216-276 CE) என்பவரோ, இல்வாழ்க்கை வேண்டாம், திருமணம் வேண்டாம் என்றெல்லாம் போதித்தார். இங்கு முக்கியமான விஷயம் என்னவென்றால், மணி பாரசீகத்தில் துறவரம் கடைப்பிடித்த ஆசாரமான யூதகுடும்பத்தில் பிறந்தவர். பன்னிரெண்டு வயதில் ஞானம் பெற்று, போதிக்க ஆரம்பித்தார். கிழக்கில் பாரதம் வரையில் வந்ததாகச் சொல்லப்படுகிறது. பிறகு மத்திய ஆசியா சென்று மெடபடோமியா, சிரியா, இஸ்ரேல் வழியாக அலெக்சாந்திரியாவிற்கு வந்தார். ஆனால் இவரது போதனைகள் ஒவ்வாததனால், அங்கிருந்த பஹ்ரம் – I (Bahram – I 273-276) இவரை 276ல் தூக்கிலிட்டான். இருப்பினும், மணியுடைய பிரமச்சரியக் கொள்கைகள் மேற்கில் எகிப்து, ரோம், இங்கிலாந்து மற்றும் கிழக்கில் சைனா வரை பரவியது[26].

300-500 காலத்தில் இதன் தாக்கம் இருந்தது. கிரேக்க-ஜைனர்களில் அளவிற்கு மீறிய பாலியல் தீமைகள், கொடுமைகள் மற்றும் குற்றங்கள், இவற்றை எதிர்த்து, திருத்தத்தான், இம்மதம் மக்களிடம் வேகமாகப் பரவியது எனலாம். இதேபோல ஞாஸ்திக மதத்தின் (Gnosticism) தாக்கமும் அதிகமாகவே இருந்தது. இதன் மூலங்களை மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரியாது அல்லது ஒருக்கின்ற யூதமதத்திலிருந்துதான் தோன்றியது என்று வாதிட்டாலும், ஜைனர்களின் தாக்கத்தைக் காணமுடிகிறது. அதாவது, 1450 BCEல் இருந்த வேதமதத்தை மறந்துவிட முடியாது.

அரேபியாவியாவைச்சுற்றியிருந்தவேதமதம்: அரேபியைச் சுற்றியிருந்த வேதமதம் அரேபியாவிற்குள் நுழையவில்லை என்றாகாது. இஸ்லாம் வரும்வரை அங்கிருந்த மக்கள் அநாகரிகமாக, பாகன்களைப் போலிருந்தார்கள் (Pagans, Barbarians) என்று சொல்வது சரித்திரப் பொய்யாகும். 1450 BCEலிருந்து 650 CE வரை அப்படியே இருந்தார்கள் என்றால், அது எவ்வளவு பெரிய பொய் என்பதனையும் அறிந்து கொள்ளலாம்.

மேலேயுள்ள வரைப்படத்திலிருந்து சுமார் 1400 BCE காலத்தில் கானான், அமுறு, நுஹாஷே, மிட்டானி, ஹஸ்ஸுக்கன்னி, அசூர் (அசீரியா), தூர்-குரிகள்ஜு, கேசைட் (பாபிலோனியா) முதலிய மக்கள், அரேபியாவின் வடமேற்கு-வடக்கு-வடகிழக்குப் பகுதிகளில் வாழ்ந்தனர். மேற்குறிப்பிட்ட பகுதிகள் இப்பொழுது, இஸ்ரேல், ஜோர்டன், லெபனான், சிரியா, இராக், இரான் என்ற நாடுகளாக உள்ளன. அவர்களது சிற்பங்களை பார்த்தால், அவை பாரதநாட்டவருடையது என்று எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது[27]. அவ்விடங்களின் பெயர்கள் – ஏயில்காயா, நிஸந்தா, அம்பர்லிகாயா, புயுக்காயா, ஹத்துஸா, போகாஜ்கோய் என்றுள்ளன. ஆகவே, அரேபியர் தனித்து வேறு நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு கொண்ட மக்களாக இருந்திருக்க முடியாது. அரேபியாவில் கிடைத்துள்ள அகழ்வாய்வுப் பொருட்கள், சிற்பங்கள், பாத்திரங்கள் முதலியனவும் மேற்குறிப்பிட்ட மக்களின் நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாட்டுக் காரணிகளுடன் ஒத்துப் போகின்றன. ஆகவே, அங்கு சக்தி-சிவன், சிவ-சக்தி, மும்மூர்த்தி, மூன்றுதேவதைகள் முதலியவர்களின் வழிபாடு இருந்துள்ளது வியப்பாக இல்லை.

இடைப்பட்ட நூற்றாண்டுகளில் இப்பகுதிகளில் யூதம், கிருத்துவம் மற்றும் முகமதியம் ஒவ்வொன்றாக வளர்ந்து வரும் போது பழைய நாகரிகங்கள் அழிந்தன அல்லது அழிக்கப்பட்டன. 670 BCEல் அசீரியர் எகிப்தை வென்றனர்.  356-323 BCE காலத்தில் எகிப்தை அலெக்சாந்தர் வென்று, தனது தளபதி டாலமியை அரசனாக்கினான். 30 CE காலத்தில் ரோமர்களால், கிரேக்கம் மற்றும் எகிப்து ஆக்கிரமிக்கப்பட்டன. இப்படி அம்மக்கள் ஒருவருக்குள் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டதால், பாபிலோனியர் (Babylonians), அசீரியர் (Assyrians), சால்டியர் (Chaldeans), அராமியர் (Araamaeans), போனீஷியர் (Phoenecians), முதலியோரது நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு முதலியன அம்மக்களோடு மறைந்து வெறும் கதைகளாகி விட்டன. இருப்பினும், அங்கிருக்கும் மக்கள் சில பழைய சடங்குகள், சம்பிரதாயங்கள், விழாக்கள் முதலியற்ரைத் தொடர்ந்து நடத்திவருவதால், அவற்றிலிருந்து அந்த பழைய கூறுகளை அறிந்து கொள்ள முடிகிறது.

© வேதபிரகாஷ்

21-09-2012


[1] வின்சென்ட் ஸ்மித், ஜான் பிளீட் போன்றோர்அலெக்சாந்தர் பாரத்தத்தின்மீது படையெடுத்த 327-326 BCE காலத்திலிருந்து தான் இந்திய சரித்திரம் ஆரம்பிக்கிறது, அதற்கு முன்னர் இந்தியாவிற்கு சரித்திரமே இல்லை என்ற அடிப்படையில் எழுதி வைத்த சரித்திரத்தைத் தான், இப்பொழுதும் இந்தியர்கள் இப்பொழுதும் படித்துக் கொண்டிருக்கின்றனர். அலெக்சாந்தர் காலத்தில் பாரத்தை ஆண்டது குப்தர் வம்சத்தின் சந்திரகுப்தர் இல்லை, மௌரியர் வம்சத்தின் சந்திரகுப்தர் என்று திரித்ததால் 1200 வருட இந்திய சரித்திரம் சுருக்கப்பட்டது. இதனால் தான் இந்திய சரித்திரத்தில் பல புதிர்கள் உண்டாயின. புரிந்து கொள்ளாதோர் புதிய விளக்கங்கள் கொடுத்து, உள்ள சரித்திரத்தையே புரட்டிவிட்டு, அதற்கும் ஒரு முறையை உண்டாக்கி குழப்பியுள்ளனர்.

[2] The British history writers arbitaratily declared that “The Alexander’s invasion is is the sheet anchor of Indian history”, without any authority.

[3] K. V. Ramakrishna Rao, The Myth, Romance and Historicity of Alexander and their Influence on India, www.hinduwebsite.com

[4] Arrian.viii, 1.5 ff.

[5] McCrindle, The Invasion of India by Alexander the Great as described by Arrian, Quitus Curtius, Diodorus, Plutarch and Justin, London, 1896.

[6] George Roux, Ancient Iraq, Penguin Books, U.K, 1980, p.218.

[7] D. T. Potts, The Archaeology of Elam – Formation and Transformaton of an Ancient Indian Iranian state, Cambridge University Press, UK, 1999, p.

[8] Indassu – name of an ensi of Zabshali in the Ur III eriod, p.168.

[9] Shiruk-tuh wanted to conquer upto Indassu, p.141.

[10] Indabibi – name of a general who overthrown Shamash-shum-ukin, p.282

[11] Shutur-Nahhunte, son of Indada, p.303.

[12] Indattu – king of Isin, p.148.

[13] Hindian – one of the five rivers flowing in Mesopotomia, otherwise mentioned as Zuhreh, p.15.

[14] Hindaru – a place conquered by Sargon, of the Gambulu tribe.

[15] Samuel Noah Kramer, History Begins at Sumer – Thirty-Nine Firsts in Man’s Recorded History, University of Pennsylvania Press, Phladelphia, USA, 1981, pp.60-64.

[16] இப்பொழுது புரோட்டோ ஹிஸ்டரி (Protohistory) என்ற சொல்லை உபயோகித்ததலும், மனங்களில் பிரி-ஹிஸ்டரி (pre-history) என்ற கருத்தை வைத்துக் கொண்டுதான் படிப்பறிவு இல்லாத ஹரப்பன்கள் (Illiterate Harappans) என்று அந்த மேனனட்டு அறிவுஜீவிகள் கூறிவருகின்றன. நமது திராவிட கூட்டங்களும் அடிவருடிக் கொண்டு, பட்டங்கள் கொடுத்து பபராட்டு விழா எடுத்துக் கொண்டிருக்கின்றன.

[17] Samuel Noah Kramer, History Begins at Sumer – Thirty-Nine Firsts in Man’s Recorded History, University of Pennsylvania Press, Phladelphia, USA, 1981, pp.62-63

[18] சீன நாகரிகமும் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த இரு நாகரிகங்கள் தாம் தொடர்ந்து இருந்து வருகின்றன, மற்றவை மறைந்து விட்டன.

[19] Hedone was the spirit (daimona) of pleasure, enjoyment and delight. As a daughter of Eros (Love) she was associated more specifically with sensual pleasure. Her opposite numbers were the Algea (Pains). The Romans named her Voluptas.

[20] Sodomy, sodomites inhabitants of Sodom. Male homosex.

[21] Hermaphroditism = human being having both man and animal characteristic, nymph Solmacts

[22] Aphrodite = Aphrodiastic venereal, drug producing venereal disease,

Aphrodiasiac, aphrodisios, aphrodite = derived from Venus, the goddess of love etc.

[23] Hermes = author of mysterious doctrines, ecrets of alchemy

[24] Twleve Arts of the Actions of Love, Ovid’s Arts Amatoria etc are covered under “Classical literature”.

[25] David Mountfield, Greek and Roman Erotica, Miller Graphics, Italy, 1982.

[26] Richard Foltz, Religions of the Silk Road, St. Martin’s Press, New York 1999.

[27] கூகுள் தேடலில் – Yazilkaya, Nisantas, Ambarlikaya, Mihraplikaya, Büyükkaya, Hattusha, Boğazköy – என்ற வார்த்தைகளை தட்டெச்சு செய்தால் அச்சிற்பங்களைப் பார்க்கலாம்.

Posted in அப்ரோடைட், அரேபியா, ஆகாயம், ஆன்மா, ஆயுர்வேதம், ஆயுள், ஆயுள்வேதம், ஆரியன், ஆரியம், இந்தியவிரோதிகள், இந்தியா, உடல், உயிர், உஸ்பெகிஸ்தான், எபிகுயூரியன், கஜகிஸ்தான், கண், கத்தி, கனிமம், கம்பளி, கருத்து, கரைசல், கற்பம், கலாச்சாரம், கல்பம், காபாலிக, காமாக்கியா, காயம், காற்று, கிர்கிஸ்தான், கை, சக்தி, சடங்குகள், சட்டைமுனி, சம்பிரதாயங்கள், சஹஜயான, சிகிச்சை, சிதர், சிதார், சித், சித்தகுரு, சித்தஜலம், சித்தஞானம், சித்தபுரம், சித்தபுரி, சித்தபுருஷன், சித்தப்பிரமை, சித்தம், சித்தயோகம், சித்தர், சித்தர் பாடல்கள், சித்தார்த், சித்து, சிந்து, சிந்து சமவெளி நாகரிகம், சீனா, சுத்தம், சூபி, சைனா, சைவம், ஞானம், ஞானி, தந்திரம், திகம்பர, திகம்பரம், திகம்பரர், துர்க்மேனிஸ்தான், துறந்தவர், துறவி, நாகரிகம், நாட்டு மருத்துவம், நாத்திகம், நிம்மதி, நிர்வாணம், நீர், நுண்ணிய அறிவு, பகுத்தறிவு, பஞ்சபூதங்கள், பதினென் சித்தர்கள், பரம்பரை வைத்தியர், பாதரசம், பாரதம், பாரம்பரியம், பாலியல், பித்து, போகோஸ்காய், மத்திய ஆசியா, மந்திரம், மனச்சிதைவு, மனம், மருந்து, முஹம்மது கஜினி, யோகா, விழாக்கள், வேதம், ஹெர்மாபுரோடிடோஸ், ஹெர்மிஸ் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

ஜைனசித்தர்கள் – ஜைனகாலத்தைய மருத்துவம், மருத்துவமனைகள் முதலியன

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 9, 2012

ஜைனசித்தர்கள்ஜைனகாலத்தைய மருத்துவம், மருத்துவமனைகள் முதலியன

ஜைனர்காலத்தில்இருந்தமருத்துவமனைகள்: காஷ்மீரத்தை மையமாகக் கொண்டு சுமார் 1800 BCE வாக்கில் ஆட்சி செய்த அசோகன் ஜைனமதத்தைச் சேர்ந்தவன். ஆனால், அவன் காலத்தில் சைவம் ஓங்கியிருந்தது. இமயமலை சார்ந்த மக்கள் சிவனை வழிப்பட்டு வந்தனர். இதனால் சிவனை ஆதாரமாக மந்திர-தந்திர-யந்திர வழிபாடுகள் பெருகின. அதனால் தான், இமயமலையைச் சுற்றியுள்ள நாடுகளில் கிழக்கே – திபெத், சைனா; தெற்கே நேபாளம், காஷ்மீரம்; மேற்கே ஆப்கானிஸ்தான் (காந்தாரம்), மத்தியாசிய நாடுகள் (துர்க்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான்[1]), வடக்கே திபெத்-சீனா பகுதிகள்- இங்கெல்லாம் சிவலிங்கங்கள், அதிலும் மூன்றுமுக, நான்குமுக லிங்கங்கள் அதிகமாகக் கிடைத்துள்ளன. மந்திர-தந்திர-யந்திர வழிபாடுகள் மருத்துவமுறைகளில் வளர்ந்தன. மருத்துவமனைகளும் பெருகின. “கபாலிகர்” என்றழைக்கப்பட்ட, இங்கிருந்த மருத்துவர்கள், அறுவைசிகிச்சை வல்லுனர்கள் தலை-மூளை-மனம் சம்பந்தப்பட்ட நோய்கள், வியாதிகள் முதலியவற்றில் சிறந்து விளங்கினர்.

ஜைன-அசோகன் காலத்தைய மருத்துவமனைகள்: மண்டையோடுகளில் ஓட்டைப் போட்டு சிகிச்சை நடத்தினர். இதற்கான அகழ்வாய்வு ஆதாரங்கள் அதிகமாகவே கிடைத்துள்ளன. லோதல், ஹரப்பா, காலிபங்கன், காஷ்மீர் முதலிய இடங்களில் கிடைத்துள்ள சுமார் 4300 YBP / 2300 BCE ஆண்டுகள் காலத்தைய பழங்கற்கால மனிதனின் மண்டையோடுகளில் மிகநுண்ணிய துளைப்போடும் கடைசல் ஊசி மூலம் போடப்பட்ட துளைகள் காணப்படுகின்றன. இதற்கு ட்ரெபினேஷன்[2] (Trepenation) என்று பெயர் அதாவது ஒருவிதமான மண்டையோட்டு (Cranial surgery) ரணச்சிகிச்சை, மூளை அறுவைசிகிச்சை[3] / ஆபரேஷன் ஆகும்[4]. ஆகவே, இத்தகைய அறுவைசிகிச்சை நடத்த மருத்துவமனைகள் இருந்தது திண்ணம். சுமார் 300-250 BCEயில் அசோகர் மிருகங்ளுக்குக்கூட மருத்துவமனைகள் கட்டினான் என்று அவனது கல்வெட்டுகள் கூறுகின்றன. அப்படியிருக்கும்போது, அவருக்கு 2000 வருடங்களுக்கு முன்பு மருத்துவமனைகள் இல்லாமல் இத்தகைய அறுவைசிகிச்சைகள் நடந்தனவா? இல்லை, அவையெல்லாம் “சித்து”வேலையா, சித்தர்கள் மாயையா? தலை-மூளை-மனம் நோய்கள் எல்லாமே மனபாதிப்பு, மனச்சிதைவு போன்ற மனநோய்கள் சம்பந்தப்பட்டதாக உள்ளன. சித்தம் பிடித்தவர்கள், சித்தப்பிரமைப் பிடித்தவர்கள், பைத்தியம் அல்லது பித்தம் பிடித்தவர்கள் என்றெல்லாம் அத்தகைய நோயாளிகள் அழைக்கப்படுவர். அதனால்தான் அத்தகைய நோய்களைத் தீர்ப்பவர்கள் “சித்தர்கள்” என்ரு அழைக்கப்பட்டார்களா? கீழே ஜைனமத சித்தர்கள் அத்தகைய சித்த, சித்த-புத்த, புத்த-சித்த போன்ற பெயர்களைக் கொண்டிருந்ததைக் காணவும்.

 

ஜைனமத சித்தர்கள்: ஜைனமரபில் சித்தர்கள் மிக உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளார்கள். ஜைனத்தில் யார் சித்தராக முடியும் என்று சரத்துகளைக் குறிப்பிடுகிறது. அதன்படி ஒரு பட்டியலையும் கொடுக்கிறது[5].

  1. ஜீனசித்தா – ரிஷபதேவ, அஜித்நாத், சாந்திநாத், நேமிநாத், பாஷ்வநாத, மஹாவீர முதலியோர்.
  2. அஜீனசித்த – கௌதமசாமி.
  3. தீர்த்தநாத – பொதுவான பெயர்.
  4. அதீர்த்தநாத – மருதேவமாதா.
  5. கிருஹஸ்தலிங் சித்த – சக்கரவர்த்தி பரத.
  6. அன்யலிங் சித்த – வக்கக்சிரி.
  7. ஸ்வலிங் சித்த – முனி ஸ்ரீ பிரசன்னசந்திர.
  8. புருஷலிங் சித்த – சுதர்மசுவாமி.
  9. ஸ்திரீலிங் சித்த – சந்தன்பால, மிருகவதிஜி,.
  10. நபுசங்க்லிங் சித்த – கன்கேயமுனி.
  11. ப்ரத்யேக் சித்த – கர்கண்ட் முனி.
  12. ஸ்வயம்புத்த சித்த – கபில் கேவலி.
  13. புத்த போதித் சித்த – கௌதம முனி, வாயுபூதி.
  14. ஏக் சித்த – மஹாவீரசுவாமி.
  15. அநேக் சித்த – ரிஷபதேவ முதலியோர்.

இதெல்லாம் ஆண்-பெண்-ஆணல்ல-பெண்ணல்ல-ஆணும்-பெண்ணும் சேர்ந்தது என்ற ரீதியில் உள்ளது. சித்த, புத்த-சித்த போன்ற பெயர்களையும் கவனிக்கவும்.  ஒருவேளை இவர்கள் எல்லோரும் பாலியல் நோய்கள் தீர்க்கும் சித்தர்களா? ஜைன மதத்தில் சம்சார சாகரத்தில் இருந்து விடுபட்டு, கடுமையான நியமங்களைப் பின்பற்றி முக்தி நிலையை முயற்சித்தவர்கள், அடைந்தவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப் பட்டனர். இங்கும் “தீர்த்தங்கரர்” என்ற நிலையடைந்தவரை அவ்வாறு ஜைன இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. மேலும் ஜைனவிதிகளைப் பின்பற்றாத, “சித்தபுத்ர” என்பவரைப்பற்றிக் குறிப்பிடும்போது[6], அவர்கள் வெண்ணிற உடையை அணிந்திருக்கவேண்டும், தலையை மழித்து குடுமி வைத்திருக்க வேண்டும், கையில் கொம்பு, பாத்திரம் இல்லாமல் செல்லவேண்டும் என்றும் ஜைனநூல்கள் குறிப்பிடுகின்றன.

மனிதர்கள், சித்தர்கள், சர்வத்த சித்தர்கள்: ஜைனநூல்கள் உயிருள்ள-உயிரற்றவைகளை ஒன்பது பிரிவுகளாகப் பிரிக்கின்றன. அவற்றில், ஐந்து எந்திரியங்கள் உள்ளவற்றை ஒன்பது பிரிவுகளாகப் பிரிக்கின்றன. ஆனால் மனிதர்களில் மேம்பட்டவர்களை எந்திரியங்களை வென்றவர்கள் கர்மங்களை அழித்தவர்கள் இந்திரஜித்துகளாகிறார்கள். அவர்களுக்கு எதுவுமே – உடலையும் சேர்த்து – தேவையில்லாததாகிறது. காற்றைவிட இலேசாகிறார்கள். அதாவது அவர்கள் எல்லாவற்றையும் இழந்து உயிரற்ற ஜடமாகிறார்கள். உண்மையில் ஜைனர்கள் வடக்கிருந்து உணவு எதுவும் உட்கொள்ளாமல் உடலைவிட்டு இறக்கிறார்கள். பிறப்பு-இறப்பு சுழற்சியிலிருந்து விடுபடுகிறார்கள். சாகாநிலையை அடைகிறார்கள். இருப்பினும் தம்முடையத் தனித்தன்மையை நிலைப்படுத்திக் கொள்கிறார்கள். இறந்தும் (ஜீவன்முக்தர்களாக) இருக்கிறார்கள். அவற்றில் சித்தர்கள் வருகிறார்கள்[7]. அவர்கள் மனிதர்களைப் போலவே இருந்தாலும், எப்படி தமது குணாதசயங்களால் மாறுபட்டுள்ளார்கள் என்றும் விளக்குகின்றன. இப்படித்தான் “அரிஹந்தர்”, சித்தர்கள் ஆகிறார்கள்[8]. “அரிஹந்தர்” சித்தர்களுக்கு மேலே வைக்கப்பட்டாலும், அவர்களையும் விட தங்களுடைய துறவினால் மேனிலையை அடைகிறார்கள். சித்தர்களுள் உயர்வானவர்களை “சர்வத்த சித்தர்” என்றும் குறிப்பிடுகின்றன. அதற்கேற்றாற்போல அவர்கள் மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளார்கள், பேரண்டவியலில் இடத்தில் வைக்கப்படுகிறார்கள். இத்தகைய நிலை, உடல்-மூச்சு கலைகளினால் அடைவது. ஆனால், இடைக்காலத்தில் மருந்துகளை உட்கொண்டால் இத்தகைய நிலையை அடையலாம் என்று திரித்து எழுதப்பட்டது. அதனால்தான், பொய்யான நிலையேற்ப்பட்டது.

தசாவதாரம், 12 ராசிகள் போன்ற பிரிவுகள்: ஜைனத்தில் இருந்த 24 தீர்த்தங்கரர்களின் குறிப்பு, சமவய என்ற கல்பசூத்திரம் மற்றும் அவஸ்யக நிருக்தி நூல்களில் காணப்படுகின்றன[9]. அவர்களுக்கான அடையாளச் சின்னங்களும் கொடுக்கப்பட்டுள்ளன[10]. அவை பின்வருமாறு:

தீர்த்தங்கரின் பெயர்

அடையாளச் சின்னம்

  1. ரிஷப, இக்ஷ்வாகு குலத்தில் பிறந்த, முதல் ஜீனர்.
எருது
  1. அஜிதா, ஜிதாசத்ருவின் மகன்
யானை
  1. சம்பவ, ஜிதரியின் மகன்
குதிரை
  1. அபிநந்தன, சம்பரனின் மகன்
 குரங்கு
  1. சுமதி, மேகவின் மகன்
பறவை
  1. பத்மபிரபா, ஸ்ரீதருடைய மகன்
தாமரை
  1. சுபர்ஸ்வ, ரதிஸ்தவின் மகன்
ஸ்வஸ்திக
  1. சந்திரபிரப, மஹாசேனவின் மகன்
சந்திரன்
  1. புஸ்பானந்தா / புஸ்பானந்தா, சுப்ரியாவின் மகன்
முதலை
  1. சீதல, திருதராஷ்டரனின் மகன்
ஸ்ரீவத்ஸ
  1. ஸ்ரீரேயா / ஸ்ரீயன்ஸா, விஷ்ணும்வின் மகன்
காண்டா மிருகம்
  1. அசுபூஜ்ய, வசுபூஜ்யவின் மகன்
எருமை
  1. விமல, கீர்த்திவர்மணனின் மகன்
கரடி
  1. அனாத/அனாதஜித், சிம்மசேனாவின் மகன்
கழுகு
  1. தர்மா, பானுவின் மகன்
இடி
  1. சந்தி, விஸ்வசேனாவின் மகன்
கலைமான்
  1. குந்து, சூராவின் மகன்
ஆடு
  1. அர, சுதர்ஸனனின் மகன்
நந்தியவர்த
  1. மாலி, கும்பவின் மகன்
ஜாடி
  1. முனிசுவர்தா, சுமித்ராவின் மகன்
ஆமை
  1. நிமி, விஜயாவின் மகன்
நீலத்தாமரை
  1. நேமி/அரிஸ்தநேமி, சௌத்ரஜ்யாவின் மகன்
சங்கு
  1. பார்ஸ்வ/பார்ஸவநாத, அஸ்வசேனனின் மகன்
ஐந்தலை நாகம்
  1. வர்த்தமான/மஹாவீர, கடைசி ஜீனர், சித்தார்த்தரின் மகன்
சிங்கம்

இப்பெயர்கள் மற்றும் அடையாளச்சின்னங்களைக் கூர்ந்து கவனித்தால், தசாவதாரத்தை ஒத்திருப்பதுடன், அவற்றை வானவெளி மண்டலத்தின் 24/12 பிரிவுகள் மற்றும் நாட்காட்டியைக் குறிப்பதாகக் கொள்ளலாம். இந்த தசாவதாரத்தை காப்பியடித்து, 19-20 நூற்றாண்டு சித்தர்பாடல்களை எழுதியிருப்பதைக் காணலாம்[11].

சைவஜைனபௌத்தப்பிரிவுகள்ஏன்வந்தன?: இந்திய மருத்துவ வல்லுனர்கள் மந்திரம்-தந்திரம்-யந்திரம் என்ற பிரிவுகளில் அவரவர் கடமைகளை, வேலைகளை செய்து வந்தனர். ஆனால், ஜைன-பௌத்த மதங்கள் வளர ஆரம்பித்தபோது, இவை எல்லோரும் பின்பற்றி வரும் நிலை ஏற்பட்டது. வேதகாலத்தில் பெண்கள் வேதங்களை உருவாக்கியதுடன், படித்தும், போதித்தும் வந்தனர். ஆனால் ஜைன-யோகினியர் தந்திரங்களில் ஈடுபட்டபோது, பாலியல் ரீதியல் தவறுகள், பிறழ்ச்சிகள், குழப்பங்கள் ஏற்பட்டன. விஹாரங்களில் பாலியல் குற்றங்கள் ஏற்பட்டன. இதனால் யோகினி / ஜோகினியர் தனித்து வைக்கப்பட்டனர். அவர்கள் வேதங்களைப் படிக்கக் கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டது. அதாவது சக்திவழிபாட்டு முறைகள் திரித்து விளக்கம் அளித்தமையால் இந்நிலை ஏற்பட்டது. இதனால்தான், 64 / 84 யோகினி / ஜோகினி கோவில்கள் மக்கள் வசிக்கும் இடங்களினின்று தூரத்தில் இருக்கின்றன. பிறகு வந்த புத்தர் இதனால்தான், பெண்களை பிட்சுனிகளாக சங்கத்தில், புத்ததர்மத்தில், விஹாரங்களில் சேர்க்கக்கூடாது என்று ஆணையிட்டார். ஆனால், ஆனந்த என்ற அவருடைய சீடர், வேண்டிக் கொண்டு விலக்குப் பெற்றார். இதனால்தான் இவ்விரு மதங்களும் ஆதிக்கத்தில் இருந்தாலும், மதரீதியில் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொள்ளமுடியவில்லை. சந்திரகுப்த மௌரியர் ஜைனராக இருந்தாலும், ஜைனம் வலரவில்லை. அசோகர் புத்தமதத்தை பரப்பினலும், இந்தியாவில் வளரவில்லை. பிறகு இடைக்காலத்தில் ஜைன-பௌத்தர்களால் முஸ்லீம்களையும் எதிர்கொள்ளமுடியவில்லை.

© வேதபிரகாஷ்

08-09-2012


[1] ருஷ்ய கூட்டணி உடைந்த பிறகு, இவையெல்லாம், இப்பொழுது தனி நாடுகளாகியுள்ளன. முன்பு பாரதத்திலிருந்து சைனாவிற்கு இமயமலையை மேற்கு-வடமேற்கு திசைகளில் சுற்றி செல்ல ஏற்படுத்தப் பட்ட பாரம்பரிய வழி “பட்டு வணிகப் பாதை” (Silk Road) என்று சொல்லப்பட்டது. அவ்வழிகளில் இந்நாடுகள் உள்ளன. இங்கு Marc Aurel Stein (1862-1943), A. F. Rudolph Hoernle போன்றோர் பல அகழ்வாய்வு ஆதாரங்கள், அத்தாட்சிகளை கண்டெடுத்துள்ளனர்.

[2] The trepanation, also called trephination or trephining, had been the oldest craniotomic surgical procedure practised by mankind since the Stone Age by way of drilling or cutting through the skull vault of a living or recently deceased person.

[3] A. R. Snnkhyan and G. R. Schug, First evidence of brain surgery in Bronze Age Harappa, CURRENT SCIENCE (scientific correspondence), VOL. 100, NO. 11, 10 JUNE 2011, pp. 1621-1622; http://www.currentscience.ac.in/Volumes/100/11/1621.pdf

[4] Maria Mednikova, Post-mortem Trepenations in Central Asia: Types and Trends, in Kurgans, Ritual sites and Settlements: Eurasian Bronze and Iron Age, pp.269-279.

[6] Jagdishchandra Jain, Life in Ancient India as depicted in Jaina Canon and Commentaries, Munshiram Manoharlal Publishers, New Delhi,  1984, p.317.

[7] Walther Schubring, The Doctrine of the Jains – Described after the Old Sources, Motilal Banarasidas publishers, New Delhi, 2000, pp.97-98, 246, 279, 329.

[8] Sancheti Asoo and Bhandari Manak Mal, First Steps to Jainismwith Thirty two Plates (Part one), M. Sujan Mal Ugam Kanwar Sancheti Trust, Jodhpur, 1995, p.81.

[9] Jagdishchandra Jain, Life in Ancient India as depicted in Jaina Canon and Commentaries, Mushiram Manoharlal, New Delhi, 1984, pp.3-4.

[10] Colebrooke’s Essays, Vol.II, p.187; Asiatic Researches, Vol.IX, p.305; Burgess, In Indian Antiqyary, 1873, Vol.I, p.134.

[11] 19-20 நூற்றாண்டு “திராவிட சித்தர்கள்” மட்டுமல்ல, 17-18 நூற்றாண்டு கிருத்துவர்கள், 14-15 நூற்றாண்டு முஸ்லீம்கள் கூட அத்தகைய தசாவதார தத்துவத்தைக் காப்பியடித்து தத்தம் மதங்களில் தகவமைத்துக் கொண்டுள்ளனர். இதெல்லாம் பெரும்பான்மையான இந்துக்களைக் கவர மேற்கொண்ட முயற்சிகள் தாம்.

Posted in அறுவை சிகிச்சை, உஸ்பெகிஸ்தான், கஜகிஸ்தான், காபாலிகம், கிர்கிஸ்தான், சீனா, சைனா, சைவம், ஜோகினி, ஞானம், ஞானி, தஜிகிஸ்தான், திகம்பரம், திகம்பரர், திபெத், துர்க்மேனிஸ்தான், நிர்வாணம், மத்திய ஆசியா, யோகினி, ராஜஸ்தான், வாரணாசி, வீரசைவம் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »